எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, July 28, 2008

சாருவின் தவறு

//Its more than 10 hours since you replied and I still see some others name.
Please make sure you give credits to the right person and respond properly.
Respond after the changes are done.//

மாத்த சொல்லி பத்து மணி நேரம் ஆகுது இன்னும் மாத்தாம இன்னும் என்னடா
புடுங்கிட்டு இருக்கற மாங்கா மண்டையா என்று கவுண்டமணி செந்திலுக்கு சொல்வது
போல அமைந்த இந்த பதில்தான் இத்தனை வாதத்திற்கும் காரணம்.

நண்பர் பாலாஜி சாட்டில் வந்து தன் பதிவு சாருவின் தளத்தில் வந்திருப்பதாக
சொன்னபோது உண்மையிலேயே மகிழ்ச்சி அடைந்தேன்.
(தனி உரையாடலை பொதுவில் வைப்பதற்கு மன்னிக்கவும்).
பாலாஜி கொடுத்த சுட்டியை பிடித்து சென்றபோது அங்கே வேறு பெயர் இருந்ததை
பார்த்து அப்பொழுதே பாலாஜியிடம் குறிப்பிட்டேன். சாருவுக்கு மடல் அனுப்புமாறு கூட சொன்னேன். பின்னர் நடந்தது சாருவின் தளத்திலும் பாலாஜியின் வலைப்பூவிலும் பார்த்துதான் எனக்கு விஷயமே தெரிந்தது. அதற்குள் கருத்துப் பெருந்தகையாளர்கள்
தங்கள் ஆதரவு நிலை அல்லது எதிர்ப்பு நிலையை அவசர அவசரமாக
பகிர்ந்துகொண்டார்கள். பகிர்ந்து கொண்டவர்களில் உண்மைநிலை அறியும்
ஆவல் துளிகூட இல்லாதது பின்னூட்டங்களை படித்தாலே புரிந்துகொள்ளமுடியும்.
எதாவது ஒரு கருத்தை முன்வைத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் போடப்பட்ட பின்னூட்ட்ங்களில் தெரிந்தது

என் வருத்தத்தின் உச்சகட்டம் என்பது வெட்டியின் பதிவில் பார்த்த அவரின்
எதிர்வினையில். இருந்தாலும் புரியாமையின் வெளிப்பாடு அதற்கு அத்தகைய
முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் அதைப்பற்றிய
அக்கறை எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் பாலாஜியின் கதைகளுக்கு
என்ன மாதிரியான பின்னூட்டம் வருமோ அதேபோன்ற பின்னூட்டங்கள் அதிகமாக
வரும்போது பிரச்சினை வேறு திசை நோக்கி செல்வதை உணரமுடிந்தது. குறைந்தபட்ச பண்புகள் கூட இல்லாது எழுதப்பட்ட ஒரு பதிவிற்கு மக்களின் உணர்ச்சிகர
ஆதரவுநிலை என்பதனை ஏனோ யாருமே உணரவில்லை.

//இவருக்கு ஒரு கோ-ஆர்டிநேட்டர் இருப்பாரு. அவர் தான் இந்த மாற்றங்கள் எல்லாம் செய்வாருனு எனக்கு எப்படிங்க தெரியும்? அதை அவர் முதல் மெயில்லயே I will ask my co-ordinator to do the necessary Changeனு சொல்லியிருந்தா நான் அமைதியா இருந்திருப்பேன். இதுல யாரோட மெயில்ல சுடுசொல் இருக்குனு நீங்க சொல்லுங்க? அப்படி இருந்தும் நான் அவருக்கு அடுத்த 6 நிமிஷத்துல அனுப்பன மெயில்//

இந்த பதிலை பாலாஜியே நிதானமாக படித்துவிட்டு பார்க்கலாம். கவுண்டமணி
செந்திலுக்கு சொல்லும் பதில்தான் இதில் அடங்கியுள்ளது. வேறு வித்தியாசம் எதாவது உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? எதிர்வினை அல்லது தன்னிலை விளக்கப்பதிவு
இவ்வளவு மட்டமான முறையில் எங்காவது நீங்கள் படித்திருக்கிறீர்களா? அதுவும் குறிப்பிடத்தகுந்த படைப்பாளிக்கு எதிராக? இதே மாதிரியா அவர் உங்களுக்கு பதில்
அளித்தார்? தொழில்முறை எழுத்தாளர் கம்பியூட்டர் கைநாட்டாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. (உண்மையில் அவர் ஒரு பிச்சைக்காரனாகத்தான் இருக்க வேண்டும்)
ஒரு அறிமுகமில்லாத பதிவரின் பதிவு பிடித்துப் போய்தான் அதை மேற்கோள் காட்டினார். அதில் எதோ குழப்பம் வந்து விட்டது. அந்தக்குழப்பத்தை சரி செய்ய பத்துமணி நேரம் கடந்தும் ஏன் மாற்றவில்லை என்று கேள்வி கேட்பது எந்த விதத்தில் அய்யா நியாயம்? சாருவின் தளத்தில் மாற்றங்களை தங்கவேல் என்பவர்தான் செய்து வருகிறார் அதற்கு காலதாமதம் ஏற்படுவது வழக்கம்தான் என பின்னூட்டத்தில் ஒருவரும் சொல்லவில்லை. மேலும் சாரு என்பவர் பலருக்கு புதிதான ஒரு பதிவர்! என் உதவியாளருக்கு சொல்லியிருக்கிறேன், அவர் மாற்றுவார் அதற்கு 24 மணி நேரம் ஆகும் என்றெல்லாம் ஒருவரால் நிச்சயமாக பதில் அளிக்க முடியாது. அதற்கு நேரமும் இருக்காது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

நண்பர் வெட்டிக்கு சொல்வது இதுதான்.

உங்களின் இரண்டாவது மடலின் சாரம் நிர்வாக ஆதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு.

அது நீங்கள் அறியாமலே வெளிப்பட்ட மொழி. முதிர்ந்த எழுத்தாளரின் முன் அந்த
சொற்கள் விளைவித்த பொருளை இதற்கு மேலும் விளக்க முடியாது.நிதானமாக
ஒவ்வொரு வரியாக படித்துப்பாருங்கள். இதைவிட வேறு மொழியில் உங்கள்
உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கலாம் என்பது என் வாதம்.

//பயமெல்லாம் இல்லை. சண்டை போட விருப்பமில்லை. நேரமுமில்லை..//

இந்த வரிகளை படிக்கும்போதெல்லாம் மனதுக்கு மிக வருத்தமாக இருந்தது. ஒரு
உண்மை நிலையை யாருமே புரிந்துகொள்ளாமல் இப்படி பயம்/ சண்டை போன்ற வார்த்தைகள் உபயோகிப்பது எல்லாம் அவசியமில்லாதது. மேலும் சாருநிவேதிதா
என்ற எழுத்தாளரை தெருச்சண்டைக்கு இழுப்பதுபோல இருக்கும் இந்த வரிகளை
படித்தும் மேலும் பரவசமடையும் கூட்டத்திற்கு என்ன சொல்வது?

அய்யா பின்னூட்ட கருத்து கந்தசாமிகளே! முதலில் கண்டனத்தை பதிவு செய்ய அலைந்துகொண்டே இருப்பீர்களா? இதில் என்ன ஆகப்பெரிய அநியாயம் நடந்து விட்டது
என கண்டனத்தை பதிவு செய்கிறேன் என்று முழக்கமிடுகிறீர்கள்?

எதாவது ஒரு நிலை எடுத்தாகவில்லையென்று எந்த கட்டாயமுமில்லை. கண்டனத்தை
பதிவு செய்கிறேன் என்று சொற்களை வீணாக்காதீர்கள். இப்போதெல்லாம் இந்த ஆதரவு/ எதிர்ப்பு நிலைகளை பதிவிக்கவில்லை என்றால் குடிமூழ்கிப்போய்விடுமாம். தயவுசெய்து
இந்த பதிவையும் உங்கள் மூளை அப்படி எண்ணாதிருக்கட்டும்.

தமிழ் எழுத்துத் தளத்தில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளரை
இதைவிட வேறு எவராலும் அசிங்கப்படுத்த முடியாது. சாரு ஒரு கலகக்காரன்/ ஸ்திரிலோலன்/ வாசகர்களிடம் பிச்சை எடுப்பவன்/ தண்ணியடிப்பவன் இதுதான்
அங்கே பிரதானமாக பேசப்படுகிறது. பத்து மணி நேரத்தில் ஏன் இன்னும் மாற்றம் செய்யவில்லை? இதற்கு ஒரு நினைவுறுத்தும் மடல் அதற்கு ஒரு பதிவு அதற்கு
இத்தனை உணர்ச்சிகர பின்னூட்டங்கள் என நீண்டுகொண்டே இருக்கிறது.
உண்மையில் சாருதான் இந்த விஷயத்தில் பரிதாபத்துக்கு உரியவர்.

இந்தப் பின்னூட்டங்களை படிக்கையில் நம் சினிமாவில் ஊழலுக்கு எதிராக நாயகனுக்கு ஆதரவாக டீவி சேனல்களின் மைக்குகளின் முன்னால் ஆவேசமாக குழாயடியிலும்/ ரோட்டோரம் போகும் வருபவரிடமும் பெறப்படும் டெம்ப்ளேட் குரல்களாகத்தான் இருக்கின்றன. யாரும் எவரையும் தவறான புரிதலுக்கு காரணம் என்ன என்றும்
அதைநோக்கி விவாதம் செய்யும் முனைப்பும் எதுவுமே இல்லை. எதோ கொலை
ஒன்று நிகழ்ந்து விட்டதுபோலவும் அதை நேரில் கண்ட சாட்சிகள் போலவும் குற்றவாளிக்கூண்டிலே நிற்கவைத்து இவர்களே பேசவும் செய்கிறார்கள்.

