எல்லையற்ற அன்பு கொள்வோம்

Showing posts with label காமெடி. Show all posts
Showing posts with label காமெடி. Show all posts

Monday, May 26, 2008

அண்ணாச்சியும் மீனாவும் பின்ன சிலதும்

புற்றுநோய்க்கு எதிராக அபுதாபி தமிழ்ச்சங்கத்தின் மகளிர்பிரிவு மாபெரும் விழிப்புணர்ச்சி
விழாவினை அபுதாபியில் நடத்தினார்கள். விழிப்புணர்ச்சியை பரவலாக்கும் எண்ணத்தில்
நடிகை மீனாவினைக் கொண்டு புற்றுநோய் குறித்த புத்தகத்தையும் வெளியிட்டார்கள்.
சிறப்பு நிகழ்ச்சியாக கலந்துகொண்ட மீனாவுக்கு கலைத்தொழிலில் சிறப்பாக செயல்
பட்டமைக்காகவும் விருது வழங்கி கவுரவித்தார்கள்.

"டேய் ஒரு விழா இருக்கு வர்றியாடே" ன்னு அண்ணாச்சி போனவாரம் கேட்டார்.

வெள்ளிக்கிழமை கடவுளே பாலைவனத்துல வந்து வேலை செய்யுன்னு சொன்னாலும்
நம்ம செய்யறது கிடையாது. இருந்தாலும் பஸ், டாக்சி புடிச்சி ஒரு இடத்துலருந்து இன்னொரு இடத்துக்கு போறதும் ஒரு வேலைதானன்னு சோம்பேறித்தனம் மேலிட்டதால் "எத்தனை மணிக்கு விழா நடத்துறாங்க" என்றேன்.

சாயங்கலாம்தாண்டேன்னு சொன்னார். பெருசா வெட்டி முறிக்கற வேலை
இல்லன்னாலும் பில்டப் விடலன்னா நம்பவே மாட்டாங்கல்ல. விழாவுக்கு போக
முக்கியமான காரணியாக இருந்தது. அமீதா ஆண்ட்டி. (அரங்கத்தில் உள்ளவர்கள்
நமீதா என்றே அழைத்தனர்.)

ஒரு இடத்திற்கு தெளிவாக செல்லவேண்டும் என்றால் அண்ணாச்சியிடம் வழி
கேட்கவோ/சொல்லவோ கூடாது என்பதை எனக்கு இரண்டாவது முறையாக புரிய
வைத்தார்.

மறுபடியும் சரியான இடத்தை டாக்சி மூலம் அடைந்தேன். அரங்கின் வாயிலில்
காத்திருக்க அண்ணாச்சி வந்து உள்ளே கூட்டிப்போனார். நடிகைகள் ஒப்பனை இடும்
அறைக்கு நேராக அழைத்துப்போனார். அங்கே அமீதா வர்ணனை ஒத்திகை பார்த்துக்
கொண்டிருந்தார். இங்கே ஒன்றைக் குறிப்பிட்டே வேண்டும்.

அமீதாவும் அண்ணாச்சியும் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்றாக படித்ததுபோல
பேசிக்கொண்டிருந்தனர். நடுநடுவே மேஜர் கரகர சுந்தர்ராஜனின் புத்திரர் கரகர கவுதம்
வந்து போய்க்கொண்டிருந்தார். விழா ஏற்பாடுகளால் அண்ணாச்சி இரண்டு நாளாக
சாப்பிடவில்லை போலும். அதை அவர் வெளிப்படுத்தியபோது சரவணபவன் அளவு
சாப்பாடு ஒன்றை அமீதா எடுத்து நீட்ட அவர் ஐந்தே வினாடிகளில் அனைத்தையும்
காலிபண்ணினார். பக்கத்தில் உட்கார்ந்திருந்த என்னை அப்பளம் சாப்பிடக்கூட
சொல்லவில்லை.

பின்பு பாட்டுக்குப் பாட்டு புகழ் B.H.அப்துல் ஹமீத் அறைக்கு அழைத்துச்சென்றார்.
மைக்கில் பேசுவதை விட என்ன அழகான குரல்வளம் அவருக்கு. அவரிடம்
வழக்கம்போல என்னைக்காட்டி இவர்தான் கவிஞர் கம் எழுத்தாளர் தம்பிகதிர்
என்று அறிமுக்கப்படுத்தி கொலைவெறியை தீர்த்துக்கொண்டார்.

"கவிதையெல்லாம் இயற்றுவீர்களா கதிர்"? என்று B.H.அப்துல் ஹமீத் என்னைப்பார்த்து கேட்டதும் "ங்கே" என்று முழித்து இல்லிங்க சார் என்று பதில் அளித்தேன்.
பிறகு வாயைத் திறக்கவேயில்லை.

சிறப்பு விருந்தினர்கள் பெயர் அறிவிக்கப்பட்டவுடன் ஒவ்வொருவராக மேடை ஏறி
அமர்ந்தனர். மீனாவின் அருகில் ஒரு அரபி உட்கார்ந்தவுடன் அரங்கமே அதிரும்படி
ஓ போட்டனர். மீனா புத்தகம் வெளியிட ஒரு ஒரு அரபி பெற்றுக்கொண்டார்.

அதற்கு முன்னதாக ஒருநூறு குழந்தைகள் பல்வேறு வேடங்களில் பல்வேறு பாடல்கள்
ஒன்றன்பின் ஒன்றாக ஒலிக்க நடனமாடினார்கள்.

பின்னர் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் நடுவராக அண்ணாச்சி அமர
மேலும் இருபெண்மணிகள் அமர்ந்தனர்.

சுவாரசியமாகவே இருந்தது. மார்கழி மாத கச்சேரிகளில் முன் வரிசை ரிட்டையர்டு
பெருசுகளுக்கு இணையாக தாளம்போட்டபடி பாடல்களை ரசித்தார் அண்ணாச்சி.
பழைய படத்தின் பாடல் பாடி முடிக்கும்போதெல்லாம் பாடல் இடம்பெற்ற படத்தின்
பெயர் மற்றும் இசையமைப்பாளர், பாடியவர் என்று அனைத்து தகவல்களையும்
திரு.அப்துல் கூறும்போது ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. மேம்ப்பட்ட
தரவுத்தள சில்லுகளை மூளையில் பதித்திருப்பார் என்று நினைக்கிறேன்.

சிறப்பாக பாடிய பெண்ணுக்கு முதல் பரிசளித்தனர். சிறந்த பாடல்களை தேர்வுசெய்த
அவர் சிறந்த குரலையும் வெளிப்படுத்தினார். மறக்காமல் அவரை சந்தித்து
பாராட்டினோம்.

