எதிர்பாலினம் மேல் எப்போதுமே ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. எந்த வயது
ஆனாலும் பருவத்துக்கு ஏற்ப அது மாறுபடுகிறது. வாலிபத்தில் பெண்களை கவர
ஏக்கப்பட்ட யுக்திகள் செய்கிறார்கள். அன்பை பெற, காதலைப் பெற, நட்பைப் பெற
என எந்த பருவத்திலும் ஏதாவதொன்றை செய்துகொண்டேதான் இருக்கிறோம்
தன்னிச்சை செயல்போல.
ரெண்டு நாள் முன்னாடி என்னோட நண்பன் ஒருத்தன் வந்தான். அதிக பழக்கமில்லை
நான் படித்த கல்லூரியில் படித்ததாக சொன்னான்.(ஒழுங்கா காலேஜ் போயிருந்தாதான
தெரியும்) அப்படியே துபாய் வந்து ஒரு வருட பழக்கம் மரியாதையான பையன்.
இங்க பக்கத்துலதான் இருக்கேன் பாத்து ரொம்ப நாளாச்சு வா பாப்போம்னு
கூப்பிட்டதால போனேன். அங்க ஒரு பொண்ணு கூட உக்காந்திருந்தான்.
மடிமேல ஒரு மடிக்கணினி(நாதாறி இதுல படம் பாக்கறது எப்படின்னு எங்கிட்ட
கேட்டது இது)
"வாடா எப்படி இருக்க?"
"அடப்பாவி இதுக்கு முன்னாடி என்னை வாடா போடான்னு கூப்பிட்டதில்ல
ஒரு பொண்ணு பக்கத்துல இருந்தா எப்படிலாம் படம் காட்றானுங்க"
நான் நல்லாதான் இருக்கேன் இவுங்க யாரு?
"இவங்க என் கொலீக் பேரு கனிமொழி"
"நல்ல தமிழ்ப்பெயர் எனக்கு ரொம்ப பிடிச்ச பேருங்க"
"என்னோட பேர் கதிர்"
என்னடா மச்சி லேப்டாப்ல படம் பாக்கறது, பாட்டு கேக்கறதுலாம் எப்படின்னு
இப்ப கத்துகிட்டயா? பாவிப்பய ஒண்ணுமே தெரியாம லேப்டாப் வாங்கிட்டான்
நாந்தாங்க எல்லாத்தையும் கத்துகுடுத்தேன். (எனக்காடா ஆப்பு வைச்ச நீயி)
பையன் திரு திருன்னு முழிக்கறான்
மாப்ள நாம அந்தபக்கம் போய் தனியா பேசுவோம் வான்னு அப்படியே
அத்துவிட்டு கூட்டிகிட்டு வந்துட்டான்.
இந்த மாதிரி நண்பனா இருந்தாலும் பக்கத்துல ஒரு பொண்ணு இருந்துட்டா கெத்து
காமிக்கிறேன்னு இப்படி பண்றானுங்க. எது இவனுங்கள இப்படி பண்ண வைக்குது.
ஒரு பைக் சண்டியர் நம்ம ப்ரெண்டு தலகீழ ஓட்டுவாரு அதுவும் பொண்ணுங்க
ட்யூஷன் விட்டு வர்ற நேரம் வீலிங், ஸ்கிட்டிங்னு இல்லாத ரவுசு ஒருநாள்
எக்குத்தப்பா ஒரு பிகர் முன்னாடி வீலிங் பண்றேன்னு சில்லறை வாங்கி ரெண்டு
பல்லு அவுட்.
ஏன் இப்படி இயல்புக்கு மாறா நடக்கறது? எல்லாமே ஒரு ஈர்ப்புதான், எந்த
நேரத்துலயும் நாம அடுத்தவங்க கவனத்துல இருக்கணும். நம்மள பத்தி நாலு
பேர் நினைச்சிட்டே இருக்கணும். ஆனா இந்த பொண்ணுங்க பாருங்க எந்த
கவலையுமில்லாம அதுகபாட்டுக்கு இருக்கும். நம்மாளுங்கதான் உழுந்து பிறண்டு
வித்தை காட்டுவானுங்க.
சுகந்தி க்ராஸ் பண்ணான்னா பாண்ட்ஸ் பவுடர் வாசனை அடிக்குதுன்னு அடுத்த
மாச மளிகை லிஸ்ட்ல அதை சேக்க சொல்லி அடம்பிடிச்சி அடிவாங்கியிருக்கேன்.
நாமளும் அதே பவுடர போட்டா வாசனையாவும் இருக்கும் மேட்சிங்காவும்
இருக்கும்னு ஒரு எண்ணம்.
நம்ம பய ஒருத்தன் இருக்கான் கார்த்தி கார்த்தின்னு சதா க்ளாஸ் பொண்ணுங்களுக்கு
சேவை செஞ்சிகிட்டே இருக்கணும்னு நல்ல எண்ணம். பயாலஜி லேப்ல எலி,
தவளை சோதனையின் போது அவங்கவங்க கண்டிப்பா எலி, தவளை பிடிச்சிட்டு
வரணும். நம்ம பய வீட்டுல எலி ஜாஸ்தி. மச்சி எனக்கும் சேர்த்து புடிச்சிட்டு
வாடான்னு சொன்னா எங்க வீட்டுல இருக்கறதே ஒரே ஒரு எலி. அதையும்
உங்கிட்ட குடுத்துட்டா நான் எங்க போறது? வேற எங்கனா பாத்துக்கன்னு
சொல்லுவாரு. மறுநாள் மஞ்சுளாக்களுக்கும், கவிதாக்களுக்கும் பொறில இருந்து
பக்குவமா உசுரோட எலிய எடுத்து குடுப்பாரு அவ்ளோ நல்லவரு.
இதே தவளை பரிசோதனைன்னா கேக்கவே வேணாம் பக்கத்துல எதாச்சும் ஏரி,
குளம், குட்டைன்னு விழுந்து எந்திரிச்சி ரெண்டு கைலயும் அஞ்சாரு தவக்களைய
பிடிச்சிகிட்டு வீரமா நடந்து வருவாரு. இப்படி டிஸ்ட்ரிபியூட் பண்றதாலயே அவர்
பேர் தேவர் பிலிம்ஸ்னு ஆகிப்போச்சு.
அஞ்சாப்பு படிக்கும்போது மதியம் கணக்கு வாத்தி பீரியடுன்னா டவுசர் ஈரமாகும்
எல்லாருக்கும். ஒரு காதுல பெரிய ஓட்டை இருக்கறதுனால அவர் பேர் தொளக்காது
வாத்தி. இவர் குடுக்கற தண்டனையே வித்தியாசமா இருக்கும். அதாவது ஒரு
கேள்வி கேட்டு நமக்கு தெரியலன்னு வச்சிக்கோங்க அந்த கேள்விக்கு எவன்/எவள்
சரியாக சொல்றாங்களோ அவங்க வந்து ரெண்டு கன்னத்துலயும் ஒரே நேரத்துல
அடிக்கணும். பையனே சரியான விடை சொல்றான்னா முன்பகைய பொறுத்து அடி
பலமாவும்,சன்னமாவும் விழ வாய்ப்பிருக்கு. ஏதோ ஒரு புள்ளைக்கு விடை
தெரியாம போய் பையன் சரியா சொல்லிட்டான்னு வைங்க அந்த புள்ளைக்கு
கன்னம் நோகாம தடவி குடுத்துட்டு வருவான். தம்பி இங்க வா "இப்படி"
அடிக்கணும்னு செவுளே கிழியற மாதிரி அடிப்பாரு தொளக்காது வாத்தி.
இந்த மாதிரி பொண்ணுங்கள்னா மட்டும் தியாகி ஆகி வாத்திகிட்ட அடிவாங்கறது
எதனால?
நானே என் சட்டைய இஸ்திரி பண்ணா சுருக்கம் சரியா போகமாட்டேங்கதுன்னு
இஸ்திரிகாரன்கிட்ட போட ஆரம்பிச்சது சரியா மீசை அரும்பற வயசிலதான்.
யாராச்சும் நம்மள கவனிக்கணும், யாராச்சும் நம்மள நினைக்கணும். இந்த மாதிரி
ஏன் ஹார்மோன் திடீர்னு மாறிப்போகுது.
