எல்லையற்ற அன்பு கொள்வோம்

Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

Wednesday, July 08, 2009

கேக்குறாங்கய்யா கேள்விகள...

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

தாத்தா வெச்சது. ரொம்ப

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

Into the wild படத்துல ஹீரோ உலகத்த வெறுத்து காட்டுக்குள்ள போயிடுவாரு அப்போ ஆனந்தசுதந்திரமா ஓடி விளையாடும் மான்கள பாக்கும்போது அவர் கண்ல தண்ணி வரும் அப்போ எனக்கும் வந்துச்சு.

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

மொத ரெண்டு லைன் புடிக்கும் அதுக்கு மேல காது

4. பிடித்த மதிய உணவு என்ன?

முருங்கக்கா சாம்பார் + சோறு

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

அதெப்படி முடியும்

6. கடலில் குளிக்கப் பிடிக்குமா....அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

பாத்ரூம் தவிர எங்க குளிச்சாலும் புடிக்கும்

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

எல்லாத்தையும், உதட்ட முதல்ல பாக்குறது வழக்கம்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

தண்ணி போட்டா ரொம்ப பேசறது. ரொம்ப பேசறது

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

ஆள கண்டுபுடிச்ச உடனே பாக்கணும்

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அப்டிலாம் இல்லயே ரொம்ப யோசிச்சா தாத்தா வர்றார்.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

இல்ல

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

டிவி. ஓடி ஓடி விளையாடு ஓடி ஓடி விளையாட வாடி... இதத்தான் போடறானுங்க எப்பயுமே எல்லாத்துலயும்

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கறுப்பு

14. பிடித்த மணம்?

வெற்றிலை, காரணத்த விரிவா மறைவா சொன்ன கதைகள்ல படிக்கலாம்.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

ராஜேஷ். நண்பர், நல்லா எழுதுவார்

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு

எ.நி.ச.அறை

17. பிடித்த விளையாட்டு?

திருடன் போலீஸ்

18. கண்ணாடி அணிபவரா?

இல்ல

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்

கலைப்படம். "கலை"ப்படங்களைப் பார்க்க ஆர்வமளித்த அண்ணாச்சிக்கே எல்லா புகழும்

20. கடைசியாகப் பார்த்த படம்?

நாடோடிகள்.

21. பிடித்த பருவ காலம் எது?

கடும் வெயில் கோடைக்காலம் அல்ல

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

என் கதை - நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்களின் வரலாறு

23. உங்கள் டெஸ்க்டாப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?



இந்த படத்தைத்தான் ரொம்ப நாளா வெச்சிருக்கேன். மோகன் தாஸ் எடுத்ததுன்னு நினைக்கிறேன்.
இதை வைத்தநாள் முதல் மாத்தல. பொதுவா நான் அடிக்கடி மாற்றுகிறவன் அல்ல.

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

ஓடை நீர் சலசலக்கும் சத்தம். குழந்தை அழும் சத்தம் சுத்தமா பிடிக்காது

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்சத் தொலைவு?

அமீரகம்

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

தெரிஞ்சா சொல்லுவம்ல

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

யாருக்காச்சும் தனியா காத்திருக்கறது.

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோவம்

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

கொடைக்கானல்

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

நல்லாவே இருக்கணும்னு

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

தெரில

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

அட சரியா தெரிலங்க.

எழுதறதுக்கான அமைப்புகள் சரியா இல்லாத காரணத்தால் எழுதறதில்ல. எப்பவாச்சும் எழுதற இந்தமாதிரி பதிவுகள்லயும் ஓரிரு வார்த்தைகளில் எல்லா பதில்களையும் எழுதிட்டேன். விரிவா எழுதுனாலும் வாசிக்கறதுக்கு ஆள் இல்லைங்கறது தெரிஞ்ச விஷயம்தான். அழைத்த அய்யனாருக்கு நன்றி. என்கிட்ட இருக்க எவ்வளவோ நல்ல குணங்கள்ல இருந்து எதையாச்சும் ஒண்ணை சொல்லிருக்கலாம். அத விட்டுபோட்டு நல்லா குடிப்பேன்னு சொன்ன உன் நல்ல உள்ளத்துக்கு தக்க நேரம் கிடைக்கும்போது கைம்மாறு செய்வேன் ஜாக்கிரத.

