எல்லையற்ற அன்பு கொள்வோம்

Saturday, June 17, 2006

கொப்பரைத்தாத்தா - சிறுகதை


மனோ சாதாரணா நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் படிக்க வைப்பதிலும் இன்னபிற விஷயங்களிலும் அவனது அப்பா எந்த குறையும் வைக்கவில்லை. ஏனெனில் அந்த குடும்பத்தில் கல்லூரி வரை சென்று படிக்கும் ஒரே பையன் என்பதால். மின்சாரவாரியத்தில் கணக்கெழுதும் அப்பா, கல்யாணமான் அக்கா, காத்திருக்கும் அண்ணன், இன்னும் பள்ளிய்றுதியில் இருக்கும் தம்பி என்று சற்றே பெரிய குடும்பம்தான் என்றாலும் அப்பாவின் மாதவருமானம் போதுமானதாகவே இருந்தது. எல்லாம் அம்மாவின் கச்சிதமான பட்ஜெட்டில். பற்றாக்குறையாக இருந்தாலும் அடுத்தடுத்த மாதங்களில் சரி செய்து நிர்வாகத்தை சீராக வைத்துகொள்வாள்.

சக்திக்கும் மீறிய கல்லுரியில்தான் படிக்க வைத்தார் அப்பா. செமஸ்டர் பீஸ், தேர்வுக்கட்டணம்னு எப்படி எப்போது கேட்டாலும் கொடுத்து விடுவார். ஆனால் அந்த தொகயை புறட்டுவதற்கு எவ்வளவு சிரமபட்டிருப்பார் என்பதை அவர் கையில் இருந்து வாங்கும்போது அவர் கண்களில் பார்ப்பேன். இருபது வருடங்களாய் தினமும் அலுவலகக்திற்கு சைக்கிளில் சென்று வந்தே அவரது கால்கள் தேய்ந்திருக்கும். சமீபமாகத்தான் லோன் போட்டு ஒரு பெரிய வண்டி வாங்கினார். அதற்கு முன் எங்கு சென்றாலும் சைக்கிள்தான். அவரது கல்யாண சீராக வந்த சைக்கிள் என்பதால் அதை பத்திரமாகவே பாதுகாத்து வைத்திருந்தார். அதற்கு செலவு செய்த காசிற்கு பத்து சைக்கிள் வாங்கி இருக்கலாம்னு அம்மா வேடிக்கையாக சொல்வாள்.

பெரும்பாலான ஞாயிற்றுகிழமை காலைபொழுதினை சைக்கிளை துடைப்பதிலும் எண்ணை விடுவதுமாக செலவிடுவார். பைக் வாங்கியதால் அதற்கு சற்று ஓய்வு ஆனால் அப்பாவுகில்லை.

0

இன்னும் பத்து நிமிஷந்தாண்டா இருக்கு சீக்கிரம் கிளம்புடா மனோ என்று எழுப்பினான் செந்தில். அவசர அவசரமா பேருக்கு ஏதோ அள்ளி வாய்ல போட்டுட்டு மூலையில் ஸ்னேகா சிரித்த முகத்துடன் இருந்த ஒரு நோட்டினை எடுத்துகிட்டு கிளம்பினோம். சக மச்சிகளின் வணக்கங்களை ஏற்று திருப்பியபடியே செல்லும்போது பயங்கரமான சத்ததுடன் பைக் ஒன்று சீறிப்பாய்ந்து சென்றது. மச்சி இந்த காக்கா நாரயணன் கொஞ்சம் ஒவராவெ படம் காட்ராண்டா. பொண்ணுங்க முன்னாடி பைக்கை வச்சி பிஸ்து காமிக்கறது, கிட்டக்க வரும்போது வேகத்தை கூட்டுறதுனு இவண் அலப்பறை தாங்க முடியலை ஏதாவது செஞ்சே ஆகணும்டானு செந்தில் சொன்னான்

விட்றா அவன் கிடக்குறான். வகுப்புக்கு டைம் ஆச்சு என்றபடியே நடையைக்கட்டினான் மனோ. ஆனால் செந்திலுக்கு கொஞ்சம் ஆத்திராமகவே இருந்தது. ஏன்னா இவண் ஆள் லதாகிட்ட வண்டில உக்காந்துகிட்டே கடலை போட்டதை பாத்துட்டான் அதான் காரணம்.
உணவு இடைவேளை வந்தது கேட்டான் செந்தில். டேய் மனோ உன் வீட்ல பைக் இருக்காடா?
ஏன் கேக்குற. இருக்கு

