எல்லையற்ற அன்பு கொள்வோம்

Thursday, December 21, 2006

வெயில் திரைப்படவிமர்சனம்

வெயில் படத்தின் பாடல்களை கேட்டபொழுதே படம் பார்க்க வேண்டும்
என்ற ஆர்வம் தோன்றியது. இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் அவரது
சீடர் வசந்தபாலன் எடுத்திருக்கும் படம் இவர் முன்னரே ஆல்பம் என்ற
படம் எடுத்திருந்த போதும் அது கவனிக்கபடாமலேயே போய்விட்டது.
அந்த குறையை இந்த வெயில் கண்டிப்பாக தீர்க்கும். நிச்சயம் பார்க்கவேண்டிய
படம்தான் என்று பார்த்தவுடனே மனதிலும் தோன்றியது.

Photobucket - Video and Image Hosting

வாழ்க்கையின் சகலபரிமாணங்களிலும் தோற்ற ஒருவனின் கதையை
படமாக்க முயன்றிருக்கிறார்கள். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
இதுவரை இந்த முயற்சி தமிழ் சினிமாவில் இல்லை. சினிமா
கதாநாயகனுக்கான எந்த அடையாளமும் இல்லாமல் கதைக்கான,
கதைக்களத்துக்கான இரு கதாநாயகன்களாக பசுபதி (முருகேசன்).
அவரின் தம்பியாக பரத் (கதிர்).

Photobucket - Video and Image Hosting

முதல் பாடல்காட்சியிலேயே தெரிந்து விடுகிறது இது வழக்கமான சினிமா
இல்லையென்பது. வெயிலோடு விளையாடி பாடலில் வரும் அத்தனை
விஷயங்களும் சிறுவயதில் நாம் செய்த ரசிக்கும்படியான குறும்புகள்.

பள்ளி கட் அடித்து விட்டு தியேட்டரில் திருட்டு தம் அடிக்கும் மகனை
பூதாகரமாக கண்டிக்கிறார் தந்தை. அவமானம் பொறுக்க முடியாமல்
பணத்தை திருடிக்கொண்டு வீட்டை விட்டு ஓடி விடுகிறார் பசுபதி.
இருக்கும் பணத்தையும் தொலைத்து விட்டு தியேட்டரில் வளர்கிறார்.
அங்கிருந்து காதல், சமூகம், எல்லாம் விளையாடுகையில் கண் முன்னே
காதலியின் தற்கொலை, தியேட்டர் இடித்த பிறகு வேலையும் போய்
ஏன் வாழ்கிறோம் என்று வேதனையில் இருக்கும்போது வீட்டுக்கு
போக முடிவெடுக்கிறார். இருபது வருடம் கழித்து வரும் மகனை
கண்டதும் பாசத்தில் தாய், இன்னும் அதே கோபத்தில் தந்தை இந்த
இடத்தில் அந்த தந்தை கதாபாத்திரத்தை குறிப்பிட்டே ஆகவேண்டும்.
மிக அற்புதமாக செய்திருக்கிறார்.

Photobucket - Video and Image Hosting

வீட்டிலும் தான் எதிர்பார்க்கும் பாசம், அன்பு கிடைக்கவில்லை
தங்கைகள் தன்னை அண்ணனாக ஏற்கவில்லை, திரும்பவும் திருட்டு
பட்டம் என்று காட்சிக்கு காட்சி தோல்விகள் கண்முன்னே தோன்றும்
போது பிரமிப்பு மீளவில்லை. பசுபதி நடிப்பின் உச்சத்தை தொட
முயன்றிருக்கிறார் அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். என்
முகத்திலே முழிக்காதே என்று சொன்ன அதே அப்பா மகன் காலடியில்
வீழ்ந்து மன்னிப்பு கேட்கிறார்.

சிறப்பான ஒளிப்பதிவு, தரமான இசை படத்துக்கு கூடுதல் பலம் கிடைக்கிறது.
முத்துக்குமாரின் வரிகளில் "உருகுதே மருகுதே" பாடல் மிக அழகாக படமாக்க
பட்டிருக்கிறது. அழகான வரிகளும் கூட. "வெயிலோடு விளையாடி" பாடல்
உங்கள் உதட்டில் குறுநகையயும் ஆச்சரியத்தையும் கொடுக்கும். "காதல்
நெருப்பின் நடனம்" உயிரே பாடலை நினைவுபடுத்துகிறது. அருவா பாடலும்
ஊராந்தோட்டத்தில பாடலும் தாளம் போட வைக்கிறது. "இறைவனை உணர்கிற"
காதுக்கு இனிமை.

Photobucket - Video and Image Hosting

தென்மாவட்டமான விருதுநகரில் கதை நடக்கிறது. அந்த மண்ணுக்குரிய
வெக்கைதான் படத்துக்கு பெயராக வைத்திருக்கிறார்கள். வெயிலின்
குறியாக கோபம், தவிப்பு, வெறுப்பு, மற்றொன்றாக பசுபதியயும் சொல்ல
வைக்கிறது. படத்தின் முழுக்கதையும் இவரை சுற்றியே வருகிறது இவரை
சுற்றி பலரும் அருமையாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

பரத்துக்கு ஜோடியாக பாவனா. இவர் தனது பங்களிப்பை செய்து விட்டு
கடைசியில் காணாமல் போகிறார். பசுபதிக்கு ஜோடியாக இருவர் இருந்தாலும்
இதிலும் தோல்விதான். படத்தில ஸ்ரேயான்னு ஒரு அம்மணி இருக்காங்க
சவுண்டையெல்லாம் தூக்கி வெச்சிட்டு பாந்தமான நடிப்பை தந்து நம்மளை
நிம்மதி பெருமூச்சு விட வைக்கிறார்.

Photobucket - Video and Image Hosting

மொத்தத்தில படம் பார்த்துவிட்டு வெளிவரும்போது ஏதோ ஒரு கிராமத்து
வீட்டின் உள்நுழைந்து ஒருவர் வாழ்க்கையை பார்த்து வந்தது போன்ற
உணர்வு. சண்டைக்காட்சிகள் மிக தத்ரூபமாக இருந்தாலும் ரத்தம் அதிகம்
நன்றாக அமைத்திருக்கிறார்கள் சபாஷ்.

பஞ்ச் டயலாக், குலுக்ஸ் நடனங்கலை எதிர்பார்த்து சென்றால் ஏமாற்றமே
மிஞ்சும். வித்தியாசமான படங்களை விரும்பி பார்ப்பவர்களுக்கு ஒரு
விருந்து இந்த படம்.

இதை தயாரித்ததற்காக ஷங்கருக்கு ஒரு நன்றி.

இதை எழுதி இயக்கிய வசந்த பாலனுக்கும் வாழ்த்துக்கள்

எச்சரிக்கை!!!

இது ஒரு எச்சரிக்கை பதிவு!!!

காலம் கடந்த எச்சரிக்கைதான் ஆனாலும் கவனமா இருங்க பின்னாடி இதே
தப்பை செஞ்சிறாதிங்க.

சென்னைக்காதல்

Photobucket - Video and Image Hosting

இந்த படத்தை நான் பார்க்க கூடாதுன்னு சில தரப்புகளில் இருந்து
எதிர்ப்புகளும், பல இடங்களில் இருந்து எச்சரிக்கைகளும் வந்தன். இதே
போல எச்சரிக்கைகள் வல்லவன் படம் பார்க்க முடிவு செய்த போது என்
நல விரும்பிகள் கொடுத்தார்கள். அதனை அலட்சியம் செய்து பார்த்தேன்.
அதன் பின்விளைவு அப்புறம் தெரிந்தது.

சரி படத்துக்கு வருவோம் அதுக்கு முன்னாடி இயக்குனர் விக்ரமன் பத்தி
கொஞ்சம் சொல்லுவோம். இவர பத்தி எனக்கு இருக்குற ஒரே கருத்து
செண்டிமெண்ட் கலந்த காமெடி படம் எடுப்பாரு. பெரும்பாலும் இவரோட
முந்தைய படங்களின் கதையயே மத்த படங்களுக்கும் உபயோகிப்பார்
ஆங்கிலப்படங்களையோ, வேற்று மொழிப்படங்களையோ பார்த்து காப்பி
அடிக்காம ஒரே கதையை திரும்ப திரும்ப எடுக்கறதினால இவரை
பாராட்டலாம். லாலாலா பிண்ணனி இசையும், ஆர்மோனியத்தின் அபஸ்வர
ஒலியையும் இவரையும் பிரிக்கவே முடியாது அப்படி ஒரு பந்தம்.

Photobucket - Video and Image Hosting

இவரு இயக்குனராக முயற்சி செய்யும்போது எழுதின கதைய இப்ப
எடுத்திருக்காரு படத்த பாத்தா அந்த மாதிரிதான் தெரியுது. இதே மாதிரி
கதையில ஆயிரத்தி சொச்சம் படம் தமிழ்ல வந்திருக்கு.இப்ப எதுக்கு இந்த
படத்தை எடுத்தாரோ தெரியல. ஒருவேளை தாணுகிட்ட ஏகப்பட்ட பணம்
இருந்திருக்குமோ தெரியல.

ஒரு சென்னைப்பயன் படிக்காம ஊர சுத்தி, வீட்டையும் மதிக்காம, யாரையும்
மதிக்காம ஒரு பிகரை(ஜெனிலியா) காதல் செய்கிறார். அவளையே கல்யாணம்
செய்யிறதுக்கு எல்லா விதமான எதிர்ப்புகளையும் சந்தித்து காதலில் வெற்றி
பெறுகிறார். " உன்ன வளர்த்ததுக்கு பதிலா ஒரு எருமை மாட்டையே
வளர்த்திருக்கலாம்"னு பரத்தோட அப்பா சொல்லப்போக ஒரு எருமை
மாட்டையே வீட்டுக்கு கொண்டு வந்து நிறுத்தறாரு பரத். இதுக்காக படத்தில
15 நிமிஷம் காமெடின்ற பேர்ல இந்த சீனை எடுத்திருக்காங்க. யெப்பா
சகிக்கலடா சாமி... ஹீரோவோட காதலுக்கு உதவி செய்யறதுக்காகவே
விக்ரமன் படத்தில குறைஞ்சது நாலு பேர் இருப்பாங்க. இவங்க உயிரை
குடுத்தாவது ஹீரோவை காப்பாத்துவாங்க. அந்த மாதிரி இதுல நாலு பேர்
நடிச்சிருக்காங்க அதில ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் கொஞ்சம் ஆறுதல் தருகிறார்.
ஏற்கனவே தொலைக்காட்சில செய்த காமெடியையே திரையிலும் பார்த்ததுதான்
கொஞ்சம் புதுமையா செஞ்சிருக்கலாம்.

Photobucket - Video and Image Hosting

அது என்னவோ தெரியல ஹீரோயின் அப்பா பயங்கரமான ரவுடியா வருவது
தமிழுக்கு எத்தனையாவது படம்னு. அழகான ஜெனிலியாவுக்கு ராதாரவி
அப்பாவாக நடித்திருக்கிறார். எங்க சார் போயிருந்திங்க இவ்ளோ நாளா?.
இவ்வளவு நாளா காத்திருந்தது வீண் போகல. ஒரு அருமையான படத்தில
நடிச்சிட்டிங்க.

கிளிகள் மும்பைக்குதான் பறந்து போச்சின்னு ராதாரவிக்கு எந்த படை வீட்டு
அம்மன் கனவில வந்து சொல்றாங்கன்னு தெரியல அதுவும் இவரு தோஸ்தான
இன்னொரு ரவுடி வீட்டுலயே தஞ்சம் புகுந்து அங்கயே யாருக்கும் தெரியாம
இருக்கறது காமெடியின் உச்சம்.

இப்ப தமிழ் சினிமா இருக்கற சூழ்நிலைக்கு எப்படியெல்லாம் படம் எடுக்க
கூடாதோ அப்படி எடுத்திருக்கிறார் விக்ரமன் அதுக்காகவாச்சும் அவருக்கு
உதவி இயக்குனர்கள் நன்றி சொல்லணும். படத்துல ஆறுதல் அதில வரும்
பாடல்கள் அப்படின்னு கூடசொல்ல முடியாது பிண்ணனி இசை படு
கேவலம். சீரியல்ல கூட இதை விட பிரமாதமா கொடுக்கறாங்க. த்ரில்
காட்சிக்கு பிண்ணனிஇசையா டொட்ட டொய்ங் டொட்ட டொய்ங்தான்
போடறாங்க.

ஏண்டா நாயே படம் பாத்துட்டு இந்த வைய்யி வைய்யரேன்னு கேக்கறிங்களா?

ஜெனிலியான்னு ஒரு அம்மணி நடிச்சிருந்த ஒரே காரணத்துனாலயும், கூட பரத்தும் இருக்கறதினால பாத்து தொலச்சிட்டங்க.

பள்ளி ஆண்டுவிழா நாடகத்துல கண்ணுல மை வைக்க தெரியாம வெச்சி,
சாந்துபொட்டை உதட்டு சாயமா போட்டுகிட்டு ஏதாவது ஒரு பொண்ணு ஓரமா
ஒரே இடத்தில நின்னுகிட்டு கைய மட்டும் சுத்துவாங்க அதுக்கு பேரு டான்ஸ்.
ஆமாங்க அந்த மாதிரி ஒரு நாடகத்தை பார்த்திருந்திங்கன்னா அதுல வர்ற
பொண்ணு கேரக்டர்தான் ஜெனிலியா பண்ணது.

என்னவோ போ!

இன்னிக்கு வெயில் படம் பாக்கறேன் அதுவாச்சும் நல்லா இருக்குதான்னு பார்ப்போம்.

Monday, December 04, 2006

அமீரக வலைப்பதிவாளர்கள் சந்திப்பு

ஆசிப் அண்ணாச்சியின் தலைமையில் மற்றுமொரு மாபெரும் மாநாடு
அமீரகத்தில் இனிதே நடைபெற்றது. சந்திப்புக்கு வருவதாக சொன்ன பிற
நண்பர்கள் பலர் வர இயலாதபடி செய்து விட்டார் வருணபகவான். இந்த சந்திப்பு அருமையான ஒரு விவாதக்களமாக அமைந்தது. பல தலைப்புகளில் நண்பர்கள்
நன்றாக பேசினார்கள். குறிப்பாக அண்ணாச்சியும் பெனாத்தல் சுரேஷ் அவர்களும் நகைச்சுவையாக அதே சமயம் நல்ல கருத்துக்களுடன் பேசினார்கள்.மாநாட்டில்
கலந்து கொண்டவர்கள் விவரம்.


ஆசிப் மீரான்
பெனாத்தல் சுரேஷ்
நண்பன்
இசாக்
முத்துக்குமரன்
கவிமதி
லியோ சுரேஷ்
தமிழன்பு
சுந்தரராமன்
செண்பகராஜன்
தம்பி.

லியோ சுரேஷ் அவர்கள் மாநாட்டை துவக்கி வைத்தார். நேரம் தவறாமை
என்பது மிக முக்கியம் என்பதை முன்வைத்து பதிவுகளின் நோக்கம் என்ன?
எதிர்காலத்தில் இதனால் நாம் சாதிப்பது என்ன? என்று விவாதத்தை துவக்கினார்.

பதிவுகள் அவசியமா? பதிவுகளுக்காக பின்னூட்டமா? பின்னூட்டத்துக்காக
பதிவுகளா? தமிழ்மண கவிதைகள், பெரியார் போன்ற பல தலைப்புகளில்
விவாதம் நடைபெற்றது. குறிப்பிட்ட நேரத்திக்கு சந்திப்பு நடபெற்றிருந்தால்
இன்னும் நிறைய பேசியிருக்கலாம். இந்த சந்திப்பில் என்னுடைய பங்கு எனபது பார்வையாளனுக்கும் கீழேதான் என்பது சந்திப்பில் இடம்பெற்ற அனைவருக்கும்
தெரியும். நிறைய விஷயங்களில் தெளிவான பார்வை இல்லாததும் ஒரு காரணம்.

எழுத்து என்பது தொழில்முறை எழுத்தாளருக்கு மட்டுமே சொந்தமில்லை,
அனைவருக்கும் பொதுவானது. வாசகன் என்பவன் வாசிக்க மட்டுமே அல்ல
அவனுக்கும் சில கருத்துக்கள் உண்டு அதை பொதுவில் வைத்து விவாதம்
நடத்த உதவியாக இருக்கும் இந்த பதிவுகள் என்பது மிக அவசியம் என்று
அருமையாக பேசி விவாதத்தை துவக்கி வைத்தார். ஒரு விஷயத்துல
நமக்குன்னு ஒரு கருத்து இருக்கும் அதை பொதுவில் வைத்து விவாதிக்கும்போது
புதிய சில விஷயங்கள் தெரிய வரும், மற்றவர்களின் பார்வையையும் அறிய
ஒரு வாய்ப்பு. சில முரண்பட்ட கருத்துக்கள். ஒரு காலத்தில் எழுத்தாளர்களுக்கு
மட்டுமே சொந்தமாக இருந்ததை இப்பொழுது யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சுதந்திரமாக வெளியிடலாம் என்பது ஒரு மிகப்பெரிய
சுதந்திரம். வலைப்பூவின் சக்தி குறித்து நண்பன் ஒரு செய்தி குறிப்பிட்டது
சுவாரசியமானதாக இருந்தது. இராக் யுத்தத்தின் போது யுத்தக்கள செய்திகளை
இரு பெரும் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு கொண்டிருந்தது. (CNN, Al JAZEERA) இரண்டுமே நடந்ததை நடுநிலையோடு வெளியிட்டதாக யாரும் நம்பபோவதில்லை.
அந்த நேரத்தில் இராக்கியர் ஒருவர் அங்கே என்ன நடந்தது என்பதை எவ்வித சார்புத்தன்மையும் இல்லாமல் தன் வலைப்பூவில் எழுதியது பரபரப்பை
உண்டாக்கியது. உலகமே அந்த வலைப்பூவினை வாசித்தனர் என்றார். இது போல சுதந்திரமாக செய்திகளையும், கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ள ஏதுவாக உள்ள
ஒரு ஊடகம் இது. எழுதி வைத்து பேசறதுக்கே நம்மாள முடியாத போது
அப்போதுதான் சொல்லப்பட்ட தலைப்பை வைத்து பேசுவது என்பது
பாராட்டக்கூடியது அந்த வகையில் முத்துக்குமரன் அருமையாக பேசினார்.

அடுத்து பதிவுகள் எழுதப்படுவது பின்னூட்டங்களுக்காக மட்டுமா?. சில
மொக்கையான பதிவுகள் (என் பதிவுகள் போல) பின்னூட்டங்கள் நிறைய பெறுவதும்,அருமையான படைப்புகள் பல கவனிக்கப்படாமல் போவதும் எதனை அறிவுறுத்துகிறது? வாசிப்பவர்கள் நகைச்சுவையை மட்டுமே விரும்புபவர்களா?
எதனால் இப்படி என்ற சுவாரசியமான விவாதம். என் பதிவில் நான்
பின்னூட்டங்களை அனுமதிப்பதில்லை நேரமின்மையும் நேரவிரயமும்
காரணங்கள். நான் எழுதிய கவிதைகளை சேமித்து வைக்கும் ஒரு இடமாக
வலைப்பூவினை பயன்படுத்துகிறேன். என்னை பாராட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக எனது மின்னஞ்சல் முகவரி, உலாபேசி எண் அங்கேயே
உள்ளது. என்பதை இதற்கு முன்பு நடைபெற்ற சந்திப்பில் சொன்னதை நினைவு
கூர்ந்தார் நண்பர் இசாக். வலைப்பூக்களில் ஒருபுறம் கடுமையான விவாதங்கள் நடைபெற்றாலும் ஒருபுறம் நகைச்சுவை பதிவுகள் வந்துகொண்டு இருக்கின்றன.
தீவிரமான விவாதங்களில் பங்கேற்க விரும்பாதவர்களும் சர்ச்சைகளில் சிக்க
விரும்பாதவர்களும் நகைச்சுவை பதிவுகள் எழுதுவதையே தேர்ந்ததெடுக்கின்றனர்.
இதில் என்னுடைய கருத்து என்பது பின்னூட்டங்கள் என்பது அவசியமே
பதிவு வெளியிட்டு சில நொடிகளில் மற்றவர் கருத்தை பின்னூட்டங்களில்
அறிய முடிவது வரமே.

கவிதைகள் குறித்து பேச்சு வந்த போது கவிமடத்தலைவர் கவுஜைகளின்
மன்னன் ஆசிப் அவர்கள் பெரும்பாலான கவிதைகள் காதலை மையமாக
வைத்தே எழுதப்படுவது எதனால்? இதுபோல எழுதப்படும் கவிதைகள்
புலம்பல்கள் போலவே தோற்றமளிக்கிறது. காதல் என்ற பொருளைத்தாண்டியும்
நிறைய விஷயங்க உள்ளன. வெறும் அலங்கார வார்த்தைகளைக் கொண்டு
புனையப்படுவது கவிதை என்று சொல்ல முடியாது. கவிதைகளின்
பாடுபொருள் என்பது காதல் மட்டுமேயல்ல.

