எல்லையற்ற அன்பு கொள்வோம்

Sunday, March 11, 2007

எல்லாருக்கும் வணக்கம்.

என்னையும் நட்சத்திரமாக்கிட்டாங்களாம். என்ன கொடுமை சரவணன்னு
எல்லாரும் புலம்பறது எனக்கு நல்லாவே கேக்குது. என்ன செய்யிறது கொஞ்சம் பொறுத்துக்கிடணும் சாமிகளா.

நட்சத்திர பதிவுகளை படிக்கும்போது தோன்றும். "வலைப்பூவில் ஆறுமாதம்
தொடர்ந்து எழுதினால் நட்சத்திரமாக்கி விடுவார்கள்". இந்த எண்ணம்
வலைப்பூக்களில் வலம் வர ஆரம்பித்த சில நாட்களில் தோன்றியது. சில பதிவுகளை படிக்கும்போது, ஆஹா சிறந்த எழுத்தாளர்கள் அளவுக்கு சிந்தித்து தங்கள் பார்வையை
மிக அழகாக வெளிப்படுத்துகிறார்கள் நிச்சயமாக இவர்கள் கவனிக்கப்படவேண்டிய
பதிவர்கள்தான் என்று என் எண்ணத்தை சற்றே மாற்றினேன். நாந்தான் தவறாக நினைத்துவிட்டேன் போல. ஒரு பதிவர் அங்கீகரீக்கப்ப்ட்டு அவரின் பதிவுகள் தமிழ்மண முகப்பில் நிறுத்தப்படுவதால் பல பேரை சென்றடைகிறார். பரவலான
கவனமும் கிடைக்கிறது. இந்த மாதிரி தெளிவா சிந்தித்து வைத்திருந்த நேரத்துல
நான் முதலில் நினைத்ததுதான் சரி என்பது போல என்னையும் நட்சத்திரமா
தேர்ந்தெடுத்தவுடன் விளங்கிக்கொண்டேன்.

தமிழ்தேர்வுகளில் தவறாமல் ஒரு பெரிய மதிப்பெண் கேள்வி, கேள்வித்தாளின் கடைசி
பக்கத்தில் இடம்பெற்றிருக்கும். நான்கு பத்திகளில், 300 வார்த்தைகளுக்கு மிகாமல்
என்பது போல வகை.

"பள்ளி சுற்றுலா சென்றதை பற்றி உன் பார்வையில் விரிவாக 300 வார்த்தைகளுக்கு
மிகாமல் ஒரு கட்டுரை வரைக."

"தற்கொலைக்கு முயன்ற வேடனின் முன் கடவுள் தோன்றும் காட்சியை உன் கற்பனையில்
ஒரு கட்டுரை எழுதுக."

இந்த கேள்விய படிக்கும்போதுதான் எனக்கு பெரிய குழப்பமே வரும். எந்த
கேள்வியா இருந்தாலும் கோனாரில் விடை கிடைக்கும். இந்த கேள்விக்கு விடை
எப்படி எழுதறது? ஒருவேளை கேள்வி எண்ணை மட்டும் எழுதினாக் அவுட் ஆப்
சிலபஸில் மதிப்பெண் வழங்குவார்களோ என்று கூட நினைப்பேன். சொந்த நடையில
எழுத சொன்னா எப்படி எழுதறது? லீல் லெட்டர்ல இருந்து...

"_____ முதல எழுத்தெல்லாம் ஆதி _______
முதற்றே _____". என்பது வரை கோனாரையோ, வெற்றித் துணைவனையோ
புரட்டினால் தெரிந்துவிடும். சொந்தமா எழுதுன்னா என்னாத்த எழுதறதுன்னு சாய்ஸில்
வரும் வேறொரு கேள்விக்கு கோனாரின் உரையை எழுதிவிடுவேன்.

ஆனா நட்சத்திர வாரத்தில் அப்படியில்ல சுவாரசியமாக அனைத்து பதிவர்களும்
வாசிக்கும் வண்ணம் எழுத வேண்டும். அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்த
முற்படுவது போன்ற பதிவுகளை இடவேண்டும். ஒரு பிரச்சினையில் தன் பார்வை
இதுதான் என்று தெளிவாக எடுத்து வைக்க வேண்டும். அழகான கவிதைகள் எழுத
வேண்டும். இப்படி பல வேண்டும்கள் வேண்டும்.

ஆனால் இதுவரைக்கும் நம்ம பதிவுகள்ல உருப்படியா ஒரு விஷயமும் இருந்ததில்ல.
இப்படி இருக்கறச்சே நட்சத்திர வாரத்தில் என்னை எப்படி வெளிப்படுத்துவது என்றே
தெரியவில்லை. எனக்கு தெரிஞ்சதெல்லாம் நக்கலாவோ, உப்புமாவோ எதாவது எழுதி
இருவது, முப்பது பின்னூட்டத்த வாங்கறதுதான். அதே மாதிரி இல்லாம சில
உருப்படியான பதிவுகள் எழுதணும்னு தோணுது. (பயம் வேணாம்)
"சட்டியில இருந்தாத்தானே அகப்பைக்கு வரும்" அதனால நீங்களே பார்த்து
முடிவு பண்ணிக்கோங்க. பாசிட்டிவா இருந்தா ஒரு பின்னூட்டமிடுங்கள்,
நெகட்டிவா இருந்தா மைண்ட்ல வச்சிக்கோங்க.

உங்களுக்கெல்லாம் இந்த ஒரு வாரமும் கொஞ்சம் இம்சையாத்தான் இருக்கும் :((

மறுபடியும் எல்லாருக்கும் வணக்கம்!!!

187 comments:

வெட்டிப்பயல் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்!!!

இந்த வாரம் கலக்கல் வாரம் :-)))

Anonymous said...

தம்பி ஐயா தங்களா இவ்வார நட்சத்திரம்!?கண்டிப்பாக ஒரு கலக்கு கலக்குவீர்கள் என்ற நம்பிக்கை என்னக்கு இருக்கின்றது.வாழ்த்துகள்

சென்ஷி said...

நட்சத்திர வாழ்த்துக்கள் தம்பிண்ணா

சென்ஷி

கதிர் said...

முதல் வருகை தந்த வெட்டிக்கு மிக்க நன்றி.

மருதநாயகம் said...

நட்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துக்கள்

வெட்டிப்பயல் said...

ஓவர் தன்னடக்கம் உடம்புக்கு ஆகாதாம்பா...

வெட்டிப்பயல் said...

அப்ப நாங்கெல்லாம் ஆறு மாசமா எழுதனாதால தான் நட்சத்திரமானோமா???

நாகை சிவா said...

வாழ்த்துக்கள் கதிர்.

கலங்க அடிக்குறோம் என்ன, அத மட்டும் மைண்ட்ல வச்சுக்க. மற்றவை எம் பொறுப்பு

வெட்டிப்பயல் said...

அப்ப புலிக்கூட இப்படித்தான் ஸ்டாராருனு சொல்லறியா???

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்!!!

நாகை சிவா said...

அது என்னய்யா தேதி 11 காட்டுது. இதை எல்லாம் நீ நட்சத்திரம் ஆகி என்னத்த கிழி....

சரி வேணாம் விடு. சொன்னா வருத்துப்படுவ....

எனக்கு என்ன வந்துச்சு....

நாகை சிவா said...

//அப்ப நாங்கெல்லாம் ஆறு மாசமா எழுதனாதால தான் நட்சத்திரமானோமா??? //

அதானா? நீ அப்படி ஆயிட்டதால் எங்களையும் அந்த லிஸ்டுல சேர்ப்பது நல்லா இல்ல, ரணகளம் ஆயிடும் சொல்லிட்டேன்....

என்னைய சொன்னாக்கூட பரவாயில்லை. எம்மாம் பெரிய ரைட்டரு நம்ம வெட்டி, அவனையும் சேர்த்து அதுவும் சபையில சொல்லி அசிங்கப்படுத்திட்டியே......

கதிர் said...

//தம்பி ஐயா தங்களா இவ்வார நட்சத்திரம்!?கண்டிப்பாக ஒரு கலக்கு கலக்குவீர்கள் என்ற நம்பிக்கை என்னக்கு இருக்கின்றது.வாழ்த்துகள்//

வாங்க துர்கா

நானே கலங்கிப்போய் இருக்கேன் எங்கருந்து கலக்கறது, பார்ப்போம்.

வாழ்த்துகளுக்கு நன்றிங்க,

அப்புறம் இந்த வயாசனவங்கள கூப்புடுற மாதிரி அய்யா கொய்யா ன்னு கூப்பிட்டதுதான் வருத்தமா இருக்கு. தம்பின்னே குப்பிடுங்க போதும். :))

வெட்டிப்பயல் said...

//ஆனா நட்சத்திர வாரத்தில் அப்படியில்ல சுவாரசியமாக அனைத்து பதிவர்களும்
வாசிக்கும் வண்ணம் எழுத வேண்டும். அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்த
முற்படுவது போன்ற பதிவுகளை இடவேண்டும//

வேணும்னா ஒரு முப்பது ஆச்சரியக்குறி போடேன்... எல்லாரும் ஆச்சரியப்பட்டுடுவாங்க :-)

வெட்டிப்பயல் said...

//அப்புறம் இந்த வயாசனவங்கள கூப்புடுற மாதிரி அய்யா கொய்யா ன்னு கூப்பிட்டதுதான் வருத்தமா இருக்கு. தம்பின்னே குப்பிடுங்க போதும். :))//

தம்பியண்ணேனு கூப்பிடலாமா???

ஜோ/Joe said...

தம்பி,
நட்சத்திர வாழ்த்துக்கள்!

உங்க அறிமுகத்துல சொல்லியிருக்கீங்க
//சின்ன வயசிலயே சாண்டில்யன் புக்கை தேட ஆரம்பிச்சிட்டதால வெகுஜன எழுத்தாளர்கள் பக்கம் ஒதுங்க முடியாம போச்சு. //

புரியல்லீங்க .சாண்டில்யன் வெகுஜன எழுத்தாளர் இல்லியா ?

நாகை சிவா said...

//சொந்த ஊர்: சொந்தமா ஊரெல்லாம் இல்லிங்க. பிறந்து வளர்ந்த ஊர்னு ஒண்ணு இருக்கு. விழுப்புரம் பக்கத்துல கள்ளக்குறிச்சி பக்கத்துல கச்சிராயர்பாளையம்னு ஒரு ஊரு. //

காமெடி....

கச்சிராயர்பாளையம் கரும்பு காட்டுல கடன் வைக்கும் போதே உனக்கு இவ்வளவு லொள்ளா????????

கதிர் said...

சீக்கிரம் நாப்பது அடிச்சி என்னை தமிழ்மணத்துல இருந்து தூக்கி வெளில போடணும் அதான உங்க ரெண்டு பேர் ஆசையும்.

நடத்துங்க ராசா நடத்துங்க....

இந்த ஒரு வாரம் கொஞ்சம் ஏழரை இழுக்காம இருங்க சாமிகளா, மெதுவா ஓட்டிக்கறேன்.

வெட்டி, சிவா வேணாம் அழுதுடுவேன்

நாகை சிவா said...

//அப்புறம் இந்த வயாசனவங்கள கூப்புடுற மாதிரி அய்யா கொய்யா ன்னு கூப்பிட்டதுதான் வருத்தமா இருக்கு. தம்பின்னே குப்பிடுங்க போதும். :))//

துர்கா, தம்பிண்ணா னு கூப்பிடுங்க.....

சென்ஷி இந்த வார்த்தையை உபயோகப்படுத்தி இருந்தாலும் முதலில் தம்பி அண்ணனை தம்பிண்ணா என்று பாசத்துடன் அழைத்தது நான் தான் என்பதை இந்த நேரத்தில் தெரியப்படுத்து விழைக்கின்றேன்.

