எல்லையற்ற அன்பு கொள்வோம்

Saturday, March 17, 2007

Agnostic

எங்கள் கல்லூரியில் கேண்டீன் வைத்திருந்த பெரியசாமி அண்ணனை எல்லாருக்கும்
பிடிக்கும் மிகவும் மென்மையானவர். கடவுள் மறுப்பு கொள்கைகளில் மிகவும்
தீவிரமானவர். திராவிட கழகத்தில் தன்னை இளம் வயது முதலே இணைத்துக்
கொண்டவர். அருமையான பேச்சாளர் கல்லூரி முடிந்து அவரிடம் சிறிது நேரம்
அவரிடம் பேசியிருந்து விட்டு செல்வது வழக்கம். எதைப் பற்றி வேண்டுமானாலும்
அவரிடம் பேசலாம் அவரின் கருத்துக்களை தெளிவாக எடுத்து பேசுவார் ஆனால்
திணிப்பு என்பது இருக்காது. கடவுள் நம்பிக்கை சிறிதும் இல்லாதவராக இருந்தாலும்
அவரின் குடும்பத்தில் அனைவரும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்.

ஆறாவது வகுப்பு படிக்கும் அவரின் மகள் விடுமுறை நாட்களில் கேண்டீனில் வந்து
அமர்ந்து கொண்டு சிறு சிறு வேலைகள் செய்வாள். அக்கவுண்ட் நோட்டில் அன்றைய
தேதியை எழுதிவிட்டு பிள்ளையார் சுழியை போடுவது அவளின் வழக்கம். ஏனோ
அன்று மறந்து விட்டது அந்த பிள்ளை. "தேன்மொழி பிள்ளையார் சுழி போட
மறந்துட்ட பாரும்மா" என்றார் மகளிடம். அப்பெண்ணும் சிரித்துக்கொண்டே
பிள்ளையார் சுழி போட்டுவிட்டு போடாத பக்கங்களுக்கு சேர்த்து போட
துவங்கினாள்.

இதை பார்த்துக் கொண்டிருந்த நான் கேட்டேன். என்னங்க நீங்களோ கடவுளை
நம்பாத ஆளு. நீங்களே இது மாதிரி எழுத சொல்றிங்களேன்னு கேட்டேன். அவர்
சொன்னார் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லதான் இதை என் அனுபவத்தில்
நானாக கற்றுக் கொண்டது. அதே போல அவளுக்கும் கடவுள் என்ற ஒருவர்
இல்லை என்று புரிந்து கொள்ளும் பக்குவம் வந்தால் புரிந்து கொள்ளட்டும்.
நானாக எதையும் சொல்லித் தருவதில் விருப்பமில்லை. அதுவுமில்லாமல் என்
கொள்கைகளை அவளுக்கு திணிப்பது போலாகும். அவளாக உணர்ந்து கொள்ள
வேண்டும். பெரியாரே ஒரு காலத்தில் தீவிர ஆன்மீகவாதியாக இருந்து
நாத்திகத்திற்கு மாறியவர்தான். அவளின் நம்பிக்கைகள்அவளுக்கு, என் நம்பிக்கைகள்
எனக்கு.

"தெளிவாக வந்தது பதில் அவரிடம். சிரித்துக் கொண்டே காபியை அருந்திவிட்டு
கணக்கு சொலிவிட்டு நகர்ந்தேன்.

என் வீட்டு அருகினில் வெற்றிலை தோட்டம் வைத்திருந்த பெரியவர் ஒருவர்
இருந்தார். சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டவர். வயது 80 க்கு மேல்
இருக்கும். ஆனால் அவரின் வேலைகள் அனைத்தையும் அவரே செய்து
கொள்வார். பிறரிடம் எதையும் எதிர்பார்க்காமல் இருக்க வேண்டும் என்ற
கொள்கையில் கடைசி வரை இருந்தார்.தனது சொத்துக்களை மகன்,மகள்களுக்கு
கொடுத்துவிட்டு தனக்கென்று காணி நிலத்தை மட்டும் வைத்துக் கொண்டு அதில்
வெற்றிலை தோட்டம் போட்டிருந்தார். எந்த தீய பழக்கங்களும் இல்லாதவர்.
மிகவும் எளிமையாக இருப்பார். முக்கியமாக கடவுள் நம்பிக்கை இல்லாதவர்.
எங்கள் பகுதி திராவிட கழகத்தில் முக்கிய பங்கு வகிப்பவர். கோயில் பக்கம்
கூட ஒதுங்கியதில்லை. அவரின் வாரிசுகள் இதனாலேயே இவரை வெறுத்து
ஒதுக்கிவிட்டனர். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலையே பட்டதில்லை.
தோட்டத்தில் வேலை செய்துகொண்டே அவரிடம் நிறைய பேசுவேன்.

