முதல் பகுதி இங்கே சொடுக்கவும்
டெவில் ஷோவில் கவுண்டர் டீ.ஆருக்கு கேள்விக்கணைகளை கன்னா பின்னாவென்று வீசுகிறார்
கேண்டீன்ல விக்கிறாண்டா பஜ்ஜி
என் வீட்டு நாய்க்குட்டி பேரு புஜ்ஜி
லைட்டு எரியணும்னா போடணும் சுச்சி
கேள்விக்கணைகளை தொடுடா மச்சி
கவுண்டர்: எடுபட்ட பய கேப்புல நம்மளயே மச்சினு கலாய்க்கறானே, சரி விடு
கழுத போகட்டும் கிங் காங் னு ஒரு ஆங்கிலப்படத்துல ஒரு மனிதக்கொரங்கு
நடிச்சிருக்கும். அது ஹீரோயின லவ் பண்ணும் ஆனா கடைசில சேரமுடியாம இறந்து போயிடும், வீராச்சாமிலயும் அப்படிதான் வருது. அந்த படத்தோட அப்பட்டமான
தழுவல்தான் வீராசாமினு வெளில பேசிக்கறாங்களே.
டீ.ஆர்: என்னோட படத்தை பார்த்துதான் அந்த படத்தை எடுத்துட்டாங்கன்னு நான்
புகார் செஞ்சா ஆராச்சும் நம்புவாங்களா ஆனா அதுதான் உண்மை. தமிழனுக்கு
ரசனையே இல்லாம போச்சு. என் கதைய ஹாலிவுட்ல எடுக்கறான் கோலிவுட்ல
கெடுக்கறான்.
கவுண்டர்: டேய் அப்பிரிக்கா மண்டையா அந்த படம் எடுத்து ஆறு மாசம் ஆகுதுடா
கீரிபுள்ள தலையா. ஆனா ஒண்ணு அந்த படத்தை அவனுங்க க்ராபிக்ஸ், மேக்கப்
போட்டு கஷ்டப்பட்டு எடுத்தாங்க உனக்கு க்ராபிக்ஸ், மேக்கப்பு எல்லாம் போடாம
அம்சமா பொருந்துச்சே அதுதான் படத்தோட ஹைலைட்டு அந்த விஷயத்துல நீ
ஜெயிச்சிட்ட.
டீ.ஆர்: நல்லவேளை என்னோட அருமை பெருமையெல்லாம் யாருக்குமே தெரியாம போயிடும்னு பயந்துட்டேன் உங்களுக்கு தெரிஞ்சிடுச்சி. (சிரிக்கிறார்)
கவுண்டர்: உலகத்துலயே ஒரு ஆள வெச்சிகிட்டு கட்சி நடத்துற ஆள் நீயாத்தான்
இருப்ப, எதுக்கு உனக்கு கட்சி அதுவும் லட்சிய திராவிட முன்னேற்ற கழகம்
மத்தவன்லாம் லட்சியமே இல்லாம கட்சி நடத்திட்டு இருக்கானா. எதுக்கு மேன்
இந்த ஒன் மேன் ஆர்மி. உன் கொள்கைதான் என்ன.
டீ.ஆர்: கவுண்டரே என்னோட கட்சில பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள்
இருக்காங்க. அதுலயும் மூணு முதலமைச்சர்கள எதிர்த்து அரசியல் செஞ்சவன்
நான். எம்.ஜி.ஆர எதிர்த்து உண்ணா விரதம் இருந்தேன், கருணாநிதிய எதிர்த்து
ஊர்வலம் நடத்துனேன், அம்மாவை எதிர்த்து யாகம் செஞ்சேன். அவங்க பரிகாரம் பண்ணாங்க. "பண்ண வேண்டாம் பரிகாரம் உங்க கைக்கு கிடைக்காது அதிகாரம்"னு
அம்மாவுக்கு எச்சரிக்கை குடுத்தேன். ஈரோட்டுல கலைஞருக்கு ஆதரவா பேசினேன்
அதனாலதான் இந்த தேர்தல்ல அவர் ஜெயிச்சாரு.
கவுண்டர்: தெரு முக்குல நின்னு சத்தம் போட்டா அதுக்கு பேர் எதிர்ப்பா இதுல
மூணு முதலமைச்சர்கள எதிர்த்து நின்னேன்னு கப்சா அடிக்குதுபாரு. ஏண்டா ஜனங்க மூடநம்பிக்கைய போக்குறதுல திராவிட கட்சிக்கு பெரிய பங்கு உண்டு. அந்த வகைல
உன் கட்சியும் திராவிட கழகத்துல சேர்ந்ததுதான் அப்படி இருக்க உன் பேருக்கு
முன்னாடி விஜய நகர பேரரசர் மாதிரி "விஜய"ன்ற வார்த்தைய சேத்துகிட்டா என்ன
அர்த்தம் பாடையில போகறதுக்கு பத்து வருசந்தான் இருக்கு இந்த பேர மாத்துனா
இருவது வருசமா மாறிட போகுதா. ஏண்டா கல்லு விக்கறவன், கடப்பாறைய வச்சி
வீட்ட நோண்டறவன் கிளி, எலி ஜோசியம் பாக்கறவன், இவனுக்கு உனக்கும் என்ன வித்தியாசம்??
டீ.ஆர்: கடந்த மக்களவை தேர்தல் நடந்தப்ப பிரதமரா வாஜ்பாயி வருவாரா இல்ல
சோனியா வருவாங்களான்னு எல்லாரும் மண்டைய பிச்சிகிட்டாங்க அப்ப நான்
சொன்னேன் ரெண்டு பேருமே வர மாட்டாங்கன்னு, எதிர்பார்க்காத யாரோ ஒரு
மன்மோகன்சிங் பிரதமரா வந்தாரா இல்லையா அது மாதிரி டீ.ராஜேந்தர்னு இருந்த
என் பேர்ல "விஜய" வார்த்தைய சேத்துகிட்டா தமிழ்நாட்டு முதலமைச்சர்
ஆயிடுவேன்னு மனசுக்குள்ள கவுளி கத்துச்சி. யாருக்கு தெரியும் அந்த வெண்தாடி
வந்த மாதிரி இந்த கருந்தாடி நாளைக்கு முதலமைச்சராக கூட வர வாய்ப்பிருக்கு.
கவுண்டர்: அது கனவுல கூட நடக்காது மேன். தமிழ்நாட்டு ஜனங்க ஒண்ணும்
முட்டாள் இல்ல. அது இருக்கட்டும் உன் பையனுக்கு யார்றா லிட்டில் சூப்பர் ஸ்டார்னு
பட்டம் குடுத்தது?
டீ.ஆர்: அது நாந்தாங்க குடுத்தேன். சின்ன வயசில கை கால விசுக்கு விசுக்குனு
ஆட்டுவானா அதுனால நானே அவனுக்கு பேர் வெச்சிட்டங்க. ஆனா பாருங்க
அவன் தமிழ்நாட்டையே கலக்கிடு இருக்கான். அடுத்த என் பையனுக்கு டுங்கிள்
டுங்கிள் சூப்பர் ஸ்டார்னு வெச்சிருக்கேனுங்னா அவனும் பெரிய ஆளா வருவான்.
