எல்லையற்ற அன்பு கொள்வோம்

Showing posts with label வேதனை. Show all posts
Showing posts with label வேதனை. Show all posts

Tuesday, August 05, 2008

குசேலன், நாஞ்சில், Two Women

படம் பாத்துக்கொண்டிருக்கும்போதே பக்கத்தில் இருந்தவர் சொன்னார். "எவ்வளவு
செலவானாலும் பரவாயில்ல பீவாசுவ போட்டுத்தள்ளிரணும்டா" என்று.
வேறு படத்தின் ஷோக்கள் திரையிட்டு நேரமானதாலும் குசேலன் மட்டும்தான் பார்க்க
முடியும் என்ற நிலை. கூட வந்திருந்த மலையாளத்து பையன் படம் முடிந்ததும்
காறி துப்பினாலும் துப்பி விடுவான் என்ற பயத்தினால் நான் அறைக்கே திரும்பிட
நினைத்திருந்தேன்.

பசுபதி வெயில் என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார். இரண்டாவதாக
ஈ என்ற படத்தில் ஓரளவுக்கு நடித்திருப்பார் பிறகு மஜாவில் "ஸ்மார்ட் பாய்" என்று சொல்லும் இடங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் என்று சொல்ல முடியும். மற்ற
எல்லா படமும் குசேலன் மாதிரிதான்.

அரங்கில் நுழைந்தபோது எனக்கு முன்னரே நான்கு பேர் வந்துவிட்டிருந்தனர். பிறகு
எங்களைத்தவிர வேறு யாரும் வரவில்லை. இதற்கு முன்பு தொட்டி ஜெயா என்ற
படத்திற்கு நானும் என் நண்பனும் சென்றிருந்தபோது தியேட்டரில் ஒருவரும் இல்லை
எங்கள் இரண்டு பேருக்கு மட்டும் படத்தை ஓட்டினார்கள்.

வயதான காலத்தில் நயனின் இடைசுற்றி, உதடு வருடி, இடுப்பை ஆட்டி நடனம் ஆடும்
கோமாளித்தனமெல்லாம் சகிக்கவில்லை. பீவாசுவுக்கும் நடன இயக்குனருக்கும் மனித
வதை தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை தருமளவுக்கு ரஜினியை கொடுமைபடுத்தி
இருக்கிறார்கள்.

இந்த வசனத்தை மம்முட்டி பேசுவதுபோல் படித்தால் அந்த கேரள நண்பன் சொன்னது
புரியும்.

"ரஜினின்ற மலைய நம்பி இந்த படத்த எடுக்கலடா நயந்தாராவோட ----- நம்பிதான்
எடுத்துருக்காங்க. ஏண்டா நல்ல நல்ல படத்த எல்லாம் இப்டி நாசம் பண்ணி வைக்கறிங்க"

எலேய் மொக்க படம்லாம் எப்படி எடுக்கறதுன்னு கத்து தர்றதும் ஒரு கலைதான் இத
போய் குத்தம் சொல்லக்கூடாது.

கேரள சினிமாலயே இப்பலாம் மொக்கைப்படம் நிறைய வர ஆரம்பிச்சுடுச்சி. அதிசயமா
வர்ற கதையுள்ள சினிமாவயும் நம்மாளுங்க கார்ப்பரேஷன் கக்கூஸ் மாதிரி ரீமேக்
பண்ணி கெடுத்துடறாங்க.

கத பறயும் போள் "மாம்புள்ளிக் காவில் மகரந்த" பாட்டில் அந்த ஹீரோயின் இடுப்பு
நளினமாக ஆடி அற்புதமான கலை வடிவில் உள்ள பாடலை இங்கே பான்பராக்
வாயுடன் நடனமாடி கெடுத்துள்ளனர். நயன், ரஜினி க்ளோசப் காட்சிகளில் யாருக்கு
லிப்ஸ்டிக் அதிகம் என்று கண்டுபிடிப்பதில் பெரிய போட்டியே நடந்தது. திரையில்
ராமராஜனுக்கு அடுத்தபடியாக ரஜினி லிப்ஸ்டிக் கம் க்ளோசப் காட்சிகளில் ரசிகர்களை
அதிகம் கொடுமைப்படுத்தியவர் சூப்பர் ஸ்டார்தான்.

பின்னிருக்கை நண்பர் சொன்னதுதான் எவ்ளோ செலவானாலும் பரவாயில்ல பீவாசுவ...
இங்க ஒருத்தர் சொல்லிருக்கறத பாருங்க.

சீனிவாசன் என்ற படைப்பாளிக்கு தமிழ்சினிமா செய்த மிகப்பெரும் அவமானம் குசேலன்.

---

விகடனில் எழுதும் எழுத்தாளர்களின் கட்டுரைத்தொடரினை ஒவ்வொருவாரமும் எதிர்
பார்த்து கிடக்கவே கூடாது. எப்போது அதை தூக்குவார்கள் என்றே தெரியாது. அதேபோல
குமுதமும். உதாரணத்திற்கு ஓ பக்கங்கள், அகம் புறம் போன்ற கட்டுரைத்தொடர்.
கடந்த மூன்று வாரங்களான நாஞ்சிலாரின் தீதும் நன்றும் என்ற தொடர் வந்துகொண்டு
இருக்கிறது. சமூகத்தின் மீது கோபம் கொள்ளவைக்கும் கட்டுரைகள் நாஞ்சிலுடையவை.
பின்வரும் வாரங்கள் பல தளங்களில் வாசகர்களை இட்டுச்செல்வார் என்று நம்பலாம்.
குறிப்பாக நாஞ்சில் நாட்டு சமையல் முறை. ஏற்கனவே வஞ்சகமில்லாமல் சாப்பிடும்
பழக்கம் உள்ளவனாக இருந்தபோதும் நாஞ்சிலின் எழுத்துக்கள் உணவின்மீது காதலை
ஏற்படுத்திவிட்டது. இதைப் படித்தால் உங்களுக்கே புரியும்

---


உலகிலேயே அழகிய பெண்கள் உள்ள நாடு ஈரான் என்று எவரோ/எங்கோ சொல்லி
கேட்டதாக ஞாபகம். அழகிய பெண்களைக் கண்டால் மட்டுமே இந்த வாக்கியங்கள்
நினைவில் வந்துபோகும். நானும் இரானில் உள்ள தீவிற்கு நான்கைந்து முறை
சென்றிருந்தும் ஒருமுறைகூட பேரழகுடைய பெண்களை காணமுடியவில்லை. ஆனால்
ஒருமுறை ஷாப்பிங் மால் சென்றபோது நிறைய பெண்கள் அணி அணியாக வந்து
இருந்தனர். முக்கால்வாசிபேர் முகத்தை மூடி இருந்தனர். மிகச்சிலர் திறந்து விட்ட
முகத்துடன் வந்தனர். ஓரளவுக்கு உண்மையாகவே அழகானவர்கள்தான். குறிப்பாக
சிவப்புமல்லாத/மாநிறமும் அல்லாத ஒருவகை பால் நிறமேனி அவர்களுக்கு. கடும்
வெயில் அடித்த அந்த பருவத்தில் ஒருவருக்கு கூட வியர்க்கவில்லை. எனக்கோ
வியர்த்துக் கொட்டியது.

படத்தின் முதல் காட்சியாக தன் தோழி ரோயாவுக்கு தொலைபேசி மருத்துவமனைக்கு
வரவைத்து ஃப்ரெஸ்தா தன் கதையை சொல்ல ஆரம்பிக்கிறாள். நீண்டாநாள் பிரிந்த
தன் தோழியிடம் கதையை சொல்லிமுடிக்கும் கடைசி நிமிடத்தில் அவள் கணவன்
இறக்கிறான். பதினைந்து வருடங்கள் பிரிந்திருந்த தன் தோழியிடன் கதையை
சொல்வதுதான் two women படம்.

கடந்த வாரத்தில் two Women என்ற இரானியப் படம் பார்க்கையில் இந்த நினைவுகள்
மீண்டு வந்து நிழலாடியது. வகுப்பில் எத்தனைபேர் இருந்தாலும் நன்றாக படிக்கும்
மாணவர் ஒருவர் மட்டுமே இருக்கமுடியும். அப்படிப்பட்ட மாணவி ஃபெரஸ்தா
அவளுக்கு ஒரு தோழி பெயர் ரோயா. இருவரும் இணைபிரியா தோழிகள்.
எல்லா திறமையிலும் நிகரற்றவள் ஃபெரஸ்தா அவளை ஒருவன் காதலிக்கிறான்.
நன்றாக படித்து வேலைக்குச் சென்று தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற
லட்சியத்தில் டெஹ்ரானில் உள்ள தன் மாமாவின் வீட்டில் தங்கி படிக்கும் அவள்
அவனின் காதலை நிராகரிக்கிறாள். உலகத்தில் எந்த மூலைக்கு சென்றாலும் நானே
உன் கணவன் என்று சொல்லும் அவனை ஒரு சந்தர்ப்பத்தில் அவமானப்படுத்தி
பொதுமாத்து வாங்க வைக்கிறாள்.