நடுவராக பங்கேற்ற அண்ணாச்சிக்கு மீனா நினைவுக்கோப்பை வழங்கினார். அதை
பெறும்போது "உங்களுக்கு இனிமையான குரல் இயற்கையாகவே உள்ளது" என்று
மீனா சொன்னாராம். எங்கள் காதுகள்தான் அதைக்கேட்க கொடுத்து வைக்கவில்லை.

பிறகு ராஜ், விஜய், சன், கலைஞர் தொலைக்காட்சிகளில் பெண்களை பிழிந்து
நடிக்கும் நடிக நடிகையர் நடனம் ஆரம்பித்தது. இங்கு ஒன்றைக் குறிப்பிட்டே
ஆகவேண்டும். பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியின்போது அற்புதமான வரிகளைக்
கொண்ட பாடல்களை பாடும்போதெல்லாம் மகிழ்ந்து பாராட்டிய அப்துல் அவர்கள்
தற்போது வெளிவரும் பாடல்களின் வார்த்தைகளையும் ஒரு பிடி பிடித்தார்.
வாடி, வாடா, நாயே, பிசாசு, போன்ற வார்த்தைகள் இடம்பெறும் பாடல்தான்
ரசிக்கப்படுவது வேதனையளிக்கிறது என்றார். அந்த நிகழ்ச்சி முடிந்ததும்

ஏ ஆத்தா ரீமிக்ஸ், வாடி கப்பக்கெழங்கு, லூசுப்பொண்ணு, போன்ற புகழ்பெற்ற
பாடல்களுக்கு சின்னத்திரை சீக்காளிகள் நடனம் ஆடினார்கள்.ஆடி முடிந்ததும் ரசிகர்கள்
ஓடோடி வந்து ராஜ்காந்த், டவுசர்காந்த், விருச்சகாந்த் முதலான ஆட்களிடம்
ஆட்டோகிராப், போட்டோகிராப் என்று அவர்களை மகிழ்வித்தனர். பிறகு அப்துல்
அவர்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.




அண்ணாச்சி காரில் (சொந்தக்கார்) நான், B.H, ஜீவராஜ் என்ற இசையமைப்பாளர்
(கின்னஸ் என்ற படத்துக்கு இசையமைக்கிறாராம்) வந்தோம்.

மகாராஜாவின் ரயில்வண்டி, மரப்பசு, நாளை மற்றும் ஒரு நாளே, யூமா வாசுகியின்
ரத்த உறவு போன்ற புத்தகங்களை பரிசளித்தார்.

இனிமையாக சென்றது வெள்ளிக்கிழமையின் மாலை.

***

குருவியின் மகத்துவம் அறிய குறுந்தகடு சொல்லி பலநாள் கழித்து கிடைத்தது.
பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு அன்பர் அறைக்குள் வந்தார். தான் குருவி
படம் நேற்று திரையரங்கில் பார்த்ததாகவும் அருமையான படம் என்றார்.
அப்படியா என்று ஆச்சரியப்பட்டு குருவியை பார்த்துக்கொண்டிருந்தேன். அவரும்
பார்த்துக்கொண்டிருந்தார். பத்துநிமிடம் கழித்து இது என்ன புதுபடமா என்று கேட்டு
என்னை அதிர்ச்சியில் உறைய வைத்தார்.

***

எலக்கிய பில்டப் கொடுக்க எவ்வளவு சிரமப்பட்டும் எவரும் என்னை எலக்கியவாதி
என்று ஒத்துக்கொள்ளவில்லை. கட்டக்கடைசியாக அபிஅப்பா மட்டும் என்னை
எலக்கியவாதி என்று சொல்லி எலக்கிய கலாய்ச்சல் பதிவுபோட்டார். அந்த பதிவு
எழுத கழிவரையில் அரைமணிக்கும் மேலாக உட்கார்ந்துகொண்டு யோசித்ததாக
கூறினார். ஏன் கழிவறையில் உட்கார்ந்துகொண்டு எழுதவேண்டும் என்று கேட்டபோது
அதிஉன்னதமான, அவருக்கே உரிய அதிபுத்திசாலித்தனத்துடான் பதிலளித்தார்.
அதாவது புனைவு எழுத உலகில் கழிவறையை விட சிறந்த இடம் வேறு எதுவும்
இல்லை என்று சொன்னார்.

ஏன் அய்யா இப்படி சொல்கிறீர் என்று கேட்டால். அது அப்படித்தான் எலக்கியவாதின்னா
டாஸ்மாக்ல சரக்கடித்துவிட்டு சண்டை போடணும், எவனையாச்சும் திட்டனும்
கெட்ட வார்த்தைல நாவல் எழுதணும் என்று அடுக்கிக்கொண்டே சென்றார். எனக்கு
டவுசர் கிழிந்தது, தாவூ தீர்ந்தது. இவ்வளவு சிறப்பான அறிவைக்கொண்டே அவர்
கழிவறையிலேயே குடியிருந்து மேலும் மேலும் புனைவு எழுத என்னாலான உதவியை
செய்யவேண்டும். அவருடைய தாகத்தை தீர்க்கவேண்டும்.

***

பை த பை ப்ளைட்டை மிஸ் பண்ணாமல் அய்யனார் அமீரக கரையோரம் வந்து
சேர்ந்துவிட்டார் என்பதை அதிர்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

ட்ரீட்டு எப்பய்யா?

*விழா தொடர்பான புகைப்படங்கள் நாளை வெளியிடப்படும்.

Friday, December 14, 2007

நீயா? நானா?

நம்ம பய ஒருத்தன் தினமும் போன் பண்ணி அரை மணி நேரமாச்சும்
பேசாம இருக்க மாட்டான். திடீர்னு ஒரு மூணு நாள் போன் பண்ணல.
எங்கிட்டாச்சும் எக்குதப்பா பேசி போலீஸ்ல மாட்டிகிட்டானா. இல்ல
ஒரேடியா பார்சல் பண்ணிட்டாங்களான்னு தெரிஞ்சிக்கலாம்னு ஒரு
நண்பனா ஆர்வம். அதனால ஆபிஸ்கு போன போட்டேன்.

ஹலோ கேன் இ ஸ்பீக் டூ கோபிநாத்?

விச் கோபிநாத் யூ வாண்ட் சார்!