பொங்கல், தீபாவளி, அமாவாசை தினங்களில் படையலுக்கு தேவையான இலை,
பூ, பழம், கீரை, வெற்றிலை போன்றவைகளை பக்கத்தில் இருக்கும் வீடுகளுக்கு
இலவசமாகவே தருவார். முக்கியமாக எங்கள் வீட்டுக்கு தவறாமல் அதிகாலை
அல்லது முதல் நாளே வீடு தேடி வந்து கொடுப்பார். அவர் பெயர் எனக்கு
தெரியாது அனைவரும் கருப்பு தாத்தா என்றே அழைப்பர். எனக்கு விவரம்
தெரிந்து மேல்சட்டை அணிந்ததில்லை. ஒருமுறை தேர்தலில் ஓட்டு போடும்போது
பின்வரிசையில் நின்றிருந்தார் அப்போது மட்டும் சட்டை அணிந்து வந்திருந்தார்.
மற்ற சமயங்களில் மேல்துண்டு மற்றும் வேட்டி மட்டுமே. தினமும் இரவு எட்டு
மணிக்கு செய்திகள் பார்க்க தவறாமல் வந்து விடுவார். செய்தி முடிந்த பின்னர்
திண்ணையில் அமர்ந்து தன் கருத்துக்களை சொல்வார். அவரின் பேச்சை நாள்
முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். திறமையான பேச்சாளர். சுதந்திரத்தில்
ஈடுபட்ட காலத்தில் நடந்த சம்பவங்களை அடிக்கடி கேட்பேன் அவரும்
சளைக்காமல் சொல்வார்.

தினமும் அதிகாலையில் எழுந்து தோட்டத்திற்கு சென்று மோட்டாரில் குளித்து
செம்பருத்தி பூக்களை பறித்து வந்து பூஜையறையில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட
படங்களுக்கு இட்டு சாமி கும்பிடுவார் என் அப்பா. ஒருநாளும் என்னை சாமி
கும்பிட வற்புறுத்தியதில்லை. பூஜையை முடித்து மணி ஆட்டும்போது மட்டும்
ஓடிபோய் திருநீறு இட்டுக்கொள்வேன். இன்று நேற்றல்ல அவரின் சிறுவயது முதலே
சாமி கும்பிடும் வழக்கம் உள்ளவர் ஆனால் ஒருநாளும் என்னை சாமி
கும்பிட வற்புறுத்தியதில்லை. நீங்கல்லாம் நல்லா இருக்கணும்னுதாண்டா அவர்
தினமும் சாமிகிட்ட வேண்டிக்கிறாரு திருநீறாச்சும் போய் வாங்கிக்கோங்கடான்னு
அம்மா அடிக்கடி சொல்வாங்க. நானும் மறுக்காமல் செய்துவிடுவேன்.

ஆனால் தமிழ்மணத்தில் அப்படி அல்ல. தினந்தோறும் நடக்கும் கூத்துக்களை
பார்த்து வேதனைப்பட மட்டுமே முடிகிறது. என்னைப் பொருத்த வரை அவரவர்
நம்பிக்கை அவருக்கு. யாரும் யாரையும் மாற்றிவிட முடியாது. என் வாழ்வில்
நான் கண்ட நாத்திகவாதிகளும் சரி, ஆத்திகவாதிகளும் சரி எந்த நேரத்திலும்
யாரையும் நோகடித்ததில்லை வீண் வாக்குவாதங்களில் இறங்கியதில்லை. நான்
சொல்வதுதான் சரி, கடவுள் என்பது கல், கடவுளை கும்பிடுபன் முட்டாள்,
கும்பிடாதவன் பகுத்தறிவாளன் என்று அவர்களும். கடவுளை கும்பிடாதவர்கள்
கெட்டவர்கள் என்று இவர்களும் சொல்லி கேள்விப்பட்டதே இல்லை.

இங்கு அப்படியல்ல தினந்தோறும் ஏதாவது ஒரு சண்டை நடந்து கொண்டுதான்
இருக்கிறது. முருகக்கடவுள் காமக்கடவுள் என்று சமீபத்திய பிரச்சினை.
அவரவர் பிரச்சினைகளை பார்க்கவே நேரமில்லாத இந்த உலகத்தில் கடவுளின்
இருப்பை கேலிக்குள்ளாக்கும் இது போன்ற விவாதங்கள் தேவையே இல்லை
என்பது என் கருத்து. யாருடைய கருத்தையும் யாரும் ஏற்றுக்கொள்ள தயாராக
இல்லாத போது விவாதங்கள் நடத்துவதில் எந்த பிரயோஜனமும் இருப்பதாக
தெரியவில்லை.