ஒரு ஆகப்பெரிய எழுத்தாளர் ஒருவர்/ யார் என்றே தெரியாமல் எந்த உள்நோக்கமும் இல்லாமல் எவரோ எழுதிய பதிவை பிடித்தது என்ற ஒரே காரணத்துக்காக பல ஆயிரம்
பேர் படிக்கும் தனது தளத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். எந்தவித சுயநோக்கமும்
இல்லாமல் அவர் பகிர்ந்தது எவ்வளவு உண்மையோ அதே அளவு இதனை யார்
எழுதியது என்று தெரியாது வெளியிட்டதும் உண்மை. இடையில் நடந்த
சிறுகுழப்பத்துக்கு இத்தனை பெரிய அவமரியாதை செய்வது எத்தனை
அசிங்கமானது?

பாஸ்டன் பாலா என்பவர் மீது எனக்கு பெரும் மதிப்பு இருந்தது. அவரைக்கண்டு
பலசமயத்தில் வியந்திருகிறேன். கீழ்க்கண்ட அவரின் பின்னூட்டம் படித்தவுடன் அருவருப்புதான் உண்டாகியது.

//சாருவிற்கு தமிழ்ப்பதிவுகளை தன் பக்கம் திசை திருப்பிக் கொள்ள இன்னொரு யுக்தி?

அடுத்த கட்டத்துக்கு போயிருக்கீங்க :)//

இத்தகைய மலினமாக சிந்திக்கும் ஒருவரை இவ்வளவு நாளாக என் ஆதர்சமாக நினைத்திருந்ததை நினைத்து வெட்கப்படுகிறேன்.

கிளிப்பிள்ளைக்கு விளக்கம் கொடுப்பதுபோல இத்தனை பேர் வரிந்துகட்டிக்கொண்டு
பதில் எழுதியிருக்கும் அத்தனை பெருந்தகையாளர்களுக்கும் ஒரே விஷயம்
கேட்கவேண்டும் பாலாஜியை முன்னிறுத்தி எதாவது பிரச்சினை செய்தால் தான்
பெரியாளாகி இந்த பெரிய்ய்ய தமிழ்வலைப்பதிவுலகின் திசையையே தன்பக்கம்
திருப்பி தன்வசம் வைத்துக்கொள்ளத்தான் இதை செய்தார் என்று சொல்ல முடியுமா?

இந்த வாதங்களெல்லாம் ஊனமுற்றவனை திட்டுவது போல அமைந்துள்ளது.
சரிதான் தமிழ்ச்சூழலில் எழுத்தாளன் என்பவனே ஊனமுற்றவன் தானே! தவிர
தொழில்நுட்ப அறிவு வாய்க்கப்பெறாத சாரு ஊனமுற்றவர் இந்த விஷயத்தில்.
மாறாக பத்துமணி நேரத்திலும் ஏன் மாற்றம் செய்யவில்லை என்று கேள்வி கேட்கலாம்.
வார இதழில் கூட தவறான செய்திகளுக்கு அடுத்த வாரத்தில்தான் மன்னிப்பு
கேட்கிறார்கள். இங்கே நம்மாள் 10 மணி நேரம் கூட பொறுக்க முடியாது.
ஏனென்றால் கிரெடிட் எல்லாம் வேறு ஒருவருக்கு போய்விடும். அப்படி போய்விட்டால்
அடுத்த வேலை உலைகொதிப்பது பெரும்பாடாகிவிடும். ஒருநாளோ இரண்டு நாளோ
கெடு கொடுத்தெல்லாம் நமக்கு பழக்கமில்லை.

டிபிசிடி மட்டுமே வார்த்தைகளை இப்படியும் புரிந்துகொள்ளலாம் என்பதை
சொன்னவர். அவராவது சொன்னாரே என்று மகிழ்ச்சி அடைகிறேன். மேலும்
“இப்படியும்” (இப்படித்தான்) புரிந்துகொள்ள முடிகிற வார்த்தைகளின் கோர்வைதான் பாலாஜியின் மடல். இதை அவர் உணர்ந்து எழுதியிருப்பார் என்று நிச்சயமாக
நம்பவில்லை. அவரின் அலுவலக/வாழ்க்கை சூழ்நிலை அப்படி அமைந்தது
இப்படியாக மடல் எழுதி இப்படியாக பதில் பெற்று வந்தவரின் வழியில் திடிரென
இந்த மொழி/வார்த்தைகள் தவறான அணுகுமுறையைத் தரும் என்று சொல்வது என்னாலும்கூட ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றுதான். நிஜத்திலே இந்த அனுபவம்
எனக்கு நிறைய ஏற்பட்டிருக்கிறது. என்னையறியாமல் நான் பேசும் பல வார்த்தைகள்
என் மேல் அன்புகொண்டவர் கூட என்னிடம் சண்டை போடும் அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது. ஏனென்றால் நான் கையாண்ட மொழி அப்படிப்பட்டது. அத்தகைய சூழ்நிலையில்தான் நான் வளரப்பெற்றேன். திடிரென்று என்னால் அவர்களுக்கு
ஏற்றவகையில் பேசமுடியாது. அதேசமயம் என்னளவில் நான் சரி. என்
வார்த்தைகள் எத்தகையை தோற்றத்தை கேட்பவரிடம் செய்திருக்கும் என்ற
கற்பனையெல்லாம் நான் சிந்திக்க முடியாத தூரத்தில் இருந்ததுதான் உண்மை.
எல்லாருக்கும் இது பொருந்தும்.


இதை பாலாஜியின் பதிவில் பின்னூட்டமாக இடுவதை நான் விரும்பவில்லை.
முதலில் கும்பலாக ஒரு விஷயத்தை விவாதிப்பதில் எனக்கு விருப்பமே இருந்ததில்லை. மாறாக அங்கு நான் கண்டது கூச்சல்தான். என்னுடைய கருத்து மற்றவர்களிலும்
சிறப்பாக அமைந்துவிடவேண்டும் என்று வாதம் செய்பவர்களின் கூச்சல்.

வயதில் பெரியவரிடமோ, தன்னைவிட சிறியவர்களிடமோ/ முன்பின் தெரியாதவர்களிடமோ பேசும்போது குறைந்தபட்ச பண்புகளை பேசக் கற்றுக்கொள்ளவேண்டும். ஒருமுறைக்கு இருமுறை வார்த்தைகளை சரிபார்ப்பது நலம். சாருவின் எழுத்துக்கு தீவிரமான
வாசகனாக இருந்தும் அவருக்கு இதுவரை இரண்டு மடல்கள் மட்டுமே எழுதி
இருக்கிறேன். அதில் ஒன்றை அவரே வெளியிட்டுவிட்டார். இதெல்லாம் நான்
எதிர்பாராதது. அவர் வெளியிட்டதால் எனக்கு கிட்டத்தட்ட நாலாயிரம் ஹிட்ஸ்
எகிறியது. கூடவே நீ என்ன பெரிய புடுங்கியா என்றும்/ மேலும் மோசமாக பின்னூட்டம் வந்தது. இங்கே திட்டுபவரும் வாழ்த்துப்பவரும் தமிழ்வலைச்சூழலில் இயங்குபவர்தான். அதனால் எல்லாரையும் சந்தேகக்கண்களுடனே பார்க்க வேண்டியிருக்கிறது. என்
கடிதத்தை ஏன் வெளியிட்டீர்கள் என்று சண்டையா போடமுடியும்.
அரைவெக்காட்டுத்தனமான என் பதிவை படித்து முழுவேக்காட்டுத்தனமாக திட்டுகிறான் என்றுதான் எடுத்துக்கொள்ளமுடியும். நேரடியான கொச்சை வார்த்தைகள் எத்தகைய
மன உளைச்சலைக் கொண்டுவரும் என்பது மடலை வாசிக்கும்போதுதான் தெரியவரும்.

பத்துமணி நேரமெல்லாம் தாமதமே அல்ல. அவர் இந்தியாவில் இருக்கிறார்.
நீங்கள் அமெரிக்காவில் இருக்கிறீர்கள்.

இந்த பதிவை படித்தவுடன் பின்னூட்டத்தை போட்டுவிடவேண்டும் என்று கைகள்
பரபரத்தால் தயவு செய்து மன்னித்துவிடுங்கள் நண்பர்களே! இதுகுறிந்து என்
ஆதங்கத்தை தெரிவிக்க மட்டுமே இந்த விளக்கம். அப்புறம் நாங்க எப்படி
கருத்து சொல்வதாம்? கருத்துச்சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் கதிர் ஒழிக
என்றுகூட சொல்லிக்கொண்டு சந்தோஷப்படுங்கள். நமக்குதான் தினமும் நாலு
கருத்து சொல்லவில்லையென்றால் கீபோர்டு அரிக்குமே!

சாருவிற்கு ஒரு வேண்டுகோள். வாசகர்கள் உங்கள் எழுத்துக்களையே விரும்புகிறார்கள்.
மேற்கோள் காட்டி எழுதும் பதிவுகளினால் மற்றவர்களுக்கு மன உளைச்சல் வரும்
என்பதை உணர்ந்துகொள்வீர் என்று நம்புகிறேன். மேலும் பதில் மடல் எழுதும்போது
இரண்டு வார்த்தைகளுக்கு மேல் எழுதவும்.

நண்பர் பாலாஜி புரிந்துகொள்வார் என்று நம்புகிறேன்.