எளிதில் தீப்பற்றக்கூடிய, முடிவில்லாததுமாகிய பெரியார் என்ற விவாதம்
வந்த போது அது எளிதில் முடியக்கூடியதாக இல்லை. முக்கியமான எனது
கருத்து என்னவென்றால் பெரியாரின் கருத்துக்களை விமர்சிப்பதை விட
பெரியாரை விமர்சிப்பர்களே அதிகம். மக்கள் மதித்த ஒரு சீர்திருத்தவாதியை
சகட்டு மேனிக்கு தூற்றும் பதிவுகளை பார்க்கும்போது வேதனையே வருகிறது. எதிர்கருத்துக்களுக்கு வாதிட யாரும் தயாராக இல்லாதபோது விவாதம் நடத்தி
பயனில்லை.

அமீரகசெய்திகளுக்கு வலைப்பதிவாளர்கள் யாரும் முன்னுரிமை கொடுத்தால்
வாசகர்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்று நண்பர் செண்பகராஜன்
குறிப்பிட்டார். தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் தின செய்திகள்
போன்றவைகளையும் பதிப்பித்தால் நன்று என்றார். இங்கு வெளியிடப்படும் செய்தித்தாள்களின் செய்திகளே தணிக்கை செய்யப்பட்ட செய்திகள்தான்.
வெளியிடுவதில் உள்ள சிரமங்கள் சட்டச்சிக்கல்கள் போன்றவைகளை
நயமாக எடுத்துரைத்தார் நண்பர் ஆசிப்.

நான் என்ன பேசினேன்னு கேக்கறிங்களா? நான் பேசவில்லை பேசுவதை கேட்டு
கொண்டிருந்தேன். என் கைதான் பேசியது என் கைகள் சிவ்ஸ்டார் பவனின்
மூன்று வடைகளை பதம் பார்த்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஏண்டா மொத்தத்துல வடை சாப்பிட மட்டுமே வாய் தொறந்திருக்க நீயி.
அப்படின்னு யாரும் கேக்ககூடாது ஆமாம்.

மீதி அடுத்த பதிவில்!

Friday, December 01, 2006

THREE BURIALS

சினிமா பாத்தேன்னா விமர்சனம் எழுதற பழக்கமே இல்ல. ஏன்னா விமர்சனம் பண்ற அளவுக்கு நம்ம பொதுஅறிவு கிடையாது. படத்துல நமக்கு பிடிச்ச காட்சிகளையும் அதை பார்வையாளன் பார்வையில சொல்றதும்தான் எனக்கு பிடிச்சது. அதுவும் ஆங்கில படம்னாவே ரெண்டு அடி தள்ளியே நிப்பேன். நேத்திக்கு என்னவோ ஆங்கிலப் படம் பாக்கணும்னு வெறி வந்துடுச்சி சரி பாத்துருவோம்னு பக்கத்துல இருக்குற டப்பா டி.வி.டிகடைக்கு போனேன். என் அறிவுக்கு எட்டிய வரைக்கும் ஆங்கிலத்துல தமிழ்ல டப் செய்யப்பட்ட படங்கள்தான் ஆங்கிலப்படங்கள்னு சொல்வேன். அதனால நம்ம விஷயத்துல ஆங்கிலப்படம்னாவே அனகோண்டா, ஜுராசிக்பார்க் இந்த லெவல்தான். கடைக்காரர்கிட்டயே கேட்டேன் எதுனா நல்லா ரசிச்சி பாக்கற மாதிரி படம் இருந்தா குடுங்கண்ணேன்னு அவரும் அருமையா இருக்கும்னு ஒரு படத்தை கிளி மாதிரி கவ்வி போட்டாரு. THREE BURIALSனு ஒரு படம். படம் பார்த்து முடிக்கற வரைக்கும் அந்த படத்தின் தலைப்பு கூட அர்த்தம் தெரியாது எனக்கு என்பதுதான் உண்மை.

Photobucket - Video and Image Hosting


வழக்கம்போல அமெரிக்காவில நடக்கற கதைதான். வறுமையின் கோரப்பிடியிலிருந்து தப்பிக்க மெக்ஸிகோ நாட்டிலிருந்து மலைகள், பாலைவனங்கள் வழியாக பயணம் செய்து அமெரிக்காவிற்கு ஊடுருவும் மெக்ஸிகோ மக்கள். அதை தடுக்கும் அதிகாரிகள் அதையும் மீறி வருபவர்கள் என இதுதான் கதை. ஆனால் வித்யாசமாக சொல்லி இருக்கிறார்கள். படத்தில் யார் கதாநாயகன் என்பது தெரியவில்லை. எனக்கு தெரிந்து படத்தின் இயக்குனரும் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் டாம்மி லீ ஜோன்ஸ் என்பவரைத்தான் சொல்வேன். ஒவ்வொரு நொடியும் கவனமாக பார்த்தால்தான் புரியும் அவ்வளவு நுணுக்கமான கதை. படத்தில் நிறைய ஸ்பானிஷ் வசனங்கள் வருகின்றன. எனக்கு ஸ்பானிஷ் தெரியாது ஆனால் இந்த அலைவரிசையில் (ரேடியோ) வரும் அனைத்து நிகழ்ச்சிகளையும் கேட்பேன். இனிமையான மொழி அது. என்று கண்தெரியாத ஒரு பெரியவர் சொல்வார். என்னை கவர்ந்த இரண்டாவது கதாபாத்திரம் அவருடையதுதான்.

Photobucket - Video and Image Hosting

மெல்கியுடெஸ் எஸ்ட்ரடா(Melquiades Estrada) என்னும் மெக்சிகோ இளைஞன் எல்லையை தாண்டி டெக்ஸாஸ் நகரத்திற்கு வருகிறான். நகரம் என்றால் ஒதுக்கு புறமான கிராமம், அங்கு பண்ணை வைத்திருக்கிறார் ஜோன்ஸ் அவரிடம் ஏதாவது வேலை கேட்கிறார். என்ன வேலை தெரியும் உனக்கு? எனக்கு மாடு மேய்க்க தெரியும் (கவ்பாய்) என்று சொல்கிறார். முதல் பார்வையிலேயே இருவருக்கும் சினேகம் ஏற்பட்டுவிடுகிறது. எஸ்ட்ரடாவை தன்னுடனே வைத்துக்கொள்கிறார் ஜோன்ஸ். எஸ்ட்ரடா தன் குடும்பம் பற்றியும், வீட்டை பற்றியும் விவரிக்கும் இடத்தில் நெகிழ்கிறார் ஜோன்ஸ். மிக்க மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் கதையில் குண்டு போடுகிறார் பெர்ரி பெப்பர் (Barry Pepper).

Photobucket - Video and Image Hosting

ஒருமுறை தூரத்தில் உள்ள பண்ணையை பார்க்கசெல்லும் எஸ்ட்ரடா ஒரு நரியை சுடுகிறார். தன்னைத்தான் சுடுகிறார்கள் என்று பெப்பர் எஸ்ட்ரடாவை சுட்டு விடுகிறார். அதை மறைத்தும் விடுகிறார். இதை கண்டுபிடித்து அந்த காவலதிகாரியான பெப்பரை பழி வாங்குகிறார் ஜோன்ஸ் இதுதான் கதை என்றாலும் அதை திறம்பட சொன்னதுதான் படத்தின் சிறப்பு. முன்பொரு முறை நான் இறந்தால் என்னை என் வீட்டில் அந்த இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் புதைக்கும்படி விருப்பம் தெரிவித்ததை நினைவில் கொண்டு அதை நிறைவேற்ற அதே போலிஸ் அதிகாரியை கடத்தி வந்து எஸ்ட்ரடாவை புதைத்த இடத்தில் இருந்து பிண்த்தை தோண்டி எடுத்து அதை அவனையே சுமக்க வைத்து குதிரையில் மெக்சிகோ புறப்படுகிறார் ஜோன்ஸ். இந்த பயணத்தில் ஜோன்ஸிடமிருந்து தப்பிக்க பெப்பர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிகின்றன. இந்த நீண்ட நெடும்பயணத்தில் பல அனுபவங்கள் நமக்கே ஏற்படுவது போல இருக்கிறது.

Photobucket - Video and Image Hosting

வழியில் பல இன்னல்களை இருவருமே சந்திகிறார்கள். மலைகள், பாலைவனங்கள் பல கடந்து பிணத்தை எடுத்து செல்வதென்பது சாதாரண விஷயமில்லை. எஸ்ட்ரடாவின் ஆசைக்கிணங்க அதை செய்கிறார். படத்தில் இவரின் நடிப்பி என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. மனுசன் கொஞ்சம் கூட அலட்டிக்கவே இல்லை இத்தனைக்கு இவரேதான் இயக்குனர். இந்த பயணத்தில் இவர்கள் சந்திக்கும் மெக்ஸிகோ மக்கள், கண் தெரியாத கிழவர், ஆற்றை கடக்கவும் விலாசத்தை கண்டுபிடிக்க உதவும் உள்ளூர்வாசியும்
நடிப்பில் மனதில் பதிகிறார்கள்.

பல இன்னல்களுக்கிடையில் எஸ்ட்ரடாவின் வீட்டை கண்டுபிடிக்கிறார்கள் யாருமே இல்லாத மலைக்காட்டில் சுற்றுச்சுவர்கள் மட்டுமே உள்ள இடம்தான் அந்த வீடு. இந்த இடத்தில் புதைக்கவா இத்தனை கஷ்டப்பட்டு பிணத்தை வைத்துக்கொண்டு வந்தார்கள் என்று நினைக்கவே முடியவில்லை. அத்தனை சிறப்பாக எடுத்திருக்கிறார்கள். பெப்பரின் கையாலேயே அந்த வீட்டை செப்பனிட வைத்து குழியும் பறித்து அதில் புதைக்கிறார்கள். எஸ்ட்ரடாவின் குடும்ப புகைப்படத்தை வைத்து மன்னிப்பு கேட்கச்சொல்லுகிறார் ஜோன்ஸ்.
தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பும் கேட்கிறார் பெப்பர்.

கேட்பதற்கு பைத்தியக்காரத்தனமாக இருந்தாலும் படத்தில் பார்க்கும்போது மிக அழகாக சொல்லியிருக்கிறார்கள்.

கடைசியில் கழுதையை தனக்கு எடுத்துக்கொண்டு குதிரையை பெப்பருக்கு அளித்து விட்டு அமெரிக்கா புறப்படுகிறார் ஜோன்ஸ். இத்துடன் கதை முடிகிறது. படத்தில் என்னதான் சொல்கிறார்கள் என்று பார்த்தால் மெக்சிகோ மலை வாழ் மக்களின் ஏழ்மை நிலையையும், எல்லைப்பாதுகாப்பு அதிகாரிகள் கண்மூடித்தனமாக அந்த மக்கள் மீது நடத்தும் தாக்குதல்கள் பற்றியும் தொட்டு சென்று உன்னதமான ஒரு நட்பின் பிரிவை சொல்லியிருக்கிறார்.

நான் படம் பார்த்து தெரிஞ்சிகிட்டது இவ்வளவுதான். படம் பார்த்தவங்க நான் எழுதினதுல குத்தங்குறை இருந்தா எடுத்து சொல்லுங்க. ஏன்னா எனக்கு புரிஞ்ச மாதிரிதான் எழுதி இருக்கிறேன்.

இதையெல்லாம் எழுதி முடிச்சி வாசிச்சா எனக்கே பொறுக்கல, என்னடா ஒரு நல்ல படத்தை இப்படி நாஸ்தி பண்ணி எழுதிட்டமோன்னு. என்ன செய்யிறது எல்லாம் அந்த கடைக்காரன சொல்லணும்!.

Thursday, November 30, 2006

கார்த்திகை, மார்கழி மாத நினைவுகள்!

இந்த கார்த்திகை மாசம்னாவே கொஞ்சம் அதிகமான உற்சாகம் இருக்கும் ஏன்னா
நம்ம ஊரு கூட ஊட்டி லெவலுக்கு மாறிடும். காலையில் வாசல் தெளிக்குற பொம்பளைங்கள்ல இருந்து ,பால்கேன் தூக்கிட்டு போற ஆம்பளைங்க வரைக்கும்
இந்த ரெண்டு மாசத்துக்கு வித்யாசமா ஸ்வெட்டர், மங்கி குல்லா எல்லாம்
போட்டுகிட்டு வித்தியாசமா இருப்பாங்க! பார்க்கவே படு வித்தியாசமா இருப்பாங்க
சில தாய்க்குலங்கள் காலையில குளிரும்னு புத்திசாலித்தனமா ராவிலயே சாணி
தெளிச்சிட்டு காலம்பற சொகமா தூங்குவாங்க. ரொம்ப குளிருதேன்னு பாதிநாளு
குளிக்கற பழக்கமே இல்ல நம்மளுக்கு அந்தளவுக்கு சோம்பேறி இதுல நாள்
முழுக்க வீட்டு வேலை செய்யிற தாய்க்குலங்கள எதுக்குடா வம்புக்கு
இழுக்குறன்னு கேக்காதிங்க நான் சொல்றது ஸ்கூல், காலேஜ் படிக்குற
புள்ளைங்கள.

சென்னை மாதிரி சிட்டில பொறந்து வளர்ந்திருந்தேன்னா இந்த மாசத்துல கார்த்திக்
பைன் ஆர்ட்ஸ், மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ்னு கச்சேரிக்கு போகலாம். வெத்தல
பொட்டில தாளம் போட்டு ரசிக்கிற கூட்டத்துக்கு நடுவில உக்காந்துகிட்டு நாமளும்
புரிஞ்சா மாதிரியே தாளம் போடலாம். என்னா செய்யிறது நம்ம ஊரு பட்டிக்காடா
போச்சு கோயில் ஸ்பீக்கர்ல போடற பாட்டுகள்தான் நம்மளுக்கு கச்சேரி, பஜனை
எல்லாமே.

பிடிக்குதோ பிடிக்கலையோ காலையில கார்த்திகை மாசத்து ஐய்யப்பன்
பாடல்களும்,மார்கழி மாசத்துல பெருமாள் கோயில்ல திருவிளையாடல் புகழ்
தருமியும் நம்ம தூக்கத்தை பதம் பாத்துருவாங்க. ஒருவிதத்துல அதுவும்
நல்லதுதான் காலையில அந்த குளிர்லயும் காலையில எழுத்திரிக்கறது கஷ்டமா
இருந்தாலும் உடம்புக்கு நல்லதாமே. பசங்க எல்லாம் சேர்ந்துகிட்டு எவன் வீட்டு வைக்கபோரை இழுத்துகிட்டு வந்து பத்த வெச்சி குளிர் காயுற சுகம் காசு
குடுத்தாலும் கிடைக்காது. நெருப்ப பத்த வெச்சி சுத்திரும் உக்காந்துகிட்டு கையி,
காலு, அப்புறம் திரும்பி உக்காந்துகிட்ட காயிறது அடடா என்னா சொகம். குறிப்பா ரோட்டோரத்துல பத்த வெச்சோம்னா கொஞ்ச நேரத்துலயே நிறைய ஆளுங்க
சேர்ந்துருவாங்க அதுனால ஜாக்கிரதையா ஒதுக்குபுறமான இடத்துக்கு போயிடணும்.

இந்த குளிர் காலத்துல ஒரு வசதி என்னன்னா தம்மடிக்காத ஆளுகளுக்கு கூட
வாய்லருந்து புகை வரும். இதை வயதுக்கு மீறிய வளர்ச்சியுடைய வாலிபர்கள
சரியா பயன்படுத்தி அங்கனயே ஒரு தம்ம பத்த வெச்சி அடிப்பாங்க. அங்கருந்து
அப்படியே கும்பலா பசங்க ஒண்ணு சேர்ந்து ஆத்து பக்கமா குளிக்க போவோம்.
ஆத்துல தண்ணி பயங்கர சில்லுன்னு இருக்கும். லேசா தொட்டு பாத்துட்டு
குளிக்கலாமா? வேணாமான்னு அஞ்சு பத்து நிமிஷம் யோசிக்க வெச்சிடும் அந்த
அளவுக்கு சில்தண்ணியா ஓடும் இப்படி யோசிச்சுட்டு இருக்கும்போதே எவனையாவது தண்ணிக்குள்ள தள்ளி விட்டுருவானுங்க. தண்ணி ஆழமா இருக்குற இடமா பார்த்து போய்தான் குளிக்கணும் ஏன்னா அந்த இடத்துக்குதான் யாருமே வரமாட்டாங்க
ஜாலியா இஷ்டம்போல குளிக்கலாம்.

இருக்கறதுலயே ஜாலியான மாசம் மார்கழி மாசம்தான். ஏன்னு கேக்கறிங்களா? இந்த
மாசத்துல பாதி நாள் விடுமுறையா போயிடும் புது வருஷம் வேற வரும்,
அடுத்ததா பொங்கலும் வரும் ஒரே ஜாலிதான். இந்த மாசத்துலதான் பெரிய பெரிய கோலமெல்லாம் போட்டு வாசல்ல காலே வைக்க முடியாதபடி பண்ணுவாங்க.
கோலத்துக்கு நடுவில ஒரு பூவும் வைப்பாங்க. இதுக்காகவே காலையில எழுந்திரிச்சி குமரிகள் கோலம் போடுற ஏரியாவா பார்த்து நம்ம (கி)ராமராஜன் பாட்டு பாடி
லொல்லு பண்றது.

வாசலிலே பூசணிப்பூ
வச்சுப்புட்டா...
வச்சுப்புட்டா...
நேசத்திலே எம்மனச
தச்சுப்புட்டா...
தச்சுப்புட்டா...

ஒரு முறை எதுக்கும்மா இந்த மாதிரி கோலத்துக்கு நடுவில பூ வைக்கற
பழக்கம்னு கேட்டு வெச்சேன். உனக்கு தேவையில்லாத கேள்விடா இதுன்னு
சொல்லிட்டாங்க (தெரிஞ்சவங்க சொல்லலாம்) வந்தது கோவம். இனிமேல்
யாருவீட்டுலயும் இந்த பூ வைக்க கூடாதுன்னு, குப்பமேடு, வயக்காடு,
கரும்புதோட்டம்னு எல்லா இடத்திலயும் போயி இருக்குற பூ, மொட்டு
எல்லாத்தையும் பிச்சி எறிஞ்சிட்டு வத்துட்டோம். இது தெரிஞ்சி எங்க தெரு
தாய்க்குலங்கள் எங்க நாலு பேரு மேல நடவடிக்கை எடுத்தது தனிக்கதை.

பொதுவா மார்கழி மாசத்துல கோயில் எல்லாமே பிசியா இருக்கும். நம்ம ஊரு
சின்ன ஊரா போயிட்டதால சில பஜனைப்பாடல்கள ஒலிபெருக்கில போட்டுட்டு
பூசாரி தூங்க போயிடுவாரு ஊருமக்கள்ஸ் எல்லாம் காலையிலே முழிச்சிக்கிட்டும்ன்ற
நல்ல எண்ணம்தான். ஒரு காலத்தில திருவிளையாடல் படத்துல வரும் வசனங்கள் எல்லாமே அத்துப்படி ஏன்னா பெருமாள் கோயில் பூசாரிக்கு அந்த படம் ஒண்ணுதான் பக்திப்படமா போயிடுச்சி. ஒரு கதை வசனம் கேசட்டை வச்சே ஊரை எழுப்பி
விடறதுல கில்லாடி அவரு. முக்கியமா சிவாஜிக்கும் தருமிக்கும் நடக்குற அந்த
கேள்வி கேட்டு பதில் சொல்ற இடத்துல காதை கூர்மையா வெச்சிக்கிட்டு பசங்க நாங்க எல்லாம் கேப்போம். அப்படியே அந்த வசனத்தை உல்டா பண்ணி வகுப்பறையில
காமெடி பண்ணுவோம்.

இந்த கார்த்திகை மாசத்துல அரைகுறையா நடக்குற ஒரு நல்ல விஷயம் என்னன்னு
கேட்டீங்கன்னா மாலை போடுறதுதான். ஊருல இருக்குற பாதி அயோக்கியனுங்க
இந்த மாலை போட்டுருக்குற நாட்களில் மட்டும் கொஞ்சம் அடக்கி வாசிப்பாங்க.
சிலர் மாலையும் போட்டுகிட்டு எல்லா வேலையும் செய்வாங்க, செய்யறதையும்
செஞ்சிட்டு மைக்ல " அறிந்தும் அறியாமலும்" னு ஒரு பாட்டு பாடி பாவத்தை
தொடச்சி போடற ஆளுங்கள நிறைய பேரை பாத்திருக்கேன். ஒரு மண்டலம் மாலை போடணும்னு ஒரு விதி இருந்தாலும் கோயிலுக்கு போகறதுக்கு முந்தி ஒரு
வாரத்துல நானும் மாலை போட்டேன்னு போடறது ஒரு விளம்பரமாவே
ஆகிப்போனது எனக்கெல்லாம் வருத்தமே. ஏன்னா மாலை போட ஆரம்பிச்ச புதுசுல எங்கப்பாரு கூட நாப்பது நாள் விரதமிருந்துதான் மலைக்கு போவாரு.