ஏண்டா இம்புட்டு பேசறியே நீ மட்டும் என்ன ஒழுங்கான்னு யாரும் கேக்காதிங்க
நான் அதே மாதிரிதான்னாலும் ஓவர் பந்தா விட மாட்டேன். சில பேர் இருக்கானுங்க
பிகர்கள பாத்தா ப்ரெண்ட்ஷிப்ப மறந்து ஏத்தமா பேசுவானுங்க பாருங்க அவன்களுக்கு
இந்த பதிவு கண்டனங்களை தெரிவிக்கிறது.
திருந்துங்கடா அரைடவுசர் மண்டையனுங்களா...
தலைப்ப பார்த்து பதிவு நல்லா இருக்கும்னு படிங்க வந்தவங்ககிட்ட மன்னிப்பு
கேட்டுக்கறேன்.
எல்லையற்ற அன்பு கொள்வோம்
Showing posts with label வாலிப வயசு. Show all posts
Showing posts with label வாலிப வயசு. Show all posts
Sunday, April 08, 2007
Thursday, September 21, 2006
ரெண்டாவது ஆட்டம் - வாலிப வயசு!!! - 2
திஸ்கி
இந்த பதிவு கொஞ்சம் கவிச்சியாதான் இருக்கும்.
அதனால முன்னாடியே சொல்லிடறேன். பின்னாடி
யாரும் குத்தம் சொல்லக்கூடாது சொல்லிப்புட்டேன்.
பள்ளி தேர்வுகள் முடிந்தவுடன் நடந்த சம்பவம் இது.
அதான் பப்ளிக் எக்ஸாம் முடிஞ்சாச்சே அப்புறம்
ஏண்டா ரெண்டாவது ஆட்டம் சினிமாக்கு
வரமாட்டேனு சொல்றே?
அவ்ளோ தூரெமெல்லாம் ராத்திரில வெளில விட
மாட்டாங்கடா பாபு. வேணுமின்னா நம்ம ஊரு
கொட்டாயிக்கு போவோம்.
இங்க வெள்ளை படந்தாண்டா ஓடுது எந்நேரமும்
மூக்க சிந்திகிட்டு இருப்பானுங்க! அங்கிட்டு பேய்
படம் ஓடுதுடா பேரு கூட "வா அருகில் வா". சித்ரா
கூட வரன்னு சொல்லியிருக்காடா மச்சி!
அதான பாத்தேன், எலி ஏன் ஜீன்ஸ் போட்டுகிட்டு
குறுக்கும் நெடுக்கும் ஓடுதுன்னு! ஆனா ஒண்ணு
நீதான் போகையிலயும் வரையிலயும் சைக்கிள
மிதிக்கணும் சொல்லிட்டேன். காசு வச்சிருக்கியா?
அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் கெளம்புடா.
சரி சாப்பாடை முடிச்சுட்டு வீட்ல சொல்லிட்டு வரேன்
ரெடியா இரு. துரைசாமி கடையாண்ட வந்துரு
ம்ம்..
எத்தனை பில்டர் வாங்கின?
அரை பாக்கெட், போதுமா?
பத்தலன்னா கொட்டாயில வாங்கிக்கலாம்.
இவ்ளோ இருட்டா இருக்குதே பேய் படம் வேற
பாத்தபிறகு தனியா வீட்டுக்கு போயிடுவியா?
யாரபாத்து என்னா கேக்குற, சுடுகாட்டுக்கு பக்கத்தால
இருக்குற எங்க கொள்ளில நான் காவல் இருந்திருக்கேன்
தெரியும்ல.
சரி, சரி வந்து சைக்கிள மிதி.
சிவா இந்த அரச மரத்த தாண்டி தனியா போயிடுவியா?
அதெல்லாம் பாத்துக்கலாம் வா மச்சி!
நீ போயிட்டு சைக்கிள விட்டுட்டு டோக்கன் போடு
நான் சீட்டு வாங்கிட்டு நிக்கிறேன் வந்துடு.
ம்ம்
நல்ல வேள இன்னும் படம் போடல விளக்கும்
அணைக்கல. எங்க உக்காந்திருக்கா பாரு சிவா.
சித்ரா பொம்பளைங்க வரிசைல அவங்க அம்மா
கூட உக்காந்திருக்கா, ஒண்ணும் புடுங்க முடியாது
அப்படி ஆம்பளைங்க சீட்டுல உக்காருடா.
இடைவேளைலயாவது பேச முடியுமா?
இப்ப பேசி என்னத்த கிழிக்க போற நீ, ஒழுங்கா
படத்த பாருடா! வயசுக்கு வந்த பொண்ணு தனியா
ரெண்டாவது ஆட்டத்துக்கு வருவாளா? யோசிச்சு
பாத்துட்டு வரவேண்டியதுதான.
படம் பயங்கரமாவே இருந்துச்சி, நடுவில பாபு
கத்தினதில பின்னாடி இருந்தவன் முன்னாடி வந்து
திட்டிட்டு போனான்.
சிவா, படம் இவ்வளவு பயங்கரமா இருக்கும்னு
நினைச்சே பாக்கலடா! இப்போ எப்படி வீட்டுக்கு
போறதுன்னே தெரியலை வயித்த வேற கலக்குதுடா!
வா, வந்து சைக்கிள மிதி. இந்த சாக்கு சொல்ற
வேலை எல்லாம் இங்க வேணாம்.
எல்லாரும் படம் விட்டு போயிட்டாங்க இன்னும்
என்னடா பண்ணிகிட்டு இருக்க, வா போகலாம்.
ஒம்மொகத்திலயே தெரியுதுடா நீ பயந்துட்டேன்னு
இதுல இவரு காவல் இருந்தாராம், எவன்கிட்ட
கதை விடற நீ.
மச்சி சிவா ஒரு அஞ்சு நிமிஷம் இருடா அவசரமா
எம்.ஜி.ஆர பாக்க போகணும்டா!
கருமம் புடிச்சவனே அத தியேட்டருக்குள்ளவே
முடிக்க வேண்டியதுதான. போய் வா நான்
இங்கயே நிக்கிறேன்.
முடிச்சுட்டியா?
ம்ம் ஆனா தண்ணி இல்லடா,
அதுக்கு எங்க போறது நானு. இதெல்லாம் முன்னாடியே
யோசிக்கணும். இப்ப வந்து கேட்டா?
அப்படியே நடந்து வா வீட்டுக்கு போயிறலாம்!
இல்லடா சிவா தியேட்டர் இன்னும் மூடி இருக்க
மாட்டான் அங்க போகலாம்.
சரி, மூஞ்ச ஏன் அப்படி வச்சிருக்க! இயல்பா இரு.
அய்யயோ தியேட்டர் மூடிட்டாண்டா பாபு!
நல்லவேளை பாய் இன்னும் கடை மூடல அங்க
போலாம்.
பாய் ரெண்டு வாட்டர் பாக்கெட் குடுங்க.
தண்ணி பாக்கெட் காலி தம்பி, ரஸ்னா இருக்கு
தரட்டுமா?
ரஸ்னாவா?
பாபு ரஸ்னாதான் இருக்காம், அட்ஜஸ்ட்
பண்ணிக்கறியா?
என்னது, அட்ஜஸ்ட் பண்ணிக்கறதா...
என்ன யோசிக்கிற....
வேற வழியே இல்ல மச்சி...
சரி நான் அங்கிட்டு நிக்கிறேன் வாங்கிட்டு வந்திரு.
இந்தாடா..
முடிச்சுட்டியா?
ம்ம்
சைக்கிளை நானே எடுத்தேன். ரொம்ப நேரம்
எதுவுமே பேசலை.
சிவா, ஒரு விஷயம் சொல்லட்டுமா!
சொல்லு.
இங்க நடந்த விஷயத்தை தயவு செஞ்சி யார்கிட்டயும்
சொல்லாத மச்சி.
ச்ச்சே இத போய் யாராவது சொல்வாங்களா! அப்படி
எல்லாம் செய்ய மாட்டேன் கவலைப்படாதடா!!
**********************************************************
இந்த மேட்டருக்கப்புறம் ரஸ்னா விளம்பரம் வந்தாவே
எங்க வீட்டுல நான் மட்டும் விழுந்து விழுந்து சிரிப்பேன்
எல்லாரும் ஆச்சரியமா பாப்பாங்க!
இந்த பதிவு கொஞ்சம் கவிச்சியாதான் இருக்கும்.
அதனால முன்னாடியே சொல்லிடறேன். பின்னாடி
யாரும் குத்தம் சொல்லக்கூடாது சொல்லிப்புட்டேன்.
பள்ளி தேர்வுகள் முடிந்தவுடன் நடந்த சம்பவம் இது.
