எல்லையற்ற அன்பு கொள்வோம்

Wednesday, August 12, 2009

அங்காடித்தெரு


உன்பேரை சொல்லும்போதே உள்நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர்வாழும் போராட்டம்
நீ பார்க்கும்போதே மழையாவேன் ஓ..ஓ
உன் அன்பில் கண்ணீர்த்துளியாவேன்

நீயில்லை என்றால் என்னாவேன் ஓ..ஓ
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்

உன்பேரை சொல்லும்போதே உள்நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர்வாழும் போராட்டம்
நீயில்லை என்றால் என்னாவேன் ஓ..ஓ
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்

நீ பேரழகில் போர்நடத்தி என்னை வென்றாய்
கண் பார்க்கும்போதே பார்வையாலே கடத்திச் சென்றாய்

நான் பெண்ணாக பிறந்ததற்கு வெட்கம் சொல்ல
முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்

என் உலகம் தனிமைக்காடு
நீ வந்தாய் பூக்களோடு
இனி தொடரும் கனவுகளோடு பெண்ணே பெண்ணே

நீயில்லை என்றால் என்னாவேன் ஓ..ஓ
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்

உன்பேரை சொல்லும்போதே உள்நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர்வாழும் போராட்டம்
நீ பார்க்கும்போதே மழையாவேன் ஓ..ஓ
உன் அன்பில் கண்ணீர்த்துளியாவேன்

நீயில்லை என்றால் என்னாவேன் ஓ..ஓ
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்

உன் கருங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும்
உன் காதோரம் உரையாடித்தான் ஜென்மம் தீரும்

உன் மாரோடு சாயும் அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்

உன் காதல் ஒன்றைத்தவிர என் கையில் ஒன்றுமில்லை
அதைத் தாண்டி ஒன்றுமே இல்லை பெண்ணே பெண்ணே

நீயில்லை என்றால் என்னாவேன் ஓ..ஓ
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்

உன்பேரை சொல்லும்போதே உள்நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர்வாழும் போராட்டம்
நீ பார்க்கும்போதே மழையாவேன் ஓ..ஓ
உன் அன்பில் கண்ணீர்த்துளியாவேன்

நீயில்லை என்றால் என்னாவேன் ஓ..ஓ
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்

படம் : அங்காடித்தெரு
பாடியவர்: நரேஷ் ஐயர், ஷ்ரேயா கோஷல்
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
இசை: கண்டிப்பாக ஜி.வி.பிரகாஷ்குமார் என்று நினைக்கிறேன். விஜய் ஆன்டனிக்கு
இன்னும் இந்த அளவுக்கு மெலடி கொடுக்கும் பக்குவமெல்லாம் வரவில்லை. அவர்
வேறு ரக இசையமைப்பாளர். இரண்டு பாடல்களுக்கு இசையமைத்து பின்னர்
படத்திலிருந்து ஜி.வி வெளியேறிவிட்டாராம் அந்த இரு பாடல்களில் இதுவும்
ஒன்றாக இருக்கவேண்டும்.

எதுவாக இருந்தாலும் உருகுதே மருகுதே பாடலைப்போல் இதுவும் இனிமையான
ஒரு பாடல்