Sunday, October 12, 2008

சினிமா கேள்வி பதில் - தொடர் விளையாட்டு

எனது சுயபுராணத்துக்கு அவசியமில்லாமல் நேரடியாக பதில்களுக்கு தாவி விடுகிறேன்.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

நான்காம் வகுப்பு படிக்கும்போது முதல் முதல்ல சினிமா தியேட்டருக்கு
போனேன். ஆனால் நான் ட்யூசன் முடித்து வரும்முன்னரே சித்தப்பாவுடன்
அண்ணன், தம்பி, அக்கா எல்லாரும் கிளம்பி விட்டார்கள். அடித்து பிடித்து வந்தால் எல்லாம் போய்விட்டார்கள் ஏமாற்றத்தை தாங்க முடியாமல் அரங்கம் நோக்கி
ஓடினேன். டிக்கெட் வாங்கி உள்ளே போய்விட்டார்கள். எப்படியாவது எனக்காக
வருவார்கள் என்று தியேட்டரின் பெரிய கேட் அருகில் நின்று கொண்டே இருந்தேன்.
யாரும் வருவதாகவே தெரியவில்லை. என்னை திட்டமிட்டு தவிர்த்துவிட்டதாக
நினைத்து ஏமாற்றத்தில் அங்கேயே அழுதுகொண்டிருந்தேன். அழுகையின் உச்சமாக
கோபம் தலைக்கேறியதால் அங்கேயே படம் முடியும் வரை அமர்ந்திருக்க முடிவு
செய்து அப்படியே அமர்ந்திருந்தேன். தியேட்டரின் முன் மைதானம் போன்ற
தரையில் அமர்ந்திருந்தபோது பலரும் ஏன் அமர்ந்திருக்கிறாய் என்று கேட்டார்கள் வைராக்கியமாய் பதில் பேசாமல் அமர்ந்தே இருந்தேன். ஒருவர் மிட்டாய் வாங்கித்தந்து
யார் வீடுப்பா நீ என்று கேட்டார் அப்போதும் பேசவில்லை. படம் முடிந்து வெளியே
வந்தனர் அனைவரும். என்னைப்பார்த்து அக்கா, அண்ணா, தம்பி எல்லாரும்
விழுந்து விழுந்து சிரித்தனர். எனக்கு அழுகை தாங்கமுடியாமல் சித்தப்பாவைக்
கட்டிக்கொண்டு முகம் பொத்திக்கொண்டேன். வீட்டுக்கு வந்தவுடன் மறக்காமல்
அப்பாவிடம் வத்தி வைக்க அடுப்பூதும் ஊதாங்கோலால் எனக்கு தர்ம அடி
விழுந்தது. இரவு முழுக்க அழுதுகொண்டே இருந்ததில் அப்பா கரைந்துபோனார். அடுத்தவாரமே என்னை மட்டும் தர்மதுரை என்ற ரஜினி படத்துக்கு
அழைத்துக்கொண்டு போனார். அவரின் கரம் பிடித்தபடி சென்றது நன்றாக
நினைவிருக்கிறது. இடைவெளியின்போது தின்பண்டமெல்லாம் வாங்கித்தந்து
அசத்தினார். நான் முதலில் திரை அரங்கில்

சினிமா என்று பார்த்தது அதைத்தான். அப்பாவுடன் கடைசியாக பார்த்ததும் அது
ஒன்றுதான். தியேட்டர் சென்று படம் பார்ப்பதை அவர் விரும்புவதில்லை.

இப்போது நினைத்தால்கூட வெட்கப்படும்படி வரும் நினைவு இது. அன்று
தியேட்டர் முன் எதற்காக அமர்ந்திருந்தேன் என்று தெரியவில்லை. மறக்கவே
முடியாத சம்பவம் இது.

உணர்ந்தது என்னவென்றால் உருண்டையான பெரிய விழிகளைக்கொண்ட
பெண்ணைத்தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று சபதம் எடுத்தேன்.
கவுதமியை எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

அபுதாபி வந்ததிலிருந்து அரங்கம் சென்று சினிமா பார்க்க அதிகம் வாய்ப்பு
கிடைக்கவில்லை. ஒருமுறை மலையாளி நண்பனை அழைத்துக்கொண்டு குசேலன் சென்றிருந்தேன். படம் முடிந்து வெளியே வந்ததும் என் மூஞ்சியில் காறி துப்பாத
குறையாக இனிமேல் என்னை தமிழ் சினிமாவுக்கு கூப்பிட்டேன்னா உன்ன
கொலபண்ணிட்டு ஜெயிலுக்கு போயிடுவேன் என்று சொன்னான். அவனுக்கு
எப்படியாவது நல்ல படத்தைக்காண்பித்து விடவேண்டும் என்று எண்ணியதால்
தாம் தூம் படத்துக்கு கூட்டிக்கொண்டு போனேன். இந்தப்படத்தையும் அவனுக்கு பிடிக்கவில்லை. ஆனால் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கடைசியாக அரங்கில்
பார்த்த படம் தாம் தூம் தான்.