அதான் பப்ளிக் எக்ஸாம் முடிஞ்சாச்சே அப்புறம்
ஏண்டா ரெண்டாவது ஆட்டம் சினிமாக்கு
வரமாட்டேனு சொல்றே?
அவ்ளோ தூரெமெல்லாம் ராத்திரில வெளில விட
மாட்டாங்கடா பாபு. வேணுமின்னா நம்ம ஊரு
கொட்டாயிக்கு போவோம்.
இங்க வெள்ளை படந்தாண்டா ஓடுது எந்நேரமும்
மூக்க சிந்திகிட்டு இருப்பானுங்க! அங்கிட்டு பேய்
படம் ஓடுதுடா பேரு கூட "வா அருகில் வா". சித்ரா
கூட வரன்னு சொல்லியிருக்காடா மச்சி!
அதான பாத்தேன், எலி ஏன் ஜீன்ஸ் போட்டுகிட்டு
குறுக்கும் நெடுக்கும் ஓடுதுன்னு! ஆனா ஒண்ணு
நீதான் போகையிலயும் வரையிலயும் சைக்கிள
மிதிக்கணும் சொல்லிட்டேன். காசு வச்சிருக்கியா?
அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் கெளம்புடா.
சரி சாப்பாடை முடிச்சுட்டு வீட்ல சொல்லிட்டு வரேன்
ரெடியா இரு. துரைசாமி கடையாண்ட வந்துரு
ம்ம்..
எத்தனை பில்டர் வாங்கின?
அரை பாக்கெட், போதுமா?
பத்தலன்னா கொட்டாயில வாங்கிக்கலாம்.
இவ்ளோ இருட்டா இருக்குதே பேய் படம் வேற
பாத்தபிறகு தனியா வீட்டுக்கு போயிடுவியா?
யாரபாத்து என்னா கேக்குற, சுடுகாட்டுக்கு பக்கத்தால
இருக்குற எங்க கொள்ளில நான் காவல் இருந்திருக்கேன்
தெரியும்ல.
சரி, சரி வந்து சைக்கிள மிதி.
சிவா இந்த அரச மரத்த தாண்டி தனியா போயிடுவியா?
அதெல்லாம் பாத்துக்கலாம் வா மச்சி!
நீ போயிட்டு சைக்கிள விட்டுட்டு டோக்கன் போடு
நான் சீட்டு வாங்கிட்டு நிக்கிறேன் வந்துடு.
ம்ம்
நல்ல வேள இன்னும் படம் போடல விளக்கும்
அணைக்கல. எங்க உக்காந்திருக்கா பாரு சிவா.
சித்ரா பொம்பளைங்க வரிசைல அவங்க அம்மா
கூட உக்காந்திருக்கா, ஒண்ணும் புடுங்க முடியாது
அப்படி ஆம்பளைங்க சீட்டுல உக்காருடா.
இடைவேளைலயாவது பேச முடியுமா?
இப்ப பேசி என்னத்த கிழிக்க போற நீ, ஒழுங்கா
படத்த பாருடா! வயசுக்கு வந்த பொண்ணு தனியா
ரெண்டாவது ஆட்டத்துக்கு வருவாளா? யோசிச்சு
பாத்துட்டு வரவேண்டியதுதான.
படம் பயங்கரமாவே இருந்துச்சி, நடுவில பாபு
கத்தினதில பின்னாடி இருந்தவன் முன்னாடி வந்து
திட்டிட்டு போனான்.
சிவா, படம் இவ்வளவு பயங்கரமா இருக்கும்னு
நினைச்சே பாக்கலடா! இப்போ எப்படி வீட்டுக்கு
போறதுன்னே தெரியலை வயித்த வேற கலக்குதுடா!
வா, வந்து சைக்கிள மிதி. இந்த சாக்கு சொல்ற
வேலை எல்லாம் இங்க வேணாம்.
எல்லாரும் படம் விட்டு போயிட்டாங்க இன்னும்
என்னடா பண்ணிகிட்டு இருக்க, வா போகலாம்.
ஒம்மொகத்திலயே தெரியுதுடா நீ பயந்துட்டேன்னு
இதுல இவரு காவல் இருந்தாராம், எவன்கிட்ட
கதை விடற நீ.
மச்சி சிவா ஒரு அஞ்சு நிமிஷம் இருடா அவசரமா
எம்.ஜி.ஆர பாக்க போகணும்டா!
கருமம் புடிச்சவனே அத தியேட்டருக்குள்ளவே
முடிக்க வேண்டியதுதான. போய் வா நான்
இங்கயே நிக்கிறேன்.
முடிச்சுட்டியா?
ம்ம் ஆனா தண்ணி இல்லடா,
அதுக்கு எங்க போறது நானு. இதெல்லாம் முன்னாடியே
யோசிக்கணும். இப்ப வந்து கேட்டா?
அப்படியே நடந்து வா வீட்டுக்கு போயிறலாம்!
இல்லடா சிவா தியேட்டர் இன்னும் மூடி இருக்க
மாட்டான் அங்க போகலாம்.
சரி, மூஞ்ச ஏன் அப்படி வச்சிருக்க! இயல்பா இரு.
அய்யயோ தியேட்டர் மூடிட்டாண்டா பாபு!
நல்லவேளை பாய் இன்னும் கடை மூடல அங்க
போலாம்.
பாய் ரெண்டு வாட்டர் பாக்கெட் குடுங்க.
தண்ணி பாக்கெட் காலி தம்பி, ரஸ்னா இருக்கு
தரட்டுமா?
ரஸ்னாவா?
பாபு ரஸ்னாதான் இருக்காம், அட்ஜஸ்ட்
பண்ணிக்கறியா?
என்னது, அட்ஜஸ்ட் பண்ணிக்கறதா...
என்ன யோசிக்கிற....
வேற வழியே இல்ல மச்சி...
சரி நான் அங்கிட்டு நிக்கிறேன் வாங்கிட்டு வந்திரு.
இந்தாடா..
முடிச்சுட்டியா?
ம்ம்
சைக்கிளை நானே எடுத்தேன். ரொம்ப நேரம்
எதுவுமே பேசலை.
சிவா, ஒரு விஷயம் சொல்லட்டுமா!
சொல்லு.
இங்க நடந்த விஷயத்தை தயவு செஞ்சி யார்கிட்டயும்
சொல்லாத மச்சி.
ச்ச்சே இத போய் யாராவது சொல்வாங்களா! அப்படி
எல்லாம் செய்ய மாட்டேன் கவலைப்படாதடா!!
**********************************************************
இந்த மேட்டருக்கப்புறம் ரஸ்னா விளம்பரம் வந்தாவே
எங்க வீட்டுல நான் மட்டும் விழுந்து விழுந்து சிரிப்பேன்
எல்லாரும் ஆச்சரியமா பாப்பாங்க!
Wednesday, September 20, 2006
வாலிப வயசு!!! - 1
ரெண்டாவது ஆட்டம் - வாலிப வயசு 2
கனவு இல்லம் வாலிப வயசு 3
குன்று முட்டிய குருவி - வாலிப வயசு 4
டேய் சிவா, காத கொண்டாடா இங்க!
எதுக்கு? நீ லொள்ளு புடிச்சவன் போன முறை
இதே மாதிரி சொல்லி எங்காதுல கத்தின.
"இல்லடா சீரியஸ் மேட்டர்"
எதுவா இருந்தாலும் க்ளாஸ் முடிஞ்சதும் பேசிக்கலாம்
அதுக்கு முன்னாடியே பேச வேண்டிய மேட்டர்டா.
காத கொண்டா இங்க!
நேத்து "உள்ளத்தை அள்ளித்தா" படம்
பார்த்தேண்டா மச்சி..
அடச்சீ இதுவாடா சீரியஸ் மேட்டர்.
இல்லடா அதில ரம்பாவ மடக்கறத்துக்கு
கார்த்திக் சூப்பர் ஐடியா போடுவாரு. கவுண்டமணிய
விட்டு ஹேண்ட்பேக் திருடிட்டு ஓடுற மாதிரியும்
கார்த்திக் அதை ஓடிப்போய் புடுங்கற மாதிரியும்
அதன் மூலமா ரம்பாவ காதல் வலையில
சிக்க வைக்கிறது. அதே மாதிரி நான் ஒரு ஐடியா
போட்டு வச்சிருக்கேன். அது மாட்டும் கரெக்டா
ஒர்கவுட் ஆச்சின்னா சாந்தி எனக்குதான்.
அதுக்கு நான் என்னடா பண்றது?
