எல்லையற்ற அன்பு கொள்வோம்

Wednesday, June 07, 2006

முதல் கவிதை

இது ஒரு சோதனை பதிவு தமிழ் யுனிகோட் எல்லாராலும் வாசிக்க முடிகிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டி இந்த பதிவை வெளியிடுகிறேன். ஆனாலும் இந்த வலையை ஒரு கவிதையோடு ஆரம்பிக்கிறேன்

முன் எப்போதுமில்லாமல் என் இதயம்
மிக வேகமாக படபடக்கிறது நீ என்னை
கடக்கும் போதெல்லாம்...

இந்த கவிதை உண்மையில் நான் உணர்ந்து அனுபவத்தில் எழுதிய கவிதை (இது கவிதையே இல்லை என்பது உங்கள் கருத்தாக இருந்தாலும் நான் இப்படித்தான் சொல்வேன்)

எந்த ஒரு இளைஞனுக்கும் இளமை பருவத்தில் காதல் வரும் அந்த கருமம் எனக்கும் வந்தது.(காதல் தொல்வி ஆச்சுன்னா கருமம்னு சொல்வாங்க இதே வெற்றின்னா ரொம்ப புனிதமானதுனு எழுதி இருப்பேனோ தெரியலை)

கதிர்
10.05.06

3 comments:

ரவி said...

தரமான பதிவுகள் பல படைக்க வாழ்த்துக்கள்

கதிர் said...

நன்றி செந்தழல் ரவி. தரமான பதிவுகள் எழுதுவதற்கு நிறைய ஆட்கள் இருக்காங்க. நம்மாள அது முடியாத காரியம். ஏதோ எனக்கு தெரிஞ்சத கிறுக்கறேன்.

ப்ரியன் said...

/*முன் எப்போதுமில்லாமல் என் இதயம்
மிக வேகமாக படபடக்கிறது நீ என்னை
கடக்கும் போதெல்லாம்...*/

இது நல்லா இருக்கு தம்பி கதிர்.இன்னும் நிறைய தாருங்கள்