மூன்று மாதங்களுக்கு முன்பு தாய்மாமாவின் வீட்டிற்கு சென்ற போது மாமா தனது
மகன் சரியாக படிப்பதில்லை என்று குறைபட்டுக்கொண்டார். தன்னைப்போலவே
டீக்கடையில் டீ ஆத்துகிற வேலை செய்யாமல் கொஞ்சமாவது படிக்க வைக்கலாம்னு
நினைச்சா அத புரிஞ்சிக்காம எந்த நேரமும் எதையாச்சும் வாங்கிட்டு வந்து வளக்கறேன்னு
சொல்லிகிட்டே இருக்கான். போனமாசம் சேத்துவெச்சிருந்த காசையெல்லாம் எடுத்துகிட்டு
மீன் தொட்டி, கலர் மீன், மீனுக்கு தீனின்னு முன்னூறு ரூபாயை செலவு பண்ணிட்டு
வந்தான். இந்தமாசம் நாலு புறாவை வாங்கிட்டு வந்து எந்த நேரமும் அதையே
பாத்துகிட்டு இருக்கான். இன்னிக்கு எங்கயிருந்தோ மூணு பூனைய தூக்கிட்டு வந்துட்டான்.
எல்லாமே ரவ ரவ பூனை. அவனுக்கு எது குடுத்தாலும் முழுசா தான் வளக்கறதுக்கு
செலவு செஞ்சிடறான். பிராணிகள் மேல இருக்கற அக்கறை கொஞ்சமாச்சும் படிக்கறதுல
இருந்தா உருப்படலாம். இந்த வருசம் பத்தாவது தேறுவானான்னு சந்தேகமா இருக்கு.
இப்படி குறைபட்டுக்கொண்டார்.
மாமா பையனான முரளிக்கு படிப்புமேல எந்தவிதமான அபிப்ராயமும் இல்லை. அது
தனக்கு வரவில்லையே என எந்த கவலையும் இருப்பதாக கூட தெரியவில்லை. எனக்கு
அவனை சிறுவயதுமுதலே தெரியும். அறிவுரை சொன்னாலும் புரிந்துகொள்ளும் பக்குவம்
கிடையாது. அமைதியாக எதையும் கேட்டுக்கொள்வான். அடுத்தநொடி சொல்வதற்கு
எதிராக செய்துகொண்டிருப்பான். கண்டித்தால் கூட சிரித்துவிட்டு நாம் மறந்து சிறிது
நேரம் கழித்துப்பார்த்தால் புறாவையே பார்த்துக்கொண்டிருப்பான்.
மாமா பூனைகளை இரவோடு இரவாக எங்கேயோ கொண்டுபோய் விட்டார். மீன்
தொட்டியை யாருக்கோ கொடுத்துவிட்டார். அதிகாலையில் கிளம்பிய என்னிடம் நான்கு
புறாக்களை பெட்டியில் அடைத்துக் கொடுத்துவிட்டார். கலங்கிய கண்களுடன் என்னையே
பார்த்துக்கொண்டிருந்தான் முரளி. அந்த புறாக்களை எடுத்துப்போக எனக்கு துளியும்
விருப்பமில்லை. எனினும் எதிர்வரும் முழுத்தேர்வில் தேர்ச்சியாகவேண்டுமெனில்
கொஞ்சமாவது படிக்கவேண்டும் என்ற காரணத்தால் நான் எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்.
புறாக்களை எடுத்துவந்துவிட்டே ஒழிய அதை எங்கே வைப்பது என்று தெரியவில்லை.
நல்ல கூண்டு ஒன்றை செய்யவேண்டும். இதற்கே எனக்கு இரண்டுநாள் ஆனது. புறாவுக்கு
என்ன தீனி போனவேண்டும் என்பதை முரளி அழுதுகொண்டே சொன்னது நினைவுக்கு
வந்தது. கம்பு, கேழ்வரகு, ஒவ்வொரு கிலோ அதுகூட நூறுகிராம் பொட்டுக்கடலை
சேத்து கலந்து ஒரு டப்பாவுல வெச்சுக்கோங்க மாமா. காலைல ரெண்டு கை, மாலைல
ரெண்டு கை வாசல்ல தூவுனிங்கன்னா ஒவ்வொன்னா பொறுக்கி தின்னும். சிமெண்ட்
அள்ளுற பாண்டு வீட்டுல இருக்கா? இருந்ததுன்னா அதுல நிறைய தண்ணி ஊத்தி
வாசல்ல வெச்சிருங்க. அதுல தண்ணி குடிச்சிக்கும். வெயில் வேற அதிகமா அடிக்குதுல்ல
மதியத்துல அதுல குளிச்சிக்கும். மார்கெட் பக்கம் போனா காய்கறி அடைச்சு வெச்சிருக்க
மரப்பெட்டி கிடைக்கும் அதை வாங்கி நம்ம வீட்டுக்கு முன்னாடி மல்லிகைப் பந்தல்
இருக்குல்ல அதுமேல வெச்சிடுங்க. அப்பப்போ துடைப்ப குச்சிய ஒடச்சி தீனி போடற
எடத்துல போட்டிங்கன்னா அது கூடுமாதிரி ஒண்ணு ரெடி பண்ணிக்கும். முட்ட
வெச்சிதுன்னா பதினஞ்சி நாள்ல பொறிஞ்சிடும். மூச்சு விடாமல் சொல்லி முடித்தான்
முடிக்கும்போது அவனது அழுகை காணாமல் போயிருந்தது.
கிளம்பும்போது அருகில் வந்தான். "மாமா அடுத்த மாசம் நான் லீவ் விட்ருவாங்க
அங்க வந்துருவேன். மஞ்ச தடவிடாதிங்க என்று கேட்டுக்கொண்டான்". எவ்ளோ
அழகா இருக்கு இத போய் யாராச்சும் அடிச்சு சாப்பிடுவாங்களா... ஒழுங்கா படி
என்று சொல்லிக் கிளம்பினேன். பத்து மாத்திரை கொண்ட அட்டை ஒன்றை நீட்டி
"இது நியூரோபின் மாத்திரை இத தண்ணில கலந்து வெச்சிட்டிங்கன்னா ஒரு
நோயும் வராது" என்று கையில் வைத்து அழுத்தினான்.
பாட்டி வீட்டுக்கு விடுமுறையில் செல்லும்போதெல்லாம் வீட்டின் பின்புறம் உள்ள
கோயிலில் புறாக்களை பார்த்துக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. அங்கிருந்தவை
எல்லாம் பழுப்பு நிற புறாக்கள். இவை அழகான வெள்ளைப் புறாக்கள்.
சிறுவயதில் பயணம் செய்யும்போதெல்லாம் ஒரு எலுமிச்சை பழத்தை வாங்கித்தருவார் அப்பா. வாந்தி வராமல் இருக்க அது உதவுதாக சொல்வார். மேலதிகமாக இரு பாலிதீன்
பைகளையும் என் கையில் கொடுப்பார் அதை உபயோகிக்காமல் கர்மசிரத்தையாக யார்
மடியிலாவது வாந்தி எடுத்து வைப்பேன். ஆனால் விவரம் தெரிந்தபிறகு பேருந்து
பயணங்களில் தலைசுற்றல், வாந்தி போன்றவை நின்று விட்டது. இன்னமும்
முரளிக்கு வாந்தி வியாதி நிற்கவில்லை போல. தேர்வு முடிந்த மறுநாள் தனியனாக
பேருந்தில் ஏறி எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டான். வருவதற்கு முன்னிரவும் காலையும்
ஆகாரம் எடுத்துக்கொள்ளாமல் பேருந்தில் ஏறி இருக்கிறான். அதனால் வாந்தி தலை
சுற்றல் இல்லை.
வந்த முதல் வேலையாக புறாக்களை பார்க்க ஆரம்பித்தவன் நாளின் தூங்கும் நேரம்
போக மற்ற நேரங்களில் திண்ணையில் அமர்ந்துகொண்டு மல்லிகைக்கொடி பந்தலின்
மேல் உள்ள மரப்பெட்டியையே பார்த்துக்கொண்டிருப்பான். வாழைமரத்தில் சிறிது
நேரம், மாமரத்தில் சிறிது நேரம் தரையில் தானியங்கள் பொறுக்கியபடி சிறிது நேரம்
என புறாக்கள் இருந்தது.
ஒருமுறை திண்ணையில் முரளியுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். வழக்கம்போல
புறாக்களை பார்த்துக்கொண்டிருந்தான். அவை கூறையின் மத்தில் ஏறி அங்கேயும்
இங்கேயும் நடந்துகொண்டிருந்தன.
மாமா அங்க பாருங்க கால்ல முடி இருக்கறது பெண் புறா கொஞ்சம் தள்ளி இருக்குதே
அது ஆண்புறா அது ரெண்டும் ஒரு ஜோடி. இந்தப்பக்கம் கூறையில இருக்கறது ஒரு
ஜோடி. இப்ப பாருங்க அந்த பெண்புறாவ அந்த ஆண்புறா மெறிக்கும் பாருங்க.
"மெறிக்கறதுனா என்னடா?"
"ஏறி அழுத்தும்பாருங்க"
"ஏறி அழுத்தறதுனா... என்னடா?"
"அதான் மாமா... அது... அப்பதான் புறா முட்ட போடும்"
"ஓஹ் அதுவா... சரி எத்தன நாள்ல முட்ட போடும்?
அது சரியா தெரியல ஆனா கொஞ்ச நாள்ல முட்ட போடும். ரெண்டே ரெண்டு முட்டதான்
போடும். அது முட்ட போடறதுக்கு ஒருவாரம் முன்னாடி கூடுகட்ட ஆரம்பிச்சிடும்.
அப்போ ஆண்புறா என்ன செய்யும்னா அங்க இங்க அலஞ்சு சின்ன சின்ன குச்சிகள
தூக்கிட்டு வந்து போடும். அத வெச்சு பெண் புறா சின்ன மேடை மாதிரி செய்யும்.
அதுலதான் முட்டய போடும். அப்போ யாரும் கூண்டுப்பக்கம் போவகூடாது. அப்படி
போய் முட்டய பாத்துட்டிங்கன்னா அவ்ளோதான் அது முட்டய அதுவே கீழ தள்ளி
ஒடச்சிடும்.
"ஏண்டா அப்டி பண்ணுது... ?
அது அப்டிதான் மாமா...
ஒரு தடவ அப்டிதான் என் ப்ரெண்டு ஒருத்தன் ஆசையா முட்டைய எடுத்து பாத்தானா
அந்த புறா முட்டைய கீழ தள்ளி ஒடச்சிடுச்சி.