மணிகண்டன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் தம்பி!!

வெட்டிப்பயல் said...

//அழகான கவிதைகள் எழுத
வேண்டும். //
இந்த கொடுமை வேற இருக்கா???

உன்னைய தட்டி கேக்க நாட்ல யாருமே இல்லையா???

நாகை சிவா said...

//சீக்கிரம் நாப்பது அடிச்சி என்னை தமிழ்மணத்துல இருந்து தூக்கி வெளில போடணும் அதான உங்க ரெண்டு பேர் ஆசையும்.//

40 எல்லாம் நட்சத்திரத்தை ஒன்னும் பண்ணாது தம்பிண்ணா, நீங்க தான் முகப்பில் இந்த வார மூச்சுடும் இருப்பீங்களே, அப்புறம் என்ன...

கதிர் said...

நன்றிங்க சென்ஷி, பேருக்கு அர்த்தம் என்னாங்க??

வாழ்த்துகளுக்கு நன்றி மருதநாயகம்.

//ஓவர் தன்னடக்கம் உடம்புக்கு ஆகாதாம்பா...//

அப்ப உடம்பு சரியில்லன்னு லீவ் போட முடியுமா??

//அப்ப நாங்கெல்லாம் ஆறு மாசமா எழுதனாதால தான் நட்சத்திரமானோமா???//

யெய்யா இந்த அக்கப்போர அடுத்த வாரம் வெச்சிக்கலாம்.

//வாழ்த்துக்கள் கதிர்.

கலங்க அடிக்குறோம் என்ன, அத மட்டும் மைண்ட்ல வச்சுக்க. மற்றவை எம் பொறுப்பு//

நன்றி புலி, கலங்க அடிக்கிறன்னு சொன்னதுக்கு இதான் அர்த்தமா
ஆவ்வ்வ்வ்வ் :((

இலவசக்கொத்தனார் said...

வாழ்த்துக்கள் தம்பி!

இப்படிக்கு
அண்ணன்

வெட்டிப்பயல் said...

// Delete
தம்பி said...

சீக்கிரம் நாப்பது அடிச்சி என்னை தமிழ்மணத்துல இருந்து தூக்கி வெளில போடணும் அதான உங்க ரெண்டு பேர் ஆசையும்.

நடத்துங்க ராசா நடத்துங்க....

இந்த ஒரு வாரம் கொஞ்சம் ஏழரை இழுக்காம இருங்க சாமிகளா, மெதுவா ஓட்டிக்கறேன்.

வெட்டி, சிவா வேணாம் அழுதுடுவேன்

10:41 PM //

எலேய்!!!
நட்சத்திரத்த தூக்கி போடமாட்டாங்கலே :-))

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...

வாழ்த்துக்கள் கதிர்.

கலங்க அடிக்குறோம் என்ன, அத மட்டும் மைண்ட்ல வச்சுக்க. மற்றவை எம் பொறுப்ப//

எனக்கும் அந்த பொறுப்பில் பங்குண்டு :-))

நாகை சிவா said...

//பெயர்க்காரணம்: எல்லாரும் உரிமையோட தம்பினு கூப்பிட்டா ஒரு சந்தோஷம். உதடுகள் கூட கம் போட்ட மாதிரி ஒட்டும் பாருங்க! //

யோவ் தம்பி சொன்னா எங்கய்யா கம் போட்ட மாதிரி ஒட்டுது, "தம்" சொல்லும் போது ஒட்டுது, "பி" னு சொல்லும் போது பிரியுதே.

கம் போட்ட மாதிரி "தம்" மு தான் ஒட்டுது. இத மனசில் வச்சி தான் இந்த பெயர் நீ வச்சியானு எனக்கு இப்ப சொல்லுற.

அப்படி இல்லாமல் இருந்தாலும் கூட கம் மாதிரி ஒட்டுற "தம்" ம நீ ஏன் உன் பெயரா மாத்திக்க கூடாது....

மக்கள்ஸ், நீங்களே ஒரு நல்ல முடிவா சொல்லுங்க...

வடுவூர் குமார் said...

வாங்க தம்பி-நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்.
தம்பி-போட்டோ கூட பொட்ட வெய்யிலிலே எடுத்திருக்கீங்க போல!!:-))
12~1 மணியா?
நாங்க பதிவை மட்டும் பார்கிறதில்லை.:-)

வெட்டிப்பயல் said...

//
என்னைய சொன்னாக்கூட பரவாயில்லை. எம்மாம் பெரிய ரைட்டரு நம்ம வெட்டி, அவனையும் சேர்த்து அதுவும் சபையில சொல்லி அசிங்கப்படுத்திட்டியே......//

இது தேவையா???

புலி நமக்கு நாமே ஆப்பு திட்டமா???

கதிர் said...

//அதானா? நீ அப்படி ஆயிட்டதால் எங்களையும் அந்த லிஸ்டுல சேர்ப்பது நல்லா இல்ல, ரணகளம் ஆயிடும் சொல்லிட்டேன்....//

இப்ப மட்டும் ஆகலியாக்கும்..

//என்னைய சொன்னாக்கூட பரவாயில்லை. எம்மாம் பெரிய ரைட்டரு நம்ம வெட்டி, அவனையும் சேர்த்து அதுவும் சபையில சொல்லி அசிங்கப்படுத்திட்டியே......//

புலி,
என்னைய வேணா வம்புக்கு இழு பாவம் வீணா ஏன் வெட்டிய வம்புக்கு இழுக்குற?? கொஞ்சம் கூட நல்லா இல்ல ஆமா..

//வேணும்னா ஒரு முப்பது ஆச்சரியக்குறி போடேன்... எல்லாரும் ஆச்சரியப்பட்டுடுவாங்க :-)//

நேரம்யா நேரம்... நடத்து ராசா..

//தம்பி,
நட்சத்திர வாழ்த்துக்கள்!

உங்க அறிமுகத்துல சொல்லியிருக்கீங்க
//சின்ன வயசிலயே சாண்டில்யன் புக்கை தேட ஆரம்பிச்சிட்டதால வெகுஜன எழுத்தாளர்கள் பக்கம் ஒதுங்க முடியாம போச்சு. //

புரியல்லீங்க .சாண்டில்யன் வெகுஜன எழுத்தாளர் இல்லியா ?//

வாங்க ஜோ!

நான் படிக்கசொல்லோ அவரு வரலாற்று எழுத்தாளரா இருந்தாரு. ஹி ஹி அப்புறம் அவரு மாறியிருக்கலாம்.

கதிர் said...

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி கொத்தனார் அண்ணே!

வாங்க வடுவூர் குமார்!

அதுவா சோளக்கொல்லையில எடுத்த போட்டோ, போட்டோவ வெச்சே நேரத்த சொல்றிங்க!! பெரிய ஆளா இருப்பிங்க போல. :))

நன்றீங்க குமார்.

துளசி கோபால் said...

அட! இந்த வாரம் தம்பி!!!

மின்ன வாழ்த்து(க்)கள்.

வெட்டிப்பயல் said...

எங்க கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லாத தம்பியை வன்மையாக கண்டிக்கிறேன்....

அதுவும் புலி பின்னூட்டத்திற்கு பதில் சொல்லாததை இன்னும் பல மடங்கு வன்மையாக கண்டிக்கிறேன் ;)

Unknown said...

வாழ்த்துக்கள் தம்பி!

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...

//பெயர்க்காரணம்: எல்லாரும் உரிமையோட தம்பினு கூப்பிட்டா ஒரு சந்தோஷம். உதடுகள் கூட கம் போட்ட மாதிரி ஒட்டும் பாருங்க! //

யோவ் தம்பி சொன்னா எங்கய்யா கம் போட்ட மாதிரி ஒட்டுது, "தம்" சொல்லும் போது ஒட்டுது, "பி" னு சொல்லும் போது பிரியுதே.

கம் போட்ட மாதிரி "தம்" மு தான் ஒட்டுது. இத மனசில் வச்சி தான் இந்த பெயர் நீ வச்சியானு எனக்கு இப்ப சொல்லுற.

அப்படி இல்லாமல் இருந்தாலும் கூட கம் மாதிரி ஒட்டுற "தம்" ம நீ ஏன் உன் பெயரா மாத்திக்க கூடாது....

மக்கள்ஸ், நீங்களே ஒரு நல்ல முடிவா சொல்லுங்க... //

இதை நான் வழி மொழிகிறேன் :-)

கோவி.கண்ணன் said...

தம்பி,
நட்சத்திர அறிமுக பதிவு அசத்தலாக நேர்மையாக இருக்கு, மற்ற இடுகைகளையும் கலக்குங்க ! மீன் பிடிக்க தயார் !
:)

நாகை சிவா said...

//இந்த கொடுமை வேற இருக்கா???

உன்னைய தட்டி கேக்க நாட்ல யாருமே இல்லையா??? //

நீ கவலைப்படாத வெட்டி. அந்த கொடுமை நடக்காம நான் பாத்துக்குறேன்.

தம்பி தட்டி என்ன வெட்டியே கேட்போம். இது வெட்டி... புரியுதல...

நாகை சிவா said...

//இது தேவையா???

புலி நமக்கு நாமே ஆப்பு திட்டமா??? //

சரி விடு வெட்டி, சரளமா வரும் போது அப்படி ஒடியாந்துருச்சு.... ப்ரீயா விடு....

நாகை சிவா said...

//எனக்கும் அந்த பொறுப்பில் பங்குண்டு :-)) //

நீ இல்லாமல தங்கம். பெரும் பங்கு உனக்கு உண்டு.

MyFriend said...

நட்சத்திரமே..
முதல்ல கமெண்ட் மோடெரேஷன் டிஸ்-ஏபல் பண்ணுங்க..

அட்லீஸ்ட்.. இந்த வாரத்துக்காவது...

MyFriend said...

ஓகே..

நாலஞ்சு கேட்டா.. 4 -5 மட்டும் போடுறேன்னு நீங்க புலம்பியது எனக்கு கேட்டது.. சோ, இனி அன்லிமிட்டட்..

:-P

MyFriend said...

//அப்புறம் இந்த வயாசனவங்கள கூப்புடுற மாதிரி அய்யா கொய்யா ன்னு கூப்பிட்டதுதான் வருத்தமா இருக்கு. தம்பின்னே குப்பிடுங்க போதும். :)) //

தம்பின்னு எங்களுக்கு நிறைய பேர் இருக்காங்க.. உங்களை நாங்கள் அங்கிள்ன்னு கூப்பிடட்டுமா???

MyFriend said...

//முதலில் தம்பி அண்ணனை தம்பிண்ணா என்று பாசத்துடன் அழைத்தது நான் தான் என்பதை இந்த நேரத்தில் தெரியப்படுத்து விழைக்கின்றேன். //

ஆஹா. இது சூப்பரா இருக்கே!!!!

ஜோ/Joe said...

//நான் படிக்கசொல்லோ அவரு வரலாற்று எழுத்தாளரா இருந்தாரு. ஹி ஹி அப்புறம் அவரு மாறியிருக்கலாம்.//

ஐயயோ! இது அதை விட குழப்பமா இருக்கு .அப்போ வரலாற்று எழுத்தாளர் (முதலில் சாண்டில்யன் வரலாற்று எழுத்தாளர் அல்ல .வரலாற்று புனைவு எழுத்தாளர் என நினைக்க்கிறேன்) வெகு ஜன எழுத்தாளர் கிடையாதா ? ரொம்ப குழப்புறீங்க.

நாகை சிவா said...