கவுண்டர்: என்னமோ நாடார் கடையில முட்டாய் வாங்கி குடுத்த மாதிரி
சொல்றயேடா பட்டம்ங்றது மக்களா பாத்து குடுக்கறது. நீங்களா வச்சிக்கறதுக்கு
பேரு முடிச்சவிக்கத்தனம். ஏண்டா புல்டோசர் தலையா உங்குடும்பத்துல இத்தன
பேரு நடிக்கறது பத்தாதா? இன்னும் ஒரு பையன இட்டாந்து என்ன பண்ண போற.
மக்கள் பாவம் இல்ல. ஒண்ணாம் நம்பர் பொறுக்கி உன் பையன். இன்னொருத்தன்
எப்படி வரப்போறானோ தெரில.
டீ.ஆர்: அவனும் என்னை மாதிரியே எல்லா திறமையும் இருக்கற ஆளா
சினிமாவில ஜொளிப்பானுங்னா அது நிச்சயம்.
கவுண்டர்: கிழிப்பான் சரி, நீ மனுதாக்கல் பண்ண போகும்போது உங்கிட்டருந்து
பத்தாயிரம் ரூபாயை எவனோ களவாடிட்டு போயிட்டானாமே, சினிமாலதான் உன் வீரமெல்லாம். நிஜத்துல பாத்தியா ஒரு ப்ளடி பிக்பாக்கெட் உன்னை ஏமாத்திட்டான்.
இதுக்கு என்ன மேன் சொல்ற நீ?
டீ.ஆர்: அண்ணே அது எதிர்க்கட்சியோட சதி. நான் நின்னா ஜெயிச்சிடுவேன்னு
அப்படி பண்ணிட்டாங்க.
கவுண்டர்: நின்னா டெபாசிட்டே கிடைக்காதுன்னா பேச்சு மட்டும் டன் கணக்குல
பேசு. இன்னும் உன் குடும்பத்துல இண்டு இடுக்கு, சந்து பொந்துலருந்து எல்லாரையும்
கூட்டி சினிமால விட்டு தமிழ் மக்கள சாகடி. நான் என்ன சொன்னாலும் திருந்த
போறதில்ல. ஆனா இன்னொரு படம் மட்டும் நீ நடிச்சேன்னு தெரிஞ்சுது மகனே
அடுப்புக்குள்ள உன் தலைய விடு கருக்கிபுடுவேன் ஜாக்கிரதை.
பேட்டி முடிஞ்சி போச்சு அப்படியே திரும்பி பாக்காம ஓடிப்போயிடு.
எல்லையற்ற அன்பு கொள்வோம்
Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts
Wednesday, March 14, 2007
Monday, March 12, 2007
டெவில் ஷோ - கவுண்டர், டீ.ஆர்.
கவுண்டமணி, விஜய டீ.ராஜேந்தர் பங்கு பெறும் டெவில் ஷோ.
டெவில் ஷோவுக்கு வர அனைத்து நடிகர், நடிகைகளும் பயந்து கொண்டிருக்கும்
வேளையில் அதை அறிந்த டீ.ஆர் தான் அதில் கலந்துகொண்டால் வீராச்சாமிக்கு
இலவசமாக பப்ளிசிட்டி கிடைக்கும் என்ற நப்பாசையில் கவுண்டருக்கு போனை
போடுகிறார்.
கவுண்டரின் போன் அலறுகிறது.
இந்த போன எடுத்தா நச்சு நச்சுன்னு இவனுங்க தொல்ல தாங்கமுடியலப்பா! எந்த
பன்னிக்குட்டி ராமசாமி லைன்ல இருக்கானோ என்று
கவுண்டர்: ஹலோ
டீ.ஆர்: "தூங்கும்போது ஆட்டணும்டா காலு காலு
இல்லாட்டி விடிஞ்சிபுட்டா ஊத்திடுவான் பாலு பாலு"
கவுண்டர்: டேய் யார்ரா நீ பேர கேட்டா ஊள உடற? மரியாதையா பேர சொல்லு
இல்லாட்டி படுவா படுக்க பேன் பாத்துபுடுவேன்.
டீ.ஆர்: அழகுக்கு ஒரு அரவிந்தசாமின்னா வீரத்துக்கு இந்த வீராச்சாமி வெற்றிகரமா
ஓடிட்டு இருக்கற வீராச்சாமி ஹீரோ சார். டெவில் ஷோல என்னையும் சேத்துக்குங்க சார்.
கவுண்டர்: ஆஹா ஏழரை போன் பண்ணி அப்பாயிண்ட்மெண்ட் கேக்குதே, இத
சேக்கலாமா வேணாமா என்று கலவரமாகிறார். நம்ம திரையுலக வாழ்க்கைல இவன
மாதிரி எத்தனை பேர பாத்திருப்போம். வா மகனே இன்னிக்கு உனக்கு மொத்தமா
கஞ்சி ஊத்தறேன். உடனே கெளம்பி வா.
டேய் பசங்களா செட் ரெடி பண்ணுங்க, லைட்டு ஆன் பண்ணுங்க ஒரு வெயிட்டான
பார்ட்டி வந்துகிட்டு இருக்கு.
டேய் இங்க இருந்த ஆடியன்ஸ் எங்கடா ஒருத்தனையும் காணும். யாருமே இல்லன்னா
ரொம்ப கேவலமா போயிடுமே. எவனாச்சும் நாலு பேரை கூப்பிடுங்கடா...
சார் நீங்க போன் பேசிட்டு இருக்கும்போதே இன்னிக்கு யார் இன்னிக்கு கெஸ்ட்னு
தெரிஞ்சி போச்சு அப்பவே எல்லாரும் எகிறி குதிச்சி ஓடி போயிட்டாங்க சார்.
அப்ப நான் தனியா மாட்டிகிட்டனா... என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே
வாசலில் ஒரு கூட்டம் முண்டியடித்துக்கொண்டு வருகிறது.
வீராசாமிக்கு ஜே....
வீராசாமிக்கு ஜே....
வீராசாமிக்கு ஜே....
என்ற வீராசாமியின் தீம் பாடலை பாடியபடி வருகிறார்கள். நடுவில் டீ.ஆர் மஞ்சல்
கலர் பேண்ட் நீலக்கலருடன் கிளிப்பச்சை பார்டர் வைத்த சட்டை அணிந்துகொண்டு
வருகிறார்.
கவுண்டர்: டேய் நில்லுங்கடா எல்லாரும், இங்க என்ன கட்சி மீட்டிங்கா நடக்குது பூரா
பேரும் அப்படியே ஓடிப்போயிடுங்க இந்தாள உள்ள விட்டதே பெரிய விஷயம் இதுல பிரியாணிகூட்டத்த பின்னாடியே கூட்டிட்டு வர்றியா. ஆல் புரொக்ராம் கேன்சல்.
தொண்டர்: எங்க தலைவர பேட்டி எடுக்கலன்னா இங்கயே எல்லாரும் தீக்குளிப்போம்..