ம்ம்... ஜஸ்டிஸ் கோபிநாத். எப்ப போன் பண்ணாலும் இவனுங்களே போன்
அட்டெண்ட் பண்றானுங்க. இந்த அரபுநாட்டுல போன் அட்டெண் பண்றதுக்குன்னே
பிறந்தவங்கன்னு பேரெடுத்த பிலிப்பைன்காரிகள போடாம ஏன் இவனுங்கள
போடறாங்கன்னு தெரில. அதுசரி நம்ம நண்பன் வேல செய்ற கம்பெனி
அது எப்படி உருப்படும்.

அவர் மூணு நாளா சிக் லீவ்ல இருக்கார்னு பதில் வந்தது.

படுபாவி உடம்பு சரியில்லன்னு போன் பண்ணி சொன்னா என்னவாம்னு
ஸ்ட்ரெய்ட்டா துரைக்கே போன் பண்ணேன்.

தம்பி: என்னப்பா உடம்பு சரியில்லயாமே? எனக்கு உடம்பு சரியில்லன்னு போன்
சொல்றதுக்கு என்ன?

கோபி: "ஆமாண்டா எனக்கு உடம்பு சரியில்லன்னு நானே உங்களுக்கு
போன் பண்ணி சொல்லணுமா?"

தம்பி: "ஏன் அதுக்கு வேற யாராச்சும் ஆள் வெச்சிருக்கியா?தமிழ்மணத்துல அதிக
நேரம் குடியிருக்காதன்னு சொன்னா கேட்டாதான! இப்ப பாரு உனக்கு
காய்ச்சல் வந்துடுச்சி.

கோ: இப்பல்லாம் நான் தமிழ்மணம் அதிகமா படிக்கறதுல்ல.

த: ஏன் சாமி,? நிறைய இலக்கிய கட்டுரைகள் வர்றதுல்லன்னு உனக்கும்
வருத்தமா?

கோ: அட அதுல்லப்பா மேட்டரு. முதல்ல எல்லாம் தரமான மொக்கைப்பதிவர்கள்
இருந்ததுனாலயும், சுவாரசியமான பதிவுகள் நிறைய வந்துகிட்டு இருந்ததினாலயும்
தமிழ்மணம் நல்லா இருந்துச்சு. இப்ப வர்றவங்களுக்கு மொக்கையே போட
வரல, எல்லாமே சக்கையா இருக்கு. நல்லாவும் எழுத வரல. நம்ம ஐஎஸ்ஓ
மொக்கை செந்தழலார் கூட இல்லாதது பெரும் இழப்பு. அதுவுமில்லாம நல்ல
பதிவுகள தேடி புடிச்சி படிக்கறதுக்குள்ள கண்ணு பூத்து போயிடுது. ஒன்றிரண்டு
பதிவுக்காக நாம நாள் பூரா அலைஞ்சி தேடியும் கிடைக்கலன்னா ஏமாற்றமாகிடுது.
அதனால அந்த பக்கம் போக்குவரத்து கம்மி பண்ணி என்னோட கவனத்தை
குமுதம், விகடன், வண்ணத்திரைன்னு போக ஆரம்பிச்சிட்டேன். அங்க இதவிட
நல்லா மொக்க போடறாங்கப்பா!

த: என்னலே வர வர ஒனக்கு எலக்கிய தாகம் அதிகமாயிடுச்சி. நம்ம தினமணி
புகழ் சரவணர் கூட நல்லா மொக்கை போடறாரே! அதையும் பாக்கறதில்லயா
நீயி?

கோ: அது என்ன தினமணி புகழ்?

த: அதான்யா இந்த ஆவி புகழ், தினமலர் புகழ், குமுதம் புகழ், அந்த மாதிரி.

கோ: ஓஹ் அப்படி சொல்றியா! இத அவரே சொன்னாரா? இல்ல நீயே சொல்றியா?

த: இத பத்திரிக்கை அடிச்சே சொல்லியாச்சு. அந்த மேட்டர விடு, பருவ மழை
பொய்த்தாலும் மாசத்துக்கு ஒரு பதிவு கண்டிப்பா உன்கிட்டருந்து வரும்.
உலகமே எதிர் பாத்துட்டு இருக்கற பதிவ எப்ப போட போற?

கோ: மவனே உனக்கு ஓவர் நக்கலாகிபோச்சுடா! நானும் எதையாச்சும் எழுதி
என்னோட ரசிகர்கள திருதிபடுத்தலாம்னு பாக்கறேன் எதுவுமே தோண
மாட்டேங்குது நீதான் எதாச்சும் ஒரு ஐடியா கொடேன்.

த: இப்படி கேட்டியே இது நியாயம். நீ தமிழ்மணத்த நல்லா மேயணும். அப்படி
மேய்ஞ்சின்னா ஒருநாளைக்கு மூணு பதிவு போடலாம். இப்ப உதாரணத்துக்கு
உன்ன மாதிரி ஆளுலாம் என்ன எழுதலாம்னு மண்டைய போட்டுகிட்டு
குழப்பிக்காம இருக்கறதுக்குதான் பிட்டு போட்டி, நஒக போட்டின்னு
வச்சி கதறடிச்சிகிட்டு இருக்காங்களே! அதுல எதுலயாச்சும் ஒண்ணுத்துல
கலந்துகிட்டு ஒருநாளைக்கு மூணு சிறுகதைகள் வீதம் எழுதினின்னா ஒரே
மாசத்துல சிறுகதை தொகுப்பே போடற அளவுக்கு பதிவுகள் வந்து
குமியும்ல, இந்த சிறுகதை எழுதறதுல எதாச்சும் டவுட்டுன்னு வந்துச்சின்னா
கோவியார்கிட்டயும், வினையூக்கி அய்யாகிட்டயும் விவரம் கேட்டுக்க
எனக்கு தெரிஞ்சு நூத்துக்கணக்கான சிறுகதைகள் எழுதுன ஆளுங்க
அவங்கதான்.

கோ: பிட்டு அடிக்கறதுக்கு போட்டி வேற வைக்கறாங்களா? அது என்ன நஒக?
எதுனாச்சிம் கெட்ட வார்த்தையா?

த: பிட்டு போட்டின்னா போட்டோ எடுத்து பதிவு போடறது. நஒகன்னா...

கோ: இரு... இரு... இரு... இந்த போட்டா புடிக்கற சமாச்சாரமெல்லாம்
நமக்கு வராதுப்பா.

த: லேய் போட்டோ எடுக்கறது பெரிய மேட்டருல்லப்பா உதாரணத்துக்கு நம்ம
குசும்பர் இருக்காரே அவங்க ஊர் உழவர் சந்தைல வாங்கின கேமரால
போட்டோ எடுத்து இதுவரைக்கும் முன்னூத்தி சொச்சம் பதிவு போட்டுட்டாரு
அதுல பாதி போட்டோ கடன் வாங்கி கோட்டு சூட்டு போட்டு எடுத்துகிட்டது.
இதுலாம் வெளில யாருக்கும் தெரியாது...