Saturday, July 26, 2008

தசப்படம்

ஒரேநாள்ல பத்துப்படம் பார்த்து சாதனை பண்ணவேண்டும்னு ரொம்பநாள் ஆசை. அத
கடந்த வெள்ளிக்கிழமை செஞ்சாச்சு (கலைப்படம் நீங்களாக). இப்படிலாம் மொக்கசாதனை பண்ணிதான் நம்ம திறமைய நிரூபிக்க முடியும். அஞ்சு தமிழ்ப்படம் அஞ்சு ஆங்கிலப்படம்னு முதல்ல முடிவு பண்ணேன். தமிழ்லருந்து ஆரம்பிக்கலாம்னு வேதா படத்தை முதல்ல பாத்தேன். சூப்பரா சொதப்பிருக்காங்க. விஜயகுமார் புள்ளைங்க ஒண்ணுகூட தேற முடியாதுன்ற விஷயத்தை மறுபடியும் அழுத்தம் திருத்தமா விஜய் அருண்
நிரூபிச்சிருக்கார். பத்துப் படம்ன்ற சாதனை பண்றதுக்கு பெரும்சவாலா இந்தப் படம் பார்த்ததைச் சொல்லலாம். படுத்துகிட்டு, உருண்டுகிட்டு, கண்ணமூடிகிட்டு, காதப்பொத்திகிட்டு, போர்வைய இழுத்து மூடியும் இந்த படம் முடியுற மாதிரி
இல்லாததால் இரண்டாவது CD ய பாக்கவேல்ல. உசுரே போனாலும் இனிமே அருண்
விஜய் நடிச்ச படத்தை பாக்ககூடாதுன்னு வேதா CD மேல இருந்த அருண் ஸ்டில் மேல
அடிச்சு சத்தியம் பண்ணேன்.

சொக்கம்பட்டிப்பய (SJ சூர்யாவோட மச்சானாம்) தமிழ்ப்படம் டிவிடி ஒண்ணு இருக்கு
பாக்கறீங்களாண்ணேன்னு கேட்டான். குடுடா பாக்கலாம்னு வாங்கிட்டு வந்தா
அதுல மதுரைப்பொண்ணு சென்னைப்பையன், மலரினும் மெல்லிய (எங்கருந்துடா
டைட்டில் புடிக்கறிங்க)விளையாட்டு ன்னு மொத்தம் மூணு படம். ம.பொ.செ.பை
எப்படியும் துள்ளுவதோ இளமை மாதிரி கில்பான்சியா இருக்கும்னு ஆர்வத்துல
பாத்தேன். அதுக்கு ஏத்தமாதிரி ஷர்மிளியும் சுந்தர்ராஜனும் ரெண்டு மூணு சீன்
லவ் பண்ணதோட சரி அப்புறம் காணவே காணும். கதைனு பாத்தா ம.பொண்ணும்
செ.பையனும் லவ்பண்றாங்க. மதுரப்பொண்ணுன்னாவே அவளுக்கு ஓலை கட்ன
வகைல ஒரு மாமன் கண்டிப்பா இருப்பான். அவன் கட்டை மீசை வச்சிருப்பான்.
முதுகுல அருவாள வச்சிருப்பான். வெள்ள சட்டை, வேட்டி கட்டிருப்பான்.....
கடைசில இளசுங்க காதலுக்கு அருவா தூக்கி பின்னாடி சேத்து வைப்பாங்க. இத
எதுக்குடா படமா எடுத்திங்க??

மலரினும் மெல்லிய டைட்டிலே சரியா இல்லன்றதுனால ரிஜக்ட்டட். அடுத்து விளையாட்டு
படம். காதல் படத்துல சந்தியாவுக்கு கொடுக்கா, கண்ணாடி போட்ட மாமி இருக்கும்ல
"உங்க போதைக்கு நாங்க ஊறுகாயான்னு" கேக்கும்ல அந்த பொண்ணு ஹீரோயின்
ஹீரோ நேஷனல் பர்மிட் லாரி ஓட்டுனர் மாதிரி செவப்பு கண்ணும் பத்துநாள் தாடியும்
கொலைவெறியோட வர்றார். பேர் தெரில ஆனா ரித்திஷ்கு சரியா போட்டியா வருவார்.



நிறைய காட்சிகள் இயக்குனர் ரசிச்சு எடுத்திருக்கார். அதுல ஒண்ணு ரெண்டு தேறுது.
இந்த படத்தோட பாட்டு எல்லாம் சூப்பர் ஹிட். ஜாஸி கிப்ட் இசையமைச்ச படம்னு
நினைக்கிறேன். ரெண்டு குத்துப்பாட்டும் ஒரு மெலடியும் சூப்பர். கதை ஒரு ரவுடியும்
(போதை மருந்து விக்கறவன்) அழகான பொண்ணும் லவ் பண்றாங்க. ரவுடிய அழகு
பொண்ணு திருத்தறாங்க. ரவுடியும் போதைபொருள் விக்கறது தப்புன்னு வேர் வரைக்கும்
உள்ள போய் பெரிய புள்ளிகள அழிச்சி கடைசில காதலியுடன் சேர்றதுதான் கதை.

படத்தோட கடைசில ஹோம் அலோன் படத்தை அப்படியே காப்பி அடிச்சிருக்காங்க.
என்ன இங்கிலிஷ்ல குழந்தை செய்ற கேரக்டர இங்க கதாநாயகி செஞ்சிருக்காங்க.
கதாநாயகியும் குழந்தையும் ஒண்ணுதான!

அறை எண் 305ல் கடவுள். சிம்புதேவன் படம் காமெடியா இருக்கும்னு பாத்தா சுத்தமா
காமெடி இல்ல. கஞ்சா கருப்பு அமீரின் ராம் படத்துக்கு அப்புறம் வேற எந்தப்படத்திலும்
சிறப்பா நடிக்கவேயில்ல. இந்தப்படத்திலும் அதே! (சுப்ரமணியபுரம் இன்னும் பாக்கல)
கொழந்திங்களுக்கு நீதிக்கதை சொல்ற மாதிரி இருக்கு படம் முழுக்க. அங்கங்க நிறைய
காட்சிகள் சுவாரசியமா இருந்தாலும் படத்துல ஏதோ ஒண்ணு ஒட்டவேல்ல. சந்தானத்த
அடக்கி வாசிக்க வைக்காம அவர் ஸ்டைல்ல நடிச்சிருந்தா கண்டிப்பா நல்லாருந்திருக்கும்.
என்னவோ தெரில காமெடி நடிகருங்க காமெடிய தவிர வேற எதுல நடிச்சாலும் அது
செம ட்ராஜடியா மாறிடுது. நான் பார்த்த தமிழ்ப்படங்கள்ல அஞ்சுக்கு இரண்டு படத்துல
க.கருப்பு கிட்டத்தட்ட இரண்டாவது கதாநாயகன் ரேஞ்சுக்கு இருக்கு நடிச்சிருக்கார்.
இரண்டுலயும் சிரிப்பே வரல.


அது ஒரு கனாக்காலம்



பாலுமகேந்திரா படத்துல யாருக்கும் மேக்கப் போடமாட்டாங்க
ஒரு சீன்லயாவது நாயகி சட்டை போட்டுகிட்டு கீழ ஒண்ணுமே போடாம வழ வழன்னு
காலை காமிப்பாங்க
பொன்மேனி உருகுதே மாதிரி செமத்தியான பாட்டு ஒண்ணு இருக்கும்
நாயக, நாயகியின் பக்கத்துவீட்டுக்காரங்க பெரும்பாலும் பாட்டியா இருப்பாங்க அவங்க
ரொம்ப நல்லவங்களாவும் இருப்பாங்க.
உதட்டோட உதடு முத்தக்காட்சி எப்படியாவது இருக்கும். ராமன் அப்துல்லான்னு ஒரு
படம். அதுல ஈஸ்வரி ராவுக்கு கண்டமேனிக்கு உதட்டுல முத்தம் கொடுத்துட்டே
இருப்பார் விக்னேஷ். (அந்தப்படம் பாக்கும்போது சினிமாவுல நடிச்சா பாலுமகேந்திரா
படத்துல மட்டும்தான் நடிக்கணும்னு நினைச்சதெல்லாம் இப்ப ஞாபகம் வருது)
கதை சென்னைல நடந்தாலும் எப்படியும் பின்பகுதி அல்லது படத்தின் முடிவு ஊட்டியிலோ
அல்லது மலைப்பிரதேசத்துலயோதான் நடக்கும்.
கேமரா எல்லாம் பொங்கல் சாப்பிட்ட மாதிரி மெதுவாதான் போகும் வரும் ஆனா அது
சக்கரைப்பொங்கல் மாதிரி செம டேஸ்டா இருக்கும்.

இப்படி பாலு படத்துல நிறைய ஒற்றுமைகள் இருக்கும். ஆனா இந்த ஒற்றுமைகள் நம்மை
சலிக்க வைக்காது இதுதான் அவரின் பலம்.

வீட்டுக்கு வரும் ப்ரியாமணிக்கு உதட்டில் முத்தம் கொடுத்து அரைவாங்கி பிறகு
வருந்துவார். மறுநாள் மன்னிப்பு கேட்கும்போது ப்ரியாமணி கண்ணீரோடு கட்டிப்
பிடிப்பார். அருமையான சீன். கவிதையான படம்.

The Holiday (ஹாலிடே)



இரு பெண்கள். அவர்கள் இருவரும் வெவ்வேறு ஆண்களால் ஏமாற்றப்பட்டு விரக்தி
அடைகின்றனர். இருவரும் எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு இரண்டு வார
காலத்திற்கு எங்காவது வெளிநாடு சென்று தனிமையில் இருக்க விரும்புகிறார்கள்.
இப்படிப்பட்ட இரண்டு பெண்களும் சாட்டிங்கில் எதேச்சையாக சந்தித்து, உரையாடி
தத்தமது இடங்களை இருவாரங்களுக்கு மாற்ற திட்டமிடுகின்றனர். காமரூன் டயஸ்,
கேட் வின்ஸ்லட்தான் அந்த இருவரும். திட்டப்படி காமரூன் லண்டனில் உள்ள
கேட்டின் வீட்டிற்கும், கேட் அமெரிக்காவில் உள்ள காமரூன் வீட்டிற்கும் செல்கின்றனர்.
வந்த இடங்களில் இருவரும் இரு ஆண்களால் கவரப்படுகின்றனர். கடைசியில்
இணைகின்றனர்.