////அதுவா சோளக்கொல்லையில எடுத்த போட்டோ, போட்டோவ வெச்சே நேரத்த சொல்றிங்க!! பெரிய ஆளா இருப்பிங்க போல. :))//

அவரு எங்க ஊர் ஆளு. அப்படி தான்.

அது போகட்டும், கரும்பு காடு போல சோளக் கொல்லையிலும் ஒரு கதை இருக்கும் போல. அத அப்பால எனக்கு சொல்லு என்ன....

லொடுக்கு said...

ஸ்டார் சூப்பர் ஸ்டாராக வாழ்த்துக்கள் தம்பி!

கலக்கனும்! புரிஞ்சுதா!!

நாகை சிவா said...

//எங்க கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லாத தம்பியை வன்மையாக கண்டிக்கிறேன்....//

அதானே, ஏன்னய்யா உன்னையும் மனுசனா மதிச்சு நாங்க பாட்டுக்கு பின்னூட்டம் போட்டுக்கிட்டு இருக்கோம். நீ என்னடானு கண்டுக்காம படிச்சுட்டு சைலண்டா இருக்கியே.... என்ன அர்த்தம்...

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் கதிர்....

நீ புள்ளியை மட்டும் வச்சிடு கோலத்தை நாங்க போடுறோம்....

கோபிநாத் said...

எலலேய் ....

தலைவர் நட்சத்திரம் ஆகிட்டாரு கழகத்து கண்மனிகள் எல்லாத்துக்கும் இன்றுமுதல் தீபாவளி.

அமீரகத்தையே அமர்களப்படுத்திடனும்.

கோபிநாத் said...

\\சென்ஷி இந்த வார்த்தையை உபயோகப்படுத்தி இருந்தாலும் முதலில் தம்பி அண்ணனை தம்பிண்ணா என்று பாசத்துடன் அழைத்தது நான் தான் என்பதை இந்த நேரத்தில் தெரியப்படுத்து விழைக்கின்றேன்\\

ஆமாம் நான் ரெண்டாவது...இவரு எனக்கும்
"தப்பிண்ணா" தான்.

தம்பிண்ணா...
தம்பிண்ணா... ;))))

கோபிநாத் said...

\\/பெயர்க்காரணம்: எல்லாரும் உரிமையோட தம்பினு கூப்பிட்டா ஒரு சந்தோஷம். உதடுகள் கூட கம் போட்ட மாதிரி ஒட்டும் பாருங்க! //

யோவ் தம்பி சொன்னா எங்கய்யா கம் போட்ட மாதிரி ஒட்டுது, "தம்" சொல்லும் போது ஒட்டுது, "பி" னு சொல்லும் போது பிரியுதே.

கம் போட்ட மாதிரி "தம்" மு தான் ஒட்டுது. இத மனசில் வச்சி தான் இந்த பெயர் நீ வச்சியானு எனக்கு இப்ப சொல்லுற.

அப்படி இல்லாமல் இருந்தாலும் கூட கம் மாதிரி ஒட்டுற "தம்" ம நீ ஏன் உன் பெயரா மாத்திக்க கூடாது....

மக்கள்ஸ், நீங்களே ஒரு நல்ல முடிவா சொல்லுங்க...\\

அய்யய்யோ....தம்பிண்ணாவை போட்டு கிழி கிழின்னு கிழிக்குறாங்ளே இதை தட்டி கேட்க யாரும் இல்லையா???

Gnaniyar @ நிலவு நண்பன் said...

பாராட்டுக்கள் தம்பி

Geetha Sambasivam said...

இனிமையான இம்சையாக இருக்கப் போகும் "தம்பி"க்கு (க்ர்ர்ர்ர், என்னை மறந்துட்டீங்க இல்லை?) என்னோட மனப்பூர்வமான வாழ்த்துக்கள். புலி வந்து உறுமினதாலே தான் தெரிஞ்சுக்கிட்டேன். இப்போ எல்லாம் அடிக்கடி போட்டி அதான் ஆன்மீகப் போட்டி வைக்கிறதில்லையோ?

கதிர் said...

//அட! இந்த வாரம் தம்பி!!!

மின்ன வாழ்த்து(க்)கள். //

ஆமாங்க துளசி டீச்சர்,
நானேதான். என்ன செய்யிறது.
மின்ன முயற்சி செய்றேன்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

//எங்க கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லாத தம்பியை வன்மையாக கண்டிக்கிறேன்....

அதுவும் புலி பின்னூட்டத்திற்கு பதில் சொல்லாததை இன்னும் பல மடங்கு வன்மையாக கண்டிக்கிறேன் ;)//

இந்த கண்டிப்பு, கண்ணடிப்பு, கண்துடைப்பு இதெல்லாம் ஒரு வாரத்துக்கு மறந்துடுங்கப்பு, அம்புட்டுதான் சொல்வேன்.

கதிர் said...

//வாழ்த்துக்கள் தம்பி!//

நன்றிங்க தேவ்.

//இதை நான் வழி மொழிகிறேன் :-)//

இதெல்லாம் சரியா செய்யி!

கதிர் said...

//தம்பி,
நட்சத்திர அறிமுக பதிவு அசத்தலாக நேர்மையாக இருக்கு, மற்ற இடுகைகளையும் கலக்குங்க ! மீன் பிடிக்க தயார் !
:) //

வாங்க கண்ணன்.

மேல ஒண்ணுமில்லன்னு உண்மைய ஒத்துகிட்டா ஒரு பிரச்சினையும் வராது. :))
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

கதிர் said...

//நீ கவலைப்படாத வெட்டி. அந்த கொடுமை நடக்காம நான் பாத்துக்குறேன்.

தம்பி தட்டி என்ன வெட்டியே கேட்போம். இது வெட்டி... புரியுதல... //

வன்முறை கும்பலா இருப்பிங்க போலருக்கே.

கதிர் said...

//சரி விடு வெட்டி, சரளமா வரும் போது அப்படி ஒடியாந்துருச்சு.... ப்ரீயா விடு.... //

ஏன் இந்த சரளம் எங்க வெட்டிப்பயலுக்கு வராதுன்னு நினைச்சியா??
அவரு யாரு தெரியும்ல, பாதையில பாக்கு துப்புற வேலயெல்லாம் வேணாம். அவருக்கு கடுங்கோவம் வரும்

கதிர் said...

//நட்சத்திரமே..
முதல்ல கமெண்ட் மோடெரேஷன் டிஸ்-ஏபல் பண்ணுங்க..

அட்லீஸ்ட்.. இந்த வாரத்துக்காவது... //

இந்த வாரத்துல டிசேபிள் பண்ணா அம்புட்டுதான், பதிவு போட்ட அஞ்சு நிமிசத்துல காணாம போக செய்யிற அளவுக்கு எம்மேல கொலவெறில ஒரு கும்பல் சுத்திகிட்டு இருக்கு. வேணா தாயி..

அந்த தப்ப செஞ்சா அம்புட்டுதான்.

கதிர் said...

//ஓகே..

நாலஞ்சு கேட்டா.. 4 -5 மட்டும் போடுறேன்னு நீங்க புலம்பியது எனக்கு கேட்டது.. சோ, இனி அன்லிமிட்டட்..

:-P //

அன்லிமிட்டட் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.

கதிர் said...

//தம்பின்னு எங்களுக்கு நிறைய பேர் இருக்காங்க.. உங்களை நாங்கள் அங்கிள்ன்னு கூப்பிடட்டுமா??? //

அதான் நிறைய பேரு இருக்காங்கல்ல என்னையும் சேத்துக்குங்க, ஆனா அங்கிள்னு மட்டும் கூப்பிடாதிங்க.

Anonymous said...

யோவ்!!
இதுல அடிச்ச கும்மி போதும். அடுத்த பதிவு எப்போ? அதப் போடு முதல்ல

கதிர் said...

//ஐயயோ! இது அதை விட குழப்பமா இருக்கு .அப்போ வரலாற்று எழுத்தாளர் (முதலில் சாண்டில்யன் வரலாற்று எழுத்தாளர் அல்ல .வரலாற்று புனைவு எழுத்தாளர் என நினைக்க்கிறேன்) வெகு ஜன எழுத்தாளர் கிடையாதா ? ரொம்ப குழப்புறீங்க. //

தெளிவா சொல்றேன் கேட்டுக்குங்க,
எனக்கு பொதுவா வரலாற்று புனைவு கதைகள் ரொம்ப பிடிக்கும். அதுவும் சாண்டில்யன் எழுத்து ரொம்ப ரொம்ப பிடிக்கும், வீரமும், காமமும் கலந்து எழுதுவதில் அவருக்கு நிகர் யாருமில்லை இதெல்லாம் இதெல்லாம் என்னோட எண்ணங்கள். அதுவுமில்லாம நான் தேடி படிக்குற புத்தகங்களும் இதே மாதிரி வகைல இருந்ததினால மற்ற சமூக நாவல் பக்கம் படிக்க விருப்பமில்லாம போச்சு.

மேவார் ராஜ்ஜியம், கடல்புறா, ஜலதீபம், மதுமலர், இதெல்லாம் விரும்பி படித்தவை.

இதுக்கு மேல கேட்டிங்கன்னா அழுதுடுவேன்.

சின்னக்குட்டி said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

கதிர் said...

//அவரு எங்க ஊர் ஆளு. அப்படி தான்.

அது போகட்டும், கரும்பு காடு போல சோளக் கொல்லையிலும் ஒரு கதை இருக்கும் போல. அத அப்பால எனக்கு சொல்லு என்ன.... //

நான் எப்பலே கரும்புக்காட்டு கதை சொன்னேன்?? போட்டு வாங்க பாக்குற பாத்தியா...

கதிர் said...

//ஸ்டார் சூப்பர் ஸ்டாராக வாழ்த்துக்கள் தம்பி!

கலக்கனும்! புரிஞ்சுதா!!//

நன்றிங்க லொடுக்கு!

கதிர் said...

//வாழ்த்துக்கள் கதிர்....

நீ புள்ளியை மட்டும் வச்சிடு கோலத்தை நாங்க போடுறோம்.... //


நாங்களேதான் கோலமும் போடுவோம் புள்ளியும் வைப்போம்.

இராம்/Raam said...

நட்சத்திர வாழ்த்துக்கள்!!! கதிர் (a)தம்பிண்ணா :)))

Anonymous said...

வாழ்த்துக்கள் தம்பி! உங்களை இப்படி போட்டுவாங்கராங்க, கவலையே படமாட்றீங்க?

Jazeela said...

வாழ்த்துக்கள் கதிர். அப்ப இந்தவாரம் 'ஒளி'மயமான எதிர்காலமா? ;-)

//நெகட்டிவா இருந்தா மைண்ட்ல வச்சிக்கோங்க.// நெகட்டிவா இருந்தாலும் பின்னூட்டம் போடுவோம் - டீல்?

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் தம்பி ஐயா.

வைசா said...

நட்சத்திர வாழ்த்துக்கள், தம்பி.

வைசா

ஜி said...

அடப்பாவிகளா.....

[இது தம்பி ஸ்டார் ஆனதுக்கு இல்ல]

கொஞ்சம் நெய்சோறும், சிக்கனும் சாப்டு அசதியா தூங்கிட்டேன்... அதுக்குள்ள இந்த வெட்டிப்பயலும், புலிக்குட்டியும் கபடி ஆடிட்டுப் போயிருக்காங்க...

வாழ்த்துக்கள் தம்பி.. கொஞ்ச நேரத்துல நானும் கோதால குதிக்கிறேன்... :))

சிவபாலன் said...

தம்பி,

நட்சத்திர பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்!!

கதிர் said...

//நட்சத்திர வாழ்த்துக்கள்!!! கதிர் (a)தம்பிண்ணா :)))//

நன்றிங்க ராமண்ணா :))

கதிர் said...