வன்மம் கொண்ட அவன் பழிதீர்க்க சந்தர்ப்பம் தேடுகிறான். தன் மாமாவின் மகனுடன்
தெருவில் நடந்து செல்கையில் அவள் முகத்தில் ஆசிட் வீசுகிறான் அது அவள் மேல்
படாமல் அத்தை மகன்மீது படுகிறது. கோபம் கொண்ட உறவினர் படித்தது போதும்
நீ கிளம்பு என்று சொல்ல தன் மீது எந்த தவறுமில்லாமல் தன் படிப்பு வீணாகிப்போவதை
எண்ணி கண்ணீருடன் தன் ஊருக்கு பயணமாகிறாள் ஃப்ரெஸ்தா. அங்கும் வருகிறான்
அந்த ஒருதலைக்காதலன். அவளைத் துரத்தும்போது இருவரும் ஒரு விபத்தில் சிக்கி
காவல் நிலையம் செல்ல நேர்கிறது. அஹ்மத் என்பவரின் உதவியிடன் ஃப்ரெஸ்தா
மீது குற்றமில்லை எனவும் விபத்துக்கு காரணமான அந்த ஒருதலைக்காதலன் முகம்மத்
பதினான்கு வருடம் சிறை செல்கிறான். திரும்பி வந்து உனைக்கொல்வேன் என்று சொல்கிறான்.

பண உதவி செய்த அஹ்மத் அவளை திருமணம் செய்ய முன்வருகிறான் அவளுக்கோ
இஷ்டமில்லை. இருவீட்டாரும் இணைந்து பேசி அவளின் ஒப்புதல் இல்லாமல் மணம்
நடைபெறுகிறது. திருமணமான முதல் நாளில் இருந்து அவளின் மேல் சந்தேகம் தினம்
தினம் நரகவேதனை. பேசினால், நடந்தால், பார்த்தால் கூட குற்றம் என்கிறான்.

இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. அப்பொழுதும் தினம் சந்தேகம் பேச்சுகள் என்று
போகிறது. ஒருகட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். சிறைக்குச் சென்ற
முஹம்மத் அதே சமயத்தில் வெளிவருகிறான்.

கொலைசெய்ய துரத்தும் முகம்மதுவிடம் இருந்து தப்பி ஓடுகிறாள். ஒரு முட்டுசந்தில்
மாட்டி இனிமேல் ஓடமுடியாது என்று சொல்லி அங்கேயே திரும்பி உட்காருகிறாள்.
அவன் கொல்லவருகிறான்.

கடைசிவரை நான் எனக்காக வாழவில்லை. வாழவிடவுமில்லை. என் லட்சியங்கள்
இரண்டு ஆண்களின் முன்னால் அர்த்தமற்றுவிட்டது. இனிமேல் வாழ்வதில் எனக்கு
ஆசையில்லை என்னைக்கொன்றுவிடு என்று அழுகிறாள் ப்ரெஸ்தா. அதேசமயம்
பின்னால் வரும் ப்ரெஸ்தாவின் கணவன் முகம்மதுவுடன் தன் மனைவி கள்ள
உறவு வைத்துள்ளதான தன் சந்தேகம் உறுதிபட்ட்டது என நம்பி முகம்மதை கொல்ல
முயற்சிக்க அங்கே மாறாக ப்ரெஸ்தாவின் கணவனுக்கு கத்திக்குத்து விழுகிறது.

பெண்ணின் கனவுகள், உணர்வுகள் எப்படி சமூக நிர்பந்தங்களால் அழிக்கப்படுகின்றன
என்பதை ஓவியம்போல சொல்லியிருக்கிறார் இயக்குனர். முக்கியமாக பெண்களின்
உணர்வுகள் தெளிவாக பதிவாக்கியிருக்கிறார் ஏனென்றால் இயக்குனரும் பெண்தான்.
எழுத்தாளரான தஹ்மின் மிலனியின் நாவலை அவரே இயக்கிய இந்தப்படம் இஸ்லாம்
சமூக பெண்களுக்கு நேரும் பிரச்சினைகளை பெண்களுக்கே உண்டான மென்மையுடன்
சொல்லியிருக்கிறது.

Monday, July 28, 2008

சாருவின் தவறு

//Its more than 10 hours since you replied and I still see some others name.
Please make sure you give credits to the right person and respond properly.
Respond after the changes are done.//

மாத்த சொல்லி பத்து மணி நேரம் ஆகுது இன்னும் மாத்தாம இன்னும் என்னடா
புடுங்கிட்டு இருக்கற மாங்கா மண்டையா என்று கவுண்டமணி செந்திலுக்கு சொல்வது
போல அமைந்த இந்த பதில்தான் இத்தனை வாதத்திற்கும் காரணம்.

நண்பர் பாலாஜி சாட்டில் வந்து தன் பதிவு சாருவின் தளத்தில் வந்திருப்பதாக
சொன்னபோது உண்மையிலேயே மகிழ்ச்சி அடைந்தேன்.
(தனி உரையாடலை பொதுவில் வைப்பதற்கு மன்னிக்கவும்).
பாலாஜி கொடுத்த சுட்டியை பிடித்து சென்றபோது அங்கே வேறு பெயர் இருந்ததை
பார்த்து அப்பொழுதே பாலாஜியிடம் குறிப்பிட்டேன். சாருவுக்கு மடல் அனுப்புமாறு கூட சொன்னேன். பின்னர் நடந்தது சாருவின் தளத்திலும் பாலாஜியின் வலைப்பூவிலும் பார்த்துதான் எனக்கு விஷயமே தெரிந்தது. அதற்குள் கருத்துப் பெருந்தகையாளர்கள்
தங்கள் ஆதரவு நிலை அல்லது எதிர்ப்பு நிலையை அவசர அவசரமாக
பகிர்ந்துகொண்டார்கள். பகிர்ந்து கொண்டவர்களில் உண்மைநிலை அறியும்
ஆவல் துளிகூட இல்லாதது பின்னூட்டங்களை படித்தாலே புரிந்துகொள்ளமுடியும்.
எதாவது ஒரு கருத்தை முன்வைத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் போடப்பட்ட பின்னூட்ட்ங்களில் தெரிந்தது

என் வருத்தத்தின் உச்சகட்டம் என்பது வெட்டியின் பதிவில் பார்த்த அவரின்
எதிர்வினையில். இருந்தாலும் புரியாமையின் வெளிப்பாடு அதற்கு அத்தகைய
முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் அதைப்பற்றிய
அக்கறை எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் பாலாஜியின் கதைகளுக்கு
என்ன மாதிரியான பின்னூட்டம் வருமோ அதேபோன்ற பின்னூட்டங்கள் அதிகமாக
வரும்போது பிரச்சினை வேறு திசை நோக்கி செல்வதை உணரமுடிந்தது. குறைந்தபட்ச பண்புகள் கூட இல்லாது எழுதப்பட்ட ஒரு பதிவிற்கு மக்களின் உணர்ச்சிகர
ஆதரவுநிலை என்பதனை ஏனோ யாருமே உணரவில்லை.

//இவருக்கு ஒரு கோ-ஆர்டிநேட்டர் இருப்பாரு. அவர் தான் இந்த மாற்றங்கள் எல்லாம் செய்வாருனு எனக்கு எப்படிங்க தெரியும்? அதை அவர் முதல் மெயில்லயே I will ask my co-ordinator to do the necessary Changeனு சொல்லியிருந்தா நான் அமைதியா இருந்திருப்பேன். இதுல யாரோட மெயில்ல சுடுசொல் இருக்குனு நீங்க சொல்லுங்க? அப்படி இருந்தும் நான் அவருக்கு அடுத்த 6 நிமிஷத்துல அனுப்பன மெயில்//

இந்த பதிலை பாலாஜியே நிதானமாக படித்துவிட்டு பார்க்கலாம். கவுண்டமணி
செந்திலுக்கு சொல்லும் பதில்தான் இதில் அடங்கியுள்ளது. வேறு வித்தியாசம் எதாவது உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? எதிர்வினை அல்லது தன்னிலை விளக்கப்பதிவு
இவ்வளவு மட்டமான முறையில் எங்காவது நீங்கள் படித்திருக்கிறீர்களா? அதுவும் குறிப்பிடத்தகுந்த படைப்பாளிக்கு எதிராக? இதே மாதிரியா அவர் உங்களுக்கு பதில்
அளித்தார்? தொழில்முறை எழுத்தாளர் கம்பியூட்டர் கைநாட்டாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. (உண்மையில் அவர் ஒரு பிச்சைக்காரனாகத்தான் இருக்க வேண்டும்)
ஒரு அறிமுகமில்லாத பதிவரின் பதிவு பிடித்துப் போய்தான் அதை மேற்கோள் காட்டினார். அதில் எதோ குழப்பம் வந்து விட்டது. அந்தக்குழப்பத்தை சரி செய்ய பத்துமணி நேரம் கடந்தும் ஏன் மாற்றவில்லை என்று கேள்வி கேட்பது எந்த விதத்தில் அய்யா நியாயம்? சாருவின் தளத்தில் மாற்றங்களை தங்கவேல் என்பவர்தான் செய்து வருகிறார் அதற்கு காலதாமதம் ஏற்படுவது வழக்கம்தான் என பின்னூட்டத்தில் ஒருவரும் சொல்லவில்லை. மேலும் சாரு என்பவர் பலருக்கு புதிதான ஒரு பதிவர்! என் உதவியாளருக்கு சொல்லியிருக்கிறேன், அவர் மாற்றுவார் அதற்கு 24 மணி நேரம் ஆகும் என்றெல்லாம் ஒருவரால் நிச்சயமாக பதில் அளிக்க முடியாது. அதற்கு நேரமும் இருக்காது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

நண்பர் வெட்டிக்கு சொல்வது இதுதான்.