Shawshank Redamtion படம் பார்த்தவர்கள் அந்த படத்தில் குருவிக்கு உணவிலிருந்து
புழுவை எடுத்து ஊட்டும் கிழவரை மறந்திருக்க முடியாது. கிட்டத்தட்ட நாப்பது
வருடம் அந்தச்சிறையில் கைதியாக, நூலக காப்பாளராக, கடைசியில் விடுதலை
பெற்று வெளியில் வரும்போது நாப்பது வருட சிறைவாழ்க்கை அந்நியமாகி இருக்கும்
பிறகு ஒரு விடுதியில் தற்கொலை செய்துகொள்வார். அற்புதமான கதாபாத்திரம் அது
அதுபோலவே ஹாலிடே பத்திலும் ஒரு கிழவரின் பாத்திரம் அற்புதமாக படைக்கப்பட்டு
இருக்கிறது. மகிழ்ச்சியாக ரசிப்பதற்கு ஏராளமான காட்சிகள் இருக்கின்றன. jude Lawன்
மகளாக வரும் இரண்டு குழந்தைகளும் சில காட்சிகளே வந்தாலும் மனதில் அழுத்தமான
இடம் பிடிக்கிறது.

அருமையான படம். கிடைத்தால் பாருங்கள்.

The Covenant (கோவணாண்டி !)



நான்கு இளைஞர்களுக்கு எதோ ஒரு சக்தி கிடைக்கிறது. அதில் ஒருவன் அந்த சக்தியை
தவறாக பயன்படுத்துகிறான். நாயகன் அதைத்தடுக்கிறான். நாயகனுக்கு தலைமுறையாக
சக்தி இருக்கிறது என்றும் உதாரணத்துக்கு அடிக்கடி புருடாபுராணம் போன்ற புத்தகத்தை
புரட்டி புரட்டி உதாரணம் காட்டுகிறார்கள். சிறிது தள்ளாட்டத்துடன் பார்த்ததால் கதை
சுத்தமாக புரியவில்லை. ஆனால் இதில் வந்த ஒரு பெண் மிக அழகாக,
இந்தியமுகத்துடன்! இருந்தாள் அவளே இந்த மொக்கப்படத்தையும் முழுதாக பார்க்க
முழுமுதல் காரணம். பெயர் என்ன என்று விசாரித்ததில் ஜெசிகா லுகாஸ் jessica lucas என்று தெரிந்தது. கூகிளில் தேடினால் அவுட் ஆஃப் போகஸ் படங்களே கிடைக்கின்றன.
பார்க்க வேண்டும் என்றால் படத்தில் பாருங்கள் அல்லது நேரில் பாருங்கள். செமையாக
இருக்கிறார்.

Rocky Balboa (ராக்கி பெல்பொ)



சில்வெஸ்டர் ஸ்டொலன் நடிப்பில் வந்த படம். ஹெவிவைட் குத்துச்சண்டையிலிருந்து
ஓய்வுபெற்று அமைதியாக ஒரு உணவகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார். அவர் காதல்
மனைவியின் கல்லறைக்கு தினமும் சென்று மலர் அஞ்சலி செலுத்துகிறார். இரும்பு
மனிதனுக்குள்ளே அழகான காதல் இருக்கிறது. (உடனே தமிழ்ப்படத்தில் வருவதுபோல
முகத்தில் பவுடர் அடித்து இளமையாக காண்பித்து ப்ளாஷ்பேக்கில் லவ்ஸ்டோரி
எல்லாம் போடவில்லை. அவருக்கு ஒரு மகன். தன் தந்தையின் நிழலில் வாழ விருப்பம்
இல்லாதவன். தன் தந்தையிடம் இருந்து தனிமையில் இருக்கிறான்.

தினமும் மாலை தன் உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தன் கடந்தகால
குத்துச்சண்டைக் கதைகளை பகிர்ந்துகொள்கிறார். ஒவ்வொரு இருக்கைக்கும் சென்று
தினமும் தன் அனுபவங்களை வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். முதல்
மரியாதை சிவாஜி போல காலம் கடந்தும் அவருக்கு ஒரு பெண்மணி மீது காதல்
வருகிறது. கூடவே தன் வாழ்வின் கடைசி முறையாக ஒரு குத்துச்சண்டை போட்டியில்
கலந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணமும் கூடவே வருகிறது.

உடல்தகுதியில் தேர்ச்சி பெற்றாலும் கமிட்டி தலைவர்கள் அனுமதிக்க மறுக்கின்றனர்.
வாதிடுகிறார் ஸ்டொலன் இறுதியாக சம்மதிக்கிறார்கள். உடனே மகன் வந்து சண்டை
போடுகிறான். "நீ இந்த வயசுல சண்டை போட்டு என்ன பண்ணப்போற" என்ற மகனுக்கு
தன் ஆசையை விவரிக்கிறார். பிரிந்திருந்த தந்தையும் மகனும் ஒன்று சேர்கிறார்கள்.
தமிழ்ப்படத்தில் வருவதுபோலவே ஒரே பாடலில் பயிற்சிகள் அனைத்தையும் முடிக்கிறார்.
நாடே உற்சாகம் தருகிறது. அந்தப்பெண்மணியும் உற்சாகம் தருகிறார். ஆனால் அவரை
எதிர்த்து மோதப்போவது உலகஹெவிவெய்ட் குத்துச்சண்டை வீரர்.

போட்டி நடக்கும்போது பயங்கர விறுவிறுப்பு. மோதுகிறார்கள் மோதுகிறார்கள் இருவரும்
சமமாக மோதுகிறார்கள். முதல் மூன்று ரவுண்டுகளில் சரமாரியாக குத்துவாங்கி முகம்
கிழிந்துபோகிறார் ஸ்டொலன். அரங்கமே அமைதியாகி விடுகிறது. அந்தப்பெண்மணி
கண்ணீரோடு தனது ஆதரவை தெரிவிக்கிறார். உடனே வீறுகொண்டு எழுந்து அடுத்த
மூன்று ரவுண்டுகளில் அவனை சாய்த்து விடுவார் என்று நினைத்தீர்களானால் நீங்கள்
புத்திசாலி. ஆமாம் ஆறாவது ரவுண்டில் எதிராளியின் முகம் கிழிந்து ரத்தம் கொட்டுகிறது.
இடைவேளைக்குப் பின் மீண்டும் மோதுகிறார்கள். கொலைவெறியுடன் மோதுகிறார்கள்.
மறுபடியும் சமமாய் ஆகிறது. கட்டக்கடைசியில் போட்டி யாரும் வெற்றி பெறாமல் எவ்வித
முடிவும் இன்று முடிகிறது. இந்த சண்டைக்காட்சி மில்லியன் டாலர் பேபி அளவுக்கு
சிறப்பாக இல்லையென்றாலும் அதே சுவாரசியம் உண்டு.

போட்டி முடிந்ததும் உலகத்தின் தலைசிறந்த வீரன் நீ என எதிராளியை பார்த்து
சொல்கிறார். படம் முழுக்க ஸ்டொலனின் ஆதிக்கம். படம் ஆக்சன் படம் என்றே
போட்டிருந்தது. படமும் ஆக்சனாகவே இருந்தது. ஆனால் இங்கே பேரரசுவு ஒரு
ஆக்சன் இயக்குனர் என்று சொல்கிறார்கள். பழனி, குருவி எல்லாம் ஆக்சன் படமாம்.

The Sting (தி ஸ்டிங்)



1973ல் வெளிவந்த இந்தப்படம் ஏழு ஆஸ்கார் விருது பெற்றது. இரண்டு நண்பர்கள்
திருடர்களாக இருக்கின்றனர். ஒருமுறை நகரின் மிகப்பெரிய திருடனிடம் திருடி
விடுகிறார்கள். அந்த மிகப்பெரிய திருடன் இருவரில் ஒருவரை கொன்றுவிடுகிறான்.
இன்னொருவன் அவனை பழிவாங்குகிறான். பழிவாங்குவதென்றால் சாதாரணமாக
இல்லை அப்படியே அவனை திட்டம்போட்டு ஏமாற்றுவது. அந்தத்திட்டம்தான்
படத்தின் கதை. தப்பித்த இன்னொருவன் (rabert redford) மிகப்பெரிய கிரிமினலை
பழிவாங்க Paul Newman இடம் செல்கிறான். திட்டம் போடுகிறார்கள். முதலில்
சீட்டாட்டம் போல ஏதோ விளையாடுகிறார்கள். மங்காத்தா வகைபோல. அதில்
சூழ்ச்சி செய்து பெரும்பணத்தை அவனிடமிருந்து கொள்ளையடிக்கிறார்கள். பால்
நியுமென் சீட்டுக்கட்டில் செய்யும் மாயாஜாலங்கள் பிரமிக்க வைக்கும். உதாரணத்திற்கு
பிதாமகன் படத்தில் சூர்யா செய்வாரே அதுபோல. முதலில் விட்டு பிறகு முழுதாக
வில்லனுக்கு ஆப்படிக்கிறார். அதில் காய்ந்துபோகும் வில்லனை இன்னும் காயவிட்டு
இன்னொரு திட்டம் போடுகின்றனர்.