கவுண்டர்: எவண்டா அவன் சவுண்டு உடறது?? பாக்கெட்ல டீ குடிக்க காசு இருக்கான்னு
செக் பண்ணுடா டீ கிளாசுக்கு பொறந்தவனே. இந்த பிட்டலாம் வேற எங்கயாச்சும்
போடு இங்க வேணாம் ஒழுங்க எல்லாரு ஓடி போயிருங்க.
யோவ் டீ.ஆரு அங்க என்னயா தாடிய சொறிஞ்சிகிட்டு இருக்க ஒழுங்க இவனுங்கள
வெளில போக சொல்லு.. இல்லன்னா அப்படியே நீயும் ஓடிப்போயிடு.
"அவங்க எல்லாம் என் தொண்டர் படை
போடாதிங்க நீங்க தடை
எனக்கு பிடிச்சது ஆமை வடை."
இவன விட்டா இப்படியே பேசி சாகடிச்சிடுவான் சட்டு புட்டுனு பேட்டிய எடுத்து இவன பேக்கப் பண்ணி அனுப்பிடணும் இல்லாட்டி அடுக்கு மொழி வசனம் பேசி எல்லாரையும் சாகடிச்சிடுவான்.
பேட்டி ஆரம்பமாகிறது.
கவுண்டர்: இப்ப தமிழ்ல என்ன ஹீரோவுக்கு பஞ்சம் வந்துடுச்சின்னு நீ இப்ப ஹீரோவ
வேசம் கட்டுன பாவம் மக்கள் பயந்துட மாட்டாங்களா?
டீ.ஆர்: சார் இன்னி வரைக்கும் நான் ஹீரோயின தொட்டு நடிச்சதில்ல, ரஜினிய விட
பத்து வயசு கம்மி கமல விட எட்டு வயசு கம்மி, விஜயகாந்த விட பத்து வயசு கம்மி ஏன் அவங்கல்லாம் நடிக்குறாங்க நான் நடிக்க கூடாதா?
கவுண்டர்: ஏண்டா தாடிக்கும் தலைக்கும் வித்தியாசம் தெரியாதவனே, அவங்க
நடிக்கறாங்கன்னா பாக்கறதுக்கு நிறைய பேர் இருக்காங்க நடிக்கறாங்க, நீ நடிச்சா உன்
பையனே கூட பாக்க மாட்டானே. அப்புறம் எதுக்கு நடிக்கற?
டீ.ஆர்: எனக்கும் ரசிகர் மன்றம் இருக்கு, என்னை ரசிக்கறவங்களுக்காக நான் படம் எடுக்கறேன். ஒரு படைப்பாளிக்கு சுதந்திரமே இல்லாம போச்சே. என்னை கலைஞனா
பாருங்க, இளைஞனா பாக்காதிங்க
கவுண்டர்: சரி விடு பொருத்துக்குவோம். புதுசா ஏதாச்சும் கதை சொல்லுவேன்னு
பாத்தா அதே பழைய தங்கச்சி, அம்மா செண்டிமெண்ட், நான் தெரியாமத்தான்
கேக்கறேன் உன் எல்லா படத்துலயும் உன் தங்கச்சி ஏண்டா உனக்கு பிடிக்காத ஒருத்தன
லவ் பண்றா?
உடனே கலையாத தலையை வேணுமின்னே சிலுப்பி கோதி விடுகிறார், சொடக்கு
போட்டவாறே
டீ.ஆர்: என் தங்கச்சி , பாசமுள்ள தங்கச்சி வேலிதாண்டி போகும்போது பாசக்கார
அண்ணன் தடுக்காம பின்ன முறுக்கு தின்னுகிட்டு இருப்பானா? சொல்லுங்க சார்.
கவுண்டர்: ஏன் எங்களுக்கு ஏமாத்திட்டு ஓடிப்போற தங்கச்சி, உனக்கு மட்டும் பாசமுள்ள தங்கச்சியா? எல்லாருக்கும் ஒரே மாதிரிதாண்டா தங்கச்சியிம். ஓவர் செண்டிமெண்ட் போட்டு உசுர வாங்கிரியேடா அஞ்சு ரூவா காயின் மண்டையா!
சரி ஒரே ஒரு கொஸ்டின் கேட்டுக்கிறேன். (கண்களில் கண்ணீருடன் கவுண்டமணி).
அந்த படத்துல ஒரு பாட்டு வருதே "வச்சிருக்கேன் நான் வச்சிருக்கேன்" னு ஒரு
பாட்டுல ஹீரோயின தொட மாட்டேன்னு மத்தபடி எல்லா வேலையும் செஞ்சுபுட்ட அதுவுமில்லாம சாதாரணமாவே நீ பிக்காரி மாதிரி இருப்ப இதுல லுங்கிய மடிச்சி
கட்டிகிட்டு மும்தாஜுக்கு சமமா கவர்ச்சி காமிக்கற. ஏன் இதெல்லாம்? தமிழ்நாடு
தாங்காதுடா..
டீ.ஆர்: சார் ரஜினியவிட பத்து வயசு கம்மி, கமலவிட அஞ்சு வயசு கம்மி,
விஜயகாந்த விட 8 வயசு கம்மி அவங்கல்லாம் அறுபது வயசு வரைக்கும் நானும்
போடுவேன் கும்மி. அவங்க எல்லாம் டம்மி. உருவத்த பாக்காதிங்க எனக்கு அவங்கள
போல கர்வம் இல்ல.
கவுண்டர்: பக்கத்தில் இருந்த சொம்பை எடுத்து டீ.ஆர் தலையில் ஓங்கி அடிக்கிறார்.
நாய, நாய சொம்பு திருடறவன் மாதிரி இருந்துகிட்டு அவங்கள எல்லாம் நக்கல் விடுது
பாரு. எந்த கேள்விய கேட்டாலும் இதே பதில சொல்லிகிட்டு இருக்கே இந்த டாபரு.
என்ன மேன் நினைச்சிட்டு இருக்க அவங்கள எல்லாம் வம்புக்கு இழுத்த
ஸ்டுடியோவுக்கு உள்ளயே பூந்து உன்னய தூக்கிட்டு போயிடுவானுங்க.
கவுண்டர்: வீராச்சாமி படத்துல நீதான் அந்த ஏரியா தாதா, முன்னால் எம்.எல்.ஏ
அப்படி இருந்தும் மும்தாஜை தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணாம அப்படியே
பெரிய தியாகி மாதிரி ஹஸ்கி வாய்சுல வசனம் பேசிகிட்டு அனாதையா
விட்டுட்டியேய்யா பாவம்யா அந்த பன்னு ச்சி பொண்ணு.
டீ.ஆர்: சார் அந்த சீனுக்கு முந்தின சீன் வரைக்கும் மும்தாஜ் என்னைய லவ் பண்றது
எனக்கு தெரியாது. தெரிய வரும்போது அதைவிட சூப்பர் பிகர் ஒண்ணு கரெக்ட் ஆச்சு
அதனாலதான் அப்படியே டீல்ல விட்டுட்டேன்.
ஆடியன்ஸ் பக்கமிருந்து ஒரு குரல் கவுண்டரய்யா இண்டர்வெல் எல்லாம் கிடையாதா,
எங்க தலைவர் பதில் சொல்லி டயர்டா ஆயிட்டாரு.