இன்னும் அரை மணி நேரத்தில க்ளாஸ் முடிஞ்சுரும்.
முடிஞ்ச உடனே என்னோட சைக்கிள எடுத்துகிட்டு
ஏரியை தாண்டி இருக்குற மொத அரசமரத்தடியில
நின்னுக்கோ!
நின்னு!
சொல்றத முழுசா கேளுடா..
சொல்லு..
சரியா பத்தாவது நிமிஷத்தில சாந்தி வருவா
அவகிட்ட நான் சொல்லிக்குடுக்கற "ரெண்டு
வரி "டயலாக்" சொல்ற அத சொன்னதும் அவ
அழுவாள் அது மூலமா அவள் என்னை லவ்
பண்றாளான்னு தெரிஞ்சிக்கலாம். அப்படியே
என்னை லவ் பண்ணலன்னாலும் அந்த
டயலாக் கேட்டதுக்கப்புறம் என்னை தான்
லவ் பண்ணுவா பாரேன்.
டேய் உனக்குதான் ராமாயி இருக்கால்ல, பின்ன
ஏண்டா சாந்தி பின்னாடி சுத்தற!
ராமாயி, பேராடா அது! ஆளும் அவ மூஞ்சியும்
மொகம்பூரா மஞ்சள் பூசிக்கிட்டு, நாலணா சைசுக்கு
சாந்து பொட்டு வச்சிக்கிட்டு ம்ஹீம் சகிக்கலைடா.
"பெயரில் என்ன இருக்கிறது நண்பா?"
அந்த கதைய நாங்க அஞ்சாவது படிக்கும்போதே
படிச்சுட்டேம். இப்போ மேட்டருக்கு வாங்க தொர!
அது என்ன 'டயலாக்' சொல்லித்தொலை..
அவகிட்ட போயி என்ன சொல்றன்னா, நான் உன்ன
ரொம்ப நாளா லவ் பண்ணிகிட்டு இருக்கேன், நீ
என்னடான்னா அந்த பாபுப்பயல பாத்துகிட்டு
இருக்கே (அதாவது என்னை) அப்படின்னு சொல்லு.
அதுக்கு அவ சொல்லுவா ஆமா அவனத்தான் லவ்
பண்ணுவேன் உனக்கென்ன அப்படின்னு. நாலு
வார்த்தை நீ கோவத்தில பேசணும் அத கேட்டதும்
அவ அழுவாள் அந்த நேரத்தில கரெக்டா நான்
வருவேன். அவ அழுதுகிட்டு இருக்கறத பாத்து
உன்னை நாலு அடி அடிச்சி விரட்டற மாதிரி நடிச்சு
அவளுக்கு ஆறுதல் சொல்லுவேன். இதான் மச்சி
ப்ளான்.
நீங்க பறக்க நாங்க பஞ்சராகனுமா?
டேய் மச்சி ரெண்டாவது அரச மரத்தடியில
அவங்கப்பன் கள்ளுக்கடை வச்சிருக்கான்
தெரியும்ல..
தெரியும்டா, அந்த மரத்துக்கும், இந்த மரத்துக்கும்
ரொம்ப தூரம், யாரும் இருக்க மாட்டாங்க மச்சி
தைரியமா இரு.
எனக்காக இதக்கூட செய்ய மாட்டியா மச்சி?
உடனே பாசக்கயிறு வீசிறிவிங்களே..
டேய் உனக்கு கணக்கு சரியா வரலன்னு உங்க
அப்பா நினைச்சிகிட்டு இருக்காரு.ஆனா நீ போடற
கணக்கு உங்கப்பனுக்கும் தெரியாது, அதோ அங்க
போர்டுல கிறுக்கிட்டு இருக்கானே அவனுக்கும்
புரியாது!
ஏய் அங்க யாருடா ரெண்டு பேர் குசுகுசுன்னு
பேசிகிட்டு இருக்கறது?, அப்படியே ரெண்டு
பேரும் எந்திரிச்சி வெளிய போயிடுங்க. என்னோட
க்ளாசுக்கே வராதிங்கடா.
வசதியா போச்சு, சிவா எந்திரிடா போலாம்.
இந்தா சாவிய புடி. சீக்கிரம் போ. நான் பல்லு
சைக்கிள வாங்கினு வரேன்.
இவன் வேற தைரியமா சொல்லுடான்னு சொல்லிட்டான்
நம்ம நேரம் அவ செருப்பாலே அடிச்சிட்டான்னா
நாளப்பின்ன பள்ளிக்கூடம் பக்கமே தலை காட்ட
முடியாதே. ச்சே அப்படியெல்லாம் அடிக்க மாட்டா,
அப்படியே அடிச்சாலும் நாளைக்கு ஸ்கூலுபக்கம்
வந்துற முடியுமா? வயித்தக் கலக்குதுடான்னு
அவ வர்ற நேரமா பாத்து எஸ்கேப் ஆயிறலாமா?
அய்யயோ அவ வேற வராளே, என்ன செய்யிறது
எப்படியாவது சொல்லிற வேண்டியதுதான்.
வேகமா சைக்கிள்ல வந்து எதிர்ல சரக்குன்னு
நிறுத்தினதும் பயந்துதான் போனா அவ.
ஏ புள்ள, சாந்தி கொஞ்சம் நில்லு உங்கிட்ட
கொஞ்சம் பேசணும்.
என்ன பேசணும்?
நான் உன்ன எவ்வளவு நாளா பாத்துகிட்டும் லவ்
பண்ணிகிட்டும் இருக்கேன். நீ என்னடான்னா
அந்த பாபுப்பயல லவ் பண்ணிகிட்டு இருக்கியாமே.
அவன் கொஞ்சம் கூட நல்லவன் இல்ல.
ஏய், ஏய் ஏன் அழுவற யாராவது பாத்தா தப்பா
நினைப்பாங்க. எஸ்கேப் ஆயிடலாமா?
அழுகைய நிறுத்து சாந்தி!!
எந்த நாயி சொல்லுச்சி பாபுவ நான் லவ் பண்றேன்னு?
நான் உங்களத்தான் லவ் பண்றேன் சிவா...
அடிப்பாவி, இப்படியா குண்ட தூக்கிப்போடுவ,
அவனுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்.
அவன் வேற அதோ வந்துகிட்டு இருக்கானே.
சரி நீ கெளம்பு! அவன் வந்துகிட்டு இருக்கான்.
ஏண்டா நான் வர்றதுக்குள்ள அவள அனுப்பின?
அவ கெடக்கறா விடுறா, இவ இல்லன்னா வேற
ஆளே இல்லியா?
சிவா அவ என்ன சொன்னான்னு சொல்டா
மொத்தல்ல!
அவள மறந்துடு மச்சி!
ஏன்?
அவளுக்கு நிச்சயம் ஆகிடுச்சாம், அவ மாமங்கூட.
பரிட்சை முடிஞ்ச உடனே கல்யாணமாம்.
அப்புறம் எதுக்கு ஸ்கூலுக்கு வர்றாளாம். ச்சே
என்னடா இது, இந்த ஓல சந்தில எட்டி பாத்தவன்
தட்டி கட்டினவன் எல்லாம் அடிச்சி விரட்டணும்
மச்சி.
உனக்கு ராமாயிதான்!!
கனவு இல்லம் வாலிப வயசு 3
குன்று முட்டிய குருவி - வாலிப வயசு 4
டேய் சிவா, காத கொண்டாடா இங்க!
எதுக்கு? நீ லொள்ளு புடிச்சவன் போன முறை
இதே மாதிரி சொல்லி எங்காதுல கத்தின.
"இல்லடா சீரியஸ் மேட்டர்"
எதுவா இருந்தாலும் க்ளாஸ் முடிஞ்சதும் பேசிக்கலாம்
அதுக்கு முன்னாடியே பேச வேண்டிய மேட்டர்டா.
காத கொண்டா இங்க!
நேத்து "உள்ளத்தை அள்ளித்தா" படம்
பார்த்தேண்டா மச்சி..
அடச்சீ இதுவாடா சீரியஸ் மேட்டர்.
இல்லடா அதில ரம்பாவ மடக்கறத்துக்கு
கார்த்திக் சூப்பர் ஐடியா போடுவாரு. கவுண்டமணிய
விட்டு ஹேண்ட்பேக் திருடிட்டு ஓடுற மாதிரியும்
கார்த்திக் அதை ஓடிப்போய் புடுங்கற மாதிரியும்
அதன் மூலமா ரம்பாவ காதல் வலையில
சிக்க வைக்கிறது. அதே மாதிரி நான் ஒரு ஐடியா
போட்டு வச்சிருக்கேன். அது மாட்டும் கரெக்டா
ஒர்கவுட் ஆச்சின்னா சாந்தி எனக்குதான்.