கோ: சரி அடுத்து நஒக ன்னா என்னன்னு தெளிவா சொல்லு!

த: அதுவும் ஒண்ணும் பெரிய மேட்டர் இல்ல! நச்சின்னு ஒரு கதை எழுதணும்.
அதை உன்னோட பதிவுல போட்டு நச்சின்னு லேபிள் போட்டினா நச்சு தயார்.
முக்கியமா நம்ம செல்லா அண்ணன் எழுதுவாரே அந்த மாதிரி நச்சின்னு
இருக்கணும் புரிஞ்சிதா?

கோ: என்னென்னமோ சொல்ற!

த: அப்படியும் உனக்கு பதிவு போட மேட்டருல்லன்னா பாருக்கு போய்
ரெண்டு பீர ஏத்து அப்படியே சூட்டோட சூட்டா உக்காந்து கவிதை எழுது.
அய்யனார் கவுஜ மாதிரி லெவல் பண்ணிடலாம். அதுவும் வரலன்னு வச்சிக்க
பில்லா படத்தை உல்டா பண்ணி ஒரு பல்லா, குல்லா, கல்லான்னு
தொடர்ச்சியா பதிமூணு பதிவு போடலாம். இப்பலாம் தொடர்கதை எழுதலன்னா
பதிவர்னே ஒத்துக்க மாட்டேங்கறாங்க தெரியுமா? அதுனால நாளைக்கே ஒரு
பதிவு தொடர்கதை எழுதிடு, கதைய பத்தி யோசிக்காத.

"கதை அருமை" "சூப்பர் டர்னிங் பாயிண்ட்" "முடிவை ஏற்கனவே யூகிக்க
முடிந்ததுன்னு" "சிறப்பான நடை" "வாழ்த்துக்கள்"னு எதுனாச்சும் கமெண்ட்
வந்துகிட்டே இருக்கும் நீயும் அதுக்கு பதில் பின்னூட்டம் போட்டுகிட்டே
இருக்கலாம்.

ஸ்டேட்டர் பார் கவுஜ எல்லாத்தையும் ஒரு பதிவா போடலாம். நம்ம
வைகைப்புயல் ராம் இருக்காரே ஸ்டேட்டர் பார் கவுஜை எழுதறதுல மன்னன்.
எங்கருந்தான் வார்த்தைகள புடிப்பாருன்னு தெரில. கவுஜ புரிலன்னு நீ விளக்கம்
கேட்டேன்னு வைய்யி அதுக்கு தனியா உரைநடைல அரை பக்கத்துக்கு விளக்கம்
கொடுப்பார் பாத்துக்க. அவர் எழுதுன ஹைக்கூவ படிச்சோம்னா புல் ஓல்டு மங்க
மிரிண்டாவுல கலந்து அடிச்ச மாதிரி ஒரு எபெக்ட் கிடைக்கும். அப்படியும் போர்
அடிச்சிதுன்னா ஒரு மணிக்கு ஒருமுறை புரொபைல் போட்டாவ மாத்திகிட்டே
இரு. உடனே "இந்த போட்டோ எங்க எடுத்தது?ன்னு சூப்பராருக்குன்னு
யாராச்சும் பிங் பண்ணுவாங்க.

கோ: நீ இப்படியே எல்லாத்தையும் நக்கலடிச்சிட்டு இரு ஒருநாள் உனக்கு எவனாச்சும்
ஆப்பு வைப்பான். எப்ப பாத்தாலும் தமிழ்மணம் பத்தியே பேசிட்டு இருக்க வேற
எதுனாச்சும் பேசு.

த: ஓம் ஷாந்தி ஓம் ட்ரெய்லர் பாத்தியா மச்சி? தீபிகா படுகோனேவ பாத்து நான்
படுகோணலாயிட்டேன்னா பாத்துக்க!

கோ: ஏண்டா அதுல ஷாருக்கான்னு ஒரு ஸ்டார் இருக்கறத நீ பாக்கவேல்லியா?

த: நாங்கள்லாம் அன்னப்பறவை வம்சம்டா தேவையானத மட்டும்தான் எடுத்துப்போம்.
லேட்டஸ்டா நம்ம காபி வித் அனு பாத்தேன்.
செம க்யூட்ரா அவங்க. அதுவும் அவங்க தலைய சாய்ச்சி உற்சாகத்தோட கேள்வி
கேக்கற அழகு இருக்கே சான்சே இல்ல மச்சி, கேள்வி மொக்கையா இருந்தாலும்
கேக்கற அழகுன்னு ஒண்ணு இருக்குல்ல அதான், அதத்தான் ஐ ரியலி லைக்.

கோ: பாவனா போய் அனுபுராணம் ஆரம்பிச்சிட்டியா? வேற எதுனா பேசு
இல்லன்னா போன வைய்யி இப்பதான் எனக்கு காய்ச்சல் விட்டுருக்கு.

த: சரி வேற மேட்டருக்கு வரேன். உம்பேர வச்சிகிட்டு பயங்கர புத்திசாலியா,
அழகா திறமையானவரா ஒருத்தர் இருக்காரே தெரியுமா ஒனக்கு?

கோ: இந்த பேர்ல இருக்கற எல்லாருமே ஆளப்பிறந்தவர்கள்தான், ஆமா நீ யார
சொல்ற?

த: நீயா? நானா? கோபிநாத்த சொல்றேன். நம்ம புலி பீதில போட்ட பதிவுனால
முழுசா அந்த நிகழ்ச்சிய இறக்கி பாத்தேன். உண்மைலயே இந்த மாதிரி
டாக் ஷோ நம்ம ஊருக்கு புதுசு. அதுலகூட ஒரு பொண்ணு லூசுத்தனமா
இந்த இனத்துல பொறந்ததுல ரொம்ப பெருமைப்படறேன்னு ஆரம்பிச்சி
இத்தன இன்ச்ச்ல இஞ்சினியர் மாப்ள வேணும்னு கேட்டதுலருந்து பெற்றோர்கள்
வரிசைல அமைதியா பதில் சொன்னது வரைக்கும் எல்லாமே சூப்பர்.
அதுல கூட பாத்தின்னா பெண்களுக்குதான் தனக்கு வரப்போற கணவன்
எப்படி இருக்கணும்னு அதிக எதிர்பார்ப்புகள், கனவுகள்னு இருக்கு ஆனா
நம்ம பசங்கதான் பூமிகா, மழை ஸ்ரேயான்னு வழக்கமா பதில் சொன்னாங்க.
மைக் முன் பிளிறிய அந்த பெண்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ற மாதிரி
ஆண்கள வேணும்னா அவங்களே மொத்தமா ஜப்பானின் யாமசாக்கி ரோபோ
தொழிற்சாலையில் ஆர்டர் கொடுத்துதான் செய்யணும். அந்த மாதிரி
சைஸ் வாரியா கேக்கறாங்கப்பா!