டேய் மாங்கா கொட்ட மண்டையனுங்களா இன்னும் பேட்டியவே ஆரம்பிக்கல அதுக்குள்ள என்னடா இடைவேளை, இது என்ன சினிமா தியேட்டரா இடைவேளை விடறதுக்கு என்று சொல்லிவிட்டு திரும்ப அங்கே டீ.ஆரை காணவில்லை.
டேய் அடுக்குமொழி மண்டையா சீக்கிரம் வா உனக்கு ஆப்பு கொஸ்டின்ஸ் நிறைய இருக்கு.
நாளை தொடரும்..
டெவில் ஷோவுக்கு வர அனைத்து நடிகர், நடிகைகளும் பயந்து கொண்டிருக்கும்
வேளையில் அதை அறிந்த டீ.ஆர் தான் அதில் கலந்துகொண்டால் வீராச்சாமிக்கு
இலவசமாக பப்ளிசிட்டி கிடைக்கும் என்ற நப்பாசையில் கவுண்டருக்கு போனை
போடுகிறார்.
கவுண்டரின் போன் அலறுகிறது.
இந்த போன எடுத்தா நச்சு நச்சுன்னு இவனுங்க தொல்ல தாங்கமுடியலப்பா! எந்த
பன்னிக்குட்டி ராமசாமி லைன்ல இருக்கானோ என்று
கவுண்டர்: ஹலோ
டீ.ஆர்: "தூங்கும்போது ஆட்டணும்டா காலு காலு
இல்லாட்டி விடிஞ்சிபுட்டா ஊத்திடுவான் பாலு பாலு"
கவுண்டர்: டேய் யார்ரா நீ பேர கேட்டா ஊள உடற? மரியாதையா பேர சொல்லு
இல்லாட்டி படுவா படுக்க பேன் பாத்துபுடுவேன்.
டீ.ஆர்: அழகுக்கு ஒரு அரவிந்தசாமின்னா வீரத்துக்கு இந்த வீராச்சாமி வெற்றிகரமா
ஓடிட்டு இருக்கற வீராச்சாமி ஹீரோ சார். டெவில் ஷோல என்னையும் சேத்துக்குங்க சார்.
கவுண்டர்: ஆஹா ஏழரை போன் பண்ணி அப்பாயிண்ட்மெண்ட் கேக்குதே, இத
சேக்கலாமா வேணாமா என்று கலவரமாகிறார். நம்ம திரையுலக வாழ்க்கைல இவன
மாதிரி எத்தனை பேர பாத்திருப்போம். வா மகனே இன்னிக்கு உனக்கு மொத்தமா
கஞ்சி ஊத்தறேன். உடனே கெளம்பி வா.
டேய் பசங்களா செட் ரெடி பண்ணுங்க, லைட்டு ஆன் பண்ணுங்க ஒரு வெயிட்டான
பார்ட்டி வந்துகிட்டு இருக்கு.
டேய் இங்க இருந்த ஆடியன்ஸ் எங்கடா ஒருத்தனையும் காணும். யாருமே இல்லன்னா
ரொம்ப கேவலமா போயிடுமே. எவனாச்சும் நாலு பேரை கூப்பிடுங்கடா...
சார் நீங்க போன் பேசிட்டு இருக்கும்போதே இன்னிக்கு யார் இன்னிக்கு கெஸ்ட்னு
தெரிஞ்சி போச்சு அப்பவே எல்லாரும் எகிறி குதிச்சி ஓடி போயிட்டாங்க சார்.
அப்ப நான் தனியா மாட்டிகிட்டனா... என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே
வாசலில் ஒரு கூட்டம் முண்டியடித்துக்கொண்டு வருகிறது.
வீராசாமிக்கு ஜே....
வீராசாமிக்கு ஜே....
வீராசாமிக்கு ஜே....
என்ற வீராசாமியின் தீம் பாடலை பாடியபடி வருகிறார்கள். நடுவில் டீ.ஆர் மஞ்சல்
கலர் பேண்ட் நீலக்கலருடன் கிளிப்பச்சை பார்டர் வைத்த சட்டை அணிந்துகொண்டு
வருகிறார்.
கவுண்டர்: டேய் நில்லுங்கடா எல்லாரும், இங்க என்ன கட்சி மீட்டிங்கா நடக்குது பூரா
பேரும் அப்படியே ஓடிப்போயிடுங்க இந்தாள உள்ள விட்டதே பெரிய விஷயம் இதுல பிரியாணிகூட்டத்த பின்னாடியே கூட்டிட்டு வர்றியா. ஆல் புரொக்ராம் கேன்சல்.
தொண்டர்: எங்க தலைவர பேட்டி எடுக்கலன்னா இங்கயே எல்லாரும் தீக்குளிப்போம்..
கவுண்டர்: எவண்டா அவன் சவுண்டு உடறது?? பாக்கெட்ல டீ குடிக்க காசு இருக்கான்னு
செக் பண்ணுடா டீ கிளாசுக்கு பொறந்தவனே. இந்த பிட்டலாம் வேற எங்கயாச்சும்
போடு இங்க வேணாம் ஒழுங்க எல்லாரு ஓடி போயிருங்க.
யோவ் டீ.ஆரு அங்க என்னயா தாடிய சொறிஞ்சிகிட்டு இருக்க ஒழுங்க இவனுங்கள
வெளில போக சொல்லு.. இல்லன்னா அப்படியே நீயும் ஓடிப்போயிடு.
"அவங்க எல்லாம் என் தொண்டர் படை
போடாதிங்க நீங்க தடை
எனக்கு பிடிச்சது ஆமை வடை."
இவன விட்டா இப்படியே பேசி சாகடிச்சிடுவான் சட்டு புட்டுனு பேட்டிய எடுத்து இவன பேக்கப் பண்ணி அனுப்பிடணும் இல்லாட்டி அடுக்கு மொழி வசனம் பேசி எல்லாரையும் சாகடிச்சிடுவான்.
பேட்டி ஆரம்பமாகிறது.
கவுண்டர்: இப்ப தமிழ்ல என்ன ஹீரோவுக்கு பஞ்சம் வந்துடுச்சின்னு நீ இப்ப ஹீரோவ
வேசம் கட்டுன பாவம் மக்கள் பயந்துட மாட்டாங்களா?
டீ.ஆர்: சார் இன்னி வரைக்கும் நான் ஹீரோயின தொட்டு நடிச்சதில்ல, ரஜினிய விட
பத்து வயசு கம்மி கமல விட எட்டு வயசு கம்மி, விஜயகாந்த விட பத்து வயசு கம்மி ஏன் அவங்கல்லாம் நடிக்குறாங்க நான் நடிக்க கூடாதா?
கவுண்டர்: ஏண்டா தாடிக்கும் தலைக்கும் வித்தியாசம் தெரியாதவனே, அவங்க
நடிக்கறாங்கன்னா பாக்கறதுக்கு நிறைய பேர் இருக்காங்க நடிக்கறாங்க, நீ நடிச்சா உன்
பையனே கூட பாக்க மாட்டானே. அப்புறம் எதுக்கு நடிக்கற?
