எல்லையற்ற அன்பு கொள்வோம்

Friday, December 26, 2008

மொக்கை குறிப்புகள்

தொடர்ச்சியாக வீட்டிலிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. சில இடங்கள், பல
முகங்களில் பழையதை தேடி தினமும் தோற்றுப்போகிறேன். எல்லாமே மாறி
விட்டிருக்கின்றன. முதல் இரண்டு வாரங்கள் அடர்மழையும் தேநீருமாக ரம்மியமாக
இருந்தது, கடந்த இரண்டு வாரங்களாக கடும் குளிர். மழையானாலும் குளிரானாலும்
நம் பழக்க வழக்கங்கள் எதையும் மாற்றிக்கொள்வதே இல்லை. இதுபோன்ற எதிர்
குணங்களால் உடல்நிலையில் பருத்த மாற்றம்.

சிலம்பாட்டம், சேவல், தெனாவட்டு, காதலில் விழுந்தேன் என்று அனைத்துப் புதிய
திரைப்படங்களுக்கும் நண்பர்கள் வலுக்கட்டாயமாக மாலைகளில் இழுத்துச்சென்றார்கள்
நான்கு அற்புதமான மாலைகள் வீணாகிய வருத்தமில்லை என்றாலும் இதுபோன்ற
படங்களையெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக எப்படி சகித்துக் கொள்கிறார்கள்
என்று தோன்றியது. சொன்னதையே திரும்பச்சொல்லும் கற்பனை வறட்சி மிக்க
இயக்குனர்களின் படங்களைப் பார்ப்பதைவிட தொலைக்காட்சி சீரியல்களை
பார்க்கலாம். குறிப்பாக சிலம்பாட்டம் படம் பார்க்கையில் நெரிசல் மிக்க பேருந்து
நிலையத்தின் கழுவாத கழிவறைக்குள் நுழைந்த உணர்வு ஏற்பட்டது.

பொம்மலாட்டம் பார்க்க நேரத்திற்கு கிளம்பியும் அரங்கம் சென்றடைய தாமதம்.
டிக்கெட் கிழிப்பவரிடம் "உக்காரதுக்கு இடம் இருக்குங்களா அண்ணே" என்றேன்.
அவர் "படுத்துகிட்டே பாக்கலாம் சார்" என்றார். மொத்தக்குத்துகளையும் வைத்து
அவர் சொன்ன பதில் எனக்குப் பிடித்திருந்தது. முதல் பாதி சொக்கியது. இரண்டாம்
பாதியில் இமயத்தின் புலிப்பாய்ச்சல். படம் பார்க்கையில் இமயமே அவரைப்பற்றிப்
படமெடுக்க எதற்கு நானாபடேகர் என்று மனம் நினைத்தது ஆனால் முடிக்கையில்
அவரைப்பற்றி கொஞ்சமாகவும் மற்றும் சுதந்திரமான, நேர்த்தியான படைப்பாளியின்
நிலையை தெளிவாக விளக்குகிறது. இந்தப்படத்திலும் அர்ஜுன் வெளிநாட்டுக்கு
சென்று ஹீரோயினின் குண்டியை தடவுகிறார். விலுக் விலுக்கென்று ஆடுகிறார்.

இதுபோன்ற வெளிநாட்டு பாடல்காட்சிகள் பார்க்கும்போதெல்லாம் மனது மிகுந்த
அசௌகரியமாக உணர்கிறது. எதற்கு இந்த கோமாளி நடனங்கள்? இவர்கள்
இப்படி ஆடுவதைத்தான் மக்கள் ரசிக்கிறார்களா? அர்ஜுன், சிம்பு போன்றவர்கள்
நாயகியிடம் செய்யும் சில்மிஷங்களுக்குப் பதிலாக புணர்ச்சியே செய்துவிடலாம்.