உங்களின் இரண்டாவது மடலின் சாரம் நிர்வாக ஆதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு.

அது நீங்கள் அறியாமலே வெளிப்பட்ட மொழி. முதிர்ந்த எழுத்தாளரின் முன் அந்த
சொற்கள் விளைவித்த பொருளை இதற்கு மேலும் விளக்க முடியாது.நிதானமாக
ஒவ்வொரு வரியாக படித்துப்பாருங்கள். இதைவிட வேறு மொழியில் உங்கள்
உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கலாம் என்பது என் வாதம்.

//பயமெல்லாம் இல்லை. சண்டை போட விருப்பமில்லை. நேரமுமில்லை..//

இந்த வரிகளை படிக்கும்போதெல்லாம் மனதுக்கு மிக வருத்தமாக இருந்தது. ஒரு
உண்மை நிலையை யாருமே புரிந்துகொள்ளாமல் இப்படி பயம்/ சண்டை போன்ற வார்த்தைகள் உபயோகிப்பது எல்லாம் அவசியமில்லாதது. மேலும் சாருநிவேதிதா
என்ற எழுத்தாளரை தெருச்சண்டைக்கு இழுப்பதுபோல இருக்கும் இந்த வரிகளை
படித்தும் மேலும் பரவசமடையும் கூட்டத்திற்கு என்ன சொல்வது?

அய்யா பின்னூட்ட கருத்து கந்தசாமிகளே! முதலில் கண்டனத்தை பதிவு செய்ய அலைந்துகொண்டே இருப்பீர்களா? இதில் என்ன ஆகப்பெரிய அநியாயம் நடந்து விட்டது
என கண்டனத்தை பதிவு செய்கிறேன் என்று முழக்கமிடுகிறீர்கள்?

எதாவது ஒரு நிலை எடுத்தாகவில்லையென்று எந்த கட்டாயமுமில்லை. கண்டனத்தை
பதிவு செய்கிறேன் என்று சொற்களை வீணாக்காதீர்கள். இப்போதெல்லாம் இந்த ஆதரவு/ எதிர்ப்பு நிலைகளை பதிவிக்கவில்லை என்றால் குடிமூழ்கிப்போய்விடுமாம். தயவுசெய்து
இந்த பதிவையும் உங்கள் மூளை அப்படி எண்ணாதிருக்கட்டும்.

தமிழ் எழுத்துத் தளத்தில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளரை
இதைவிட வேறு எவராலும் அசிங்கப்படுத்த முடியாது. சாரு ஒரு கலகக்காரன்/ ஸ்திரிலோலன்/ வாசகர்களிடம் பிச்சை எடுப்பவன்/ தண்ணியடிப்பவன் இதுதான்
அங்கே பிரதானமாக பேசப்படுகிறது. பத்து மணி நேரத்தில் ஏன் இன்னும் மாற்றம் செய்யவில்லை? இதற்கு ஒரு நினைவுறுத்தும் மடல் அதற்கு ஒரு பதிவு அதற்கு
இத்தனை உணர்ச்சிகர பின்னூட்டங்கள் என நீண்டுகொண்டே இருக்கிறது.
உண்மையில் சாருதான் இந்த விஷயத்தில் பரிதாபத்துக்கு உரியவர்.

இந்தப் பின்னூட்டங்களை படிக்கையில் நம் சினிமாவில் ஊழலுக்கு எதிராக நாயகனுக்கு ஆதரவாக டீவி சேனல்களின் மைக்குகளின் முன்னால் ஆவேசமாக குழாயடியிலும்/ ரோட்டோரம் போகும் வருபவரிடமும் பெறப்படும் டெம்ப்ளேட் குரல்களாகத்தான் இருக்கின்றன. யாரும் எவரையும் தவறான புரிதலுக்கு காரணம் என்ன என்றும்
அதைநோக்கி விவாதம் செய்யும் முனைப்பும் எதுவுமே இல்லை. எதோ கொலை
ஒன்று நிகழ்ந்து விட்டதுபோலவும் அதை நேரில் கண்ட சாட்சிகள் போலவும் குற்றவாளிக்கூண்டிலே நிற்கவைத்து இவர்களே பேசவும் செய்கிறார்கள்.

ஒரு ஆகப்பெரிய எழுத்தாளர் ஒருவர்/ யார் என்றே தெரியாமல் எந்த உள்நோக்கமும் இல்லாமல் எவரோ எழுதிய பதிவை பிடித்தது என்ற ஒரே காரணத்துக்காக பல ஆயிரம்
பேர் படிக்கும் தனது தளத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். எந்தவித சுயநோக்கமும்
இல்லாமல் அவர் பகிர்ந்தது எவ்வளவு உண்மையோ அதே அளவு இதனை யார்
எழுதியது என்று தெரியாது வெளியிட்டதும் உண்மை. இடையில் நடந்த
சிறுகுழப்பத்துக்கு இத்தனை பெரிய அவமரியாதை செய்வது எத்தனை
அசிங்கமானது?

பாஸ்டன் பாலா என்பவர் மீது எனக்கு பெரும் மதிப்பு இருந்தது. அவரைக்கண்டு
பலசமயத்தில் வியந்திருகிறேன். கீழ்க்கண்ட அவரின் பின்னூட்டம் படித்தவுடன் அருவருப்புதான் உண்டாகியது.

//சாருவிற்கு தமிழ்ப்பதிவுகளை தன் பக்கம் திசை திருப்பிக் கொள்ள இன்னொரு யுக்தி?

அடுத்த கட்டத்துக்கு போயிருக்கீங்க :)//

இத்தகைய மலினமாக சிந்திக்கும் ஒருவரை இவ்வளவு நாளாக என் ஆதர்சமாக நினைத்திருந்ததை நினைத்து வெட்கப்படுகிறேன்.

கிளிப்பிள்ளைக்கு விளக்கம் கொடுப்பதுபோல இத்தனை பேர் வரிந்துகட்டிக்கொண்டு
பதில் எழுதியிருக்கும் அத்தனை பெருந்தகையாளர்களுக்கும் ஒரே விஷயம்
கேட்கவேண்டும் பாலாஜியை முன்னிறுத்தி எதாவது பிரச்சினை செய்தால் தான்
பெரியாளாகி இந்த பெரிய்ய்ய தமிழ்வலைப்பதிவுலகின் திசையையே தன்பக்கம்
திருப்பி தன்வசம் வைத்துக்கொள்ளத்தான் இதை செய்தார் என்று சொல்ல முடியுமா?

இந்த வாதங்களெல்லாம் ஊனமுற்றவனை திட்டுவது போல அமைந்துள்ளது.
சரிதான் தமிழ்ச்சூழலில் எழுத்தாளன் என்பவனே ஊனமுற்றவன் தானே! தவிர
தொழில்நுட்ப அறிவு வாய்க்கப்பெறாத சாரு ஊனமுற்றவர் இந்த விஷயத்தில்.
மாறாக பத்துமணி நேரத்திலும் ஏன் மாற்றம் செய்யவில்லை என்று கேள்வி கேட்கலாம்.
வார இதழில் கூட தவறான செய்திகளுக்கு அடுத்த வாரத்தில்தான் மன்னிப்பு
கேட்கிறார்கள். இங்கே நம்மாள் 10 மணி நேரம் கூட பொறுக்க முடியாது.
ஏனென்றால் கிரெடிட் எல்லாம் வேறு ஒருவருக்கு போய்விடும். அப்படி போய்விட்டால்
அடுத்த வேலை உலைகொதிப்பது பெரும்பாடாகிவிடும். ஒருநாளோ இரண்டு நாளோ
கெடு கொடுத்தெல்லாம் நமக்கு பழக்கமில்லை.

