எல்லையற்ற அன்பு கொள்வோம்

Showing posts with label வீடியோ. Show all posts
Showing posts with label வீடியோ. Show all posts

Thursday, August 14, 2008

கவ்வாலி இசை, உருவ ஒற்றுமை, காமிக்ஸ் உலகம்

சென்ற வாரத்தின் ஒருநாள் பணிநிமித்தமாக தொலைதூரம் செல்லவேண்டி இருந்தது.
அலுவலகத்தில் பாகிஸ்தானி ட்ரைவர்கள்தான் அதிகம். அப்படி ஒருநாள் செல்லும்போது
காரில் ஒரு பாடலை ஒலிபரப்பினார் பாக் நண்பர். பொதுவாக ஒரேமாதிரி இசைக்கும்
பாகிஸ்தானிய நாட்டுப்புற இசையை நான் விரும்புவதே இல்லை. என்ன செய்வது
வேறு வழியின்றி போடுப்பா கேக்கலாம் என்றேன். எதோ ஒரு பாட்டை போட்டார்
பயணம் முடிகிற வரை அந்த ஒரு பாட்டை மட்டுமே திருப்பி திருப்பி கேட்கும்படியான
குரல். ஹரிகரனைப் போல, எஸ்.பி.பி போல அத்தனை அருமையான குரல்
இல்லையென்றாலும் எதோ ஒன்று அந்த குரலில் இருந்து என்னை ஈர்த்தது.
பத்து நிமிடங்களுக்கு மேல் ஓடும் அந்தப்பாடலுக்கு சொந்தக்காரர் நுஸ்ரத் ஃபதே
அலிஃகான் என்று சொன்னார். குறித்துக்கொண்டேன்.

இந்த ஒருவாரத்தில் நூற்றுக்கும் அதிகமான முறை கேட்டிருப்பேன். ஒருவார்த்தையும்
புரியவில்லை, முற்றிலும் புதியதான இசை என்றாலும் என்ன பிடித்திருக்கிறது என்றே
தெரியவில்லை. மிக ஆழ்ந்து யோசித்ததில் அதில் எனக்குத் தெரிந்து சில நினைவுகளை
மீட்டெடுக்கிறது என்று கண்டுகொண்டேன். மார்கழி மாதத்தில் பெருமாள் கோவிலில்
போடப்படும் கீர்த்தனை, சாமிப்பாடலின் ஏதோ ஒரு குரல் இந்தக்குரலுடன் ஒத்துப்
போவதாக உள்ளிருக்கும் நினைவு சொல்கிறது. இரண்டாவதாக பாடலில் கடைசியாக
உச்சக்கட்ட ஸ்தாயில் நுஸ்ரத்தின் குரல் எனக்கு மிக நெருக்கமான அதே மாதிரி
உச்சஸ்தாயியில் குரல் பிசிரடிக்குமாறு அமைந்திருந்தது. அது எம்.எஸ் விஸ்வநாதனின்
குரல். வசீகரம், ஆவேசம், உணர்வுகள், தொழுதல், தாளத்திலிருந்து வெளிச்செல்லும்
குரல் போன்ற பல வடிவங்களின் தொகுப்பாக இந்தப்பாடல் உள்ளது.



இவரைப்பற்றி அறிந்துகொள்ள இணையத்தில் தேடியபோது வெங்கட் அருமையான
பதிவொன்றை எழுதியிருந்தார். பாடலை நிதானமாக கண்ணை மூடி ரசித்துப்பாருங்கள்.

விடியோ தெரியாதவர்கள் Tumhein dillagi bhool என்று youtube ல் தேடினால்
கிடைக்கும்.