நண்பர்களிடமிருந்தும், சொந்தமாகவும் இருபது நகைச்சுவை டிவிடிக்கள், இருபது
சினிமா நடிகர்கள், நடிகைகளின் சினிமா ஆடல், பாடல்கள் அடங்கிய டிவிடிக்கள் உள்ளது. இருபத்தி நான்குமணி நேர நகைச்சுவைச்சேனலும், பாடல் ஒலிபரப்பும் சேனலும்
ஆரம்பிக்கும் எண்ணம்கூட உள்ளது. கெக்கே பிக்கே என்று பேசி பாடல் ஒலிபரப்பலாம்.
அருக்கானி பிகர்கள் நிறையவும் உள்ள ஊர் என்பதால் நிறைய விளம்பரங்கள் வரலாம்.
நிறையக் கேணையர்கள் போன் செய்து விருப்பப் பாடலைக் கேட்பார்கள். அதைத் தன்
நண்பர்களுக்கு "டெடிகேட்" செய்து பரவசப்பட்டுக்கொள்வார்கள். இதெல்லாம் கூட
கொடுமையில்லை அடங்காத நிஷா ஆடிய ஆட்டத்தில் தமிழகமே துண்டாகிக்கிடந்த
காலையில் சன் மியூசிக்கில் ஒரு ஜந்து "happy Rainy day" என்று மெசெஜ்
அனுப்புகிறது அதையும் சேனல் வெளியிட்டு வாழ்த்துகிறது. உண்மையிலேயே
யாராவது அனுப்புகிறார்களா அல்லது சேனலே இப்படியா.... ரொம்ப ஆராய்ஞ்சிட்டெ
போனால் பெரிய அரசியல் தலைவர்களின் மகன்களின் குசுநாத்தம் அடிக்கிறது.
அதற்க்குப் பாடலையே பார்த்துவிடலாம்.

"திருவண்ணாமலை படம் பார்த்தவர்களுக்கு நேரடி ஒளிபரப்பில் பேரரசு ஆறுதல் சொல்லிக்
கொண்டிருந்தார்." அதில் ஒரு அப்பாவி ரசிகன் கேள்வி.

அ.ர: "சார் உங்க அடுத்த படம் எப்ப சார்?

பே: என்னோட அடுத்த படம் திருத்தணி. திருவண்ணாமலை ஆக்சன் ஜோதின்னா, திருத்தனி
ஆக்சன் அவதாரம்.

அ.ர: "ஏன் சார் தொடர்ந்து ஆக்சன் படமே எடுக்கறிங்க?

"மக்களுக்கு அதான் சார் புடிக்கிது" மக்கள் சந்தோஷமா இருக்கற ஒரே இடம் தியேட்டர்
தான் அதனால அவங்கள தொடர்ந்து சந்தோஷப்படுத்தறதுதான் என் சந்தோசம்.

பேரரசு ஆக்சன், ஜேகே ரித்திஸ் ஆக்சன், விஜயகாந்த் ஆக்சன், ரஜினி ஆக்சன், விஜய்
அஜித், சொம்பு, என்று ஒரே ஆக்சன் அதிரடிகளால் கோடம்பாக்கம் நிரம்பி இருக்கிறது.

இப்படியெல்லாம் பார்க்கப்போய் கொடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டி
இருப்பதால் டிஸ்கவரியையும், நேஷனல் சேனலையும் பார்க்கிறேன். "நாலு புலி சேர்ந்து
ஒரு காட்டெருமைய உயிரோட கடிச்சி திங்குறத பாக்குறியே அப்டினா உனக்கு எவ்ளோ
கல்நெஞ்சமா இருக்கும்டா" என்று பெற்ற தாய் திட்டுகிறார்.

இணைய இணைப்பு கிடைப்பதில் பெரிய தாமதம் ஏற்பட்டுவிட்டபடியால் வலை உலகில்
என் ஐம்பது நாள் இல்லாமல் போய்விட்டது(:))). இத்தனை நாட்களுக்குப் பிறகு
ரீடரைத்திருந்தால் ஆயிரத்தி சொச்சம். ஜெயமோகன் இருப்பதிலேயே டாப். 72 பதிவுகள்.
சும்மாவா சூறாவலி என்று சொல்கிறார்கள். இணையத்தில் எழுதுபவையையும் கெட்டி
அட்டையில் பதிப்பித்துவிடுவார் அப்போது படித்துவிடலாம் என்று அனைத்தையும்
படித்துவிட்டதாக காண்பிக்கும்படி ரீடரார் இடம் வேண்டிக்கொண்டேன். ஆனால் நண்பர்கள்
பரிந்துரைத்த மத்தகம் குறுநாவலை மட்டும் மென்நூலாக மாற்றிக்கொண்டேன்.
அதை வாசிக்க ஒரு நல்ல பொழுது வாய்க்கும் அதுவரை பொறுத்திருக்கலாம்.
இரண்டாவதாக R.P.ராஜநாயகத்தின் சுருக்கமான 60 பதிவுகள் நிச்சயமாக அனைத்தையும்
படித்தேன்.