3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

கடைசியாக எனது கணினியில் பார்த்த தமிழ்ப்படம் விஜயகாந்த் நடித்த அரசாங்கம்.
நண்பன் ஒருவன் பயங்கர சோகத்தில் இருந்தான். அவனுக்கு சந்தோஷம் வரவேண்டி இந்தபடத்தை எடுத்து வந்தானாம். “வேட்டையாடு விளையாடு ஸ்டைல்ல
எடுத்திருக்காங்க” என்று கமெண்ட் வேறு சொன்னதாலும் வட்டை அறையிலேயே விட்டுவிட்டுச்சென்றதாலும் அதை பார்க்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.

வைதேகி காத்திருந்தால் முதல் அரசாங்கம் வரை விஜயகாந்தின் முறைப்பெண்கள் எல்லாரும் “கட்னா மாமனத்தான் கட்டிக்குவேன்” என்ற ஒரே வசனத்தைதான்
பேசுகிறார்கள். பளிங்கு போன்ற வெண்மையான நம்பியாருக்கு விஜயகாந்த்
பேரனாம். படத்தின் பெரும்பகுதி கனடாவில் எடுத்திருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. விஜயகாந்த் எவ்வளவுதான் இண்டலிஜெண்டலியாக படம் எடுத்தாலும் அது வேலைக்கு ஆகாது என்பதை என்னவென்று சொல்வது.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

மூன்றாம் பிறை. எவ்ளோ வயசான ஆளுங்க என்று ஸ்ரீதேவி சொல்லும்போதும்,
இறுதியில் கமலின் ஏமாற்றமும் மிகவும் தாக்கியது என்று சொல்லலாம்.

தவிர தேவர்மகன், சேது, பிதாமகன், சுப்ரமணியபுரம் போன்றவையின்
தாக்கம் அதிகம்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

படம் பார்த்து சில்க் ஸ்மிதாவை ரொம்ப பிடிக்கும் அவர் இறந்துபோனதில்
என்ன அரசியல் இருக்கிறது என்பது இதுவரை யாரும் அறிந்ததாக தெரியவில்லை.

ஸ்ரீதேவிக்கு அடுத்து மிகவும் அழகானவர் ஸ்மிதா, அதற்கடுத்து பானுப்பிரியா.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

பாசமலர். இதைப் பார்த்து அழாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் என்று அடிக்கடி
அப்பா சொல்வார். நான் அந்தப்படத்தை இன்னமும் பார்க்கவில்லை சில காட்சிகள்
மட்டும் பார்த்திருக்கிறேன் என்றாலும் சாவித்திரியை மிகவும் பிடிக்கும்.
அதேப்போல சந்திரபாபுவின் நகைச்சுவை மற்றும் பாடல்களும் மிகவும் பிடிக்கும். இருவருமே போதையின் பிடியில் சிக்கி அற்பாயுளில் இறந்து போனார்கள்.
இருவருமே சினிமாவிலும் சொந்தவாழ்விலும் நிறைய இழந்ததினால் தன்னை அழித்துக்கொண்டவர்கள். சமீபத்தில் இருவரைப் பற்றியும் ராமகிருஷ்ணன் விரிவாக
எழுதி இருக்கிறார். மனதை கரைய வைக்கும் வாழ்க்கை இருவருடையதும்.
கேள்விக்கும் பதிலுக்கும் சம்பந்தமிருப்பதாக எனக்கே தெரியவில்லை என்றாலும்
இதுதான் சட்டென்று மனதில் தோன்றியது.

6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

சாருவின் அலைந்து திரிபவனின் அழகியல் என்ற புத்தகம் படித்தேன். அதற்கு
முன்பு சினிமா தொடர்பாக வாசித்த நூல்கள் சுசி கணேசனின் வாக்கப்பட்ட பூமி,
சேரனின் டூரிங் டாக்கிஸ், ப்ரகாஷ்ராஜின் சொல்லாததும் உண்மை வாசித்திருக்கிறேன். வலைப்பூக்களில் பத்துக்கு எட்டு பதிவுகள் சினிமாவைப்பற்றிதான் வருகின்றன.

7.தமிழ்ச்சினிமா இசை?

தமிழ்சினிமா தவிர வேற இசை இருக்குதா என்ற கேள்விக்கு விடையெல்லாம்
தெரியாது. ஆனால் வீணையின் இசை மிகவும் பிடிக்கும். அடுத்ததாக சாக்சபோன்
பிடிக்கும். வீணையின் இசையில் கூட தமிழ்ப்பட பாடலின் வீணையிசை மட்டுமே பிடிக்கிறது. இளையராஜா மிகவும் பிடித்த இசையமைப்பாளர்.