//வாழ்த்துக்கள் தம்பி! உங்களை இப்படி போட்டுவாங்கராங்க, கவலையே படமாட்றீங்க?//

எதுக்குமே கவலைபடகூடாதுங்க அதான் நம்ம பாலிசி.
உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

தொடர்ந்து வாருங்கள்.

கதிர் said...

//வாழ்த்துக்கள் கதிர். அப்ப இந்தவாரம் 'ஒளி'மயமான எதிர்காலமா? ;-)//

நன்றிங்க ஜெஸிலா.

"ஒளி"மயமான எதிர்காலமான்னு நீங்கதான் சொல்லணும்.

கதிர் said...

//நட்சத்திர வாழ்த்துக்கள், தம்பி.

வைசா //

நன்றிங்க வைசா!

நன்றி குமரன்.

கதிர் said...

//அடப்பாவிகளா.....

[இது தம்பி ஸ்டார் ஆனதுக்கு இல்ல]//

சொல்லாமலே இருந்திருக்கலாம். :(

//கொஞ்சம் நெய்சோறும், சிக்கனும் சாப்டு அசதியா தூங்கிட்டேன்... அதுக்குள்ள இந்த வெட்டிப்பயலும், புலிக்குட்டியும் கபடி ஆடிட்டுப் போயிருக்காங்க...//

அசந்தா அடிக்கறது அவங்க பாலிசி அசராம அடிக்கறது நம்ம பாலிசி.

//வாழ்த்துக்கள் தம்பி.. கொஞ்ச நேரத்துல நானும் கோதால குதிக்கிறேன்... :))//

நன்றி! ராகு காலம் முடியறதுக்குல்ல சீக்கிரம் வாலே!

நாமக்கல் சிபி said...

தம்பி வா,
தரணியாள வா!

வாழ்த்துக்கள்!

நாமக்கல் சிபி said...

இந்த வாரம் த.க.ச பதிவு உண்டா?

நாகை சிவா said...

//இந்த வாரம் த.க.ச பதிவு உண்டா? //

தள, காலையிலே ஆரம்பிச்சாச்சு. பதிவு கிடையாது த.க.ச. பின்னூட்டங்கள் தான். காலையில் நானும், வெட்டி மட்டும் தான். இப்ப கூட்டம் பலமா சேருது. கோபி, மை பிரண்ட், ஜியா வந்துக்கிட்டே இருக்காங்க....

நாகை சிவா said...

//தம்பின்னு எங்களுக்கு நிறைய பேர் இருக்காங்க.. உங்களை நாங்கள் அங்கிள்ன்னு கூப்பிடட்டுமா??? //

இத எல்லாம் போய் அவர கேட்டுக்கிட்டு சும்மா கூப்பிடுங்க....

வெட்டிப்பயல் said...

// கோபிநாத் said...

வாழ்த்துக்கள் கதிர்....

நீ புள்ளியை மட்டும் வச்சிடு கோலத்தை நாங்க போடுறோம்.... //

கோபி,

தம்பி கீழ இருக்கிற லைன்ல எல்லாம் புள்ளி வெச்சிருக்கான்... சீக்கிரம் கோலம் போடு...

................................


//முதல் வருகை தந்த வெட்டிக்கு மிக்க நன்றி.//

//புலி,
என்னைய வேணா வம்புக்கு இழு பாவம் வீணா ஏன் வெட்டிய வம்புக்கு இழுக்குற?? கொஞ்சம் கூட நல்லா இல்ல ஆமா..//

//
நேரம்யா நேரம்... நடத்து ராசா..//

//இந்த வாரத்துல டிசேபிள் பண்ணா அம்புட்டுதான், பதிவு போட்ட அஞ்சு நிமிசத்துல காணாம போக செய்யிற அளவுக்கு எம்மேல கொலவெறில ஒரு கும்பல் சுத்திகிட்டு இருக்கு. வேணா தாயி..//

//நான் எப்பலே கரும்புக்காட்டு கதை சொன்னேன்?? போட்டு வாங்க பாக்குற பாத்தியா...//

வெட்டிப்பயல் said...

//அது போகட்டும், கரும்பு காடு போல சோளக் கொல்லையிலும் ஒரு கதை இருக்கும் போல. அத அப்பால எனக்கு சொல்லு என்ன.... //

எலேய் புலி,
கரும்பு காட்டு கதைய உன்கிட்டயும் சொல்லிட்டானா???

தம்பி,
சேம் சேம் பப்பி சேம்

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

//நீ கவலைப்படாத வெட்டி. அந்த கொடுமை நடக்காம நான் பாத்துக்குறேன்.

தம்பி தட்டி என்ன வெட்டியே கேட்போம். இது வெட்டி... புரியுதல... //

வன்முறை கும்பலா இருப்பிங்க போலருக்கே. //

யாரப்பாத்து வன்முறை கும்பல்னு சொன்ன... அந்த ஆட்டொல சாமானுல்லாம் போட்டுட்டு கிளம்புங்களே!!!

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

//சரி விடு வெட்டி, சரளமா வரும் போது அப்படி ஒடியாந்துருச்சு.... ப்ரீயா விடு.... //

ஏன் இந்த சரளம் எங்க வெட்டிப்பயலுக்கு வராதுன்னு நினைச்சியா??
அவரு யாரு தெரியும்ல, பாதையில பாக்கு துப்புற வேலயெல்லாம் வேணாம். அவருக்கு கடுங்கோவம் வரும் //

எலேய் எனக்கும் புலிக்கும் சண்டை மூட்டிவிடலாம்னு பாக்கறயா???

இந்த நாரதர் வேலையெல்லாம் இங்க ஆகாதுடி!!!

வெட்டிப்பயல் said...

////கொஞ்சம் நெய்சோறும், சிக்கனும் சாப்டு அசதியா தூங்கிட்டேன்... அதுக்குள்ள இந்த வெட்டிப்பயலும், புலிக்குட்டியும் கபடி ஆடிட்டுப் போயிருக்காங்க...//

அசந்தா அடிக்கறது அவங்க பாலிசி அசராம அடிக்கறது நம்ம பாலிசி.//

ஆமாம் பெரிய LIC பாலிஸி...
யாரும் இல்லைனு உன் இஷ்டத்துக்கு டயலாக் விடறியா???

வெட்டிப்பயல் said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

ஓகே..

நாலஞ்சு கேட்டா.. 4 -5 மட்டும் போடுறேன்னு நீங்க புலம்பியது எனக்கு கேட்டது.. சோ, இனி அன்லிமிட்டட்..

:-P //

ஊர்ல ஒருத்தரையும் விட்டு வைக்கல நீயீ!!!

Santhosh said...

//இந்த ஒரு வாரம் கொஞ்சம் ஏழரை இழுக்காம இருங்க சாமிகளா, மெதுவா ஓட்டிக்கறேன்.//
அது எப்படி விடுவோம்? அப்படி விட்டா எங்களுக்கு என்ன மருவாதை. கலாக்கும் சங்க தலை சிபியும் மத்தபடி அவங்க உறவினர்களும் இங்கே இந்த வாரம் மையம் கொள்ளுமாறு கேட்டுகிறேன். நமக்கு ஆணி புடுங்குற வேலை கொஞ்சம் ஜாஸ்தியா இருப்பதினால் அப்ப அப்ப வந்து கச்சேரியில் கலந்துகுறேன்.

வெட்டிப்பயல் said...

இந்த பொன்னான நேரத்துல எங்க அராயிர் தம்பி கப்பி இல்லாம போயிட்டானே!!! :-(

கப்பிக்கு ஒரு போனை போட்டு வர சொல்லுங்கப்பா!!!

வெட்டிப்பயல் said...

எங்கே என் பின்னூட்டங்கள்???

5 நிமிடமாக என் பின்னூட்டத்தை நிறுத்தி வைத்ததையும் வன்மையாக கண்டிக்கிறேன்...

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

//தம்பின்னு எங்களுக்கு நிறைய பேர் இருக்காங்க.. உங்களை நாங்கள் அங்கிள்ன்னு கூப்பிடட்டுமா??? //

அதான் நிறைய பேரு இருக்காங்கல்ல என்னையும் சேத்துக்குங்க, ஆனா அங்கிள்னு மட்டும் கூப்பிடாதிங்க. //

ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படும் தம்பியை எதிர்க்கிறோம். (எவ்வளவு தான் கண்டிக்கிறது)

ஸ்ஸ்ஸ்ப்ப்பா இப்பவே கண்ண கட்டுதே!!!

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

//நட்சத்திரமே..
முதல்ல கமெண்ட் மோடெரேஷன் டிஸ்-ஏபல் பண்ணுங்க..

அட்லீஸ்ட்.. இந்த வாரத்துக்காவது... //

இந்த வாரத்துல டிசேபிள் பண்ணா அம்புட்டுதான், பதிவு போட்ட அஞ்சு நிமிசத்துல காணாம போக செய்யிற அளவுக்கு எம்மேல கொலவெறில ஒரு கும்பல் சுத்திகிட்டு இருக்கு. வேணா தாயி..

அந்த தப்ப செஞ்சா அம்புட்டுதான். //

இங்கேயும் கோரிக்கையை நிராகத்திருக்கிறாய்!!!

இப்படி பெண்களுக்கெதிராக செயல்படும் தம்பியை கன்னா பின்னா வென்று கண்டிக்கிறோம்...

நாகை சிவா said...

//ஆமாம் நான் ரெண்டாவது...இவரு எனக்கும்
"தப்பிண்ணா" தான்.

தம்பிண்ணா...
தம்பிண்ணா... ;)))) //

கோபி, நீங்க் இரண்டாவது வந்தீங்க இரண்டு தடவை கூப்பிடுறீங்க சரி.

அடுத்து மூன்றாவது வரவங்க மூனு தடவை கூப்பிடுனுமா? அப்படி தம்பி ஏலம் விட்டுட போறாங்க, பாத்துக்கோங்க, புள்ளக் குட்டிக்காரன் அவன்

நாகை சிவா said...

//அய்யய்யோ....தம்பிண்ணாவை போட்டு கிழி கிழின்னு கிழிக்குறாங்ளே இதை தட்டி கேட்க யாரும் இல்லையா??? //

ஏம்ப்பா கோபி, ஒரு நல்ல முடிவா சொல்லுங்க நான் கேட்டுக்கிட்டு இருக்கேன், நீங்க என்னா தம்பி கிழிக்கிறோம் சொல்லுறீங்களே... நீங்களே தம்பி சொல்லி பாருங்க ஏது கம் போட்டு ஒட்டின மாதிரி இருக்கு உங்களுக்கே தெரியும்.

நாகை சிவா said...

//இந்த கண்டிப்பு, கண்ணடிப்பு, கண்துடைப்பு இதெல்லாம் ஒரு வாரத்துக்கு மறந்துடுங்கப்பு, அம்புட்டுதான் சொல்வேன். //

நீயி பதில் சொல்லியே ஆகனும், இல்லாட்டி எதிர்வினை பதிவு வரும் என்று ப்பளிக்காவே உன்னைய மிரட்டுறேன்.

நாகை சிவா said...

//ஏன் இந்த சரளம் எங்க வெட்டிப்பயலுக்கு வராதுன்னு நினைச்சியா??
அவரு யாரு தெரியும்ல, பாதையில பாக்கு துப்புற வேலயெல்லாம் வேணாம். அவருக்கு கடுங்கோவம் வரும் //

எங்க பிட்ட எங்கக்கிட்டயே போடாதா. பாக்கு போடுற பழக்கமே கிடையாது அப்புறம் எங்க பாதையில் துப்புவது..... அவருக்கு கடுங்கோவம் வந்தாலும் சரி கடுங்காத கோவம் வந்தாலும் அத நாங்க பாத்துக்குறோம்.