அமீரகத்தில் வேலையின்போது நிறைய உபரி நேரம் சும்மா இருக்காமல் எதையோ எழுதி
கிழித்துக்கொண்டிருந்தேன். ஊரில் சும்மா இருக்கும்போது நேரமே கிடைப்பதில்லை.
நான்குபுறமும் நண்பர்களின் அழைப்பு என சென்றுவிடுகிறது. ஆனால் இன்னும் ஒரு
பதிவரைக்கூட சந்திக்கவில்லை(!)

கள்ளக்குறிச்சி நகர வீதிகளில் பதிமூன்று நாய்கள் ஒன்றாகவே சுற்றுகின்றன. அவை
பிரிவதே இல்லை. பரபரப்பான வீதியில் மனிதக்கூட்டங்களுக்கு நடுவே நுழைந்து
செல்கின்றன. திடீரென்று அவை அனைத்தும் திசைக்கொன்றாக பார்க்கின்றன.
நிற்கும் திசையில் பார்வையை கூர்மையாக கவனிக்கின்றன. எதோ ஒரு தாக்குதலுக்கு
வியூகம் அமைப்பது போல. ஆனால் அடுத்த நொடியும் கிளம்பி விடுகின்றன.
யாருக்கும் தொந்தரவு தருவதில்லை. "அதிகம் விற்பனையாகும்" நாளிதழ்களிலும்
செய்தி வெளியிட்டிருக்கின்றன. நானும் இரண்டு முறை அந்தக்காட்சியை பார்த்தேன்.
ஒன்றையும் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இரண்டு முறையும் எண்ணிக்கையை
சரிபார்த்தேன். சரியாக பதிமூன்று நாய்கள். அமைதி ஊர்வலம் போல செல்கிறது
வருகிறது, திடிரென நிற்கிறது பிறகு செல்கிறது.

நாய்களுக்கு உள்ள பொதுவான குணம் "எங்க ஏரியா உள்ள வராதே" என்பதுதான்.
அதையும் மீறி இவை பதிமூன்றும் நட்புகொள்ள எது காரணமாக இருக்கும்?
இதன் பிண்ணனியை ஆராய்ந்தால் சுவையான சம்பவம் எதாவது ஒன்று இருக்கலாம்.

Thursday, December 18, 2008

இரவின் இசை


இருபுறத்திலும் மரங்கள் அடர்ந்த யாருமற்ற
சாலையின் நள்ளிரவு சப்தங்களை
கேட்டுக்கொண்டிருந்தேன்.
முன்பே பலமுறை கேட்டு கவனித்திராத
சப்தங்கள் வினோதனமான நினைவலைகளை
உணர்த்தின. உன்னதமான ஒரு தருணத்தை பதிவிக்கும்
கலைஞனின் கவனத்தோடு அதனை
மன அறைகளில் பதிவிக்க ஆரம்பித்தேன்.
முதலில் ஆதியின் நிசப்தம். பின்பு தவளைகளின்
கூட்டுச்சப்தத்தோடு சீரான இடைவெளியில்
ஆந்தையின் கொஞ்சல். எங்கோ தொலைவில்
கிழவியின் ஒற்றை ஓலம். பெரிய
ஆற்றின் குறுக்கே ஓடையின் சலசலப்பு.
உறக்கம் தொலைத்த கிழவனின் முணுமுணுப்பு
வண்டுகளின் ரீங்காரம் என
எல்லாமும் சேர்த்தே பதிவித்தேன்.
விடியலில் பதிவித்ததை கேட்க முயற்சிக்கையில்
நகரத்தின் இரைச்சலில் இரவின்
இசை கலைந்து விட்டிருந்தது.