சரி நான் சொல்லுறதை கேளு அடுத்தவாரம் ஊர்ல இருந்து வரும்போது வண்டியை எடுத்துகிட்டு வாடா மாப்ளே. வந்ததும் அந்த காக்கா நாராயணன் முன்னாடி போய் நாம் பிஸ்து காமிச்சாதான் அவன் அடங்குவான். என்ன சொல்றே நீ?
வேணாம்டா மச்சி எங்கப்பாவே இப்ப கொஞ்ச நாளாதான் சொகுசா போய்ட்டு வர்றார் அதை கெடுக்க வேணாம்டா செந்தில்.

நான் என்ன உன்னை நிரந்தரமா இங்கயே எடுத்துட்டு வரசொல்ரேணா, சும்ம ஒரு வாரம்தாண்டா மாப்ளே. அப்புறம் கொண்டுபோய் விட்டுடலாம்.

நாளைக்கு காலேஜ் முடிஞ்சா நாலு நாள் தொடர்ந்தாப்ல லீவ் வருது திரும்ப வரும்போது எடுத்துட்டு வந்திடு.

ஏன் இவ்ளோ பேசறியே உன் வீட்ல எதோ வண்டி இருக்குனு சொன்னியே அதை எடுத்கிட்டு வாயேன் என்றேன்.

நான் மட்டும் அதை எடுத்திட்டு வந்தேன் காலேஜே என்னை பாத்து சிரிப்பா சிரிச்சிடும்.
ஏண்டா அப்படி சொல்றே?

சின்னவீடு படத்திலா பாக்யராஜ் வச்சிருப்பாரே அந்த வண்டி மாதிரிதாண்டா அது. பஜாஜ்ல போட்ட முதல் வண்டி அதுவாதான் இருக்கும். அதனாலதான் உன்னை எடுத்திட்டு வர சொல்றேன்.

என்னடா யோசிக்கிற இப்படி யோசிச்சா நாளைக்கு ஆனந்திகிட்டயும் பல்லை காமிச்சிட்டு நிப்பான் அந்த காக்கா.

ஆனந்திக்கும் எனக்கும் இருப்பது நட்பு மட்டுமே தான். இருந்தாலும். செந்தில் இப்படி சொன்னதும் உள்ளூர கொஞ்சம் கலக்கமாகத்தான் இருந்தது.

சரிடா மச்சி ட்ரை பண்றேன்னு மேலுக்கு சொன்னாலும் உள்ள முடிவு பண்ணிட்டேன் எப்படியாவது தள்ளிட்டு வந்திடணும்னு.

பெரம்பலூர் பஸ் ஸ்டாண்ட். மச்சி மறந்திடாத பெட்ரோலைப்பத்தி கவலைப்படாத பாத்துக்கலாம்னு சொல்லிகிட்டே பஸ்ல ஏறினான் செந்தில்.

என் ஊருக்கான பஸ்ஸை தேடி ஜன்னலோர சீட் பிடித்து உட்கார்ந்ததும் கொஞ்ச நேரம் வெளியில் வெறித்து விட்டு விகடனை புரட்டினேன். நாலாவது பக்கம் புறட்டும்போதே தூக்கம் சொக்க கண்ணை சற்று மூடினேன்.

நாலு மணி நேரப்பயணம். தம்பி இறங்க வேண்டிய இடம் வந்துடுச்சினு எழுப்பும்வரை.கண்ணை கசக்கிகொண்டே அழுக்குபையோடு இறங்கினேன். இரண்டு வாரத்து அழுக்கு துணிகள் பையினுள் துருத்திக்கொண்டிருந்தது. விடுதியில் துவைக்க சோம்பேறித்தனம். அப்படியே வீட்டுக்கு எடுத்திட்டு வந்தா அம்ம சலவை செஞ்சிடுவாங்க என்ற நினைப்புதான்.