"ஏண்டா அப்டி?
அது அப்டிதான்னு சொல்றேன்ல. மனுசங்க கை பட்டா அது கூழ் முட்டையாகிடும்னு
நினைக்கிறேன்.
"புறான்னா உனக்கு அவ்ளோ இஷ்டமா?
"ஆமாம்"
"இதுல காட்டற அக்கறைய படிப்புல காமிச்சா நீ பாஸ் ஆகிடலாம் தெரியுமா"
"அதான் எனக்கு வரமாட்டேங்குதே மாமா... என்ன செய்ய?"
"நீ மட்டும் பத்தாவது அப்புறம் பன்னிரண்டாவது பாஸ் பண்ணிட்டேன்னு வையி...
பறவைகள பத்தி ஆராய்ச்சி செய்றதுக்குன்னே ஒரு படிப்பு இருக்கு அதுக்கு பேர்
ஆர்னித்தாலஜி அத படிக்கலாம்". உலகம் முழுக்க இருக்கற பறவைகள பாத்துட்டே
இருக்கலாம். அதபத்தியும் படிக்கலாம் என்ன சொல்ற?
"நெஜமாவா மாமா"
"ம்ம்... படிப்பியா"?
பாக்கலாம் என்றபடி மறுபடி புறாக்களை பார்க்க ஆரம்பித்துவிட்டான். படிப்பு சம்பந்தமான
விஷயங்களை அவனிடம் பேச ஆரம்பித்தால் அவமானத்தில் குறுகி நிற்கும் மனிதனைப்
போல முகம் மாறிவிடுகிறது. இதனாலேயே அவனிடத்தில் படிப்பைப் பற்றி மட்டும்
பேசுவதில்லை.
இப்படித்தான் அவனிடம் பேச அமர்ந்தால் புறாவில் ஆரம்பித்து அங்கேயே முடிப்பான்.
கொஞ்ச நேரத்தில நாமும் அப்படியே மாறிவிடவும் வாய்ப்பிருக்கிறது.
ஒரு சுபயோக சுபநாளில் ஆண்புறா சிறு சிறு குச்சிகளை சேகரிக்க ஆரம்பித்தது.
பரபரப்பாக மாறினான் முரளி. தென்னந்துடைப்பத்தில் உள்ள குச்சிகளை ஒவ்வொன்றாக
உருவி புறா இருக்குமிடங்களில் எல்லாம் போட்டான். அதற்காக அத்தையிடமிருந்து
திட்டு வாங்கினான்.
"தொடப்பக்குச்சிய ஒடச்சி போட்ட அப்புறம் அத்தாலயே அடி வாங்குவ நீ..."
வேப்பமரத்தின் காய்ந்த கொப்புகளை உடைத்து அந்தச்சிறிய குச்சிகளை சேகரித்து
வந்து அதற்கு மாற்றாக தூவினான. பிறகு திண்ணையில் வந்து அமர்ந்தான்.
"மாமா இப்ப பாருங்க குச்சி பொறுக்கும்..."
அவன் சொன்னது போலவே புறா தயக்கமாக நடந்து வந்து அலகில் கொத்தியவாறு
பறந்து சென்று கூண்டுக்குள் வைத்தது. நாள் முழுக்க சேகரித்து மறுநாள் பார்த்தபோது
அங்கே தட்டுபோன்ற அமைப்பில் கூடு உருவாகியிருந்தது.
அடைகாக்குற நேரத்துல பெண்புறா வெளியவே போவாது மாமா... இப்போ மத்தியானம்
உள்ள போச்சுன்னா அவ்ளோதான். மறுநாள் மதியானமாத்தான் வெளிய வரும் அதுவும்
அதிகம்போனா ஒருமணிநேரம்தான். அந்த ஒருமணி நேரந்தான் ஆண் புறா அடைகாக்கும்.
மத்தபடி எல்லாமே பெண்புறாதான் செய்யனும். அது ரொம்ப பாவம் மாமா.
புறாக்களைப் பற்றியே பேசுவது எனக்கே எரிச்சலாகத்தான் இருந்தது.
முட்டை வைத்த மறுநாள் இங்கு கிளம்பி வந்திருந்தேன். இரண்டு வாரங்கள்
கழித்து தொலைபேசியபொழுது முரளி பேசினான்.
"மாமா இன்னிக்கு காலைல ரெண்டு முட்டையும் பொரிஞ்சிடுச்சி". ரெண்டு குட்டிப்புறா
இப்போ இருக்கு. மொத்தமா ஆறுபுறா இருக்கு நம்மகிட்ட...
இந்த வித்யா தொத்தாகிட்ட சொல்லுங்க மாமா. அடிக்கடி குட்டிப்புறாவ தொட்டுப்பாக்கறாங்க
எதாச்சும் ஆயிடும்னு சொன்னா கேக்க மாட்டேங்கறாங்க. நீங்க கொஞ்சம் சொல்லுங்க
மாமா...
"ம் சொல்றேண்டா போன குடு"
இப்போ குட்டிப்புறாவுக்கு பெண் புறாதான் எல்லாமே கொடுக்கும். குட்டிப்புறா
ஆ னு வாயபொளந்துட்டு இருக்கும் அது உள்ள தீனிய போடும்.
சரிடா போன வைக்கிறேன்.
போனை வைத்தபிறகு கிம் கி டுக்கின் Isle படத்தின் ஒரு காட்சி நினைவுக்கு வந்தது. அப்படத்தின் நாயகி ஒரு தவளையைப் பிடித்து அதைத் தரையில் அடித்து சாகடிப்பாள். பிறகு தவளையின் தொடைக்கறியை நாயகன் வளர்க்கும் பறவைக்கு தின்னக்கொடுப்பாள். அப்போது அவளது உதடுகள் குவிந்திருக்கும்
பார்ப்பதற்கு புறாவினைப்போலவே வெள்ளையாக இருப்பாள்.
எல்லையற்ற அன்பு கொள்வோம்
Sunday, May 10, 2009
Saturday, April 11, 2009
வாத்தியார் அண்ணன்
இங்கு வந்து மூன்று நாட்களாகின்றன. இதற்கு முன் நாட்கள் அதன் தொடர்ச்சியில் செல்வதுபோலத்தான் இருந்தது. இங்கு வந்த இந்த மூன்று நாட்கள் தனித்தனியான வெவ்வேறு நாட்களாக தெரிகின்றன. முற்றிலும் புதுமையான உலகம் அதே பழைய முகங்களில் காண்கிறேன். அயல்தேசம் என்பதன் அர்த்தம் இப்போது புரிகிறது. அவரவர் வேலையில் அவரவர். வேலைவிட்டு வரும்போதும் போகும்போதும் ஒரு புன்னகையோடு எல்லாமும் முடிந்துவிடுகிறது. பகல்வேளைகளில் என்னை தனிமை தின்னத்தொடங்கியது. எல்லோரும் வேலையோடு வரும் இந்த தேசத்தில் வேலைதேடி வந்தது என் தவறுதான் என்று முதல்தினமே உணர்ந்திருந்தேன்.
நகரத்தின் பிரதான இடத்தில் அமைந்திருந்த இந்த அறையில் பன்னிரண்டு பேர் தங்கியிருந்தார்கள் இரண்டு அடுக்குகள் கொண்ட நான்கு படுக்கைகள். கட்டிலுக்கு
அடியிலும் ஒருவர். டிவி சாப்பாடு வைக்கும் இடம் போக ஒரு ஆள் படுக்கக்கூடிய இடத்தில்தான் இப்போது நான் தங்கியிருக்கிறேன். இரவில் அனைவரும் உறங்கிய
பின்னரே அந்த இடத்தை நான் சுதந்திரமாக ஆளமுடியும். மற்ற நேரத்தில் அது
பொதுஇடம். பகல் வேளைகளில் வாத்தியார் அண்ணன் மட்டும் இருப்பார். அவருக்கு
பேச்சு வராது என்றே நினைத்திருந்தேன். ஆனால் வெள்ளிக்கிழமை அன்று மட்டும்
தன் மனைவியிடம் ஓரிரு வார்த்தைகள் பேசியதை கேட்டிருந்தேன். மீதமுள்ள
நேரங்களில் ஒரு தத்துவஞானியைப்போல அமைதிகாப்பார். இந்த உலகத்தின்
மேல் பற்றில்லாத வாழ்க்கையை அவர் வாழ்ந்துவருகிறார் என்று நினைத்திருந்தேன். அபூர்வமாக எப்போதாவது குறுநகை வெளிப்படும். அறையே வெடித்துச்சிதறும்
அளவுக்கு சிரிப்பொலி கேட்டுக்கொண்டிருக்கும்போது இவர் சலனமே இல்லாமல் டிவி பார்த்துக்கொண்டிருப்பார்.
அந்த அறையிலேயே ஆகக்குறைந்த வயதினன் நான் மட்டுமே அதனால் அனைவருக்கும் தம்பி ஆகிப்போனேன். அந்த வகையில் வாத்தியார் அவர்களையும் அண்ணன் என்றே அழைப்பேன். அதாவது வாத்தியார் அண்ணன் தூங்குகிறார், சாப்பிடுகிறார் என்பதை
வேறு யாராவது ஒருவரிடம் சொல்லும்போது மட்டும். அவருடன் பேசவேண்டும்
என்று நினைத்தாலும் அதற்கான வாய்ப்பை அவர்தான் தரவேண்டும். ஆகவே அவரைப்போலவே தத்துவ ஞானியைப்போல நான் காத்துக் கொண்டிருந்தேன்.
மற்றவர்களிடம் வாத்தியார் அண்ணனைப்பற்றி சில தகவல்கள் கேட்டும் பார்த்தும்
தெரிந்து கொண்டிருந்தேன். அவருக்கும் பன்னாட்டும் கம்பெனிகளில் அழகுக்காக வைத்திருக்கும் செடிகளை பராமரிக்கும் வேலை. அமீரகத்தின் எட்டுத்திசைகளிலும்
சென்று இலை துடைக்கும் மனிதர். இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் எனக்கு
மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இலை துடைப்பதற்கு கூடவா சம்பளம் தருகிறார்கள்
என்று. இவர் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இவர் பொறுப்பாக சில அலுவலகங்களை ஒதுக்கியிருந்தார்கள். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அந்தந்த பகுதிகளுக்கு சென்று
பழுத்த இலைகளை ஒதுக்கிவிட்டு இலைகளை துடைக்கவேண்டும் தேவையானால்
உரம் போடவேண்டும். பிறகு தண்ணீர் விட்டுவரவேண்டும். இந்த வேலைகளை
செய்து வரும் ஒரு இந்திய நிறுவனத்திலேதான் அவர் வேலை செய்துவந்தார்.