***

தூக்கமிழந்து போகும் இரவுகளில் எல்லாம் சண்டைப் படங்களைப் பார்ப்பது வழக்கம்
(அதற்காக "சண்ட" படத்தைப் பார்க்கும் துணிவு இல்லை) கடந்தவாரத்தில் ஒருநாள்
அப்படி தூக்கமிழந்து போனது ஒரு இரவு. மெல் கிப்சனின் பேட்ரியாட் படத்தினைப்
பார்த்தேன். மெல் கிப்சனின் இப்போதையை முகத்தினைக் காணும்போதெல்லாம்
இதே முகத்தை வேறெங்கோ கண்டிருக்கிறேன் என்று தோன்றும். அப்படியே தீவிரமான
யோசனைக்குப் பிறகு இதேபோன்ற ஒரு முகம் அல்லது அதே போன்ற உடல்மொழியுடன்
கூடிய ஒரு நடிகர் எனக்கு ஞாபகம் வந்தார். பொதுவாகவே எனக்கு புதிதாக ஒரு முகத்தை
கண்டால் இதற்கு முன்பு இதே மாதிரி உள்ள ஒருவரோடு ஒப்பிட்டு பார்த்துக்கொள்வேன்.
ஆயிரத்தில் ஒன்றிரண்டு முகம் அதேபோல உண்டு. உதாரணத்திற்கு இந்த பதிவு
பார்த்தால் தெரியும்.



மெல்கிப்சனைப்போலவே உள்ள ஒரு முகமாக நான் நினைப்பது மறைந்த நகைச்சுவை
நடிகர் சந்திரபாபு. ஓரளவுக்கு முக ஒற்றுமை இரண்டு பேருக்கும் இருப்பதாக நான்
நம்புகிறேன். சினிமாவில் வருவதுபோல அச்சில் வார்த்ததுபோல ஒரே மாதிரி எல்லாம்
இருக்க மாட்டார்கள் எனினும் சில பாவனைகளின்போது, சிரிப்பின்போது ஒருநொடியில்
தோன்றுமே அதுதான் ஒற்றுமை. நிஜத்தில் பேட்ரியார் பார்க்கும்போது சந்திரபாபுதான்
நினைவுக்கு வந்தார். இதேபோல முக ஒற்றுமை மேலும் இரண்டு பேருக்கு இருக்கிறது
அவற்றை கீழே கொடுக்கிறேன். பெயரை நீங்களே கண்டுபிடியுங்கள்.



ஒண்ணுமே தெரில எங்கடா ஒத்துமை தெரியுதுன்னு கேட்டிங்கன்னா, படங்கள் ரெண்டு ரெண்டா தெரியுற நிலைக்கு வரவும். அப்பவும் தெரிலன்னா வுட்டுடுங்க.

***

மூன்றாவது ரவுண்டு முடிந்திருந்த நேரம். மல்லு நண்பன் குழறலாக ஆரம்பித்தான்.

"இதுவரைக்கும் அந்த ஒரே ஒரு விஷயத்தைத் தவிர அழுததே இல்ல தெரியுமா?"

"எந்தா விஷயம் சொல்லு மச்சி" (ரெண்டு பெக்கு உள்ள போச்சுன்னா உடனே ப்ளாஷ்பேக் போய் பெயிலியர் லவ்வ நெனச்சு ஒப்பாரி வெப்பானுங்களே)

எனக்கு காமிக்ஸ் புக்குன்னா ரொம்ப புடிக்கும் போபனும் மோளியும், பாலராமா,
பாலபூமி, பாலமங்களம், பூம்பாட்டு, முத்தஷி (பாட்டி கதைகள்) இந்தமாதிரி
ஒருநூறுக்கும் மேல சேத்து வெச்சிருந்தேன். "சின்ன வயசுல ஸ்கூலுக்கு அலுமினிய சூட்கேஸ்ல புக்கு எடுத்துட்டுபோவோம்ல" அதுலதான் காமிக்ஸ் அடுக்கி வெச்சு
என் ரூம்ல வச்சிருந்தேன்.

காமிக்ஸ்னா ரொம்ப இஷ்டமா மச்சி?...