டீ.ஆர்: எனக்கும் ரசிகர் மன்றம் இருக்கு, என்னை ரசிக்கறவங்களுக்காக நான் படம் எடுக்கறேன். ஒரு படைப்பாளிக்கு சுதந்திரமே இல்லாம போச்சே. என்னை கலைஞனா
பாருங்க, இளைஞனா பாக்காதிங்க
கவுண்டர்: சரி விடு பொருத்துக்குவோம். புதுசா ஏதாச்சும் கதை சொல்லுவேன்னு
பாத்தா அதே பழைய தங்கச்சி, அம்மா செண்டிமெண்ட், நான் தெரியாமத்தான்
கேக்கறேன் உன் எல்லா படத்துலயும் உன் தங்கச்சி ஏண்டா உனக்கு பிடிக்காத ஒருத்தன
லவ் பண்றா?
உடனே கலையாத தலையை வேணுமின்னே சிலுப்பி கோதி விடுகிறார், சொடக்கு
போட்டவாறே
டீ.ஆர்: என் தங்கச்சி , பாசமுள்ள தங்கச்சி வேலிதாண்டி போகும்போது பாசக்கார
அண்ணன் தடுக்காம பின்ன முறுக்கு தின்னுகிட்டு இருப்பானா? சொல்லுங்க சார்.
கவுண்டர்: ஏன் எங்களுக்கு ஏமாத்திட்டு ஓடிப்போற தங்கச்சி, உனக்கு மட்டும் பாசமுள்ள தங்கச்சியா? எல்லாருக்கும் ஒரே மாதிரிதாண்டா தங்கச்சியிம். ஓவர் செண்டிமெண்ட் போட்டு உசுர வாங்கிரியேடா அஞ்சு ரூவா காயின் மண்டையா!
சரி ஒரே ஒரு கொஸ்டின் கேட்டுக்கிறேன். (கண்களில் கண்ணீருடன் கவுண்டமணி).
அந்த படத்துல ஒரு பாட்டு வருதே "வச்சிருக்கேன் நான் வச்சிருக்கேன்" னு ஒரு
பாட்டுல ஹீரோயின தொட மாட்டேன்னு மத்தபடி எல்லா வேலையும் செஞ்சுபுட்ட அதுவுமில்லாம சாதாரணமாவே நீ பிக்காரி மாதிரி இருப்ப இதுல லுங்கிய மடிச்சி
கட்டிகிட்டு மும்தாஜுக்கு சமமா கவர்ச்சி காமிக்கற. ஏன் இதெல்லாம்? தமிழ்நாடு
தாங்காதுடா..
டீ.ஆர்: சார் ரஜினியவிட பத்து வயசு கம்மி, கமலவிட அஞ்சு வயசு கம்மி,
விஜயகாந்த விட 8 வயசு கம்மி அவங்கல்லாம் அறுபது வயசு வரைக்கும் நானும்
போடுவேன் கும்மி. அவங்க எல்லாம் டம்மி. உருவத்த பாக்காதிங்க எனக்கு அவங்கள
போல கர்வம் இல்ல.
கவுண்டர்: பக்கத்தில் இருந்த சொம்பை எடுத்து டீ.ஆர் தலையில் ஓங்கி அடிக்கிறார்.
நாய, நாய சொம்பு திருடறவன் மாதிரி இருந்துகிட்டு அவங்கள எல்லாம் நக்கல் விடுது
பாரு. எந்த கேள்விய கேட்டாலும் இதே பதில சொல்லிகிட்டு இருக்கே இந்த டாபரு.
என்ன மேன் நினைச்சிட்டு இருக்க அவங்கள எல்லாம் வம்புக்கு இழுத்த
ஸ்டுடியோவுக்கு உள்ளயே பூந்து உன்னய தூக்கிட்டு போயிடுவானுங்க.
கவுண்டர்: வீராச்சாமி படத்துல நீதான் அந்த ஏரியா தாதா, முன்னால் எம்.எல்.ஏ
அப்படி இருந்தும் மும்தாஜை தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணாம அப்படியே
பெரிய தியாகி மாதிரி ஹஸ்கி வாய்சுல வசனம் பேசிகிட்டு அனாதையா
விட்டுட்டியேய்யா பாவம்யா அந்த பன்னு ச்சி பொண்ணு.
டீ.ஆர்: சார் அந்த சீனுக்கு முந்தின சீன் வரைக்கும் மும்தாஜ் என்னைய லவ் பண்றது
எனக்கு தெரியாது. தெரிய வரும்போது அதைவிட சூப்பர் பிகர் ஒண்ணு கரெக்ட் ஆச்சு
அதனாலதான் அப்படியே டீல்ல விட்டுட்டேன்.
ஆடியன்ஸ் பக்கமிருந்து ஒரு குரல் கவுண்டரய்யா இண்டர்வெல் எல்லாம் கிடையாதா,
எங்க தலைவர் பதில் சொல்லி டயர்டா ஆயிட்டாரு.
டேய் மாங்கா கொட்ட மண்டையனுங்களா இன்னும் பேட்டியவே ஆரம்பிக்கல அதுக்குள்ள என்னடா இடைவேளை, இது என்ன சினிமா தியேட்டரா இடைவேளை விடறதுக்கு என்று சொல்லிவிட்டு திரும்ப அங்கே டீ.ஆரை காணவில்லை.
டேய் அடுக்குமொழி மண்டையா சீக்கிரம் வா உனக்கு ஆப்பு கொஸ்டின்ஸ் நிறைய இருக்கு.
நாளை தொடரும்..
கந்துமணி, பென்ஸ் மாமா - க.க.க.போ
அன்று ஞாயிற்றுக்கிழமை________
வழக்கம்போல பென்ஸ் மாமா மற்ற உ.பா பிரியர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி ஏற்பாடுகளை தடபுடலாக கவனித்துக்கொண்டார். லண்டனில் செட்டில் ஆகிவிட்ட சென்னைத்தமிழரை சந்திப்பதாக ஏற்பாடு. தெரியாத்தனமாக பென்ஸ் மாமாவுக்கு
அவர் வரப்போகும் விஷயத்தை முன் கூட்டியே உளறி விட்டேன். அவரும் ட்யூட்டி
ப்ரீ ஷாப்பில் உ.பா வாங்கி வருமாரு நண்பருக்குஅன்புக் கட்டளையிட்டுவிட்டார்.
நண்பரும் சிரித்தபடியே வாங்கி வருவதாக உறுதியளித்து விட்டார். அந்த
சரக்குகளுக்கு உற்சவம்தான் இன்று.
மகாபலிபுரம் கடற்கரை சாலையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் சந்திப்பதாக
ஏற்கனவே முடிவு செய்திருந்தார்கள். பெரும்பாலும் இது போன்ற குடிமகன்களுக்கு
மத்தியில் கும்மி அடித்து பழகி விட்டதால் தவிர்க்க முடியவில்லை. பென்ஸ்
மாமா காலையிலேயே குளித்து முடித்து பட்டையடித்து வந்திருந்தார். இது
போன்ற மேட்டர்களுக்கு ஒரு அதீதமான ஆர்வம் காட்டுவது இவரின் வழக்கம். அதுவுமில்லாமல் வந்திருப்பது வெளிநாட்டு சரக்கல்லவா அதுதான் ,மனிதர்
நிகழ்ச்சி அமைப்பாளர் ரேஞ்சுக்கு அளப்பறை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
பூஜைக்கு காண்டிராக்டர் சுப்பிரமணியம், போலீஸ் உயரதிகாரி பெயர்
குரிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார் (கண்ணியமாம்),
வெளிநாட்டுக்கார் டீலரான சண்முகம், இன்கம்டாக்ஸ் அதிகாரி குலசேகரன்
ஆகியோர் வருவதாக பென்ஸ் மாமா முன்பே சொல்லியிருந்தார்.