அதுக்கு நான் என்னடா பண்றது?
இன்னும் அரை மணி நேரத்தில க்ளாஸ் முடிஞ்சுரும்.
முடிஞ்ச உடனே என்னோட சைக்கிள எடுத்துகிட்டு
ஏரியை தாண்டி இருக்குற மொத அரசமரத்தடியில
நின்னுக்கோ!
நின்னு!
சொல்றத முழுசா கேளுடா..
சொல்லு..
சரியா பத்தாவது நிமிஷத்தில சாந்தி வருவா
அவகிட்ட நான் சொல்லிக்குடுக்கற "ரெண்டு
வரி "டயலாக்" சொல்ற அத சொன்னதும் அவ
அழுவாள் அது மூலமா அவள் என்னை லவ்
பண்றாளான்னு தெரிஞ்சிக்கலாம். அப்படியே
என்னை லவ் பண்ணலன்னாலும் அந்த
டயலாக் கேட்டதுக்கப்புறம் என்னை தான்
லவ் பண்ணுவா பாரேன்.
டேய் உனக்குதான் ராமாயி இருக்கால்ல, பின்ன
ஏண்டா சாந்தி பின்னாடி சுத்தற!
ராமாயி, பேராடா அது! ஆளும் அவ மூஞ்சியும்
மொகம்பூரா மஞ்சள் பூசிக்கிட்டு, நாலணா சைசுக்கு
சாந்து பொட்டு வச்சிக்கிட்டு ம்ஹீம் சகிக்கலைடா.
"பெயரில் என்ன இருக்கிறது நண்பா?"
அந்த கதைய நாங்க அஞ்சாவது படிக்கும்போதே
படிச்சுட்டேம். இப்போ மேட்டருக்கு வாங்க தொர!
அது என்ன 'டயலாக்' சொல்லித்தொலை..
அவகிட்ட போயி என்ன சொல்றன்னா, நான் உன்ன
ரொம்ப நாளா லவ் பண்ணிகிட்டு இருக்கேன், நீ
என்னடான்னா அந்த பாபுப்பயல பாத்துகிட்டு
இருக்கே (அதாவது என்னை) அப்படின்னு சொல்லு.
அதுக்கு அவ சொல்லுவா ஆமா அவனத்தான் லவ்
பண்ணுவேன் உனக்கென்ன அப்படின்னு. நாலு
வார்த்தை நீ கோவத்தில பேசணும் அத கேட்டதும்
அவ அழுவாள் அந்த நேரத்தில கரெக்டா நான்
வருவேன். அவ அழுதுகிட்டு இருக்கறத பாத்து
உன்னை நாலு அடி அடிச்சி விரட்டற மாதிரி நடிச்சு
அவளுக்கு ஆறுதல் சொல்லுவேன். இதான் மச்சி
ப்ளான்.
நீங்க பறக்க நாங்க பஞ்சராகனுமா?
டேய் மச்சி ரெண்டாவது அரச மரத்தடியில
அவங்கப்பன் கள்ளுக்கடை வச்சிருக்கான்
தெரியும்ல..
தெரியும்டா, அந்த மரத்துக்கும், இந்த மரத்துக்கும்
ரொம்ப தூரம், யாரும் இருக்க மாட்டாங்க மச்சி
தைரியமா இரு.
எனக்காக இதக்கூட செய்ய மாட்டியா மச்சி?
உடனே பாசக்கயிறு வீசிறிவிங்களே..
டேய் உனக்கு கணக்கு சரியா வரலன்னு உங்க
அப்பா நினைச்சிகிட்டு இருக்காரு.ஆனா நீ போடற
கணக்கு உங்கப்பனுக்கும் தெரியாது, அதோ அங்க
போர்டுல கிறுக்கிட்டு இருக்கானே அவனுக்கும்
புரியாது!
ஏய் அங்க யாருடா ரெண்டு பேர் குசுகுசுன்னு
பேசிகிட்டு இருக்கறது?, அப்படியே ரெண்டு
பேரும் எந்திரிச்சி வெளிய போயிடுங்க. என்னோட
க்ளாசுக்கே வராதிங்கடா.
வசதியா போச்சு, சிவா எந்திரிடா போலாம்.
இந்தா சாவிய புடி. சீக்கிரம் போ. நான் பல்லு
சைக்கிள வாங்கினு வரேன்.
இவன் வேற தைரியமா சொல்லுடான்னு சொல்லிட்டான்
நம்ம நேரம் அவ செருப்பாலே அடிச்சிட்டான்னா
நாளப்பின்ன பள்ளிக்கூடம் பக்கமே தலை காட்ட
முடியாதே. ச்சே அப்படியெல்லாம் அடிக்க மாட்டா,
அப்படியே அடிச்சாலும் நாளைக்கு ஸ்கூலுபக்கம்
வந்துற முடியுமா? வயித்தக் கலக்குதுடான்னு
அவ வர்ற நேரமா பாத்து எஸ்கேப் ஆயிறலாமா?
அய்யயோ அவ வேற வராளே, என்ன செய்யிறது
எப்படியாவது சொல்லிற வேண்டியதுதான்.
வேகமா சைக்கிள்ல வந்து எதிர்ல சரக்குன்னு
நிறுத்தினதும் பயந்துதான் போனா அவ.
ஏ புள்ள, சாந்தி கொஞ்சம் நில்லு உங்கிட்ட
கொஞ்சம் பேசணும்.
என்ன பேசணும்?
நான் உன்ன எவ்வளவு நாளா பாத்துகிட்டும் லவ்
பண்ணிகிட்டும் இருக்கேன். நீ என்னடான்னா
அந்த பாபுப்பயல லவ் பண்ணிகிட்டு இருக்கியாமே.
அவன் கொஞ்சம் கூட நல்லவன் இல்ல.
ஏய், ஏய் ஏன் அழுவற யாராவது பாத்தா தப்பா
நினைப்பாங்க. எஸ்கேப் ஆயிடலாமா?
அழுகைய நிறுத்து சாந்தி!!
எந்த நாயி சொல்லுச்சி பாபுவ நான் லவ் பண்றேன்னு?
நான் உங்களத்தான் லவ் பண்றேன் சிவா...
அடிப்பாவி, இப்படியா குண்ட தூக்கிப்போடுவ,
அவனுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்.
அவன் வேற அதோ வந்துகிட்டு இருக்கானே.
சரி நீ கெளம்பு! அவன் வந்துகிட்டு இருக்கான்.
ஏண்டா நான் வர்றதுக்குள்ள அவள அனுப்பின?
அவ கெடக்கறா விடுறா, இவ இல்லன்னா வேற
ஆளே இல்லியா?
சிவா அவ என்ன சொன்னான்னு சொல்டா
மொத்தல்ல!
அவள மறந்துடு மச்சி!
ஏன்?
அவளுக்கு நிச்சயம் ஆகிடுச்சாம், அவ மாமங்கூட.
பரிட்சை முடிஞ்ச உடனே கல்யாணமாம்.
அப்புறம் எதுக்கு ஸ்கூலுக்கு வர்றாளாம். ச்சே
என்னடா இது, இந்த ஓல சந்தில எட்டி பாத்தவன்
தட்டி கட்டினவன் எல்லாம் அடிச்சி விரட்டணும்
மச்சி.
உனக்கு ராமாயிதான்!!
Sunday, September 03, 2006
டீக்கடை பெஞ்ச்...
"என்னதான் நம்ம வீட்ல தினசரிகள் வாங்கினாலும்
டீக்கடைல உக்காந்து பேப்பர் படிக்கிற சுகமே தனிதான்"
இப்படி சொல்றவங்கள நீங்க கண்டிப்பா கேட்டு
இருப்பிங்க.இது வியாதியாவே ஆகிப்போயிருச்சு.
சரி, என்னதான் அப்படி இதுல சொகம் இருக்குன்னு
பாக்கணும்னு ஒரு நாள் கிளம்பினேன். எட்டு மணி
வாக்கில டீக்கடை பக்கம் ஒதுங்கி மெதுவா ஒரு
நோட்டம் விடுறது. கப்புன்னு ஒரு சீட்ட புடிச்சி உக்காந்து
பேப்பர் எப்ப நம்ம கைக்கு வரும்னு எரிச்சலோட பார்க்க
வேண்டியிருக்கும். கொஞ்ச நேரத்தில கண்டிப்பா ஒரு
பேப்பராச்சும் நம்ம கைக்கு வந்து சேர்ந்திடும்.