டிபிசிடி மட்டுமே வார்த்தைகளை இப்படியும் புரிந்துகொள்ளலாம் என்பதை
சொன்னவர். அவராவது சொன்னாரே என்று மகிழ்ச்சி அடைகிறேன். மேலும்
“இப்படியும்” (இப்படித்தான்) புரிந்துகொள்ள முடிகிற வார்த்தைகளின் கோர்வைதான் பாலாஜியின் மடல். இதை அவர் உணர்ந்து எழுதியிருப்பார் என்று நிச்சயமாக
நம்பவில்லை. அவரின் அலுவலக/வாழ்க்கை சூழ்நிலை அப்படி அமைந்தது
இப்படியாக மடல் எழுதி இப்படியாக பதில் பெற்று வந்தவரின் வழியில் திடிரென
இந்த மொழி/வார்த்தைகள் தவறான அணுகுமுறையைத் தரும் என்று சொல்வது என்னாலும்கூட ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றுதான். நிஜத்திலே இந்த அனுபவம்
எனக்கு நிறைய ஏற்பட்டிருக்கிறது. என்னையறியாமல் நான் பேசும் பல வார்த்தைகள்
என் மேல் அன்புகொண்டவர் கூட என்னிடம் சண்டை போடும் அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது. ஏனென்றால் நான் கையாண்ட மொழி அப்படிப்பட்டது. அத்தகைய சூழ்நிலையில்தான் நான் வளரப்பெற்றேன். திடிரென்று என்னால் அவர்களுக்கு
ஏற்றவகையில் பேசமுடியாது. அதேசமயம் என்னளவில் நான் சரி. என்
வார்த்தைகள் எத்தகையை தோற்றத்தை கேட்பவரிடம் செய்திருக்கும் என்ற
கற்பனையெல்லாம் நான் சிந்திக்க முடியாத தூரத்தில் இருந்ததுதான் உண்மை.
எல்லாருக்கும் இது பொருந்தும்.


இதை பாலாஜியின் பதிவில் பின்னூட்டமாக இடுவதை நான் விரும்பவில்லை.
முதலில் கும்பலாக ஒரு விஷயத்தை விவாதிப்பதில் எனக்கு விருப்பமே இருந்ததில்லை. மாறாக அங்கு நான் கண்டது கூச்சல்தான். என்னுடைய கருத்து மற்றவர்களிலும்
சிறப்பாக அமைந்துவிடவேண்டும் என்று வாதம் செய்பவர்களின் கூச்சல்.

வயதில் பெரியவரிடமோ, தன்னைவிட சிறியவர்களிடமோ/ முன்பின் தெரியாதவர்களிடமோ பேசும்போது குறைந்தபட்ச பண்புகளை பேசக் கற்றுக்கொள்ளவேண்டும். ஒருமுறைக்கு இருமுறை வார்த்தைகளை சரிபார்ப்பது நலம். சாருவின் எழுத்துக்கு தீவிரமான
வாசகனாக இருந்தும் அவருக்கு இதுவரை இரண்டு மடல்கள் மட்டுமே எழுதி
இருக்கிறேன். அதில் ஒன்றை அவரே வெளியிட்டுவிட்டார். இதெல்லாம் நான்
எதிர்பாராதது. அவர் வெளியிட்டதால் எனக்கு கிட்டத்தட்ட நாலாயிரம் ஹிட்ஸ்
எகிறியது. கூடவே நீ என்ன பெரிய புடுங்கியா என்றும்/ மேலும் மோசமாக பின்னூட்டம் வந்தது. இங்கே திட்டுபவரும் வாழ்த்துப்பவரும் தமிழ்வலைச்சூழலில் இயங்குபவர்தான். அதனால் எல்லாரையும் சந்தேகக்கண்களுடனே பார்க்க வேண்டியிருக்கிறது. என்
கடிதத்தை ஏன் வெளியிட்டீர்கள் என்று சண்டையா போடமுடியும்.
அரைவெக்காட்டுத்தனமான என் பதிவை படித்து முழுவேக்காட்டுத்தனமாக திட்டுகிறான் என்றுதான் எடுத்துக்கொள்ளமுடியும். நேரடியான கொச்சை வார்த்தைகள் எத்தகைய
மன உளைச்சலைக் கொண்டுவரும் என்பது மடலை வாசிக்கும்போதுதான் தெரியவரும்.

பத்துமணி நேரமெல்லாம் தாமதமே அல்ல. அவர் இந்தியாவில் இருக்கிறார்.
நீங்கள் அமெரிக்காவில் இருக்கிறீர்கள்.

இந்த பதிவை படித்தவுடன் பின்னூட்டத்தை போட்டுவிடவேண்டும் என்று கைகள்
பரபரத்தால் தயவு செய்து மன்னித்துவிடுங்கள் நண்பர்களே! இதுகுறிந்து என்
ஆதங்கத்தை தெரிவிக்க மட்டுமே இந்த விளக்கம். அப்புறம் நாங்க எப்படி
கருத்து சொல்வதாம்? கருத்துச்சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் கதிர் ஒழிக
என்றுகூட சொல்லிக்கொண்டு சந்தோஷப்படுங்கள். நமக்குதான் தினமும் நாலு
கருத்து சொல்லவில்லையென்றால் கீபோர்டு அரிக்குமே!

சாருவிற்கு ஒரு வேண்டுகோள். வாசகர்கள் உங்கள் எழுத்துக்களையே விரும்புகிறார்கள்.
மேற்கோள் காட்டி எழுதும் பதிவுகளினால் மற்றவர்களுக்கு மன உளைச்சல் வரும்
என்பதை உணர்ந்துகொள்வீர் என்று நம்புகிறேன். மேலும் பதில் மடல் எழுதும்போது
இரண்டு வார்த்தைகளுக்கு மேல் எழுதவும்.

நண்பர் பாலாஜி புரிந்துகொள்வார் என்று நம்புகிறேன்.

Sunday, April 13, 2008

மொபைல் போன் தொலைந்து போனால்....

மொபைல் போன் தொலைந்து போவதால் உள்ள ஒரே நன்மை என்னவென்றால்
ஏண்டா மச்சான் போனே பண்ணலன்னு யாராச்சும் கேட்டால் மொபைல் தொலைஞ்சு
போய் நம்பர் காணாமா போச்சுடா மாப்ளன்னு சொல்லலாம். கடன்காரன், ஊர்க்காரன்
தூரத்து சொந்தம், தினமும் ஆபிஸ்லருந்து ஓசி போனில் ஒயிலாக பேசும் ஊழியர்கள்
இடமிருந்து கூட உபரியாக தப்பிக்கலாம்.

கடந்த வாரத்தில் ஒருநாள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது என் தலையணைக்கடியில்
இருந்த மொபைலை என் தூக்கம் கலையாமல் லவட்டிவிட்டார்கள். நான் கதவைப்
பூட்டாமல் தூங்கியதை எந்த உளவுத்துறையினர் அக்கொள்ளையர்களுக்கு தகவல்
கொடுத்தார்களோ தெரியவில்லை. விலைமதிப்புமிக்க பாவனா, நமீதா, இன்னபிற
திரை அழகிகளின் புகைப்படங்கள் தவறிவிட்டன. இளையராஜா பாடல்களும்
நானே பாடி பதிவு செய்த பாடல்களும் பொக்கிஷம் போல யாருக்கும் தெரியாமல்
பாதுகாத்து வைத்திருந்தேன் அத்தனையும் புஸ்.

காவல் நிலையத்தில் புகார் செய்ய போனபோது அங்கொரு கொடுமை சிங்கில் பீஸில்
ஆடியது. அங்கே இருந்த ஒரு போலீசுக்கு மருந்துகுப்பி அளவு கூட ஆங்கிலம்
தெரியவில்லை. எனக்கோ கட்டிப்போட்டு அடித்தால்கூட அரபி வராது. அக்கம்
பக்கத்தில் வார்த்தைகளை கடன் வாங்கி கூடவே சைகை நடனம் ஆடி அவர்களுக்கு
புரியவைத்தேன். போன் வாங்கியதற்கான ரசீது, சீரியல் எண், அடையாள அட்டை
எல்லாவற்றையும் கொடுக்க சொன்னார்கள். எதுவுமே இல்லாமல் வந்திருந்த எனக்கு
பேரதிர்ச்சி உடனே அறைக்குச் சென்று எடுத்து வருகிறேன் என்று வெளியே வந்தேன்.

என் நேரம் ஒரு டாக்சி கூட கிடைக்கவில்லை. மெதுவாக நடந்து செல்லும்போது
ஆப்பிரிக்கன் ஈஸ்டர்ன் தென்பட்டது. உள்ளே நுழைந்து இரண்டு புட்டிகள் வாங்கி
தொலைந்துபோனதை கொண்டாடிவிடலாம் என்று மனம் கணக்கு போட்ட நொடியில்
ஆவோ பாய் என்ற எனக்கு தெரிந்த இந்தி வார்த்தையில் ஒரு பாகிஸ்தானி டாக்சிகாரன்
அழைத்தான். போய் திரும்ப அழைத்து வர அவனுடன் இந்தியில் கதைத்து (ஆம் இந்தி)
அறை வந்தபோது ரசீது எங்கு வைத்தேன் என்பது மறந்துபோனது. கட்டிலையே புரட்டி
அடியில் இருந்த பேப்பரை எடுத்தால் ரசீதாக இருந்தது. மொபைலே கிடைத்த சந்தோஷம்
சீரியல் எண்ணும் அதிலேயே எழுதி இருந்தது.