எனக்கும் கடவுள் நம்பிக்கை இல்லன்னு அர்த்தம் கிடையாது பிறந்தநாளின் போது
மறக்காமல் கோயிலுக்கு செல்வது வழக்கம் அதுவும் அம்மாவின் ஆசைக்காக.
மத்தபடி என்றைக்கும் கடவுள் இல்லைன்னு நினைச்சது கிடையாது அதுக்காக
தினமும் சாமி கும்பிடணும், கோயிலுக்கு போகணும்னு நினைச்சதும் இல்லை.
அவரை போய் பார்க்கணும்னு தோன்றியதில்லை. நிஜத்துல அவரை போய்
ஏன் பார்க்கணும், பார்க்கலைன்னாலும் ஒண்ணும் ஆகப்போறது இல்ல.
அப்புறம் எதுக்கு பார்க்கணும்?. அவர்பாட்டுக்கு அவர் வேலையை செய்கிறார்.
நான் பாட்டுக்கு என் வேலையை செய்கிறேன். கடவுள் என் வருகையை
எதிர்பார்த்திருக்கவில்லை என்று என்னால் கண்டிப்பாக நம்ப முடியும். ஒருவேளை
என்னால் தாங்க முடியாத ஒரு சோகமோ, கஷ்டமோ வந்தால் அவரிடம்
போகலாம். பெரியார் கூட ஒரு காலத்தில் ஆன்மீகவாதியாக இருந்து பின்
நாத்திகவாதியாக மாறினவர்தான். அவர் நாத்திகவாதி ஆவதற்கும் அவகாசம்
தேவைப்பட்டது. நான் இன்னும் ஆன்மீகவாதியாகவே இல்லை.

தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை என்பதுதான் நிஜம். கடவுள் நம்பிக்கையும்
இல்லாமல், கடவுள் மறுப்புக்கொள்கையிலும் இல்லாமல் ஒரு பிரிவு இருக்கிறார்கள்.
Agnostic என்பதுதான் அது. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று முடிவெடுக்க
முடியாத ஒரு நிலைதான் Agnostic. ஒருவேளை அந்த கூட்டத்தை சேர்ந்தவனாக
இருப்பேன் போல.

ஆன்மீகத்தை பத்தி நட்சத்திர வாரத்தில் எழுதியே ஆகணும்னு தோணுச்சி.
அதனால்தான் இதை எழுதுகிறேன். இது முழுக்க முழுக்க என்னுடைய நிலைதான்
யாருடைய நம்பிக்கைகளையோ பாதிப்பது போல் இருந்தால் மன்னிப்பு கேட்டுக்
கொள்கிறேன்.

அன்புடன்
தம்பி

38 comments:

மங்கை said...

அருமை..அருமை...தம்பி..ரொம்ப நல்லா இருக்கு...

//அவரவர் பிரச்சினைகளை பார்க்கவே நேரமில்லாத இந்த உலகத்தில் கடவுளின்
இருப்பை கேளிக்குள்ளாக்கும் இது போன்ற விவாதங்கள் தேவையே இல்லை
என்பது என் கருத்து///

அவரவர்களின் அனுவபத்தை பொருத்தே
நம்பிக்கையும், அவநம்பிக்கையும் ஏற்படுகின்றது...அந்த அனுபவத்தில் அவர்களுக்கு ஏற்படும் மகிழ்வான/சோகமான நிகழ்வுகளே இதற்கு காரணம்..இதை மற்றவர்கள் விமர்சனம் செய்வத்றகு ஒன்றும் இல்லை

நல்ல பதிவு தம்பி

வடுவூர் குமார் said...

உங்கள் பதிவு என்னுடைய நம்பிக்கையை பாதிக்கவில்லை.
கிராமங்களில் இந்த மாதிரி விகர்பம் இல்லாமல்(வெள்ளேந்தையா)பேசுபவர்கள் தான் அதிகம்.

CVR said...

மிக அறுமையான பதிவு.
சமீபத்தில் கமலஹாசனின் பேட்டி ஒன்றை ஒரு பதிவில் பார்த்தேன்.
அதில் மனிதனின் பிரச்சினைகளை விட்டு விட்டு கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று சண்டை போடுவது எவ்வளவு தேவையற்றது என்று குறிப்பிட்டிருந்தார்.
உங்கள் பதிவை பார்த்தால் அதுதான் ஞாபகம் வருகிறது. அவங்க அவங்க இஷ்டப்பட்டி ஏதாவது பண்ணிட்டு போகட்டும் , ஏன் சில பேருக்கு இந்த கொலைவெறி அப்படின்னு எனக்கு தோன்றி இருக்கிறது.
உருப்படியான இந்த பதிவுக்கு நன்றி :-)

இராம்/Raam said...

நல்ல பதிவு கதிரு....


//எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லதான் இதை என் அனுபவத்தில்
நானாக கற்றுக் கொண்டது. அதே போல அவளுக்கும் கடவுள் என்ற ஒருவர்
இல்லை என்று புரிந்து கொள்ளும் பக்குவம் வந்தால் புரிந்து கொள்ளட்டும்.
நானாக எதையும் சொல்லித் தருவதில் விருப்பமில்லை. அதுவுமில்லாமல் என்
கொள்கைகளை அவளுக்கு திணிப்பது போலாகும். அவளாக உணர்ந்து கொள்ள
வேண்டும். பெரியாரே ஒரு காலத்தில் தீவிர ஆன்மீகவாதியாக இருந்து
நாத்திகத்திற்கு மாறியவர்தான். அவளின் நம்பிக்கைகள்அவளுக்கு, என் நம்பிக்கைகள்
எனக்கு.//

அட்டகாசமான பாயிண்ட் :)

Santhosh said...

அருமையான பதிவு தம்பி, இது போன்ற பதிவுகளாலேயே தமிழ்மணம் பக்கம் வந்தாலே ஒரு மாதிரி வெறுப்பு தோன்றுகிறது.

கப்பி | Kappi said...

+ + +...

கோபிநாத் said...

சூப்பர் பதிவு கதிர்...

தற்போது தேவையான பதிவு தான் இது.

\\என்னைப் பொருத்த வரை அவரவர்
நம்பிக்கை அவருக்கு. யாரும் யாரையும் மாற்றிவிட முடியாது. \\

ரொம்ப கரைக்ட சொன்னிங்க...

Unknown said...

யாரையும் காயப்படுத்தாமல் என் எண்ணத்தை அல்லது நம்பிக்கையை சொல்வதில் தவறில்லையே. இந்த பதிவில் நீங்கள் உங்கள் எண்ணத்தை அல்லது நம்பிக்கையை வெளியிட்டுள்ளீர்கள்.

யாரையும் காயப்படுத்தாத எண்ணம்தான், எழுத்துதான் வலையுலகை சுகானுபவமாக ஆக்கும். இல்லையா தம்பி?

Santhosh said...

//இது போன்ற பதிவுகளாலேயே தமிழ்மணம் பக்கம் வந்தாலே ஒரு மாதிரி வெறுப்பு தோன்றுகிறது.//
கதிரு நான் இது போன்ற அப்படின்னு சொன்னது உன்னோட பதிவை இல்லை சண்டை போடுவது, சாதிய பதிவுகள் போன்றவைகளை.

பொன்ஸ்~~Poorna said...

இன்னோரு + + + :)

கதிர் said...

//அருமை..அருமை...தம்பி..ரொம்ப நல்லா இருக்கு...//

மிக்க நன்றிங்க மங்கை.

//அவரவர்களின் அனுவபத்தை பொருத்தே
நம்பிக்கையும், அவநம்பிக்கையும் ஏற்படுகின்றது...அந்த அனுபவத்தில் அவர்களுக்கு ஏற்படும் மகிழ்வான/சோகமான நிகழ்வுகளே இதற்கு காரணம்..இதை மற்றவர்கள் விமர்சனம் செய்வத்றகு ஒன்றும் இல்லை

நல்ல பதிவு தம்பி//

தனக்கு நேர்ந்ததை வைத்து முடிவு செய்வது தனக்கு மட்டுமே பொருந்தும். மற்றவருக்கு அல்ல என்ற உண்மை தெரியுமானால் ஒரு பிரச்சினையும் இருக்காது.

யாழினி அத்தன் said...

தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை என்பதுதான் நிஜம். கடவுள் நம்பிக்கையும்
இல்லாமல், கடவுள் மறுப்புக்கொள்கையிலும் இல்லாமல் ஒரு பிரிவு இருக்கிறார்கள்.
Agnostic என்பதுதான் அது. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று முடிவெடுக்க
முடியாத ஒரு நிலைதான் Agnostic. ஒருவேளை அந்த கூட்டத்தை சேர்ந்தவனாக
இருப்பேன் போல.


உங்கள் சந்தேகங்களுக்கு பக்கங்கள் பதில் எழுதலாம். ஆனால் எங்கோ படித்த ஒரு சிறிய கதை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

ஒருமுறை புத்தரிடம் ஒருவர் வந்து கடவுள் இருக்கிறாரா? என்று வினவ தன் வாழ்நாள் முழுவதையும் இதைத் தெரிந்துகொள்ள அற்பணித்த புத்தரோ, பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாய் இருந்தாராம். அந்த மனிதர் சென்றவுடன் புத்தரின் சீடர்கள் புத்தரிடம் உங்களுக்குத் தெரியும் கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்று. ஆனால் ஏன் மௌனமாக இருந்தீர்கள் என்று தெரியவில்லை என்றனர். அதற்கு புத்தர், ஒருவேளை நான் கடவுள் இருக்கிறார் என்று சொன்னால், அந்த மனிதர் எங்கே நிரூபியுங்கள் என்று அடுத்த கேள்விக்கு தாவியிருப்பான், அல்லது இல்லை என்று சொன்னால், விவாதம் செய்ய ஆரம்பித்திருப்பான். ஒருவர் கேள்வியிலேயே அதற்கான பதில் அடங்கியிருக்கும். ஒரு geniune கேள்வியை அதை கேட்பவரின் மனதை வைத்து எளிதில் இனங் காண முடியும் என்று பதில் சொன்னாராம்.