ஆமாண்டா வளெர இஷ்டம்.

படிப்ப முடிச்சிட்டு நான் மும்பைக்கு போனேனா அங்க போனபிறகு ஆறுமாசத்துக்கு
ஒருமுறைதான் ஊருக்கு போவேன். எப்பப்ப போறேனா அப்பலாம் அந்த காமிக்ஸ்
பொட்டிய திறந்து படிப்பேன். அப்படியே பள்ளிக்கூட நாட்கள் ஞாபகம் வரும். நான்
ஊருக்குப் போக ஆர்வமா இருக்கறதும் இது ஒரு காரணம்.

"கேக்கறதுக்கே நல்லாருக்கே மேல சொல்லு மச்சி"

அப்படி ஒருமுறை ஊருக்கு போகும்போது என்னோட அறைல அந்த காமிக்ஸ் பொட்டிய
காணும். வீடெல்லாம் தேடினபோது கிடைக்கவேல்ல. நேசிக்கற பொருள் தொலஞ்சு
போனா எப்படி இருக்கும்? என்னோட பர்ஸ், மூணு மொபைல் காணாம போகும்போது
கூட எனக்கு பெருசா எந்த கவலையும் இல்ல. ஆனா இப்ப பொட்டிய காணும்னவுடனே
என்னால அழுகைய கட்டுப்படுத்தவே முடில.

அம்மாகிட்ட போய் கேட்டேன். ஒருமாதிரி தயக்கமான குரல்ல சொன்னா. இந்தமாதிரி
என்கிட்ட பேசினதேயில்ல. பாத்திரம் வாங்கறவங்கிட்ட போட்டு பாத்திரம் வாங்கிட்டதா
சொன்னா. அப்படியே தோட்டத்துக்கு ஓடிப்போயிட்டேன்.

பிறகு எந்தங்கச்சி வந்தா. "நான் காலேஜ் போயிருந்த சமயம் அம்மா இப்படி செஞ்சுட்டாங்க.
நான் கேள்விப்பட்டவுடனே அம்மாகிட்ட சொன்னேன். "இந்த புக்குலாம் கிட்டத்தட்ட அஞ்சு
வயசுலருந்து அண்ணன் சேகரிச்சுட்டு வரான்மா". இங்க வந்தா இதபடிக்காம இருக்க
மாட்டான். அடுத்தமுறை வரும்போது இத கண்டிப்பா தேடுவான் ஏன் இப்படி செஞ்சேனு
கேட்டேன்.

அம்மா பதறிட்டாங்க. உடனே இருஞ்சாலக்குடில இருக்க அத்தனை வேஸ்ட் பேப்பர்
கடைலயும் தேடினோம். கிட்டத்தட்ட ஒருவாரம் தேடியும் கிடைக்கல. அம்மா
இந்த காரியத்துக்காக ரொம்ப வருத்தப்பட்டாங்க.

உடனே வீட்டுக்கு ஓடிப்போய் பாத்தேன். அம்மா அழுதுட்டு இருந்தாங்க. "தெரியாம
செஞ்சுட்டேன் என்ன மன்னிச்சிருடான்னு சொன்னா" புத்தகம் தொலைஞ்சு
போன வருத்தத்தோட அம்மா என்கிட்ட மன்னிப்பு கேட்டதும் என்னால அழுகைய
கட்டுப்படுத்த முடியவேல்ல. அந்த சம்பவத்துலருந்து அம்மா என் விஷயங்கள்ல
ரொம்ப கவனமா இருக்கபோதெல்லாம் காமிக்ஸ் பெட்டி தொலைஞ்சு போனதுதான்
ஞாபகம் வரும்.