மறுபடியும் அதே போலிஸ் ஸ்டேஷன். அவர்கள் கொடுத்த பாரத்தில் விடைகளை
நிரப்ப சொன்னார்கள். பேனா எடுத்து வரவில்லை. சூன்யமான முகத்துடன் அந்த
தாடி போலிசை பார்த்தேன். நம் ஊர்களிலாவது ஒருமீட்டர் செருப்பு தைக்கும் நூலில்
பேனாவை இறுக்கமாக கட்டி வைத்திருப்பார்கள். இங்கே அதுவும் இல்லை. பக்கத்தில்
நின்றிருந்த ஒரு சூடானியரிடம் கெஞ்சி வாங்கி நிரப்பி ரசீதின் நகல், அடையாள அட்டை நகல், எல்லாவற்றையும் இணைத்து கொடுத்தேன்.

இவ்வளவு சிரமத்துக்கு இடையில் கொடுத்தபோது அதை இடக்கையால் வாங்கி பிரித்து
கூட பார்க்காமல் ஓரமாக வைத்துவிட்டார் அந்த கனவான் இப்படியாகும் என்று தெரிந்து
இருந்தால் நானே புலனாய்வில் இறங்கி திருடனுக்கு வலை விரித்திருப்பேன். வெளியே
வந்து காவல் நிலையத்திற்கு பின்னால் இருந்த ஆப்பிரிக்கன் ஈஸ்டர்ன் கிளையினுள்
நுழையப்போனேன். அப்போதுதான் வேலை நேரம் முடிந்து கதவை அடைத்தார்கள்.
"ஐயா கருணையாக ஐந்து நிமிடத்தை தாருங்கள்" என்று என்று ஏலம் விட்டு படிப்படியாக
நான்கு, மூன்று, இரண்டு என்று கடைசியாக ஒருநிமிடம் கூட திறக்க முடியாது என்று
சொல்லி கதவை அடைத்து விட்டார் அந்த கறார் ஊழியர்.

தொலைந்து போனது கிடைக்கும் வரை தற்காலிகமாவது ஒரு சிம்கார்டு இருந்தால்
நல்லது என்று அதை வாங்க சென்றேன். அந்த மெகாமாலில் இதுவரை ஆங்கிலத்தில்
வந்திராத ஆங்கிலப் படங்கள் எல்லாம் விலைக்கு இருந்தன. அய்யா இது எல்லாம்
எந்த நூற்றாண்டில் வெளிவந்த படங்கள் என்று கேட்கலாம் போல இருந்தது.
இந்த பிலிப்பைன் தேசத்து பிகர்கள் பணம் எண்ணி கல்லாபெட்டியில் போடுவதற்கும்,
தொலைபேசிக்கு பதில் சொல்லவும் மட்டும் பிறந்தவர்களா என்ற சந்தேகம் அடிக்கடி
எனக்கு ஏற்படுவதுண்டு. கல்லாக்களில் நீக்கமற வெள்ளை நிற பிலிப்பினி பிகர்கள்
பொம்மைகள் போல அமர்ந்திருந்தன.

வயிறு பசித்தது. எங்காவது காரமாக உள்ளே தள்ளவேண்டும் போல இருந்தது. நேராக
தென்னிந்திய உணவு விடுதி நோக்கி சென்றேன். "இப்பதான் ரெடியாகிட்டு இருக்குங்க"
இட்லி தோசை வேணா சூடா கிடைக்கும் என்றார்கள். சரி எதாச்சும் கொடு என்றேன்.
போனில் பேசியபடியே ஒருவன் என் அருகில் உட்கார்ந்தான். புதிதாக வந்தவன் போல
ஊருக்கு போன் பண்ணி பிஸ்து காமித்துக் கொண்டிருந்தான் நடு நடுவே "ஆமா...
இல்லயா பின்ன.." என்று வேறு இந்தநேரத்தில் என் கையில் டுபாக்கி இருந்தால்
ரோட்டில் போன் பேசி செல்லும் அனைவர் வாயிலும் குறிபார்த்து சுடுவேன்.

போனை ஒரு வினாடி நிறுத்திவிட்டு "அண்ணே எனக்கு ஒரு ஆவூ" என்றான் அந்த
அண்ணாரும் "ஒண்ணே ஒன்னு போதுமா கண்ணு" என்று திருப்பி கேட்டார். இவன்
சைகையாலே பதில் அளித்தான். (இல்லயா பின்ன IST லைன் இல்லா) என்னால்
ஆர்வத்தை அடக்க முடியவில்லை போன் பேசிக்கொண்டிருந்தவனிடம் "ஏங்க ஆவூ"
என்றால் என்ன என்று கேட்டேன். ஆவூன்னா ஆனியன் ஊத்தாப்பம் என்ற தன் அரிய
சுருக்கு சொல்லை சொன்னார்.

"அப்ப சாதா வூத்தப்பத்த என்னன்னு சொல்விங்க? சாவூன்னா? என்று கேட்டேன். வேறு
இடம் பார்த்து உட்கார்ந்து கொண்டு ஆவூவை அவசரமாக சாப்பிட்டுவிட்டு வெளியேறினான்.

அறைக்கும் திரும்பும் வழியில் டாக்சியில் என் பக்கத்தில் இருந்தவர். என் மொபைல்
மாடல் போலவே வைத்திருந்தார். (Sony ericson k800i) அப்படியே புடுங்கிகிட்டு
கார்லருந்து குதிச்சிறலாமான்னு தோன்றியது. போனையே வெறித்து பார்க்க அவர்
பேண்டின் உள்பாக்கெட்டில் போட்டு பத்திரப்படுத்திவிட்டார்.

கடந்த ஒருவாரமாக எண்களை மொபைல் போனில் சேமிக்காமல் மனதில் மனனம்
செய்வது என்று முடிவுசெய்து சேமிக்காமல் விட்டுவிடுகிறேன். ஆனால் ஒன்றிரண்டு
தவிர மனனம் ஆக மாட்டேன் என்கிறது. தூங்கும்போது நிறைய எண்கள் கனவில்
வருகிறது, கார் நம்பர்கள் குறுக்கே வந்து குழப்பமளிக்கிறது, திடிரென்று என்
டெலிபோன் எக்ஸ்டென்சன் மறந்து போனது, உச்சகட்டமாக புதிதாக வாங்கிய எண்
என்னவென்று தெரியவில்லை. அலுவலக போனில் இருந்து 100 மைல் தள்ளி
இருந்த ஒருவருக்கு அழைத்து எண் உலாபேசி எண் என்னவென்று சொல்ல முடியுமா?
என்று கேட்டேன்.

"அண்ணே என்னண்ணே ஆச்சு? கவலபடாதிங்க எல்லாம் சரியாயிரும்..." நம்பர்
சொல்றேன் குறிச்சுக்கங்க என்று சொல்லி நம்பர் சொன்னார்.

சிறுவயதில் உறவுக்காரர்கள் வீட்டு டெலிபோன் எண் எல்லாம் டாண் டாண் என்று
சொல்வேன். மொபைல் வந்ததிலிருந்து மூளை என்ற வஸ்துவை உபயோகபடுத்தாமல்
விட்டதினால் துருப்பிடித்து விட்டது.



என்
எதிரே
எண்களின்
குவியலாக உள்ளது
எந்த எண்ணிலும் என்
எண்கள் இல்லை எதிரில்
உள்ள கார் எண்ணின் கூட்டுத்தொகை
என் காதலி வீட்டு எண்ணை ஒத்திருக்கிறது.
எங்கெங்கு காணினும் எண்களடா தம்பி எண்களடா
எத்தனை கோடி எண்கள் வைத்தாய் எங்கள் இறைவா..??

இதுக்கு பேர்தான் படிக்கட்டு கவுஜை.

Sunday, March 09, 2008

நடிப்பு சுனாமியின் அடுத்த படம் தயாராகிறது!!!

தமிழக மக்களுக்கு ஏற்கனவே பரபரப்பான அறிமுகம் தந்தவரும் "கானல் நீர்"
படத்தில் அதிரடியாக தோன்றி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தவருமாகிய
முகவை குமார் என்கிற JK ரித்திஸ் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை
விடுத்துள்ளார். தனது முதல் படம் தந்த அதிர்ச்சியிலிருந்து தமிழக மக்கள் மீளும்
முன்பே அடுத்த படத்தையும் அறிவித்துள்ளது கண்டு மக்கள் சோகத்தில்
ஆழ்ந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் என் பங்களிப்பு
கணிசமாக இருக்கவேண்டும் என்பதற்காக தொடர்ந்து படங்களில் நடிப்பேன்
என அறிவித்துள்ளதால் குழந்தைகள் முதல் பல்போன ஆயாவரை அனைவரும்
குலை நடுக்கத்தில் இருப்பதாக செய்திகள் குய்யோ முறையோ என்று
தெரிவிக்கிறது.