த: ஆமா உனக்கு இந்த மாதிரி எதுனா எதிர்பார்ப்பு இருக்குதா கோபி? ஏன்
கேக்கறன்னா என்னவிட ரெண்டு வயசு பெரியவன் என்னைவிட உலக
அனுபவம் உனக்கு ஜாஸ்தி அதனாலதான் கேக்கறேன்.

கோ: டேய் என்கிட்டவே லந்தா? நானே சதுரங்க குதிரை நாராயணன் வாழ்க்கை மாதிரி என் வாழ்க்கை ஆகிடுமோன்னு கவலபட்டுகிட்டு இருக்கேன்
நீ வேற வேதனைய கெளப்புற.

த: ஆனா எனக்குன்னு சில கண்டிஷன்ஸ் இருக்கு. என்னன்னு கேளேன்!

கோ:........

த: நீ கேளேன்....

கோ:........

த: சும்மா கேளேன் கோபி

கோ: நான் கேக்கலன்னா நீ சொல்லாமலா போயிட போற? சொல்லித்தொல!

த: அது... எனக்கு வர்ற பொண்ணு கண்டிப்பா படிச்சவளா இருக்க கூடாது.
கண்டிப்பா சிட்டில பொறந்து வளர்ந்துருக்க கூடாது. எதாவது ஒரு குக்கிராமத்துல,
பஸ் கூட போகாத ஊர்ல, ஈவன் பால்வண்டில போற வசதி கூட இல்லாத
ஊர்லதான் பொண்ணு எடுப்பேன். மேக்சிமம் அஞ்சாவதுதான் படிச்சிருக்கணும்.
கையெழுத்து போட தெரிஞ்சிருக்கணும் ஆனா தமிழ் படிக்க தெரிய கூடாது.
ஊர்லருந்து கடிதாசி வந்தா கூட நாந்தான் அவளுக்கு படிச்சி காமிக்கணும்.
மொதல்ல அந்த பொண்ண தாவணிலதான் பாக்கணும். உதாரணத்துக்கு ரெட்டை
வால் குருவி படத்துல மைக்மோகனுக்கு பிடிக்காத மனைவியா கம்பி ஜடை
பின்னி ஒரு நடிகை இருப்பாங்கல்ல அதே மாதிரி, இல்லன்னா தேவர்மகன் ரேவதி
மாதிரி, இல்லன்னா சின்னகவுண்டர் சுகன்யா மாதிரி இருக்கணும். ஆனா பொண்ணு
கருப்பா இருக்கணும். பின்னாடி கொசுவம் வச்ச சேலை கட்டியிருக்கணும்.....

கோ: எலேய்.. எலேய் நிறுத்து போதும். விவேக் சொன்னது சரிதான். நீ சொல்ற
மாதிரி பொண்ணு லெமூரியா கண்டத்தோட போயே போச்சு. இனிமே உன்கிட்டருந்து
போன் வந்துச்சின்னா ஆள் இல்லன்னு சொல்லி வச்சிடறேன்.
என்னால முடியாதுடா சாமி.

Saturday, March 17, 2007

வறட்டி தட்டுவது எப்படி??

டிஸ்கி: இந்த பதிவு ஒரு கடுமையான உவ்வ்வே பதிவு. கிராமத்தில பிறந்து
வளர்ந்தவங்களுக்கு இது சாதாரணமா தெரிந்தாலும். நகரத்தில் பிறந்து வளர்ந்து
வந்தவங்களுக்கு பயங்கர அதிர்ச்சியா இருக்கும். அதனால டிஸ்கி படிச்சிட்டு
டிமிக்கி கொடுத்துட்டு ஓடி விடவும். மீறி எதையும் தாங்கும் இதயம்னு படிக்க
ஆரம்பிச்சிங்கன்னா நீங்க மகா தெகிரியசாலி.

இப்ப நாம வறட்டி தட்டுவது எப்படின்னு பார்க்கலாம்.

கேஸ், மின்சார அடுப்பு இதெல்லாம் வந்துட்ட காலத்துலயும் எதுக்குடா வறட்டிய
தூக்கிட்டு திரியறிங்கன்னு நீங்க கேக்கலாம். எல்லா வசதியும் இருக்கற இந்த்
காலத்துலயும் வறட்டியின் தேவை இருந்துகிட்டுதான் இருக்கு. அதனால அதை
எப்படி செய்யிறது என்று இந்த "எப்படி" பதிவில் பார்ப்போம்.

அதிகாலையில் எழுந்து மாட்டு கொட்டாயிக்கு போய் அங்க இருக்குற சாணி
எல்லாம் பொறுக்கி வீட்டு காம்பவுண்ட் சுவரு கிட்ட கொட்டணும். இது உங்கள்
உடலுக்கு நல்ல உடற்பயிற்சியும் கூட.

கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துகிட்டு ஓரு 8 மணி வாக்குல வைக்கோல் கொஞ்சம்
எடுத்துகிட்டு போய் அந்த சாணியுடன் கலக்கணும். கலக்கும்போது ஈசியா
இருக்கணும்னா சாணியுடன் கொஞ்சம் தண்ணி மிக்ஸ் பண்ணிக்கணும். இந்த
வேலை ஒரு பதினஞ்சி நிமிடம் எடுக்கும்.

கலந்ததுக்கு அப்புரம், அந்த கலவைய நல்லா ரெண்டு கைல பத்தற மாதிரி
உருண்டை உருண்டையா செஞ்சி அந்த காம்பவுண்ட் சுவருல தட்டணும்.
ஒவ்வொரு வறட்டியும் ஆறு இஞ்ச்க்கும் மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இல்லன்னா ஒடச்சி யூஸ் பண்ண வேண்டியதா இருக்கும். செவுத்தலயே ரெண்டு
நாளைக்கு காயட்டும்னு விட்டிங்கன்னா அருமையான வறட்டி ரெடி. இதை
நீங்க அடுப்பெரிக்க யூஸ் பண்ணிக்கலாம்.