கடவுள் இருக்கிறார், அல்லது இல்லை என்ற இரண்டு விவாதங்களுமே, குழம்பிய்ருக்கும் மன நிலையில் எழும், பாதி நிரம்பிய குடத்தைப் போல. இதன் மூல் காரணம் 'அறியாமை'. அந்த அறியாமை தான் இங்கு நாம் பார்க்கும் விவாதங்கள். குடம் நிரம்பிவிட்டால் தழும்பல் இருக்காது.

கதிர் said...

//அருமையான பதிவு தம்பி, இது போன்ற பதிவுகளாலேயே தமிழ்மணம் பக்கம் வந்தாலே ஒரு மாதிரி வெறுப்பு தோன்றுகிறது.//

நன்றி சந்தோஷ்

கதிர் said...

//மிக அருமையான பதிவு.
சமீபத்தில் கமலஹாசனின் பேட்டி ஒன்றை ஒரு பதிவில் பார்த்தேன்.
அதில் மனிதனின் பிரச்சினைகளை விட்டு விட்டு கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று சண்டை போடுவது எவ்வளவு தேவையற்றது என்று குறிப்பிட்டிருந்தார்.
உங்கள் பதிவை பார்த்தால் அதுதான் ஞாபகம் வருகிறது. அவங்க அவங்க இஷ்டப்பட்டி ஏதாவது பண்ணிட்டு போகட்டும் , ஏன் சில பேருக்கு இந்த கொலைவெறி அப்படின்னு எனக்கு தோன்றி இருக்கிறது.
உருப்படியான இந்த பதிவுக்கு நன்றி :-) //

நன்றி CVR.

கதிர் said...

//மிக அருமையான பதிவு.
சமீபத்தில் கமலஹாசனின் பேட்டி ஒன்றை ஒரு பதிவில் பார்த்தேன்.
அதில் மனிதனின் பிரச்சினைகளை விட்டு விட்டு கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று சண்டை போடுவது எவ்வளவு தேவையற்றது என்று குறிப்பிட்டிருந்தார்.
உங்கள் பதிவை பார்த்தால் அதுதான் ஞாபகம் வருகிறது. அவங்க அவங்க இஷ்டப்பட்டி ஏதாவது பண்ணிட்டு போகட்டும் , ஏன் சில பேருக்கு இந்த கொலைவெறி அப்படின்னு எனக்கு தோன்றி இருக்கிறது.
உருப்படியான இந்த பதிவுக்கு நன்றி :-) //

நன்றி CVR.

கதிர் said...

//அட்டகாசமான பாயிண்ட் :)//

நன்றி ராம் அண்ணே!

கதிர் said...

//+ + +... //

_/\_ _/\_ _/\_

கதிர் said...

//சூப்பர் பதிவு கதிர்...

தற்போது தேவையான பதிவு தான் இது. //

நன்றி கோபி.

கதிர் said...

//யாரையும் காயப்படுத்தாமல் என் எண்ணத்தை அல்லது நம்பிக்கையை சொல்வதில் தவறில்லையே. இந்த பதிவில் நீங்கள் உங்கள் எண்ணத்தை அல்லது நம்பிக்கையை வெளியிட்டுள்ளீர்கள்.//

தவறில்லையென்றால் சரிதான்.

//யாரையும் காயப்படுத்தாத எண்ணம்தான், எழுத்துதான் வலையுலகை சுகானுபவமாக ஆக்கும். இல்லையா தம்பி?//

சரியாக சொன்னீர்கள். எதிர்கருத்துக்கள் நியாயமாகவும் கண்ணியமான முறையிலும் சொன்னாலே பாதி சண்டைகள் குறையும்.

கருத்துக்கு நன்றிங்க சுல்தான்.

துளசி கோபால் said...

உண்டென்றால் உண்டு
இல்லையென்றால் இல்லை.

கடவுள்ன்றது சிலைகள் இல்லைப்பா. அது ஒரு உணர்வு.

அது ஒவ்வொருத்தருக்கும் வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களைப்
பொறுத்தது.

நம்பறதுக்கும் நம்பாததுக்கும் மனம்தான் காரணம்.

நல்ல பதிவு.

என் பொண்ணு, தன்னை ஒரு atheist ன்னு சொல்லிக்கிறாள்.
அது அவளுடைய நம்பிக்கை. இருந்துட்டுப்போகட்டுமே. அதனால என்ன?

Thamizhan said...