சரியாக பத்து மணிக்கு கிளம்புவதாக ஏற்பாடு. என்னை ஏகத்திற்கும்
விரட்டிக் கொண்டிருந்தார் இதற்கிடையில் பங்சுவாலிட்டி அட்வைஸ்
வேறு. படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை மூடிவைத்துவிட்டு கிளம்பினேன்.
கண்ணியமான அந்த அதிகாரி பிக்கப் செய்து கொள்வதாக சொல்லி இருந்தார்
அதற்காக காத்திருக்கொம்போது எங்களை கடந்து இரு இளம்பெண்கள்
கடந்து சென்றனர்.
ஏம்பா கந்துமணி இப்போ போனாங்களே ரெண்டு பேரு, அவங்கள பாத்தியா?
பென்ஸ் மாமா கேட்டார்.
"பாத்தேனே"
எப்படி தோணுது?
எப்படி தோணுதுன்னு ஏன் எங்கிட்ட கேக்கறிங்க?
"அட, சும்மா சொல்லுப்பா"
"சரியா கவனிக்கலயே"
நம்மள கடந்து போன அந்த ரெண்டு செகண்ட்ல நான் கவனிச்ச
விஷயத்த சொல்றேன் கேளு.
போனவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சி ஆனா தாலியை
மறைச்சிருக்காங்க. இடப்பக்கம் போனாளே அவளுக்கு வயது 29 இருக்கலாம்
அவள் அணிந்திருந்த ஜீன்ஸ் இந்திய தயாரிப்பல்ல. தங்க நிறத்துல கேசம்
இருக்கறத பாத்தா மாதத்துக்கு இருமுறையாச்சும் அழகு நிலையத்துக்கு
போய் கலரிங் பண்ணிக்குவாங்க போலருக்கு. உனக்கு தெரியுமா? இரண்டு
வாரங்களுக்கு ஒருமுறை நகத்தை அழகுபடுத்தறதுக்கு மட்டுமே 200 ரூபாய்
செலவு பண்றாங்களாம் பொண்ணுங்க. அந்த மாதிரி அவள் நகத்தை ஒழுங்கு
படுத்தி நளினமா வெச்சிருக்கா. கல்யாணமாகி சுமார் ரெண்டு மூணு வருசம்
ஆகியிருக்கலாம். ஆனா இன்னும் குழந்தை பெத்துக்கல. ஏதாவது பன்னாட்டு
கம்பெனில வேலை செய்றவளா இருக்கலாம். அவள் போட்டிருக்கற செண்ட்
டெர்ரிக் உமன் அமெரிக்கதயாரிப்பு....
சொல்லிக்கொண்டே போனவரை கையமர்த்தினேன்.
எப்படிங்க இவ்வளவு நுணுக்கமா கவனிச்சிங்க?
"அதான் பென்ஸ் _______"
இரண்டு நொடிகள் கடந்து போனதுக்கே இவ்வளவு சொல்றாரு. அஞ்சு நிமிஷம்
பேசினா ஜாதகத்தையே புட்டு புட்டு வெச்சிடுவாரு போல. மனிதரின் கண்,
புத்திக்கூர்மையை நினைத்து வியந்து போனேன்.
இல்லையா பின்ன!
சொன்னவர்கள் சொன்ன நேரத்திற்கு வந்தார்கள் இது போன்ற விஷயங்களில்
நேரத்திற்கு வருவதில் வெள்ளையகளுக்கு சவால் விடுவார்கள் இவர்கள்.
ரிசப்ஷனிஸ்ட் பெண்ணிடம் வழிந்து கொண்டிருந்த மாமாவை இழுந்து வராத
குறையாக இழுத்து வந்தார் லண்டன் நண்பர். மிஸ்டர் கண்ணியம்
பிரிய மனமில்லாம திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே வந்தார்.
வீட்டில் மனைவி கைப்பட செய்த தூள் பக்கோடா, முந்திரிபருப்பு (நெய்யில்
வறுத்தது), மிளகு வடை, மசாலா பொரி ஆகியவற்றை கடைபரப்பி வைத்தார்
இது போன்ற சமயங்களில் கடைகளில் கிடைக்கும் கண்ட கண்ட சைட்
டிஷ்களில் டேஸ்ட் இருக்காது என்று வீட்டிலிருந்து எடுத்து வரும் பழக்கம்
உடையவர் திருவாளர் கண்ணியம். அவருடை மனைவிக்கும் வெளியில்
சாப்பிடுவது பிடிக்காதாம்.
பூஜையை ஆரம்பித்திருந்தனர். ஒயிட் ரம், ஸ்காட்ச் விஸ்கி, ப்ளாக் லேபிள்
ஸ்வியோன் ப்ளோங்க் போன்ற மதுவகைகளை உ.பா பிரியர்களுக்கு
"பரிசளிக்க" வாங்கி வந்திருந்தார்.
பென்ஸ் மாமாக்கு நாக்கில் எச்சில் ஊறியது போலும் பூஜையை உடனே
துவக்குமாறு காளைகளை முடுக்கி விட்டார். அவரவர் தத்தமது கோப்பைகளில் ஊற்றிக்கொண்டு உற்சாக உலகத்திற்கு செல்ல ஆயத்தமாயினர்.
நண்பரிடம் லண்டன் அனுபவங்களை சொல்லுமாறு வேண்டினேன்.
பொருளாதாரம், தமிழ்மக்களின் விருந்தோம்பல், என்று பேச்சு போனது
இடையில் பென்ஸ் மாமா தன் துறை சார்ந்த கேள்வியொன்றை வழக்கம்
போல வீசினார்.
லண்டனில் வளரும் தமிழ்ப்பெண்களின் கலாச்சாரம் எப்படிப்போகிறது?
உடை, நடை, எல்லாவற்றிலும் இந்தியத்தன்மை இருக்கிறதா
அல்லது அங்கேயே பிறந்து வளர்ந்ததால் மேற்கத்திய பாணி இருக்கிறதா?
லண்டனில் இருவகையான பெண்களை காணமுடியும், ஈழத்து தமிழ்ப் பெண்கள்,
தமிழ்நாட்டு தமிழ்ப்பெண்கள் அனைவருமே அங்கத்திய நாகரீகத்தில்தான் வாழவிரும்புகிறார்கள். சாதாரணமாக பெண்களை பப்களிலும், பார்களிலும்
காணலாம். சென்னையில் கூட பார்த்திருக்கிறேன்.
"எனக்குள் தோன்றியது சென்னையில் கூட வளர்ந்து விட்டதா"
என்னங்க ஒரே குழப்பமா இருக்கா?