நீ அந்த தம் மேட்டருக்கு பதில் சொல்லு.

நாகை சிவா said...

//இந்த வாரத்துல டிசேபிள் பண்ணா அம்புட்டுதான், பதிவு போட்ட அஞ்சு நிமிசத்துல காணாம போக செய்யிற அளவுக்கு எம்மேல கொலவெறில ஒரு கும்பல் சுத்திகிட்டு இருக்கு. வேணா தாயி..//

யாருய்யா அது. எங்ககிட்ட சொல்லு, உனக்கு பாதுக்காப்பு கொடுக்குறோம். நாங்க இருக்கும் போது இன்னொரு கும்பல வர விட்டுவோமா என்ன?

நாகை சிவா said...

//அதான் நிறைய பேரு இருக்காங்கல்ல என்னையும் சேத்துக்குங்க, ஆனா அங்கிள்னு மட்டும் கூப்பிடாதிங்க. //

ஏன்? ஏன்? ஏன்?

உன்னை ஏன் அங்கிள் கூப்பிட கூடாது. பதில் சொல்லு மேன் சீக்கிரம்

நாகை சிவா said...

//நான் எப்பலே கரும்புக்காட்டு கதை சொன்னேன்?? போட்டு வாங்க பாக்குற பாத்தியா... //

மவனே, சபைல உண்மைய உடைச்சிடுவேன் சொல்லிட்டேன். கடன் வாங்க சீ வைக்க, கடன் அடைக்க.....

நாகை சிவா said...

//வாழ்த்துக்கள் தம்பி.. கொஞ்ச நேரத்துல நானும் கோதால குதிக்கிறேன்... :)) //

நீயும் கோதாவுல குதிப்பேனு வெயிட் பண்ணி பாத்துட்டு நானே தனியா ஆடிக்கிட்டு இருக்கேன் இப்ப.... இங்குட்டு போனீர் அய்யா நீர்....

நாகை சிவா said...

வெட்டி, கோதாவுல நீயும் குதித்து விட்டாய். சதம் நான் அடிச்சுட்டேன்ப்பா உன் துணையுடன். நன்றி....

நாகை சிவா said...

//நன்றி! ராகு காலம் முடியறதுக்குல்ல சீக்கிரம் வாலே! //

அது எங்க உனக்கு இப்ப முடியுத, இந்த வாரம் புல்லா அப்படி தான்.

கதிர் said...

//தம்பி வா,
தரணியாள வா!

வாழ்த்துக்கள்! //

தள இங்க நான் எது சொன்னாலும் எகத்தாளம் பேச ரெடியா ரெண்டு பேரு சுத்திட்டு இருக்கானுங்க. நாம அப்புறமா இத பத்தி பேசலாம்.

//இந்த வாரம் த.க.ச பதிவு உண்டா? //

தனியா வேற அத செய்யணுமா??

நல்லா இருங்க தள

கதிர் said...

//தள, காலையிலே ஆரம்பிச்சாச்சு. பதிவு கிடையாது த.க.ச. பின்னூட்டங்கள் தான். காலையில் நானும், வெட்டி மட்டும் தான். இப்ப கூட்டம் பலமா சேருது. கோபி, மை பிரண்ட், ஜியா வந்துக்கிட்டே இருக்காங்க.... //

எலே கதிரு ஓடுடா ஓடு ஒரு கும்பலே உம்மேல பாசம் காட்ட கெளம்பிடுச்சி.திரும்பி பாக்காம ஓடு

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...

//அதான் நிறைய பேரு இருக்காங்கல்ல என்னையும் சேத்துக்குங்க, ஆனா அங்கிள்னு மட்டும் கூப்பிடாதிங்க. //

ஏன்? ஏன்? ஏன்?

உன்னை ஏன் அங்கிள் கூப்பிட கூடாது. பதில் சொல்லு மேன் சீக்கிரம் //

அப்ப சித்தப்பானு கூப்பிடலாமா???

Anonymous said...

போதும் கெளம்புங்கய்யா ஒரு பச்ச மண்ணு கெடச்சா போதுமா....

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...

வெட்டி, கோதாவுல நீயும் குதித்து விட்டாய். சதம் நான் அடிச்சுட்டேன்ப்பா உன் துணையுடன். நன்றி.... //

இந்த பதிவுக்கு 100 அடிச்சே ஆகனும்னு டார்கெட் பண்ணியாச்சில்ல...

எலேய் தம்பி,
ஒழுங்கு மரியாதையா ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் பதில் சொல்லற...

இல்லைனா உன்னைய தாக்கி பல பதிவுகள் வரும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் ;)

வெட்டிப்பயல் said...

இதுக்கு நீ கண்டிப்பா பதில் சொல்லியே ஆகனும்
//
பெயர்: தம்பி

பெயர்க்காரணம்: எல்லாரும் உரிமையோட தம்பினு கூப்பிட்டா ஒரு சந்தோஷம். உதடுகள் கூட கம் போட்ட மாதிரி ஒட்டும் பாருங்க!

உண்மையான பெயர்: உமா.கதிரவன்.

வயது: மூணே முக்கால் கழுதை வயசு.
//

இந்த லிங்ல கழுதை 30ல இருந்து 50 வயசு வரைக்கும் வாழும்னு போட்டுருக்காங்க. குறைந்த பட்ச வயது 30னு வெச்சிக்கிட்டாக்கூட உனக்கு 100 வயசுக்கு மேல வருது.

அப்ப நீ போட்டுருக்க போட்ட 80 வருஷத்துக்கு முன்னாடி எடுத்த போட்டாவா??? எதுக்கு மேன் இப்படி ஊரை ஏமாத்தற???

இதுக்கு பதில் சொல்லலைனா தனி பதிவு வரும்...

வெட்டிப்பயல் said...

எங்க நான் முன்னாடி போட்ட பின்னூட்டம்???

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

//தம்பி வா,
தரணியாள வா!

வாழ்த்துக்கள்! //

தள இங்க நான் எது சொன்னாலும் எகத்தாளம் பேச ரெடியா ரெண்டு பேரு சுத்திட்டு இருக்கானுங்க. நாம அப்புறமா இத பத்தி பேசலாம்.//

கோபியையும், ஜியையும் இப்படி அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டாக வேண்டும்...

இல்லையென்றால் அனைத்து பதிவுகளும் 5 நிமிடத்தில் உயிரெல்லையை தாண்டிவிடும் என்பதை பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறேன்...

இவன்,
ஜி ரசிகர் மன்றம்,
பாஸ்டன் கிளை

வெட்டிப்பயல் said...

//
வலைப்பதிய காரணம்: நான் பெனாத்தறதுக்கு பெனாத்தல்தான் காரணம்னா ஒத்துக்குவிங்களா?//

ஒத்துக்கலனா என்ன பண்ணுவ?

வெட்டிப்பயல் said...

//எனக்கு தோணுறத எழுதலாம்னு ஆரம்பிச்சேன்.
பெரும்பாளும் நகைச்சுவை, கவிதை(?) இதுதான் நம்ம பக்கத்துல கிடைக்கும். சீரியசாவே எனக்கு "சீரியசா" எழுத வராதுங்க.//

அப்ப நகைச்சுவையா சீரியசா எழுத வருமா???

வெட்டிப்பயல் said...

//வாசிப்பு அனுபவம்: எங்க ஊரு நூலகர் அங்கமுத்து சக்கரை இன்னமும்
என்னை தேடிட்டு இருக்காராம். எடுத்த புத்தகத்தை திருப்பி குடுத்தாதானே. //

திருடிட்டு ஊரை விட்டு ஓடி வந்ததை எவ்வளவு பெருமையா பேசிக்கிட்டு திரியறான் பாருங்க...

மகாஜனங்களே!!! இந்த அநியாயத்தை தட்டி கேட்க யாரும் இல்லையா???

வெட்டிப்பயல் said...

அந்த அனானி கமெண்ட் பத்தி போட்ட பின்னூட்டம் எங்க???

கதிர் said...

//இத எல்லாம் போய் அவர கேட்டுக்கிட்டு சும்மா கூப்பிடுங்க....//

ஆமா என்கிட்ட கேக்காதிங்க சூடானுக்கு ஒரு டிக்கெட் போட்டு புலிய கேளுங்க...

கதிர் said...

//எலேய் புலி,
கரும்பு காட்டு கதைய உன்கிட்டயும் சொல்லிட்டானா???

தம்பி,
சேம் சேம் பப்பி சேம் //

பை த பை அந்த கரும்புக்காட்டு கதைய நானும் தெரிஞ்சிக்கலாமா...

கப்பி | Kappi said...

வாழ்த்துக்கள்ண்ணா!

எப்பவும் போல கலக்குங்கோவ் :))

கப்பி | Kappi said...

//இந்த ஒரு வாரம் கொஞ்சம் ஏழரை இழுக்காம இருங்க சாமிகளா, மெதுவா ஓட்டிக்கறேன்.
//

உமக்கு ஏழரை ஏற்கனவே ஆரம்பிச்சாச்சு போலிருக்கே ஓய் :)))

வெட்டிப்பயல் said...

என் அருமை சிங்கமே!!!

வா கப்பி வா!!!

உனக்காகவே களம் காத்துக்கொண்டிருக்கிறது :-)

நாகை சிவா said...

//கோபியையும், ஜியையும் இப்படி அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டாக வேண்டும்...//

அதானா? அவங்க இரண்டும் பேரும் என்னய்யா பண்ணினாங்க உன்ன. நல்ல பசங்க, பச்ச மண்னு, சூது வாது தெரியாத பசங்க, அவங்களை போய் குத்தம் சொல்லிபுட்டியே....

இந்த ஜி பய வேற மானஸ்தன், தர்மஸ்தன் என்ன பண்ண போறானே தெரியலயே.....

ஜி said...

//வன்முறை கும்பலா இருப்பிங்க போலருக்கே. //

இதற்கு தம்பி கண்டிப்பாக தமிழ்மணம் முகப்பில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவறினால், நட்சத்திர வார அனைத்து தொகுதியிலும் குண்டு வீசப்படும் என்று தெரிய படுத்தி கொள்கிறோம்...

இவன்,
வன்முறைப் படை செயலாளர்
(தலைவர் - வெட்டி, துணை தலைவர் - புலி)

ஜி said...

//கோபியையும், ஜியையும் இப்படி அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டாக வேண்டும்...//

எலேய் வெட்டி... நல்லா கெளப்புறீங்கைய்யா பீதிய...

எலேய் தம்பி,
உங்க ஊரு அருவா, ஆறு புள்ளி ஏழு செண்டிமீட்டர்தான்.. எங்க வல்லநாட்டு வீச்சருவா, ஏழு புள்ளி எட்டு செண்டிமீட்டர்.... லேசா வச்சா போதும் தல தனியா பவுண்டரிய தாண்டி ஓடும்...

//இவன்,
ஜி ரசிகர் மன்றம்,
பாஸ்டன் கிளை //

அடப்பாவிகளா... அதுக்குள்ள ரசிகர் மன்றமெல்லாமா????

ஜி said...

//இந்த ஜி பய வேற மானஸ்தன், தர்மஸ்தன் என்ன பண்ண போறானே தெரியலயே..... //

துடிக்கிறது மீசை..
அடக்கு... அடக்கு... என்கிறது இதயம்...

எலேய் தம்பி....
இன்னைக்கு சாயுங்காலமே, உன்னை சீண்டி பல பதிவுகள் பறக்கும் என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்....

ஜி said...

இதனால் அனைத்து பதிவுலக மக்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், தம்பி, என்னையும், துபாயின் அஞ்சா நெஞ்சன் கோபியையும் அவதூறாக பேசியதால், துபாய் குறுக்குச் சந்தில் எனது சிஷ்யனான வெட்டிக்கும், தம்பிக்கும் ஒத்தைக்கு ஒத்தை மல்யுத்தப் போட்டி நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்....