அவரது அடுத்தபடத்தின் தலைப்பே மிக வித்தியாசமாக அமைந்திருப்பதாக
அவரே குறிப்பிட்டு சிலாகித்தார்.
"பத்தாவது முடிச்சிட்டு சும்மாருக்கோம்" என்ற தலைப்பை
கேட்டவுடன் அவருக்கு பிடித்துவிட்டதாகவும் படத்தில் பத்தாவது படிக்கும் பையன்
வேடத்தில் நடிப்பதால் அதற்கேற்றவாறு முகத்தில் மேக்கப் அப்ப வேண்டும்
அதனால் கொட்டாம்பட்டி அருகிலிருந்து தெருக்கூத்து நடிகர்களுக்கு பவுடர்
போட்டு பளபளப்பாக்கும் மேக்கப் நிபுணர்களை ஸ்பெசலாக வரவழைப்பதாக
சொன்னார். படத்தின் அவரது மேக்கப் தனியாக தெரிய வேண்டும்
என்று இந்த ஏற்பாடாம்.

படம் வெகு ரகசியமாக எடுக்கப்படுவதால், சின்ன ஸ்டாம்ப் சைஸ் போட்டோ
கூட வெளிவரவில்லை. அதனால் அங்க இங்க பொறுக்கி பொறுக்கி எடுத்த
போட்டோக்கள்



பிகரின் பின்னால் கருஞ்சிறுத்தையென நிற்பவர்தான் ஜேகே ரித்திஸ், நன்றாக
உற்றூப்பாருங்கள். (என்ன கொடும்ம்ம சார் இதுனுலாம் புலம்ப கூடாது)

இங்கே ஜேகே ரித்திஸின் புஜபல
பராக்கிரமத்தை (அக்கிரமம்) காணலாம் மேலும் தனது அடுத்த ப்ராஜெக்ட் மற்றும்
அரசியல், சமூகம் குறித்த தனது பங்கையும் வெளிப்படுத்தியிருக்கிறார். ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் இணைய முகவரி அளித்திருக்கிறார். அவருக்கு
நீங்கள் மடல் செய்யலாம். உங்களுடைய சந்தேகங்களை அவர் தீர்ப்பார்.

பெயரிடப்படாத இன்னொரு படத்திலும் கையெழுத்திட்டிருக்கிறார். இரு
கதாநாயகர்களில் ஒருவராக இருந்தாலும் தனது எவர்சில்வர் பாத்திரத்துக்கு பங்கம்
வராமல் இருப்பதால் ஒத்துக்கொண்டிருக்கிறார். மேலும் இணைந்த கைகள், அக்னி
நட்சத்திராம், சின்னதம்பி பெரியதம்பி வரிசையில் இதும் மெகா வெற்றிப்படமாக
இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்தாண்டு இறுதி வரை படப்பிடிப்பு இருப்பதால் தன்னுடைய கால்ஷீட், பெட்ஷீட் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வரை எதுவாக இருந்தாலும்
அடுத்த வருடம் மட்டுமே கிடைக்கும் என்றும் அறிவித்தார்.


ரித்திஸ் ரசிகராக என்னுடைய ஆசை ஒன்றே ஒன்றுதான் பேரரசு இயக்கத்தில்
விஜய டோ ராஜேந்தரும், ரித்திஸும் இணைந்து நடிக்க வேண்டும் என்பதே!

(கற்பனை பண்ணும்போதே உடம்பு சிலிர்க்குது)
பார்ப்போம் எம் கனவு பலிக்கிறதா என்று.

இப்படிக்கு உலக நடிப்பு சூறாவலி ரித்திஸ் ரசிகர் மன்றம்
அபுதாபி கிளை
கொல்லம்பாளையம் ரோடு
பொட்டிக்கடை சந்து
போஸ்டாபீஸ் எதிரில்
துபாய் 6003236568941115

Wednesday, October 24, 2007

கிழிச்சதும்... கிழிச்சதும்...

போத்தீஸ்
சென்னை சில்க்ஸ் ஜிவல்லரி மார்ட்
ரீகன் ஹேர் வெர்டிலைசர்
just one bottle will do the magic
க்ரிஸ்டல் ஜட்டிகள்
விஜய் டீவி திறந்திடு சீசெம்
மந்திரத்தை சொல்லு பரிசுகளை அள்ளு
மிலானோ பைப் பிட்டிங்குகள், பாத்திங் லக்சரீஸ்
சாசெல் மல்டிமீடியா பாடமுறை
ராதா இண்டெர்நேஷனல் பைப் பிட்டிங்குகள்
கோட்டா ஜிவல்லர்ஸ்
பில்ராத் மருத்துவமனை
யெரா க்ளாசஸ்
பெண்களை கவர கடி ஜோக்ஸ் உதவாது
அடுத்த வார ஸ்பெசல் பெண்களை கவுக்க பல ஐடியாக்கள்
வாங்க மறந்து விடாதீர்கள்.
அஞ்சால் அலுப்பு மருந்து(இன்னுமாடா இருக்கு!!!)
வைகிங் ஜட்டி, வேட்டிகள், பாலியஸ்டர் சட்டைகள்
ட்யூரோப்ளக்ஸ் மெத்தைகள்.
ஜான்சன்ஸ் சட்டைகள்.
குமரன் ஸ்டோர்ஸ்
தீபாவளி ஸ்பெசலாக ஒரு புடவைக்கு பல முந்தானைகள் ஜிப் மேட்ச்.
க்ரீன் டீ உலக மக்களால் அதிகம் அருந்தப்படும் டீ.
(உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக மாதிரி போலருக்கு)
லோட்டஸ் நவீன லேப்பராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மையம்
சைக்கிள் ப்யூர் அகர்பத்திகள்.
ஹண்டே ஹாஸ்பிட்டல்
டீர்ம்லைன் கிச்சன்ஸ் & பெட்ரூம்ஸ்.
ஆல்ப்ரான் wheat flakes
ஆண்டுமுழுவதும் பயம் அறிய குருபெயர்ச்சி புத்தகத்தை வாங்குங்கள்
(புனித கங்கை நீர் சாஷே அன்பளிப்பு :)))))
ரிதம் வாட்சஸ்
ஜூனியர் ஹார்லிக்ஸ் 123
நாயுடு ஹால்



தீபாவளி ஸ்பெசல்னு ரெண்டு புத்தகமா கொடுக்கறாங்களேன்னு ஆறு திராம்ஸ்
கொடுத்து இந்த எழவ வாங்கிட்டு வந்தேன். வாங்கி பாத்தா ரெண்டு புத்தகமும்
முத்தாரம் சைஸ்ல இருக்குது. இப்பயே தீபாவளி எப்படிடா வந்துச்சுன்னு இந்த
சின்ன புத்தில உரைக்கல. நல்லவேளை 8 திராம்ஸ் கொடுத்து ஆவிய
வாங்கி பாவியாகாம விட்டேனே.

எல்லாமே முழுப்பக்க அல்லது இரண்டு பக்க விளம்பரங்கள். இவ்ளோ
விளம்பரம் சும்மாவா போடறாங்க. காசுவாங்கிகிட்டுதான போடறாங்க
அதுக்கு 9 ரூபாய் விக்கிறத அஞ்சுரூவாயா வித்தாதான் என்ன?
எல்லா விளம்பரமும் வழுவழுன்னு கண்ணை பறிக்கற மாதிரி இருக்கு
இந்த மாதிரி போட்டா எக்கச்சக்கமா செலவாகும் அந்த செலவை
வாங்கற மடையனுங்க தலையில கட்டிடலாம். விளம்பரத்துக்கு விளம்பரமும்
ஆச்சு, வருமானத்துக்கு வருமானமும் ஆச்சு.

நூத்து அம்பது பக்க விளம்பரத்துல ச்சி சாரி புத்தகத்த்துல பாதிக்கு பாதி
விளம்பரம் அடைச்சிகிட்டு இருக்கு மீதில சினிமா சின்னத்திரைன்னு இருக்கு
இதுல தமிழ்நாட்டுலயே அதிகம் விற்பனையாகும் நம்பர் ஒன் இதழாம்!!!
சிறப்பம்சம் டூபீஸ்ல நாயுடுஹால், சிங்கிள் பீஸ்ல வைகிங், ஜான்சன் விளம்பரம்
வேற. கொடுமடா சாமி.

ஒரு விஷயம்கூட நல்லவிஷயமே போடலியா புத்தகம் முழுக்க சினிமாவும்
விளம்பரமும்தான் இருந்துச்சான்னு நீங்க என்னை கேக்கலாம். என்னோட பதில்
கண்டிப்பா இருந்துச்சி. வெற்றி பெற்றவர்களின் கதை, தன்னம்பிக்கை கட்டுரை
இதெல்லாம் இருந்ததுதான் மறுப்பதற்கில்லை ஆனால் தமிழ்நாடு மக்கள்
கொடுக்கற 9 ரூபாயும் இங்க இருக்கற மக்கள் கொடுக்கற 6 திராம்ஸ் பணமும்
அதற்கு ஈடானது அல்ல. விழலுக்கு இறைத்த நீர்மாதிரி ஆகுதேன்னு என்
கவலை இதுல தமிழ்லயே அதிகம் விற்பனையாகும் ஒரே இதழ்னு டேக் வேற.