"ஏஞ்சாமி மாலைய கழட்டற மாதிரி யோசனை எதுவும் இல்லையா?" ன்னு போன
வருசம் எங்கய்யன பாத்து ஒருத்தன் கேள்வியே கேட்டுபுட்டான். எங்க ஊருப்பக்கம் பள்ளிக்கூட பசங்க மாலை போடறதுல ஒரு போட்டியே இருக்கும் ஏன்னா அந்த ஒரு மாசத்துக்கு வாத்தியார் கூட மாணவனை பவ்யமா சாமின்னுதான் கூப்பிடணும். அதுவுமில்லாம வீட்டுப்பாடம், தேர்வுல கம்மி மார்க், ஓவர்டைம் மாதிரி ஸ்கூல்
டியூஷன் இந்த மாதிரி சில பல இம்சைகள் அந்த தற்காலிக சாமிகளுக்கு இல்லை.
கொஞ்சம் முயற்சி பண்ணி ரிஸ்க் எடுத்தோம்னா மதியம் சீக்கிரமே வீட்டுக்கு
போயிடலாம். இத்தனை சலுகைகள எடுத்தாலும் மலைக்கு போயிட்டு திரும்பினதும் "ஆசாமி"யா ஆகிடறதால சேர்த்து வெச்சி வாத்தியாருங்க குடுக்குற ஆப்புகள
தாங்கிக்குற சக்தி இருக்கணும்.

இப்பவே கொஞ்சம் ஓவரா சுத்திட்டனோ, சரி பாகம் ரெண்டுன்னு அடுத்த பதிவில போட்டுறலாம்

கட்டக்கடேசியா ஒண்ணே ஒண்ணு.

செல்லமே படத்தில ஒரு காமெடி சீன். விவேக் மற்றும் விஷால் டீம் கிரிஷ்
கர்னாட் வீட்டுல ரெய்டு போவாங்க போயி கதவை தட்டுவாங்க. வேலைக்கார
ஆள் கதவை தொறந்து பதில் சொல்வாரு.

வே.கா: அய்யா பூஜையில இருக்கார்

விவேக்: இது மார்கழி மாசம், அய்யா பஜனைல இருந்தாலும் பாத்துட்டுதான் போவோம்.

Wednesday, November 22, 2006

ஹுர்ர்ர்ர்ர் ஹ்ர்ர்ர்ர்ர்ர்

குமரவேலு கொஞ்சம் எந்திரிப்பா!

ஒரு பத்து நிமிஷம் கேப்பு விட்டியன்னா நாங்க கண்ண அசந்துடுவோம். அப்பால நீ எப்டி வேணா விட்டுக்க.

இதெல்லாம் அவரு காதுல விழாதுங்க செந்தில் சார். கொஞ்சம் உலுக்கினாப்புல எழுப்புங்க அப்போதான் எந்திரிப்பாரு.

தினம் தினம் இவனோட பெரிய ரோதனையா போச்சே.

இவங்கூட மாரடிக்கணும்னு எழுதி வெச்சிருக்கு போல. என்னத்த செய்யிறது. பத்து மாசமா ராவுல தூக்கம் வராம கஷ்டபடுறது எனக்குதான் தெரியும். நான் வேல செய்யிற கம்பெனிலதான் இவனும் வேல செய்யிறான். ஆனா இவனுக்கு மட்டும் எங்கருந்து இந்த அளவுக்கு
சவுண்டா தூக்கம் வருதுன்னு தெரியல.

படார்னு கதவ தொறந்துகிட்டு விஜயகாந்து மாதிரி வீங்கி போன மொகத்தோட ஒருத்தர் வந்து சோபாவில உக்காந்திருக்காரு.

கண்ணுல பாதி தூக்கம் அப்படியே இருக்குது, விட்டா "ஓ" ன்னு அழுதுடுவாரு போலருக்கு.

நமக்கும் தூக்கம் வரல. கொஞ்சம் கிண்டித்தான் பாப்போமே.

என்னங்க ஆச்சு?

அட அத ஏன் கேக்குறிங்க சார்! பக்கத்து ப்ளாட்டுகாரனெல்லாம் ராவில என்னயா இந்த சத்தம் வருதுன்னு திட்டிட்டு போறான். அவனுக்கே அந்த மாதிரி தொந்தரவா இருக்குதுன்னா பக்கத்து கட்டில்ல இருக்குற எனக்கு எப்படி இருக்கும்?

கொஞ்சம் டிஸ்டர்பாதான் இருக்கும். கடுமையா வேல செஞ்சா இந்த மாதிரி வர்றது சகஜந்தான விட்டுத்தள்ளுங்க சார்.

ப்ரிட்டிஷ்காரனுக்கு வேல செய்ய தெரியாது ஆனா வேலைய எப்படி அடுத்தவங்கிட்டருந்து வாங்கணும்னு தெளிவா தெரிஞ்சவன் அவன் ஒருத்தந்தான் இந்த உலகத்தில. அந்த மாதிரி கம்பெனில வேல செய்யிறோம். ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரிதான் வேல. ஞாயமா பாத்தா
நானும் தூங்கணுமா இல்லயா? கொஞ்சங்கூட கூச்ச நாச்சமே இல்லாம இப்படி பண்ணா கடுப்பா ஆகுமா ஆகாதா?

அவர பாத்தாலும் பாவமாதாங்க இருக்கு, என்ன தெரிஞ்சேவா விடறாரு?

இப்படிதாங்க பாவம் பார்த்து மாட்டிகிட்டு முழிக்கிறேன்.

அவரு மேல எனக்கு ஒரு நல்ல அபிப்ராயம் இருக்கு படிக்கிற உங்களுக்கு இந்த சமயத்துல சொன்னாதான் கரெக்டா இருக்கும்.

நானும் அவங்களும் ஒரே ப்ளாட்டுலதான் தங்கி இருக்கோம் ஒரு ப்ரிட்டிஷ் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனில வேலை செய்றாங்க. தூங்கினாதான் அவரு சவுண்டு பார்ட்டி முழுச்சிட்டிருந்தார்னா
சாந்தமான பார்ட்டி. தரையே அதிராத மாதிரி ஒரு நடை.

முகத்தை பாத்திங்கன்னா "அடப்பாவிகளா இந்த பச்ச புள்ள மேலயா இந்த பழிய சுமத்தறிங்க. இந்த பாவம் உங்கள சும்மா விடாதுடான்னு சொல்ல வெக்கிற அப்பாவி முகம்.

கிச்சன்ல பாத்திரம் வெளக்கும்போது கூட பாத்திரத்துக்கு வலிக்குமேன்னு பதவிசா தேய்க்குற பகுமானம்.

வெள்ளிக்கிழமைல துணிய தொவச்சி, காய வெச்சி, இஸ்திரி போட்டு பொறுப்பா வெச்சிப்பாரு.

ஆக்க பொறுத்தவன் ஆறவும் பொறுக்கனும்னு சொல்ற பழமொழிக்கேத்த மாதிரி சாப்பாடு செஞ்சவுடனே அவரோட மத்த ரெண்டு ரூம் மேட்ஸ் மாதிரி இல்லாம. பொறுமையா
நிதானமா சாப்பிட்டு தட்ட கழுவி சத்தமில்லாம வெப்பாரு.

கொஞ்சம் நேரம் எதுனா பேசிட்டு சிட்னி ஷெல்டன்ல ஒரு மணி நேரம் மூழ்கி முத்தெடுப்பாரு. எனக்கும் ஒரு டவுட்டு குமுதம், ஆனந்தவிகடன் படிக்கறச்சயே ரெண்டு கொட்டாவி வந்து ஆள இழுத்துகிட்டு போயிடுது. இந்த ஆளு மெய்யாவே படிக்கிறானா இல்ல படிக்கிற மாதிரி
பந்தா காமிக்கிறானான்னு.

ச்சேச்சே அப்படில்லாம் இருக்காது. விகடன்ல படிச்ச மொக்க ஜோக்கையே நாலு பேருகிட்ட சொல்லி சிரிக்கலன்னா நமக்கு தூக்கம் வராது. இந்தாளு இங்கிலிசு புக்கெல்லாம் படிக்கிறாரு ஆனா அத பத்தி நம்மகிட்ட மூச்சே விடறதில்ல.

ஒருவேள நம்மள ஞான்சூன்யம்னு நினைச்சிருப்பாரோ? அப்படியேதான் இருக்கட்டும். கேக்காம இருக்கற வரைக்கும் நல்லதுடா சாமி.

இப்படிப்பட்ட அனேக அருமையான விஷயங்கள் உள்ள ஒரு ஆள் தூங்கும்போது கன்னா பின்னா ன்னு விடற குறட்டை சத்தத்தால அவரோட இமேஜே டேமேஜ் ஆகிப் போச்சி. இவர்தான் அந்த குறட்டைக்கு சொந்தக்காரர்னு எனக்கு தெரியாமலே இருந்திருக்கலாம்.

இன்னும் ரெண்டு மாசத்துல ஊருக்கு போறார். வரும்போது மரியாதையா ஆபரேஷன் செஞ்சிகிட்டு வாய்யான்னு சொல்லி வெச்சிருக்கேன். அதுவரைக்கும் இதோ இந்த "பஞ்சு"தான் துணை சொல்லிட்டு ரெண்டு "இஞ்ச்"க்கு ரெண்டு காதுல இருந்தும் "பஞ்சு" எடுத்து போட்டாரு. இதையும் தாண்டி வருதேன்னு தாங்க எனக்கு கடுங்கோவமா இருக்கு அப்படின்னார்.

இப்படியே நாம் பேசிகிட்டு இருந்தோம்னா வேலைக்காகாது. போயி அவரை கொஞ்சம் "கேப்பு" விடச்சொல்லிட்டு தூங்கற வழிய பாருங்க சார்.

ஒரு நிமிஷம் செந்தில் சார்....

நான் தூங்கும்போது எதுனா கொறட்ட விடறேனா சார்?

"லைட்டா"

என்னாதிது வடிவேலு மாதிரி சொல்லிட்டு போறாருன்னு ஒரே கவலையா போச்சு எனக்கு. இத லைட்டா இருக்கும்போதே கட் பண்ணிறனும். இல்லைனா நம்மள வாட்ச் பண்ணி வேற
யாராச்சும் ஒரு பதிவ போட்டு இதே மாதிரி கலாய்ச்சிடுவாங்க.

விக்கி பசங்களா... ம்கூம் விக்கி பெரியவங்களா!!

எல்லாமே பெரிய பெரிய "தல"ங்க பேரு மட்டும் பசங்கன்னு
வெச்சிகிட்டாங்க.

இப்ப நமக்கு இதுவா முக்கியம். கொறட்டைய தடுப்பது எப்படி?
மூக்கையும், வாயையும் பொத்திகிட்டா வராதுன்னு யாரும் சொல்லிறாதீங்க.

நிஜமாவே கேக்குறேன். இதனால பாதிக்கப்பட்டவன் என்பதாலயும், யாரும் என்னால பாதிக்கப்படக்கூடாதுன்னு ஒரு அக்கறையிலயும் கேட்கிறேன்.

Friday, November 10, 2006

குன்று முட்டிய குருவி - வாலிப வயசு - 4

இந்த பதிவு எங்க ஊரு போலி டாக்டருங்கள பத்தி.

தலைப்ப பார்த்துட்டு எல்லாரும் வரணும்னோ ஒரு விளம்பரமோ கிடையாதுங்க. உண்மையிலயே இந்த மாதிரி சம்பவம் நடந்ததுங்க அதுவுமில்லாம கிராமங்கள் எல்லாத்திலயும் ஒரு எம்.பி.பி.எஸ் டாக்டர் இருந்தாலும் ரெண்டு மூணு கம்பவுண்டர் டாக்டருங்க இருக்கத்தான் செய்யுறாங்க. மக்களும் அங்க போக வரத்தான் செய்யுறாங்க. அப்படி வேற வழியே இல்லாம நாங்க ஒரு போலி டாக்டர்கிட்ட போயி வைத்தியம் பாத்துகிட்டது ஒரு மறக்க முடியாத சம்பவம்.

பொதுவா இந்த மாதிரி டாக்டருங்களுக்கு வருமானமே ஒரிஜினல் டாக்டருங்ககிட்ட போக வழியில்லாம சீப்பா இங்க முடிச்சிக்கலாம்னு. இந்த மாதிரி டாக்டர்கள் முக்கால்வாசிப்பேரு ஹோமியோபதி என்று சொல்லப்படுகிற டாக்டருங்க. இவங்கள்லயும் ஒரிஜினல், போலிகள் இருக்காங்க. அதை ஈசியா கண்டுபிடிக்கலாம். எப்படின்னு கேக்கறிங்களா? போலி டாக்டர் கைதுன்னு செய்தி வந்தாலோ, போலி டாக்டர்கள தொடந்து கைது பண்ணிட்டு வராங்கன்னு டீவில செய்தி வந்தாவே போதும் இவங்க வெளில தொங்கிட்டு இருக்கற போர்டு, விளம்பர தட்டி எல்லாத்தையும் கமுக்கமா கழட்டி வீட்டுக்குள்ள வச்சிக்குவாங்க. கொஞ்ச நாள் அடக்க ஒடுக்கமா இருந்துட்டு சத்தம் ஓய்ஞ்ச பிறகு மறுபடியும் போர்டு போட்டு கல்லாவ தொறந்துடுவாங்க!

காதல் தோல்வி, கடன் தொல்லை, தீராத வியாதிக்காரங்க மருந்து குடிச்சிட்டாங்கன்னா அவங்கள இந்த மாதிரி டாக்டரு கிட்டதான் கூட்டிட்டு வருவாங்க. இவரும் என்ன மாயம் செய்வாரோ தெரியாது தொன்னூறு சதவீதம் உயிர் போகாதபடி பாத்து ஆள தேத்தி அனுப்புவாரு. இந்த டாக்டருக்கே டிமிக்கி குடுக்குற மாதிரி சில ஆளுங்க பூச்சி மருந்த ஒடச்சி வாயில ஊத்தாம காதுல ஊத்திக்கிற ஆளுங்க இருக்காங்க அந்த மாதிரி கேசுங்ககளுக்கு வேற வழியே இல்ல நேரா கபாலமோட்சம்தான் அவங்களுக்கு. எனக்கு இதுதான் புரிய மாட்டேங்குது காதல் தோல்வின்னாவே நேரா தற்கொலைதானா? அடுத்ததா ஒண்ணு தேடினா என்ன? இல்ல தேடாமலே விட்டாதான் என்ன?

அட! மேட்டர் வேற மாதிரி போயிகிட்டு இருக்கு!

பேக் டூ த பாயிண்ட்.

ஒரு நாள் ஆடிப் பதினெட்டுன்னு நினைக்கிறேன். ஒரு நாலஞ்சி வெட்டிப்பசங்க ஒண்ணு சேர்ந்துகிட்டு பக்கத்துல இருக்குற மலைக்கு ஜாலியா பைக்குல ஒரு ட்ரிப் போயிட்டு வரலாம்ணு ப்ளான் போட்டு கிளம்பியாச்சு.

வரும்போதுதான் பிரச்சினையே ஆரம்பிச்சுது. எங்க குரூப்புல ஒருத்தன் மட்டும் மிஸ்ஸிங். எங்க எங்கன்னு தேடினா அவரு "காய்ச்சற" இடத்துக்கே போயி "சர்பத்" சாப்பிட்டுட்டு வந்திருக்காரு. உனக்கு எப்படி தெரியும் இங்க காய்ச்சுறாங்கன்னு கேட்டேன்?

அங்க லேசா புகை வந்தது அதான் என்ன புகைன்னு பாக்கலாமின்னு போனேன். அப்படியே உப்பு இருக்கான்னு பாக்க சொன்னாங்க அதான் பாத்தேன்.

ஏண்டா நாய உப்பு ஒரப்பு பாக்கறதுக்கு அது என்ன கோழி குருமாவா?

இங்க ஏற்கனவே அனுபவம் இருக்கு இல்லன்னா எப்படி உனக்கு அந்த இடம் தெரியும்?

இல்லடா சும்மா போனேன் குடுத்தானுங்க டேஸ்ட்பாத்தேன் அவ்ளோதான். பின்னாடி உக்காரு போலாம்.

வேணாம்டா செல்லம் நீ போதையில இருக்கறதினால பாதையில ஓட்ட மாட்ட அதுவுமில்லாம இது சாதாரண ரோடு கிடையாது மலைப்பாதை. எத்தனை முறைசொன்னாலும் கேக்கல கவுரவக்கொறச்சலா போயிடும்னு அவரே ஓட்டினாரு. அவன நம்பி யாரும் பின்னாடி உக்காரலை.

நினைச்சா மாதிரியே ரெண்டாவது பெண்டுல "குன்று முட்டிய குருவி" மாதிரி விழுந்து கிடந்தாரு பாதைக்கு இந்த பக்கம் விழுந்ததால ஆளு இருக்கான் அந்த பக்கம் போயிருந்தா எலும்பு கூட கிடைச்சிருக்காது.முட்டி மட்டும் கொஞ்சமா கிழிஞ்சி போயிருந்தது. கொறஞ்சது நாலு தையலாவது போட்டாகணும். ஒரு கர்ச்சிப் போட்டு கட்டி பின்னாடி உக்கார வச்சோம்.

ஒழுங்கா சொன்ன பேச்ச கேட்டுருந்தா இப்படி ஆகியிருக்காது சரி தொலஞ்சு போகுது விடுன்னு மலைய விட்டு கீழ இறங்குனா ஒரு ஆஸ்பத்திரி கூட இல்ல. கடைசில ஒரே ஒரு ஆஸ்பத்திரி திறந்து இருந்தது தினம் தினம் நாங்க நக்கல் அடிக்குற அந்த கம்பவுண்டர்தான் டாக்டர் வேஷத்துல இருந்தாரு.

ஆபத்துக்கு பாவமில்ல இவருகிட்டயே தையல்போட்டுகிட்டு போலாமின்னு போனோம். மாட்டுக்கு கோணி ஊசில குத்தறமாதிரி நாலு தையல் போட்டாரு.

சார் டேப்ளட் எதுவும் தேவையில்லயா? செப்டிக் ஆச்சின்னா பிரச்சினைதானன்னு அறிவாளித்தனமா ஒருத்தன் கேட்க அவரும் கீழ இருக்கற மாதிரி ப்ரிஸ்கிரிப்ஷன் பேப்பருல எழுதினாரு.

"புண்ணுக்கு மருந்து கொடுத்து அனுப்பவும்"

இதப்போயி மருந்து கடையில கொடுத்தேன்னா மானமே போயிடும்!

நீங்களே சொல்லுங்க அவர் டாக்டர்தானா?

Sunday, November 05, 2006

என் நண்பனுடன் ஒரு நாள்.

சென்ற வார விடுமறை நாளில் என் பள்ளித்தோழனின்
அறைக்கு சென்றிருந்தேன். பத்தாம் வகுப்போடு
நின்றுவிட்டதுடன் விவசாயத்தை கவனித்துக்
கொண்டிருந்தவனை இங்கே பார்சல் பண்ணிட்டாங்க.
கொத்தனாராக வேலை பார்க்கிறான். மிக நீண்ட
நாட்களாக அழைத்துக் கொண்டே இருந்தான்.இங்க
வாடா மாப்ள,என் ரூமுக்கு எல்லாம் வரமாட்டியான்னு.
அதனால ஒரு விடுமுறை நாளை அவனுக்காக ஒதுக்கி
அவங்கூடவே இருந்தேன். அது ஒரு கேம்ப் நூத்துக்கனக்கான
நபர்கள் ஒரு வளாகத்திற்கும் தங்கியிருந்தார்கள் ஒரே
கம்பெனியை சேர்ந்தவர்கள். வெவ்வேறு மாநிலத்தவர்கள்,
நாட்டவர்கள் வித்யாசமான நாளாகவும் அதே சமயம்
அவர்களின் கொடுமையான வாழ்க்கையையும் பார்த்தேன்.

நகரத்திற்கு வெளியே அமைந்திருக்கும் அவர்களின்
விடுதி. பேரமைதியாக இருந்தது ரொம்ப நேரம்
நானும் அவனும் பேசிக்கொண்டு இருந்தோம்.
அவன் பேச நான் கேட்க நேரம் போனதே தெரியலை.
எல்லாம் பேசி முடிக்கையில் எனக்குள்ளே ஒரு சோகம்.
அங்க நான் பார்த்தது அவனுடன் பேசியது எல்லாம்
சேர்ந்து கவிதையா எழுதுன்னு ஒருத்தன் உள்ள இருந்து
இம்சை பண்ணதினால உங்களுக்கு இந்த அவஸ்தைய
படிக்கணும்னு எழுதி இருக்கு. எழுதி முடிச்சிட்டு
என்ன தலைப்பு வைக்கலாம்ணு யோசிச்சேன் ஒண்ணும்
புரியல. அதனால வாசிக்கிற நீங்களே இதுக்கு
ஒரு நல்ல தலைப்பா சொல்லுங்க.

பாலையும் கடலாகும் (கண்ணீரால்)

கனவுகளுடனே வந்தோம் அதே
கனவுகளுடனே செல்கிறோம்
திரும்ப எங்களை இங்கனுப்ப ஒரு
காரணம் காத்திருப்பதை அறியாமல்.

தங்கையின் திருமணத்தை முடித்து
தனக்கான வழிதேடும்போது அம்மாவின்
மரணம் மறுபடியும் இங்கனுப்பும்.

வீட்டுத் திருமணங்களை வீடியோவில் மட்டுமே
பார்க்கும் பாக்கியமும், முதல் குழந்தையின்
அழுகையை தந்திக்கம்பியில் மட்டுமே கேட்கும்
அவலமும் எங்கள் வரம்.

பின்னிரவு விசும்பல்கள் பெருமூச்சோடு மடியும்
பின்வரும் காலங்கள் சுகம் மேலிட்டதாய் அமையும்
என்ற சுயதேற்றுதலை தினமும் சந்திக்கிறேன்.