அதில் வெட்டி தோற்றுவிட்டால், அடுத்த சுற்றில் சூடான சூடான் புலி மோதுவார் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்...

ஜி said...

//இப்படி பெண்களுக்கெதிராக செயல்படும் தம்பியை கன்னா பின்னா வென்று கண்டிக்கிறோம்... //

மகளிர் தின வாரம் சென்ற ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் இப்படி மகளிரின் கோரிக்கையை நிராகரித்த தம்பி ஒழிக...

அடுத்த வாரம் துபாய் மகளிரணி சார்பாக உனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்படுமாம்...

வெட்டிப்பயல் said...

//ஜி - Z said...

இதனால் அனைத்து பதிவுலக மக்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், தம்பி, என்னையும், துபாயின் அஞ்சா நெஞ்சன் கோபியையும் அவதூறாக பேசியதால், துபாய் குறுக்குச் சந்தில் எனது சிஷ்யனான வெட்டிக்கும், தம்பிக்கும் ஒத்தைக்கு ஒத்தை மல்யுத்தப் போட்டி நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்....

அதில் வெட்டி தோற்றுவிட்டால், அடுத்த சுற்றில் சூடான சூடான் புலி மோதுவார் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்... //

எனக்கு துபாய் செல்ல சொந்த செலவில் டிக்கெட் எடுத்து கொடுத்து, உற்சாகத்திற்கு "ஜி ரசிகர் மன்ற" மகளிரணியையும் அனுப்பி வைக்கும் ஜியை பாராட்ட அகராதியில் வார்த்தைகளே இல்லை...

அப்படியே லாஸ் ஆஃப் பேவிற்கும் பணத்தை கொடுத்து தங்குவதற்கு, சாப்பிடவதற்கு என மொத்தமான $10,000 அனுப்பி வைக்க முன் வந்துள்ள ஜி ஒரு தன்மானத்தமிழன் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை

இராம்/Raam said...

இங்கே என்ன மேன் நடந்துட்டு இருக்கு...??

ஆணிபிடுங்குற இடத்திலே பாடா படுத்துறனுக'ன்னு இல்லாத தாத்தா'வுக்கு ஒடம்பு சரியில்லைன்னு ஊருக்கு போனாதாதேலே இங்கே என்ன நடக்குதுன்னே தெரியலை...??


//இந்த ஒரு வாரம் கொஞ்சம் ஏழரை இழுக்காம இருங்க சாமிகளா, மெதுவா ஓட்டிக்கறேன்.//


கதிரு ஒன்னோட கிரகச்சாரபடி ஏற்கெனவே ஏழரை தொடங்கியாச்சுலே மக்கா... :)

இராம்/Raam said...

//கோபியையும், ஜியையும் இப்படி அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டாக வேண்டும்...//

எலேய் வெட்டி... நல்லா கெளப்புறீங்கைய்யா பீதிய...

எலேய் தம்பி,
உங்க ஊரு அருவா, ஆறு புள்ளி ஏழு செண்டிமீட்டர்தான்.. எங்க வல்லநாட்டு வீச்சருவா, ஏழு புள்ளி எட்டு செண்டிமீட்டர்.... லேசா வச்சா போதும் தல தனியா பவுண்டரிய தாண்டி ஓடும்...

//இவன்,
ஜி ரசிகர் மன்றம்,
பாஸ்டன் கிளை //

அடப்பாவிகளா... அதுக்குள்ள ரசிகர் மன்றமெல்லாமா???? //

ஆமாம்...

இப்படிக்கு,
ஜி ரசிகைகள் மன்ற ஒருங்கிணைப்பாளார்,
பெங்களூரூ கிளை,

ஜி said...

//எனக்கு துபாய் செல்ல சொந்த செலவில் டிக்கெட் எடுத்து கொடுத்து, உற்சாகத்திற்கு "ஜி ரசிகர் மன்ற" மகளிரணியையும் அனுப்பி வைக்கும் ஜியை பாராட்ட அகராதியில் வார்த்தைகளே இல்லை...

அப்படியே லாஸ் ஆஃப் பேவிற்கும் பணத்தை கொடுத்து தங்குவதற்கு, சாப்பிடவதற்கு என மொத்தமான $10,000 அனுப்பி வைக்க முன் வந்துள்ள ஜி ஒரு தன்மானத்தமிழன் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை //

நான் இவ்வளவு சொல்லியும், அனைத்தையும் மறுத்து தன்னுடைய சொந்த செலவிலேயே துபாய் செல்ல முனைந்திருக்கும் வெட்டியின் தாராள மனப்பான்மையை நான் என்ன வென்று சொல்வேன்...

எலேய்..

டார்கெட்டு எங்கேயோ மாறுதுலே..

தம்பி...

எங்க ஊடால சண்ட மூட்டி விட்டு குளிர்காயப் பாக்குதியா???

விடா மாட்டோம்ல.. விட மாட்டோம்..

எலேய் மக்கள்ஸ்...
ஒன்று படுவோம்...
கும்மி அடிப்போம்...

ஜி said...

//ஆமாம்...

இப்படிக்கு,
ஜி ரசிகைகள் மன்ற ஒருங்கிணைப்பாளார்,
பெங்களூரூ கிளை,//

எலேய் ராமு...
ஆர்க்குட்ல ஹீரோ கணக்கா போஸ் கொடுக்கும்போதே நெனச்சேன்.. இப்படி லவட்டிட்டு போவேன்னு...

இந்தியா வந்தவுடன் பெங்களூர் கிளையை நானே கவனித்துக் கொள்வேன் என்று அருமை அண்ணன் ராம் அவர்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன்...

ஜி said...

//தம்பி said...
முதல் வருகை தந்த வெட்டிக்கு மிக்க நன்றி.//

அப்போ அதுக்கப்புறம் வருகை தந்த நாங்க என்ன குறைந்தவர்களா??

இதென்ன கொடுமை.. இத கேக்க யாருமே இல்லையா???

கதிர் said...

//நாகை சிவா said...

வெட்டி, கோதாவுல நீயும் குதித்து விட்டாய். சதம் நான் அடிச்சுட்டேன்ப்பா உன் துணையுடன். நன்றி.... //

இந்த பதிவுக்கு 100 அடிச்சே ஆகனும்னு டார்கெட் பண்ணியாச்சில்ல...

எலேய் தம்பி,
ஒழுங்கு மரியாதையா ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் பதில் சொல்லற...

யோவ் ஒரு அளவே இல்லாம அலம்பல் பண்ணறிங்களே.
நாந்தான் ஒரு மொக்கை பதிவு போடறேன்னா நீங்க மொக்கையா நூறு கமெண்டு போடறிங்க இதுக்கு பதில் போடணும்னா என் பாதி வயசு போயிடும் போலருக்கு.

என்னத்த பண்றது போடறேன்.

//இல்லைனா உன்னைய தாக்கி பல பதிவுகள் வரும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் ;)//

அதையாச்சும் போடு சீக்கிரம்.

கதிர் said...

//அப்ப நீ போட்டுருக்க போட்ட 80 வருஷத்துக்கு முன்னாடி எடுத்த போட்டாவா??? எதுக்கு மேன் இப்படி ஊரை ஏமாத்தற???

இதுக்கு பதில் சொல்லலைனா தனி பதிவு வரும்... //

ஏன் உனக்கு இந்த ஆராய்ச்சி??? ஏதோ ரைமிங்கா வருதேன்னு சொல்லிட்டேன் உடனே லிங்க தூக்கிட்டு வருவிங்களே!

இத்தன பின்னூட்டம் போட்டதுக்கு தனிபதிவே நீ போட்டுருக்கலாம். :)

கதிர் said...

//தம்பி said...

//தம்பி வா,
தரணியாள வா!

வாழ்த்துக்கள்! //

தள இங்க நான் எது சொன்னாலும் எகத்தாளம் பேச ரெடியா ரெண்டு பேரு சுத்திட்டு இருக்கானுங்க. நாம அப்புறமா இத பத்தி பேசலாம்.//

கோபியையும், ஜியையும் இப்படி அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டாக வேண்டும்...

இல்லையென்றால் அனைத்து பதிவுகளும் 5 நிமிடத்தில் உயிரெல்லையை தாண்டிவிடும் என்பதை பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறேன்...

இவன்,
ஜி ரசிகர் மன்றம்,
பாஸ்டன் கிளை //

உயிரெல்லையா?? அப்பிடின்னா என்ன செல்லம்??

காலைல பதிவு போட்ட அஞ்சு நிமிசத்துல உயரெல்லைய தாண்ட வெச்சிங்களே அது பத்தாதா?'இன்னும் வேணுமா..

பாவம்யா நானு
நிறுத்திக்க
எல்லாத்தையும் நிறுத்திக்க

கதிர் said...

//ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படும் தம்பியை எதிர்க்கிறோம். (எவ்வளவு தான் கண்டிக்கிறது)

ஸ்ஸ்ஸ்ப்ப்பா இப்பவே கண்ண கட்டுதே!!! //

இந்த அப்பாவிக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விடும் இவர்களை வலையுலகம் மன்னிக்கவே மன்னிக்காது.

கதிர் said...

//திருடிட்டு ஊரை விட்டு ஓடி வந்ததை எவ்வளவு பெருமையா பேசிக்கிட்டு திரியறான் பாருங்க...//'

அவரே ரிட்டையர்டு ஆயி போயிட்டாரு நீ என்ன சவுண்டு விட்டுகிட்டு இருக்க.

//மகாஜனங்களே!!! இந்த அநியாயத்தை தட்டி கேட்க யாரும் இல்லையா??? //

இல்ல!

கதிர் said...

//உமக்கு ஏழரை ஏற்கனவே ஆரம்பிச்சாச்சு போலிருக்கே ஓய் :))) //

ஆமா கப்பி
ஏழரை இல்ல எழுபதரை ஆரம்பிச்சிடுச்சி. இனிமே அந்த ரெண்டு பயலுவலும் தூங்கும்போதுதான் பதிவு போடணும்.

கதிர் said...

//அதானா? அவங்க இரண்டும் பேரும் என்னய்யா பண்ணினாங்க உன்ன. நல்ல பசங்க, பச்ச மண்னு, சூது வாது தெரியாத பசங்க, அவங்களை போய் குத்தம் சொல்லிபுட்டியே....

இந்த ஜி பய வேற மானஸ்தன், தர்மஸ்தன் என்ன பண்ண போறானே தெரியலயே..... //

நாகை சிவான்ற பேர நாகை நாரதர்னு மாத்தி வெச்சிக்கோ அதுதான் பொருத்தமா இருக்கும். :))

கதிர் said...

இதற்கு தம்பி கண்டிப்பாக தமிழ்மணம் //முகப்பில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவறினால், நட்சத்திர வார அனைத்து தொகுதியிலும் குண்டு வீசப்படும் என்று தெரிய படுத்தி கொள்கிறோம்...

இவன்,
வன்முறைப் படை செயலாளர்
(தலைவர் - வெட்டி, துணை தலைவர் - புலி) //

யோவ் ஜியா
உன்னய நல்லவன்னு நெனச்சிட்டு இருந்தனேய்யா அந்த பயலுவ கூட கூட்டு சேர்ந்துட்டிங்களே!

கதிர் said...

எலேய் வெட்டி... நல்லா கெளப்புறீங்கைய்யா பீதிய...