சரியாக ஒரு மைல் தூரம் நடக்க வேண்டும். அதுக்குள்ள யாராவது வந்தா, வண்டில போனா தொத்திகிட்டே போய்டலாம்னு மனசு கணக்கு போட்டுகிட்டே கண்ணு தேடுது. அப்படி யாரும் வர்ற மாதிரி தெரியலை. பையை தூக்கி தோளில் மாட்டிக்கொண்டு நடந்தேன்.
தூரத்தில் யாரோ சைக்கிளை ரிப்பேர் செய்ர மாதிரி உக்காந்து இருக்கவே யார்னு பார்த்தேன்.
கொப்பரை தாத்தாதான் அவரோட சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டி கொண்டிருந்தார். அறுபதை கடந்த ஒற்றை நாடி சரீரமாக இருந்தாலும் நான் உழைச்சிதான் சாப்பிடுவேன். ஓய்வு எடுக்க வேண்டிய வயசு எனக்கு இன்னும் வரலை என்பதை அவரை பார்த்தவுடனே கண்டுபிடித்துவிடலாம். அதனாலே அவர் மீது எனக்கு தனி மரியாதை. ஊர் ஊரா போய் ஜோசியம் பாக்குறதுதான் அவர் தொழில். என்றாலும் நான் அவரிடம் ஜோசியம் பார்த்ததில்லை. அவரும் வற்புறுத்தியதில்லை. எந்த ஊர் போனாலும் சைக்கிள் தான். வழில எங்காவது பழுதாச்சினா சரி பண்றதுக்கு சாமானை கேரியர்ல கட்டி வச்சிருப்பார். அன்றைக்கும் அப்படிதான் பஞ்சர் போல. எல்லம் முடிஞ்சி எழுந்திருக்குபோதுதான் நானும் போனென்.

என்ன கொப்பர தாத்தா எப்படி இருக்கீங்க்? தொழில் எப்படி போகுது என்றபடியே அருகில் சென்றேன். நள்ளிரவு நேரத்திலும் துல்லியமாக அடையாளம் கண்டுகொண்டார்.
எங்க தம்பி உங்க மாதிரி ஆளுங்க எல்லாம் இப்போ ஜோசியத்தை நம்புறதில்லை. நம்புறவங்களையும் கெடுக்கறிங்க அப்புறம் எப்படி தொழில் நல்லா போகும். எனக்கு அவரிடம் பிடித்ததே இந்த வயதிலும் அவரின் அசாத்திய உழைப்புதான். அவரோட நிஜப்பெயர் தெரியலனாலும் அவரோட பேரனின் பட்டப்பெயர் கொப்பரை, அதனால அவரை கொப்பரைதாத்தா என்றே அழைப்பேன்.

இரண்டு பேரும் பேசிகொண்டே நடந்து சென்றோம். வழியில்தான் அவர் வீடு. சரி நான் வரேன் தம்பி என்று சொல்லி அவர் விடைபெறும்முன் அவரின் கிளியை ஆசையாக இன்னொருமுறை தடவிக்கொடுத்தேன்.

அம்மா எனக்காகவே கண் விழித்திருந்தாள். வழக்கமான விசாரிப்போட நாளிதழில் கண்ணை பதிய விட்டார் அப்பா. முகம் கழுவிட்டு சாப்பிடவா என்று அம்மா துண்டை நீட்டினாள். இப்பவே சொல்லிடலாமா இல்லை நாளைக்கு பொறுமையா சொல்லிக்கலாமா என்ற யோசனையிலே உணவை முடித்தேன்.

மணி ஒம்பது ஆகுது இன்னும் என்ன தூங்கறான் எழுப்பு அவனை என்று அப்பா சொன்னது தெளிவாகவே கேட்டது. விடுங்க வீட்டுக்கு வந்தாதான் தூங்குறான் தூங்கிட்டு போகட்டும். பல இக்கட்டான சமயங்களில் இது போல வாதாடி என்னை காத்திடுவாள்.

வண்டியை நல்லா துடைச்சிட்டு அழுக்கு துணியை சன்னலில் சொருகிவிட்டு. ஒரு திருப்தியோடு சீட்டில் அமர்ந்தார். முதல் உதையிலே ஸ்டார்ட் பண்ணிட்டாரே என்ற ஆச்சரியத்தோட காபிகுடிச்சிகிட்டே திண்ணைல அமர்ந்தேன். எப்பவும் அப்பா அலுவலகம் செல்லும்போது வாசல் வரை வந்து வழியனுப்புவாள் அம்மா.அப்படியே என்னருகிள் வந்து என் தலை கோதினாள். நம்ம கோவிந்தனை வரச்சொல்லி இருக்கேன் முடியை வெட்டிக்க என்றபடியே காலி டம்ளரை எடுத்து கொண்டு சமயலறை சென்றவளை பின் தொடர்ந்தேன்.
அம்மா இந்த முறை நான் காலேஜ் போகும்போது வண்டி எடுத்துட்டு போறேம்மா என்று நைசாக அடி போட்டேன். உனக்கு எதுக்குடா வண்டி வேணும் இப்போ ஹாஸ்டல்ல தான இருக்குற பக்கத்திலயே காலேஜும் இருக்கு அப்புறம் வண்டி ஏன்? அதுவும் இல்லாம வேகமா போற ஆளு நீ ஒண்ணுகெடக்க ஒண்ணு ஆச்சுனா என்ன செய்வே. இல்லமா நான் மெதுவாவே போறேன் போய்ட்டு அடுத்த வாரமே திரும்பி வந்துடுறேன். நீதான் எப்படியாச்சும் அப்பாகிட்ட சொல்லி வாங்கி தரணும் என்றதும் யோசித்தாள். இது போதும் எப்படியும் க்ரீன் சிக்னல் கிடைச்சுடும்.