குதிரை ரேஸ் நடப்பதுபோலவே ஒரு சூதாட்டவிடுதியை ஆரம்பித்து வில்லனை நம்ப
வைக்கிறார்கள். இந்த அரங்கத்தில் வர்ணனை செய்வது முதல் பந்தயம் கட்டுவது வரை
பால் நியுமெனின் ஆட்கள். இதிலும் முதலில் வில்லனை ஜெயிக்கவிட்டு பிறகு
மொத்த பணத்தையும் ஆட்டையை போடுகிறார்கள். பலமில்லியன் டாலரை கத்தியின்றி
ரத்தமின்றி மிகச்சிறந்த திட்டமிடலின் மூலம் திருடனிடமிருந்தே திருடுகிறார்கள்.

அந்த டிவிடியின் அனைத்துப்படங்களுமே கேங்ஸ்டர் ரவுடிகளின் படம். காட்பாதர்
முதல் ப்ரெஞ்ச் கனெக்சன் வரை. ஆனால் காட்பாதரை என்னால் முழுதாக பார்க்க
முடியவில்லை. ஆனால் கண்டிப்பாக பிறகு பார்ப்பேன். அப்படியே ஒரு பதிவெழுதியும்
பீற்றிக்கொள்வேன்.

சிறப்பான ஒளிப்பதிவு சிறப்பான திரைக்கதை சிறப்பான நடிப்பு இந்த மூன்றுமே
படத்தின் பிரம்மாண்டம். காமிக்ஸ் நாவலின் ஐந்து அத்தியாங்கள் போல படத்தை
ஐந்து பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு அத்தியாயம் ஆரம்பிக்கும்போதும் முடியும்போதும்
பல முடிச்சுகளுடன் காமிக்ஸ் நாவலின் கடைசி அத்தியாயத்தில் எல்லா முடிச்சுகளும்
அவிழ்வதுபோல மிகத்திறமையாக முடித்திருக்கிறார் இயக்குனர்.

Midnight Cowboy (மிட்நைட் கவ்பாய்)



டைட்டிலே கில்பான்சியாக இருப்பதுபோல படமும் "அந்த" மாதிரிதான். 1969ல்
வெளிவந்த இந்தப்படம் மூன்று ஆஸ்கர் விருது பெற்றது. நெகிழ வைக்கும் நட்புதான்
படத்தின் மையக்கருத்து. "அந்த" மாதிரி மேட்டர் எல்லாம் மாயை என்று சொல்லும்படம்.

ஜோ பக் டெக்சாசிலிருந்து நியூயார்க் வருகிறார். ஆன் விபச்சாரன் தொழில் செய்து
நிறைய சம்பாதிக்கலாம். ஜாலியாக இருக்கலாம் என்று வருகிறார். அந்தக்காலத்திய
ஆட்கள் ரேடியோ புழக்கத்துக்கு வந்த புதிதில் பலர் ரேடியோவும் கையுமாக திரிந்து
என் சிறு வயதில் பார்த்திருக்கிறேன். எனக்குத்தெரிந்து சைக்கிளில் சென்று வளையல்
விற்கும் பெரியவர் ஒருவர் இருந்தார். அவரின் சைக்கிளில் எப்போதுமே ரேடியோ
பாடியபடி இருக்கும்.

சைக்கிள் காரியரில் வளையல்பெட்டியுடன் காற்றடிக்கும் பம்ப் பொருத்தப்பட்டிருக்கும்
ஹேண்ட்பாரின் இருபக்கமும் பைகள் தொங்கும் அந்த பைகளில் ஒன்றில் ரேடியோ
கதறியபடி இருக்கும். அவர் இறக்கும்வரை வியாபாரம் செய்துகொண்டே இருந்தார்
அந்த ரேடியோ இன்னமும் உள்ளது.

படத்தின் நாயகன் வாயில் சுயிங்கமும் கையில் ரேடியோவுமாக அறிமுகமாகிறான்
மிக உற்சாகமாக நியூயார்க் நகரில் நுழைகிறான். நகரங்கள் எப்போதுமே புதியவர்களுக்கு
நரகங்கள்தான். அவன் நினைத்தது போல பெண்களுடன் படுத்தால் பெரும்பணம்
கிடைக்கும் என்பது பொய்யாகிறது. மாறாக இவனிடமிருந்தே பணத்தைப்
பிடிங்கிக்கொண்டு போகிறார்கள். அந்தச்சமயத்தில் ராட்சோ ரிசோவின் அறிமுகம்
ஜோவிற்கு கிடைக்கிறது.

ஆனால் ராட்சோ அவனுக்கு உதவுவதாக சொல்லி இருக்கும் பணத்தை எல்லாம்
ஆட்டையைப் போட்டுவிடுகிறான். பிறகு அவனைக் கண்டுபிடிக்கும்ம் ஜோ தன்
பணத்தைக் கேட்டு அவனை நச்சரிக்கிறான். ஒரு கால் குட்டையாக இருப்பதால்
ராட்சோவால் மனிதர்களைப் போல நடக்க முடியாது. குதித்துக் குதித்துதான் நடக்க
முடியும். தங்குவதற்கு கூட இடமில்லாத ஜோ, ராட்சோவுடன் செல்கிறான்.
அவனோ பாழ்டைந்த வீட்டில் குப்பைகளுக்கிடையில் தங்கி இருக்கிறான். படத்தில்
காலத்தை ஒரு குறியீடு போல காண்பித்திருக்கிறார்கள். ஜோ நியூயார்க் வரும்போது
பனிகாலம் ஆரம்பிக்கிறது எப்பொழுதுமே வசந்தகாலத்தின் ஆரம்பம் மிக இனிமையாக
இருக்கும். அடர்ந்த பனிக்காலம் வரும்போது விளிம்பு மக்களின் திறந்த வாழ்விடம்
குளிரில் முற்றிலும் உறைந்திருக்கும். அதுபோலவே பாழடைந்த அந்தக்கட்டிடத்தில்
தங்கும் அவர்கள் குளிர் உச்சமடையும் காலத்தில் அங்கிருந்து விரட்டப்படுகிறார்கள்.
ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருந்த ராக்சோவின் உடல்நிலை மோசமடைகிறது.
குளிரின் தீவிரம் மூர்க்கமாக தாக்கும்போது தீவிரமாக புகலிடம் தேடுகிறார்கள்.



இடையில் நடக்கும் சம்பவங்கள் இருவருக்கிமிடையில் அழகான நட்பை உண்டாக்கி
விடுகிறது. ஒரு பெண்ணை கரெக்ட் செய்து திருப்திபடுத்துவதன் மூலம் பெரும்
பணத்தை சம்பாதிக்கிறான் ஜோ. நண்பனை மருத்துவரிடம் அழைத்துச்செல்ல
ஜோ முனையும்போது ராக்சோ தன் கனவை சொல்லுகிறான். எப்படியாவது என்னை
ப்ளோரிடா கொண்டு சேர்த்துவிடு. அங்கே சென்றதும் எல்லாம் சரியாகிவிடும் என்று
சொல்கிறான். மருத்துவரிடம் வரமுடியாது என பிடிவாதமும் பிடிக்கிறார். பின்னர்
இருவருமாக ப்ளோரிடாவுக்கு பயணமாகிறார்கள். பல ஆசைகளுடன் பயணிக்கும்
ராக்சோ உறங்கிய நிலையிலே மரணமடைவதுடன் படம் முடிகிறது.

பத்துப்படங்களில் மிகவும் பிடித்த படமாக மிட்நைட் கவ்பாயும் ஹாலிடேயும்தான்
சொல்லமுடியும்.

இங்கே திருட்டு வீசிடி விற்கும் இடத்திற்கே சென்று ஜே.கே.ரித்திஸ் நடித்த
நாயகன் படத்தைக் கேட்டபோது அப்படியொரு நடிகரையே தெரியாது என்று அவர்
சொன்னார். கேட்டபோது மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. யாராவது நாயகன் பட விசிடி
வைத்திருந்தால் துபாய் குறுக்கு சந்திற்கு பார்சல் அனுப்பவும்.

சனிக்கிழமை காலை அலுவலகத்தில் நுழையும்போது எல்லாரும் என்னை பேயடித்த
மாதிரி ஏன் பார்த்தார்கள் என்று தெரியவில்லை.

Sunday, July 13, 2008

சிறுவர்களின் உலகம் - ரத்த உறவு - யூமா வாசுகி

பேய் பிசாசுகள் அண்டாமல் இருப்பதற்காக மந்திரித்த தாயத்து ஒன்றை கருப்புக்
கயிறுடன் புஜத்தில் கட்டுவார்கள். அப்படிக்கட்டும்போது மந்திரித்தவர் சொல்வார்
"மண்ணுல படாம பாத்துக்க" தவறி பட்டுச்சோ "உலகம் அழிஞ்சி போயிடும்" என்று.
பிறகு கோலிக்குண்டு சண்டையிலோ, கில்லி சண்டையிலோ மண்ணில் புரண்டு
எழும்போது தாயத்து மண்ணில் பட்டிருக்கும். உலகம் அழியப்போகிறது என்று
கத்திக்கொண்டே ஒளிந்துகொள்ள இடம் தேடுவேன். ஆனால் இந்த உலகம் இன்னமும்
அழியவேயில்லை. ஆச்சரியமாக இருக்கும். உங்களுக்கு இருந்திருக்கிறதா?