" 8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

அதிகம் பார்ப்பதுண்டு. மிகவும் நெகிழ்வில் ஆழ்த்திய படங்களாக
டாமி லீ ஜோன்ஸின் three Buriels மற்றும் Clint Easteood ன் The Bridges of Madison county படமும். shawshank redumption, the way home, Spring Summer Autumn Winter சமீபத்தில் சுப்ரமணியபுரம். தமிழ் சினிமாவும் உலக சினிமாவில் ஒன்றுதானே!

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?


நேரடி மட்டுமல்ல மறைமுகத்தொடர்பு கூட இல்லை. எங்கள் ஊர் தியேட்டரில்
போஸ்டர் ஒட்டுகிற பணி செய்யும் தினகரன் என்பவர்தான் என் சினிமா நண்பர்.
அவருக்கு ஏராளமான சினிமாக்களைப் பற்றி தெரியும்.

கல்லூரி படிக்கும்போது இயக்குனராக வேண்டும் என்ற அசட்டு ஆசையெல்லாம்
இருந்தது. தமிழ்சினிமா மேம்பட பார்வையாளனாக மட்டுமே என்னால் செயல்பட
முடியும் என்பதை உணர்ந்தே இருக்கிறேன்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பிரகாசமாக இருக்கிறது.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

கழிவரையில் தண்ணீர் இல்லாவிட்டாலும் குமுதமோ ஆனந்த விகடனோ இல்லாமல்
உள்ளே செல்லவே முடியாத பழக்கம் எனக்கு. கடந்த இரண்டு வருடங்களாக ஒரு பத்து இதழ்கள் மட்டுமே அங்கே நிரந்தரமாக இருக்கிறது. அதையேதான் படித்து வருகிறேன். பழையது, புதியது என்பதிலெல்லாம் எனக்கு அக்கறையில்லை. எனக்கு வேலை ஆகவேண்டும். பொழுதுபோக்குக்கு புதிய சினிமா மட்டும்தான் இருக்கிறதா என்ன?
இதுவரை வந்த படங்களையெல்லாம் பார்த்து விடவும் இல்லை. எனவே இந்த ஒரு வருடத்தில் பார்க்காத மற்ற திரைப்படங்களை பார்த்துவிட்டால் போகிறது. பொழுதுபோக்குபவனாக எனக்கு நேரடி பாதிப்பு இல்லையென்றாலும் சினிமாவையே
நம்பி பிழைக்கும் தொழிலாளர்களின் நிலைதான் யோசிக்க வேண்டிய விஷயம்.

இப்படி ஒரு மொக்கை போட என்னை அழைத்த பரத்தை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. ப.தி.கொ போட்ட எழுத்தாளர்களின் வரிசையில் சாதாரண பதிவர்களுக்கும் எழுத அழைத்த உங்களுக்கு நன்றிகள்.

நான் அழைக்க விரும்பும் ஐந்து பேர்

ஆசிப் மீரான்
கோபிநாத்
கப்பி
சென்ஷி
ஜியா

Tuesday, May 29, 2007

VCC - 606207

சந்தேகமே வேணாங்க தலைப்புல இருக்கறது கிரிக்கெட்டு கிளப்பு பேருதான். வெங்கட்டாம்பேட்டை (ரோடு) கிரிக்கெட் கிளப் (VCC). மொதல்ல எங்க ஊரு கச்சிராப்பாளையம் கிரிக்கெட் கிளப்புன்னு வைக்கறதாதான் இருந்துச்சி ஆனா பாருங்க
வேற சில வெட்டி ஆபிசருங்க அதே பேர வச்சிட்டானுங்க அதனால VCC ன்னு
வச்சாச்சி இந்த பேரும் நாங்களா வச்சிக்கல தானா வந்துச்சி (இது என்ன பெருமையா?)
எங்க ஊர்ல இருக்கற மொத்தம் பத்து தெருவுக்கு எட்டு டீம் இருக்கும் இதுல
எல்லாரும் KCC ன்னு வச்சிகிட்டா டோர்னமெண்ட்ல கொழப்பம் வந்துடும். ஒருமுறை
வந்துச்சி டேய் இவனுங்க வெங்கட்டாம்பேட்டை தெருப்பசங்கடான்னு எவனோ
ஒருத்தன் சொல்ல எவனோ ஒருத்தன் எழுத அதுவே நிலைச்சி போச்சு.

அண்ணே வெங்கட்டாம்பேட்டைன்னு பக்கத்து குக்கிராமத்து பேர நம்ம டீமுக்கு
ஏன் வச்சிங்க ரொம்ப கேவலமா இருக்கு அதுவுமில்லாம அந்த ஊர் பசங்க
எங்கனாச்சும் ரப்பர் பந்துல விளாண்டு தோத்துட்டு வந்தா கூட நாமதான்
தோத்தோம்னு பேசிக்கறானுங்க அதனால அடுத்த போட்டி வர்றதுக்குள்ள
பேர் வச்சே ஆகணும்னு அடம்பிடிச்சானுங்க.