என் போன்றவர்களின் கண்களில் எதை தேடுகிறேன்?
எதை காணுகின்றேன்?

முற்பருவ இளைஞன் முகத்தில் பருக்களோடு
காதலியை பிரிந்த வலியும்.

இரண்டு மாத விடுமுறைத்தழுவலின் மிச்சமும்
முறுவலின் சொச்சமுமாக அதிகாலை நித்திரையில்
தலையணையையணைக்கும் பக்கத்து
படுக்கைக்காரர்.

வாரயிறுதியில் நகரத்தில் "சுகங்கண்டு" திரும்பும்
இலவசமாக அறிவுரைகளை தெளித்த
அறைப்பெரியவரின் கண்களில் தெரியும் காமம்.

வெள்ளிக்கிழமை காலையில் கோயில் வாசலில்
சகவலிகளின் கண்களில்...

இன்றைய வேலையிறுதியின் கோடியில் முதுகறுக்கும்
வெய்யிலில்....

துணி வெளுக்கும்போது உடையில் தெரியும்
உப்புக் கோடுகளில்...

கழிவரைக்கு காத்திருக்கும்போது அவசரத்தில் பிடறி
மயிர் சிலிர்க்கையில்

எங்கும்....

எங்கும்...

எங்கும்...



என்றாலும்.

விரும்பி வந்தவர்களில்லையெனினும்
வெறுத்து ஒதுங்கிவிடவுமில்லை.

நாங்களும் வாழ்கிறோம்.

Tuesday, October 31, 2006

கனவு இல்லம்! - வாலிப வயசு - 3

ஏண்டா உன்னால ஒரு பிரயோஜனம் உண்டா
இந்த வீட்டுக்கு?

எனக்கு தண்டசெலவு வைக்கறதுன்னு கங்கனம்
கட்டிகிட்டு திரியற!

போன மாசம் இப்படிதான் ஏதோ குருவி சுடணும்
காக்கா சுடணுன்னுட்டு துப்பாக்கி ஆர்டர் செஞ்சு
வாங்கினே. ஆனா அந்த துப்பாக்கிய வச்சி ஒரு
ஈ, எறும்ப கூட கொல்ல முடியாது போலருக்கு.
அந்த தண்டமான துப்பாக்கிக்கு 250 ரூவா அழுதேன்.

இப்ப என்னடான்னா உன் பேருக்கு எங்கருந்தோ
புதிய எற்பாடு, பிரசங்க அழைப்பு, கர்த்தர் அழைக்கிறார்னு
லட்டர் வருது. உம்மனசுல என்னதான் நெனச்சிகிட்டு
இருக்க?

இனிமே நீ விஜயகாந்து, ரஜினிகாந்து படம் பாத்துட்டு
அதுல வர்ற துப்பாக்கி வேணும் தோட்டா வேணும்னு
சொன்னே. இன்னும் ரெண்டு மாடு வாங்கி அத
மேய்க்கற வேலை குடுத்துருவேன் ஜாக்கிரதை.

நல்லா சொல்லுங்க அவனுக்கு.

சாயந்திரம் ஸ்கூல விட்டு வந்ததும் கரும்பு காட்டு
பக்கமா போயி இந்த மாட்டுக்கு புல்லு அறுத்துகிட்டு
வாடான்னு சொன்னா என்ன கேக்கறான் தெரியுமா?

என்ன கேக்கறான்?

வயசுப்பையன போயி புல்லு அறுத்துகிட்டு வா,
வைக்க புடுங்கிட்டு வான்னு சொல்ற, நாலு பேரு
என்னய பாத்தா என்ன நினைப்பான்னு என்னயே
எதிகேள்வி கேக்கறான்ங்க?

சரியான நேரத்தில இந்த மாதிரி கொஞ்சம் திரிய
கொளுத்தி போடலன்னா தூக்கமே வராது இந்த
அம்மாவுக்கு.

ஏண்டா புல்லு கட்டு அறுத்துகிட்டு வர்றதுல என்னடா
ஒங் கவுரவம் போயிட போகுது?

குபேரன் வூட்டு புள்ள கூட சாயந்திரம் ஸ்கூல விட்டு
வந்ததும் வீட்டு வேலை கொஞ்சம் செய்யறான்.

அங்க ஏன் போறிங்க?..

அந்த அயிலு நாய்க்கரு மொவன் இருக்கானே அவன்
சாயந்திரம் ஸ்கூல விட்டு வந்ததும் நாலு மாட்டுக்கு
தேவையான புல்லை அவனே அறுத்துகிட்டு வரானாம்.

ஏம்மா அவங்க அப்பாவுக்கு எட்டு ஏக்கரா நெலம்
இருக்கு சின்ன வயசில இருந்தே வயலுக்கு போறான்
வரான் அதுனால அவனுக்கு ஈசியா இருக்குது. எனக்கு
கரும்பு காட்டுகுள்ள போனாவே உடம்பெல்லாம்
சொண புடுங்குது, அரிக்குதேன்னு சொறிஞ்சா தடிப்பு
தடிப்பா ஆயிடுது.

இதெல்லாம் நல்லா வெவரமா பேசு!

என்னய என்ன வேணா செய்ய சொல்லு ஆனா இந்த
மாட்ட புடிச்சி கட்டு, புல்லு புடிங்கி போடு, தவிடு
தண்ணி காமி இதெல்லாம் சொல்லாத.

இனிமேல் இந்த வீட்டுல உம்பேருக்கு லட்டரே
வரக்கூடாது.

சரி.

மேல சொன்னதெல்லாம் என்னன்னே புரியலயா? அது
ஒரு வியாதிங்க, என்ன வியாதின்னு கேக்கறிங்களா?

பள்ளிக்கூட பொஸ்தகத்தை தவிர எல்லா பொஸ்தகமும்
படிக்கற வியாதிங்க. மர்மநாவல், பாக்கெட்நாவல்,
மாயாவி காமிக்ஸ், அதில வர்ற துப்பாக்கி. இதெல்லாம்
பாத்துட்டு அது மாதிரியே ஆகணும்னு ஒரு வெறி.
ஏதேச்சையா ஒரு காமிகஸ் புக் படிக்கும்போது
உங்களுக்கு வேட்டையாட விருப்பமா?, தாக்க வரும்
விலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள இந்த மாதிரி
ஒரு விளம்பரம். இந்த விலாசத்துக்கு ஒரு கார்டு
போட்டிங்கன்னா உங்க வீடு தேடி துப்பாக்கியும்
சுடறதுக்கு எலவசமாக ஆறு தோட்டாவும் அனுப்பி
வைப்போம், மேலும் உங்களுக்கு தோட்டாக்கள்
வேணும்னா ஆர்டர் செய்யலாம். உங்களுக்கு
திருப்தியில்லன்னா துப்பாக்கிய திருப்பி அனுப்பலாம்
பணமும் திருப்பி கொடுத்துருவோம்னு ஒரு வரி.

ஆஹா சூப்பரு. துப்பாக்கிய வாங்கிடவேண்டியதுதான்னு
நாலணாவுக்கு போஸ்ட்கார்டு வாங்கி அந்த விலாசத்துக்கு
எனக்கு அர்ஜெண்டா துப்பாக்கி வேணும்னு எழுதி போட்டு
காத்திருந்தேன்.

ஒரு வாரம் கழிச்சி.

வழக்கமா எனக்கு வரும் கடிதங்கள் சும்மா இந்த பேனா
நண்பர்கள் மாதிரி ஒரு போஸ்கார்டோட முடிஞ்சுரும்.
இந்த முறை கொஞ்சம் பெரிய பார்சல் மரப்பெட்டில
சுத்தி வந்திருக்கு. இதெயெல்லாம் சின்னப்பையன்
என்கிட்ட கொடுக்க கூடாதுன்னு போஸ்ட்மேன் அண்ணன்
நேரா எங்கப்பாகிட்டயே கொண்டு போயி கொடுத்து
250 ரூவா பணமும் கொடுங்கன்னு கேட்டுருக்காரு.

போனா போகுதுன்னு இவனுக்கு அப்பப்ப காமிக்ஸுக்கு
அஞ்சு பத்துன்னு அழுவுணா இப்படி ஒரேயடியா வேட்டு
வச்சிட்டானேன்னு பயங்கர கோவத்தோட வீட்டுக்கு
வந்து காட்டு கத்து கத்துறாரு.

அரை நாள் பட்டினி கிடந்து அக்காவும் அண்ணனும்
ஆதரவுக்கரம் நீட்டினதுல ஒருவழியா 250 அம்பது ரூவாய
தேத்தி மறுநாள் போஸ்ட் ஆபிசுக்கு ஓடிப்போயி பார்சல
வாங்கி வந்து பிரிச்சேன். உள்ளுக்கு பாத்தா ஒரு கருப்பு
கலர்ல ரிவால்வரு.

தீவாளி துப்பாக்கியில சுட்டா சத்தமாவது வரும்.
இத பாக்கறதுக்கு நிஜதுப்பாக்கி மாதிரியே இருந்தாலும்
அத வச்சிகிட்டு ஒண்ணுமே பண்ணமுடியாதுன்னு அடுத்த
அரை மணி நேரத்தில தெரிஞ்சி போச்சி.

அடுத்து!

சுவிஷேஷ கூட்டத்திற்கு அழைப்புன்னு ஒரு விளம்பரம்
அதுக்கு ஒரு கடுதாசி போட்டேன். அவங்க என்னடான்னா
திருச்சி சோமரசம்பேட்டைலருந்து வாரம் ஒரு புஸ்தகம்
அனுப்பிகிட்டே இருந்தாங்க. கிறிஸ்துவ பிரச்சார
புத்தகங்கள் வீட்டுக்கு வர ஆரம்பிச்ச உடனே வீட்டுல
பீதியாயிட்டாங்க. எதுனா பொண்ணு பின்னாடி சுத்திகிட்டு
மதம் மாறிடுவானோன்னு. நமக்கு எங்க அந்த அளவுக்கு
திறமை இருக்கு. தெரியாம எழுதி போட்டுட்டேன்.
இனிமேல அந்த மாதிரி கடுதாசியெல்லாம் எழுதி போட
மாட்டேன்னு சொன்ன அப்புறம்தான் வீட்டுக்குள்ளவே
விட்டாங்க.

இந்த மாதிரி வேலையெல்லாம் வெவரமா செஞ்ச நான்
எங்கப்பா கிட்ட நல்ல பேர் எடுக்க ஒரு நல்ல சான்ஸ்
எடுக்கணும்னு நெனச்சி ஆர்வக்கோளாருல நான்
ஒண்ணு செய்யபோக அது ஒண்ணு ஆகிப்போச்சி.
என்னய நம்பி 5 ரூவா காசு (ஸ்டாம்புக்கு) குடுத்து
குங்குமம் கனவு இல்லம் கூப்பனையும் குடுத்து
போஸ்ட் பண்ணிட்டு வரசொன்னாரு.

நானும் குடுத்த காச வெட்டிசெலவு செய்யாம ஸ்டாம்ப்
வாங்கி அட்ரஸ் எழுதி அனுப்பிட்டேன்.

மறுநாள் ஸ்கூல விட்டு வந்தா பயங்கர திட்டு!
இதுவரைக்கும் அப்படி ஒரு வசைய வாங்கினதே இல்ல.

அத ஏன் கேக்கறிங்க!

From அட்ரசும், To அட்ரசும் மாத்தி போட்டேன் அதான்
மறுநாளே லட்டர் திரும்பி வந்திடுச்சி. ஏதோ குங்குமம்
ஆபிசுல இருந்ததுதான் லட்டர் வந்திடுச்சோன்னு ஆர்வமா
பாத்துருக்காங்க நான் எழுதினதே திரும்பி வந்திடுச்சுல்ல
அந்த கோவத்தை அன்னிக்கு காட்டு காட்டுன்னு
காட்டிட்டாங்க!

Friday, October 20, 2006

நரகாசுரன் - நினைவுநாள் - தீபாவளி

வலைப்பதிவாளர்களுக்கும் எனது வலைப்பதிவினை
தொடர்ந்து படிக்கும்(?) வாசகர்களுக்கும் வலைப்பதிவு
உலகினை சுவராசியமாகவும், கலவர பூமியாகவும்
மாற்றும் வல்லமை படைத்த அன்பு அனானிகளுக்கும்
தம்பியின் இனிமையான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

தீபாவளி வாழ்த்துக்கள் எல்லாம் ஊர்ல உள்ள
மக்களுக்குத்தான். என்னய மாதிரி பொழைக்க
வந்த ஊர்ல இருக்கற மக்களுக்கு தீபாவளி
என்பது மற்றுமோர் நாளே.

Image Hosted by ImageShack.us
பயப்படுறதுக்கு ஒண்ணும் இல்ல, நம்ம மூஞ்சிதான்

ஒரு தீக்குச்சி கூட கொளுத்த முடியாத தீபாவளி
ஒரு தீபாவளியா? ஏதோ நம்மளால முடிஞ்சது
ஒரு ரூவாய்க்கு லைட்டர் ஒண்ணு வாங்கி
கேஸ் தீர்ந்து போகற வரைக்கும் கொளுத்திகிட்டே
தீபாவளி கொண்டாட வேண்டியதுதான்.

கொஞ்சமா கொசுவர்த்தி சுத்திக்கட்டுமா?

தீபாவளியன்னிக்கு பெரிய இம்சையே அன்னிக்கு
எண்ணெய் தேய்ச்சு குளிக்கணும்னு வீட்ல கட்டாய
"படுத்து"வாங்க. கண்ணுல, காதுல மூக்குல
எண்ணெய வழிய விட்டு முழி பிதுங்கி போயி
உக்காந்திருக்கணும். அடுத்து 'புலி மார்க்' சீயக்காய்
தூள ஒரு கிண்ணியில போட்டு அதில கொஞ்சம்
சுடுகஞ்சிய ஊத்தி குழப்பி அடிச்சி வச்சிருப்பாங்க.
குளிக்கும்போது தலைல அந்த கொழம்ப போட்டு
அரக்கி எடுப்பாங்க அந்த நேரத்தில கண்ணு எரியும்
பாருங்க ஏண்டா இந்த தீபாவளி வந்து தொலைக்குதுன்னு
தோணும்.

இந்த குளியல் படலும் முடிஞ்சிருச்சுன்னா ஒரு பெரிய
தலவலி முடிஞ்சிருச்சின்னு அர்த்தம். அடுத்த தலவலி
சாப்பாடு. வித விதமா செஞ்சிருப்பாங்க. உப்பு ஒரப்பு
பாக்கறதிலருந்து சட்டிய கவுத்து புல் கட்டு அடிச்சுட்டு
பார்த்தா எந்திரிச்சு நிக்கவே முடியாது.

நம்ம ஊருப்பக்கம் எல்லாம் இந்த குயில்மார்க், மயில்
மார்க், தவுசண்ட் வாலா, மும்பை வாலா, தாடி வாலா
இதையெல்லாம் வாங்கி காச கரியாக்க மாட்டானுங்க.
நூறு ரூபாய்க்கு நாட்டு வெடினு கேட்டா அஞ்சு கட்டு
தருவானுங்க. ஒரு கட்டுக்கு அம்பது. ஒண்ணு பத்த
வெச்சி வெடிச்சோம்னா பக்கத்து ஊருக்கே கேக்கும்
நல்லா கேக்கறவனுக்கும் காது கொஞ்ச நேரம்
கொய்ங்ங்தான்.

மச்சான் பத்த வச்சிட்டேன் உங்க ஊர்ல தெளிவா
சத்தம் கேக்குதான்னு பாரு, இல்லன்னா வெடிய
ரிட்டர்ன் பண்ணிருவோம்னு போன்ல லந்து பண்ற
பார்ட்டிகளும் இருக்கு.

தீவாலியன்னி என்ன ஒரே சந்தோஷம்னா சின்ன
வயசில ஒண்ணு மண்ணா படிச்ச பிகருங்க
பெரிய படிப்புக்கு வெளியூர், வெளி மாநிலம்
போயிருக்கும். அன்னிக்கு மட்டும் மத்தாப்பு
கொளுத்திக்கிட்டு வெளிய வந்து எங்கள மாதிரி
பசங்களுக்கு திவ்ய தரிசனம் தருவாங்க.

இப்ப அதுவும் பீஸ் போச்சு.

நண்பர்களே தீபாவளிய நல்லா கொண்டாடுங்க.

Wednesday, October 18, 2006

வெட்டிப்பயலின் பார்வைக்கு!!!

கொஞ்ச நேரத்திக்கு முன்ன வெட்டிப்பயலின்
கவிதை, கவுத, கவுஜ ன்ற பதிவில கவிதைகள்னா
ஒண்ணுமே புரியலன்னு பதிவிட்டிருந்தாரு.
கவிதைகளோடு அதுக்கு தங்கச்சியான ஹைக்கூவையும்
சேத்துக்கணும். ஏன்னா அதுவும் எனக்கு புரியல. முதலில்
ஹைக்கூ ஹைக்கூன்னு சொல்றாங்களே அதுக்கு
அர்த்தம் என்னான்னு எல்லாம் எனக்கு
தெரியாது. ஆனா அந்த மாதிரி கவிதைகள கொஞ்சமே
பார்த்திருக்கறதினால, ஒரு முயற்சியா நாலு
வார்த்தைகள ஒன்றன்கீழ் ஒன்றாக போட்டு
அதை ஹைக்கூன்னு நானே பேரு வச்சிக்கிட்டேன்.
இந்த கவிதை எழுத இலக்கணம் தேவையா
இல்லையா, ஒரு கவிதை எந்த மாதிரி இருக்கணும்
அதெல்லாம் தெரியாமலே இவ்ளோ நாளா
கவிதைன்ற பேர்ல உங்களையெல்லாம் சிரமப்பட
வச்சிட்டேன்.

பெரியார்

தெரியாமல் கால்
பட்டுவிட்டதெனத்
தொட்டுத் துதித்தான்
பெரியார் புத்தகத்தை

வாத்தியார்

செலவினம் கற்றுத்
தந்த கணக்கு வாத்தி
மாத இறுதிகளில்
வட்டிக்கடை வாசலில்

விடுதலை

சித்திரை பிறந்தால்
ஏழரையிலிருந்து விடுதலை
என்றது கூண்டுக்குள்
சிறையிருந்த சோதிடனின்
கிளி.

என் வீட்டு நிலா

என் வீட்டுத் தண்ணீர்
தொட்டியில் தினமும்
கலைக்கிறேன் பாட்டியின்
வடை சுடும் படலத்தை.

விற்பனைக்கு

பத்துப் பாத்திரம்
தேய்ப்பவளின் எட்டுப்
பாத்திரங்கள் "சேட்"
வசம் தயாராக
விற்பனைக்கு.

இதெல்லாம் எந்த வகையில சேத்தின்னு
சொல்லுங்க.

Tuesday, October 17, 2006

தெருக்கூத்து - ஒரு அற்புதமான கலை

கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் பிறந்து
வளர்ந்தவர்கள் கண்டிப்பாக தெருக்கூத்து
பார்த்திருப்பீர்கள். திருவிழா காலங்களில்
இடம்பெறும் இந்த கலை இப்போது அழிந்துவரும்
கலையாக இருக்கிறது. சினிமா, நாளிதழ்
போன்ற பெரிய ஊடகங்கள் வரும் முன்பு
மிகப்பெரிய இடத்தை பிடித்திருந்த இந்த கலை
இப்போது எங்கே என்பது தேட வேண்டியுள்ளது
வேதனையான உண்மை.எனது சித்தப்பா, மாமா
தாத்தாக்கள் வாழ்ந்து வரும் ஊரில் திருவிழா
நடைபெறும் காலங்களில் மூத்த மாப்பிள்ளையான
எனது அப்பாவிற்கு பத்திரிக்கைகள் அனுப்புவது
வழக்கம். மஞ்சள் நிறத்தில் பத்திரிக்கை மிகப்பெரிய
அளவில் இருக்கும். சம்பிராதாயமாக நேரில்
வந்து திருவிழாவிற்கு அழைப்பர். பெரும்பாலும்
அந்த விழாக்களுக்கு என்னையும் எனது,அம்மாவோ
அண்ணனோ, தம்பியோ, உடன் அனுப்புவார்கள்.

நான் முதலில் அந்த பத்திரிக்கையில் பார்ப்பது
நிகழ்ச்சி நிரலைத்தான். என்றைக்கு தெருக்கூத்து
நடைபெறுகிறது என்பதையே முதலில் பார்ப்பேன்
அதற்கேற்ற மாதிரி பயணத்தை வைத்து கொள்ள
அப்பாவிடம் நச்சரிப்பேன். ஊர் ஊராக போய்
இந்த தெருக்கூத்து நிகழ்ச்சியை மட்டுமே பார்ப்பதில்
அலாதி பிரியம் எனக்கு. இதில் இன்னொரு வசதி
என்னவென்றால் நெருங்கிய உறவினர்களை சந்திக்கும்
வாய்ப்பு. அத்தை மகள், மகன், தாத்தா, பாட்டி
போன்றவர்களுடன் சில நாள் இருக்கலாம். பள்ளிக்கூட
இம்சையிலிருந்து ரெண்டு நாள் தப்பிக்கலாம். இப்படி
நிறைய இருக்கிறது.