"வுட்றா.. வுட்றா... இப்பலாம் ஆன்லைன்ல செமி போர்னோ காமிக்ஸ்லாம் வருது.
நாளைக்கு உன்னோட மெயிலுக்கு லிங்க்ஸ் அனுப்பி வைக்கிறேன். பாத்து எஞ்சாய்
பண்றா ஆனா "மிஸ்டு கால் குடுத்துடாத" (மிஸ்டு கால் ன் பதம் தெரியாதவர்கள்
தனியாக கேட்கவும்)

டேய் என்ன இருந்தாலும் அந்த பழைய காமிக்ஸ்ல வர்ற மாதிரி இருக்காதுடா

"ரப்சர் பண்ணாம கெளம்புடா" அவனவனுக்கு லவ் பெயிலியர் ஆச்சுன்னாதான் ஒப்பாரி
வெப்பானுங்க. இவன் என்னடான்ன கொத்து புஸ்தகம் (கொச்சுப் புஸ்தகம் இல்லிங்க)
காணாம போனதுக்கெல்லாம் சின்னபுள்ளயாட்டம் அழுதுகிட்டு.

Saturday, June 07, 2008

சில குறிப்புகள்.

பொதுவாக பட்டான் என்று அழைக்கப்படும் பாகிஸ்தானியர்களைப்பற்றி ஒரு விதமான
கருத்து உள்ளது. அதாவது நம்ம ஊர்ல இப்படி சொல்வாங்க. "இவளே இவ்ளோ
அழகா இருக்கான்னா இவ தங்கச்சி எப்படி இருப்பா" என்று. அதையே பட்டான்கள்
மாற்றி "இவளே இவ்ளோ அழகா இருந்தான்னா இவ தம்பி செமையா இருப்பான்"
என்று சொல்வார்கள். எனக்குத் தெரிந்து உண்மைதான். ஓரினச்சேர்க்கை விஷயத்தில்
கராராக இருப்பவர்கள் இவர்கள். வம்ச விருத்திக்கு மட்டுமே பெண்ணை நாடும்
குணம் உள்ளவர்கள். இதை எதற்கு சொல்கிறேன் என்றால் நாங்கள் தங்கி இருக்கும்
இடத்தில் ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத பிலிப்பினோ திருநங்கைகள் மூன்று
பேர் தங்கியிருக்கிறார்கள். பிலிப்பைன் நாட்டில் மட்டுமே இவ்வித குறைபாடுகள்
கொண்டவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். ஏன் என்று தெரியவில்லை. சரியாக
நூற்றுக்கு மூன்றுபேர் இவ்விதம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எங்கள் விடுதியில் பட்டான்
என்ற பாகிஸ்தானிய ட்ரைவர்கள் அதிகம் பேர். கனரக வாகனங்கள் ஓட்ட அவர்களை
விட்டால் சிறந்த இனம் ஒன்று இல்லை. இந்த பிலிப்பினோக்கள் மூவரும் வெளியில்
செல்லும்போதோ, வரும்போதோ இவர்களை விழுங்கும் தாபத்தோடு அனேக
பட்டான்கள் நோக்குவர். முதுகின் கீழ் துளைப்பது போன்ற பார்வை பின் எதாவது
கமெண்ட் அடிப்பது. அதில் எரிக் என்பவர் மட்டும் என் நண்பர். "இந்தியர்களாவது
போகும்போதும் வரும்போதும் கிண்டல் மட்டும்தான் செய்வார்கள். படான்களோ
ஒருபடி மேலேபோய் பாலியல் ரீதியான தாக்குதலில் ஈடுபடுகிறார்கள். தனிமனித
சுதந்திரம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்த ஆதியினம் என்பார் அந்த
நண்பர். அவர் சொல்வதும் சரியே.

லிவிங் ஸ்மைல் வித்யா பங்குபெற்ற இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சியினை காண
நேர்ந்தவுடன் நம் இந்தியச்சமூகம் எவ்வளவோ தேவலாம் என்று தோன்றியது.