"மேலே உள்ளது நான் எழுதினதுதான்"
ஆனால் நம்மிள் பலரும் பல வருடங்களாக இது போன்ற கட்டுரையினை
படித்திருக்கலாம். நான் கூட சிறுவயதில் இருந்தே படித்து வந்தேன்.
எங்கப்பா சொல்வாரு. டேய் உனக்கு படிப்புதான் ஏறமாட்டேங்குது அதனால
தினசரிகள படிக்குற பழக்கத்தை வளர்த்துக்கோ. அட்லீஸ்ட் நாட்டு நடப்பாச்சும்
தெரிஞ்சுக்க வசதியா இருக்கும்னு. அப்போதான் ஆரம்பிச்சது இத படிக்கும் பழக்கம். ஞாயிற்றுக்கிழமை இலவச இணைப்பாக வரும் அதில் நான் விரும்பி பார்ப்பது
குறுக்கெழுத்து போட்டிதான். நிரப்புவதில் இருக்கும் ஆர்வம் அனுப்புவதில்
இருந்ததில்லை.
இவங்க எங்கிட்டாச்சும் போய் கும்மாளம் அடிச்சுட்டு வருவாங்களாம் அதை
அப்படியே தைரியமா பத்திரிக்கையில வேற எழுதுவாங்களாம். இதுல பெரிய
பெரிய அதிகாரிங்களும், காவல்துறையை சேர்ந்தவங்களும், ரவுடிகளும் அருகருகே
அமர்ந்து அருந்துவாங்களாம்.
அட நாட்டுல எவந்தான் ஜாலியா இல்ல எல்லா உரிமையும் இருக்குதான். ஆனா
அதை ஏன் நாலு பேரு படிக்குற எடத்தில ஏன் எழுதறாங்கன்னு தெரில. வயதில்
சிறியவர்கள் படிச்சாங்கன்னா இது போனற செயல்கள் தவறே இல்லன்னு
முடிவுக்கு வந்துடுவாங்க.
பெரிய காமெடியே கேள்வி பதில்தான், அங்குட்டு கேக்குற கேள்வி
எதுவுமே விளங்குற கேள்வியா தெரியாது. படிக்க படு காமெடியா இருக்கும்.
"அந்த" மாதிரி சர்வே ஒண்ணு சொல்லுங்க சார்னு ஒரு கேள்வி கண்டிப்பா
இருக்கும். (எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு இந்த மாதிரி கேள்விய இவங்களே
கேட்டுக்கறாங்கன்னு)
சரி இப்ப எதுக்குடா இந்த மாதிரி கொசுவர்த்தி சுத்திட்டு இருக்கேன்னு கேக்கறிங்களா
ஏதோ தோணுச்சு எழுதறேன்.
காமெடி காமெடி காமெடி மட்டுமே!!
வழக்கம்போல பென்ஸ் மாமா மற்ற உ.பா பிரியர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி ஏற்பாடுகளை தடபுடலாக கவனித்துக்கொண்டார். லண்டனில் செட்டில் ஆகிவிட்ட சென்னைத்தமிழரை சந்திப்பதாக ஏற்பாடு. தெரியாத்தனமாக பென்ஸ் மாமாவுக்கு
அவர் வரப்போகும் விஷயத்தை முன் கூட்டியே உளறி விட்டேன். அவரும் ட்யூட்டி
ப்ரீ ஷாப்பில் உ.பா வாங்கி வருமாரு நண்பருக்குஅன்புக் கட்டளையிட்டுவிட்டார்.
நண்பரும் சிரித்தபடியே வாங்கி வருவதாக உறுதியளித்து விட்டார். அந்த
சரக்குகளுக்கு உற்சவம்தான் இன்று.
மகாபலிபுரம் கடற்கரை சாலையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் சந்திப்பதாக
ஏற்கனவே முடிவு செய்திருந்தார்கள். பெரும்பாலும் இது போன்ற குடிமகன்களுக்கு
மத்தியில் கும்மி அடித்து பழகி விட்டதால் தவிர்க்க முடியவில்லை. பென்ஸ்
மாமா காலையிலேயே குளித்து முடித்து பட்டையடித்து வந்திருந்தார். இது
போன்ற மேட்டர்களுக்கு ஒரு அதீதமான ஆர்வம் காட்டுவது இவரின் வழக்கம். அதுவுமில்லாமல் வந்திருப்பது வெளிநாட்டு சரக்கல்லவா அதுதான் ,மனிதர்
நிகழ்ச்சி அமைப்பாளர் ரேஞ்சுக்கு அளப்பறை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
பூஜைக்கு காண்டிராக்டர் சுப்பிரமணியம், போலீஸ் உயரதிகாரி பெயர்
குரிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார் (கண்ணியமாம்),
வெளிநாட்டுக்கார் டீலரான சண்முகம், இன்கம்டாக்ஸ் அதிகாரி குலசேகரன்
ஆகியோர் வருவதாக பென்ஸ் மாமா முன்பே சொல்லியிருந்தார்.
சரியாக பத்து மணிக்கு கிளம்புவதாக ஏற்பாடு. என்னை ஏகத்திற்கும்
விரட்டிக் கொண்டிருந்தார் இதற்கிடையில் பங்சுவாலிட்டி அட்வைஸ்
வேறு. படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை மூடிவைத்துவிட்டு கிளம்பினேன்.
கண்ணியமான அந்த அதிகாரி பிக்கப் செய்து கொள்வதாக சொல்லி இருந்தார்
அதற்காக காத்திருக்கொம்போது எங்களை கடந்து இரு இளம்பெண்கள்
கடந்து சென்றனர்.
ஏம்பா கந்துமணி இப்போ போனாங்களே ரெண்டு பேரு, அவங்கள பாத்தியா?
பென்ஸ் மாமா கேட்டார்.
"பாத்தேனே"
எப்படி தோணுது?
எப்படி தோணுதுன்னு ஏன் எங்கிட்ட கேக்கறிங்க?
"அட, சும்மா சொல்லுப்பா"
"சரியா கவனிக்கலயே"
நம்மள கடந்து போன அந்த ரெண்டு செகண்ட்ல நான் கவனிச்ச
விஷயத்த சொல்றேன் கேளு.
போனவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சி ஆனா தாலியை
மறைச்சிருக்காங்க. இடப்பக்கம் போனாளே அவளுக்கு வயது 29 இருக்கலாம்
அவள் அணிந்திருந்த ஜீன்ஸ் இந்திய தயாரிப்பல்ல. தங்க நிறத்துல கேசம்
இருக்கறத பாத்தா மாதத்துக்கு இருமுறையாச்சும் அழகு நிலையத்துக்கு
போய் கலரிங் பண்ணிக்குவாங்க போலருக்கு. உனக்கு தெரியுமா? இரண்டு
வாரங்களுக்கு ஒருமுறை நகத்தை அழகுபடுத்தறதுக்கு மட்டுமே 200 ரூபாய்
செலவு பண்றாங்களாம் பொண்ணுங்க. அந்த மாதிரி அவள் நகத்தை ஒழுங்கு
படுத்தி நளினமா வெச்சிருக்கா. கல்யாணமாகி சுமார் ரெண்டு மூணு வருசம்
ஆகியிருக்கலாம். ஆனா இன்னும் குழந்தை பெத்துக்கல. ஏதாவது பன்னாட்டு
கம்பெனில வேலை செய்றவளா இருக்கலாம். அவள் போட்டிருக்கற செண்ட்
டெர்ரிக் உமன் அமெரிக்கதயாரிப்பு....