வேலையெல்லாம் முடிச்சிட்ட பிறகு உங்களுக்கு டயர்டா இருக்கும். போய்
டீ, டிபன் சாப்பிட்டு விட்டு அடுத்த மேட்சுக்கு தயாராகணும்.

மேலதிக தகவல்களுக்கு தலைவரின் "அதிசய பிறவி" மற்றும் "முத்து"
திரைப்படத்தை பார்க்கவும்

மேலும் சில உபயோகமான குறிப்புகள்.

1.அந்த கலவையுடன் சிறிது நெல்லின் உமியோ, பதரோ கலந்து கொண்டால்
வறட்டி க்ரிஸ்பியாக இருக்கும்

2.வறட்டி தட்டும்போது, பக்கத்துல ஒரு ஹீரோயின் அல்லது செகண்ட் ஹீரோயின்
இருந்தா ஈசியா தட்ட முடியும் ( ஐ மீன் வறட்டிய) அது பொண்டாட்டியாதான்
இருக்கனும்னு அவசியம் இல்லை.. அவங்க இல்லாம (வேற யாராவது) இருந்தா
இன்னும் பெட்டரா தட்ட வரும்..

3.எருமைச் சாணிய விட பசுவின் சாணத்துல தட்டினா, வறட்டி நல்ல வரும்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்லி இருக்கங்க

4.கொஞ்சம் செலவு பண்ணா கோபர் ப்ளாண்ட் இன்ஸ்டால் பண்ணிட்டா கேஸ்
பிரச்சினை தீர்ந்துடும், அரசு மானியம் கூட கிடைக்குதாம்!.

5.உங்க வீட்ல மாட்டு கொட்டாய் இல்லை என்றால் காலைல ரோட் ரோடா
போய் சாணி தேட வெண்டாம். ஏன் என்றால், ஒன்று சாணி கொஞ்சம
காய்ந்து போய் இருக்கும், இரண்டு தேடும் ஏரியா மிக பெருசாக இருக்கும்
சாணி கண்டிப்பாக கிடைக்கும் என்று தீர்மானமாக சொல்ல இயலாது!

6.இந்த பிரச்சினைக்கு தீர்வு ஒரு வாளி எடுத்துட்டு(குறிப்பு: அந்தா வாளியில்
பாதி தண்ணி நிரப்பி வையுங்க்ள் ), எதாவது ஒரு மாட்டை டார்கெட் செய்து,
அது பின்னாலயே ஓடணும். அது சாணி போடும் போது வாளியில் பிடிச்சுக்கணும்
பிடிச்ச பிறகு, கொஞ்சம் சாணி எடுத்து அது இடுப்பில் ஒரு பெரிய X போட்டு.
விட்டு(அடையாளம் தெரியணுமில்ல) அடுத்த மாட்டை தேடணும். அடுத்த மாடு
அன்றைக்கு சாணி போட்டு விட்டதா என்பது, சிலர் வாசம் வைத்து சொல்லி
விடுவார்கள்.

6. மாட்டை செலக்ட் பண்ணும்போது குண்டா இருக்கற மாட்டை செலக்ட்
பண்ணனும் அதுதான் நிறைய புல் தின்னும். அதுக்கேத்தமாதிரி அவுட்புட்
கிடைக்க வாய்ப்பிருக்கிறது.


மேலும் தகவல்கள் வேண்டுமெனில் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

Thursday, March 01, 2007

நாங்கள்லாம் ஜெயில் பறவையாக்கும்....

இப்படித்தான் ஒரு படத்துல வடிவேலு ஒரு பீட்டர் விட்டு அடிவாங்குவாரு.
நானெல்லாம் ஜெயில்னு பாத்தது சினிமால மட்டும்தான்னு பொய்யெல்லாம் சொல்ல
மாட்டேன். ஆனா துபாய் ஜெயில பாக்கணும்னு ரொம்ப நாளா ஆசை. நம்ம ஊரு
ஜெயிலுக்கும் இங்க இருக்குற ஜெயிலுக்கும் என்ன வித்தியாசம்னு பாக்கத்தான்.
அதுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைச்சுது.

நம்ம பய ஒருத்தன் எக்குத்தப்பா வண்டிய ஓட்டி செவுத்துல விட்டுட்டான் என்னவோ
நாலு பேர மர்டர் பண்ணா மாதிரி தூக்கிட்டு போய் 26 நாள் ரெஸ்ட் எடுக்க
விட்டுட்டாங்க நாலு வெள்ளிக்கிழமை கணக்குல வராதாம் அதுனால 26 நாள்தான்.
சரி பய காய்ஞ்சி போய் கிடப்பானே ஒரு எட்டு போய் பாத்துட்டு வரலாம்ணு
முடிவு பண்ணினோம். உள்ள இருக்குற ஆள பாக்கணும்னா முன்னாடியே டோக்கன்
போடணுமாம். சனிக்கிழமைகள்ல காலை 7 மணி முதல் 11 மணி வரைக்கும்தான்
பாக்கமுடியுமாம் இது நாங்க கிளம்பறதுக்கு முன்னாடி தெரியல அங்க போய்தான்
தெரிஞ்சிகிட்டோம். இதுல காமெடி என்னான்னா ஒரு ஜெயில் இருக்கற எடத்த
தேடி கண்டுபுடிக்க எவ்வளவு கஷ்டப்பட்டோம்னு.

வழக்கம்போல எட்டு மணிக்கு கெளம்ப வேண்டியது 9 மணியாகிபோச்சு. முந்தின
நாளே எந்த இடம், எப்படி போகணும்னு விசாரிக்க சொன்னேன் காரோட்டி நண்பரை
ஞாபகமா அதை எதுவும் செய்யாமலே வந்துட்டார். சரி விசாரிச்சிகிட்டே போகலாம்னு
கெளம்பியாச்சு. சிறைச்சாலை இருக்குற இடம் அல் அவிர் அப்படிங்கறத தவிர அதுக்கு
எப்படி போகணும்னு ரெண்டு பேருக்குமே தெரியாது. அங்க ஒரு "அரபிதாத்தாகிட்ட
அவிர் ஜெயிலுக்கு எப்படி போகணும்னு" சீதா ஜாவ், ஆதா ஜாவ்னு சொல்ல
ஆரம்பிச்சிட்டாரு. எலேய் ட்ரைவரு நீயே வந்து கேட்டுக்க எனக்கு இந்தியில
பேசினாவே நமக்கு வெளங்காது. இதுல அரபி வேறயா(அவர் இங்க மூணு வருசமா கொட்டறாரு ஏதாச்சும் புரியும்னுதான்) சொன்னது புரிஞ்சா மாதிரியே மண்டைய
மண்டைய ஆட்டிட்டு வந்துட்டாரு.

