எல்லையற்ற அன்பு கொள்வோம்

Showing posts with label மகளிர் தினம். Show all posts
Showing posts with label மகளிர் தினம். Show all posts

Wednesday, March 07, 2007

மகத்தானதொரு தினம் இன்று.

"டேய் தூங்குனது போதும் எந்திரிடா மணியாச்சு"

சுடுதண்ணி போட்டுட்டியா? இது நான்

ஏண்டா பத்து மணிக்கு எந்த புள்ளடா சுடுதண்ணில குளிக்குது? உனக்கே இது ஓவரா
தெரியல!

உம்புள்ள குளிப்பான், சுடுதண்ணி போடாம எழுப்பக்கூடாதுன்னு எத்தனை முறை
சொல்லியிருக்கேன்.

எல்லாம் ரெடியா இருக்கு பாத்ரூம்ல போடா!

"டேய் கதிர்வாலு சாப்டுட்டு அப்புறமா ஊர் சுத்த போடா" அம்மா

நீ போடுற சோத்த சாப்டுட்டு எப்படி ஊர் சுத்த முடியும். ஏம்மா நல்ல சோறு பொங்கி
போட தெரியாதா உனக்கு? எப்ப பாரு சாதம் சாம்பாரு இத விட்டா உனக்கு என்ன
தெரியும். ஆனா ஒண்ணு ஒம்பொண்ணுக்கு நீ எவ்வளவோ பரவால்ல.

"எங்க அந்த நளபாக அரசி"

"ஆமா இவரு பெரிய புதுமாப்பிள இவருக்கு கறியும்சோறும் ஆக்கிப்போடணும்"..

அடி செருப்பால வெட்டிச்சோறு திங்கும்போதே உனக்கு இவ்ளோ கொழுப்பு
கேக்குதா? கண்ட கண்ட ஓட்டல்ல வாய்க்கு ருசியா தின்னுபுட்டு வீட்டுலயும் அதையே எதிர்பாக்குறியா உனக்கு வாய்க்கு வக்கனையா சாப்பிடணும்னா அது எங்க
கிடைக்குதோ அங்க போய் கொட்டிக்கோ அநாவசியமா வீட்டு சமையல நக்கல்
பண்ணாத.

தோ பார்றா உண்மைய சொன்னா மட்டும் அம்மாவுக்கும் பொண்ணுக்கும் வருமே
மூக்கு மேல கோவம். இந்த கோவத்தை அப்படியே எப்படியாச்சும் நல்லா சமைச்சு
போட்டு தம்பிகிட்ட நல்ல பேரு வாங்கணும்னு ஒரு வைராக்கியமா மாத்தி
வெச்சிருந்தின்னா பரவால்ல, இந்நேரம் என்கிட்ட ஒரு நல்லபேரு வாங்கியிருப்ப. அத
விட்டுபோட்டு பொசுக் பொசுக்குனு கோவம் மட்டும் வருமே.

இவரு சர்டிபிகேட் கொடுத்துதான் எனக்கு ஆக போகுதா, தின்னா தின்னு தின்னாட்டி
போடா பொறுக்கி.

பொழுது விடிஞ்சி பொழுதுபோனா உங்க சண்டைய கேட்டு கேட்டு காது வலிக்குது
ஒரு நாளாச்சும் குறை சொல்லாம சாப்டுருக்கியாடா நீ? இது அம்மா

ஆமாம்மா இதே கேள்வியத்தான் நானும் கேக்கறேன் ஒரு நாளாச்சும் குறை சொல்லாத
அளவுக்கு செஞ்சிருக்கிங்களா நீங்க?

இவன்கிட்ட என்னம்மா பேசிட்டு இருக்க, எல்லாரும் ஒரு குறையும் சொல்லாம
சாப்டுட்டு போயிட்டாங்க தொற தொண்டையில மட்டும் இறங்க மாட்டேங்குதாக்கும்.

இதோ பாருக்கா நீ என்னதான் சொல்லு அந்த கரிகாலன் ரெஸ்டாரண்ட்ல போடறானே
ஒரு சில்லி சிக்கன் அது மாதிரி என்னிக்காச்சும் செஞ்சுருக்கியா, இல்ல
போட்டோலதான் அந்த மாதிரி ஐட்டங்கள பாத்துருக்கியா, நீயெல்லாம் எங்கத்த
கல்யாணம் பண்ணி குடித்தனம் பண்ண போற? எல்லாம் உன்னை சொல்லணும்மா
உன்ன மாதிரியே எல்லாத்தையும் கத்து கொடுத்துருக்க!