----

சென்ற வார குமுதம் இணையப் பதிப்பை பார்த்தவர்கள் பலருக்கு அதிர்ச்சி, ஆச்சரியம்
ஆவேசம் கிலேசம்னு நிறைய வந்திருக்கலாம். ஆனால் எனக்கு குஜாலாக இருந்தது
மேலும் எனக்குத் தெரிந்த நண்பர்களுக்கு போன் செய்து மேட்டர் சொன்னேன்.
அவர்களும் குஜாலாக பார்த்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தார்கள். மேட்டர்
என்னன்னா குமுதம் பெண்கள் சிறப்புப் பகுதியில் சேலை கட்டுவது எப்படி
என்று விவரணப்படம் போட்டிருந்தார்கள். விவரணப்படம் என்றால் விலாவாரியாக
என்று கொள்க. சவுகார்ப்பேட்டை ஆண்டி ஒன்று சேலை கட்டுவதை ஒளிவுமறைவு
இல்லாமல் கவர் செய்திருந்தார்கள். பெண்கள் சிறப்புப் பகுதியில புடவை கட்ட
சொல்லித்தரும் அளவுக்கு வந்தாச்சு போல. ஆனாலும் விவரணப்படம் சகிலாவுக்கே
சவால் விடும் தரத்திற்கு இருந்தது. வாழ்க வளர்க. அடுத்தவாரம் ஜட்டி போடுவது
எப்படி என்று சொல்லித்தருவாங்களா என்று அய்யனார் கேட்டார். அடப்ப்ப்பாவி...
இதுகூடுமா தெரியாது...

----

திரும்பத் திரும்ப புத்தகங்களை சிலாகித்துப்பேசுவது எனக்கே சலிப்பைத் தருகிறது
என்றாலும் வாசிப்பதை நிறுத்துவதில்லை. அதைப்பற்றி பேசுவதையும் நிறுத்துவதில்லை
அய்யனாரிடமிருந்து பறித்து வந்த "ஆதண்டார் கோயில் குதிரை" என்ற சிறுகதைத்
தொகுப்பை வாசித்தேன். முன்பே கண்மணி குணசேகரனின் "வெள்ளெருக்கு" என்ற
தொகுப்பை வாசித்து பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தேன். இந்த நூலிலும் தமிழின்
தரமான சிறுகதைகள் என்று நேர்மையாக சொல்லக்கூடிய கதைகள் இருக்கின்றன.
சிறந்த படைப்பாளன் என்பவன் தான் வாழ்ந்த சூழ்நிலையை, மக்களை, அவர்களின்
மொழியை, வட்டார வழக்கத்தை நியாயமாக பதிவிப்பவனே நேர்மையான படைப்பாளன்.
அந்த வகையில் கண்மணி குணசேகரன் தமிழின் முக்கியமான படைப்பாளி.
என் வாசிப்பு தளத்தில் நாஞ்சில் நாடனுக்குப் பிறகு வட்டாரவழக்கிலான படைப்புக்கு
அதிக முக்கியத்துவம் கொடுக்கும் படைப்பாளி.