நாம பேர எவனுமே கேள்விப்பட்டுருக்க கூடாது ஆனா பயங்கர அர்த்தமுள்ளதா
வைக்கணும்னு யோசிச்சி யோசிச்சி வச்சதுல மூளை காய்ஞ்சதுதான் மிச்சம்.
ஏதேச்சையா ஸ்டார் மூவீஸ் பாக்கும்போது டெஸ்பெரடோ (Desperado )ன்னு
ஒரு படம் ஓடுச்சி ஆக்ஷன் படம் அட சூப்பரா இருக்குதேன்னு இந்த வார்த்தைக்கு
பாக்கறவன்கிட்டலாம் அர்த்தம் கேட்டேன் எவனுக்கும் தெரில. நம்ம சொக்கன்கிட்ட
கேப்பம்னு அவன்கிட்ட கேட்டா நாதாறி தெரியாததை தெரியாதுன்னு சொல்லவே
கூச்சப்படற நல்ல பய. அட அதுவாடா... அப்படின்னா பயங்கரமான மிருகம்
டைனோசர் மாதிரி ஆனா அது இப்ப அழிஞ்சி போச்சிடானு ஒரு பீலா விட்டான்.
நானும் நல்லாதான் இருக்குன்னு அந்த பேரையே வச்சிட்டேன்.

DCC (Desperado Cricket Club) இனிதே உதயமாகியது.

இப்பதாங்க ஒரு சிக்கல். இந்த பேர எந்த நாயுமே ஒழுங்க சொல்ல மாட்டீகிதுங்க

தாஸ்பார்டா
டாஸ்போடட்டா
டொஸ்பொராட்டா

கொஞ்சம் தேய்ஞ்சி போய் புரோட்டான்னு சொல்ல ஆரம்பிச்சானுங்க.

அண்ணே நாம அங்கங்க போய் தோத்துட்டு வரும்போதுல்லாம் பரோட்டா டீம்
கொத்து பரோட்டோ ஆகிடுச்சிடோய்னு கிண்டல் பண்றானுங்க வேற பேர்
வைக்கணும். வாய்ல நொழையாத இங்கிலிசு பேரெல்லாம் இருக்ககூடாது நல்ல
பேரா அழகா வைக்கணும்னு ஒருத்தன் அழாத குறையா வேண்டிகிட்டான்.

டேய் அடிக்கடி டீம் பேர மாத்தினா நல்லா இருக்காதுடா பாக்கறவனுங்க
பேர் கூட வைக்க தெரிலன்னு கிண்டல் பண்ணுவானுங்க.

இப்ப மட்டும் என்ன வாழுதாம். பேர மாத்துங்க இல்லாட்டி நான் கெஸ்ட்
ப்ளேயரா பக்கத்து தெரு டைகர் டீமுகு போயிடுவோம்னு மிரட்டிய பிறகு
பழைய பேரான வெங்கட்டாம்பேட்டை கிரிக்கெட் கிளப்புன்னு வச்சாச்சி.

ஆரம்பத்துல எந்த ஒரு நோக்கமும் இல்லாம சாயந்திரம், ஞாயிறுகள்ல பொழுது
போகணுங்கறதுக்காக விளையாட ஆரம்பிச்சது, பிறகு ஆள் அதிகம் சேந்து போனா
ரெண்டு டீமா பிரிச்சி விளையாடறது. அப்படி விளையாடும்போதுதான் பக்கத்து
ஊர்காரனுங்க பெட் மேட்ச் விளையாட வாங்கன்னு கூப்பிட, போனா செம அடி
குடுத்து அனுப்பனானுங்க. அப்படியே அடி வாங்கி அங்கங்க செயிச்சி நாமளும்
ஒரு டீம்னு ஆகிப்போச்சி. எங்க டோர்னமெண்ட் நடந்தாலும் நமக்கு ஒரு கடுதாசி
குடுத்து விடுவாங்க. தோ பார்றா நம்மளையும் ஒரு டீம்னு கூப்பிடறானுங்க
பத்திரிக்கைல பேரெல்லாம் போடறானுங்கன்னு ஊர் ஊரா போய் விளையாடினோம்.
மொத்தமா இருவது இருவத்தஞ்சு டோர்னமெண்ட் விளையாடியிருப்போம் ஆனா
ஒரே ஊர்ல மட்டும்தான் முதல் பரிசு வாங்கினோம்.