தவிர அவருக்கு எந்த எண் கொண்ட பேருந்து எந்த திசையில் எந்தெந்த நேரத்தில் பயணிக்கும் குறிப்பாக ஒரு இடத்திற்கு செல்லவேண்டும் என்றால் எந்த பேருந்தை பிடிக்கவேண்டும் என்று தெளிவாக தெரியும். நேர்முகத்திற்கு செல்லும்போதெல்லாம் அவரிடமே வழிகேட்பேன். என் முகத்தை பார்க்காமலே பதில் சொல்வார். சொல்லி முடித்துவிட்டு எழுதியும் கொடுப்பார். அதில் எந்த இடத்தில் இறங்கவேண்டும்
அவ்விடத்தின் குறிப்பு, பேருந்து எண் எல்லாமே இருக்கும். கழட்டிபோட்ட
உள்ளாடையை எங்குவைத்தோம் என்றுகூட மறக்கும் என்போன்ற மறதிக்காரனுக்கு
இவை ஆச்சரியத்தை அளிக்கும் விதமாக இருந்தது. மேலும் அவர் வாங்கும் 1200 திர்காமுக்கு ஒவ்வொரு மாதமும் துள்ளியமாக செலவுக்கணக்கு எழுதி வைப்பார்.
இதற்கென ஒரு தனி நாட்குறிப்பை உபயோகித்துவந்தார். தின நிகழ்வுகளுடன் செலவுக்கணக்கை எழுதிவைத்துக்கொள்வார். அதில் 25 பைசா கூட கூடவும் செய்யாது குறையவும் செய்யாது. மொத்தத்தில் அவர் கணக்கு பார்க்கும் மென்பொருளை விட சிறப்பாக அவர் கணக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.
இவரிடமிருந்து செலவுக்கணக்கை எழுதும் பழக்கத்தை எப்படியாவது தத்தெடுத்துக்கொள்ள
வேண்டும் என்ற என் ஆசை இன்னமும் பேராசையாகவே இருக்கிறது. ஒரு விடுமுறை தினத்தில் வாத்தியார் அண்ணனுக்கு ஏன் வாத்தியார் என்ற பெயர் வந்தது என்று விசாரித்துக்கொண்டிருந்தேன் அப்போது நண்பர் சொன்னது. சின்ன வயசுலயே படிப்புல ரொம்ப சுட்டியாதான் இருந்தான். அம்மாவோட மரணம் பிறகு சித்தியோட வருகை
அவரது நிராகரிப்புகள் போன்ற பலவிஷயங்கள் வெகுவாக பாதித்திருந்தன.
இயல்பிலேயே அவனுக்கு வாத்தியார் ஆகி பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டும்
என்ற ஆவல் இருந்தது. அதற்கேற்பவே ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து
படித்து சான்றிதழ் பெறும் நிலையில் அவர் பயிற்சி பெற்ற நிறுவனம் அரசின் ஒப்புதல் இல்லாமல் மூடவேண்டிய நிலை. வேலைபெறுவோம் என்ற நம்பிக்கை பொய்த்து போனசமயத்தில் இங்கே வந்திருக்கிறார். வாத்தியார் ஆகவேண்டும் என்ற கனவு
கனவாகவே போய்விட்டது. ஒருவேளை அப்படி ஆகியிருந்தால் ஒருநாளில் நிறைய
வார்த்தைகள் பேசியிருப்பாரோ என்னவோ.
ஒருவர் அடையமுடியாத லட்சியத்தை ஒவ்வொரு முறையும் அதன் பெயர் கொண்டு விளிப்பது கத்தியால் குத்துவது போன்றே கருதுகிறேன். அவரை எந்த பெயர்
சொல்லியும் அழைப்பதில்லை. ஒருநாள் கத்திரி வெயில் கொளுத்திய பிற்பகல்
வேளையில் வழக்கம்போல நான் தனித்திருந்தேன். வழக்கம்போலவே வாத்தியார்
அண்ணன் வந்தார், வழக்கம்போல உடுப்பு களைந்து உடல் கழுவி வந்தார். ஆனால்
வழக்கம்போல தட்டு நிறைய சோறுபோட்டு சாப்பிடவில்லை. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சிறிது நேரம் சுவற்றையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு
விரக்தியான குரலில் இந்த உலகத்துல கடவுளே இல்ல கதிரு என்று ஆரம்பித்தார்.
அவர் அப்படி பேசுபவரல்ல. இதுபோன்ற சமயங்களில் ஆறுதல் கூற என்னிடம்
வார்த்தைகள் இருக்காது. மிகுந்த தர்மசங்கடமாக உணர்ந்ந்திருந்தேன். "என்னண்ணே
ஆச்சு" என்றேன்.
வாரத்திற்கு மும்முறை சென்று செடிகளை பராமரிக்கும் பன்னாட்டு வங்கியில் ஒரு
ஈரானிய விதவைப் பெண்மணியும் வேலை செய்கிறார். உயர்ந்த பதவியில் இருக்கும் அவருக்கு ஒரே மகன். வங்கி ஒரு உலகம் என்றால் மகன் இன்னொரு உலகம். அவர் வீட்டிலே கூட சில அழகுச்செடிகள் வைத்திருக்கிறார். அவற்றை பராமரிப்பதன் மூலம் எனக்கு சிறிய தொகை ஒன்றையும் கொடுப்பார். மிகவும் தன்மையானவர்
அதிகம் பேசமாட்டார். திருமணமும், கணவரின் இறப்பும் காரணமாக இருக்கலாம்.
என்னிடம் கொஞ்சம் நன்றாக பழகுவார். எங்கள் சம்பாசனைகளில் மொழி ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை. எனக்கு கொஞ்சம் அரபி தெரியும். அவருக்கு
கொஞ்சம் ஆங்கிலம் தெரியும் ஆனால் இவற்றை தெரிந்து வைத்திருப்பதால்
அதிக பிரயோஜனம் இல்லை.
அவர் தன் மகனுடன் நேற்று ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் இரவு உணவு சாப்பிட்டிருக்கிறார்கள். உணவே விஷமாகி மகனை கொன்றிருக்கிறது. உறங்கிய நிலையிலேயே உடல் நீலம் பாரித்து இறந்திருக்கிறான். உணவே விஷமாக
உருமாறும் அதிசயம் ஐந்து நட்சத்திர விடுதிகளில் மாத்திரமே சாத்தியம். என் கல்லூரி வாழ்க்கை முழுக்க சாக்கடை ஓர தள்ளுவண்டிகளில் இட்லி, பரோட்டா சாப்பிடுவதை மட்டுமே விரும்புவேன். குளிரூட்டப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுகள்தான்
நஞ்சாக மாறுவதை இந்த விஞ்ஞானமும் அறிவியலும் கண்டுபிடித்திருக்கின்றன.
அதன் மூலம் கடைசியாக இந்த உலகத்தில் அவருக்கிருந்த ஒரு உயிரும் நேற்றோடு முடிவுக்கு வந்திருக்கிறது இன்று அந்த அலுவலகம் சென்று பார்த்தபோது சொன்னார்கள்.
அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்திருந்தது. வாத்தியார்
அண்ணனுக்கு திருமணமாகி ஐந்தாறு வருடங்கள் இருக்கும். இன்னும் குழந்தையில்லை. இல்லாத குழந்தைக்கு ஏங்கும் ஒருவர். இருக்கும் மகனை இழந்த ஒருவர். கடவுள் கண்ணயர்ந்திருக்கிறார் போல.
சில மாதங்கள் கழித்து ஒருநாள் தன் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துவிட்டு நாடு திரும்பிவிட்டார். முன்பே என்னிடம் அதை என்னிடம் கூறியிருந்தார். காலப்போக்கில்
நானும் இடம்பெயர்ந்து சில ஆண்டுகள் ஓடிவிட்டதால் சுத்தமாக மறந்துவிட்டிருந்தேன். ஒருநாள் தொலைபேசினார். எனக்குத் தெரிந்து அயல் தேசத்தில் மொபைல் போன் இல்லாமல் பத்து வருடங்களைக் கழித்த ஒரே மனிதர் அவராகத்தான் இருப்பார். ஏன்
என்று ஒருமுறை கேட்டிருக்கிறேன். எதற்கு என்று அவர் பதில் கூறினார். அதோடு
முடிந்து போனது அந்த கேள்வி. தான் திரும்ப வேலைக்கு வந்திருப்பதாக சொன்னார்.
எப்படி இருக்கிறீர்கள் என்றேன். மிகவும் சந்தோஷமாக இருப்பதாக
சொன்னார். மூன்று வருடங்களில் தனக்கு ஒரு பெண்குழந்தை பிறந்திருப்பதாகவும்
குடும்ப சூழ்நிலை கருதி திரும்பவும் வந்திருக்கிறார். கோடி கொடுத்தாலும் இந்த
தேசத்திற்கு வரமாட்டேன் என்று சொல்லிச்சென்றவர். என் மனம் மௌனமாக
பிரார்த்தனை செய்துகொண்டது.
நகரத்தின் பிரதான இடத்தில் அமைந்திருந்த இந்த அறையில் பன்னிரண்டு பேர் தங்கியிருந்தார்கள் இரண்டு அடுக்குகள் கொண்ட நான்கு படுக்கைகள். கட்டிலுக்கு
அடியிலும் ஒருவர். டிவி சாப்பாடு வைக்கும் இடம் போக ஒரு ஆள் படுக்கக்கூடிய இடத்தில்தான் இப்போது நான் தங்கியிருக்கிறேன். இரவில் அனைவரும் உறங்கிய
பின்னரே அந்த இடத்தை நான் சுதந்திரமாக ஆளமுடியும். மற்ற நேரத்தில் அது
பொதுஇடம். பகல் வேளைகளில் வாத்தியார் அண்ணன் மட்டும் இருப்பார். அவருக்கு
பேச்சு வராது என்றே நினைத்திருந்தேன். ஆனால் வெள்ளிக்கிழமை அன்று மட்டும்
தன் மனைவியிடம் ஓரிரு வார்த்தைகள் பேசியதை கேட்டிருந்தேன். மீதமுள்ள
நேரங்களில் ஒரு தத்துவஞானியைப்போல அமைதிகாப்பார். இந்த உலகத்தின்
மேல் பற்றில்லாத வாழ்க்கையை அவர் வாழ்ந்துவருகிறார் என்று நினைத்திருந்தேன். அபூர்வமாக எப்போதாவது குறுநகை வெளிப்படும். அறையே வெடித்துச்சிதறும்
அளவுக்கு சிரிப்பொலி கேட்டுக்கொண்டிருக்கும்போது இவர் சலனமே இல்லாமல் டிவி பார்த்துக்கொண்டிருப்பார்.