இப்போது நடக்கும் திருவிழாக்களில் சினிமாவின்
இரண்டாம்தர ஆட்டக்காரி, ஆட்டக்காரர்களை
வைத்து இசைநிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாசத்தை
அரங்கேற்றுகிறார்கள். ஆர்கெஸ்ட்ராவாம் இதுக்கு பேரு.
எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

எனக்கு தெருக்கூத்தை பிடித்த சம்பவம் கொஞ்சம்
சுவாரசியமானது. அப்போது எங்கள் ஊர் பக்கத்தில்
ஒரு தெருக்கூத்து கலைஞர் இருந்தார். எனது சிறிய
வயதில் இவரை தினமும் பார்ப்பேன். எங்கள் வீட்டு
வழியாகதான் தினமும் ஊருக்குள் பொருள் வாங்கவோ
விற்கவோ போக வர வழி. அந்த கலைஞர்
போகும்போதும் வரும்போதும் நான்கைந்து சிறுவர்கள்
அவர் பின்னாலே நக்கலடித்துக்கொண்டு போவோம்.
இதையெல்லாம் கொஞ்சம் கூட சட்டை செய்ய மாட்டார்
அவர். கல் விடுவது, அவரின் நீளமான கூந்தலை பிடிச்சு
இழுத்து விட்டு ஓடுவது. இப்படி செய்வோம். அவரும்
வெறுப்பா ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு போயிடுவார்.
வித்யாசமா ஒரு ஆள் தெருக்குள்ள நுழைஞ்சாவே
நாய்கள் குரைக்குமே அந்த மாதிரிதான் அவர்
தெருக்குள்ள நடந்து போகும்போது. அப்போதெல்லாம்
அவரை பத்தி ஒண்ணுமே தெரியாது. பின்னாளில்
அவரால்தான் எனக்கு தெருக்கூத்தின் மீது காதலே
வந்தது. நீளமான கூந்தல், உதட்டோரமாக எப்போதும்
வழியும் வெற்றிலை குதப்பல், நெற்றியில் குங்குமம்,
நீளமான வெள்ளை வண்ண ஜிப்பா, அதுக்கு நேர் எதிரா
கீழ லுங்கி கட்டியிருப்பார். சுலபத்தில் ஆணா, பெண்ணா
என்று கண்டேபிடிக்க முடியாதபடி இருக்கும் அவரின்
தோற்றம். இதுவே கொலவாரிகள் அவரை கிண்டலடிக்க
முதற்காரனம்.

ஏதேச்சையாக அவர் நடித்த தெருக்கூத்தினை காணும்
வாய்ப்பு கிட்ட அப்படியே உட்கார்ந்துவிட்டேன். ச்சே
இவ்வளவு அற்புதமான மனிதரை இவ்வளவு நாளா
ரொம்ப காயப்படுத்திட்டோமேன்னு நினைச்சேன். என்ன
ஒரு கம்பீரமான குரல், அரை மணி நேர பாடலெல்லாம்
அட்டகாசமாக பாடிக்கொண்டிருந்தார். இத்தனைக்கும்
மைக்கு கூட இல்லை. விடிய விடிய நடக்கும் இந்த
தெருக்கூத்து. ஆண்களே பெண்வேடம் போட்டார்கள்
அதையும் உற்று நோக்கினால்தான் தெரியும். இதயே
வேடிக்கை பார்க்க பெருசுங்க கூட்டம் பெரிய அலப்பறை
பண்ணிகிட்டு இருந்தாங்க. பலவேடங்களில் கலக்கினார்
அவர். இதே மாதிரிதான் சினிமாவில நடிக்கிறாங்க
அவங்களுக்கு கிடைக்கிற புகழ் இவங்களுக்கு ஏன்
கிடைக்கல என்பது போன்ற சந்தேகங்கள் வந்தது.
கள் குடிப்பது, கூத்தியாள் வச்சிக்கிறது, திருடறது,
போன்ற தவறுகளை மிக நையாண்டியாக எடுத்து
சொல்வார்கள். புலிகேசி படத்தில் கப்ஸி, அக்காமாலா
போன்றவைகளை கலாய்த்தது போல. சில இடங்களில்
"இரட்டை அர்த்த" வசனங்கள் இருந்தாலும்
முகத்தை சுளிக்க வைக்காது. பின்னாளில் அவரை
கண்டால் நக்கல் எதுவும் செய்வதில்லை. ஒரு
புன்னகையோடு நின்று விடுவேன்.

Image Hosted by ImageShack.us

இவ்வளவு சுவாரசியமான ஒரு கலையை இப்போது
கிராமங்களில் கூட காண்பது அரிதாக இருக்கிறது.
இப்போது. இந்த சமயத்தில தற்போது ஒளிநாடா
வெளியாகி வெற்றிகரமாக விற்பனையாகிக்
கொண்டிருக்கும் வெயில் படத்தில பட்டி பேச்சியாத்தா
என்ற பாடல் தெருக்கூத்தினை ஞாபகப்படுத்துவது போல
அமைந்திருந்தது. அதை கேட்ட மாத்திரத்தில் பழைய
நினைவுகள் வந்ததை தவிர்க்க முடியவில்லை.
வழக்கமான கிராமியப்பாடல்களுக்கு மாணிக்க
விநாயகத்தயே நாடாமல் அந்த கிராமிய கலைஞர்களை
கொண்டே பாட வைத்திருப்பதாலேயே பெரிய
அளவுக்கு வெற்றி பெற காரணம் என்பது என் கருத்து.
இந்த பாடலாலேயே படத்தையும் பார்க்க வேண்டும்
என்று ஆவலாக இருக்கிறது.

நீங்களும் கேளுங்க இங்கே

ஷங்கர் தயாரிப்பில் அடுத்தடுத்து இரண்டு
வெற்றிப்படங்கள் காதல், புலிகேசி மூன்றாவதாக
வெயில். இந்த படமும் வெற்றி பெற வாழ்த்துவோம்.

Monday, October 16, 2006

செத்து செத்து விளையாடலாமா?

Image Hosted by ImageShack.us

மேல இருக்கற நம்ம கைப்புள்ளயின் வலது
கரத்தை எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்னு
நினைக்கிறேன். சமீப காலமா பிரபலமாகிட்டு
வரும் நகைச்சுவை நடிகர்.

"என் புருசன் குழந்தை மாதிரி" படத்தில
வடிவேலுவ ஓட ஒட வெரட்டி, கொலவெறியோட
ஆவேசமா தொரத்தி காதை லேசா தொட்டு பச்ச
புள்ள மாதிரி விளையாட்டு விளையாடுவாரே
அவர்தான் இந்த முத்துக்காளை. சங்கத்தில
இருக்கற ஆளுங்களுக்கு இவர தெரிஞ்சிருக்கும்.

சில சமயத்தில சரக்கை விட ஊருகாய் நல்லா
இருக்கறதில்லையா அதே மாதிரி இவர் நடிச்ச
ராமகிருஷ்ணா என்ற படத்தில சார்லி இருந்தும்
இவரது நடிப்பையே எல்லாரும் ரசித்தார்கள்.
நான் உட்பட. தமிழ் நகைச்சுவை காட்சிகளில்
எனக்கு தெரிந்து மோனோ ஆக்டிங் என்பதை
புகுத்தியவர் இவர் என்றே நினக்கிறேன். இல்லாத
ஒன்றை இருப்பதாக காட்டி பிறரை ஏமாற்றுவதை
ராமகிருஷ்ணா படத்தில் மிக அருமையா காமெடி
பண்ணியிருப்பாரு.

Image Hosted by ImageShack.us

ஒரு பைட்டராக திரையுலகில் அறிமுகமாகி இன்று
நகைச்சுவையில் குறிப்பிடும்படியான இடத்தை
பிடித்திருக்கிறார்.

இப்ப என்னாத்துக்கு இந்த இழு இழுக்கற நீ?
மேட்டர் இன்னானு சொல்றா வென்று! என்று
கேட்பதற்கு முன்னால் நானே சொல்றேன்.
நேத்திக்கு வழக்கம்போல வலைப்பக்கத்தில
உலாத்திக்கிட்டு இருந்தேன். இட்லிவடை பக்கத்தில
கூகிள் தேடுதல் பத்தி எழுதி இருந்தார்.
இப்படியெல்லாம் வசதி இருக்குதான்னு பாத்தேன்.
நாம எக்கு தப்பா கேட்டா என்ன பதில்
சொல்லும்னு பாத்தேன். அப்டி என்னப்பா
கேட்டுபுட்டே நீயின்னு நாதஸ் கோஷ்டில வர
ஆளுங்க செந்தில கேட்ட மாதிரி கேளுங்க..

நான் எப்ப சாகப்போறேன்? இதத்தான் கேட்டேன்.
இன்னும் பதிமூணு வருசந்தான் என்னோட ஆயுசாம்
அதுக்குள்ள பூட்ட கேசுதானாம். அந்த வலைதளத்தில்
சொல்லியிருந்தாங்க.முத்துக்காளை ஞாபகம் வந்துடுச்சி
இந்த தளத்தை பார்த்தவுடன். செத்து செத்து
விளையாடலாமா? பாத்ததும் சிரிப்பு சிரிப்பா
வந்திடுச்சி அப்படியே ஒரு யோசனையும் வந்திச்சு
இதெல்லாம் உண்மையா இருந்தா எப்படி இருக்கும்
என்று ஒரு கற்பனை.

வருடாவருடம் பிறந்தநாள் கொண்டாடறவங்க
இறந்தநாளும் தெரிஞ்சா அதையும் கொண்டாடுவாங்களா?
இல்ல துக்கப்பட்டு அன்னிக்கே ஒப்பாரி வைக்க
ஆரம்பிச்சுடுவாங்களா?. அன்னிக்கு கேக் வெட்டி
கொண்டாடுவாங்களா? புதுத்துணி உடுத்துவாங்களா?
கோயிலுக்கு போயி கடவுள்கிட்ட பெட்டிஷன்
குடுப்பாங்களா?

Friday, October 13, 2006

சனநாயகம் பொய், பணநாயகமே மெய்

Image Hosted by ImageShack.us

1300 கிராம்ல ஒரு கிராம் அளவுக்காச்சும் மனிதம்
என்ற உணர்வு இருந்தால் இதுபோல நடந்துகொள்ள
தோணுமா?

Image Hosted by ImageShack.us

"ஓட்டுபொட்டில ஓட்டு போடுங்கன்னா தெருவில போடறாங்க"

Image Hosted by ImageShack.us

"74 சதவீதம் ஓட்டுபதிவு எல்லாம் அதிகம்தான்"

Image Hosted by ImageShack.us

கொசுறு
"நடக்கும் என்பார் நடக்காது "
நடக்காதென்பார் நடந்துவிடும்"

இந்த தேர்தலும் நிரூபித்துவிட்டது. பணநாயகமே
சனநாயகமென்பதை. யார் ஆட்சிக்கு வந்தாலும்
அரசியல்வாதிகள் எங்களின் குணம் இதுவே.
இதுக்காக நீங்க ஓட்டு போடாம இருந்து விட
வேண்டாம்.

Wednesday, October 04, 2006

லஹே ரஹோ முன்னாபாய் - என்ன சொல்கிறார்?

Image Hosted by ImageShack.us

விமர்சனம் எழுதற அளவுக்கு நமக்கு விஷயஞானம்
கிடையாது ஏன்னா நான் பார்த்த முதல் இந்தி படம்
என்பதால்தான். முன்னாபாய் M.B.B.S படத்தின் பெயரில்
பாதியை மட்டுமே லஹேரஹோ வுக்காக எடுத்து
இருக்கிறார்கள். மற்றபடி இதற்கும் முந்தைய பாகத்திற்கும்
துளியும் சம்பந்தமில்லை. படம் முழுக்க காந்திய
சிந்தனைகளை தெளித்திருக்கிறார்கள்.

Image Hosted by ImageShack.us

காமெடி படங்களில் ஹீரோவுக்கு துணையாக ஒரு
கேரக்டர் இருந்தே ஆகவேண்டும் என்ற விதியை
இந்த படம் ஒத்திருந்தாலும் கொஞ்சம் வித்யாசம்
இருப்பதை உணர முடிகிறது. சஞ்சய்தத் ஒரு ரவுடி
ஆள் அசாத்திய உயரத்துடனும் வடநாட்டு லாரி
டிரைவரை நினைவுபடுத்துகிறார். ஆரம்ப காட்சியே
தூள். ரேடியோவுடன் பேசிக்கொண்டிருக்கிறார்.
கதாநாயகி ஒரு ரேடியோ ஜாக்கி அந்த குரலை
கேட்டே மயங்கி விடுகிறார் சஞ்சய். அவளை
எப்படியாவது பார்க்கவேண்டும் என்ற ஆவலில்
இருக்கிறார். இந்த படத்தில் குறிப்பிடவேண்டிய
கதாபாத்திரங்கள் காந்தியாக நடித்திருக்கும்
பெரியவரும் சஞ்சயின் தம்பியாக நடித்திருக்கும்
அர்ஷத் வார்ஸியும் மனுசனுக்கு காமெடி
சூப்பரா வருது.

Image Hosted by ImageShack.us

குட்மாஆஆஆர்னிங் மும்பை என்று குயில் கூவி
மும்பையை எழுப்புகிறது அந்த குயில்தான் வித்யா
பாலன். சேச்சிக்கு உண்டான எந்த அடையாளமும்
இல்லாமல் இருக்கிறார் அதனாலே ரசிக்க முடிகிறது.
காந்தி பற்றிய கேள்விகளுக்கு சரியான பதில்
சொல்பவர்கள் வித்யா பாலனுடன் ரேடியோவில்
பேசலாம் இதுதான் போட்டி இதற்காக நான்கு
பேராசிரியர்களை கடத்தி வந்து விடுகிறார் சஞ்சய்
பத்து பேர் சஞ்சய்யுடன் இருந்து ரேடியோவுக்கு
போன் போட்ட வண்ணம் இருக்காங்க யாருக்கு
முதலில் லைன் கிடைத்தாலும் சஞ்சயிடம் கொடுத்து
பேராசிரியர்களின் உதவியுடன் கேள்விகளுக்கு
சரியான விடை சொல்கிறார்.

Image Hosted by ImageShack.us

காந்தியை பற்றி லெக்சர் கொடுக்க வேண்டி
மூன்று நாள் கண்விழித்து அவரை பற்றி படிக்கிறார்.
சஞ்சய் கண்ணுக்கு மட்டும் காட்சி தருகிறார் காந்தி.
ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் நேயர்களின் பிரச்சினை
களுக்கு நேரடியாக காந்தியின் உதவியுடன் தீர்வு
சொல்கிறார் அந்த காட்சிகள் மிக உணர்ச்சிகரமாக
இருக்கீறது. இவன் கலந்து கொண்ட நிகழ்ச்சி
ரேட்டிங்கில் உயர வித்யா பாலனுக்கு கல்தா
கொடுத்துவிட்டு சஞ்சயை நிகழ்ச்சி நடந்த வைக்கிறது
ரேடியோ நிர்வாகம்.

Image Hosted by ImageShack.us

இதற்கு நடுவில் கதாநாயகியின் வீடு சஞ்சய்க்கு தெரியாமல்
காலி செய்யப்படுகிறது. வில்லன் தந்திரமாக எல்லாரையும்
வெளியூருக்கு அனுப்பிவிட்டு வீட்டை காலி செய்ய பழி
சஞ்சய் மீது வருகிறது. இவையெல்லாவற்றையும் சரி
செய்து காதலியுடன் இணைகிறாரா என்பதுதான் கதை.
இதை மிக சுவாரசியமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

Image Hosted by ImageShack.us

மன்னிப்பு தமிழ்ல வேணா கேப்டனுக்கு பிடிக்காத
வார்த்தையா இருக்கலாம் ஆனால் காந்திக்கு
மிகப்பிடித்த வார்த்தை. தவறு செய்து விட்டால்
தயங்காமல் மன்னிப்பு கேட்டு விடு என்கிறார்.
ஒரு சீனில் சஞ்சய் அர்ஷத்தை கை நீட்டி அடித்து
விட அதற்காக காந்தி மன்னிப்பு கேட்க சொல்லும்
காட்சியில் தியேட்டரில் இருந்த அத்தனை முகங்களிலும்
கண்ணீர் வழிந்தது. பக்கத்தில இருந்த சேட்டு வீட்டு
மாமி குலுங்கி குலுங்கி அழுவுது. நமக்கு அரை குறையா
புரிஞ்சாலும் சோகத்தை மறைக்க முடியவில்லை.

Image Hosted by ImageShack.us

சஞ்சயின் கண்களுக்கு மட்டுமே தெரியும் காந்தி.
உன் கண்ணுக்கு தெரிகிறாரா என்று அர்ஷத்தை பார்த்து
கேட்கிறார் சஞ்சய். ஓ தெரியராறே, ஹாய் பப்பு என்று
கை கொடுக்க போவது காமெடியின் உச்சம்.

அடுக்கு மாடி குடியிருப்பில் மேல் தளத்தில் வசிப்பவர்
தினமும் என் வீட்டு வாசலிஃல் பான் மென்று துப்புகிறார்
என்ன செய்வது என்று ஒரு நேயர் கேட்கிறார். அதற்கு
காந்தி தினமும் அவர் செல்லும்போது சிரிப்புடன் ஒரு
வணக்கத்தை வைத்துவிட்டு அவர் துப்பிவிட்டு போன
கறையை துடையுங்கள். இதே போலவே அவரும்
செய்கிறார் மூன்றாவது நாளில் எச்சில் துப்புபவர்
திருந்தி விடுவார். அகிம்சையின் வலிமையை அந்த
இடத்தில் உணர முடிகிறது.

நாட்டில் அனைவரும் மறந்து போன ஒரு விஷயத்தை
நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
அதுதான் அகிம்சை.

மும்பை குண்டுவெடிப்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஒரு
நடிகர் என்பது மட்டும் நான் கேள்விப்படாதிருந்தால்
படத்தை இன்னும் ரசித்திருப்பேன்.

இந்த பதிவு விமர்சன பதிவு என்று நினைத்து வந்தவர்களிடம்
மாப்பு கேட்டுக்கொள்கிறேன்.

Sunday, October 01, 2006

ஒரு மூன்றெழுத்து வார்த்தை.

நண்பர்களே ஒரு மூன்றெழுத்து வார்த்தை
உலகம் முழுவது சுற்றி வருகிறது. அந்த
வார்த்தைகளை பற்றி நான் அறிந்ததை
சொல்லுகிறேன். நிச்சயமாக இது ஒரு
கவிதையாக இருக்காது அப்படி ஜல்லியடிக்கவும்
விரும்பவில்லை . உணர்வுகள் என்று சொல்லலாம்.
என் பார்வையை இங்கு பதிகிறேன். எப்படி
இருக்கிறது என்று சொல்லுங்கள்.

காதல் வயப்பட்டவனின் தனிமை நீளும் என்று
சொல்வார்கள் என் தனிமையை சோதிக்கவே காடு
நோக்கி சென்றேன். அவள் ஒற்றைப்பார்வையின் நீளம்
தெரிந்தது. அது என்னை கூட்டிச்சென்ற தூரமும்
தெரிந்தது, கூடவே அவள் என்னுடன் பயணிப்பாளா?
என்ற சந்தேகமும்.

Image Hosted by ImageShack.us

என்னுள்ளே தோன்றும் எண்ணங்களை அசை போடவும்
அதனை இனிமையானதாக மாற்றவும் இந்த தனிமை
பேருதவி செய்யும் என்ற எண்ணம்.

ஏன் இந்த தற்காலிக சந்தோஷத்திற்காக மனம்
எங்குகிறதென்பது இன்றுவரை விளங்கவில்லை.
படைப்பின் ரகசியமா?
அவள் பார்வையின் சூட்சுமமா?

தூறல் விட்டிருந்த இளமாலை நேரம். ஒரு
பார்வையற்றவனும் ரசிக்க உகந்த தருணம்.
இதற்கு முன் இந்த பரவச நிலையை நான்
எய்ததில்லை. எல்லாம் அந்த மூன்றெழுத்து
செய்யும் மாயம்.

அதோ அந்த இலையில் இருந்து விழும் கடைசி
சொட்டு மழை நீரை இதற்கு முன் பலமுறை
கண்டிருந்தாலும் இன்று ரசிப்பதுபோல முன்பு
ரசித்ததில்லை.

அரவமில்லாத காட்டில் உதட்டோரமாக இளநகையுடன்
சுற்றும் என்னை விநோதமாக நோக்கும் ஆடு மேய்க்கும்
இடைச்சிறுவர்கள்.

என் மேல் சேற்றை வாரியிறைத்துச் செல்லும் பேருந்தை
புன்னகயுடன் பார்க்கிறேன்.

மோன நிலையில் நான் இல்லாதிருந்தால் பேருந்தின்
கண்ணாடியை பதம் பார்த்திருக்கும் எனது கைகள்.

வியப்பாகவே உள்ளது இந்த மாற்றங்கள்.

எனக்கு அருகிலே சில மேகங்கள் கடக்கிறது
பல ஊர்கள் பல நாடுகள் பார்த்திருப்பாய்
இப்போது எங்கு உன் பயணம்?
என்னையும் கூட்டிப்போயேன் உன்னுடன்!

அம்மையிடமும், அப்பையிடமும், உடன் பிறந்தவர்களுடனும்,
நண்பர்களுடனும் உணர முடியா ஒரு நேசம் உன்னுடன்.