மொத மொதல்ல கிரிக்கெட் மட்டைய பிடிச்ச இடமே ரொம்ப வசதியான இடம்
நாலு பக்கமும் தடுப்புச்சுவர் வச்சிருக்க நெல்லு காய வைக்கிற களம். எங்க வீட்டு
பக்கத்துலயே இருந்ததால ரொம்ப வசதி. வெப்பன்ஸ்(பேட், ஸ்டிக்) எல்லாம் எங்க வீட்டு
மாட்டு கொட்டாய் ஓரமா இருக்கும் யார்வேணா எப்ப வேணா வந்து எடுத்துக்கலாம்
ஆனா பேட்டும் பந்தும் என்கிட்டதான் இருக்கும்.

அந்த நெல்லு காயவைக்கிற களம் எங்க ஊரு நாட்டாமைக்கு சொந்தமான இடம்.
அண்ணன் தம்பிக்குள்ள சண்டையா இருந்ததினால யார் மில் நடத்துறதுன்னி சண்டை
வந்து எவனுமே நடத்தாம நாங்க கிரிக்கெட் விளையாடிகிட்டு இருந்தோம்.
கட்டாந்தரையா இருக்கறதுனால கார்க் பால் அடிக்கடி ஒடஞ்சு போகவே ஏரிக்கு மாறியது
எங்க மைதானம்.

பரந்து விரிஞ்ச ஏரி. நானெல்லாம் பந்த தூக்கி அடிச்சேன்னா (நம்பணும் ஆமா)
அவ்ளோ தூரமெல்லாம் போக முடியாது நீயே போய் எடுத்து வந்தா அடுத்த பால்
போடுவேன். அடுத்த முறை ரொம்ப தூரம் போச்சின்னா அடிச்சவனே போய
எடுத்துக்கணும்னு அவசர ரூல் போட்டானுங்க. இப்படி பள்ளத்துல விழுந்தா அவுட்டு
கம்பத்த தாண்டி தூக்கி அடிச்சா அவுட்டுன்னு மேட்சுக்கு மேட்ச் விதிகள் மாறும்.
திடீர்னு அவுட்டாகிட்டோம்னா "டேய் போன மேட்சுல வச்ச ரூல்ஸ் அது, ஆட்டம்
ஆரம்பிக்கும்போதே அந்த ரூல்ச தூக்கியாச்சி தெரியாதா உனக்குன்னு ஏமாத்தலாம்.

வெளியூர் டோர்னமெண்ட் ஆடபபோனோம்னா மேக்சிமம் ஜெயிக்கணும்னு வெறியோட
விளையாடுவேன். கிரவுண்ட்ல கன்னாபின்னான்னு கோவம் வரும். சொந்த தம்பியா
இருந்தாலும் திட்டுவேன். எதிரணியெல்லாம் எனக்கு எதிரி அணியே இல்ல டீமுக்குள்ளயே
ஒரு எதிரி இருக்கான் அவந்தான் எந்தம்பி. கேட்ச் மிஸ் பண்ணிட்டான்னு திட்டுனோம்னா
உடனே கிரவுண்ட்லருந்து கிளம்பிடுவான் சரி அவன் மட்டும் போனா பரவாயில்ல வேற
ஆள போட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் ஆனா இவரோட ஆதரவாளர்கள்னு நாலு
பேர கூட்டிட்டு போவாரு. அடுத்தமுறை திட்டமாட்டேன்னு சொன்னாத்தான் போராட்டத்த
வாபஸ் வாங்குவாரு.

சங்கராபுரத்துல பைனல்ல ஜெயிச்சி கப்பு வாங்கினது ஒருமுறைதான் எங்கள் அணி
முதல் பரிசு வாங்கியது. அதுக்கப்புறம் எங்க போனாலும் நாலாவதோ மூணாவதோ
உறுதி.

எல்லாருக்கும் சொந்த பேரு இருந்தாலும் கிரவுண்டுன்னு வந்துட்டா எவனுக்கும் ஒரு
பட்டப்பேரு வச்சே ஆகணும். பேட் மாதிரி கிரிக்கெட் விளாட அது ரொம்ப
அவசியம். அதனால அப்படியே கீழ குடுக்கறேன்.

கதிர் (நாந்தாங்க கேப்டன்)

சளி எ ஞானம் (கிரவுண்ட்ல எச்ச துப்பிகிட்டே இருப்பான் அதனால சளி)

கொப்பர எ சுப்பிரமணி (பீல்டிங் புலி)

சொக்கன் எ அசோக் (எங்கள் அணி வேகப்பந்துப்புயல்)

பீலாக்காடு எ மாதவன் (வாய்திறந்தாவே பொய்தான் அதனால இந்த அடைமொழி)

ஸ்லாட்டர் சக்தி (ஆஸி ப்ளேயர் ஒருத்தன் பேரு எதுகையா வருதுன்னு சேத்துகிட்டான்)

சோனி எ கவி (டீம்ல எனக்கு ஒரே எதிரி இவந்தான். சொந்த தம்பி வேற!!)