அந்த அறையிலேயே ஆகக்குறைந்த வயதினன் நான் மட்டுமே அதனால் அனைவருக்கும் தம்பி ஆகிப்போனேன். அந்த வகையில் வாத்தியார் அவர்களையும் அண்ணன் என்றே அழைப்பேன். அதாவது வாத்தியார் அண்ணன் தூங்குகிறார், சாப்பிடுகிறார் என்பதை
வேறு யாராவது ஒருவரிடம் சொல்லும்போது மட்டும். அவருடன் பேசவேண்டும்
என்று நினைத்தாலும் அதற்கான வாய்ப்பை அவர்தான் தரவேண்டும். ஆகவே அவரைப்போலவே தத்துவ ஞானியைப்போல நான் காத்துக் கொண்டிருந்தேன்.
மற்றவர்களிடம் வாத்தியார் அண்ணனைப்பற்றி சில தகவல்கள் கேட்டும் பார்த்தும்
தெரிந்து கொண்டிருந்தேன். அவருக்கும் பன்னாட்டும் கம்பெனிகளில் அழகுக்காக வைத்திருக்கும் செடிகளை பராமரிக்கும் வேலை. அமீரகத்தின் எட்டுத்திசைகளிலும்
சென்று இலை துடைக்கும் மனிதர். இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் எனக்கு
மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இலை துடைப்பதற்கு கூடவா சம்பளம் தருகிறார்கள்
என்று. இவர் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இவர் பொறுப்பாக சில அலுவலகங்களை ஒதுக்கியிருந்தார்கள். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அந்தந்த பகுதிகளுக்கு சென்று
பழுத்த இலைகளை ஒதுக்கிவிட்டு இலைகளை துடைக்கவேண்டும் தேவையானால்
உரம் போடவேண்டும். பிறகு தண்ணீர் விட்டுவரவேண்டும். இந்த வேலைகளை
செய்து வரும் ஒரு இந்திய நிறுவனத்திலேதான் அவர் வேலை செய்துவந்தார்.
தவிர அவருக்கு எந்த எண் கொண்ட பேருந்து எந்த திசையில் எந்தெந்த நேரத்தில் பயணிக்கும் குறிப்பாக ஒரு இடத்திற்கு செல்லவேண்டும் என்றால் எந்த பேருந்தை பிடிக்கவேண்டும் என்று தெளிவாக தெரியும். நேர்முகத்திற்கு செல்லும்போதெல்லாம் அவரிடமே வழிகேட்பேன். என் முகத்தை பார்க்காமலே பதில் சொல்வார். சொல்லி முடித்துவிட்டு எழுதியும் கொடுப்பார். அதில் எந்த இடத்தில் இறங்கவேண்டும்
அவ்விடத்தின் குறிப்பு, பேருந்து எண் எல்லாமே இருக்கும். கழட்டிபோட்ட
உள்ளாடையை எங்குவைத்தோம் என்றுகூட மறக்கும் என்போன்ற மறதிக்காரனுக்கு
இவை ஆச்சரியத்தை அளிக்கும் விதமாக இருந்தது. மேலும் அவர் வாங்கும் 1200 திர்காமுக்கு ஒவ்வொரு மாதமும் துள்ளியமாக செலவுக்கணக்கு எழுதி வைப்பார்.
இதற்கென ஒரு தனி நாட்குறிப்பை உபயோகித்துவந்தார். தின நிகழ்வுகளுடன் செலவுக்கணக்கை எழுதிவைத்துக்கொள்வார். அதில் 25 பைசா கூட கூடவும் செய்யாது குறையவும் செய்யாது. மொத்தத்தில் அவர் கணக்கு பார்க்கும் மென்பொருளை விட சிறப்பாக அவர் கணக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.
இவரிடமிருந்து செலவுக்கணக்கை எழுதும் பழக்கத்தை எப்படியாவது தத்தெடுத்துக்கொள்ள
வேண்டும் என்ற என் ஆசை இன்னமும் பேராசையாகவே இருக்கிறது. ஒரு விடுமுறை தினத்தில் வாத்தியார் அண்ணனுக்கு ஏன் வாத்தியார் என்ற பெயர் வந்தது என்று விசாரித்துக்கொண்டிருந்தேன் அப்போது நண்பர் சொன்னது. சின்ன வயசுலயே படிப்புல ரொம்ப சுட்டியாதான் இருந்தான். அம்மாவோட மரணம் பிறகு சித்தியோட வருகை
அவரது நிராகரிப்புகள் போன்ற பலவிஷயங்கள் வெகுவாக பாதித்திருந்தன.
இயல்பிலேயே அவனுக்கு வாத்தியார் ஆகி பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டும்
என்ற ஆவல் இருந்தது. அதற்கேற்பவே ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து
படித்து சான்றிதழ் பெறும் நிலையில் அவர் பயிற்சி பெற்ற நிறுவனம் அரசின் ஒப்புதல் இல்லாமல் மூடவேண்டிய நிலை. வேலைபெறுவோம் என்ற நம்பிக்கை பொய்த்து போனசமயத்தில் இங்கே வந்திருக்கிறார். வாத்தியார் ஆகவேண்டும் என்ற கனவு
கனவாகவே போய்விட்டது. ஒருவேளை அப்படி ஆகியிருந்தால் ஒருநாளில் நிறைய
வார்த்தைகள் பேசியிருப்பாரோ என்னவோ.
ஒருவர் அடையமுடியாத லட்சியத்தை ஒவ்வொரு முறையும் அதன் பெயர் கொண்டு விளிப்பது கத்தியால் குத்துவது போன்றே கருதுகிறேன். அவரை எந்த பெயர்
சொல்லியும் அழைப்பதில்லை. ஒருநாள் கத்திரி வெயில் கொளுத்திய பிற்பகல்
வேளையில் வழக்கம்போல நான் தனித்திருந்தேன். வழக்கம்போலவே வாத்தியார்
அண்ணன் வந்தார், வழக்கம்போல உடுப்பு களைந்து உடல் கழுவி வந்தார். ஆனால்
வழக்கம்போல தட்டு நிறைய சோறுபோட்டு சாப்பிடவில்லை. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சிறிது நேரம் சுவற்றையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு
விரக்தியான குரலில் இந்த உலகத்துல கடவுளே இல்ல கதிரு என்று ஆரம்பித்தார்.
அவர் அப்படி பேசுபவரல்ல. இதுபோன்ற சமயங்களில் ஆறுதல் கூற என்னிடம்
வார்த்தைகள் இருக்காது. மிகுந்த தர்மசங்கடமாக உணர்ந்ந்திருந்தேன். "என்னண்ணே
ஆச்சு" என்றேன்.
வாரத்திற்கு மும்முறை சென்று செடிகளை பராமரிக்கும் பன்னாட்டு வங்கியில் ஒரு
ஈரானிய விதவைப் பெண்மணியும் வேலை செய்கிறார். உயர்ந்த பதவியில் இருக்கும் அவருக்கு ஒரே மகன். வங்கி ஒரு உலகம் என்றால் மகன் இன்னொரு உலகம். அவர் வீட்டிலே கூட சில அழகுச்செடிகள் வைத்திருக்கிறார். அவற்றை பராமரிப்பதன் மூலம் எனக்கு சிறிய தொகை ஒன்றையும் கொடுப்பார். மிகவும் தன்மையானவர்
அதிகம் பேசமாட்டார். திருமணமும், கணவரின் இறப்பும் காரணமாக இருக்கலாம்.
என்னிடம் கொஞ்சம் நன்றாக பழகுவார். எங்கள் சம்பாசனைகளில் மொழி ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை. எனக்கு கொஞ்சம் அரபி தெரியும். அவருக்கு
கொஞ்சம் ஆங்கிலம் தெரியும் ஆனால் இவற்றை தெரிந்து வைத்திருப்பதால்
அதிக பிரயோஜனம் இல்லை.
அவர் தன் மகனுடன் நேற்று ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் இரவு உணவு சாப்பிட்டிருக்கிறார்கள். உணவே விஷமாகி மகனை கொன்றிருக்கிறது. உறங்கிய நிலையிலேயே உடல் நீலம் பாரித்து இறந்திருக்கிறான். உணவே விஷமாக
உருமாறும் அதிசயம் ஐந்து நட்சத்திர விடுதிகளில் மாத்திரமே சாத்தியம். என் கல்லூரி வாழ்க்கை முழுக்க சாக்கடை ஓர தள்ளுவண்டிகளில் இட்லி, பரோட்டா சாப்பிடுவதை மட்டுமே விரும்புவேன். குளிரூட்டப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுகள்தான்
நஞ்சாக மாறுவதை இந்த விஞ்ஞானமும் அறிவியலும் கண்டுபிடித்திருக்கின்றன.
அதன் மூலம் கடைசியாக இந்த உலகத்தில் அவருக்கிருந்த ஒரு உயிரும் நேற்றோடு முடிவுக்கு வந்திருக்கிறது இன்று அந்த அலுவலகம் சென்று பார்த்தபோது சொன்னார்கள்.
அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்திருந்தது. வாத்தியார்
அண்ணனுக்கு திருமணமாகி ஐந்தாறு வருடங்கள் இருக்கும். இன்னும் குழந்தையில்லை. இல்லாத குழந்தைக்கு ஏங்கும் ஒருவர். இருக்கும் மகனை இழந்த ஒருவர். கடவுள் கண்ணயர்ந்திருக்கிறார் போல.
சில மாதங்கள் கழித்து ஒருநாள் தன் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துவிட்டு நாடு திரும்பிவிட்டார். முன்பே என்னிடம் அதை என்னிடம் கூறியிருந்தார். காலப்போக்கில்
நானும் இடம்பெயர்ந்து சில ஆண்டுகள் ஓடிவிட்டதால் சுத்தமாக மறந்துவிட்டிருந்தேன். ஒருநாள் தொலைபேசினார். எனக்குத் தெரிந்து அயல் தேசத்தில் மொபைல் போன் இல்லாமல் பத்து வருடங்களைக் கழித்த ஒரே மனிதர் அவராகத்தான் இருப்பார். ஏன்
என்று ஒருமுறை கேட்டிருக்கிறேன். எதற்கு என்று அவர் பதில் கூறினார். அதோடு
முடிந்து போனது அந்த கேள்வி. தான் திரும்ப வேலைக்கு வந்திருப்பதாக சொன்னார்.