இங்கருந்து நேரா போயி சோத்தாங்கை பக்கமா திரும்பினா ஜெயில்தான்னு
சொன்னாராம் அப்படி சொன்ன மாதிரி போனோம். போயிகிட்டே இருக்கு பாத்தா
ஒரு கிராமம் வந்துடுச்சி நாலு தலைமுறையா அங்க ஒட்டகம் மேய்க்கிற பாகிஸ்தானி
ஆளுங்க இருந்தாங்க இது என்ன இடம்னு விசாரிச்சா ஏதோ ஒரு கிராமம்னு
சொன்னாங்க. ஏதோ ஒட்டக சந்தை போலருக்கு நூத்துக்கணக்குல ஒட்டகம்
வந்துகிட்டும் போய்கிட்டும் இருந்துச்சி. இப்படிக்கா இன்னும் 50 கிலோமீட்டரு
போனிங்கன்னா மஸ்கட் வரும்னு சொன்னாங்க ஆக நம்மாளு சொன்னத சரியா
வெளங்கிக்கல. சரி வந்த வழியே திரும்பி போனோம். திரும்பவும் வழிகேட்ட
இடத்துக்கு வந்தோம்.

அங்க ஒரு போலிஸ்காரரு வண்டிய நிறுத்திட்டு தம் அடிச்சிட்டு இருந்தாரு அவர்கிட்ட
வழி கேட்டோம் அவர் சொன்ன மாதிரி போனோம் மறுபடியும் துபாய்க்கே வந்து
சேர்ந்துட்டோம். பாவிங்க ரூட்டு தெரியலன்னா தெரியலன்னு சொல்லவே
மாட்டேன்றானுங்க ஏதாவது ஒரு வழிய சொல்லி எங்கிட்டாசும் அனுப்புறானுங்க.
ஒரு ஜெயிலு இருக்குற எடம் தெரியல இவன்லாம் எப்படி போலிஸ்ல சேர்ந்தான்னே
தெரில. மறுபடியும் ஆரம்பிச்ச இடத்துக்கே வந்து குத்துமதிப்பா அந்த ஏரியாவில
சுத்த ஆரம்பிச்சோம். அங்க ஒரு பாகிஸ்தானிகிட்ட நான் ஜெயில் எங்க இருக்குன்னு
கேட்டேன் அவனும் என் பின்னாடியே வாடான்னு சொல்லவே.அவன் பின்னாடியே
போனோம் கடேசில அவன் கம்பெனிக்கு எங்கள கூட்டிட்டு போயிட்டான்.
இதான் எங்க கம்பெனி எப்படி இருக்குன்னு கேள்வி வேற. அடப்பாவி நீயும்
பழிவாங்கிட்டியான்னு நொந்துகிட்டேன். நாம ஒருவேளை இந்தியில தப்பா
கேட்டுட்டனான்னு எனக்கே புரியல.

ரோடு சுத்தம் பண்றவர கேட்டோம் அவரு கரெக்ட்டா ரூட்டு சொல்லி போனோம்
அல் அவிர்லருந்து ஹத்தா போற வழில சோத்தாங்ககை பக்கமா திரும்பினா
துபாய் ஜெயில் வரும்னு சொன்னாரு. 25 ஏக்கர்ல பயங்கர செக்யூரிட்டியோட ஒரு
ஜெயில். இத கண்டுபுடிக்கறதுக்குல்ல டவுசர் கிழிஞ்சிடுச்சி. எதெதுக்கோ போர்டு
வெக்கீறானுங்க இதுக்கு ஒண்ணும் வெக்கல. வெச்சிருந்த ஒரு போர்டும் அஞ்சுக்கு
மூணுல ஒரு சின்ன போர்டு. அதுல எவனோ ப்ராக்டிஸ் பண்ண மாதிரி ஒரு
கோணல் மாணல் எழுத்துல இருக்கு.வழி சொல்றாங்களாம். வெளிலருந்து
பாக்கும்போதே உள்ளுக்குள்ள ஏகபோகமா பொழுதை கழிக்கலாம் போலருக்குன்னு
நினைச்சேன். அதே மாதிரிதானாம்.

ஒருவழியா எல்லாமும் செஞ்சு உள்ள போய் பாத்தோம். ஏகப்பட்ட செக்யூரிட்டி
இவனென்ன தீவிரவாதியா. வெளில விட்டாவே வழி எங்கருக்குன்னு கண்டுபுடிச்சி
போக தெரியாத அப்பாவி இவனப்போயி நாப்பதடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள்ள
வெச்சிருக்கானுங்க. எப்படிலே மக்கா இருக்கு ஜெயிலு. காசு இருந்தா போன்கார்டு
வாங்கி எல்லாருக்கும் போன் பண்ணலாம். நான் சின்ன லெவல்ல தப்பு பண்ணதால
அதிகம் இம்சை பண்ணமாட்டாங்க.போர் அடிச்சா டீவி பாப்பேன் இல்லன்னா
குப்புற அடிச்சி தூங்குவேன். காலைல ஏழு மணிக்கே எழுப்பி விட்டு பிரியாணி
போடுறானுங்க. மூணு வேலையும் பிரியாணி சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கே செத்து
போச்சு.

ஒரு நாள் ரெண்டு நாள்னா பரவால்ல வந்த நாளா அதே கருமத்த சாப்பிடவேண்டியதா
இருக்கு. ரொம்ப அலுத்துக்கறாரு அவரு.

Monday, October 16, 2006

செத்து செத்து விளையாடலாமா?

Image Hosted by ImageShack.us

மேல இருக்கற நம்ம கைப்புள்ளயின் வலது
கரத்தை எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்னு
நினைக்கிறேன். சமீப காலமா பிரபலமாகிட்டு
வரும் நகைச்சுவை நடிகர்.

"என் புருசன் குழந்தை மாதிரி" படத்தில
வடிவேலுவ ஓட ஒட வெரட்டி, கொலவெறியோட
ஆவேசமா தொரத்தி காதை லேசா தொட்டு பச்ச
புள்ள மாதிரி விளையாட்டு விளையாடுவாரே
அவர்தான் இந்த முத்துக்காளை. சங்கத்தில
இருக்கற ஆளுங்களுக்கு இவர தெரிஞ்சிருக்கும்.