என்னை ஏண்டா இழுக்கற? இஷ்டம் இருந்தா சாப்பிடு இல்லாட்டி இடத்தை காலி
பண்ணு இன்னிக்கு சுமங்கலி அப்பா ஜெயில்ல இருந்து வருவானா
மாட்டானான்னு நானே தவியா தவிக்கிறேன், நீ வேற சும்மா அது சரியில்ல இது சரியில்லன்னுகிட்டு..

நீ வேணா பாரு அடுத்த எபிசோட்ல அவன தூக்குல போட போறாங்களாம். சம்பளம்
ஓவரா கேட்டானாம்ல அதான். இத பாக்குறதுல கொஞ்சம் வீடுகள பாத்துகிட்டாவது
இருக்கலாம். ஒண்ணுத்துக்கும் உதவாத சீரியல பாத்துகிட்டு கதை அடிச்சிட்டு
உக்காந்திருப்பிங்க.

ஒண்ணுத்துக்கும் உதவாதத பத்தி நீ பேசறியா?? :)) சிரித்துக்கொண்டே அக்கா!

பின்ன நான் பேசாம சாலமன் பாப்பையாவா வந்து பேசுவாரு??

அம்மா மரியாதையா இவன கொட்டிகிட்டு வெளில போயிட சொல்லு, இல்லன்னா
நடக்குறதே வேற.

எது நடந்தாலும் நீங்க திருந்த போறதில்ல, கடைசி வரைக்கும் இந்த சீரியல்,
சுண்ணாம்பு, வெத்தலன்னு காலத்தை ஓட்டப்போறிங்க! இங்க இவ்ளோ நடந்துகிட்டு
இருக்கு அங்க ஒண்ணுமே தெரியாத மாதிரி வெத்தலைக்கு பாக்கு இடிச்சிட்டு இருக்கு
பாரு கெழவி. ஏ கெழவி இதுங்க ரெண்டு பேத்தையும் என்னான்னு கேக்கக்கூடாதா??

"போடா போக்கத்த பயலே"

இந்த வார்த்தைய விட்டா உனக்கும் வேற ஒண்ணும் தெரியாதே! சரி சரி டிபன
போடுங்க வெளில முக்கியமான வேலை இருக்கு!

சீக்கிரம் சாப்பாடு போட்டு அனுப்புடி அவன! இருந்தா லொட லொடன்னு பேசிட்டே
இருப்பான்.

"வெளில அனுப்பறதுலயே குறியா இருங்க"

பெண்கள் தினம்னதும் முதல்ல எனக்கு ஞாபகம் வந்தது அம்மாதான்.

இதுமாதிரி தினமும் எங்கவீட்டுல சண்டை போடலன்னா நமக்கு தூக்கமே வராது.
அதே மாதிரிதான் அவங்களும்.

உண்மைய சொல்லணும்னா வீட்டு சாப்பாடு மாதிரி உலகத்துல வேற எதுவும்
சுகம் கிடையாது. இருந்தாலும் நாலு நக்கல் அடிச்சுட்டே சாப்பிடறதுல ஒரு தனி
கிக் இருக்கும். மத்தபடி சாப்பாட்டு விஷயத்துல எங்கம்மா ஒரு தங்கம்.

வீட்ட விட்டுட்டு இங்க வந்ததுக்கு அப்புறம்தான் அவங்க அருமையெல்லாம் தெரியுது.
என்னையெல்லாம் வச்சி காப்பாத்தியிருக்காங்கன்னா அதுவே ஒரு பெரிய சாதனைதான்.
அதனால நல்ல பிள்ளையா இன்னிக்காச்சும் அவங்கள நினைச்சு பாக்கணும். ஒருவகைல
நான் இங்க இருக்கறதும் நல்லதுதான் ஏன்னா என்னோட இம்சை இல்லாம இருக்கலாம் :))

இந்த வலையுலகம் எனக்கு தந்த சகோதரிகளுக்கு இந்த தம்பியின் மனமார்ந்த
"பெண்கள் தின வாழ்த்துக்கள்"