அதற்கு பெயர் என்ன?

உலகப் பொதுமொழியான காதல் என்று சொல்ல
விருப்பமில்லை. பூர்வஜென்ம தொடர்பு என்று
மழுப்பவில்லை.

காதல் என்று எதனை சொல்வது?

காவியங்களில் வருவதையா? படங்களில் சொல்வதையா?
எதன் மீதும் நம்பிக்கையில்லை எனக்கு. அது சொல்லும்
காதல்களிலும் பற்றில்லையெனக்கு.

நான் அடைந்த மாற்றங்களை நீயும் உணர்ந்தாலொழிய
இதற்கு விடையில்லை.

அதை நீ உணரும்முன் உன்னிடம் சொல்லப்
போவதுமில்லை. உணர்ந்த பின்னே சொல்ல
அவசியமிருக்காது.

ஒரே புள்ளியில் நாம்.

காதல் என்று எதனை சொல்லுவது?

திரும்ப இந்த கேள்வி என்னை துளைக்காது.

உணர்ந்தவன் காதல் இதுதான் என்று சொல்லமாட்டான்.

காதல் என்பது எதுவுமில்லை.

உணர்வுகளே வாழ்க்கை.

Thursday, September 28, 2006

Enything for நமீதா!!!

நமீதா கூட ஒரு தபா சோறு திங்க போட்டி
வச்சாங்களாம் ஒரு மீஜிக் சேனல்காரங்க.
அதாவது இந்த போட்டியில செயிக்கிறவங்க நமீதா
கூட உக்காந்து ஒரு நைட்டு புல்லா சோறு
திங்கலாமாம். இங்கிலிபீசுல இதுக்கு பேரு கூட
என்னவோ டேட்டிங்னு சொல்றாங்க. இந்த
போட்டிக்கு எத்தன பேர் கலந்துகிட்டு
இருப்பாங்கன்னு நினைக்கிறீங்க?

ஆறாயிரம் பேர் கலந்துகிட்டாங்களாம்!

Image Hosted by ImageShack.us

நம்ம ஊர்லதான் போலீசுக்கு ஆள் எடுக்கணும்னாலும்
குமிஞ்சிடுவானுங்க, சினிமாக்கு ஆள் எடுக்கணும்னாலும்
குமிஞ்சிடுவானுங்க. என்ன ஏதுன்னே தெரியாது ஆனா
வேடிக்க பாக்க கும்பலா நிப்பானுங்க. இந்த மாதிரி
சேவைய தொடர்ந்து செய்ய போறோம்னு S.S மீஜிக்
காரங்க சொல்றாங்க.

வெளங்கிரும்டோய்!

சரி போட்டில என்ன நடந்ததுன்னு பாக்கலாம்.

ஆறாயிரம் பேர வடிகட்டி ஆறாக்கினாங்க. அந்த
ஆறு பேர்ல சோறு பொங்க போற ஒரு அதிர்ஷ்டசாலிய
தேர்ந்தெடுக்கறதில சேனல்காரங்களே குழம்பிட்டதினால
அந்த பொறுப்ப நமீதா அம்மையார்கிட்டயே விட்டுட்டாங்க!

அந்த ஆறு பேரையும் டான்ஸ் ஆட விட்டு வேடிக்க
பாத்தாங்க அம்மையார். அந்த துடிப்பான இளைஞர்களும்
அம்மையார்கூட எப்படியாச்சும் சோறு பொங்கிடணும்னு
போட்டி போட்டுகிட்டு ஓரொண்ணும் ஒண்ணு, இம்மாம்
பெரிய பஞ்சு மிட்டாய், வருவீயா வரமாட்டியா போன்ற
கருத்தான பாடல்களுக்கு (உ)டான்ஸ் ஆடினாங்க.

யாரை பிக்கிக்கறதுன்னு அம்மையாருக்கே டவுட்டு
வந்திடுச்சாம் அந்த அளவுக்கு கலக்கிட்டாங்களாம்
நம்ம எளசுங்க. சரி பொது அறிவு போட்டி வச்சி
தேர்ந்தெடுக்கலாம்ணு அம்மணிக்கு தோணுச்சாம்!

எங்க வீட்ல எத்தினி நாய் இருக்கு?

இந்த பொ(றி)து அறிவு அடில கலங்கிப்போய்
வெடை தெரியாம பெக்கபெக்கன்னு முழிச்சானுங்க.
அட இதுகூட தெரியாதா? நாலு நாய்குட்டி வளக்கறேன்னு
சொல்லி கெக்கப்பிக்கேன்னு சிரிச்சுதாம் நமீதாகுட்டி
(உன்னையும் சேத்து ஒரு பன்னிகுட்டி)

சரி என்கிட்ட யாரு ஐ லவ் யூ னு வித்யாசமா
சொல்றீங்களோ அவங்கதான் அதிர்ஷ்டசாலிங்கோன்னு
சொல்லிபுடுச்சி, ஆறு பேர்ல ஒருத்தல் அவ கைல
கால்ல உழுந்து ரோசாப்பூவா காமிச்சி கெலிச்சிட்டான்.

இதில ஜகா வாங்கின அஞ்சு பேருக்கும் காதில பயங்கர
புகையாம். அடப்பாவிங்களா!

அப்புறம் என்ன??

அந்த ஒருத்தன் நமீதா கூட சோறு மட்டும்
பொங்கினானாம் ஐந்து நட்சத்திர விடுதியில்.

நாட்டின் சுதந்திரதின கொடியேத்தணும்னா
குமிவானுங்களா இவனுங்க.

Monday, September 25, 2006

சமத்காரம்

சமத்காரம்னா என்னன்னு கேட்பவர்களுக்கு முன்னாடியே
அதற்கான பதிலை சொல்லிவிடுகிறேன். அதாவது
ஒருத்தரை புகழற மாதிரி புகழ்ந்து இகழ்வதுதான்
சமத்காரம் என்று சொல்வார்கள். வஞ்சப்புகழ்ச்சி
அணின்னு சொல்வாங்களே அப்படி கூட சொல்லலாம்.
உதாரணமா ஒரு சம்பவத்தை சொல்கிறேன்

தஞ்சை மாவட்டத்தில் ஒரு மடாதிபதி, புலவர்கள்
கூட்டத்தை கூட்டினார். மடாதிபதியே தலைமை
வகித்தார். எல்லாப் புலவர்களும் வந்துவிட்டார்கள்
"கடை மடை" என்ற ஊரிலிருந்து ஒரு புலவர்
கடைசியாக வந்தார். அவரை பார்த்த மடாதிபதி,
வாரும் "கடை கடை மடையரே" என்றார், அப்படி
என்றால் "கடைமடை" என்ற ஊரை சேர்ந்தவர்
என்றும் அர்த்தம், "கடைசியில் வந்த மடையன்"
என்றும் அர்த்தம்.

நம்ம ஊர்ல இதையே வேற மாதிரி சொல்வாங்க
"கடை பிகரா" இருந்தாலும் சட்டுன்னு கரெக்ட்
பண்ணிடுறாங்கப்பா அப்படின்னு.

உடனே புலவரும் பணிவோடு "வணக்கம்
மடத்தலைவரே!" என்று கூறிவிட்டு அமர்ந்தார்.

இது மாதிரியானா சொல்லாடல்களைத்தான்
"சமத்காரம்" என்று சொல்வார்கள்.

இதுபோல பேசுவது அண்ணாவுக்கு கைவந்த
கலை!

Image Hosted by ImageShack.us

கலைவாணர் என்.எஸ்.கே அவர்கள் ஒரு நாடத்தில்
நடித்துக் கொண்டிருந்தார்கள். அந்த சரித்திர
நாடகத்தில் வந்த சக்ரவர்த்தி, தமக்கு எந்தெந்த
ராஜாக்கள் கப்பம் கட்டினார்கள் என்று மந்திரியை
பார்த்து கேட்டார்.

"வங்க ராஜா தங்கம் கட்டினார், கலிங்க ராஜா
நவமணிகள் கட்டினார்" என்றெல்லாம் அந்த
ராஜா அடுக்கினார்.

உடனே சக்ரவர்த்தி "சோழ ராஜா என்ன
கட்டினார்? என்று கேட்டார்!

வேலைக்காரனாக நின்ற என்.எஸ்.கே., "வேஷ்டி!
வேஷ்டி!" என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

சமத்காரத்திற்க்கும் என்.எஸ்.கே சொன்னதற்கும்
சம்பந்தமில்லை சும்மா ஒரு நகைச்சுவைக்காக
சொல்கிறேன்.

சரி பதிவு கொஞ்சம் சுவாரசியமா இருக்கணுமே
அப்படீங்கறதினால கீழே ஒரு சமத்காரத்தினை
கொடுக்கிறேன் அதற்கான பதிலை பின்னூட்டத்தில்
தெரிவிக்கலாம்! உங்களுக்கு தெரிந்தவற்றையும்
நீங்கள் இணைக்கலாம்!.

"காக்காய் கறி சமைத்துக்
கருவாடுமென்று தின்பர் சைவர்"

Sunday, September 24, 2006

மாயக்கண்ணாடி

Image Hosted by ImageShack.us

சேரன்: இது எப்படி இருக்கு?

ரசிகர்கள் : கொஞ்சம் பயமாத்தான் இருக்கு! நீங்க
நீங்க ஒருத்தர்தான் வெட்டிபந்தா இல்லாம
படம் எடுத்துகிட்டு இருந்தீங்க இப்ப அதுவும்
இல்லையா...?

சேரன் : படம் வந்தபிறகு பார்த்து சொல்லுங்கண்ணே
இப்பவே இழுத்தா எப்படி!

ரசிகர்கள் : பாக்கத்தானே போறோம்!

உங்களுக்கு என்ன தோணுது நண்பர்களே?

படம் உதவி : கூகிள் மற்றும் www.nowrunning.com

Thursday, September 21, 2006

ரெண்டாவது ஆட்டம் - வாலிப வயசு!!! - 2

திஸ்கி

இந்த பதிவு கொஞ்சம் கவிச்சியாதான் இருக்கும்.
அதனால முன்னாடியே சொல்லிடறேன். பின்னாடி
யாரும் குத்தம் சொல்லக்கூடாது சொல்லிப்புட்டேன்.

பள்ளி தேர்வுகள் முடிந்தவுடன் நடந்த சம்பவம் இது.

அதான் பப்ளிக் எக்ஸாம் முடிஞ்சாச்சே அப்புறம்
ஏண்டா ரெண்டாவது ஆட்டம் சினிமாக்கு
வரமாட்டேனு சொல்றே?

அவ்ளோ தூரெமெல்லாம் ராத்திரில வெளில விட
மாட்டாங்கடா பாபு. வேணுமின்னா நம்ம ஊரு
கொட்டாயிக்கு போவோம்.

இங்க வெள்ளை படந்தாண்டா ஓடுது எந்நேரமும்
மூக்க சிந்திகிட்டு இருப்பானுங்க! அங்கிட்டு பேய்
படம் ஓடுதுடா பேரு கூட "வா அருகில் வா". சித்ரா
கூட வரன்னு சொல்லியிருக்காடா மச்சி!

அதான பாத்தேன், எலி ஏன் ஜீன்ஸ் போட்டுகிட்டு
குறுக்கும் நெடுக்கும் ஓடுதுன்னு! ஆனா ஒண்ணு
நீதான் போகையிலயும் வரையிலயும் சைக்கிள
மிதிக்கணும் சொல்லிட்டேன். காசு வச்சிருக்கியா?

அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் கெளம்புடா.

சரி சாப்பாடை முடிச்சுட்டு வீட்ல சொல்லிட்டு வரேன்
ரெடியா இரு. துரைசாமி கடையாண்ட வந்துரு

ம்ம்..

எத்தனை பில்டர் வாங்கின?

அரை பாக்கெட், போதுமா?

பத்தலன்னா கொட்டாயில வாங்கிக்கலாம்.

இவ்ளோ இருட்டா இருக்குதே பேய் படம் வேற
பாத்தபிறகு தனியா வீட்டுக்கு போயிடுவியா?

யாரபாத்து என்னா கேக்குற, சுடுகாட்டுக்கு பக்கத்தால
இருக்குற எங்க கொள்ளில நான் காவல் இருந்திருக்கேன்
தெரியும்ல.

சரி, சரி வந்து சைக்கிள மிதி.

சிவா இந்த அரச மரத்த தாண்டி தனியா போயிடுவியா?

அதெல்லாம் பாத்துக்கலாம் வா மச்சி!

நீ போயிட்டு சைக்கிள விட்டுட்டு டோக்கன் போடு
நான் சீட்டு வாங்கிட்டு நிக்கிறேன் வந்துடு.

ம்ம்

நல்ல வேள இன்னும் படம் போடல விளக்கும்
அணைக்கல. எங்க உக்காந்திருக்கா பாரு சிவா.

சித்ரா பொம்பளைங்க வரிசைல அவங்க அம்மா
கூட உக்காந்திருக்கா, ஒண்ணும் புடுங்க முடியாது
அப்படி ஆம்பளைங்க சீட்டுல உக்காருடா.

இடைவேளைலயாவது பேச முடியுமா?

இப்ப பேசி என்னத்த கிழிக்க போற நீ, ஒழுங்கா
படத்த பாருடா! வயசுக்கு வந்த பொண்ணு தனியா
ரெண்டாவது ஆட்டத்துக்கு வருவாளா? யோசிச்சு
பாத்துட்டு வரவேண்டியதுதான.

படம் பயங்கரமாவே இருந்துச்சி, நடுவில பாபு
கத்தினதில பின்னாடி இருந்தவன் முன்னாடி வந்து
திட்டிட்டு போனான்.

சிவா, படம் இவ்வளவு பயங்கரமா இருக்கும்னு
நினைச்சே பாக்கலடா! இப்போ எப்படி வீட்டுக்கு
போறதுன்னே தெரியலை வயித்த வேற கலக்குதுடா!

வா, வந்து சைக்கிள மிதி. இந்த சாக்கு சொல்ற
வேலை எல்லாம் இங்க வேணாம்.

எல்லாரும் படம் விட்டு போயிட்டாங்க இன்னும்
என்னடா பண்ணிகிட்டு இருக்க, வா போகலாம்.

ஒம்மொகத்திலயே தெரியுதுடா நீ பயந்துட்டேன்னு
இதுல இவரு காவல் இருந்தாராம், எவன்கிட்ட
கதை விடற நீ.

மச்சி சிவா ஒரு அஞ்சு நிமிஷம் இருடா அவசரமா
எம்.ஜி.ஆர பாக்க போகணும்டா!

கருமம் புடிச்சவனே அத தியேட்டருக்குள்ளவே
முடிக்க வேண்டியதுதான. போய் வா நான்
இங்கயே நிக்கிறேன்.

முடிச்சுட்டியா?

ம்ம் ஆனா தண்ணி இல்லடா,

அதுக்கு எங்க போறது நானு. இதெல்லாம் முன்னாடியே
யோசிக்கணும். இப்ப வந்து கேட்டா?

அப்படியே நடந்து வா வீட்டுக்கு போயிறலாம்!

இல்லடா சிவா தியேட்டர் இன்னும் மூடி இருக்க
மாட்டான் அங்க போகலாம்.

சரி, மூஞ்ச ஏன் அப்படி வச்சிருக்க! இயல்பா இரு.

அய்யயோ தியேட்டர் மூடிட்டாண்டா பாபு!

நல்லவேளை பாய் இன்னும் கடை மூடல அங்க
போலாம்.

பாய் ரெண்டு வாட்டர் பாக்கெட் குடுங்க.

தண்ணி பாக்கெட் காலி தம்பி, ரஸ்னா இருக்கு
தரட்டுமா?

ரஸ்னாவா?

பாபு ரஸ்னாதான் இருக்காம், அட்ஜஸ்ட்
பண்ணிக்கறியா?

என்னது, அட்ஜஸ்ட் பண்ணிக்கறதா...

என்ன யோசிக்கிற....

வேற வழியே இல்ல மச்சி...

சரி நான் அங்கிட்டு நிக்கிறேன் வாங்கிட்டு வந்திரு.

இந்தாடா..

முடிச்சுட்டியா?

ம்ம்

சைக்கிளை நானே எடுத்தேன். ரொம்ப நேரம்
எதுவுமே பேசலை.

சிவா, ஒரு விஷயம் சொல்லட்டுமா!

சொல்லு.

இங்க நடந்த விஷயத்தை தயவு செஞ்சி யார்கிட்டயும்
சொல்லாத மச்சி.

ச்ச்சே இத போய் யாராவது சொல்வாங்களா! அப்படி
எல்லாம் செய்ய மாட்டேன் கவலைப்படாதடா!!

**********************************************************

இந்த மேட்டருக்கப்புறம் ரஸ்னா விளம்பரம் வந்தாவே
எங்க வீட்டுல நான் மட்டும் விழுந்து விழுந்து சிரிப்பேன்
எல்லாரும் ஆச்சரியமா பாப்பாங்க!

Wednesday, September 20, 2006

வாலிப வயசு!!! - 1

ரெண்டாவது ஆட்டம் - வாலிப வயசு 2

கனவு இல்லம் வாலிப வயசு 3

குன்று முட்டிய குருவி - வாலிப வயசு 4





டேய் சிவா, காத கொண்டாடா இங்க!

எதுக்கு? நீ லொள்ளு புடிச்சவன் போன முறை
இதே மாதிரி சொல்லி எங்காதுல கத்தின.

"இல்லடா சீரியஸ் மேட்டர்"

எதுவா இருந்தாலும் க்ளாஸ் முடிஞ்சதும் பேசிக்கலாம்

அதுக்கு முன்னாடியே பேச வேண்டிய மேட்டர்டா.
காத கொண்டா இங்க!

நேத்து "உள்ளத்தை அள்ளித்தா" படம்
பார்த்தேண்டா மச்சி..

அடச்சீ இதுவாடா சீரியஸ் மேட்டர்.

இல்லடா அதில ரம்பாவ மடக்கறத்துக்கு
கார்த்திக் சூப்பர் ஐடியா போடுவாரு. கவுண்டமணிய
விட்டு ஹேண்ட்பேக் திருடிட்டு ஓடுற மாதிரியும்
கார்த்திக் அதை ஓடிப்போய் புடுங்கற மாதிரியும்
அதன் மூலமா ரம்பாவ காதல் வலையில
சிக்க வைக்கிறது. அதே மாதிரி நான் ஒரு ஐடியா
போட்டு வச்சிருக்கேன். அது மாட்டும் கரெக்டா
ஒர்கவுட் ஆச்சின்னா சாந்தி எனக்குதான்.

அதுக்கு நான் என்னடா பண்றது?

இன்னும் அரை மணி நேரத்தில க்ளாஸ் முடிஞ்சுரும்.
முடிஞ்ச உடனே என்னோட சைக்கிள எடுத்துகிட்டு
ஏரியை தாண்டி இருக்குற மொத அரசமரத்தடியில
நின்னுக்கோ!

நின்னு!

சொல்றத முழுசா கேளுடா..

சொல்லு..

சரியா பத்தாவது நிமிஷத்தில சாந்தி வருவா
அவகிட்ட நான் சொல்லிக்குடுக்கற "ரெண்டு
வரி "டயலாக்" சொல்ற அத சொன்னதும் அவ
அழுவாள் அது மூலமா அவள் என்னை லவ்
பண்றாளான்னு தெரிஞ்சிக்கலாம். அப்படியே
என்னை லவ் பண்ணலன்னாலும் அந்த
டயலாக் கேட்டதுக்கப்புறம் என்னை தான்
லவ் பண்ணுவா பாரேன்.

டேய் உனக்குதான் ராமாயி இருக்கால்ல, பின்ன
ஏண்டா சாந்தி பின்னாடி சுத்தற!

ராமாயி, பேராடா அது! ஆளும் அவ மூஞ்சியும்
மொகம்பூரா மஞ்சள் பூசிக்கிட்டு, நாலணா சைசுக்கு
சாந்து பொட்டு வச்சிக்கிட்டு ம்ஹீம் சகிக்கலைடா.

"பெயரில் என்ன இருக்கிறது நண்பா?"

அந்த கதைய நாங்க அஞ்சாவது படிக்கும்போதே
படிச்சுட்டேம். இப்போ மேட்டருக்கு வாங்க தொர!

அது என்ன 'டயலாக்' சொல்லித்தொலை..

அவகிட்ட போயி என்ன சொல்றன்னா, நான் உன்ன
ரொம்ப நாளா லவ் பண்ணிகிட்டு இருக்கேன், நீ
என்னடான்னா அந்த பாபுப்பயல பாத்துகிட்டு
இருக்கே (அதாவது என்னை) அப்படின்னு சொல்லு.
அதுக்கு அவ சொல்லுவா ஆமா அவனத்தான் லவ்
பண்ணுவேன் உனக்கென்ன அப்படின்னு. நாலு
வார்த்தை நீ கோவத்தில பேசணும் அத கேட்டதும்
அவ அழுவாள் அந்த நேரத்தில கரெக்டா நான்
வருவேன். அவ அழுதுகிட்டு இருக்கறத பாத்து
உன்னை நாலு அடி அடிச்சி விரட்டற மாதிரி நடிச்சு
அவளுக்கு ஆறுதல் சொல்லுவேன். இதான் மச்சி
ப்ளான்.

நீங்க பறக்க நாங்க பஞ்சராகனுமா?