மதியம் கொஞ்சம் சீக்கிரமாகவே வந்துவிட்டார் அப்பா. சாப்பிட்டு கொண்டிருக்கும்போது மெதுவாக விஷயத்தை ஆரம்பித்தாள். இப்ப எதுக்கு அவனுக்கு வண்டி வேனுமாம் அதெல்லாம் ஒண்ணும் வேணாம் பஸ்ஸுலயே போகட்டும் அதான் நல்லது.
அங்கிருந்து நான் விருட்டென்று கோபமாக வெளியேறியதுமே புரிந்துகொண்டுவிட்டார். இருந்தாலும் எதையும் என்னிடம் பேசவில்லை.

என் கோபம் எல்லாருக்கும் தெரிய வேண்டி யாரிடமும் பேசாமல் உம் என்று முகத்தை வைத்துகொண்டு இருந்தேன். இரவு கூட பேருக்கு சாபிட்டுவிட்டு படுக்க போனேன். நாளெல்லாம் தூங்கியதால் உறக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தேன்.

அம்மாவும் அப்பாவும் வெளித்திண்ணையில் அமர்ந்து பேசிகொண்டிருப்பது தெளிவாகவே கேட்டது. பெரும்பாலான விஷயங்களை அனைவரும் உறங்கிய பிறகே பேசுவார்கள். தோளுக்கு மேலே வளர்ந்து விட்ட என்னிடம் வீட்டு பிரச்னைகளை பகிர்ந்து கொள்ள மறுக்கிறார்களே என்ற வருத்தம் இருந்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்வதில்லை.

ஒரு வாரந்தானேங்க போனா போகட்டும் பையன் ஆசைப்படுறானே என்று அம்மா சொன்னாள். அதுக்கில்ல வசந்தா இவண் கண்ணு மண்ணு தெரியாத வேகத்தில போய் ஏதாச்சும் ஆச்சுனா நாம் என்ன பண்றது. நான் வேற ஆபிஸ்ல எல்லார்கிட்டயும் பெருமையா சொல்லி வச்சிருக்கேன். என்கிட்ட பொருமையா போய் வறேன்னு சொல்லி இருக்காங்க.
சரி சரி உன் இஷ்டம்.

அனுமதி கிடைத்த சந்தோஷத்திலே எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை.
இந்தா வசந்தா இதுல ஆயிரம் ரூபாய் இருக்கு மெஸ்பில் போக மீதிய செலவுக்கு வச்சிக்க சொல்லு என்றபடியே அம்மாவிடம் சாவியை கொடுத்தார். பத்திரமா போய்ட்டு வா என்று வழக்கம்போல சொன்னாலும் இன்று ஏதொ ஒன்று அவர் முகத்தில் வித்யாசம் தென்படுவதை உணரமுடிந்தது.

அம்மாவின் சற்று கூடுதலான வழியனுப்பும் படலம் முடியும்போது கையில் முந்நூறு ரூபாயை திணித்தாள். கிளம்பிவிட்டேன்.

சரியாக இரண்டு மணி நேரத்தில் காலேஜில் இருந்தேன். ஆனாலும் கிளம்பும்போதே தாமதமாக கிளம்பியதால் முதல் வகுப்பு பாதி முடிந்திருந்தது. நேராக விடுதிக்குள் வண்டியை செலுத்தினேன். அறையில் எனக்காக செந்தில் காத்திருந்தான். ஏண்டா க்ளாஸ் போகாம இங்க உக்காந்து இருக்க என்றபடியே அவன் மேல் சாவியை வீசினேன்.