"நகரில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்"
போச்சுடா எவன் வீட்டுல கன்னம் வச்சானோன்னு
உன்னிப்பா படிக்க ஆரம்பிப்போம். இதுக்கு முன்னாடி
நடந்த கொள்ளைகள விலாவிரிவா நாலு பத்தி எழுதி
இருப்பாங்க.பொறுமையோட அதையெல்லாம் படிச்சிட்டு.
இன்னிக்கு என்னதான் ஆச்சுன்னு பார்த்தா திடீர்னு
இதன் தொடர்ச்சி நாலாவது பக்கம், மூணாவது பத்தி
பார்க்கவும்னு இருக்கும். சரி நாலாவது பக்கம் யாருகிட்ட
இருக்குதுன்னு பாத்தா, ஒரு பெருசுகிட்ட இருக்கும்.
கண்ணுக்கும் பேப்பருக்கும் 2 இஞ்ச் இடைவெளி வச்சி
படிச்சிகிட்டு இருக்கும்.
டீக்கடைக்காரரை பார்த்து அண்ணே 'தினத்தந்தி
எக்ஸாம்' நாளக்கிதானே! அப்படின்னு கேட்டு
பெருச ஒரு பார்வை பார்க்கணும்.
"தனியா மாட்டிகிட்டமோ" பொறவு வந்து படிச்சிக்கலாம்னு
பேப்பரை சுருட்டி கீழ வச்சிட்டு நைசா எஸ்கேப் ஆயிரும்.
வெற்றி!!
என்ன ஆச்சுன்னு நாலாவது பக்கம் போவோம் அங்கயும்
மொக்கையா ரெண்டு பத்தி எழுதிட்டு இரண்டாம் பக்கம்
ஏழாவது பத்தி பார்க்கவும்னு இருக்கும். இன்றைய
முட்டை விலை, வரிவிளம்பரம், இது நம்ம ஆளு,
பாக்யராஜ், ஷோபனா நடித்தது இதையெல்லாம் தாண்டி
ரொம்ப ஆர்வமா செய்திய தொடர்வோம். போலிஸாருக்கு
'டிமிக்கி' கொடுத்த கொள்ளையர்கள், கொள்ளையர்களை
விரட்டி பிடிக்க தனி போலிஸ் படை முடுக்கி
விடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை பூக்கடை போலீஸார்
வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகிறார்கள். அட எழவே.
இந்த சனியனை மொத பக்கத்திலயே போட்டா என்னா
கொறஞ்சி போயிரும்? ஒருவேளை இடம் பத்தலியோ
என்னமோ அப்படின்னு மொத பக்கத்துக்கு போனா, மேல
50 வருட பாரம்பரியமிக்க சுந்தரவிலாஸ் பாத்திரக்கடை,
வெற்றி பெற்ற மனிதர்கள் விரும்பும் பாக்கு, கீழ கொட்ட
எழுத்துல "வெற்றிகரமாக மூன்றாவது நாள்", ஹீரோ
ரெண்டு ஹீரோயினை கட்டி புடிச்சிகிட்டு சிரிப்பார்,
இந்தக்கலர், அந்தக்கலர், நொந்தக்கலர்னு ஒரு அம்மா
முந்தானய காத்துல பறக்க விட்டுகிட்டு இருக்கும்.
ஏன்?, இந்த விளம்பரத்தையெல்லாம் தூக்கி அடுத்த
பக்கத்தில போட்டு இருந்தா என்ன?. நாலு பத்தி
செய்திய படிக்க மூணு பக்கம் கண்ணை உருட்டி
அது எங்க ஒளிஞ்சிருக்குன்னு தேட வேண்டிய
அவசியம் இல்லையே.
மனச சாந்தப்படுத்த கன்னித்தீவு பக்கம் போனா,
இளவரசி கண் விழித்தாள் எதிரே பயங்கரமாக
சிரித்தபடி ஒரு அரக்கன் நின்றிருந்தான்,
மாயக்கண்ணாடியில் இவையனைத்தையும்
மந்திரவாதி பார்த்துக்கொண்டிருந்தான். இளவரசிக்கு
என்ன நடந்தது? நாளை தொடரும்... நாலு படம்
போட்டு, மூணு வரி எழுதி இருப்பாங்க. நேத்திக்கு
என்ன சாப்பிட்டோம்னு ஞாபகம் வர்றதுக்கே
ரெண்டு நிமிடம் ஆயிடுது, இதுல எங்க இருந்து
இத்தனை வருஷமா படிச்சிகிட்டு ஞாபகத்தில
வச்சிக்கிறாங்க?. ஒரே கொழப்பமா இருக்கு.
இதுல எதுனா சொகம் இருக்குதுங்களா?
"ஒண்ணுமே புரியல ஒலகத்தில"
டீக்கடைல உக்காந்து பேப்பர் படிக்கிற சுகமே தனிதான்"
இப்படி சொல்றவங்கள நீங்க கண்டிப்பா கேட்டு
இருப்பிங்க.இது வியாதியாவே ஆகிப்போயிருச்சு.
சரி, என்னதான் அப்படி இதுல சொகம் இருக்குன்னு
பாக்கணும்னு ஒரு நாள் கிளம்பினேன். எட்டு மணி
வாக்கில டீக்கடை பக்கம் ஒதுங்கி மெதுவா ஒரு
நோட்டம் விடுறது. கப்புன்னு ஒரு சீட்ட புடிச்சி உக்காந்து
பேப்பர் எப்ப நம்ம கைக்கு வரும்னு எரிச்சலோட பார்க்க
வேண்டியிருக்கும். கொஞ்ச நேரத்தில கண்டிப்பா ஒரு
பேப்பராச்சும் நம்ம கைக்கு வந்து சேர்ந்திடும்.
"நகரில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்"
போச்சுடா எவன் வீட்டுல கன்னம் வச்சானோன்னு
உன்னிப்பா படிக்க ஆரம்பிப்போம். இதுக்கு முன்னாடி
நடந்த கொள்ளைகள விலாவிரிவா நாலு பத்தி எழுதி
இருப்பாங்க.பொறுமையோட அதையெல்லாம் படிச்சிட்டு.
இன்னிக்கு என்னதான் ஆச்சுன்னு பார்த்தா திடீர்னு
இதன் தொடர்ச்சி நாலாவது பக்கம், மூணாவது பத்தி
பார்க்கவும்னு இருக்கும். சரி நாலாவது பக்கம் யாருகிட்ட
இருக்குதுன்னு பாத்தா, ஒரு பெருசுகிட்ட இருக்கும்.
கண்ணுக்கும் பேப்பருக்கும் 2 இஞ்ச் இடைவெளி வச்சி
படிச்சிகிட்டு இருக்கும்.
டீக்கடைக்காரரை பார்த்து அண்ணே 'தினத்தந்தி
எக்ஸாம்' நாளக்கிதானே! அப்படின்னு கேட்டு
பெருச ஒரு பார்வை பார்க்கணும்.
"தனியா மாட்டிகிட்டமோ" பொறவு வந்து படிச்சிக்கலாம்னு
பேப்பரை சுருட்டி கீழ வச்சிட்டு நைசா எஸ்கேப் ஆயிரும்.
வெற்றி!!
என்ன ஆச்சுன்னு நாலாவது பக்கம் போவோம் அங்கயும்
மொக்கையா ரெண்டு பத்தி எழுதிட்டு இரண்டாம் பக்கம்
ஏழாவது பத்தி பார்க்கவும்னு இருக்கும். இன்றைய
முட்டை விலை, வரிவிளம்பரம், இது நம்ம ஆளு,
பாக்யராஜ், ஷோபனா நடித்தது இதையெல்லாம் தாண்டி
ரொம்ப ஆர்வமா செய்திய தொடர்வோம். போலிஸாருக்கு
'டிமிக்கி' கொடுத்த கொள்ளையர்கள், கொள்ளையர்களை
விரட்டி பிடிக்க தனி போலிஸ் படை முடுக்கி
விடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை பூக்கடை போலீஸார்
வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகிறார்கள். அட எழவே.