சொங்கி எ மணிவண்ணன் (இந்திய அணிக்கு ஏத்த பய)

ஏக்கே எ சரவணன் (பாதி மேட்சுல காணாம போயிடுவான்)

வெங்கலக்குண்டான் எ வெங்கடேசன் (குண்டானுக்குள்ள கோலிகுண்ட போட்டு உருட்டினா
என்ன சத்தம் வருமோ அதே மாதிரி பேசுவான், ஒண்ணுமே புரியாது)

மாண்டி எ ராஜேந்திரன் (இந்த பேர்எப்படி வந்துச்சின்னே தெரில, இவனுக்கு கட்டை
விரல் கிடையாது,நகங்கடிக்கிற பழக்கம் இவனுக்கு ஜாஸ்தி உணர்ச்சிவசப்பட்டு கடிச்சி
கடிச்சி கட்டை விரல் காணாமப்போயி மொழுக்குனு இருக்கு விரல் இருந்த ஏரியா.
இதனாலேயே கேட்ச் அடிக்கடி மிஸ் பண்ணுவான்)

இதத்தவிர சப்ஸ்டிடூட்னு ஒரு மூணு நாலு பேர் இருப்பானுங்க, பஸ்ல போக காசு
இல்லன்னா மட்டும் மாட்டு வண்டி வச்சிருக்க கோவிந்தன கூப்பிட்டுக்குவோம்
அப்பதான அவன் மாட்டு வண்டில ஓசில போக முடியும்.

விட்டா நான் மங்களம் போடாமா மங்களம் பாடிட்டு இருப்பேன். இத்தோட
முடிச்சிக்கிறேன்.

Sunday, February 04, 2007

சொன்னது யாரு? - 2

நண்பர்களே உங்களுக்காக இந்த ஜாலியான விளையாட்டு. உங்கள் ஆர்வமான பதில்கள் மீண்டும் இதை பதிவிடுகிறேன். வழக்கம்போல
இந்த சொன்னது எல்லாமே இந்த வார இதழ்களில் இருந்து எடுத்ததுதான். கடினமா இருக்கற மாதிரி இருந்ததுன்னா பின்னூட்டத்துல கேளுங்க க்ளு கொடுக்கப்படும். ம்ம்ம் பூந்து விளாடுங்க!



1."ஈழத்தமிழர்கள் விஷயத்தில் வைகோ காட்டிய தீவிரத்தை தமிழகத்தில் வேறு எந்தக் கட்சித் தலைவரும் காட்டியிருக்க முடியாது. ஆனால் அது ஒரு புனிதமான உணர்வு இல்லை"

L.கணேசன்

2."நான் இதற்கு முன் நிறைய விருதுகள் வாங்கியிருக்கிறேன். ஆனால் நான் அறிந்த வரையில் இப்போது வாங்கும் கலைஞர் விருது நான் வாங்கியதிலேயெ மிகச் சிறந்த விருது."

எழுத்தாளர் ஜெயகாந்தன்

3."முதலில் ஆந்திரா மெட்ராஸிலிருந்து பிரிக்கப்பட்டது. இப்போது தனி தெலுங்கானா கோரிக்கை. மாநிலத்தை பிரிப்பதென்பது மகா பாவம்"

புட்டபர்த்தி சாய்பாபா

4."கடவுளை நான் ஏற்றுக்கொள்கிறேனா என்பது பிரச்சினை அல்ல. கடவுள் என்னை ஏற்றுக்கொள்கின்ற அளவுக்கு நான் நடக்கிறேனா இல்லையா என்பதுதான் பிரச்சினை"

கலைஞர் கருணாநிதி

5."எனக்கு சச்சினைப்போல உலக அளவில் சாதிப்பதுதான் குறிக்கோள். அதற்காக கடுமையாக பயிற்சி செய்கிறேன்" (சொன்னது சென்னைப்பெண்)

திருஷ்.காமினி

6."மனிதனை விண்வெளிக்கு அனுப்புவது என்ற விஷயத்தை தவிர, மற்றவைகளில் நாம் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இருக்கிறோம்"

திரு.மாதவன் நாயர்

7."எல்லாருக்கும் எப்படியாவது ஜெயிக்கணும்னு வெறி இருக்கும், எனக்கு மட்டும் ஏன் ஜெயிச்சோம்னு இருக்கு" இன்னும் நான் தொலைக்காம இருக்கறது என் நம்பிக்கையை
மட்டும்தான்.