சொன்னபடியே வந்துட்ட மச்சி சரி சரி லேட் ஆனது ஆச்சு அப்படியே சினிமாக்கு போலாம் மதியம் வசந்தம்ல ஒரு பிடி பிடிச்சிட்டு தீபக் ரூம்ல ஒரு குட்டிதூக்கத்தை போட்டுட்டு எந்திருச்சோம்னா நாலரை மணிக்கு சாரதா காலேஜ் விடுற நேரத்தில பிகர்களை பாத்துட்டு சாயந்திரம் திரும்பரதுக்கு சரியா இருக்கும்னு கட கடனு சொல்றான். எனக்காக கத்திருந்த நேரத்தில இதைத்தான் யோசிச்சிடு இருந்துருப்பான்னு என்னால யூகிக்க முடிஞ்சாலும் அதை வெளிக்காட்டிக்காம அவனுடன் கிளம்பினேன்.

எந்த படம் போகலாம்னு ஒரே குழப்பம். மாப்ளே ராஜால தீனா போட்டுருக்கான் வேற எல்லாத்திலயும் மொக்க படமாதான் ஓடுது. சரி அதுக்கே போகலாம் என்று சொல்லி வேகத்தை கூட்டினேன்.

படம் முடிந்து வெளிவரும்போது கொஞ்சம் முறுக்கோடுதுதான் வந்தேன். படம் பாத்த எபெக்ட் கொஞ்ச நேரமாவது வேணாமா?. தியேட்டர் வாசலின் வேப்ப மரத்தடியில் அடுத்த காட்சிக்கு செல்ல வேண்டியவர்கள் குந்த வைத்து உட்கார்ந்திருந்தார்கள். அவர்களை ஏளனமாக பார்த்தபடியே என் கண்கள் வண்டியை தேடியது.

அப்போதுதான் ஏதெச்சையாக பார்த்தேன். நம்பவே முடியலை இருந்தாலும் அவர் பக்கத்தில் துருப்பிடித்த காற்றடிக்கும் பம்ப் சொருகியபடி அவரின் சைக்கிள் நின்று கொண்டிருந்தது நம்ப வைத்தது. எப்படி? எப்படியும் நூற்றியிருபது கிலோ மீட்டர் இருக்கும் நாம பெரிய வண்டியில வருவதற்கே மலைப்பாகவும் முதுகு வலியும் சேர்ந்து அழுத்தியதே என்ற ஆச்சரியத்தோடு கிளியை சீட்டு எடுத்து போட சொல்லும் கொப்பரைத்தாத்தாவை பார்த்தேன். வழக்கமாக அவரை பார்த்தவுடன் ஒரு குழந்தையின் உற்சாகத்தோடு சென்று பெசும் நான் மவுனமாக நின்றிருந்தேன். எனக்குள் ஒரு குற்ற உணர்வு மேலோங்குவதை நன்றாகவே உணரமுடிந்தது. அதுவரை முறுக்கோடு காலரை உயர்த்திவிட்டிருந்ததை மிக கேவலமாக எண்ணினேன். நொடிப்பொழுதில் மாறிவிட்டிருந்தது எல்லாம்.

அறுபது வயசுக்கிழவன் இவ்வளவு தூரம் வந்து உழைக்கவேண்டிய அவசியம் இல்லாதிருந்தபோதிலும் உழைக்கிறார். இருபது வயசுப்பையன் பந்தாவுக்காக வண்டியில பறக்கிறோமே என்ற எண்ணம் ஓடியது. அதேநேரம் நம் அப்பா இந்த வெய்யிலில் அலுவலகத்திற்கு சென்று வர மறுபடி சைக்கிளுக்கே திரும்ப வைத்ததை நினைத்து வேதனைப்பட்டேன். இப்படி பலவாறாக என் சிந்தனைகளை மாற்றிய கொப்பரை தாத்தாவை சரியான தருணத்தில் வழிகாட்டிய கடவுள் போலவே பார்த்தேன்.

தெளிந்த ஒரு பெருமூச்சோடு இழுத்துகொண்டிருந்த சிகரெட்டை கீழிட்டு அணைத்தேன்.
ஏண்டா மச்சி ஒரு மாதிரியா இருக்க படம் பிடிக்கலயா என்றபடி தோளை உரசி நின்ற செந்திலை பார்த்து தீர்க்கமாக சொன்னேன்.