சக நண்பர்களை காணாவிட்டால் அவர்களைத் தேடுவதற்கு ஒரு உபாயமொன்று
சிறுவயதில் உபயோகப்படுத்தியிருப்போம் ஞாபகமிருக்கிறதா? இல்லையென்றால்
சொல்கிறேன். வாயில் எச்சில் கூட்டி இடதுகையில் துப்பவும் கொத்தாக நுரையுடன்
இருக்கும் அதில் வலது கையால் பச்சக் என்று அடித்தால் எந்தப் பக்கமாக எச்சில்
தெறிக்கிறதோ அந்தப் பக்கம்தான் தேடும் ஆள் இருக்கிறான் என்று அர்த்தம்.
இந்த உபாயத்தை கையாண்டு இருக்கிறீர்களா?

மழைக்காலங்களில் ஒருவித பூச்சி ஒன்று பறக்கும். அதை "மழ சொல்ற பூச்சி" என்போம்
அந்த பூச்சியானது வெட்டுக்கிளியை விட பெருசாக இருக்கும் அதே சமயத்தில் மிக
மெல்லியதாக இருக்கும். அப்பூச்சியைக் காண்பது மிக அரிது. கண்டால் அதனிடம்
"மழை எந்த திசையில் வரும்" என்று கேட்டால் எந்த பக்கமாவது திரும்பும். திரும்பிய
பக்கம் மழை வரும் என்று அந்த வயதில் நம்பியிருக்கிறேன். பிறகு மழை வந்த
நேரத்தில் எந்த திசை... அதுவும் மறந்துபோயிருப்பேன். நீங்கள் இதுபோல மழபூச்சி
சொன்னதை நம்பியிருக்கிறீர்களா?

ஓணானை அடித்துப் புதைத்தால் அது காசாக மாறியிருக்கும் என்று நம்பிருக்கலாம்.
சிறுவயதில் கற்பிக்கப்படும் இது அனேகமாக எல்லாரும் அறிந்ததுதான்.

அம்மா கொடுக்கும் தின்பண்டங்களின் ஒரு பகுதியை மிக வாஞ்சையுடன் பூமிக்கு
அளித்திருக்கிறீர்களா? அப்படி பூமிக்கு உணவளித்தால் பூமாதேவி உங்களை எந்த
ஆபத்தும் வராமல் காப்பாற்றுவாள். ஏதாவது ஆபத்து வரும் நேரத்தில் பூமாதேவிக்கு
உணவளித்த உரிமையில் நீங்கள் தாராளமாக அவளை உதவிக்கு அழைக்கலாம்.
தேவிக்கும் உணவிடுவதில் யார் பெரியவர் என்ற போட்டி எனக்கும் என் தம்பிக்கும்
பெரிய அளவில் நடந்திருக்கிறது. தேவி துணையிருப்பாள் என நம்பியிருக்கிறீர்களா?

எனக்கு விவரம் தெரியும் வயது வரை ஊரில் இருந்த பல மொட்டைக்கிணறுகளிலும்
பல மரங்களின் உச்சியிலும் கொடூரமான பேய்கள் வாழ்ந்து வந்தன. எப்படியோ பிற்பாடு
மாயமாயின. ஆனால் வேறு பெயர்களில் வேறு சிறுவர்கள் இன்னமும் அந்த இல்லாத
பேய்களுக்கு பயந்துதான் வாழ்ந்து வருகின்றனர். இப்படி பேய்க்கு பயந்து இருக்கிறீர்களா?

சாத்தியமே இல்லாவிட்டாலும் கூட பலவிதமான பொய்களை எந்த நிபந்தனையும் இன்றி
ஏற்றுக்கொள்ளும் வயது அந்த வயது.

இதுபோன்ற எண்ணற்ற நினைவுகளால் நிரம்பிய அந்த வயதை இப்போது ஒரு நாவல்
ஞாபகப்படுத்தியது. அது யூமாவாசுகியின் "ரத்த உறவு" சிறுவர் நாவல் என்று நினைத்து
விடவேண்டாம். தரமான சமூக நாவல் இது.

திடிரென்று காலம் பின்னோக்கி சென்று உங்களை நீங்கள் விரும்பும் பருவத்திற்கு
அழைத்துச்செல்லும் என்று வரம் கிடைத்தால் நான் நான்கிலிருந்து ஏழு வயதுக்குள்ளான
பருவத்திற்கு செல்லவே விரும்புவேன். கிடைக்கும்/பார்க்கும் அனைத்து பொருள்களையும்
ஆச்சரியமாக பார்க்கும் வயது அது. நிறைவேறும் அல்லது நிறைவேற சாத்தியம்
இல்லாத ஆசைகளில் இரண்டாவது வகையின் மேல்தான் எப்போதுமே ஈர்ப்பு
இருக்கலாம். சிறுவர்களின் உலகத்தை பெரியவர்கள் ஆன பிறகுதான் இழந்ததாக
உணர்கிறோம். இழந்ததாக உணர்ந்த ஒன்றின்மேல் ஈர்ப்பு வரத்தானே செய்யும்.
அவ்வகையான ஈர்ப்புகளை ஞாபகப்படுத்தும் அல்லது வாசிக்கும் புத்தகங்களில்
உள்ளவற்றைக் காணும்போதும் நாம் சிறுவயதிற்கு செல்வது போலவே தோன்றும்.
இன்றளவும் காமிக்ஸ், சாகச கதைகளை பருவம் தவறிப்போய் விரும்பி படிப்பது
கூட இப்படிப்பட்ட உணர்வின் வெளிப்பாடாகவே இருக்கலாம்.

உதாரணத்திற்கு சொல்லவேண்டும் என்றால் கூட "அவன் ஒரு கொழந்த மாதிரி"
என்று சொல்வார்கள். ஒரு மோசமான தகப்பனைக்கொண்ட குடும்பத்தில் பிறந்த
நான்கு சிறுவர்களில் ஒருவன் பார்வையில் கதை ஆரம்பித்து பல சிறுவர்களின்
வழியாக கதை சொல்லப்பட்டு முடிகிறது. கதை என்ற இரண்டு வார்த்தைகளால்
அடக்கிவிட முடிந்துவிட்டாலும் இதை வாசித்தபிறகு உங்களின் சிறுவயதின்
உணர்வுகளை பார்க்காமல் முடிக்கமுடியாது. அக்குடும்பத்தில் மூத்தவளான
அக்கா அவளுக்கு பிறகு இரு சகோதரர்கள் அண்ண, தம்பி என முழுக்க முழுக்க
உறவுப்பெயர்களால் மட்டுமே நாவல் முழுக்க வருகிறார்கள்.

சினிமா பார்த்தும் கூட இதுவரை அழுததாக நினைவில்லை. ஆனால் இந்த நாவலின்
சில பக்கங்கள் என்னை கலங்கச்செய்தன. கதை என்ன என்று இந்தப் பதிவில் சொல்ல
வேண்டும் என்ற உத்தேசம் இல்லை. வாய்ப்பு வரும் நேரத்தில் தவறவிடாமல்
வாசித்துப் பாருங்கள்.

நம் சிறுவயதின் அற்புதமான தருணங்கள் நம் அப்பாவின் மூலமோ, பெரும்பாலும்
அம்மாவின் மூலமோதான் நமக்கு அறியப்படும். வளர்ந்தபிறகுதான் தனிப்பட்ட
குணாம்சங்கள் அமைய வாய்ப்பிருக்கிறது. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு
நிகழ்வுகள் காலம் உள்ளவரை சொல்லியபடி இருப்பார்கள். தலைகுனிந்தே நடப்பது,
உள்ளங்கையின் மடிப்பில் மல்லிகையின் மொட்டுகளை அணைத்து வைப்பது,
கிழவிகளின் சுருக்கத்தை அதிசயமாக பார்ப்பது என்று எனக்கான பழக்கங்கள் என
பிற்காலத்தில் பலர் சொல்லக்கேட்டிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் எனக்குத்
தோன்றும் இப்படியெல்லாம் இருந்திருந்த என்னால் ஏன் அந்நிகழ்வுகளை வளர்ந்த
பிறகு அதிகபட்சம் நினைவுகொள்ளக்கூட தவறிவிட்டேன் என்று.

பேசக்கற்றுக்கொண்ட காலத்தில் எதிர்த்த வீட்டுப்பெண் தீபாவுடன் தான் நிறைய
பேசினேன் என்று கூட சொல்வார்கள். அவள் வீட்டில் பீரோவுக்கும் தலையணைகள்
வைக்கும் இடத்திற்கும் நடுவில் இரண்டு சிறுவர்கள் மறைவாக அமரும் வகையில்
ஒரு இடம் உண்டு அந்த இடத்திலேதான் நாங்கள் இருவரும் பேசிக்கொள்வோம்
என்று தீபாவின் அம்மாவேகூட சொல்வார். அந்தக்கணத்தில் அவளுடன் என்ன
பேசியிருப்போம் என்று நினைத்தால்கூட உதட்டில் புன்னகை பரவும். நான்
எப்போதுமே நினைவுகொள்ள நினைக்கும் ஒரு தருணம் அது.

மோசமான குடிகாரனாக அப்பாவும், கீழ்த்தரமான எண்ணங்கள் உடைய பாட்டியும்
கொடுமைக்கார பெரியம்மா, சித்தி போன்றவர்களுடன் ஒன்றாக வசிக்கும் குடும்பத்தில்
இருந்து ஒரு சிறுவனின் பார்வையில் கதை சொல்லப்பட்டிருக்கிறது. கீழ்நடுத்தர
மோசமான குடிப்பழக்கத்தினை உடைய தந்தையினால் ஏற்படும் இன்னல்களை
இத்தனை துல்லியமாக பதிவு செய்திருக்கிறார். முன்பே யூமாவாசுகியின் படைப்புக்
களில் ஈர்க்கப்பட்டிருந்தேன். முக்கியமாக அவரின் கவிதைகளை. உதாரணத்திற்கு
இப்பதிவின் கடைசி இரண்டு கவிதைகளை வாசித்துப்பாருங்கள். குழந்தைகளின்மீது
அளவுகடந்த அன்பு வைத்திருப்பவர் குழந்தையாகத்தான் இருக்கமுடியும்.