சில சமயத்தில சரக்கை விட ஊருகாய் நல்லா
இருக்கறதில்லையா அதே மாதிரி இவர் நடிச்ச
ராமகிருஷ்ணா என்ற படத்தில சார்லி இருந்தும்
இவரது நடிப்பையே எல்லாரும் ரசித்தார்கள்.
நான் உட்பட. தமிழ் நகைச்சுவை காட்சிகளில்
எனக்கு தெரிந்து மோனோ ஆக்டிங் என்பதை
புகுத்தியவர் இவர் என்றே நினக்கிறேன். இல்லாத
ஒன்றை இருப்பதாக காட்டி பிறரை ஏமாற்றுவதை
ராமகிருஷ்ணா படத்தில் மிக அருமையா காமெடி
பண்ணியிருப்பாரு.

Image Hosted by ImageShack.us

ஒரு பைட்டராக திரையுலகில் அறிமுகமாகி இன்று
நகைச்சுவையில் குறிப்பிடும்படியான இடத்தை
பிடித்திருக்கிறார்.

இப்ப என்னாத்துக்கு இந்த இழு இழுக்கற நீ?
மேட்டர் இன்னானு சொல்றா வென்று! என்று
கேட்பதற்கு முன்னால் நானே சொல்றேன்.
நேத்திக்கு வழக்கம்போல வலைப்பக்கத்தில
உலாத்திக்கிட்டு இருந்தேன். இட்லிவடை பக்கத்தில
கூகிள் தேடுதல் பத்தி எழுதி இருந்தார்.
இப்படியெல்லாம் வசதி இருக்குதான்னு பாத்தேன்.
நாம எக்கு தப்பா கேட்டா என்ன பதில்
சொல்லும்னு பாத்தேன். அப்டி என்னப்பா
கேட்டுபுட்டே நீயின்னு நாதஸ் கோஷ்டில வர
ஆளுங்க செந்தில கேட்ட மாதிரி கேளுங்க..

நான் எப்ப சாகப்போறேன்? இதத்தான் கேட்டேன்.
இன்னும் பதிமூணு வருசந்தான் என்னோட ஆயுசாம்
அதுக்குள்ள பூட்ட கேசுதானாம். அந்த வலைதளத்தில்
சொல்லியிருந்தாங்க.முத்துக்காளை ஞாபகம் வந்துடுச்சி
இந்த தளத்தை பார்த்தவுடன். செத்து செத்து
விளையாடலாமா? பாத்ததும் சிரிப்பு சிரிப்பா
வந்திடுச்சி அப்படியே ஒரு யோசனையும் வந்திச்சு
இதெல்லாம் உண்மையா இருந்தா எப்படி இருக்கும்
என்று ஒரு கற்பனை.

வருடாவருடம் பிறந்தநாள் கொண்டாடறவங்க
இறந்தநாளும் தெரிஞ்சா அதையும் கொண்டாடுவாங்களா?
இல்ல துக்கப்பட்டு அன்னிக்கே ஒப்பாரி வைக்க
ஆரம்பிச்சுடுவாங்களா?. அன்னிக்கு கேக் வெட்டி
கொண்டாடுவாங்களா? புதுத்துணி உடுத்துவாங்களா?
கோயிலுக்கு போயி கடவுள்கிட்ட பெட்டிஷன்
குடுப்பாங்களா?

Monday, September 25, 2006

சமத்காரம்

சமத்காரம்னா என்னன்னு கேட்பவர்களுக்கு முன்னாடியே
அதற்கான பதிலை சொல்லிவிடுகிறேன். அதாவது
ஒருத்தரை புகழற மாதிரி புகழ்ந்து இகழ்வதுதான்
சமத்காரம் என்று சொல்வார்கள். வஞ்சப்புகழ்ச்சி
அணின்னு சொல்வாங்களே அப்படி கூட சொல்லலாம்.
உதாரணமா ஒரு சம்பவத்தை சொல்கிறேன்

தஞ்சை மாவட்டத்தில் ஒரு மடாதிபதி, புலவர்கள்
கூட்டத்தை கூட்டினார். மடாதிபதியே தலைமை
வகித்தார். எல்லாப் புலவர்களும் வந்துவிட்டார்கள்
"கடை மடை" என்ற ஊரிலிருந்து ஒரு புலவர்
கடைசியாக வந்தார். அவரை பார்த்த மடாதிபதி,
வாரும் "கடை கடை மடையரே" என்றார், அப்படி
என்றால் "கடைமடை" என்ற ஊரை சேர்ந்தவர்
என்றும் அர்த்தம், "கடைசியில் வந்த மடையன்"
என்றும் அர்த்தம்.

நம்ம ஊர்ல இதையே வேற மாதிரி சொல்வாங்க
"கடை பிகரா" இருந்தாலும் சட்டுன்னு கரெக்ட்
பண்ணிடுறாங்கப்பா அப்படின்னு.

உடனே புலவரும் பணிவோடு "வணக்கம்
மடத்தலைவரே!" என்று கூறிவிட்டு அமர்ந்தார்.

இது மாதிரியானா சொல்லாடல்களைத்தான்
"சமத்காரம்" என்று சொல்வார்கள்.

இதுபோல பேசுவது அண்ணாவுக்கு கைவந்த
கலை!

Image Hosted by ImageShack.us

கலைவாணர் என்.எஸ்.கே அவர்கள் ஒரு நாடத்தில்
நடித்துக் கொண்டிருந்தார்கள். அந்த சரித்திர
நாடகத்தில் வந்த சக்ரவர்த்தி, தமக்கு எந்தெந்த
ராஜாக்கள் கப்பம் கட்டினார்கள் என்று மந்திரியை
பார்த்து கேட்டார்.

"வங்க ராஜா தங்கம் கட்டினார், கலிங்க ராஜா
நவமணிகள் கட்டினார்" என்றெல்லாம் அந்த
ராஜா அடுக்கினார்.

உடனே சக்ரவர்த்தி "சோழ ராஜா என்ன
கட்டினார்? என்று கேட்டார்!

வேலைக்காரனாக நின்ற என்.எஸ்.கே., "வேஷ்டி!
வேஷ்டி!" என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

சமத்காரத்திற்க்கும் என்.எஸ்.கே சொன்னதற்கும்
சம்பந்தமில்லை சும்மா ஒரு நகைச்சுவைக்காக
சொல்கிறேன்.

சரி பதிவு கொஞ்சம் சுவாரசியமா இருக்கணுமே
அப்படீங்கறதினால கீழே ஒரு சமத்காரத்தினை
கொடுக்கிறேன் அதற்கான பதிலை பின்னூட்டத்தில்
தெரிவிக்கலாம்! உங்களுக்கு தெரிந்தவற்றையும்
நீங்கள் இணைக்கலாம்!.

"காக்காய் கறி சமைத்துக்
கருவாடுமென்று தின்பர் சைவர்"