எப்படி இருக்கிறீர்கள் என்றேன். மிகவும் சந்தோஷமாக இருப்பதாக
சொன்னார். மூன்று வருடங்களில் தனக்கு ஒரு பெண்குழந்தை பிறந்திருப்பதாகவும்
குடும்ப சூழ்நிலை கருதி திரும்பவும் வந்திருக்கிறார். கோடி கொடுத்தாலும் இந்த
தேசத்திற்கு வரமாட்டேன் என்று சொல்லிச்சென்றவர். என் மனம் மௌனமாக
பிரார்த்தனை செய்துகொண்டது.
Monday, March 30, 2009
நகரத்துப் பூக்கள்
காற்றடிக்கும்போதெல்லாம் என்னறையின்
வாசல்புற சாக்கடையில் பூக்கள் மிதந்து
வருகின்றன. பக்கத்து வீட்டின்
காம்பவுண்ட் சுவர்களுக்கப்பால் வளர்ந்த
பவழமல்லிகை கிளையொன்று
காற்றுடன் சல்லாபிக்கும் ஒவ்வொரு
தருணத்திலும் பூக்களை உதிர்க்கின்றது.
இத்தெருவிலே பல பூமரங்களுண்டு
அனைத்துமே சுவரைவிட்டு தள்ளியே
கிளைபரப்புகிறது. அனைத்துமே பூக்களை
உதிர்க்கின்றது பல வண்ணங்களில்
சாக்கடைப்பூக்கள். இந்த நகரத்திலே
பெண்கள் பூக்களை சூடுவதில்லை
சாக்கடைக்குதான் வாய்த்திருக்கிறது.
வாசல்புற சாக்கடையில் பூக்கள் மிதந்து
வருகின்றன. பக்கத்து வீட்டின்
காம்பவுண்ட் சுவர்களுக்கப்பால் வளர்ந்த
பவழமல்லிகை கிளையொன்று
காற்றுடன் சல்லாபிக்கும் ஒவ்வொரு
தருணத்திலும் பூக்களை உதிர்க்கின்றது.
இத்தெருவிலே பல பூமரங்களுண்டு
அனைத்துமே சுவரைவிட்டு தள்ளியே
கிளைபரப்புகிறது. அனைத்துமே பூக்களை
உதிர்க்கின்றது பல வண்ணங்களில்
சாக்கடைப்பூக்கள். இந்த நகரத்திலே
பெண்கள் பூக்களை சூடுவதில்லை
சாக்கடைக்குதான் வாய்த்திருக்கிறது.
Monday, March 16, 2009
நாட்குறிப்பு போன்றவை 1
சென்ற வார இறுதியில் வாசுதேவநல்லூர் செல்வதற்காக அரசு விரைவுப்பேருந்தில்
ஏறி அமர்ந்திருந்தேன். மிகப்பெரும்பாலும் அது ஓட்டை ஒடிசலாக இருந்தாலும்
தொல்லைக்காட்சி பொட்டி இல்லையென்றால் அரசுப்பேருந்தில் மட்டுமே பயணம்
செய்யும் கெட்ட பழக்கம் எனக்கு உண்டு. இப்படி செல்லும்போதெல்லாம் எனக்கு
ஒரு சந்தேகம் வருவதுண்டு அது வீட்டிலிருந்து கிளம்பும்போதே இரண்டு தூக்க
மாத்திரையை வாயில் போட்டு சப்பிக்கொண்டே வருவார்களா என்பதுதான்.
இருக்கையில் அமர்ந்த மறுவினாடியில் குறட்டையை கெளப்புகிறார்கள். பலவருடங்களாக
ஒரு வியாதி என்னை பாடாய் படுத்துகிறது பேருந்து, விமானம், ரயில், இன்னபிற
எந்த வாகனங்களில் சென்றாலும் அது எத்தனை மணி நேரம் என்றாலும் இம்மி
அளவு தூக்கம் வராது. என்றாவது ஒருநாள் வந்தால் அது பேரதிசயம்.
எனக்கு பக்கத்து இருக்கை முன்பதிவு செய்தவர் தாம்பரத்தில்தான் ஏறுவார் என்றார்கள்
கோயம்பேட்டிலிருந்து தாம்பரத்துக்கு வர அந்த விரைவுப்பேருந்து எடுத்துக்கொண்டது
120 நிமிடங்கள். அதற்குள் குளிர்சாதனம் வேலை செய்யல, துண்டு குடுக்கல, சீட்டு
நாறுதுன்னு ஏகப்பட்ட புகார்கள். எனக்கு ஒரு புகாரும் இல்லை ஆனால் ஒரு வேண்டுதல்
இருந்தது. முன்பதிவு இருக்கையில் எதாவது ஒரு அகண்ட உருவமில்லாத ஆசாமி
மேலதிகமாக ஒரு சுமாரான பிகர் அமர்ந்தால் பயணம் சுகப்படுமே என்று வேடப்பாரிடம்
மனுப்போட்டபடி அமர்ந்திருந்தென். வேடப்பாருக்கு முந்தின வேண்டுதல்களே மூன்று
குவார்ட்டர்கள் பாக்கி உள்ளது. இதுவும் சேர்ந்ததென்றால் ஒரு ஃபுல்லாக வைத்து
விடலாம் என்று எண்ணத்தில் இருந்தபோது ஒரு சிவப்பான ஆள் வந்து உட்கார்ந்தார்.
குமாஸ்தா முகம். மண்ண போட்டுட்டியே நீயெல்லாம் ஒரு குலதெய்வமா என்று
மனதுக்குள் சபித்துக்கொண்டேன்.
வடகலையா தென்கலையா என்று பிரித்தரிவதில் நான் இன்னும் தேர்ச்சி பெறவில்லை.
பக்கத்தில் உட்கார்ந்த நபர் மேலே கைபட்டதும் அசூயையாக உணர்ந்தாரா என்னவோ
ஏளனமாக என்னைப்பார்த்தார். திரும்பி ஒருக்களித்துப்படுத்துக்கொண்டு குறட்டை விட
ஆரம்பித்தார். ஒருகட்டத்திற்குமேல் ஒன்று இரண்டாகி இரண்டு இருபதாகிப்போனது.
எனக்குப்பொறுக்கவில்லை. என் தொண்டையிலிருந்து அதிகபட்ச ஒலியினால் குறட்டை
விட ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட அது ஊளையினைப்போல இருந்திருக்கும்போல
அடித்து பிடித்து எழுந்துவிட்டனர் நான் ஒன்றுமே அறியாதவன் போல கண்ணை மூடி
அமர்ந்திருந்தேன்.
போகவர 24 மணி நேரப்பயணத்தில் நான் பேசிய வார்த்தைகள் என்னவென்று
யோசித்துப்பார்த்தேன். செல்பேசியில் பேசிய ஓரிருவார்த்தைகள் தவிர ஒருவார்த்தைகூட
பேசவில்லை.
கடந்த இரண்டு நாள் மழையில் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது
என்றார்கள். குற்றாலத்திற்கு நான் சென்றதே இல்லை போய்ப்பார்த்தேன். விக்ரமாதித்யன்
கவிதை நினைவுக்கு வந்தது. ஆசை தீர குளித்துமுடித்து வெளியேவந்தேன். சாலையில்
ஒருவர் டிவிஎஸ் அம்பதில் பதனி விற்றுக்கொண்டிருந்தார். குடிக்கலாம் என்று அருகில்
சென்றால் கள் இருக்குது குடிச்சி பாக்கறிங்களானே என்றார். தெய்வமே குடுங்க என்றேன்.
குடுத்தார் சர்க்கரைக் கரைசல் அது. எதுவும் சொல்லாமல் காசைக்கொடுத்துவிட்டு
"அண்ணே கள்ளுக்காரன காலைல எழுப்பி கூட்டிகிட்டே போய் கள்ளு குடிச்ச ஆளுங்க
நாங்க" என்றேன். காசுகுடுத்தாச்சில்ல எடத்த காலிபண்ணுடே என்கிறார்.
மனிதர்களுடன் சேர்ந்து குரங்குகளும் சிக்கன் சாப்பிட ஆரம்பித்துவிட்டன. அதுவும்
எலும்பை மரத்தின் மேலே எடுத்துபோய் கடித்து நம் தலையிலேயே குறிபார்த்து
எறியவும் தெரிகிறது அதற்கு. முத்துலிங்கத்தின் கட்டுரை ஒன்றுல் மேஜரது வளர்ப்பு
குரங்கு குறிப்பிட்ட நேரத்தில் பைப்பை திறந்து குளித்துவிட்டுப்போகும் என்று படித்த
ஞாபகம். வாசுதேவநல்லூர் அடுத்த தலையணை என்ற ஓடைக்கு நண்பர்களுடன்
சென்று அருவியில் குளித்துவிட்டு அங்கேயே சமையல் செய்து காட்டின் நடுவில்
உணவருந்தினோம். வழியில் சற்றுமுன்னர் யானை வந்துவிட்டுப்போன தடயங்கள்
இருந்தன. சூடான யானைச்சாணத்தை ஒருவர் பார்சல் கட்டி எடுத்துப்போனார்.
வாசுதேவநல்லூரில் பார்க்கும் வயல்களில் எல்லாம் மயில்களாக உள்ளது. ஒன்று
கூட தோகைவிரித்து ஆடவில்லை.
காதல் வைபோகமே பாடல் பார்த்தேன். நமீதா இல்லாவிட்டால் சரக்குகுமார், சுந்தர் சி
போன்றவர்கள் சினிமா அனாதைகள் ஆகிவிடுவார்கள் போல.
கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் அனைத்தையும் கிட்டத்தட்ட வாசித்து முடித்தாயிற்று.
வாசித்து நிமிர்ந்து வலைப்பூ படிக்க ஆரம்பித்தால் ஸ்க்ரோல் பண்ணமட்டுமே முடிகிறது.
தலைப்புகூட மனதில் தங்குவதில்லை.