எதைஎதையோ படிச்சி கிழிக்கிற பாமரன் அய்யாவும் இதே பத்திரிக்கைலதான்
என்னத்தையோ கிழிச்சிகிட்டு இருக்காரு. இவரு கண்ணுக்கு எப்படி இதெல்லாம்
தெரியாம போகுதுன்னு தெரில.

இதை ஏண்டா படிச்சிட்டு எங்க உயிரை வாங்கிட்டு இருக்கன்னு கேக்கறிங்களா?
அதையும் சொல்றேன் கேளுங்க.

நம்ம நண்பர் ஒருத்தருக்கு அம்மை போட்டுருச்சி அதே இலங்கை நண்பர்தான்.
ஆங்கிலம் இந்தியும் தெரியாததினால நான் கூட போனேன். சரியா எட்டரைக்கு
மருத்துவமனைக்குள்ள போயிட்டோம். ஆனா டாக்டர பாக்கறதுக்கு இரவு ஒன்றரை
மணி ஆச்சு. அவ்ளோ கூட்டமெல்லாம் இல்லிங்க மொத்தமா இருவது பேர் இருப்போம்.
அதுக்கே அம்புட்டு நேரம். ரெஸ்டாரெண்ட்ல இருந்து பார்சல் கொடுக்க வந்தவங்கிட்ட
கூட முகத்த பாக்காம ப்ளட் டெஸ்ட், யூரின் டெஸ்டுக்கு உண்டான பேப்பரை கொடுத்து
லெப்ட்ல போயி ரைட்டுல போ அங்கதான் டெஸ்ட் பண்ற இடம் இருக்குன்னு
சொல்ற அரபி ரிசப்ஷனிஸ்ட்.

உடம்புக்கு முடியாம இங்க வந்தா இவளுங்க பண்ற அட்டகாசம் தாங்க முடில.
பிஸ்கட் திங்கும்போது லிப்ஸ்டிக் அழிஞ்சி போச்சான்னு நிமிசத்துக்கொருமுறை
கண்ணாடிய பாத்துகிட்டு இருக்கறது. வாடிக்கையாளர்கள் எதாச்சும் தகவல்
கேட்டா மூடிகிட்டு உக்காருடா வெண்ணேங்காரா மாதிரி பதில் சொல்றது.

ஹெல்த் கார்டு, இன்சூரன்சு மயிறு மண்ணாங்கட்டின்னு எடுத்தது என்னத்துக்குன்னு
தெரில. ஒரே ஒரு டாக்டர்தான் இருக்காரு நாங்க என்ன பண்றதுன்னு சத்தம்
போட்டவுடனே சொல்றா அந்த ரிசப்ஷனிஸ்ட். எங்க ஊர் கிராமத்துலகூட
எந்தநேரம் போனாலும் டாக்டரபாக்கலாம். அங்கல்லாம் டாக்டர பாக்கணும்னா
அரைமணி நேரத்துல பாக்கலாம். பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடு
உலகத்து பெரிய பெரிய கட்டிடங்கள் உள்ள நாடுன்னு இங்க வந்தா உசுர மட்டும்
எடுத்துகிட்டு உடம்ப ஊருக்கு அனுப்பிடுவானுங்க போலருக்கு.

ஒரு டாக்டர பாக்கவே அஞ்சு மணிநேரம் ஆகுதுன்றத என்னால பொறுத்துக்கவே
முடில அதனால கீழ போனேன் அங்க சேட்டன் கடையில குமுதம் தீபாவளி
ஸ்பெசல்னு ஒன்னுக்கு ரெண்டா தர்றானுங்களேன்னு வங்கிட்டு வந்து படிக்க
ஆரம்பிச்சேன் எரியற கொள்ளில எண்ணெய ஊத்துற மாதிரி இருந்துச்சு அத
படிக்கும்போது.

பேசாம அங்க தேமேன்னு திரிஞ்சிகிட்டு இருந்த மலையாள சேச்சிகளையாச்சும்
ரிசப்ஷன்ல உக்காத்தி வெச்சிருந்தானுங்கன்னா ஒழுங்கான பதிலும் கொஞ்சம்
பொழுதுபோக்காவும் போயிருக்கும். :(

அதனாலதான் இந்த மர்டர்வெறி.

கிட்டத்தட்ட கோவம்னா என்னன்னு மறந்து போயிருந்த நேரத்துல கொலவெறிய
கொண்டு வந்து சேத்துட்டானுங்க.

Tuesday, October 02, 2007

சுழற்சியின் உச்சங்கள்


வாரத்தின் ஆறுநாட்களும் ஏழாவது நாளை நோக்கியே
நகர்ந்து கொண்டிருக்கின்றன. அன்று செய்வதற்கென்று
நிறைய இருந்தாலும் மனம் யாருடன் சேர்ந்து பீர்
குடிக்கலாம் யாரைப்பற்றி புறம் பேசலாம், பார்த்த
படத்தை பீற்றிக்கொள்ளலாம் என்றே சிந்திருக்கிறது.
அந்த ஒருநாளை வாழ்ந்து தீர்ப்பதற்குள் என்னை
கடத்திக் கொண்டு போய் சுழற்சிக்கான முதல் நாளில்
உட்கார வைத்துவிடுகிறது இந்த சுழற்சியின் உச்சத்தில்
ஓர்நாள் என் மனமும் பிறழ வாய்ப்பிருப்பதாக
தோன்றுகிறது. ஒற்றை வாழ்க்கைக்கு மாற்றாக இருந்திருந்தால்
சுவாரசியமாக இருந்திருக்குமா என்று தெரியவில்லை.
எந்த கணத்தில் வாழ்க்கை சுவாரசியமாககூடும்
என்ற எதிர்பார்ப்பு சலிப்படைந்து வருகின்ற
நாட்கள் இவை வரும்காலத்தில் நம்பிக்கையற்றும்
போகலாம் யாருக்கு தெரியும்.!
குடிக்க யாரும் முன்வராத வாரயிறுதியின் அடுத்த
நாளாவது ஆயிரம்காலத்து பயிரை மேய மனம்
பாயலாம் இதுவும் யாருக்கு தெரியும்.!

Wednesday, August 15, 2007

குண்டு வெடிக்கலன்னா போர் அடிக்கும்!

காலையில் எழுவது முதல் இரவு படுப்பது வரை ஏதோ ஒரு வேலை என்னை
இயக்கி கொண்டே இருக்கிறது. அதனிடத்தில் இருந்து விடுபட நான் எடுக்கும்
முயற்சிகளின் முடிவு சலிப்புகளின் எல்லையாக உள்ளது. இந்த சலிப்பினால் நாப்பது
வயதில் ஏற்படுகிற மன அயற்சி இப்போதே வந்து விடுமோ என்று எண்ணுகிறேன்.
தினமும் எதிர்கொள்ளும் முகங்களுக்கு எதிர்ப்புன்னகை கூட வறட்டுத்தனமாக இதழில்
பொறுத்த வேண்டியதாக இருக்கிறது.

சில பெண்களுக்கு எத்தனை வயதானாலும் குழந்தை குணம் மாறுவதே இல்லை.
குழந்தைகள் பொய்யானவற்றை தனது தாயிடம் விவரிக்கும்போது கைகளை
ஆட்டி முகத்தை கோணலாக்கி உதடு சுழித்து சொல்லும் அது உண்மையா
இல்லையா என்பது தவிர்த்து நாமும் நம்மையறியாமல் ரசிக்கத் தொடங்கி
விடுகிறோம். அது சொல்லப்படும் விஷயங்களைப் பொறுத்து சந்தோஷமும்
துக்கமும் நமக்கும் ஏற்படும் குழந்தையின் உடல் மொழி தெரிந்தவர்களுக்கு
புரியும். இந்த குணங்களை ஒத்த ஒரு ஈராக்கிய பெண் எங்கள் அலுவலகத்தில்
பணிபுரிகிறாள்.

லெபனான் அல்லது எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்த அலுவலகத்தில்
அதிகம் அவளும் அதுபோன்றொதொரு நாட்டைச் சேர்ந்தவளாக இருக்கக்
கூடும் என்ற நினைப்பில் இருந்தேன். இரண்டொரு தினங்களுக்கு முன் தான்
தெரிந்தது அவள் ஒரு ஈராக்கி என்று. பொதுவாகவே அரபுநாடுகளைச் சேர்ந்த
பெண்களுடன் அதிகம் பழகுவதில்லை அது ஏனோ பிடிப்பதே இல்லை. முக்கியமாக
அவர்களின் திரவிய மோகம், பகட்டு வாழ்க்கை. போலி புன்னகை. ஆனால் இந்த
ஈராக்கிய பெண்மணியிடம் ஒரு இனம்புரியாத ஈர்ப்பு. சில குணநலன்களில் எனது
தாயினை ஒத்திருபதாலோ என்னவோ தெரியவில்லை. சில வேளைகளில்
அவளை மம்மா என்று கூட என்னை மறந்து அழைத்திருக்கிறேன் பதிலுக்கு
அவள் புன்னகை புரிவது சற்று கூடுதலாக என்னைக் கவரும்.