நல்லா சொல்லியிருக்கீங்க.வாழ்த்துக்கள்.
பக்திங்கறது சொந்த விஷயம்.பாத் ரூம் மாதிரி.
ஒழுக்கம் என்கிறது,பொது ஓட்டல்,ஆபீசு மாதிரி.
ரெண்டையும் கலக்குறப்பத்தான் கலகங்களே உண்டாகுது!

கதிர் said...

//கதிரு நான் இது போன்ற அப்படின்னு சொன்னது உன்னோட பதிவை இல்லை சண்டை போடுவது, சாதிய பதிவுகள் போன்றவைகளை.//

நீங்க இந்த விளக்கம் குடுக்கவேண்டிய அவசியமே இல்லிங்க சந்தோஷ். நானே புரிஞ்சிப்பேன். இருந்தாலும் விளக்கம் குடுத்தது ரொம்ப சந்தோஷம்.

கதிர் said...

//இன்னோரு + + + :) //

வாங்க பொன்ஸக்கா!

நன்றி _/\_ _/\_ _/\_

கதிர் said...

//கடவுள் இருக்கிறார், அல்லது இல்லை என்ற இரண்டு விவாதங்களுமே, குழம்பிய்ருக்கும் மன நிலையில் எழும், பாதி நிரம்பிய குடத்தைப் போல. இதன் மூல் காரணம் 'அறியாமை'. அந்த அறியாமை தான் இங்கு நாம் பார்க்கும் விவாதங்கள். குடம் நிரம்பிவிட்டால் தழும்பல் இருக்காது. //

வாங்க யாழினி அத்தன்.

தங்களின் நீண்ட பின்னூட்டத்துக்கும் கதைக்கும் நன்றி.

வெகுவாக ரசித்தேன்.

நீங்க சொல்ற மாதிரி பார்த்தா நான் காலிக்குடம். அதனால தளும்பாம இருக்கறேனா? :))

அபி அப்பா said...

தம்பி! நல்லா குழம்பியிருக்கே, இதோ இந்த கதையையும் கேள்!

ஒரு பக்கா நாத்திகவாதி ஒரு மலையின் உச்சிக்கு போனானாம். அப்போ கால் தடுக்கி கிடுகிடு பள்ளத்தில் விழுந்துவிட்டானாம். அப்போ புன்னகைமன்னன் கமல் மாதிரி ஒரு சின்ன மரக்கிளையில் புடுச்சிகிட்டான். அவன் பிழைக்க வழியே இல்லை. 1 மணி நேரம் தொங்கிய பிறகு "சரி கடவுள் உண்டு கடவுள் உண்டுன்னு சொல்றாங்களே நாமும் ஒரு முறை ஆத்திகத்துக்கு மாறி கடவுளை கூப்பிட்டாயென்னன்னு "கடவுளே என்னை காப்பாத்து"ன்னு கூப்பிட்டானாம்.

சரி நம்மள கூப்பிடாதவன் கூப்பிடரானே போய் காப்பாத்துவோம்ன்னு கடவுளும் போய் அவன் முன்னே தோன்றி "இப்போது என்னை முழுசா நம்புறியா?"ன்னு கேட்டாராம். ஆஹா கடவுளே வந்துட்டாரேன்னு அவனும் "நம்புகிறேன், என்னை காப்பாத்துங்க"ன்னு சொன்னான்.

அதுக்கு கடவுள் " சரி அந்த மரகிளையை விட்டுவிடு" ன்னார்.

அதற்கு அவன்"போய்யா பைத்தியம், எனக்கு இப்போ இருக்கிற ஒரே சோர்ஸே அந்த கிளைதான் அதையும் விட சொல்றியே, இவ்வளவு அறிவு கெட்ட முட்டாலான உன்னய போய் கடவுள் கடவுள்ன்னு கும்பிடுறாங்களே இந்த பாழா போன மக்கள்" அப்டீன்னானாம்.

கதை முடிஞ்சுது. (அப்பாடா தம்பிய நல்லா குழப்பிவிட்டாச்சு, இனி சந்தோஷமா நம்ம ஆணி புடுங்க ஆரம்பிக்கலாம்)

அபிமன்யு said...

//அதற்கு அவன்"போய்யா பைத்தியம், எனக்கு இப்போ இருக்கிற ஒரே சோர்ஸே அந்த கிளைதான் அதையும் விட சொல்றியே, இவ்வளவு அறிவு கெட்ட முட்டாலான உன்னய போய் கடவுள் கடவுள்ன்னு கும்பிடுறாங்களே இந்த பாழா போன மக்கள்" அப்டீன்னானாம்//

அந்த நாத்திகவாதி கால் இடறி விழுந்தது இரவு நேரத்தில்...விடியற்காலையில் பார்த்தபோது அவன் தரையிலிருந்து மூன்றடி உயரத்தில் தொங்கிக்கொண்டிருந்தான் என்பதாகவும் அந்த கதை முடியும்... இதற்குள் நான் என்னுடைய எந்த நம்பிக்கைகளையும் ஒளித்துவைக்கவில்லை.. மற்றபடி, இந்தப் பதிவு பெரும்பாலோரின் உள்ளக்கிடக்கையே...