பின்குறிப்பு: தம்பினு இன்னொருத்தர் எழுதறாங்கண்ணே, என்ன ஏதுன்னு விசாரிங்க,
பகுமானமா இருந்துக்கப்பு, உம்பேர்ல வேற யாரோ பாத்தனே தம்பி, தம்பி... எங்கய்யா
ஆளையே காணும் கேப்புல உன்பேர்ல இன்னொருத்தர பாத்தனேப்பா நிஜார கெட்டியா
புடிச்சக்கப்பு என்று நண்பர்கள் சொன்னார்கள்.
எனக்கே நீண்ட நாளாக இதை மாற்றுவதில் எண்ணம் அதற்கான காரணங்கள் மூன்று.
என்னப்பா தம்பி வேலுப்பிள்ளை பிரபாகரன் மாதிரி பேர் வெச்சுகிட்டியா...?
மாதவன்னு நினைப்பா...?
முத்துன மாங்கா மாதிரி இருந்துகிட்டு தம்பினு பேர் வெச்சிருக்கியே என்னப்பா நியாயம்?
புதுசா வந்திருக்கும்(?) தம்பி என்ற நண்பருக்காகவும் ரொம்ப நாளா மனசுல இருக்கற என்
எண்ணத்துக்காகவும் நானே வெச்சுகிட்ட இந்த பேர மாத்தி என் பேரையே வெச்சுகிட
போறேன்.
சுயகுறிப்பு, சோறுபொங்கி சாப்பிட்டது, இன்னபிற குறிப்புகள் எழுதறத விடணும்னு
நினைச்சாலும் முடியல. எழுறதே இல்லையே ஏம்பா கதிரு என்னு கேட்ட அந்த
இரண்டு நல்ல(?) உள்ளங்களுக்கும் இந்தப்பதிவு சமர்ப்பணம்.
ஏறி அமர்ந்திருந்தேன். மிகப்பெரும்பாலும் அது ஓட்டை ஒடிசலாக இருந்தாலும்
தொல்லைக்காட்சி பொட்டி இல்லையென்றால் அரசுப்பேருந்தில் மட்டுமே பயணம்
செய்யும் கெட்ட பழக்கம் எனக்கு உண்டு. இப்படி செல்லும்போதெல்லாம் எனக்கு
ஒரு சந்தேகம் வருவதுண்டு அது வீட்டிலிருந்து கிளம்பும்போதே இரண்டு தூக்க
மாத்திரையை வாயில் போட்டு சப்பிக்கொண்டே வருவார்களா என்பதுதான்.
இருக்கையில் அமர்ந்த மறுவினாடியில் குறட்டையை கெளப்புகிறார்கள். பலவருடங்களாக
ஒரு வியாதி என்னை பாடாய் படுத்துகிறது பேருந்து, விமானம், ரயில், இன்னபிற
எந்த வாகனங்களில் சென்றாலும் அது எத்தனை மணி நேரம் என்றாலும் இம்மி
அளவு தூக்கம் வராது. என்றாவது ஒருநாள் வந்தால் அது பேரதிசயம்.
எனக்கு பக்கத்து இருக்கை முன்பதிவு செய்தவர் தாம்பரத்தில்தான் ஏறுவார் என்றார்கள்
கோயம்பேட்டிலிருந்து தாம்பரத்துக்கு வர அந்த விரைவுப்பேருந்து எடுத்துக்கொண்டது
120 நிமிடங்கள். அதற்குள் குளிர்சாதனம் வேலை செய்யல, துண்டு குடுக்கல, சீட்டு
நாறுதுன்னு ஏகப்பட்ட புகார்கள். எனக்கு ஒரு புகாரும் இல்லை ஆனால் ஒரு வேண்டுதல்
இருந்தது. முன்பதிவு இருக்கையில் எதாவது ஒரு அகண்ட உருவமில்லாத ஆசாமி
மேலதிகமாக ஒரு சுமாரான பிகர் அமர்ந்தால் பயணம் சுகப்படுமே என்று வேடப்பாரிடம்
மனுப்போட்டபடி அமர்ந்திருந்தென். வேடப்பாருக்கு முந்தின வேண்டுதல்களே மூன்று
குவார்ட்டர்கள் பாக்கி உள்ளது. இதுவும் சேர்ந்ததென்றால் ஒரு ஃபுல்லாக வைத்து
விடலாம் என்று எண்ணத்தில் இருந்தபோது ஒரு சிவப்பான ஆள் வந்து உட்கார்ந்தார்.
குமாஸ்தா முகம். மண்ண போட்டுட்டியே நீயெல்லாம் ஒரு குலதெய்வமா என்று
மனதுக்குள் சபித்துக்கொண்டேன்.
வடகலையா தென்கலையா என்று பிரித்தரிவதில் நான் இன்னும் தேர்ச்சி பெறவில்லை.
பக்கத்தில் உட்கார்ந்த நபர் மேலே கைபட்டதும் அசூயையாக உணர்ந்தாரா என்னவோ
ஏளனமாக என்னைப்பார்த்தார். திரும்பி ஒருக்களித்துப்படுத்துக்கொண்டு குறட்டை விட
ஆரம்பித்தார். ஒருகட்டத்திற்குமேல் ஒன்று இரண்டாகி இரண்டு இருபதாகிப்போனது.
எனக்குப்பொறுக்கவில்லை. என் தொண்டையிலிருந்து அதிகபட்ச ஒலியினால் குறட்டை
விட ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட அது ஊளையினைப்போல இருந்திருக்கும்போல
அடித்து பிடித்து எழுந்துவிட்டனர் நான் ஒன்றுமே அறியாதவன் போல கண்ணை மூடி
அமர்ந்திருந்தேன்.
போகவர 24 மணி நேரப்பயணத்தில் நான் பேசிய வார்த்தைகள் என்னவென்று
யோசித்துப்பார்த்தேன். செல்பேசியில் பேசிய ஓரிருவார்த்தைகள் தவிர ஒருவார்த்தைகூட
பேசவில்லை.
கடந்த இரண்டு நாள் மழையில் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது
என்றார்கள். குற்றாலத்திற்கு நான் சென்றதே இல்லை போய்ப்பார்த்தேன். விக்ரமாதித்யன்
கவிதை நினைவுக்கு வந்தது. ஆசை தீர குளித்துமுடித்து வெளியேவந்தேன். சாலையில்
ஒருவர் டிவிஎஸ் அம்பதில் பதனி விற்றுக்கொண்டிருந்தார். குடிக்கலாம் என்று அருகில்
சென்றால் கள் இருக்குது குடிச்சி பாக்கறிங்களானே என்றார். தெய்வமே குடுங்க என்றேன்.
குடுத்தார் சர்க்கரைக் கரைசல் அது. எதுவும் சொல்லாமல் காசைக்கொடுத்துவிட்டு
"அண்ணே கள்ளுக்காரன காலைல எழுப்பி கூட்டிகிட்டே போய் கள்ளு குடிச்ச ஆளுங்க
நாங்க" என்றேன். காசுகுடுத்தாச்சில்ல எடத்த காலிபண்ணுடே என்கிறார்.
மனிதர்களுடன் சேர்ந்து குரங்குகளும் சிக்கன் சாப்பிட ஆரம்பித்துவிட்டன. அதுவும்
எலும்பை மரத்தின் மேலே எடுத்துபோய் கடித்து நம் தலையிலேயே குறிபார்த்து
எறியவும் தெரிகிறது அதற்கு. முத்துலிங்கத்தின் கட்டுரை ஒன்றுல் மேஜரது வளர்ப்பு
குரங்கு குறிப்பிட்ட நேரத்தில் பைப்பை திறந்து குளித்துவிட்டுப்போகும் என்று படித்த
ஞாபகம். வாசுதேவநல்லூர் அடுத்த தலையணை என்ற ஓடைக்கு நண்பர்களுடன்
சென்று அருவியில் குளித்துவிட்டு அங்கேயே சமையல் செய்து காட்டின் நடுவில்
உணவருந்தினோம். வழியில் சற்றுமுன்னர் யானை வந்துவிட்டுப்போன தடயங்கள்
இருந்தன. சூடான யானைச்சாணத்தை ஒருவர் பார்சல் கட்டி எடுத்துப்போனார்.
வாசுதேவநல்லூரில் பார்க்கும் வயல்களில் எல்லாம் மயில்களாக உள்ளது. ஒன்று
கூட தோகைவிரித்து ஆடவில்லை.
காதல் வைபோகமே பாடல் பார்த்தேன். நமீதா இல்லாவிட்டால் சரக்குகுமார், சுந்தர் சி
போன்றவர்கள் சினிமா அனாதைகள் ஆகிவிடுவார்கள் போல.
கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் அனைத்தையும் கிட்டத்தட்ட வாசித்து முடித்தாயிற்று.
வாசித்து நிமிர்ந்து வலைப்பூ படிக்க ஆரம்பித்தால் ஸ்க்ரோல் பண்ணமட்டுமே முடிகிறது.
தலைப்புகூட மனதில் தங்குவதில்லை.
பின்குறிப்பு: தம்பினு இன்னொருத்தர் எழுதறாங்கண்ணே, என்ன ஏதுன்னு விசாரிங்க,
பகுமானமா இருந்துக்கப்பு, உம்பேர்ல வேற யாரோ பாத்தனே தம்பி, தம்பி... எங்கய்யா
ஆளையே காணும் கேப்புல உன்பேர்ல இன்னொருத்தர பாத்தனேப்பா நிஜார கெட்டியா
புடிச்சக்கப்பு என்று நண்பர்கள் சொன்னார்கள்.
எனக்கே நீண்ட நாளாக இதை மாற்றுவதில் எண்ணம் அதற்கான காரணங்கள் மூன்று.
என்னப்பா தம்பி வேலுப்பிள்ளை பிரபாகரன் மாதிரி பேர் வெச்சுகிட்டியா...?
மாதவன்னு நினைப்பா...?
முத்துன மாங்கா மாதிரி இருந்துகிட்டு தம்பினு பேர் வெச்சிருக்கியே என்னப்பா நியாயம்?
புதுசா வந்திருக்கும்(?) தம்பி என்ற நண்பருக்காகவும் ரொம்ப நாளா மனசுல இருக்கற என்
எண்ணத்துக்காகவும் நானே வெச்சுகிட்ட இந்த பேர மாத்தி என் பேரையே வெச்சுகிட
போறேன்.
சுயகுறிப்பு, சோறுபொங்கி சாப்பிட்டது, இன்னபிற குறிப்புகள் எழுதறத விடணும்னு
நினைச்சாலும் முடியல. எழுறதே இல்லையே ஏம்பா கதிரு என்னு கேட்ட அந்த
இரண்டு நல்ல(?) உள்ளங்களுக்கும் இந்தப்பதிவு சமர்ப்பணம்.