//எலேய் தம்பி,
உங்க ஊரு அருவா, ஆறு புள்ளி ஏழு செண்டிமீட்டர்தான்.. எங்க வல்லநாட்டு வீச்சருவா, ஏழு புள்ளி எட்டு செண்டிமீட்டர்.... லேசா வச்சா போதும் தல தனியா பவுண்டரிய தாண்டி ஓடும்.../

அந்த வன்முறைக்கும்பலுக்கே தலைவர் மாதிரில்ல இருக்கு உம்ம பேச்சு!!

//இவன்,
ஜி ரசிகர் மன்றம்,
பாஸ்டன் கிளை //

அடப்பாவிகளா... அதுக்குள்ள ரசிகர் மன்றமெல்லாமா????

பின்ன பன்முகக்கலைஞ்சனுக்கு இதுதான் ஒரு அடையாளமே!

கதிர் said...

//துடிக்கிறது மீசை..
அடக்கு... அடக்கு... என்கிறது இதயம்...
//

வரைஞ்ச மீசைதான் தண்ணி தொட்டு அழிச்சிடலாம் கவலபடாதிங்க ஜியா.

//எலேய் தம்பி....
இன்னைக்கு சாயுங்காலமே, உன்னை சீண்டி பல பதிவுகள் பறக்கும் என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்....//

இதுல என்ன தாழ்மை வேண்டி கிடக்கு..

MyFriend said...

//இந்த வாரத்துல டிசேபிள் பண்ணா அம்புட்டுதான், பதிவு போட்ட அஞ்சு நிமிசத்துல காணாம போக செய்யிற அளவுக்கு எம்மேல கொலவெறில ஒரு கும்பல் சுத்திகிட்டு இருக்கு. வேணா தாயி..

அந்த தப்ப செஞ்சா அம்புட்டுதான்.//

அப்படியெல்லாம் நீர் காணாமல் போக மாட்டீர்.. போடும் ஒவ்வொரு கமேண்ட்ஸ்க்கும் நீங்க மென்மேலும் மின்னிக்கிட்டே இருப்பீங்க..

இந்தத மோடராஷன் இல்லைன்னா நாங்க பின்னூட்டங்கள் ஒரு ரைமீங்கா போடுவோம்ல.. ;-)

MyFriend said...

//அதான் நிறைய பேரு இருக்காங்கல்ல என்னையும் சேத்துக்குங்க, ஆனா அங்கிள்னு மட்டும் கூப்பிடாதிங்க.//

அப்போ எல்லாரும் சொல்ற மாதிரி, தம்பிண்ணா ஓகே வா?

MyFriend said...

//இங்கேயும் கோரிக்கையை நிராகத்திருக்கிறாய்!!!

இப்படி பெண்களுக்கெதிராக செயல்படும் தம்பியை கன்னா பின்னா வென்று கண்டிக்கிறோம்...
//

எத்தனை மனுக்கள் போட்டாலும் அசரமாட்டுறான்யா இந்த தம்பி @ தம்பிண்ணா @ நட்சத்திர அங்கிள்..

சீக்கிரம் எங்கள் மனுவை ஏற்றுக்கொள்ளுங்கள். ;-)

Santhosh said...

//
வரைஞ்ச மீசைதான் தண்ணி தொட்டு அழிச்சிடலாம் கவலபடாதிங்க ஜியா.//
அஞ்சா நெஞ்சன் ஜியாவின் கட்ட பொம்மன் மீசையை பார்த்து வரைஞ்ச மீசை என்று சொல்லுவதை வன்மையாக கண்டிக்கிறேன். எப்பா ஜியா என்னப்பா இதை எல்லாம் கேக்குறது இல்லையா? அவர் தான் கேக்கலைன்னாலும் ஜியா ரசிகர்கள் எல்லாம் என்னப்பா பண்ணிட்டு இருக்கிங்க? கிளம்புங்கடா தம்பிக்கு கட்டம் சரியில்லை.

Santhosh said...

//முதல் வருகை தந்த வெட்டிக்கு மிக்க நன்றி.//
அப்ப எங்களுக்கு எல்லாம் நன்றி சொல்ல மாட்டீங்களோ?

Santhosh said...

//யோவ் ஜியா
உன்னய நல்லவன்னு நெனச்சிட்டு இருந்தனேய்யா அந்த பயலுவ கூட கூட்டு சேர்ந்துட்டிங்களே!//
அப்ப ஜியா இப்ப நல்லவன் இல்லையா அய்யகோ இதை கேக்க ஆளு யாரும் இல்லையா?

Anonymous said...

dear thambi,
just now i happen to see your site - what attracts me very first is your name and your comments for it. every boyd like being called by thambi, anna, akka to name a few. these words have some magentic power of course.
your writing also nice. more over what a surprise to know is you could attracted lot of people so that this much feed back - i suppose. be happy - make others too happy - be polite -by speaking good words can keep your personality attractively
manithan

அபி அப்பா said...

ஆஹா தம்பி! நா ரொம்ப லேட்டா? என்ன செய்ய சர்வர் டவுன் 2 நாளா. இப்பதான் சரியாச்சு. கலக்கிடனும் கலக்கி!! வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்

உங்கள் நண்பன்(சரா) said...

தம்பி நல்லா இருக்கியா மக்கா..!
எனது பெயரை(??!) நட்சத்திரப் பதிவின் இரண்டாவது வரியிலையே குறிப்பிட்டு இருக்கிற வாழ்த்துச் சொல்ல வராம ஆணிபுடுங்கப் போய்ட்டேனே...என்ன கொடுமை தம்பி

ஹீம்..அட்லசு வாலிபரா ஆனாத்தான் ஆப்படிப்பாய்ங்கனு பார்த்தா நம்ம சங்கத்துச் சிங்கங்கள் நட்சத்திரத்துக்கும் ஆப்படிக்கிறாங்காளே...


ஆமா நம்ம புலிப் பாண்டி அங்க வந்தது பற்றி ஒரு பதிவு போடுவைனு பார்த்தேன் காணோமே? ஒரு வேளை போட்டு அது எனக்குத்தான் தெரியவில்லையா, ஆம் எனில் "சுட்டி"க் காட்டவும்

தொடர்ந்து நல்ல பல பதிவுகள் எழுதி நட்சத்திரம் ஜொலிக்க வாழ்த்துக்கள்...


அன்புடன்...
சரவணன்.

கதிர் said...

//அப்படியெல்லாம் நீர் காணாமல் போக மாட்டீர்.. போடும் ஒவ்வொரு கமேண்ட்ஸ்க்கும் நீங்க மென்மேலும் மின்னிக்கிட்டே இருப்பீங்க..

இந்தத மோடராஷன் இல்லைன்னா நாங்க பின்னூட்டங்கள் ஒரு ரைமீங்கா போடுவோம்ல.. ;-) //

ஆமாமாம் ரைமிங்கா போடுவீங்க. மாடரேஷன வச்சிகிட்டு இருக்கும்போதே இந்த மிதி, இன்னும் அதை தூக்கிட்டேன்னா அவ்ளோதான். உலகமே அழிஞ்சாலும் மாடரேசன் பண்ணித்தான் போடுவேன்.
:((

கதிர் said...

//எத்தனை மனுக்கள் போட்டாலும் அசரமாட்டுறான்யா இந்த தம்பி @ தம்பிண்ணா @ நட்சத்திர அங்கிள்..

சீக்கிரம் எங்கள் மனுவை ஏற்றுக்கொள்ளுங்கள். ;-) //

டபுள் ஓகே.

கதிர் said...

//அஞ்சா நெஞ்சன் ஜியாவின் கட்ட பொம்மன் மீசையை பார்த்து வரைஞ்ச மீசை என்று சொல்லுவதை வன்மையாக கண்டிக்கிறேன். எப்பா ஜியா என்னப்பா இதை எல்லாம் கேக்குறது இல்லையா? அவர் தான் கேக்கலைன்னாலும் ஜியா ரசிகர்கள் எல்லாம் என்னப்பா பண்ணிட்டு இருக்கிங்க? கிளம்புங்கடா தம்பிக்கு கட்டம் சரியில்லை. //

ஜியா ரசிகர்கள்னு ஒருத்தவன்க்க இல்லவே இல்ல. :))

புதுசா ஒரு பதிவு போட்டாச்சு அங்க வாங்க கும்மி அடிக்கலாம்.

நாகை சிவா said...

//your writing also nice. more over what a surprise to know is you could attracted lot of people so that this much feed back - i suppose. be happy - make others too happy - be polite -by speaking good words can keep your personality attractively//

தம்பிண்ணா, இதுக்கு உனக்கு எவ்வளவு செலவு ஆச்சு.

கதிர் said...

//அப்ப எங்களுக்கு எல்லாம் நன்றி சொல்ல மாட்டீங்களோ? //

நன்றி

Chandravathanaa said...

உமா கதிர்
வாழ்த்துக்கள்

கதிர் said...

//Anonymous said...
dear thambi,
just now i happen to see your site - what attracts me very first is your name and your comments for it. every boyd like being called by thambi, anna, akka to name a few. these words have some magentic power of course.
your writing also nice. more over what a surprise to know is you could attracted lot of people so that this much feed back - i suppose. be happy - make others too happy - be polite -by speaking good words can keep your personality attractively
manithan //


வாங்க நண்பரே.

உங்கள் கமெண்ட் படிச்சவுடன் ரொம்ப சந்தோஷமாயிடுச்சி. மிக்க நன்றி.
உறவுகள் தரும் சந்தோஷங்கள் மிக இனிமையானது. அம்மா, அப்பா, தம்பி, தங்கை. கூட பிறந்தால்தான் இவங்க எல்லாம் இல்லை, இந்த வலையுலகத்தில் இருக்கிற அனைவரும் உறவினர்களே. இங்கயும் அம்மா, அப்பா, தம்பி, அக்காக்கள் இருக்கிறார்கள்.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. உங்க பேர சொல்லியிருக்கலாமே!

கதிர் said...

//ஆஹா தம்பி! நா ரொம்ப லேட்டா? என்ன செய்ய சர்வர் டவுன் 2 நாளா. இப்பதான் சரியாச்சு. கலக்கிடனும் கலக்கி!! வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள் //

மெயின் ஆளே லேட்டா வந்தா எப்படி??
சரி ஆரம்பிங்க...

அபி அப்பா said...

லேட்டா வந்தாலும் 150 நாதானே!! இப்போ 160ம் நானே! திரும்பவும் 170க்கும் நானே!

அபி அப்பா said...

//இந்த வலையுலகத்தில் இருக்கிற அனைவரும் உறவினர்களே. இங்கயும் அம்மா, அப்பா, தம்பி, அக்காக்கள் இருக்கிறார்கள்.//

ஒன்னு விட்ட சித்தப்பா உண்டா?

அபி அப்பா said...

////your writing also nice. more over what a surprise to know is you could attracted lot of people so that this much feed back - i suppose. be happy - make others too happy - be polite -by speaking good words can keep your personality attractively//

தம்பிண்ணா, இதுக்கு உனக்கு எவ்வளவு செலவு ஆச்சு.//

இதுக்கு நா பதில் சொல்லட்டா புலியாரே?

அபி அப்பா said...

//புதுசா ஒரு பதிவு போட்டாச்சு அங்க வாங்க கும்மி அடிக்கலாம்.//

அங்க வந்து கும்முனதுக்கு வெளியிட்டு மொதல்ல பதில சொல்லுமய்யா

கோபிநாத் said...

\\பாவம்யா நானு
நிறுத்திக்க
எல்லாத்தையும் நிறுத்திக்க\\

எல மக்கா போதும் ரொம்ப பாவமா இருக்கு..

அப்படின்னு விட்டுடாதிங்க இன்னும் டார்க்கெட்டை அடையவில்லை.

கோபிநாத் said...