சொல்லிக்கொண்டே போனவரை கையமர்த்தினேன்.
எப்படிங்க இவ்வளவு நுணுக்கமா கவனிச்சிங்க?
"அதான் பென்ஸ் _______"
இரண்டு நொடிகள் கடந்து போனதுக்கே இவ்வளவு சொல்றாரு. அஞ்சு நிமிஷம்
பேசினா ஜாதகத்தையே புட்டு புட்டு வெச்சிடுவாரு போல. மனிதரின் கண்,
புத்திக்கூர்மையை நினைத்து வியந்து போனேன்.
இல்லையா பின்ன!
சொன்னவர்கள் சொன்ன நேரத்திற்கு வந்தார்கள் இது போன்ற விஷயங்களில்
நேரத்திற்கு வருவதில் வெள்ளையகளுக்கு சவால் விடுவார்கள் இவர்கள்.
ரிசப்ஷனிஸ்ட் பெண்ணிடம் வழிந்து கொண்டிருந்த மாமாவை இழுந்து வராத
குறையாக இழுத்து வந்தார் லண்டன் நண்பர். மிஸ்டர் கண்ணியம்
பிரிய மனமில்லாம திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே வந்தார்.
வீட்டில் மனைவி கைப்பட செய்த தூள் பக்கோடா, முந்திரிபருப்பு (நெய்யில்
வறுத்தது), மிளகு வடை, மசாலா பொரி ஆகியவற்றை கடைபரப்பி வைத்தார்
இது போன்ற சமயங்களில் கடைகளில் கிடைக்கும் கண்ட கண்ட சைட்
டிஷ்களில் டேஸ்ட் இருக்காது என்று வீட்டிலிருந்து எடுத்து வரும் பழக்கம்
உடையவர் திருவாளர் கண்ணியம். அவருடை மனைவிக்கும் வெளியில்
சாப்பிடுவது பிடிக்காதாம்.
பூஜையை ஆரம்பித்திருந்தனர். ஒயிட் ரம், ஸ்காட்ச் விஸ்கி, ப்ளாக் லேபிள்
ஸ்வியோன் ப்ளோங்க் போன்ற மதுவகைகளை உ.பா பிரியர்களுக்கு
"பரிசளிக்க" வாங்கி வந்திருந்தார்.
பென்ஸ் மாமாக்கு நாக்கில் எச்சில் ஊறியது போலும் பூஜையை உடனே
துவக்குமாறு காளைகளை முடுக்கி விட்டார். அவரவர் தத்தமது கோப்பைகளில் ஊற்றிக்கொண்டு உற்சாக உலகத்திற்கு செல்ல ஆயத்தமாயினர்.
நண்பரிடம் லண்டன் அனுபவங்களை சொல்லுமாறு வேண்டினேன்.
பொருளாதாரம், தமிழ்மக்களின் விருந்தோம்பல், என்று பேச்சு போனது
இடையில் பென்ஸ் மாமா தன் துறை சார்ந்த கேள்வியொன்றை வழக்கம்
போல வீசினார்.
லண்டனில் வளரும் தமிழ்ப்பெண்களின் கலாச்சாரம் எப்படிப்போகிறது?
உடை, நடை, எல்லாவற்றிலும் இந்தியத்தன்மை இருக்கிறதா
அல்லது அங்கேயே பிறந்து வளர்ந்ததால் மேற்கத்திய பாணி இருக்கிறதா?
லண்டனில் இருவகையான பெண்களை காணமுடியும், ஈழத்து தமிழ்ப் பெண்கள்,
தமிழ்நாட்டு தமிழ்ப்பெண்கள் அனைவருமே அங்கத்திய நாகரீகத்தில்தான் வாழவிரும்புகிறார்கள். சாதாரணமாக பெண்களை பப்களிலும், பார்களிலும்
காணலாம். சென்னையில் கூட பார்த்திருக்கிறேன்.
"எனக்குள் தோன்றியது சென்னையில் கூட வளர்ந்து விட்டதா"
என்னங்க ஒரே குழப்பமா இருக்கா?
"மேலே உள்ளது நான் எழுதினதுதான்"
ஆனால் நம்மிள் பலரும் பல வருடங்களாக இது போன்ற கட்டுரையினை
படித்திருக்கலாம். நான் கூட சிறுவயதில் இருந்தே படித்து வந்தேன்.
எங்கப்பா சொல்வாரு. டேய் உனக்கு படிப்புதான் ஏறமாட்டேங்குது அதனால
தினசரிகள படிக்குற பழக்கத்தை வளர்த்துக்கோ. அட்லீஸ்ட் நாட்டு நடப்பாச்சும்
தெரிஞ்சுக்க வசதியா இருக்கும்னு. அப்போதான் ஆரம்பிச்சது இத படிக்கும் பழக்கம். ஞாயிற்றுக்கிழமை இலவச இணைப்பாக வரும் அதில் நான் விரும்பி பார்ப்பது
குறுக்கெழுத்து போட்டிதான். நிரப்புவதில் இருக்கும் ஆர்வம் அனுப்புவதில்
இருந்ததில்லை.
இவங்க எங்கிட்டாச்சும் போய் கும்மாளம் அடிச்சுட்டு வருவாங்களாம் அதை
அப்படியே தைரியமா பத்திரிக்கையில வேற எழுதுவாங்களாம். இதுல பெரிய
பெரிய அதிகாரிங்களும், காவல்துறையை சேர்ந்தவங்களும், ரவுடிகளும் அருகருகே
அமர்ந்து அருந்துவாங்களாம்.
அட நாட்டுல எவந்தான் ஜாலியா இல்ல எல்லா உரிமையும் இருக்குதான். ஆனா
அதை ஏன் நாலு பேரு படிக்குற எடத்தில ஏன் எழுதறாங்கன்னு தெரில. வயதில்
சிறியவர்கள் படிச்சாங்கன்னா இது போனற செயல்கள் தவறே இல்லன்னு
முடிவுக்கு வந்துடுவாங்க.
பெரிய காமெடியே கேள்வி பதில்தான், அங்குட்டு கேக்குற கேள்வி
எதுவுமே விளங்குற கேள்வியா தெரியாது. படிக்க படு காமெடியா இருக்கும்.
"அந்த" மாதிரி சர்வே ஒண்ணு சொல்லுங்க சார்னு ஒரு கேள்வி கண்டிப்பா
இருக்கும். (எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு இந்த மாதிரி கேள்விய இவங்களே
கேட்டுக்கறாங்கன்னு)
சரி இப்ப எதுக்குடா இந்த மாதிரி கொசுவர்த்தி சுத்திட்டு இருக்கேன்னு கேக்கறிங்களா
ஏதோ தோணுச்சு எழுதறேன்.
காமெடி காமெடி காமெடி மட்டுமே!!
Subscribe to:
Posts (Atom)