மருதாணி என்பதை எங்கள் ஊரில் "அழவான" என்றே சொல்வார்கள். கிட்டத்தட்ட
கொத்தடிமையைப் போல மாடுமேய்த்து, சாணியள்ளி, தொழுவம் பெருக்கி என
எல்லா வேலைகளையும் செய்யும் சிறுவனின் உலகம் என ஆரம்பித்து அவனின்
அழவான வைத்துக்கொள்ளும் ஆசையினையும் அதைவிட அதிகாலையில் அழவான
உதிர்ந்து கையிலிருந்து வெளிப்படும் அந்த வாசனையை முகர்ந்துபார்க்க விரும்பும்
சிறுவன். அதற்காக அழவான செடியைத் தேடுகிறான். மிகுந்த தேடலுக்குப்பின்
அழவானையை கண்டு பெரும்பயத்தினூடே பறிக்கிறான். மறுநாள் அதிகாலையிலே
வருமாறும் "மாட்டை பொலிபோட" வேண்டும் என்று பலமுறை எச்சரித்து
சொல்கிறாள் சொந்தக்காரி. மருதாணி வாசம் முகரும் ஆர்வத்துடன் அக்காவிடம்
அரைக்கச்சொல்லி வைத்துக்கொள்கிறான். மறுநாள் சூரியன் சூத்தாமட்டையில்
அடிக்கும்போதுதான் விழிப்பு வருகிறது கூடவே முந்தின தினம் எச்சரிக்கை
செய்ததும் நினைவு வர உதறி விட்டு ஓடுகிறான். அவள் இவனைக் கண்டபடி
ஏசுகிறாள் மிகுந்த அச்சத்துடன் சாணி அள்ளி எருக்குழியில் போடுகிறான். திடீரென
கை உதறிக்கொண்டு அழவான வாசனையை முகரும் தன் ஆசையை அவனே
அறியாமல் மூக்கருகே கோண்டு செல்கிறான். சாணி நாத்தம்தான் அடித்தது.
வாசம் என்ற கதையும் அழகாக இதனை பதிவித்திருந்தார். ஒன்றுக்கொன்று
சம்பந்தமில்லாத அத்தனை கதைகளும் ஒருகிராமத்தின் வெவ்வேறு தளங்களில்
இயங்குகிறது.

----



சமீபத்தில் பார்த்த மிகச்சிறந்த திரைப்படம் "RAY" என்ற படம். டைட்டில் இசைக்காக
மறுபடியும் படம் பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது. படம் முழுக்க இசைதான்.
கண்தெரியாத ஒரு இசைமேதையின் வரலாற்றை சொல்லும் படம். வாய்ப்புக்
கிடைத்தால் பாருங்கள். இந்தப்படத்தில் வருவதுபோன்ற அற்புதமாக ப்ளாஷ்பேக்
காட்சிகள் வேறெந்தப்படத்திலும் கண்டதில்லை. ஒவ்வொரு ப்ரேமும் ஒரு
கவிதை. உண்மைக்கதை என்று போட்டிருக்கிறார்கள். ஒரு இசைக்கலைஞனின்
மிகச்சிறந்த பதிவு.

----

தமிழ்மணக்கவுஞ்சர்கள் கவிதை எழுதி வன்முறை செய்வதை தடுக்கும் விதமாக
அவர்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கும் வகையில் சட்டத்தில் வழிவகை உள்ளதா
என அடர்கானகப்புலி என்னிடம் கேட்டது, மேலும் இல்லையென்றால் எப்பாடுபட்டாவது
ஒரு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யவேண்டும் என்று துயரத்துடன் விம்மியபடி
கிட்டத்தட்ட அழுதபடி சொன்னார். மிகச்சிறிய அளவில் வன்முறை செய்தவன்
என்ற வகையில் கடக்கவேண்டிய தூரம் அதிகமிருப்பதால் இதில் கருத்துச்சொல்ல
ஈரிழைத் துவர்த்து அளவுக்குக் கூட எனக்கு உரிமை இல்லை.

ஆகவே தமிழ்மணக்கவுஞ்சர்கள் வன்முறையின் உச்சம் தொட்டு அடர்கானகப்புலியின்
படைப்புச்சுதந்திரத்திற்க்கு எதிரான அதிகார மய்யத்தினை கண்டிக்குமாறு கேட்டுக்கொண்டு
சிறந்த வன்முறைக்கவுஞ்சராக வைகை ராம் அவர்களையும் அவரின் கவுஜையை
பதிவிக்கிறேன்.

பெருவெளியின் காட்சியடைய
சாளரம் வழியும் எரிதழலின்
நிறமடைகிறது எனது அறை...
உந்தன் முதன்முறை வருகையை போலே...