ஈராக் பெரியநாடு, சதாம் என்ற சர்வாதிகாரி ஆண்ட நாடு தற்போது அங்கங்கே
குண்டுகள் வெடிப்பதாக செய்திகளில் படிப்பது என்பதைத் தவிர வேறொன்றும்
தெரியாது. தெரிந்துகொள்ளவும் ஆர்வம் இருப்பதில்லை என்பதைவிட எனக்காக
ஒதுக்கிக்கொள்ளும் சிலமணி நேரங்களை செலவிட விருப்பமில்லை என்பதே
உண்மை.

ஈராக்கின் தெற்குப்பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு சக்தி வாய்ந்த குண்டு
வெடித்ததில் 150க்கும் மேற்பட்டோர் இறந்து போனதாக சற்றுமுன் வலைப்பதிவில்
வாசித்திருந்தேன். ஓய்வாக இருக்கும் சமயத்தில் இதுகுறித்து அவளிடம் பேச
வேண்டும் ஒருவேளை அவள் அந்த பகுதியினை சேர்ந்தவளாக இருப்பின் அவர்
குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது காயமடைந்திருப்பார்களா என்று விசாரிக்க
வேண்டும் என்று மனதினில் குறித்துக்கொண்டேன்.

அலுவலகத்தில் அதிகம் வேலை இல்லாத மாலைநேரம் அனைவரும் வீட்டுக்கு
திரும்ப சில மணித்துளிகள் இருந்தன. ஏதோ ஒரு சந்தேகம் கேட்க என்னறைக்கு
வந்தவளிடம் கேட்டேன். இதற்காகவே காத்திருந்தது போல நிறைய பேசினாள்.

குண்டு வெடித்து 150 பேர் இறந்து விட்டார்களாமே என்று கேட்டேன்.

குண்டு வெடிக்கவில்லை என்றால் இப்போதெல்லாம் போர் அடிக்கிறது. தினமும்
வெடிப்பதால் சகஜமான ஒன்றாக ஆகிவிட்டது. இழப்புகள், சேதங்கள் அதிகமாகும்
போதுதான் மீடியாக்கள் பெரியகட்டம் கட்டி செய்தி வெளியிடுகின்றன. இருபது
முப்பது என்றால் மூக்குப்பொடி விளம்பரத்தின் மூலையில் சிறிய பெட்டிச் செய்தியாக
வெளியிடுவார்கள். நேற்று நடந்த வெடிப்புகூட எங்கள் பகுதியில் நடந்ததுதான்.

தொலை தொடர்புசாதனங்கள், மின்சாரம் கூட இல்லாத பகுதியாகிவிட்டது எங்களின்
வசிப்பிடம். நான்கு ஊர்களுக்கு தள்ளி குண்டு வெடித்தால் கூட எங்கள் பகுதியில்
குண்டு சத்தம் கேட்கும்.

ஒன்றரை வருடங்களுக்கு முன்பு நான் அங்கிருந்த போது என் வீட்டினுள்
குழந்தைகளை வைத்து பூட்டி விடுவேன் அனைத்து ஜன்னல்களையும் மூடிவிடுவேன்
இல்லையென்றால் வெடி சத்தத்தில் எனது குழந்தைகள் அழ ஆரம்பித்துவிடும்.
எல்லாரையும் உள்ளே வைத்து பூட்டிவிட்டு அவ்வப்போது தெருவழியாக செல்லும்
துப்பாக்கி ஏந்தியவர்கள் வீட்டினுள் யாராவது இருக்கிறார்களா என்று விசாரித்து
இழுத்துச் சென்று விடுவார்கள் அதனால் நான் மட்டும் வீட்டுக்கு வெளியே
நின்று யாருமில்லை என்று சொல்லிவிடுவேன். என்னைச் சுட்டால் கூட எனது
குழந்தைகளை காப்பாற்றிவிடுவேன் என்றார்.

நாங்களும் ஒருகாலத்தில் நன்றாகத்தான் இருந்தோம். இப்போதுதான் நிலைமை
மிக மோசமாக உள்ளது. விரைவில் இது தீரும் இன்ஷா அல்லாஹ். பேசிமுடிக்கும்
நேரத்தில் அவளது முகம் அழும் தோரணைக்கு வந்திருந்தது. அவள் பேசியது
தெளிவான ஆங்கிலமாக இல்லாமலிருக்கலாம். ஆனால் எனக்கு புரிய வைக்க
அவளது கைகளை ஆட்டியும், சோகமான முகபாவங்களை குழந்தைகளை போல்
வலுக்கட்டாயமாக முகத்தில் திணிக்கும்போதும் வார்த்தைகளால் உருவாக்க முடியாத
புரிதல்களை எனக்கு புரிய வைக்க முயற்சி செய்தாள். எனக்கும் நன்றாகவே புரிந்தது.

நேரம் முடிந்து அலுவலகத்தில் அனைவரும் வாகனங்களுக்கு செல்ல ஆயத்தமாகினர்.
அவளின் தோழிகள் நெடுநேரம் அழைத்தமையால் மீதியை நாளைக்கு சொல்கிறேன்
என்று சென்று விட்டாள். வலுக்கட்டாயமாக புன்னகையை உதட்டுக்கிழுத்து விடை
கொடுத்தேன்.

என்னுடன் பேசும் பழக்கமில்லாத யாவரும் சந்தோஷமாக ஆரம்பித்து
சோகநிலையிலேயே முடிக்கின்றனர். ஒவ்வொருமுறை இப்படி ஆகும்போதும்
எனக்குள்ளேயே குற்ற உணர்ச்சி தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

Wednesday, January 17, 2007

மனசை கல்லாக்கிட்டு படத்தை பார்க்கவும்!!!

Photobucket - Video and Image Hosting

கொஞ்சம் மனசை திடப்படுத்திக்கோங்க மக்களே. அப்பனும் மகனும் பண்ற ரவுசு
தாங்க முடியல. ரெண்டு பேரும் சேர்ந்து ஏதோ விக்கெட் எடுத்துட்டாங்க
போலருக்கு அதான் அக்தர் ரேஞ்சுக்கு அலப்பறைய குடுக்கறாங்க.

எவண்டா அந்த காஸ்ட்யூம் டிசைனரு?

அதுவும் நாந்தாங்ணா!!

நெனச்சேன் அதுவும் நீயாத்தான் இருப்பேன்னு.


Photobucket - Video and Image Hosting

ஏம்பா உனுக்கு இந்த வேண்டாத வேலை? எங்கிட்டாசும் வழுக்கி விழுந்தா
என்னத்துக்கு ஆவ?

பதமா எதமா பாட்டு படிச்சிட்டு போவியா... அத விட்டுட்டு
சிங் இன் தி ரெய்ன் பாட்டு நம்மளுக்கெல்லாம் தேவையா?

கேட்டா கனவு பாட்டுன்னு கதைய குடுப்பிங்க! நான் தெரியாமத்தான்
கேக்குறேன் தமிழ் சினிமாவில கனவு பாட்டு எத்தனை எடுத்திருப்பிங்க?
அது என்ன உங்களுக்கு கனவு வந்தா பாட்டு மட்ட்ட்ட்ட்டும் வருது?

இதுக்கு மேல எதுவும் நான் கேக்குற மாதிரி இல்ல!

Friday, October 13, 2006

சனநாயகம் பொய், பணநாயகமே மெய்

Image Hosted by ImageShack.us

1300 கிராம்ல ஒரு கிராம் அளவுக்காச்சும் மனிதம்
என்ற உணர்வு இருந்தால் இதுபோல நடந்துகொள்ள
தோணுமா?

Image Hosted by ImageShack.us

"ஓட்டுபொட்டில ஓட்டு போடுங்கன்னா தெருவில போடறாங்க"

Image Hosted by ImageShack.us

"74 சதவீதம் ஓட்டுபதிவு எல்லாம் அதிகம்தான்"

Image Hosted by ImageShack.us

கொசுறு
"நடக்கும் என்பார் நடக்காது "
நடக்காதென்பார் நடந்துவிடும்"

இந்த தேர்தலும் நிரூபித்துவிட்டது. பணநாயகமே
சனநாயகமென்பதை. யார் ஆட்சிக்கு வந்தாலும்
அரசியல்வாதிகள் எங்களின் குணம் இதுவே.
இதுக்காக நீங்க ஓட்டு போடாம இருந்து விட
வேண்டாம்.