எல்லையற்ற அன்பு கொள்வோம்

Showing posts with label நட்சத்திரம். Show all posts
Showing posts with label நட்சத்திரம். Show all posts

Sunday, March 11, 2007

எல்லாருக்கும் வணக்கம்.

என்னையும் நட்சத்திரமாக்கிட்டாங்களாம். என்ன கொடுமை சரவணன்னு
எல்லாரும் புலம்பறது எனக்கு நல்லாவே கேக்குது. என்ன செய்யிறது கொஞ்சம் பொறுத்துக்கிடணும் சாமிகளா.

நட்சத்திர பதிவுகளை படிக்கும்போது தோன்றும். "வலைப்பூவில் ஆறுமாதம்
தொடர்ந்து எழுதினால் நட்சத்திரமாக்கி விடுவார்கள்". இந்த எண்ணம்
வலைப்பூக்களில் வலம் வர ஆரம்பித்த சில நாட்களில் தோன்றியது. சில பதிவுகளை படிக்கும்போது, ஆஹா சிறந்த எழுத்தாளர்கள் அளவுக்கு சிந்தித்து தங்கள் பார்வையை
மிக அழகாக வெளிப்படுத்துகிறார்கள் நிச்சயமாக இவர்கள் கவனிக்கப்படவேண்டிய
பதிவர்கள்தான் என்று என் எண்ணத்தை சற்றே மாற்றினேன். நாந்தான் தவறாக நினைத்துவிட்டேன் போல. ஒரு பதிவர் அங்கீகரீக்கப்ப்ட்டு அவரின் பதிவுகள் தமிழ்மண முகப்பில் நிறுத்தப்படுவதால் பல பேரை சென்றடைகிறார். பரவலான
கவனமும் கிடைக்கிறது. இந்த மாதிரி தெளிவா சிந்தித்து வைத்திருந்த நேரத்துல
நான் முதலில் நினைத்ததுதான் சரி என்பது போல என்னையும் நட்சத்திரமா
தேர்ந்தெடுத்தவுடன் விளங்கிக்கொண்டேன்.

தமிழ்தேர்வுகளில் தவறாமல் ஒரு பெரிய மதிப்பெண் கேள்வி, கேள்வித்தாளின் கடைசி
பக்கத்தில் இடம்பெற்றிருக்கும். நான்கு பத்திகளில், 300 வார்த்தைகளுக்கு மிகாமல்
என்பது போல வகை.

"பள்ளி சுற்றுலா சென்றதை பற்றி உன் பார்வையில் விரிவாக 300 வார்த்தைகளுக்கு
மிகாமல் ஒரு கட்டுரை வரைக."

"தற்கொலைக்கு முயன்ற வேடனின் முன் கடவுள் தோன்றும் காட்சியை உன் கற்பனையில்
ஒரு கட்டுரை எழுதுக."

இந்த கேள்விய படிக்கும்போதுதான் எனக்கு பெரிய குழப்பமே வரும். எந்த
கேள்வியா இருந்தாலும் கோனாரில் விடை கிடைக்கும். இந்த கேள்விக்கு விடை
எப்படி எழுதறது? ஒருவேளை கேள்வி எண்ணை மட்டும் எழுதினாக் அவுட் ஆப்
சிலபஸில் மதிப்பெண் வழங்குவார்களோ என்று கூட நினைப்பேன். சொந்த நடையில
எழுத சொன்னா எப்படி எழுதறது? லீல் லெட்டர்ல இருந்து...

"_____ முதல எழுத்தெல்லாம் ஆதி _______
முதற்றே _____". என்பது வரை கோனாரையோ, வெற்றித் துணைவனையோ
புரட்டினால் தெரிந்துவிடும். சொந்தமா எழுதுன்னா என்னாத்த எழுதறதுன்னு சாய்ஸில்
வரும் வேறொரு கேள்விக்கு கோனாரின் உரையை எழுதிவிடுவேன்.

ஆனா நட்சத்திர வாரத்தில் அப்படியில்ல சுவாரசியமாக அனைத்து பதிவர்களும்
வாசிக்கும் வண்ணம் எழுத வேண்டும். அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்த
முற்படுவது போன்ற பதிவுகளை இடவேண்டும். ஒரு பிரச்சினையில் தன் பார்வை
இதுதான் என்று தெளிவாக எடுத்து வைக்க வேண்டும். அழகான கவிதைகள் எழுத
வேண்டும். இப்படி பல வேண்டும்கள் வேண்டும்.

ஆனால் இதுவரைக்கும் நம்ம பதிவுகள்ல உருப்படியா ஒரு விஷயமும் இருந்ததில்ல.
இப்படி இருக்கறச்சே நட்சத்திர வாரத்தில் என்னை எப்படி வெளிப்படுத்துவது என்றே
தெரியவில்லை. எனக்கு தெரிஞ்சதெல்லாம் நக்கலாவோ, உப்புமாவோ எதாவது எழுதி
இருவது, முப்பது பின்னூட்டத்த வாங்கறதுதான். அதே மாதிரி இல்லாம சில
உருப்படியான பதிவுகள் எழுதணும்னு தோணுது. (பயம் வேணாம்)
"சட்டியில இருந்தாத்தானே அகப்பைக்கு வரும்" அதனால நீங்களே பார்த்து
முடிவு பண்ணிக்கோங்க. பாசிட்டிவா இருந்தா ஒரு பின்னூட்டமிடுங்கள்,
நெகட்டிவா இருந்தா மைண்ட்ல வச்சிக்கோங்க.

உங்களுக்கெல்லாம் இந்த ஒரு வாரமும் கொஞ்சம் இம்சையாத்தான் இருக்கும் :((

மறுபடியும் எல்லாருக்கும் வணக்கம்!!!