Monday, March 10, 2008

ஸ்ருதி கமல்ஹாசன், சிம்பு, தருண்கோபி மற்றும் வேதிகா





ஒனிடா டீவி என்றாலே விளம்பரம் வித்தியாசமாக இருக்கும். சில வருடங்களுக்கு
முந்திய ஓனிடா டீவி விளம்பரம் பார்த்திருப்பீர்கள். அதில் வெள்ளைக்கார பெண்மணி
வாயை அகல விரித்து பெருங்குரலெடுத்து "ஓ..." வென்று கத்துவார் (பாடுவார்)
அப்போது அவருக்கு முன்னே "சரக்கடிக்க உபயோகப்படும்" மெல்லிய கண்ணாடி
தம்ளர் காட்டப்படும். வெ.பெண்மணி உச்சஸ்தாயியில் பாட ஆரம்பிக்கும்போது
கேமரா பின்னோக்கி நகரும். சோபாவில் உட்கார்ந்து கண்ணாடி தம்ளரை கையில்
பிடித்தபடி சோபாவில் உட்கார்ந்து கொண்டு ஒருவர் தொலைக்காட்சி பார்த்துக்
கொண்டிருப்பார். தொலைக்காட்சியில் அப்பெண் மேலும் உச்சஸ்தாயில் பாடும்
போது இவர் கையில் பிடித்திருக்கும் கண்ணாடி தம்ளர் படீரென உடையும்.
ஒனிடா தொலைக்காட்சியின் "ஒலித்திறன்" அப்படிப்பட்டது.

சமீபத்தில் ஸ்ருதி கமல்ஹாசனின் பேட்டியை பார்த்தபோது மேற்படி பெண்மணியின்
குரலுக்கும் இவருக்கும் அதிக வித்தியாசமில்லை. பேட்டி கண்டவர் பெயர் ஞாபகம்
இல்லை (சீரியல்களின் பெண்களுக்கு அடுத்தபடியாக இவர்தான் அதிகம் கண்
கசக்கியவர்) "தென்பாண்டி சீமையிலே" பாடலை மேற்படி பெண்மணியின் குரலில்
அம்மணி பாட ஆரம்பிக்க அதிர்ந்து போனேன் நான். எவ்வளவு உணர்ச்சியான
பாடல இப்படி காமெடி பண்ணிட்டாங்களேன்னு ஆனால் அவங்க கீபோர்டு
வாசிச்சது அவ்வளவு அழகா இருந்தது. அவங்களும்தான்.

பாடலை பாடி முடிச்சதும் பேட்டி எடுத்தவர் சொல்றார். "அய்யோ இந்த பாடல
இவ்ளோ அழகா பாடமுடியும்னு எங்களுக்கு தெரியாமலே போச்சு. எனிவே ரொம்ப
தேங்ஸ் ஆவ்சம், எக்சலண்ட்னு ரொம்ப ஜாஸ்தி கூவினார். (டேய் வுட்டா கால்லயே
வுழுந்துடுவ போலருக்கு). ரெண்டு பேருல யாரு வாசிச்சதுன்னு ஒரே குழப்பாச்சு.
சும்மா சொல்லக்கூடாது நல்லா கீபோர்டு வாசிக்கறாங்க. ஆங்கிலப்பாடலுக்கு ஏற்ற
குரல். பேசும்போது அப்படியே பெண்மை கலந்த கமலினை ஞாபகபடுத்துகிறார்.

என்னைப் பத்தி சொல்றதுக்கு என்ன இருக்கு? "நான் பொய் சொல்ல
மாட்டென், திருட மாட்டேன், கோவம் ஆக மாட்டேன்" இதெல்லாம் யார்
சொன்னாலும் பொய்.
(இந்த இடத்துல அப்படியே கமல் ஸ்டைல்)என்னைப் பத்தி
இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு கேளுங்க அப்ப சொல்றேன். பேசும்போது தலைய
சாய்ச்சு. குனிஞ்சு, முகத்தை சுழிச்சி இந்த மாதிரி எல்லாத்தையும் குழந்தை
மாதிரி செய்தது ரசிக்க முடிஞ்சது.