பக்கத்து வீட்டு ஜனனி (கருவாச்சி) என் தம்பியிடன் பேசுவதைப்போல என்னிடம்
பேசுவதில்லை என்று எனக்கு வருத்தம் இருந்தது. அவளுக்கு என்னை பிடிக்கவில்லை
போலும் என்றுகூட நினைத்துக்கொள்வேன். பின்னொருநாள் என் தம்பி அவளுடன்
பேசிக்கொண்டிருந்தபோது ஒரு குழந்தையைப் போல உடல்மொழியுடன் பேசிக்கொண்டு
இருந்தான். அவளும் மிகுந்த சுவாரசியத்துடன் புருவத்தை உயர்த்தி கையை இடுப்பில்
வைத்து பெரிய மனுசி தோரணையுடன் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தாள்.
என்னுடன் கூட அப்படி பேசியதில்லை அவள். அந்தக்காட்சி கவிதையைப் போல
இருந்தது. சிறுவர்களிடம் சிறுவர்களைப் போலதான் பேசவேண்டும் என்பதைக்கூட
மறந்து போயிருந்தேன்.

நாவல் வாசித்து முடித்ததும் பல ஞாபகங்கள் வந்தன. நாவலில் என்னை பெரிதும்
கவர்ந்த ஒரு கதாபாத்திரம் என்றால் அது இரண்டு சிறுவர்களின் அக்கா என்ற பாத்திரம்.
அவளின் பெயர் வாசுகி

யூமா வாசுகியின் கவிதைகள் சில...


லொள் லொள் என்று நாய் மாதிரிக் குரைக்குமே
அது மாதிரி ஒண்ணு வரைந்து தா
என்று சொன்னாள் சிறுமி.
ரெண்டு கால் மாதிரி வைத்துக் கொண்டு
நடக்கிறமாதிரிப் போகிற
மனிதன் மாதிரியும் ஒன்று.
வால் மாதிரித் தொங்கவிட்டு
குரங்குமாதிரித் தாவுவது.
கடல் மாதிரிக் கிடப்பதிலே
நிற்கும் கப்பல் மாதிரி.
சேப்பு சேப்பா பூ மாதிரிப் பூக்குமே
அந்த மரம் மாதிரியும் ஒண்ணு
வரைந்து தா...
அவள் சிறுமி மாதிரி
என் முன்னால் அமர்ந்திருக்கிறாள்
நான் ஓவியன் மாதிரி
வரைந்து கொண்டிருக்கிறேன்.

ஒரு மனிதன் முயலாக
---------------------
ஸ்கர்ட்டின் கீழ்விளிம்பை கடித்தபடி
ஜட்டி தெரிய வாசலில் நிற்கிற
சிறுமி புவனா கேட்கிறாள்
'முயல் என்ன செய்கிறது?'
அவளைக் கவர்வதற்காக
அறையினுள் ரகசியமாக
ஒரு முயல் வளர்ப்பதாகச் சொல்லியிருந்தேன்.
'முயல் சாப்பிடுகிறது'
என்னும் பதிலில் திருப்தியுற்றவளாய்
விளையாடப் போனாள்
'எங்கே முயல்? காட்டு பார்க்கலாம்'
என்று அடுத்த நாள் வந்தாள்
ஆப்பிள் தின்றபடி.
'பெரிய முயல் கடித்துவிடும்' என்று சொல்ல
சந்தேகச் சிரிப்புடன் வெளியே போனாள்
அவள் சொல்லித்தான் நான் முயல் வளர்ப்பது
மற்ற சிறுவர்களுக்கும் தெரிந்தது
வாசலில் கூட்டமாய் வந்து நின்று
'என்ன செய்கிறது முயல்' என்பவர்களுக்கு
பல தடவைகள் அறைக்குள் எட்டிப் பார்த்து
முயல் பற்றிய நிலவரத்தை தெரிவித்தேன்
நாளாக,
அப்படியொரு முயல் இங்கே இல்லை
எனும் உண்மை புரிந்தாலும்
நான் வீட்டைப் பூட்டிப் புறப்படும்போது
என்னையே முயலாக்கி
புவனா கேட்கிறாள்,
'முயல் எங்கே போகிறது..?'
நீண்ட கைகளை ஆட்டி
பஞ்சு ரோமத்தைச் சிலிர்த்து
மிரண்ட விழிகளால்
குறுகுறுப்பாகப் பார்த்து
முயல் சொல்கிறது...

பின்குறிப்பு: இந்தப்புத்தகத்தைக் கொடுத்து வாசிக்கச் சொன்ன, குழந்தையைப் போன்ற, ஊரில் இருந்து நிறைய புத்தகங்கள் வாங்கி வந்திருக்கிற, அமீரகத்தின் ஒரே நல்ல
நல்லவர், பலகுரல் பாடல் மன்னன் ஆசிப் அண்ணாச்சிக்கு அன்போடு
இந்தப்பதிவை அர்ப்பணிக்கிறேன்.

தலைப்பு கப்பியிடம் இருந்து திருடியது.

Tuesday, July 01, 2008

சாருபுராணம்

எந்த புத்தகத்தை வாசித்தாலும் பிடித்த வரிகளை அடிக்கோடிடுவது, அரைவட்டம்,
முழுவட்டம், டிக்மார்க், சூப்பர், கொன்னுட்டடா என்பதுபோல எதாவது சில்மிஷம்
செய்து வைப்பது வழக்கம். முக்கியமாக சாண்டில்யனின் புத்தகங்களில் என் கைவண்ணம்
கண்டிப்பாக இருக்கும். இப்படி செய்வதால் நான் எப்போது புத்தகத்தை திருப்பித்
தந்தாலும் அதை முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை புரட்டிப் பார்த்து
பின்புதான் வேறு புத்தகங்கள் எடுக்க அனுமதிப்பார் எங்கள் ஊர் நூலகர் அங்கமுத்து
சக்கரை. ஒருசிலருக்கு அடிக்கோடிடுவது சுத்தமாக பிடிக்காது. எனக்கு அதிலேதான்
கொள்ளை இன்பம். ஓசிபுத்தகத்தில் எதுவும் கிறுக்கினால் மறுபடி தரமாட்டார்கள்
என்பதால் அடிக்கோடிடும் அரிப்பை தள்ளியே வைத்திருந்தேன். சமீபத்தில் சாருவின்
புத்தகங்கள் அனைத்தையும் வாங்கியபோது(மொத்தம் ஏழு புத்தகம், ஆயிரத்து சொச்சம் கொடுத்து ஏன்யா இந்த குப்பையெல்லாம் வாங்குறன்னு கேட்டாரு) அனைத்துப் பக்கங்களிலும் நம் கைவண்ணம் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்று படிக்க
ஆரம்பிக்கும் முன்னரே தீர்மானித்தேன். இல்லாவிட்டாலும் பல இடங்களில்
அடிக்கோடிடுவது தவிர்க்கவே முடியாத அளவு நன்றாக இருந்தது.

குறிப்பாக ராஸலீலா வாசிக்க ஆரம்பிக்கும்போது அழகிய நீல மசி பேனாவை
அடிக்கோடிட வாங்கினேன். இப்போது மை தீர்ந்துவிடுமோ என்று அச்சமாக
இருக்கிறது. இந்த புத்தகத்தின் இரண்டு பக்கங்களை வாசித்த உடன் அபிஅப்பாவின்
ப்ரசர் ஏறு மாறாக எகிறி விட்டதாக கேள்விப்பட்டேன். இன்னும் நூறுபக்கங்களே
உள்ளன படித்து முடிப்பதற்குள் இது ஒரு ரன்னிங் கமெண்ட்ரி போல. மிச்சமுள்ள
சில நூறு பக்கங்களை படிக்க வாயில் நுரை எல்லாம் தள்ளவில்லை என்றாலும்
இப்போது படித்துக்கொண்டிருக்கும் கண்ணாயிரம் பெருமாளின் ஆன்லைன் லீலைகள்
படிக்கும்போது பொறாமையாகவும் பலவிஷயங்கள் சலிப்பாகவும் இருக்கிறது.

ராஸலீலாவை விட கண்ணாயிரம் பெருமாளின் தபால் இலாகா அனுபவங்கள்தான்
மிகுந்த சுவாரசியமானது.

---

விகடனின் வரவேற்பறை மாதிரி சாருவும் படித்ததில் பிடித்தது என்று எழுதுகிறார்
அதிலே நம் சுந்தரின் காமக்கதைகள் பற்றி சிலாகித்து எழுதியிருந்தார் (இதிலே என்ன
ஆச்சரியப்பட இருக்குகிறது என்கிறீர்களா?) கண்டிப்பாக அன்றைக்கு அவரின் பக்கம்
பல்லாயிரக்கணக்கான ஹிட்டுக்கள் விழுந்து அல்லோலகல்லோலப்பட்டிருக்கும்.
ஏனென்றால் என்னுடைய பதிவும் ஒருமுறை விபத்தாக அவரின் வலைப்பூவில்
வந்து அன்று எதிர்பாராதவிதமாக ஆயிரக்கணக்கில் ஹிட்டி விட்டார்கள். விஷயம்
என்னவென்றால் அனைவரும் வந்தது சாருவின் பக்கத்திலிருந்து. இப்போது லக்கியும்
வாயைத்திறந்து அங்கேயே சொல்லிவிட்டார். நான் இங்கே சொல்கிறேன்.