வெள்ளித்தாரகை சாந்தி

8."ஐம்பது வயதைக் கடந்த பின் நாமெல்லாம் வானத்தில் எறிந்த கல் திரும்பி வரும் பாதையில் இருக்கிறோம், விழும்போது நல்ல நெஞ்சங்களில் விழ வேண்டும்"

கவிப்பேரரசு வைரமுத்து

9. "உலகத்திலேயே முதன் முதலாக எழுதப்பட்ட மெகா க்ரைம் நாவல் மகாபாரதம்தான் அதில் இல்லாத சூழ்ச்சிகள் கிடையாது, கொலைகள் கிடையாது, சதிகள் கிடையாது, முதன் முதலாக ஒரு பெண் மானபங்கப்படுத்தப்பட்டதும் அதில்தான்"

க்ரைம் நாவல் ஸ்பெஷல் ராஜேஷ்குமார்

10."கமர்ஷியல் சினிமாவின் வெற்றி அந்தந்த காலகட்டத்துக்குலதான் இருக்கும்,ஆழமான கதைகளின் வெற்றி காலங்காலமா நிற்கும்". "என்னுடைய படங்கள் எப்பவும் பேசப் படணும்னு விருப்பறேன். என் பயணம் நான் தீர்மானிச்சது"

இயக்குனர் சேரன்

Sunday, January 28, 2007

சொன்னது யார்? - புதிர்

விக்கி, கப்பியை தொடர்ந்து இதுவும் ஒரு புதிர் போட்டி சுவாரசியமாக
இல்லாவிட்டாலும் சுமாராக இருக்கும் என்றே நம்புகிறேன். கீழே
கொடுக்கப்பட்டவைகள் பிரபலங்கள் சொன்னவை யார் அந்த பிரபலங்கள்
என்று கண்டுபிடிங்க! (சன் நியூஸ்ல வருமே அதுமாதிரி)

1."சண்டைக்குப் பின் நண்பராவது வாழ்க்கையில் சகஜம். அது முடிந்து போன விஷயம் இப்போது நாங்கள் நண்பர்கள்" (இப்போதுதான் மீண்டிருக்கிறார்)

கங்குலி, சாப்பல்

2. "அவளுக்கு முகத்தில் முடி வளர்ந்திருக்கிறது ஒரு ஆணைப்போல" அவள் வெள்ளைக்காரியாக விரும்புகிறாள்" (சர்ச்சை)

ஜேட் கூடி

3. இவர் விடுத்த கோரிக்கையின் பேரில் நூலகத்திற்கு வாங்கும் நூல்களின் எண்ணிக்கையய் 600லிருந்து ஆயிரமாக மாற்றினார் கலைஞர். (சட்டமன்ற உறுப்பினர்)

ரவிக்குமார்

4. இசை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. அது கடல் போன்றது. அதில் யாரும் மேதைகளாகி விட முடியாது (க்ளுவெ இல்லாம கண்டுபிடிக்கலாம்)

இசைஞானி இளையராஜா

5. "எனது ஒவ்வொரு வேற்றிகரமான ஓவியத்தின் பின்னும் ஒரு பெண், ஒரு அழகான பெண் இருக்கிறாள்" (முழுப்பெயரும் வேண்டும்)

மக்பூல் ஃபிதா உசேன்

6. "கிரிமினல்கள் சுதந்திரமாக உலவுகிறார்கள். அவர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நிலையில் இந்த அரசு இல்லை". (இவர் ஒரு பெண் அ.வாதி)

ராப்ரி தேவி

7. "கிரிக்கெட் மட்டுமே விளையாட்டு அல்ல. மற்ற விளையாட்டுகளிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்". (வைகைப்புயலின் ஊரில் வேகப்புயல் சொன்னது)

கபில்தேவ்

8. உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா?
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா?
(பாடலை எழுதியவர் ஒரு நடிகை)

நடிகை ரோகிணி

9. "வைகோ விழுந்துவிடக் கூடாது" (இவரும் ஒரு அ.வாதி)

நடிகர் விஜயகாந்த்

10. "தனது மகன்கள், பேரன், பேத்திகளின் நலனுக்காக பாபாவை வரவழைத்துப்பார்த்தது கருணாநிதிக்குக் காலம் ஏற்படுத்திய கட்டாயம்"
(இவர் ஒரு சீஸன் அ.வாதி)

இராமகோபாலன்


இது எல்லாமெ மிக சுலபமான கேள்விகளே.வார பத்திரிக்கைகள் படிக்கும்
பழக்கமிருந்தால் மிக மிக சுலபம்தான்.

ம்ம்ம் ஆரம்பிங்க....