இந்த சனியனை மொத பக்கத்திலயே போட்டா என்னா
கொறஞ்சி போயிரும்? ஒருவேளை இடம் பத்தலியோ
என்னமோ அப்படின்னு மொத பக்கத்துக்கு போனா, மேல
50 வருட பாரம்பரியமிக்க சுந்தரவிலாஸ் பாத்திரக்கடை,
வெற்றி பெற்ற மனிதர்கள் விரும்பும் பாக்கு, கீழ கொட்ட
எழுத்துல "வெற்றிகரமாக மூன்றாவது நாள்", ஹீரோ
ரெண்டு ஹீரோயினை கட்டி புடிச்சிகிட்டு சிரிப்பார்,
இந்தக்கலர், அந்தக்கலர், நொந்தக்கலர்னு ஒரு அம்மா
முந்தானய காத்துல பறக்க விட்டுகிட்டு இருக்கும்.
ஏன்?, இந்த விளம்பரத்தையெல்லாம் தூக்கி அடுத்த
பக்கத்தில போட்டு இருந்தா என்ன?. நாலு பத்தி
செய்திய படிக்க மூணு பக்கம் கண்ணை உருட்டி
அது எங்க ஒளிஞ்சிருக்குன்னு தேட வேண்டிய
அவசியம் இல்லையே.
மனச சாந்தப்படுத்த கன்னித்தீவு பக்கம் போனா,
இளவரசி கண் விழித்தாள் எதிரே பயங்கரமாக
சிரித்தபடி ஒரு அரக்கன் நின்றிருந்தான்,
மாயக்கண்ணாடியில் இவையனைத்தையும்
மந்திரவாதி பார்த்துக்கொண்டிருந்தான். இளவரசிக்கு
என்ன நடந்தது? நாளை தொடரும்... நாலு படம்
போட்டு, மூணு வரி எழுதி இருப்பாங்க. நேத்திக்கு
என்ன சாப்பிட்டோம்னு ஞாபகம் வர்றதுக்கே
ரெண்டு நிமிடம் ஆயிடுது, இதுல எங்க இருந்து
இத்தனை வருஷமா படிச்சிகிட்டு ஞாபகத்தில
வச்சிக்கிறாங்க?. ஒரே கொழப்பமா இருக்கு.
இதுல எதுனா சொகம் இருக்குதுங்களா?
"ஒண்ணுமே புரியல ஒலகத்தில"
Wednesday, August 30, 2006
தண்டவாளத்தில ஒண்ணுக்கு போனா தப்பா?
சென்னைல ஒரு மூணு மாசம் தங்க வேண்டி
வந்தது. ப்ராஜெக்ட் செய்ய வேண்டி தாம்பரத்தில
நண்பர்களோட தங்கினேன். கோடம்பாக்கத்துக்கும்
தாம்பரத்துக்கும் தினமும் ட்ரெயின்ல போய் வந்து
கொண்டிருந்தேன். காலையில மெட்ராஸ் க்றிஸ்டியன்
காலேஜ் வாசல்ல கொஞ்சம் ஜொள்ள சிந்திட்டு.
ட்ரெயின புடிச்சு அங்க மீனாட்சி வாசல்ல மீதிய
சிந்தறதுதான் தினமும் வேலையே. இதுக்கு கூடவே
நாலு பேர் கூட்டு. ரவுசுக்கு கேக்கவே வேணாம்
ஒரே கும்மாளமா போயிகிட்டு இருந்தது.
வீட்ல இருந்து கொண்டு வந்த காசை எங்கன
ஒளிச்சு வச்சாலும் சிரமப்படாம கண்டுபிடிச்சுடற
அருமையான நண்பர்கள். நம்மளுக்கு ஒளிச்சு வச்சி
பழக்கமில்ல, அவனுங்களுக்கு ஒளிச்சு வைக்கறத
கண்டுபிடிக்கறதில கஷ்டமில்ல. பர்சுல காசு
இல்லன்னா கடுப்புல தூக்கி எறிஞ்சிடுவானுங்க
அப்படி ஒரு பாசக்கார பயலுங்க. வழக்கமா
ட்ரெயின் பாஸ் பர்ஸுல வைக்கிறதுதான் வழக்கம்.
நம்ம கூட்டத்தை சேர்ந்த ஒருத்தன் காசு வைக்கிற
எடத்தில கண்டதை வச்சிருக்கான்னு சில்லறை
இல்லாத கடுப்பில தூக்கி எறிஞ்சிடுச்சி அதை தேடி
கண்டுபிடிச்சி பின்னாடி சொருவிகிட்டு நானும்
கிளம்பிட்டேன்.
இந்த ட்ரெயின்ல செக்கர் வந்துட்டான்னா சுலபமா
கண்டுபிடிச்சிடலாம் எப்படின்னா, டிக்கெட் எடுக்காத
வித்தவுட்டுங்க கதவோரமாவே நிப்பானுங்க எந்த
நேரத்திலும் எஸ்கேப் ஆகறதுக்கு. வாரத்துக்கு
மூணு நாள் செக்கர் வந்தாலும் இவனுங்க அஞ்சவே
மாட்டானுங்க. ஒருநாள் மீனம்பாக்கத்தில நிறுத்தும்
போது செக்கர் வந்துட்டாடு, வாசப்பக்கம் நின்னுகிட்டு
இருந்ததுல ஒரு மூணு தெறிச்சு ஓடினானுங்க, அதில
ஒருத்தன் டை கூட கட்டி இருந்தான். அடப்பாவி!
நமக்கு ஒண்ணாம் க்ளாசில இருந்து பின்னால உக்காந்து
பழக்கம் அந்த பாசத்தில பின்னாடி இருந்தேன்.
வரிசையா செக் பண்ணிகிட்டு நம்மகிட்ட வந்தாரு
டிக்கெட் எடுக்காதவனை விட்டுடுங்க, டிக்கெட்
எடுக்கறாம்பாரு அவனை புடிச்சி நோண்டுங்கன்னு
முனகிக்கிட்டே பர்ஸை பிரிச்சா பக்குன்னு ஆயிடுச்சி
உள்ளாற அது இல்ல. நெலவரம் கலவரம் ஆகறதுக்குள்ள
எப்படியும் இவங்கிட்டருந்து தப்ப முடியாது நந்தி
மாதிரி நிக்கறான். பாக்கெட்லயும் பத்து ரூபாய்க்கு மேல
ஒரு பைசா கூட இல்ல. அசடு வழியுது முகத்தில,
சாரி சார் பாஸ் கொண்டு வர மறந்திட்டேன் நாளைக்கு
எடுத்திகிட்டு வரேன்னு சொன்னேன்.
அவ்வளவு கேவலமான லுக்கு இதுவரைக்கும்
யாரும் என்கிட்ட காட்டல. எத்தன பேருடா கிளம்பி
இருக்கீங்க?எல்லாரும் என்னையே பாக்கறானுங்க
ரொம்ப அசிங்கமா போயிடுச்சி.
நீட்டா ட்ரெஸ் மட்டும் போடத்தெரியுதுல்ல
டிக்கெட் எடுக்கணும்னு அறிவு வேணாம்?
எவ்வள்வு சொல்லியும் கேக்காம ப்ளாட்பாரத்துக்கு
கூட்டி வந்துட்டாரு அந்த ஹமாம் சோப்பு.
டிக்கெட் எடுக்கலன்னா 75 ரூபா அபராதம்
தெரியும்ல. தெரியாது சார் எங்கிட்ட அவ்ளோ
காசு இல்ல. சரி எவ்வளவு வச்சிருக்க?
12 ரூபா இருக்கு சார். அப்போ 15 நாள்
ஜெயில்ல இருக்க வேண்டியதுதான். சார் சார்
வேணாம் சார் அபராதமே கட்டறேன். சாயந்திரம்
ரூம்ல இருந்து எடுத்துகிட்டு வந்து கட்டறேன்.
அதுவரைக்கும் இந்த வாட்சை வச்சிக்குங்கன்னு
அவர் கைல குடுத்தேன். உடனே அபராதத்துக்கான
ரசீதை எழுதி கூடவே அவர் பெயர், சர்வீஸ் நம்பர்.
கொடுத்தார். வாட்சை திருப்பணும்ல அதுக்குதான்.
தம்பி இன்னிக்கு பூரா எத்தனை முறை வேணாலும்
இந்த ரயில்ல போய் வரலாம்னு சொன்னாரு.
மனசனுக்கு எவ்வளவு நக்கல் பாருங்க. மூடு
அவுட்டாயி ப்ளாட்பாரத்து பெஞ்ச்ல உக்கார்ந்தேன்.
எனக்காகவே காத்திட்டிருந்தா மாதிரி ஒருத்தன்
பின் பெஞ்சுலருந்து எழுந்து உக்காந்தான்.