டேய் மச்சி ரெண்டாவது அரச மரத்தடியில
அவங்கப்பன் கள்ளுக்கடை வச்சிருக்கான்
தெரியும்ல..

தெரியும்டா, அந்த மரத்துக்கும், இந்த மரத்துக்கும்
ரொம்ப தூரம், யாரும் இருக்க மாட்டாங்க மச்சி
தைரியமா இரு.

எனக்காக இதக்கூட செய்ய மாட்டியா மச்சி?

உடனே பாசக்கயிறு வீசிறிவிங்களே..

டேய் உனக்கு கணக்கு சரியா வரலன்னு உங்க
அப்பா நினைச்சிகிட்டு இருக்காரு.ஆனா நீ போடற
கணக்கு உங்கப்பனுக்கும் தெரியாது, அதோ அங்க
போர்டுல கிறுக்கிட்டு இருக்கானே அவனுக்கும்
புரியாது!

ஏய் அங்க யாருடா ரெண்டு பேர் குசுகுசுன்னு
பேசிகிட்டு இருக்கறது?, அப்படியே ரெண்டு
பேரும் எந்திரிச்சி வெளிய போயிடுங்க. என்னோட
க்ளாசுக்கே வராதிங்கடா.

வசதியா போச்சு, சிவா எந்திரிடா போலாம்.

இந்தா சாவிய புடி. சீக்கிரம் போ. நான் பல்லு
சைக்கிள வாங்கினு வரேன்.

இவன் வேற தைரியமா சொல்லுடான்னு சொல்லிட்டான்
நம்ம நேரம் அவ செருப்பாலே அடிச்சிட்டான்னா
நாளப்பின்ன பள்ளிக்கூடம் பக்கமே தலை காட்ட
முடியாதே. ச்சே அப்படியெல்லாம் அடிக்க மாட்டா,
அப்படியே அடிச்சாலும் நாளைக்கு ஸ்கூலுபக்கம்
வந்துற முடியுமா? வயித்தக் கலக்குதுடான்னு
அவ வர்ற நேரமா பாத்து எஸ்கேப் ஆயிறலாமா?
அய்யயோ அவ வேற வராளே, என்ன செய்யிறது
எப்படியாவது சொல்லிற வேண்டியதுதான்.

வேகமா சைக்கிள்ல வந்து எதிர்ல சரக்குன்னு
நிறுத்தினதும் பயந்துதான் போனா அவ.

ஏ புள்ள, சாந்தி கொஞ்சம் நில்லு உங்கிட்ட
கொஞ்சம் பேசணும்.

என்ன பேசணும்?

நான் உன்ன எவ்வளவு நாளா பாத்துகிட்டும் லவ்
பண்ணிகிட்டும் இருக்கேன். நீ என்னடான்னா
அந்த பாபுப்பயல லவ் பண்ணிகிட்டு இருக்கியாமே.
அவன் கொஞ்சம் கூட நல்லவன் இல்ல.

ஏய், ஏய் ஏன் அழுவற யாராவது பாத்தா தப்பா
நினைப்பாங்க. எஸ்கேப் ஆயிடலாமா?

அழுகைய நிறுத்து சாந்தி!!

எந்த நாயி சொல்லுச்சி பாபுவ நான் லவ் பண்றேன்னு?
நான் உங்களத்தான் லவ் பண்றேன் சிவா...

அடிப்பாவி, இப்படியா குண்ட தூக்கிப்போடுவ,
அவனுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்.
அவன் வேற அதோ வந்துகிட்டு இருக்கானே.

சரி நீ கெளம்பு! அவன் வந்துகிட்டு இருக்கான்.

ஏண்டா நான் வர்றதுக்குள்ள அவள அனுப்பின?

அவ கெடக்கறா விடுறா, இவ இல்லன்னா வேற
ஆளே இல்லியா?

சிவா அவ என்ன சொன்னான்னு சொல்டா
மொத்தல்ல!

அவள மறந்துடு மச்சி!

ஏன்?

அவளுக்கு நிச்சயம் ஆகிடுச்சாம், அவ மாமங்கூட.
பரிட்சை முடிஞ்ச உடனே கல்யாணமாம்.

அப்புறம் எதுக்கு ஸ்கூலுக்கு வர்றாளாம். ச்சே
என்னடா இது, இந்த ஓல சந்தில எட்டி பாத்தவன்
தட்டி கட்டினவன் எல்லாம் அடிச்சி விரட்டணும்
மச்சி.

உனக்கு ராமாயிதான்!!

Friday, September 15, 2006

பாகிஸ்தானியுடன் ஒரு லிஃப்ட் - என் அனுபவம்!

வேலை தேடி துபாய் வந்த சமயம். ஏதோ ஒரு குருட்டு
நம்பிக்கையில் ப்ளைட்டு புடிச்சி வந்திட்டேன்.
வந்திட்டேன்னு சொல்றத விட வீட்லருந்து
அனுப்பிட்டாங்கன்னுதான் சொல்லணும். வந்த புதிதில்
வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமில்லை என்பது
தெளிவாகவே புரிந்துவிட்டது. நமக்கு இங்கிலீசு
சுமாராதான் வரும், இந்தியோ சுத்தமா நஹி அப்புறம்
எப்படி வேலை கிடைக்கும்னு எல்லாரும்
பயமுறுத்திட்டாங்க. சரி வந்தது வந்தாச்சி விசா முடியுற
வரைக்கும் ஊர சுத்தி பாத்துட்டு அப்படியே கிளம்பிட
வேண்டியதுதான்னு முடிவு பண்ணிட்டேன். வந்து ஒரு
மாசத்தில பத்து இன்டர்வியூக்கு மேல அட்டெண்ட்
பண்ணிட்டேன். எல்லாமே ஊத்தல்ஸ், சொதப்பல்ஸ்தான்.
நம்ம விட திறமைசாலிங்க இருக்காங்களே
என்ன செய்யறது.

நான் தங்கி இருந்தது துபாயில் தேஹ்ரா என்ற இடத்தில்.
உறவினர்களுடன் இருந்தேன். நம்ம முயற்சி மட்டும்
நிக்கவே இல்ல தேடல் தொடர்ந்து கொண்டே இருந்தது.
அப்போதான் ஒரு அழைப்பு வந்தது ஆனால் துபாயில
இருந்து 300 கிலோ மீட்டர் தூரத்தில் புஜைரா என்ற
ஊரில் இன்டர்வியூ. கிட்டத்தட்ட மூன்று மணி நேர
பயணம் இங்கிருந்து புஜைரா செல்ல. ஒதுக்கிடலாம்னு
நினைச்சேன் ஆனால் அறை நண்பர்களின்
வற்புறுத்தலால் சென்றேன்.

இவ்வளவு தூரம் யாரும் வரமாட்டாங்க வேலை
கிடைச்சுடும்னு நம்பிக்கைல போனேன். ஆனா எனக்கு
முன்னாடி அங்க பத்து பேர் உக்காந்து இருக்காங்க.
ஏதோ ஓரளவுக்கு அட்டெண்ட் பண்ணிட்டு வந்தேன்.
இந்த வேலை இல்லாம போனாலும் நல்லதுதான் எவன்
இவ்வளவு தூரம் வந்து வேலை பார்ப்பான். மனசை
தேத்திகிட்டேன்.

நீங்க துபாய் போகணுமா?

ஆமாம்.

எங்க கம்பெனி ட்ரைவர் இப்போ துபாய் போக
இருக்காரு நீங்க வேணா அவர் கூடவே போயிருங்க!

தங்கமான மனசு அந்த ரிஸப்ஷனிஸ்ட் பொண்ணுக்கு.

வெளிய வந்தேன். கார் தயாராக நின்றிருந்தது. உள்ளே
ஒரு பாகிஸ்தானியன் அமர்ந்திருந்தான்.

இவன் கூட போகலாமா வேணாமா? என யோசித்து பின்
வேண்டாம் என்று அவனை தவிர்த்து நடந்தேன்.

பொதுவாக பாகிஸ்தான் என்றாலே எந்த ஒரு
இந்தியனுக்கும் பிடிக்காது. ஏனென்றால் நம் நாட்டிலே
அமைதியை குலைப்பவர்கள், அப்பாவி மக்களை குண்டு
வைத்து கொல்பவர்கள் என்று தினசரிகளும்
சினிமாக்களும் எனக்கு சொல்லியிருப்பதும் ஒரு
காரணம்.

ஆவோ பாய்! ஆவோ!!

இவண் வேற ஒருத்தன், இந்தியிலதான் பேசுவான் போல
அப்போ கண்டிப்பா இவன் வண்டியில ஏறக்கூடாது!
பஸ்ஸுலயே போயிட வேண்டியதுதான்.

தொடர்ந்து ஹாரன் அடித்து வற்புறுத்தினான். எதுக்கு காசு
வீணாக்கற?, நான் துபாய்தான் போறேன் வந்து ஏறிக்கோ
துபாய்ல இறக்கி விடறேன்.

இல்ல நான் பஸ்ல போயிக்கிறேன்.

இப்போதாங்க பஸ் கிளம்பி போச்சு. இனிமே அடுத்த
பஸ் வர ஒரு மணி நேரம் ஆகும். டிக்கெட் கொடுப்பவர்
சொன்னார்.

அடடா! வலிய வந்து கூப்பிட்டான் அவன் கூடவே
போயிருக்கலாம். வீம்பா வந்திட்டோம். ரோட்டை
பார்த்தேன் அவனே வந்து கொண்டிருந்தான்.
என்னருகில் வந்து காரை நிறுத்தினான்.

எதுவும் பேசாமல் ஏறிக்கொண்டேன்.

ஆப்கா மதராஸி? ஆஞ்ஜி போட்டேன்!

ஏதோ இந்தியில பேச ஆரம்பித்தான். அய்யா சாமி
எனக்கு இந்தி சுத்தமா தெரியாது. இங்கிலிசுல சொல்லு
புரிஞ்சிக்குவேன்.

சாப்பிட்டாச்சா, வணக்கம்னு ரெண்டு மூணு தமிழ்
வார்த்தை சொல்லிட்டு கண் சிமிட்டினான்.

அவரை தெம்பூட்டும் விதமாக சிரித்து வைத்தேன்.

வீரப்பனை கூட அவனுக்கு தெரிந்திருந்தது
உண்மையிலேயே ஆச்சரியத்தை அளித்தது.

பதினஞ்சி வருஷமா இங்க வேலை செய்யறேன்.
என்னை மாதிரியே அரை குறை ஆங்கிலத்தில்
சொன்னான்.

நானும் அவனும் கொஞ்ச நேரத்திலயே சகஜமாக பேச
ஆரம்பித்து விட்டோம். ஆனால் திடீர்னு அந்த கேள்விய
என்கிட்ட கேப்பான்னு எதிபாக்கவே இல்ல!

"பாகிஸ்தான் பத்தி என்ன நினக்கிற நீ ?"

என்ன சொல்றதுன்னே தெரியலை. நான் நினைக்கறதை
அப்படியே சொன்னா நடு பாலைவனத்தில இறக்கி
விட்டாலும் விட்டுறுவானோ? சரி என்ன ஆனாலும்
பரவாயில்லை.நான் என்ன நினைக்கிறேன் என்பதை
அப்படியே சொல்லிற வேண்டியதுதான்.

எனக்கு சுத்தமா பிடிக்காது. காட்டுமிராண்டிங்க ஊர்
அது.எனக்கு மட்டுமில்ல எந்த ஒரு இந்தியனுக்கும்
பாகிஸ்தானை பிடிக்காது. இந்த காரணத்துக்காகத்தான்
நான் உன்னுடன் வர மறுத்தேன். என் மனதில்
தோன்றியதை சொல்லி விட்டேன்

அவனுக்கு மூஞ்சியே சுருங்கி விட்டது.

எதுவும் சொல்லாம இருந்திருக்கலாமோ, பாவம்
அவன் மனசு கஷ்டப்படறானே என்று
வேதனைப்பட்டேன்.லொட லொடன்னு பேசிட்டு
வந்தவன் அமைதியாக மாறிட்டான்.

நீங்க நினக்கற மாதிரி எல்லாரும் அப்படிப்பட்டவங்க
கிடையாது. ஒருசிலர் செய்கிற தவறுகளால் ஒட்டு
மொத்த பழியும் மக்கள் மேல வந்திடுது. என்ன
பண்றது தலைமையே சரியில்லையே. நிஜமான
வேதனையுடன் சொல்கிறான் என்பது முகத்திலே
தெரிந்தது!

ஒருவேளை நம்ம நாடு பிரியாமலே இருந்திருந்தா
நல்லா இருந்திருக்குமோ!

தெரியவில்லை என்றேன்.

ஆனால் நான் இந்தியாவை பற்றி என்ன நினைக்கிறேன்
தெரியுமா?

அது ஒரு புனிதமான நாடு. உங்க நாட்டு கலாச்சாரம்
எனக்கு ரொம்ப பிடிக்கும். காந்தியின் மீது எனக்கு
மிகப்பெரிய மதிப்பு இருக்கிறது. எனக்கு என் நாட்டு
நண்பர்களை விட மதராஸி நண்பர்களே அதிகம்.

பாகிஸ்தானிகள் ஆறடி உயரத்தில், பருமனாகவும்,
பார்ப்பதற்கு ரவுடி போலவும் இருப்பார்கள் என்று
கேள்விப்பட்டேன். இவனும் அப்படித்தான் இருந்தான்
ஆனால் இவண் கண்களே சொல்லியது நான் அந்த
ரகமல்ல என்று.

பேச்சு எங்கெங்கோ சென்றது. நான் நினைத்ததற்கு
மாறாக இருந்தது அவரின் குணாதிசயங்கள்.

இரண்டரை மணி நேர பயணம் மாதிரியே
தெரியவில்லை. சீக்கிரம் முடிந்தது போல
தோன்றியது.

விடைபெறும் தருணம். வழக்கமான கைகுலுக்கலில்
எல்லாம் முடிந்தது.

இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு சீக்கிரமே வேலை
கிடைக்க ஆண்டவனை ப்ரார்த்திக்கிறேன்.

ரொம்ப நன்றி!

இன்ஷா அல்லாஹ் சம்மதித்தால் நாம் மீண்டும்
சந்திப்போம்!

பாகிஸ்தான் மீதிருந்த என் பார்வையை சற்றே திசை
மாற்றி இருந்தார். ஆனால் அவர் சொன்ன ஒரு
வார்த்தையை கேட்டு என்னால் ஆச்சரியப்படாமல்
இருக்கவே முடியவில்லை!

இந்தியாவில்தான் நாமும் இருக்கிறோம் நமக்கு இது
தோணவே இல்லையே! ஏன?

என்ன சொன்னார் என்று அறிய ஆவலாக உள்ளதா?

சொன்னது இதுதான்.

ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வாழ்வில் ஒருமுறையாவது
புனித மெக்கா செல்வது கடமையாக கருதப்படும்.

எனக்கும் என் வாழ்வில் ஒருமுறையாவது தாஜ்மகாலை
தரிசிக்க வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய ஆசை.

முடியுமா தெரியவில்லை! வேதனையோடு சொன்னார்!

யாருக்கு தெரியும் அவருக்குள்ளேயும் ஒரு காதலின்
வலி ஒளிந்திருக்கலாம்!

Tuesday, September 05, 2006

யார் யாருக்கு லிஃப்ட் வேணும்?? போட்டிக்கு அல்ல!

Image Hosted by ImageShack.us

தமிழ்மண முகப்பில் கடந்த ஒரு வாரமா எல்லாரும்
லிஃப்ட் குடுங்க, கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா
சார்?. இப்படின்னு கேட்டுகிட்டே இருக்காங்க.
இதை பாத்துட்டு நம்மளுக்கு நேத்திக்கு ராத்தூக்கமே
இல்லாம போச்சு. என்ன என்ன பண்ணலாம்னு
தாவாங்கொட்டைய புடிச்சி உலுக்கி ரோசனை
செஞ்சதுல சூப்பரா ஒரு ஐடியா சிக்குச்சி.
அதான் இந்த லாரி ஐடியா. லிஃப்டுக்காக காத்திருக்கிற
ஆரும் கவலைபடவேணாம். ஆராரு எங்க இருக்கீங்கன்னு
தம்பியோட நிரந்தர முகவரி எண் 6, துபாய் குறுக்கு
சந்து விவேகானந்தர் தெரு, இந்த அட்ரஸ்க்கு பேஃக்ஸ்
அனுப்பிடுங்க. நீங்க எங்க ஒளிஞ்சிருந்தாலும் லிஃப்ட் தர
நான் ரெடி. ஒருத்தர் ரெண்டு பேர் இல்ல, அம்பது
பேருக்கு மேல நம்ம வண்டி தாங்கும். ஆளுங்க
அதிகமாச்சின்னா ரெண்டு சிங்கிளா கூட அடிச்சிக்கலாம்
கவலைப்படாதிங்க சாமிகளா!! யாராரு எங்க போகணும்னு
சொல்லுங்க பத்திரமா இறக்கி விடறேன்.

Sunday, September 03, 2006

டீக்கடை பெஞ்ச்...

"என்னதான் நம்ம வீட்ல தினசரிகள் வாங்கினாலும்
டீக்கடைல உக்காந்து பேப்பர் படிக்கிற சுகமே தனிதான்"
இப்படி சொல்றவங்கள நீங்க கண்டிப்பா கேட்டு
இருப்பிங்க.இது வியாதியாவே ஆகிப்போயிருச்சு.
சரி, என்னதான் அப்படி இதுல சொகம் இருக்குன்னு
பாக்கணும்னு ஒரு நாள் கிளம்பினேன். எட்டு மணி
வாக்கில டீக்கடை பக்கம் ஒதுங்கி மெதுவா ஒரு
நோட்டம் விடுறது. கப்புன்னு ஒரு சீட்ட புடிச்சி உக்காந்து
பேப்பர் எப்ப நம்ம கைக்கு வரும்னு எரிச்சலோட பார்க்க
வேண்டியிருக்கும். கொஞ்ச நேரத்தில கண்டிப்பா ஒரு
பேப்பராச்சும் நம்ம கைக்கு வந்து சேர்ந்திடும்.
"நகரில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்"

போச்சுடா எவன் வீட்டுல கன்னம் வச்சானோன்னு
உன்னிப்பா படிக்க ஆரம்பிப்போம். இதுக்கு முன்னாடி
நடந்த கொள்ளைகள விலாவிரிவா நாலு பத்தி எழுதி
இருப்பாங்க.பொறுமையோட அதையெல்லாம் படிச்சிட்டு.
இன்னிக்கு என்னதான் ஆச்சுன்னு பார்த்தா திடீர்னு
இதன் தொடர்ச்சி நாலாவது பக்கம், மூணாவது பத்தி
பார்க்கவும்னு இருக்கும். சரி நாலாவது பக்கம் யாருகிட்ட
இருக்குதுன்னு பாத்தா, ஒரு பெருசுகிட்ட இருக்கும்.
கண்ணுக்கும் பேப்பருக்கும் 2 இஞ்ச் இடைவெளி வச்சி
படிச்சிகிட்டு இருக்கும்.

டீக்கடைக்காரரை பார்த்து அண்ணே 'தினத்தந்தி
எக்ஸாம்'
நாளக்கிதானே! அப்படின்னு கேட்டு
பெருச ஒரு பார்வை பார்க்கணும்.

"தனியா மாட்டிகிட்டமோ" பொறவு வந்து படிச்சிக்கலாம்னு
பேப்பரை சுருட்டி கீழ வச்சிட்டு நைசா எஸ்கேப் ஆயிரும்.

வெற்றி!!

என்ன ஆச்சுன்னு நாலாவது பக்கம் போவோம் அங்கயும்
மொக்கையா ரெண்டு பத்தி எழுதிட்டு இரண்டாம் பக்கம்
ஏழாவது பத்தி பார்க்கவும்னு இருக்கும். இன்றைய
முட்டை விலை, வரிவிளம்பரம், இது நம்ம ஆளு,
பாக்யராஜ், ஷோபனா நடித்தது இதையெல்லாம் தாண்டி
ரொம்ப ஆர்வமா செய்திய தொடர்வோம். போலிஸாருக்கு
'டிமிக்கி' கொடுத்த கொள்ளையர்கள், கொள்ளையர்களை
விரட்டி பிடிக்க தனி போலிஸ் படை முடுக்கி
விடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை பூக்கடை போலீஸார்
வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகிறார்கள். அட எழவே.

இந்த சனியனை மொத பக்கத்திலயே போட்டா என்னா
கொறஞ்சி போயிரும்? ஒருவேளை இடம் பத்தலியோ
என்னமோ அப்படின்னு மொத பக்கத்துக்கு போனா, மேல
50 வருட பாரம்பரியமிக்க சுந்தரவிலாஸ் பாத்திரக்கடை,
வெற்றி பெற்ற மனிதர்கள் விரும்பும் பாக்கு, கீழ கொட்ட
எழுத்துல "வெற்றிகரமாக மூன்றாவது நாள்", ஹீரோ
ரெண்டு ஹீரோயினை கட்டி புடிச்சிகிட்டு சிரிப்பார்,
இந்தக்கலர், அந்தக்கலர், நொந்தக்கலர்னு ஒரு அம்மா
முந்தானய காத்துல பறக்க விட்டுகிட்டு இருக்கும்.