லாஸ் ஏஞ்சல்ஸ்ல மியூசிக் கத்துகிட்டிங்க, லாஸ் ஏஞ்சல்ஸ்ல மியூசிக்
கத்துகிட்டிங்கன்னு ஒரே லாஸ் ஏஞ்சல்ஸ் புராணமா விட்டுகிட்டிருந்தாரு கேள்வி
கேட்டவர் நான் அவர ஒரு கேள்வி கேட்க ஆசைப்படுகிறேன். இந்தியாவிலருந்து
ஸ்ருதிதான் மொதமொத அமெரிக்கா போனாங்களா/போய் மியூசிக் கத்துகிட்டாங்ளா?
ஏன்யா இந்த மாதிரி பெரிய இடம்ன உடனே உடம்ப வளைச்சு கேள்வி கேக்கறிங்க?
ஏன் சொல்றேன்னா இதுக்கு முன்னாடி அஜித் பேட்டி கலைஞர் டீவில வரும்போது
என்னவோ அவர கடவுள் ரேஞ்சுக்கு வச்சு காபந்து பண்ணாங்க. இந்த பொண்ணு
இன்னும் அதிசயிக்கற மாதிரி ஒண்ணூமே பண்ணல. அதுக்குள்ள ஏன்யா இப்படி
மீடியா லைட்ட போடறிங்க?.

இசைத்துறைய பொறுத்தவரை இவர் என்ன சாதிப்பார் என்று தெரியவில்லை.
ஆனால் சினிமாத்துறையில் நிச்சயமாக சாதிப்பார். புலிக்கு பிறந்தது கண்டிப்பாக
பூனையாக இருக்காது. :) மியாவ்வ்

அடுத்ததா அனுஹாசன் மேல பயங்கர கொலவெறில இருக்கேன். காளைனு ஒரு
வெற்றி படமாம் அதுல நடிச்ச சொம்பு, வேதிகா மற்றும் இயக்குனர கூப்பிட்டு
காபி வித் அனுல பேச விட்டுருக்காங்க. ஒரு மொக்க படத்த எடுத்ததுமில்லாம
அத பத்தி பேசறதுக்கு ஒரு நிகழ்ச்சி அத ஊர் உலகம் பாக்கறதுக்கு ஒரு
தொலைகாட்சி மற்றும் இணையம். என்ன எழவுடா சாமி.

நானும் தெரியாமதான் பாக்கறேன் டீவி புரொக்ராம்ன உடனே இந்த கீரோயின்லாம்
எங்கருந்துதான் இந்த ஸ்லீவ்லஸ் டாப்ஸ் வாங்கறாங்களோ தெரில. ஃபேன் ஓடாத
இடத்துல, காற்றோட்டம் அதிகமில்லாத இடத்துல கூட அவுங்க முடி அலைபாயும்
உடனே அத எடுத்து காதுல சொருவுவாங்க. இந்த மாதிரி அக்குள் காட்டி பேட்டி
குடுத்தின்னா போட்டிய எடுத்துடுவம்னு மிரட்டினாதான் ஒழுங்கா பெக்கெ பெக்கெனு
சிரிக்காம இருக்கும்.

தருண்கோபி எடுத்த திமிரு கன்னாபின்னானு ஓடுச்சாம். நான் சொல்வேன் பேரரசு
வரிசைல இவரும் ஒரு விஷச்செடி.

டென்சன் டென்சன் டென்சன் ஒரே டென்சனப்பா...

இப்படிக்கு
வெட்டியாக ஆபிஸ் நேரத்தில் youtube வீடியோ பார்த்து பதிவெழுதும் சங்கம்.