ஷைலஜா said...

கொஞ்சம் தாமதமா இதப்படிச்சேனா பின்னூட்டமும் லேட் ஆயிடிச்சி. இப்படித்தான் சில அருமையான பதிவுகளை நான் தவறவிட்டுட்றேன்.
நல்ல பதிவு தம்பி. அனுபவங்களைப்பொறுத்துத்தான் நம்பிக்கையும் அவநம்பிக்கையும் கடவுள்மீது வருதுன்னு மங்கை சொல்றது 100%உண்மை. கடவுள் நம்பிக்கையே இல்லாத ஒருவன் மனிதாபிமான அடிப்படையில் கீழே தவறி விழ இருந்த கிழவரைக்காப்பாற்றுகிறான், உடனே அவர் அவனிடம்,"தெய்வம் மாதிரி வந்து காப்பாத்திட்டேப்பா" என்கிறார்.
இங்கே யார் கடவுள்?:)
ஷைலஜா

கதிர் said...

//கதை முடிஞ்சுது. (அப்பாடா தம்பிய நல்லா குழப்பிவிட்டாச்சு, இனி சந்தோஷமா நம்ம ஆணி புடுங்க ஆரம்பிக்கலாம்) //

கதை முடியல, முடியற கதை இல்ல அது.

கதிர் said...

//அந்த நாத்திகவாதி கால் இடறி விழுந்தது இரவு நேரத்தில்...விடியற்காலையில் பார்த்தபோது அவன் தரையிலிருந்து மூன்றடி உயரத்தில் தொங்கிக்கொண்டிருந்தான் என்பதாகவும் அந்த கதை முடியும்... இதற்குள் நான் என்னுடைய எந்த நம்பிக்கைகளையும் ஒளித்துவைக்கவில்லை.. மற்றபடி, இந்தப் பதிவு பெரும்பாலோரின் உள்ளக்கிடக்கையே... //

இது கூட நல்லாதான் இருக்கு...

கதிர் said...

//கொஞ்சம் தாமதமா இதப்படிச்சேனா பின்னூட்டமும் லேட் ஆயிடிச்சி. இப்படித்தான் சில அருமையான பதிவுகளை நான் தவறவிட்டுட்றேன்.
நல்ல பதிவு தம்பி. அனுபவங்களைப்பொறுத்துத்தான் நம்பிக்கையும் அவநம்பிக்கையும் கடவுள்மீது வருதுன்னு மங்கை சொல்றது 100%உண்மை. கடவுள் நம்பிக்கையே இல்லாத ஒருவன் மனிதாபிமான அடிப்படையில் கீழே தவறி விழ இருந்த கிழவரைக்காப்பாற்றுகிறான், உடனே அவர் அவனிடம்,"தெய்வம் மாதிரி வந்து காப்பாத்திட்டேப்பா" என்கிறார்.
இங்கே யார் கடவுள்?:)
ஷைலஜா //

வாங்க ஷைலஜா!

தாமதமா வந்தாலும் படிச்சிங்கல்ல அதுவே போதும்.

நல்ல பதிவுன்னு சொல்லிட்டிங்க ரொம்ப சந்தோஷம்.

அவரவர் அனுபவங்களை பொறுத்துதான் கடவுள் இருப்பை உணர்கிறார்கள் என்றால் அனைவருக்கும் ஒரே மாதிரி அனுபவங்கள் அமைவதில்லையே.

பிற உயிர்களிடத்தில் அன்பு, தினம் பார்க்கிற மனிதர்களிடன் இன, மத பேதமின்றி நட்பு பாராட்டினாலே வாழ்க்கை இனிமையாக அமைந்து விடும்.

சுருங்க சொன்னால் அன்பே சிவம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோதரி.

அடிக்கடி வாங்க.

Anonymous said...

கதிர் நீங்க இப்படி எல்லாம் எழுதுவீங்களா??அருமை.

அபி அப்பா said...

//கதிர் நீங்க இப்படி எல்லாம் எழுதுவீங்களா??அருமை. //

பின்ன மொக்கை மட்டும் தான்னு நெனச்சீங்களா?:-)))

லொடுக்கு said...

எழுத்து வன்முறையால் ஒருவர் மத நம்பிக்கையை தவறென்று நம்பவைப்பதோ, கடவுள் இல்லை என்பவரை நம்பவைப்பதோ, கடவுள் உண்டு என்பவரை நம்பவைப்பதோ கடினம். அதுவும் இங்கு(பதிவுலகில்) மிகக்கடினம். இங்கு வருபவர்கள் பெரும்பாலும் ஒரு 'மைண்ட்-செட்'டுடனே வருகிறார்கள்.