\\ //வாழ்த்துக்கள் தம்பி.. கொஞ்ச நேரத்துல நானும் கோதால குதிக்கிறேன்... :)) //

நீயும் கோதாவுல குதிப்பேனு வெயிட் பண்ணி பாத்துட்டு நானே தனியா ஆடிக்கிட்டு இருக்கேன் இப்ப.... இங்குட்டு போனீர் அய்யா நீர்....\\

ஆகா....இப்பன்னு பார்த்தா எனக்கு டே சிப்டு வரணும் ;((((

கோபிநாத் said...

அன்பும், பாசமும் மிக்க என் அருமை கும்மி சங்கத்து சிங்கங்களே (புலி, வெட்டி, ஜி, கப்பி)

இந்த கும்மி போதுமா சற்றே சிந்தித்து பார்ப்பீர்....தொடருங்கள்...

கோபிநாத் said...

\\எத்தனை மனுக்கள் போட்டாலும் அசரமாட்டுறான்யா இந்த தம்பி @ தம்பிண்ணா @ நட்சத்திர அங்கிள்..\\

நட்சத்திர அங்கிள்.
நட்சத்திர அங்கிள்...
நானும் இன்னும் ஒரே ஓரு பின்னூட்டத்தை போட்டுக்குறேன் அங்கிள் ;)))

ஆவி அண்ணாச்சி said...

அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தமென்ன பந்தமென்ன
சொல்லடி எனக்கு பதிலை!

நன்றி கொன்ற உள்ளங்களை
கண்டு கண்டு வெந்தபின்பு
என்னடி எனக்கு வேலை!

நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்ருமில்லை என்றபின்பு
உறவு கிடக்கு போடி!
இந்த உண்மையைக் கண்டவன் ஞானி!

(ஆனந்த விகடனில் எழுதும் ஞானி அல்ல)

Anonymous said...

ஆகா எங்க சொந்தக்காரங்க எல்லாம் நட்சத்திரம் ஆகிறாங்க..

தம்பிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ச்..
வாழ்த்துக்கள்..:)

நிறைய எழுதுங்க..:)

Anonymous said...

oh.. dear thambi, what a surprise - there was response from you. i can't belive it. i am the one liking people who are friendly and truly. you have written `reading your comments i am very happly' thank you for your acceptance.not only you - i also v.v.happy seeing your reply- i don't know how to express it. i don't find any word to explain it here. people should be of loving each other forgetting their own identity. Love can only could unite people - no matter where they are. exchanging of views,affection also helpful to boost us more.wishing you best of luck. you want my name: Annan -
o.k.Sir, - baskar -

கதிர் said...

//தம்பிண்ணா, இதுக்கு உனக்கு எவ்வளவு செலவு ஆச்சு.//

லே புலி!

இது பாசத்துல வந்த பறவைகள், இதையும் நீ உன்னோட லிஸ்ட்ல சேத்துக்காத.

கதிர் said...

//இந்த கும்மி போதுமா சற்றே சிந்தித்து பார்ப்பீர்....தொடருங்கள்...//

எண்ணெய் ஊத்துறதுல எக்ஸ்பர்ட்டா இருப்ப போல! நல்லா இருலே

கதிர் said...

//நட்சத்திர அங்கிள்.
நட்சத்திர அங்கிள்...
நானும் இன்னும் ஒரே ஓரு பின்னூட்டத்தை போட்டுக்குறேன் அங்கிள் ;))) //

கோபி தாத்தா!

1 இல்ல 100 போட்டுக்குங்க!

கதிர் said...

//oh.. dear thambi, what a surprise - there was response from you. i can't belive it. i am the one liking people who are friendly and truly. you have written `reading your comments i am very happly' thank you for your acceptance.not only you - i also v.v.happy seeing your reply- i don't know how to express it. i don't find any word to explain it here. people should be of loving each other forgetting their own identity. Love can only could unite people - no matter where they are. exchanging of views,affection also helpful to boost us more.wishing you best of luck. you want my name: Annan -
o.k.Sir, - baskar -//

வாங்க பாஸ்கர் அண்ணே!

நீங்க மறுபடி வந்தது ரொம்ப சந்தோஷம்.

அன்பே சிவம் னு சொல்லியிருக்கிங்க
சரியாதான் வார்த்தை அது.
சக மனிதர்களிடம் உண்மையான நேசத்தை காத்தாலே போதும் இந்த உலகம் இனிமையாக மாறும். என்ன எழுதறதுன்னே தெரில.

இத்தனை அன்புக்கும் என் நன்றிகள்.

கதிர் said...

//ஆகா எங்க சொந்தக்காரங்க எல்லாம் நட்சத்திரம் ஆகிறாங்க..

தம்பிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ச்..
வாழ்த்துக்கள்..:)

நிறைய எழுதுங்க..:) //

வாங்க நளபாகினி(தமிழ்பதம் சரியானு தெரில)

சொந்தமாக நினைச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

வாழ்த்துகளுக்கும் நன்றி,

நிறைய எழுதி எல்லாத்தையும் இம்சை பண்ணனும்னு ஆசப்படறிங்க அவ்ளோதான செஞ்சிட்டா போச்சு.

:))

ஆவி அம்மணி said...

ஸ்டார் பதிவர் ஒருவரை கலாய்க்க என்ன செய்யலாம் என்று உக்காந்து யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.

சேதுக்கரசி said...

நட்சத்திர வாழ்த்துக்கள்! டவ் ஷாம்பூ பத்தி மட்டும் எழுதாதீங்க.. ஆமா!! :-)

ஜி said...

//சந்தோஷ் aka Santhosh said...
அஞ்சா நெஞ்சன் ஜியாவின் கட்ட பொம்மன் மீசையை பார்த்து வரைஞ்ச மீசை என்று சொல்லுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.//

அப்படி சொல்லுங்க சந்தோஷ்... தம்பி... எனது மீசையைப் பார்த்து தீவிரவாதி யென்று ஏர்போட்டிலேயே ஸ்பெசலாக செக் பண்ணியது உமக்கு தெரியுமா??

மீசையை எடுத்தால் மாதவன் போல் இருப்பாய் என்று எக்கச்சக்க பைங்கிளிகள் கூறியபோதும், தமிழனுக்கு மீசைதான் அழகு என்று மீசையோடு சுற்றித் திரிகிறேன் என்று உமக்குத் தெரியுமா??

ஒவ்வொரு வாரமும், ரஜினி, கமல் என்று மாற்றி மாற்றி அவர்களது ஸ்டைலில் மீசை வைத்து, வெள்ளைக்காரனை மிரட்டியதுதான் உமக்குத் தெரியுமா??

எனது ப்ரோஃபைல் படம் கூட மீசை வைத்த மிருகம்தான் வேணும் என்று பூனைப்படைத் தளபதி படத்தை வைத்திருப்பதாவது உமக்குத் தெரியுமா??

இப்படி சொல்லிவிட்டாயே தம்பி...

//அவர் தான் கேக்கலைன்னாலும் ஜியா ரசிகர்கள் எல்லாம் என்னப்பா பண்ணிட்டு இருக்கிங்க? கிளம்புங்கடா தம்பிக்கு கட்டம் சரியில்லை. //

யய்யா பாஸ்டன் கிளை ரசிகர் மன்றத் தலைவர் னு ஒருத்தர் சுத்திக்கிட்டு இருந்தாரே அவர எங்கப்பா?? ஏதாவது கொல்டி படம் பாக்கப் போயிட்டாரா??

Anonymous said...

dear thambi, you saved me telling
"Ithu Pasathila Vantha Paravaikal"
thank you- i enjoyed reading this.
your description about your `sotha Oorrr - sonthama Oorr ethuvum illinga - good joke
another one--Paeranbu, Mikka Paeranbum mattum kondavan -
-- engala mathiri illathavarkalukkum konjam kodungappa.
Mr. Nagai sivam - ennammaa veratturaru - his comment is -'how much you spent for this' - i think he is buying friends by spending money. ok. of course we can enjoy his comments - lot of people make good comments with good sense. we need not to read any commedy book separately- it is enogh to read the feed back
you are also having sene of humour - i don't know how to write in tamil - so i have to write this with lot of mistakes.i will read your other `Pathipu' on phased manner - ok
natpudan -baskar-

சுந்தர் / Sundar said...

கொஞ்சம் லேட்டுத்தான் , ஆனா வந்துட்டேன்ல்ல !

இம்சை அரசி said...

congrats thambi!!!

3 naal oorukku poyittu varangulla ellaarum koodi kummiyadichuttaangappa.........

கதிர் said...

//ஸ்டார் பதிவர் ஒருவரை கலாய்க்க என்ன செய்யலாம் என்று உக்காந்து யோசித்துக் கொண்டு இருக்கிறேன். //

வாங்க ஆவி அம்மணி,

மேல இருக்கற பின்னூட்டமெல்லாம் என்னை வாழ்த்தி வந்ததுன்னு நினைக்கறிங்களா பூராவும் என்னை கலாய்ச்சதுதான் இதுல தனியா வேற கலாய்க்க உக்காந்து யோசிக்கறிங்களா?

கொஞ்சம் கூட நல்லா இல்ல ஆமா...

கதிர் said...

//நட்சத்திர வாழ்த்துக்கள்! டவ் ஷாம்பூ பத்தி மட்டும் எழுதாதீங்க.. ஆமா!! :-) //

வாங்க சேதுக்கரசி!

அதை பத்தி எழுத மேட்டர் இல்லிங்க சேதுக்கரசி.

Unknown said...

தாமதமான வாழ்த்துக்கள்…
மத்தப் பதிவெல்லாம் இனிமே தான் படிக்கனும்…

கதிர் said...

//dear thambi, you saved me telling
"Ithu Pasathila Vantha Paravaikal"
thank you- i enjoyed reading this.
your description about your `sontha Oorrr - sonthama Oorr ethuvum illinga - good joke
another one--Paeranbu, Mikka Paeranbum mattum kondavan -
-- engala mathiri illathavarkalukkum konjam kodungappa.
Mr. Nagai sivam - ennammaa veratturaru - his comment is -'how much you spent for this' - i think he is buying friends by spending money. ok. of course we can enjoy his comments - lot of people make good comments with good sense. we need not to read any commedy book separately- it is enogh to read the feed back
you are also having sene of humour - i don't know how to write in tamil - so i have to write this with lot of mistakes.i will read your other `Pathipu' on phased manner - ok
natpudan -baskar- //

வாங்க பாஸ்கர்!

நம்ம பய சிவா அவர் அப்படிதான் கலாய்ப்பாரு நீங்க ஒண்ணும் தப்பா நினைக்காதிங்க. நீங்களும் தமிழ்ல எழுதலாம் கலப்பை என்ற மென்பொருள இன்ஸ்டால் பண்ணிங்கன்னா சுலபமா தமிழ்ல டைப் பண்ணலாம். இந்த பதிவ படிச்சதால சந்தோஷமா சிரிச்சிங்கன்னா அதுவே எனக்கும் சந்தோஷம். அடிக்கட்டி வாங்க.

அன்புடன்
தம்பி

கதிர் said...

//கொஞ்சம் லேட்டுத்தான் , ஆனா வந்துட்டேன்ல்ல !//

லேட்டா வந்தாலும் வந்திங்களே அதுவே போதும்.

நன்றி சுந்தர்.

கதிர் said...

//congrats thambi!!!

3 naal oorukku poyittu varangulla ellaarum koodi kummiyadichuttaangappa......... //

வாங்க இம்சை அரசி!

3 நிமிசத்துல எல்லாமே மாறுது, நீங்களோ மூணு நாள் கழிச்சி வந்துருகிங்க. இன்னும் ஒரு நாளு நாள் பொருத்துக்குங்க அடுத்த நட்சத்திரம் நல்லா எழுதுவாரு, எனனி மாதிரி மொக்கை போட மாட்டாரு.

வருகைக்கு நன்றி