இப்பவே நான் வீட்டுக்கு போகணும் மாப்ளே என்ற என்னை ஆச்சரியத்தோடும் அதிர்ச்சியோடும் பார்த்தான்.


கதிர்

19 comments:

Anonymous said...

neat script

துளசி கோபால் said...

'வாழ்க்கைப் படிப்பு' எங்கிருந்துவேணுமுனாலும் வரலாம்.

நல்ல கதை(??)

Anonymous said...

kathai nalla eruku

கதிர் said...

நன்றி துளசி அவர்களே.

\\நல்லா இருக்கு (??). அது என்ன கேள்விக்குறி. எனக்கு புரியலையே?

தம்பி

வல்லிசிம்ஹன் said...

நல்லா இருந்தது தம்பி.
எல்லோருக்கும் இப்படித் தெளிவு வந்தால் நல்லாத்தான் உலகம் மாறிவிடும்.
இருபது வயது போரட்டங்கள் தான் எத்தனை!! வாழ்த்துகள்.

siva gnanamji(#18100882083107547329) said...

நல்ல திருப்பம்...அப்பா கொடுக்க மறுத்திருந்தால் இவர் முரண்டு பிடித்து...தடம் மறி போயிருக்கும்

கதிர் said...

வருகைக்கு நன்றி manu! உங்களை போல பெரியவர்கள் வாழ்த்துவது சந்தோஷமா இருக்கு.
தொடர்ந்து வரவேற்கிறேன்

சத்தியா said...

ம்... நல்ல கதை. பாராட்டுக்கள்!

யாத்ரீகன் said...

நல்லாயிருக்குங்க நீங்க தேர்வு செய்த கதைக்களம்.. ஆனா இத்தகைய சின்ன சின்ன சம்பவங்கள் நிறைய நடக்கும் இந்த வயசுல, ஆனா அது மிகப்பெரிய மனமாற்றத்தை கொண்டுவந்துராதுல ?! ஆனா இயல்பா வந்திருக்கு..

கதிர் said...

சின்ன சின்ன சம்பவங்கள் தரும் படிப்பினைதானே அடுத்த முறை தவறு செய்யாதவாறு
எச்சரிக்கை கொடுக்கும். வாழ்க்கையில் தினம் தினம் நாம் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் பல
இருந்தாலும் சில நிகழ்வுகள் நல்ல மாற்றத்தை கொண்டு வரும். தங்கள் கருத்திற்கு நன்றி.
தொடர்ந்து வரவேற்கிறேன்.

கதிர் said...

வாங்க சத்தியா. நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

யாத்ரீகன் said...

நானும் இருக்குற கொஞ்ச நஞ்ச மூளைய கசக்கி, மற்ற எந்த படைப்புகளோட சாயல் வரகூடாதுனு எழுதி பதிஞ்சப்புறம் பார்த்தா போட்டி முடிஞ்சிருச்சு..

உங்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

அப்படியே கொஞ்சம் நம்ம பக்கம் வந்து எப்படி இருக்குனு சொன்ன உதவியா இருக்கும்....

யாத்ரீகன் said...

நானும் இருக்குற கொஞ்ச நஞ்ச மூளைய கசக்கி, மற்ற எந்த படைப்புகளோட சாயல் வரகூடாதுனு எழுதி பதிஞ்சப்புறம் பார்த்தா போட்டி முடிஞ்சிருச்சு..

உங்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

அப்படியே கொஞ்சம் நம்ம பக்கம் வந்து எப்படி இருக்குனு சொன்ன உதவியா இருக்கும்....

கதிர் said...

நன்றி தமிழா தமிழா.

கதிர் said...

யாத்திரீகன். கதை வாசிச்சேன் நல்லா இருந்தது. போட்டிக்கு அனுப்பி இருந்தால் நன்றாக
இருந்திருக்கும். அடுத்த முறை கவனமா முன்னாடியே அனுப்பிடுங்க.

Anonymous said...

நல்லாதானுங்க இருக்கு , எளிய நடையில் இருக்குங்க, எனக்கும் இந்தமாதிரிதான் குற்றௌணர்வுகள் உள்ளது.

நன்றி குமரன்@முத்தமிழ்மன்றம்.கொம்

கதிர் said...

நன்றி குமரன்

Costal Demon said...

நல்ல நடை... நல்ல கதை... வாழ்த்துக்கள், தொடருங்கள்...

அன்புடன்,
இராம்ஸ்

கதிர் said...

வருகைக்கு நன்றி ராம்ஸ்