என்னா சார் என்ன மாதிரிதானா நீயும்னு கேட்டுகிட்டெ
பக்கத்தில வந்தான். நான் செஞ்சது இருக்கட்டும் நீ
என்னடா செஞ்சே அத சொல்லு முதல்ல.
ட்ராக்குல ஒண்ணுக்கு உட்டா தப்பா சார்?
இதுக்கு போய் அந்த ஆளு இங்க உக்கார வச்சிட்டான் சார்.
அட நாதாரிப்பயலே உங்கூட என்னையும் ஏண்டா
சேத்துகிட்ட. நான் டிக்கெட் எடுக்காம பைன்
கட்டிட்டு வந்திருக்கேன். இவங்கூட இன்னும் கொஞ்ச
நேரம் இருந்தா ஆபத்துதான்னு இடத்தை காலி
பண்ணிட்டேன்.
ம்ஹூம் இவங்கிட்ட எல்லாம் அசிங்கப்படணும்னு
எழுதி இருக்கு போல.
ஒரு தப்பை தப்புன்னே தெரியாத அளவுக்கு
தவறுகள் மலிஞ்சி போச்சு உலகத்தில.
வந்தது. ப்ராஜெக்ட் செய்ய வேண்டி தாம்பரத்தில
நண்பர்களோட தங்கினேன். கோடம்பாக்கத்துக்கும்
தாம்பரத்துக்கும் தினமும் ட்ரெயின்ல போய் வந்து
கொண்டிருந்தேன். காலையில மெட்ராஸ் க்றிஸ்டியன்
காலேஜ் வாசல்ல கொஞ்சம் ஜொள்ள சிந்திட்டு.
ட்ரெயின புடிச்சு அங்க மீனாட்சி வாசல்ல மீதிய
சிந்தறதுதான் தினமும் வேலையே. இதுக்கு கூடவே
நாலு பேர் கூட்டு. ரவுசுக்கு கேக்கவே வேணாம்
ஒரே கும்மாளமா போயிகிட்டு இருந்தது.
வீட்ல இருந்து கொண்டு வந்த காசை எங்கன
ஒளிச்சு வச்சாலும் சிரமப்படாம கண்டுபிடிச்சுடற
அருமையான நண்பர்கள். நம்மளுக்கு ஒளிச்சு வச்சி
பழக்கமில்ல, அவனுங்களுக்கு ஒளிச்சு வைக்கறத
கண்டுபிடிக்கறதில கஷ்டமில்ல. பர்சுல காசு
இல்லன்னா கடுப்புல தூக்கி எறிஞ்சிடுவானுங்க
அப்படி ஒரு பாசக்கார பயலுங்க. வழக்கமா
ட்ரெயின் பாஸ் பர்ஸுல வைக்கிறதுதான் வழக்கம்.
நம்ம கூட்டத்தை சேர்ந்த ஒருத்தன் காசு வைக்கிற
எடத்தில கண்டதை வச்சிருக்கான்னு சில்லறை
இல்லாத கடுப்பில தூக்கி எறிஞ்சிடுச்சி அதை தேடி
கண்டுபிடிச்சி பின்னாடி சொருவிகிட்டு நானும்
கிளம்பிட்டேன்.
இந்த ட்ரெயின்ல செக்கர் வந்துட்டான்னா சுலபமா
கண்டுபிடிச்சிடலாம் எப்படின்னா, டிக்கெட் எடுக்காத
வித்தவுட்டுங்க கதவோரமாவே நிப்பானுங்க எந்த
நேரத்திலும் எஸ்கேப் ஆகறதுக்கு. வாரத்துக்கு
மூணு நாள் செக்கர் வந்தாலும் இவனுங்க அஞ்சவே
மாட்டானுங்க. ஒருநாள் மீனம்பாக்கத்தில நிறுத்தும்
போது செக்கர் வந்துட்டாடு, வாசப்பக்கம் நின்னுகிட்டு
இருந்ததுல ஒரு மூணு தெறிச்சு ஓடினானுங்க, அதில
ஒருத்தன் டை கூட கட்டி இருந்தான். அடப்பாவி!
நமக்கு ஒண்ணாம் க்ளாசில இருந்து பின்னால உக்காந்து
பழக்கம் அந்த பாசத்தில பின்னாடி இருந்தேன்.
வரிசையா செக் பண்ணிகிட்டு நம்மகிட்ட வந்தாரு
டிக்கெட் எடுக்காதவனை விட்டுடுங்க, டிக்கெட்
எடுக்கறாம்பாரு அவனை புடிச்சி நோண்டுங்கன்னு
முனகிக்கிட்டே பர்ஸை பிரிச்சா பக்குன்னு ஆயிடுச்சி
உள்ளாற அது இல்ல. நெலவரம் கலவரம் ஆகறதுக்குள்ள
எப்படியும் இவங்கிட்டருந்து தப்ப முடியாது நந்தி
மாதிரி நிக்கறான். பாக்கெட்லயும் பத்து ரூபாய்க்கு மேல
ஒரு பைசா கூட இல்ல. அசடு வழியுது முகத்தில,
சாரி சார் பாஸ் கொண்டு வர மறந்திட்டேன் நாளைக்கு
எடுத்திகிட்டு வரேன்னு சொன்னேன்.
அவ்வளவு கேவலமான லுக்கு இதுவரைக்கும்
யாரும் என்கிட்ட காட்டல. எத்தன பேருடா கிளம்பி
இருக்கீங்க?எல்லாரும் என்னையே பாக்கறானுங்க
ரொம்ப அசிங்கமா போயிடுச்சி.
நீட்டா ட்ரெஸ் மட்டும் போடத்தெரியுதுல்ல
டிக்கெட் எடுக்கணும்னு அறிவு வேணாம்?
எவ்வள்வு சொல்லியும் கேக்காம ப்ளாட்பாரத்துக்கு
கூட்டி வந்துட்டாரு அந்த ஹமாம் சோப்பு.
டிக்கெட் எடுக்கலன்னா 75 ரூபா அபராதம்
தெரியும்ல. தெரியாது சார் எங்கிட்ட அவ்ளோ
காசு இல்ல. சரி எவ்வளவு வச்சிருக்க?
12 ரூபா இருக்கு சார். அப்போ 15 நாள்
ஜெயில்ல இருக்க வேண்டியதுதான். சார் சார்
வேணாம் சார் அபராதமே கட்டறேன். சாயந்திரம்
ரூம்ல இருந்து எடுத்துகிட்டு வந்து கட்டறேன்.
அதுவரைக்கும் இந்த வாட்சை வச்சிக்குங்கன்னு
அவர் கைல குடுத்தேன். உடனே அபராதத்துக்கான
ரசீதை எழுதி கூடவே அவர் பெயர், சர்வீஸ் நம்பர்.
கொடுத்தார். வாட்சை திருப்பணும்ல அதுக்குதான்.
தம்பி இன்னிக்கு பூரா எத்தனை முறை வேணாலும்
இந்த ரயில்ல போய் வரலாம்னு சொன்னாரு.
மனசனுக்கு எவ்வளவு நக்கல் பாருங்க. மூடு
அவுட்டாயி ப்ளாட்பாரத்து பெஞ்ச்ல உக்கார்ந்தேன்.
எனக்காகவே காத்திட்டிருந்தா மாதிரி ஒருத்தன்
பின் பெஞ்சுலருந்து எழுந்து உக்காந்தான்.
என்னா சார் என்ன மாதிரிதானா நீயும்னு கேட்டுகிட்டெ
பக்கத்தில வந்தான். நான் செஞ்சது இருக்கட்டும் நீ
என்னடா செஞ்சே அத சொல்லு முதல்ல.
ட்ராக்குல ஒண்ணுக்கு உட்டா தப்பா சார்?
இதுக்கு போய் அந்த ஆளு இங்க உக்கார வச்சிட்டான் சார்.
அட நாதாரிப்பயலே உங்கூட என்னையும் ஏண்டா
சேத்துகிட்ட. நான் டிக்கெட் எடுக்காம பைன்
கட்டிட்டு வந்திருக்கேன். இவங்கூட இன்னும் கொஞ்ச
நேரம் இருந்தா ஆபத்துதான்னு இடத்தை காலி
பண்ணிட்டேன்.
ம்ஹூம் இவங்கிட்ட எல்லாம் அசிங்கப்படணும்னு
எழுதி இருக்கு போல.
ஒரு தப்பை தப்புன்னே தெரியாத அளவுக்கு
தவறுகள் மலிஞ்சி போச்சு உலகத்தில.
Subscribe to:
Posts (Atom)