Monday, January 12, 2009
நாட்குறிப்பு போன்றவை
பொதுவாக தற்கொலை செய்துகொள்பவர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
தீர்க்கமான முடிவுடன் தற்கொலை செய்துகொள்பவர் இவர் பிழைக்க வாய்ப்புகள்
இல்லாதவாறு சூழ்நிலையை அமைத்துக்கொள்வார். இரண்டாவது சுற்றத்தவரை
பயமுறுத்தவென்று தற்கொலை செய்துகொள்பவர் போல நடிப்பவர். மிகப்பெரும்பாலும்
இரண்டாவது வகையினர்தான் அதிகம். பல்வேறு பிரச்சினைகளால் தற்கொலை
முடிவு எடுப்பவர்கள் ஒருபுறம் என்றால் மறுபாதி காதல்தோல்வி என்ற காரணமே
பின்னால் இருக்கிறது (கள்ளக்காதலும் இதில் அடக்கம்).
இரண்டு வருடங்களுக்கு முன்பு பால்யகால சினேகிதன் ஒருவனின் அப்பா பூச்சிமருந்து
குடித்து தற்கொலை செய்துகொண்டார். வெற்றிலைத்தோட்டத்தில் வெற்றிலை திருடி
கையும் களவுமாக சிக்கிய அவமானத்தில் பூச்சிமருந்தை காதில் ஊற்றிக்கொண்டு
விட்டார். சில நிமிடங்களில் உயிர் பிரிந்துவிட்டது. பொண்டாட்டி வேறு ஒரு
ஆணுடன் படுத்ததால் தற்கொலை செய்துகொண்டார் என் பக்கத்துவீட்டுக்காரர்.
வினோதமான மருந்துநெடியுடன் முகம் மஞ்சள் நிறத்திற்கு மாறிப்போயிருந்தது
டவுசரை இறுக்கிப்பிடித்தபடி சேலைகளின் பின்புறத்தில் மறைந்திருந்து கண்ட
காட்சிகள் நினைவில் வருகின்றன. தேர்வில் தோல்வியடைவதால், கடன் தொல்லையால்,
சோரம் போனது தெரிந்துபோனதால், களவாடியதால் இப்படி நிறைய தற்கொலைகள்
சகஜம் இங்கே. வெளியூர் நண்பர் ஒருவர் சகநண்பர் பேசாமல் தன்னை உதாசீனப்படுத்துவதால் அதை தாங்கமுடியாது பூச்சி மருந்தைக் குடித்துவிட்டார்.
எப்படியோ அவசர அவசரமாக மருத்துவமனையில் சேர்த்து உயிர்பிழைக்க வைத்தனர்.
அவரைப் பார்த்து ஆறுதல் சொல்வதற்காக அம்மாவுடன் திருக்கோவிலூர் அரசு
மருத்துவமனைக்கு சென்றிருந்தேன், பழங்கால சுண்ணாம்பு சுவற்றுடனான ஓட்டுக்
கூரை கட்டிடம். சுவரெல்லாம் சுண்ணாம்பு உதிர்ந்துபோய் பரிதாபமான உணர்ச்சிகளை
மனதில் உருவாக்கியது. உள்புறம் தோற்றத்தில் சேதுபடத்தில் வரும் காட்சிகளை
நினைவுபடுத்துவது போல இருந்தது. சுவரோரங்களிலும், சில படுக்கைகளிலும்
நோயாளிகள் படுத்துக்கிடந்தனர். படுக்கை இல்லாததால் மூலையில் பாய் ஒன்றை
விரித்து அதில் படுக்க வைத்திருந்தனர் நண்பரை. சுவருக்குப் பின்னால் மூத்திரப்புரை
போல. நிற்கவே முடியவில்லை. பழங்களை அளித்துவிட்டு ஆறுதல் சொல்லிக்கொண்டு
இருந்தார். நான் சற்று நகர்ந்து மற்ற முகங்களை கவனிக்க ஆரம்பித்தேன். உலகத்தின்
துயரமான முகங்கள் தமிழக மருத்துவமனைகளில் மட்டுமே சாத்தியம் என்பதுபோல
இருந்தது. பல அலட்சியங்கள் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய அலட்சியமாக அதன் உருவம்
இருப்பது போல பட்டது. ஜன்னலின் ஓரத்தில் பச்சை நிறத்தில் பூச்சிக்கொல்லி
மருந்துக்குப்பி இருந்தது. அவர் குடித்ததாக இருக்கலாம் மேலும் இதுபோன்ற
கேஸ்களில் மருத்துவர் நோயாளி குடித்த வஸ்துவை பார்த்து அதற்கேற்றபடி மருந்து
தருவார். திறந்து முகர்ந்து பார்த்தேன் கூவமெல்லாம் பிச்சை வாங்கவேண்டும்.
குழப்பமான மனநிலைய உருவாக்குவதுபோல உணர்ந்ததால் கிளம்பலாம் என்று
அம்மாவுடன் கிளம்பினேன். மருத்துவமனை வாசலில் இடதுபுறம் ஒருதரம் திரும்பி
பார்த்தார் அம்மா. "அங்கேதாண்டா உன்னை பெத்தெடுத்தேன்" என்று சொன்னார்.
உன்ன மட்டும் இல்ல உங்க நாலு பேரையும் அங்கேதான் பெத்தேன் என்றும். உடனே
அங்கே சென்று பார்க்கவேண்டும் போல இருந்தது. கையைப்பிடித்து அழைத்துச்சென்றேன்.
அது ஒரு பெரிய ஓட்டுக்கூரையின் கீழ் அமைந்த கூடம். இரண்டாவது கட்டிலில்
சமீபத்தில் பிரசவித்த குழந்தையுடன் உறங்கிக்கொண்டிருந்தார் ஒருவர். அங்கேதான்
என்னையும் ஈன்றெடுத்ததாக அம்மா சொன்னார். நெகிழ்ச்சியாக உணர்ந்தேன்.
---
இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு தொலைக்காட்சிகளில் திமுகவின் பொதுக்குழு கூடி
தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதை நேரடியாக ஒளிபரப்பின. கலைஞர் கருணாநிதி
பத்தாவது முறையாக மீண்டும் தலைவராகவும், பொருளாலராக ஸ்டாலினும் தேர்ந்து
எடுக்கப்பட்டதாக முடிந்தது. கருணாநிதி அமெரிக்காவின் தொழிளார் கட்சிக்கோ அல்லது
இங்கேயே இருக்கும் எதோ ஒரு கட்சிக்கோ தலைவராக தேர்ந்தெடுக்கப்படவில்லை
அவரது கட்சிக்குதான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாரே ஒழிய வேறொன்றும்
இல்லை. உயிருள்ளவரை திமுகவிற்கும் தமிழகத்திற்கும் அவர்தான் தலைவரும்
முதல்வரும் ஆவார். மேலும் எந்த வாரிசை தலைமைப்பீடத்திற்கு அமர்த்தப் போகிறார் என்பதற்கு ஆதிதான் இது. இதற்கு நேரடி ஒளிபரப்பு, பட்டாசு வெடிப்பு என இத்தனை ஆர்ப்பாட்டம். இன்று காலை தேர்தல் வாக்குகளின் முன்னணி நிலவரங்களை ஆர்வமாக நண்பர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். வேடிக்கையாக இருந்தது. குழப்பமான எதிர்க்கட்சிகள்
அதன் கோமாளித்தலைவர்கள் என போட்டிக்களத்தில் இருக்கும்போது வெற்றிவாய்ப்பு
ஆளுங்கட்சிக்கு மட்டுமே இருக்கலாம். சகோதரி நமீதா என்று விளித்த சரத்குமார்
கட்சியின் வாக்கு எழுநூற்று சொச்சமாம். இது அவருக்கு முன்பே தெரிந்துவிட்டது
அதனால்தான் "வெற்றி முக்கியமல்ல களம் கண்பதுதான் முக்கியம்" என்று அவரே
அறிக்கை விட்டுவிட்டார். இந்தக்கோமாளிகள் காஷ்மீர் பனிமலையில் நாயகியின்
இடை தடவுவதோடு விட்டு விடுவதே சிறந்தது.
---
இப்பொழுதும் கிராமப்புறங்களில் தேர்தலின் போது "உங்கள் வாக்குகள் யாருக்கு" என்று
கேட்டால் எம்ஜியார் கட்சிக்கு என்றுதான் சொல்வார்கள். அதைப்போலவே இன்றும்
எந்த தொலைக்காட்சி பார்ப்பீர்கள் என்று கேட்டால் அதுவும் சன் டீவி மட்டுமே.
இதனால் வீட்டுக்குள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும் விளம்பர இடைவேளையில்
அதிகபட்ச ஒலிகளுடன் படிக்காதவன், தெனாவட்டு, திண்டுக்கல் சாரதி ஆகிய
விளம்பரங்களை மூன்று லட்சத்திற்கும் அதிகமான முறை காதாலும் கண்ணாலும்
பார்த்திருப்பேன். விதி. எந்திரன் எப்படியும் இரண்டு மூன்று வருடத்திற்கு டாப்
டென்னின் முதலிடத்தில் இருக்க வாய்ப்பிருக்கிறது.
---
எங்களூர் ஏரி நவம்பர் மாதவாக்கில் நிறைந்து காணப்படும். கோடி விழும் இடத்தில்
அருவி (நீர் வீழ்ச்சி அல்ல)போன்ற இடத்தில் நீர் வந்தால் நிறைந்துவிட்டது என்று
அர்த்தம். ஜனவர் மாதவாக்கில் அல்லி, தாமரை மலர்களால் நிரம்பும். தாமரை இலை
மற்றும் பூக்களால் நிறைந்து ஒருகட்டத்தில் அது மட்டுமே தெரியும். அதிகாலையில்
அல்லி, தாமரைகள் விரிய நீரிலிருந்து மெல்லிய புகைபோல ஆவி கிளம்பும் பார்த்துக்
கொண்டே இருக்கலாம். அதுவும் கக்கா போய்க்கொண்டே ரசிப்பதென்பது விசேஷமானது.
குறிப்பு: ஒருவாரத்திற்கும் முன்பு எழுதப்பட்டது இது. இணையத்தில் குழப்பம் வந்ததால்
தாமதமாக....