பல விமர்சனங்களை படித்த பிறகு தசாவதாரம் மிகச்சிறந்த படம் என்று
கண்டுகொண்டேன். சாருவின் பக்கத்தில் இருந்து என் வலைப்பூவை படிக்க வந்த சிலர்
செருப்பால் அடிக்காத குறையாக திட்டி விட்டார்கள். இன்னும் சிலர் கணக்கு புதிர்
எல்லாம் சொல்லி செய்ய சொன்னார்கள். ஒரே அனானி பலமுக மன்னன் ஜோ மாதிரி
வந்து உறுமிவிட்டு போனார். மொத்தமாக எல்லா பின்னூட்டங்களையும் அழித்து
விட்டேன். கணிசமான பின்னூட்டங்கள் பதிவுக்கு ஆதரவாக வந்திருந்தன. அதனை
இட்ட நண்பர்களுக்கு நன்றிகள். வெளியிட முடியாமைக்கு வருத்தங்கள்.

எல்லாரும் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் தேவையில்லாமல் என்
பதிவு தெரியவேண்டாம் என்பதாலும் சில பின்னூட்டங்கள் தந்த மன உளைச்சலாலும்
அவற்றை வெளியிடவில்லை.

சப்ப மேட்டர் இத ஏண்டா எழுதினுகிறன்னு தோணுதா?

---

"திரிகெ ஞான் வருமென்ன வார்த்த கேள்கானாயி
க்ராமம் கொதிக்காணுண்டென்னம்"

அரபிக்கதா - சீனிவாசன்

கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக கேட்டு ரசித்த ஒரு பாடல் மேற்கண்டது. அரபிக்கதா
படத்தில் ஜேசுதாஸ் பாடியது. தனிமையின் பல அவஸ்தைகளை பூதாகரமாக
உணர்த்தியது. சீனிவாசன் யாரென்று தெரியாதவர்கள் லேசா லேசா படத்தை நினைவுக்கு
கொண்டு வரவும். மிகச்சிறந்த திரைக்கதாசிரியர் & நடிகர். தனிமையில் உள்ளவர்கள்
உணர்வுப்பூர்வமாக ரசிக்க முடியும் பாடல். ஜேசுதாசின் குரலைப்பற்றி எழுத வார்த்தைகள்
இல்லை.

http://123musiq.com/Arabhikadha.htm இதுவும் வேலை சேய்யலன்னா யூடியூப்ல
arabhikatha, thirike njan என்ற வார்த்தைகளை போட்டு தேடினிங்கன்னா கிடைக்கும்

---

இப்பலாம் செக்ஸ் கதைகள், காம கதைக்கள், ஜட்டி கதைகள், பலான கதைகள் னு
நிறைய தலைப்புகள்ல சூடா தமிழ்மணத்துல பல பதிவுகள் வருது. நாமளும் அந்த
மாதிரி ஒரு கதை(?) துண்டு போட்டு காம புரட்சில இறங்கணும்னு ஐடியா வந்தது.
ஆனா காமத்த பத்தி பேசறவங்க எல்லாரும் காம காட்சில்லாக்கள், தப்பானவர்கள்
என்ற பொத்தாம்பொதுவான எண்ணம் இருப்பதாலும், ஒருவேளை நான் எழுதி
அதைப் படிப்பவர்கள் என் மேல் என்ன மாதிரியான அபிப்ராயம் கொள்வார்கள்
என்று டரியல் கொள்வதாலும் தோன்றும்போதெல்லாம் விட்டுவிடுவேன். இப்போது
தமிழ்மணத்தில் திரும்பிய பக்கமெல்லாம் காம புரட்சி நடந்துகொண்டிருப்பதால்
நம்ம பிட்டையும் அதிலே கரைத்து விடலாம் என்ற எண்ணத்தில் இந்த கொசுறு
பதிவு.

மக்களே தயவுசெய்து இந்த மேட்டர்லயும் எதாச்சும் தொடர் விளையாட்டு
வெச்சிடாதிங்க. நினைச்சாவே கிலியா இருக்கு.

இது எல்லாமே கதை என்று நினைத்தே படிக்கவும்.

முதல்கதை அன்பழகனுடையது. சுருட்டை முடி, குண்டு கன்னம், சிரித்தால்
கன்னத்தில் குழி விழும், இரும்பு போன்ற தேகமுடைய இளைஞன். இவனுக்கு
ஹாஸ்டலில் பட்டப்பெயர் வாய்க்கா மண்டையன். கேரம் ஆடுவதில் புலி. ரயில்பயணங்களில் வரும் கதாநாயகனைப்போல அடர்த்தியான முடிகளுடன்
சைடு வகிடு எடுத்து தலைவாரியிருப்பான் அதனாலே வாய்க்காமண்டையன்
என்று பெயர். இதுல என்னடா செக்ஸ் கதை இருக்குன்னு திட்டவேணாம்
ஹீரோவ பத்தி கொஞ்சமாச்சும் சொல்லணும்ல.

அதாகப்பட்டது கதையின் நாயகன் ஒருநாள் கேரம் ஆடிக்கொண்டிருந்தான்.
நல்ல உச்சிவெயிலின் ஞாயிறு மதியம். ஹாஸ்டலின் வராந்தாவில் டேபிள்
போட்டு விளையாடிக்கொண்டிருந்தவன் திடீரென்று என்ன நினைத்தானோ
எழுந்து வேக வேகமாக செல்ல ஆரம்பித்தான். (முந்தின தினம் பெரம்பலூர்
சுவாமி திரையரங்கில் ஷகீலா படம் பார்த்தது இங்கே குறிப்பிடத்தக்கது. காலம்
என்னும் பெருவெள்ளத்தில் அந்த திரையரங்கமும் திருமண மண்டபம் ஆகிவிட்டதை
இப்போது அறிகிறேன்) ஒண்ணுக்கடிக்கதான் போகிறான் என்று நினைத்து சும்மா
இருந்தோம். ஆனால் அவன் புயலென புறப்பட்டு ஒரு வெறி வந்தவன் போல
கிளம்பியதை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. நான் அவன் அறியாமல்
அவன் பின்னே சென்றேன்.

பத்து குளியலறை, பத்து கழிப்பறை எதிரெதிரே இருக்க பக்கத்தில் நீண்ட
தண்ணீர் தொட்டி இருக்கும். அதிகாலையில் அந்த நீண்ட தண்ணீர் தொட்டியில்
தண்ணீர் கோரி கோரி ஒரு கூட்டம் குளிக்கும். சிறையில் கைதிகள் குளிப்பதற்கு
சமமாய் அந்த காட்சி இருக்கும்.

இது எதற்கு... கதைக்கு வருவோம்.

நாயகன் ஒவ்வொரு கழிவறையாய் திறந்து பார்த்து துர்நாற்றம் வீசவே மூடிக்கொண்டே
வந்தான். ஒரே ஒரு கழிவறை மட்டும் சுத்தமாய் இருந்தது. ஆனால் பரிதாபமாய்
அதன் தாழ்ப்பாள் பல்லிளித்துக் கொண்டு மூட முடியாமல் இருந்தது. ஒருகணம்
யோசித்துவிட்டு உள்ளே நுழைந்து ஒருகையால் கதவை பிடித்துக்கொண்டான்.
ஒருகையால் லுங்கியை தூக்கிவிட்டுக்கொண்டு உட்கார்ந்தான்.

"ச்ச்சே இவன் இதுக்குதான் வந்தான் போலருக்கு என்று திரும்பபோனேன்"

கதவு ஒருவித தாளலயத்துடன் சீராக முன்னும் பின்னும் ஆட துவங்கியது அந்த கதவு.
அவன் அசைய அசைய முன் பின் அசைந்தது. சீராக அசைந்து கொண்டிருந்த கதவு
திடிரென்று வேகமெடுத்து அசைந்தது. தகரக்கதவின் கிரீச் கிரீச் சத்தம் மெதுவாக
உயர்ந்து, பின் சீறி பின் மெதுவாக தாழ்ந்து ஒரு கட்டத்தில் சத்தம் வருவது நின்றது.

"உஸ்ஸ் என்று நிம்மதியான பெருமூச்சென்று கிளம்பி வந்தது". தண்ணீர் குழாயை
திருகும் சப்தம். நாயகன் எழுந்து கதவை திறந்து வெளியே வந்தான். முகத்தில்
முத்து முத்தாக வியர்த்திருந்தது.

ஓடிப்போய் அன்பழகன் முன்னாடி நின்றேன். அவனின் முகம் களவாடி மாட்டிக்
கொண்டவனின் முகத்தைப்போல பீதியில் இருந்தது.

"மச்சான் நீ பாத்துட்டியாடா" ப்ளீஸ்டா யார்கிட்டயும் சொல்லிறாதடா என்று
கெஞ்சினான். அடுத்தநாள் கேரம் காயினுக்கு பதிலாக இவனைப்போட்டுதான் எல்லாரும்
விளையாடினார்கள்.

இப்போது நினைத்துப் பார்க்கிறேன். திடிரென்று அவனுக்கு தேவைப்பட்ட விஷயம்
அவனாகவே திருப்தியடைந்துகொண்டான். அவனாகவே தேடிக்கொண்டான். எவருக்கும்
எந்தவித தொந்தரவுமில்லாமல். ஆனால் சுயபோகத்தை செய்வது எத்தனை மானக்கேடான
சமாச்சாரம் என்று கற்பிக்கப்பட்டிருக்கிறது.

அனேகமாக மாத்ருபூதத்திடம் கேட்கப்பட்ட கேள்விகளிலேயே மிக அதிகபட்சமான
கேள்வியாக இதைத்தான் குறிப்பிட முடியும்? (லார்டு லபக்தாஸ் இல்லிங்க.)
அதை உறுதிசெய்வது போலவே சிவராஜ் சித்த வைத்தியக்காரர்களின் விளம்பரங்களும்
அமைந்துவிட்டன.