ஆகையால், தரமான தாக்குதலில்லாத, எல்லா தரப்பு விடயங்களையும் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் பதியலாம். விவாதம் செய்யலாம். எது சரியென்று முடிவெடுப்பது படிப்பவர் கையில். ஒருபோதும் திணிப்பு கூடாது.

என்ன தம்பி சரியா?

Anonymous said...

//பின்ன மொக்கை மட்டும் தான்னு நெனச்சீங்களா?:-))) //

அய்யோ கதிர் நான் அப்படி நினைக்கவே இல்லை.இந்த அபி அப்பா என்னை வம்பில் மாட்டி விட பார்க்கின்றார்.இதற்கு முன் உங்க பதிவை படிச்சதே இல்லை.இப்போ நீங்க தமிழ் மணத்தில் நட்சத்திரம் ஆன போதுதான் படிக்க ஆரம்பித்தேன்.முதலில் படித்த பதிவுகள் எல்லாம் நகைச்சுவையாக இருந்தது.இது மற்ற பதிவுகளை விட சற்றே வேறுபட்டு இருந்தது.அதான் அப்படி சொன்னேன் :)

கதிர் said...

//கதிர் நீங்க இப்படி எல்லாம் எழுதுவீங்களா??அருமை. //

எப்பவாச்சும் நல்லதா எழுதுவேன்.

நன்றி துர்கா!

கதிர் said...

//எழுத்து வன்முறையால் ஒருவர் மத நம்பிக்கையை தவறென்று நம்பவைப்பதோ, கடவுள் இல்லை என்பவரை நம்பவைப்பதோ, கடவுள் உண்டு என்பவரை நம்பவைப்பதோ கடினம். அதுவும் இங்கு(பதிவுலகில்) மிகக்கடினம். இங்கு வருபவர்கள் பெரும்பாலும் ஒரு 'மைண்ட்-செட்'டுடனே வருகிறார்கள்.

ஆகையால், தரமான தாக்குதலில்லாத, எல்லா தரப்பு விடயங்களையும் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் பதியலாம். விவாதம் செய்யலாம். எது சரியென்று முடிவெடுப்பது படிப்பவர் கையில். ஒருபோதும் திணிப்பு கூடாது.

என்ன தம்பி சரியா? //

மிகச்சரியா சொன்னிங்க லொடுக்கு! பலருக்கு இது புரிந்தாலும் புரியாதது போல விவாதம் என்ற பெயரில் செய்கின்றனர்.

கதிர் said...

//அய்யோ கதிர் நான் அப்படி நினைக்கவே இல்லை.இந்த அபி அப்பா என்னை வம்பில் மாட்டி விட பார்க்கின்றார்.இதற்கு முன் உங்க பதிவை படிச்சதே இல்லை.இப்போ நீங்க தமிழ் மணத்தில் நட்சத்திரம் ஆன போதுதான் படிக்க ஆரம்பித்தேன்.முதலில் படித்த பதிவுகள் எல்லாம் நகைச்சுவையாக இருந்தது.இது மற்ற பதிவுகளை விட சற்றே வேறுபட்டு இருந்தது.அதான் அப்படி சொன்னேன் :)//

விடுங்க துர்கா! அவர் எப்பவுமே இப்படித்தான்.

K.R.அதியமான் said...

To : Thiru Sujatha Rangarajan

Dear Sir,

Hindu concepts of transmigration of soul, rebirth can be used to justify or rationalise the unfairness of life on earth. God' dharma or ethics is incomprehensible to our human logic. Good people
suffer needlessly while evil people flourish and die
peacefully. so it seems. In Astrology, the fifth house
denotes prevoius births or purva punya sthanam.
And our current life and events are based on tallying
the good/bad things we had done in prevoius births.

Only if we can understand or accept such logic can we
justify or rationalise life's contradictions and
unfairness.

Hope you must have read Razor's Edge by your favourite
author Somerset Maughaum, based on Ramanar and India.
It is his most important work. Pls re-read Larry's
experiences and inferences again. About Godliness
and human life and soul.

Also R.K.Narayan's auto-biography "My Days" and
semi-autobiographical novel "English Teacher" are
important books about tranmigration of soul. he says he
established contact with his late wife (who passed
away in 1939) ; and he is not unscientific.

Astrology, as in weekly predictions or sun-signs are
generalised and can be quite inaccurate. Only a
correct interpretation of horoscope can give accurate results
and analysis. The character of an individual, his
strenghts and weakness, biases , health, appearance
,etc can be predicted accurately in our Indian
methods. Pls try to meet Thiru.A.M.R of Kumudam
jodhidam for a discussion. Or you can enquire about
his merits and accomplishments with your contacts at
Kumudam office, etc. You may be in for a surprise.

I am from a DK background, but now an ametuer
astrologer ; and can understand many facets or life
and humans better now.

more later

Sincerely Yours
Athiyaman
Chennai