ஏன்?, இந்த விளம்பரத்தையெல்லாம் தூக்கி அடுத்த
பக்கத்தில போட்டு இருந்தா என்ன?. நாலு பத்தி
செய்திய படிக்க மூணு பக்கம் கண்ணை உருட்டி
அது எங்க ஒளிஞ்சிருக்குன்னு தேட வேண்டிய
அவசியம் இல்லையே.

மனச சாந்தப்படுத்த கன்னித்தீவு பக்கம் போனா,
இளவரசி கண் விழித்தாள் எதிரே பயங்கரமாக
சிரித்தபடி ஒரு அரக்கன் நின்றிருந்தான்,
மாயக்கண்ணாடியில் இவையனைத்தையும்
மந்திரவாதி பார்த்துக்கொண்டிருந்தான். இளவரசிக்கு
என்ன நடந்தது? நாளை தொடரும்... நாலு படம்
போட்டு, மூணு வரி எழுதி இருப்பாங்க. நேத்திக்கு
என்ன சாப்பிட்டோம்னு ஞாபகம் வர்றதுக்கே
ரெண்டு நிமிடம் ஆயிடுது, இதுல எங்க இருந்து
இத்தனை வருஷமா படிச்சிகிட்டு ஞாபகத்தில
வச்சிக்கிறாங்க?. ஒரே கொழப்பமா இருக்கு.

இதுல எதுனா சொகம் இருக்குதுங்களா?

"ஒண்ணுமே புரியல ஒலகத்தில"

Wednesday, August 30, 2006

தண்டவாளத்தில ஒண்ணுக்கு போனா தப்பா?

சென்னைல ஒரு மூணு மாசம் தங்க வேண்டி
வந்தது. ப்ராஜெக்ட் செய்ய வேண்டி தாம்பரத்தில
நண்பர்களோட தங்கினேன். கோடம்பாக்கத்துக்கும்
தாம்பரத்துக்கும் தினமும் ட்ரெயின்ல போய் வந்து
கொண்டிருந்தேன். காலையில மெட்ராஸ் க்றிஸ்டியன்
காலேஜ் வாசல்ல கொஞ்சம் ஜொள்ள சிந்திட்டு.
ட்ரெயின புடிச்சு அங்க மீனாட்சி வாசல்ல மீதிய
சிந்தறதுதான் தினமும் வேலையே. இதுக்கு கூடவே
நாலு பேர் கூட்டு. ரவுசுக்கு கேக்கவே வேணாம்
ஒரே கும்மாளமா போயிகிட்டு இருந்தது.

வீட்ல இருந்து கொண்டு வந்த காசை எங்கன
ஒளிச்சு வச்சாலும் சிரமப்படாம கண்டுபிடிச்சுடற
அருமையான நண்பர்கள். நம்மளுக்கு ஒளிச்சு வச்சி
பழக்கமில்ல, அவனுங்களுக்கு ஒளிச்சு வைக்கறத
கண்டுபிடிக்கறதில கஷ்டமில்ல. பர்சுல காசு
இல்லன்னா கடுப்புல தூக்கி எறிஞ்சிடுவானுங்க
அப்படி ஒரு பாசக்கார பயலுங்க. வழக்கமா
ட்ரெயின் பாஸ் பர்ஸுல வைக்கிறதுதான் வழக்கம்.
நம்ம கூட்டத்தை சேர்ந்த ஒருத்தன் காசு வைக்கிற
எடத்தில கண்டதை வச்சிருக்கான்னு சில்லறை
இல்லாத கடுப்பில தூக்கி எறிஞ்சிடுச்சி அதை தேடி
கண்டுபிடிச்சி பின்னாடி சொருவிகிட்டு நானும்
கிளம்பிட்டேன்.

இந்த ட்ரெயின்ல செக்கர் வந்துட்டான்னா சுலபமா
கண்டுபிடிச்சிடலாம் எப்படின்னா, டிக்கெட் எடுக்காத
வித்தவுட்டுங்க கதவோரமாவே நிப்பானுங்க எந்த
நேரத்திலும் எஸ்கேப் ஆகறதுக்கு. வாரத்துக்கு
மூணு நாள் செக்கர் வந்தாலும் இவனுங்க அஞ்சவே
மாட்டானுங்க. ஒருநாள் மீனம்பாக்கத்தில நிறுத்தும்
போது செக்கர் வந்துட்டாடு, வாசப்பக்கம் நின்னுகிட்டு
இருந்ததுல ஒரு மூணு தெறிச்சு ஓடினானுங்க, அதில
ஒருத்தன் டை கூட கட்டி இருந்தான். அடப்பாவி!

நமக்கு ஒண்ணாம் க்ளாசில இருந்து பின்னால உக்காந்து
பழக்கம் அந்த பாசத்தில பின்னாடி இருந்தேன்.
வரிசையா செக் பண்ணிகிட்டு நம்மகிட்ட வந்தாரு
டிக்கெட் எடுக்காதவனை விட்டுடுங்க, டிக்கெட்
எடுக்கறாம்பாரு அவனை புடிச்சி நோண்டுங்கன்னு
முனகிக்கிட்டே பர்ஸை பிரிச்சா பக்குன்னு ஆயிடுச்சி
உள்ளாற அது இல்ல. நெலவரம் கலவரம் ஆகறதுக்குள்ள
எப்படியும் இவங்கிட்டருந்து தப்ப முடியாது நந்தி
மாதிரி நிக்கறான். பாக்கெட்லயும் பத்து ரூபாய்க்கு மேல
ஒரு பைசா கூட இல்ல. அசடு வழியுது முகத்தில,
சாரி சார் பாஸ் கொண்டு வர மறந்திட்டேன் நாளைக்கு
எடுத்திகிட்டு வரேன்னு சொன்னேன்.

அவ்வளவு கேவலமான லுக்கு இதுவரைக்கும்
யாரும் என்கிட்ட காட்டல. எத்தன பேருடா கிளம்பி
இருக்கீங்க?எல்லாரும் என்னையே பாக்கறானுங்க
ரொம்ப அசிங்கமா போயிடுச்சி.

நீட்டா ட்ரெஸ் மட்டும் போடத்தெரியுதுல்ல
டிக்கெட் எடுக்கணும்னு அறிவு வேணாம்?
எவ்வள்வு சொல்லியும் கேக்காம ப்ளாட்பாரத்துக்கு
கூட்டி வந்துட்டாரு அந்த ஹமாம் சோப்பு.

டிக்கெட் எடுக்கலன்னா 75 ரூபா அபராதம்
தெரியும்ல. தெரியாது சார் எங்கிட்ட அவ்ளோ
காசு இல்ல. சரி எவ்வளவு வச்சிருக்க?
12 ரூபா இருக்கு சார். அப்போ 15 நாள்
ஜெயில்ல இருக்க வேண்டியதுதான். சார் சார்
வேணாம் சார் அபராதமே கட்டறேன். சாயந்திரம்
ரூம்ல இருந்து எடுத்துகிட்டு வந்து கட்டறேன்.
அதுவரைக்கும் இந்த வாட்சை வச்சிக்குங்கன்னு
அவர் கைல குடுத்தேன். உடனே அபராதத்துக்கான
ரசீதை எழுதி கூடவே அவர் பெயர், சர்வீஸ் நம்பர்.
கொடுத்தார். வாட்சை திருப்பணும்ல அதுக்குதான்.
தம்பி இன்னிக்கு பூரா எத்தனை முறை வேணாலும்
இந்த ரயில்ல போய் வரலாம்னு சொன்னாரு.

மனசனுக்கு எவ்வளவு நக்கல் பாருங்க. மூடு
அவுட்டாயி ப்ளாட்பாரத்து பெஞ்ச்ல உக்கார்ந்தேன்.
எனக்காகவே காத்திட்டிருந்தா மாதிரி ஒருத்தன்
பின் பெஞ்சுலருந்து எழுந்து உக்காந்தான்.

என்னா சார் என்ன மாதிரிதானா நீயும்னு கேட்டுகிட்டெ
பக்கத்தில வந்தான். நான் செஞ்சது இருக்கட்டும் நீ
என்னடா செஞ்சே அத சொல்லு முதல்ல.

ட்ராக்குல ஒண்ணுக்கு உட்டா தப்பா சார்?

இதுக்கு போய் அந்த ஆளு இங்க உக்கார வச்சிட்டான் சார்.
அட நாதாரிப்பயலே உங்கூட என்னையும் ஏண்டா
சேத்துகிட்ட. நான் டிக்கெட் எடுக்காம பைன்
கட்டிட்டு வந்திருக்கேன். இவங்கூட இன்னும் கொஞ்ச
நேரம் இருந்தா ஆபத்துதான்னு இடத்தை காலி
பண்ணிட்டேன்.

ம்ஹூம் இவங்கிட்ட எல்லாம் அசிங்கப்படணும்னு
எழுதி இருக்கு போல.

ஒரு தப்பை தப்புன்னே தெரியாத அளவுக்கு
தவறுகள் மலிஞ்சி போச்சு உலகத்தில.

Monday, August 28, 2006

வெற்றி பெற்றவர்களுக்கு...

தேன்கூடு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு
என்னுடைய வாழ்த்துக்கள். வெற்றி பெறாதவர்களுக்கு
எனது ஊக்கங்கள். என்னுடைய படைப்பையும் முதல்
பத்து இடங்களில் இடம்பெற்றிருந்ததே எனக்கு
வியப்பாக இருக்கிறது. மிகச்சிறந்த படைப்புகளும்
பின்னுக்கு சென்றிருந்ததையும் உணர முடிகிறது.
தோல்வி ஒன்றும் புதிதில்லை என்பதால் சகஜமாக
எடுத்துக்கொண்டேன். சமீபமாகத்தான் நான்
வலையுலகத்தில் எழுத ஆரம்பித்தேன். இந்த சில
மாதங்களிலேயே நான் பெற்ற நண்பர்கள் ஏராளம்.
இதையே பெருமையாகவும் நினைத்துக் கொள்கிறேன்.
அடுத்த மாத தேன்கூடு போட்டிக்கு எழுத தயாராக
இருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

Wednesday, August 16, 2006

2. யார் இவர்?

சென்ற பதிவில் யார் இவர்? என்று ஒரு
பதிவு எழுதி இருந்தேன் அதன் தொடர்ச்சி....


இவர் எல்லா அரசியல் தலைவர்களும் பழக்கம்
என்றாலும் மிக மிக நெருக்கமானவர் அண்ணா!
அறிஞர் முதல்வரானதும் சென்னையில் உலக தமிழ்
மாநாடு நடத்தப்பட்டது. தமிழறிஞர்கள் பலருக்கும்
கடற்கரையில் சிலை வைக்கப்பட்டது! தேவாரம்
பாடிய திருநாவுக்கரசருக்கு மட்டும் இல்லை!
கொதித்துப் போனார் இவர். அண்ணாவிடம்
சென்று, என்ன? அப்பர் பெருமான் தமிழ் வளர்க்க
வில்லையா? அவருக்கு ஏன் சிலையில்லை?" என
எகிறினார். அதற்கு அண்ணா புன்சிரிப்புடன்,
"மரியாதைக்குரிய கவிஞர்களுக்கு மட்டும்தான்
கடற்கரையில் சிலை வைக்க முடிவெடுத்தோம்!
அதனால்தான் அப்படி" என்றார். இவர், கண்கள்
சிவக்க "என்ன? அப்படியானால் அப்பர் பெருமான்
மரியாதைக்குரியவர் இல்லையா?"

"இல்லை... அவர் வழிபாட்டுக்குரியவர்! அவருக்கு
கோயிலில் சிலை வைப்பதுதான் சரியானது"
அண்ணா அமைதியாக சொல்ல, இவர் நெக்குருகிப்
போனார். கண்களில் சுலபக்குளம்! அண்ணாவை
ஆரத்தழுவிக்கொண்டார்! பெரியாரின் சீடரான
அண்ணாவிடம் இத்தகைய தமிழ் பக்தியுடன்
தெய்வீக பக்தியும் எதிபார்த்திருக்கவே இல்லை
அவர்! 'ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்'
என்று அண்ணா பேச காரணமும் இவர்தான்.

இந்திரா பிரதமரானதும் கிராமங்களை வங்கிகள்
தத்தெடுக்கும் முறையை புகுத்தி கிராமங்களுக்கு
செழிப்பு சேர்க்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.
அவரை இதற்கு தூண்டியது இவரின் நிர்வாக
முறைதான்! இவரின் ஊரிலும், அருகில் உள்ள
கிராமங்களில் உள்ள அத்தனை குடும்பங்களும்
தன்னிறைவு அடையும் வண்ணம் பாரததிலேயே
முன் மாதிரி கிராமங்களை ஏற்படுத்தினவர் இவர்.
பெரிய அதிகாரிகளும், பல மாநிலங்களில் இருந்து
வந்தும் பார்த்துவிட்டு இவரின் நிர்வாகத்தை
மெச்சியிருக்கிறார்கள்.

பட்டிமன்றங்களின் நாயகன் என்றால் அது இவர்தான்!
விடுதலை விரும்பி, தா.பாண்டியன், மாயண்டி பாரதி,
போன்ற கடவுள் மறுப்பு பேச்சாளர்களையும் கோயில்
மேடைகளுக்கு கூட்டி வந்தவர். அதுமட்டுமா? ஆத்திக
ஜனங்களிடம் கைதட்டலும் வாங்கி தந்தவர். பட்டி
மன்ற தலைப்புகளையும் "அவள் பத்தினியா இவள்
பத்தினியா" என்பதிலிருந்து மாற்றி சமூக சீர்திருத்த
கருத்துக்களை கருப்பொருளாக எடுத்துக்கொண்ட
பொதுவுடமைவாதி சாமியார்.

எமர்ஜென்சி நேரம்! இவரை மிசாவில் கைது செய்வதா
வேண்டாமா என்ற குழப்பத்தில் மத்திய அரசு
அதிகாரிகள்! எதிகட்சிகாரர்கள் எல்லாம் கைது
செய்யப்பட்டு சிறையில்! இவரோ தனது தூள் பரத்தும்
பட்டிமன்றங்களை மூலை முடுக்கெல்லாம் நடத்திக்
கொண்டிருக்கிறார்! ஆன்மீக அன்பர்களும்,
பக்தர்களும் கூட "நிலைமை சரியில்லை" பேச
வேண்டாமே என்றனர். ஆனால் இவரோ கேட்கவில்லை
இவரின் சொற்பொழிவென்றால் கூட்டமும் ஏறுக்கு
மாறாய் வழக்கத்தை விட நாலு மடங்காய் குவிகிறது
ரகசிய போலீசும் ஏகமாய் குவிக்கப்பட்டு கண்
காணிக்கப்படுகிறது. மதுரையில், நேரு ஆலால
சுந்தர கோயிலில் பட்டிமன்றம்! சிக்கலாக பேசினால்
மேடையில் வைத்தே கைது செய்யலாம் என்று
என்று காத்திருந்தார் டி.எஸ்.பி. கோயில்
நிர்வாகிகள் முகத்தில் பீதி!. இவர் பேச எழுகிறார்!

"மனிதன் தூங்க செல்லும்போதுதான் அன்று
நடந்ததை எல்லாம் யோசிக்கிறான்! பட்டிமன்றங்களை
இரவில் நடத்துவதே அதற்கு தான்... படுக்கைக்கு
செல்வதற்கு சமீபத்தில் கேட்ட பேச்சு அதுதான்
என்பதால் சிந்தனையளவில் பாதிப்படைவான்!
யோசிப்பான்... தெளிவு காண்பான் என்பதற்காக
தான்... பட்டி மன்றங்களை இரவில் நடத்துவது!

ஓகோ ... இவ்வளவு அபாயம் உள்ளதோ இதிலே?
என்று சுதாரித்து பட்டிமன்றம் தேவையா என்றே
கூட பட்டிமன்றங்கள் நடக்கலாம் எதிர்" காலத்தில்
என்று பேச சூட்சுமமான கூட்டம் புரிந்து கொண்டு
விண்ணதிர கைதட்டுகிறது! கலவரமான கோயில்
நிர்வாகிகள் அவசரமாக திரும்பி டி.எஸ்.பி.யின்
ரியாக்ஷன் என்ன என்று கவனிக்கிறார்கள்,
தன்னை மறந்து அவரும் கைதட்டி கொண்டு
இருக்கிறார்.

அவர்தான் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.

பலரும் சரியாக கண்டுபிடித்து விட்டார்கள்.
1994ல் வெளிவந்த ஒரு இதழில் படித்த
செய்தி. இப்போதுள்ள சாமியார்களுக்கும்
அடிகளாருக்கும் இருக்கும் இடைவெளியை
நினைத்து பார்த்து வியந்தேன்.மேலும்
இவரின் எளிமை என் மனதை கவரவே
பதிவாய் போட்டுவிட்டேன்.

Tuesday, August 15, 2006

1. யார் இவர்?

இவரை பற்றிய சுவையான தகவல் கீழே. ஆனால் யார்
என்று குறிப்பிடவில்லை. நீங்களே கண்டுபிடியுங்கள்,
அப்போதுதான்சுவாரசியமாக இருக்கும்.

முதன் முதலாக மேல்சபை உறுப்பினரான ஆன்மீகவாதி
இவர்தான். இவரை தேர்ந்தெடுத்தவர்களோ 'தெய்வம்
இல்லை' என்று முழங்குபவர்கள்! இவரோ பழுத்த
ஆத்திகர். 'ஓநாயின் பசியும் தீரவேண்டும்... ஆடும்
உயிரோடிருக்க வேண்டும்' என்கிற எசகு பிசகான
கொள்கையை வாழ்க்கையின் கடைசி விளிம்பு வரை
கடை பிடித்தவர். ஆத்திகர், நாத்திகர் என்ற இரு
துருவங்களுக்கும் வேண்டியவராக இருந்த ஒரே நபர்
இவர்தான்.

கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தத்துடன் பொது
உடைமை மாநாட்டு மேடையில் காலையில் பேசினார்.
அதே தினம் மாலையில் பெரியார், அண்ணா கலந்து
கொண்ட வகுப்புரிமை பிரச்சாரக் கூட்டத்தில் பங்கு
கொண்டார். இரவு கோயில் திருவிழா ஒன்றில்
காமராஜ் தலைமையில் ஆன்மீக சொற்பொழிவு
நிகழ்த்தினார். மூன்றும் ஒரே தினத்தில் நடந்தது!.
ஜிவா, அண்ணா, காமராஜ் மூன்று பேரும் மூன்று
வெவ்வேறு களன்களின் தளபதிகள்! மூன்று பேருக்குமே
வேண்டியவராக இருந்த ஒரே நபர் இவர்தான்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இவர் குதித்த போது
மாநிலமே ஸ்தம்பித்தது. 'அரசியலில் இவரா' என்று
தேசம் முழுக்க கேள்விக்குறி...! மொழியை காப்பதற்காக
துறவை கூட துறக்க சித்தமாயிருந்த இவரை பார்த்து
ஆச்சரியபடாதவர்கள் இல்லை சொல்லப்போனால், இவர்
கலந்து கொண்டதால்தான் அந்த போராட்டத்திற்கே ஒரு
வெகுஜன அங்கீகாரம் கிடைத்தது! அதுவரைக்கும்
மொழிப்போராட்டம் என்னவோ ஆத்திகர்களுக்கு
சம்பந்தமில்லாத விஷயம் என்பது போன்ற மாயையை
உடைத்தார். சமயவாதிகள் முணுமுணுத்தபோது
"அப்பரும் அருணகிரிநாதரும் போற்றி பாடின
தமிழுக்காக தான் நாமும் போராடுகிறோம். அந்த
மொழிக்கு ஆபத்து வரும்போது நம்மை விட போராடுகிற
உரிமை யாருக்கு உண்டு?" என்று கேட்டு அவர்களது
வாயை அடைத்தார்.

ஆன்மீக மேடைகளில் சுலோகங்களும், தேவாரமும்,
திவ்ய பிரபந்தமும் பாடப்படுவது தான் வழக்கம்! முதன்
முறையாக அதனை மாற்றி பட்டுக்கோட்டை கல்யாண
சுந்தரத்தையும், கண்ணதாசனையும், ஸ்டாலினையும்,
லெனினையும் மேற்கோள் காட்டினது இவர்தான்! இந்த
அதிரடி செயலை பார்த்ததும் பழமைவாதிகளுக்கு
மூச்சடைத்தது. இவருக்கு எதிர்ப்போ எதிர்ப்பு. ஆனால்
இவர் அசைந்து கொடுக்கவில்லை.

மொழிப்போராட்டத்தில் கலந்து கொண்ட இவரை கைது
செய்ய அரசு உத்தரவிட்டது. மாவட்ட ஆட்சியர்
ராஜேந்திரன் கலங்கி போனார். தினசரி தான் வணங்கி
விட்டு வரும் மாமனிதரை கைது செய்வதா? மறுத்து
விட, கோபமான காங்கிரஸ் அவரை வேறு ஊருக்கு
மாற்றியது! புதிதாய் வந்த ஆட்சியரும் இவரை கைது
செய்ய தயங்கினார். கிராம மக்களையும் மீறி இவர் மீது
நிழல் கூட பட முடியாதே! நிலைமையை உணர்ந்த இவர்
தானாக போய் சென்று நீதிமன்றத்தில் சரணடைந்து
ரூ 350 அபராதம் கட்டினார். அண்ணா முதல்வரானதும்
அந்த தொகை திருப்பி தரப்பட்டது.

நாளை தொடரும்...