தீர்க்கமான முடிவுடன் தற்கொலை செய்துகொள்பவர் இவர் பிழைக்க வாய்ப்புகள்
இல்லாதவாறு சூழ்நிலையை அமைத்துக்கொள்வார். இரண்டாவது சுற்றத்தவரை
பயமுறுத்தவென்று தற்கொலை செய்துகொள்பவர் போல நடிப்பவர். மிகப்பெரும்பாலும்
இரண்டாவது வகையினர்தான் அதிகம். பல்வேறு பிரச்சினைகளால் தற்கொலை
முடிவு எடுப்பவர்கள் ஒருபுறம் என்றால் மறுபாதி காதல்தோல்வி என்ற காரணமே
பின்னால் இருக்கிறது (கள்ளக்காதலும் இதில் அடக்கம்).
இரண்டு வருடங்களுக்கு முன்பு பால்யகால சினேகிதன் ஒருவனின் அப்பா பூச்சிமருந்து
குடித்து தற்கொலை செய்துகொண்டார். வெற்றிலைத்தோட்டத்தில் வெற்றிலை திருடி
கையும் களவுமாக சிக்கிய அவமானத்தில் பூச்சிமருந்தை காதில் ஊற்றிக்கொண்டு
விட்டார். சில நிமிடங்களில் உயிர் பிரிந்துவிட்டது. பொண்டாட்டி வேறு ஒரு
ஆணுடன் படுத்ததால் தற்கொலை செய்துகொண்டார் என் பக்கத்துவீட்டுக்காரர்.
வினோதமான மருந்துநெடியுடன் முகம் மஞ்சள் நிறத்திற்கு மாறிப்போயிருந்தது
டவுசரை இறுக்கிப்பிடித்தபடி சேலைகளின் பின்புறத்தில் மறைந்திருந்து கண்ட
காட்சிகள் நினைவில் வருகின்றன. தேர்வில் தோல்வியடைவதால், கடன் தொல்லையால்,
சோரம் போனது தெரிந்துபோனதால், களவாடியதால் இப்படி நிறைய தற்கொலைகள்
சகஜம் இங்கே. வெளியூர் நண்பர் ஒருவர் சகநண்பர் பேசாமல் தன்னை உதாசீனப்படுத்துவதால் அதை தாங்கமுடியாது பூச்சி மருந்தைக் குடித்துவிட்டார்.
எப்படியோ அவசர அவசரமாக மருத்துவமனையில் சேர்த்து உயிர்பிழைக்க வைத்தனர்.
அவரைப் பார்த்து ஆறுதல் சொல்வதற்காக அம்மாவுடன் திருக்கோவிலூர் அரசு
மருத்துவமனைக்கு சென்றிருந்தேன், பழங்கால சுண்ணாம்பு சுவற்றுடனான ஓட்டுக்
கூரை கட்டிடம். சுவரெல்லாம் சுண்ணாம்பு உதிர்ந்துபோய் பரிதாபமான உணர்ச்சிகளை
மனதில் உருவாக்கியது. உள்புறம் தோற்றத்தில் சேதுபடத்தில் வரும் காட்சிகளை
நினைவுபடுத்துவது போல இருந்தது. சுவரோரங்களிலும், சில படுக்கைகளிலும்
நோயாளிகள் படுத்துக்கிடந்தனர். படுக்கை இல்லாததால் மூலையில் பாய் ஒன்றை
விரித்து அதில் படுக்க வைத்திருந்தனர் நண்பரை. சுவருக்குப் பின்னால் மூத்திரப்புரை
போல. நிற்கவே முடியவில்லை. பழங்களை அளித்துவிட்டு ஆறுதல் சொல்லிக்கொண்டு
இருந்தார். நான் சற்று நகர்ந்து மற்ற முகங்களை கவனிக்க ஆரம்பித்தேன். உலகத்தின்
துயரமான முகங்கள் தமிழக மருத்துவமனைகளில் மட்டுமே சாத்தியம் என்பதுபோல
இருந்தது. பல அலட்சியங்கள் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய அலட்சியமாக அதன் உருவம்
இருப்பது போல பட்டது. ஜன்னலின் ஓரத்தில் பச்சை நிறத்தில் பூச்சிக்கொல்லி
மருந்துக்குப்பி இருந்தது. அவர் குடித்ததாக இருக்கலாம் மேலும் இதுபோன்ற
கேஸ்களில் மருத்துவர் நோயாளி குடித்த வஸ்துவை பார்த்து அதற்கேற்றபடி மருந்து
தருவார். திறந்து முகர்ந்து பார்த்தேன் கூவமெல்லாம் பிச்சை வாங்கவேண்டும்.
குழப்பமான மனநிலைய உருவாக்குவதுபோல உணர்ந்ததால் கிளம்பலாம் என்று
அம்மாவுடன் கிளம்பினேன். மருத்துவமனை வாசலில் இடதுபுறம் ஒருதரம் திரும்பி
பார்த்தார் அம்மா. "அங்கேதாண்டா உன்னை பெத்தெடுத்தேன்" என்று சொன்னார்.
உன்ன மட்டும் இல்ல உங்க நாலு பேரையும் அங்கேதான் பெத்தேன் என்றும். உடனே
அங்கே சென்று பார்க்கவேண்டும் போல இருந்தது. கையைப்பிடித்து அழைத்துச்சென்றேன்.
அது ஒரு பெரிய ஓட்டுக்கூரையின் கீழ் அமைந்த கூடம். இரண்டாவது கட்டிலில்
சமீபத்தில் பிரசவித்த குழந்தையுடன் உறங்கிக்கொண்டிருந்தார் ஒருவர். அங்கேதான்
என்னையும் ஈன்றெடுத்ததாக அம்மா சொன்னார். நெகிழ்ச்சியாக உணர்ந்தேன்.
---
இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு தொலைக்காட்சிகளில் திமுகவின் பொதுக்குழு கூடி
தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதை நேரடியாக ஒளிபரப்பின. கலைஞர் கருணாநிதி
பத்தாவது முறையாக மீண்டும் தலைவராகவும், பொருளாலராக ஸ்டாலினும் தேர்ந்து
எடுக்கப்பட்டதாக முடிந்தது. கருணாநிதி அமெரிக்காவின் தொழிளார் கட்சிக்கோ அல்லது
இங்கேயே இருக்கும் எதோ ஒரு கட்சிக்கோ தலைவராக தேர்ந்தெடுக்கப்படவில்லை
அவரது கட்சிக்குதான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாரே ஒழிய வேறொன்றும்
இல்லை. உயிருள்ளவரை திமுகவிற்கும் தமிழகத்திற்கும் அவர்தான் தலைவரும்
முதல்வரும் ஆவார். மேலும் எந்த வாரிசை தலைமைப்பீடத்திற்கு அமர்த்தப் போகிறார் என்பதற்கு ஆதிதான் இது. இதற்கு நேரடி ஒளிபரப்பு, பட்டாசு வெடிப்பு என இத்தனை ஆர்ப்பாட்டம். இன்று காலை தேர்தல் வாக்குகளின் முன்னணி நிலவரங்களை ஆர்வமாக நண்பர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். வேடிக்கையாக இருந்தது. குழப்பமான எதிர்க்கட்சிகள்
அதன் கோமாளித்தலைவர்கள் என போட்டிக்களத்தில் இருக்கும்போது வெற்றிவாய்ப்பு
ஆளுங்கட்சிக்கு மட்டுமே இருக்கலாம். சகோதரி நமீதா என்று விளித்த சரத்குமார்
கட்சியின் வாக்கு எழுநூற்று சொச்சமாம். இது அவருக்கு முன்பே தெரிந்துவிட்டது
அதனால்தான் "வெற்றி முக்கியமல்ல களம் கண்பதுதான் முக்கியம்" என்று அவரே
அறிக்கை விட்டுவிட்டார். இந்தக்கோமாளிகள் காஷ்மீர் பனிமலையில் நாயகியின்
இடை தடவுவதோடு விட்டு விடுவதே சிறந்தது.
---
இப்பொழுதும் கிராமப்புறங்களில் தேர்தலின் போது "உங்கள் வாக்குகள் யாருக்கு" என்று
கேட்டால் எம்ஜியார் கட்சிக்கு என்றுதான் சொல்வார்கள். அதைப்போலவே இன்றும்
எந்த தொலைக்காட்சி பார்ப்பீர்கள் என்று கேட்டால் அதுவும் சன் டீவி மட்டுமே.
இதனால் வீட்டுக்குள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும் விளம்பர இடைவேளையில்
அதிகபட்ச ஒலிகளுடன் படிக்காதவன், தெனாவட்டு, திண்டுக்கல் சாரதி ஆகிய
விளம்பரங்களை மூன்று லட்சத்திற்கும் அதிகமான முறை காதாலும் கண்ணாலும்
பார்த்திருப்பேன். விதி. எந்திரன் எப்படியும் இரண்டு மூன்று வருடத்திற்கு டாப்
டென்னின் முதலிடத்தில் இருக்க வாய்ப்பிருக்கிறது.
---
எங்களூர் ஏரி நவம்பர் மாதவாக்கில் நிறைந்து காணப்படும். கோடி விழும் இடத்தில்
அருவி (நீர் வீழ்ச்சி அல்ல)போன்ற இடத்தில் நீர் வந்தால் நிறைந்துவிட்டது என்று
அர்த்தம். ஜனவர் மாதவாக்கில் அல்லி, தாமரை மலர்களால் நிரம்பும். தாமரை இலை
மற்றும் பூக்களால் நிறைந்து ஒருகட்டத்தில் அது மட்டுமே தெரியும். அதிகாலையில்
அல்லி, தாமரைகள் விரிய நீரிலிருந்து மெல்லிய புகைபோல ஆவி கிளம்பும் பார்த்துக்
கொண்டே இருக்கலாம். அதுவும் கக்கா போய்க்கொண்டே ரசிப்பதென்பது விசேஷமானது.
குறிப்பு: ஒருவாரத்திற்கும் முன்பு எழுதப்பட்டது இது. இணையத்தில் குழப்பம் வந்ததால்
தாமதமாக....
Saturday, January 10, 2009
எஸ்.ரா, சாரு, நாய்க்குட்டி
எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்து எப்போழுதுமே எனக்கு பிடித்தமானது. ஆவியில்
வந்த அவரின் துணையெழுத்து படித்து கல்லூரிக்காலத்தில் அவரின் மேல் பைத்தியமாக
இருந்தேன். சமீபத்திய அவரின் புத்தக வெளியீட்டுவிழாவில் நேரில் சந்தித்தது
மிக்க மகிழ்ச்சியைத்தந்தது. விழாவில் அவர் பேசியதுகூட அவ்வளவு அருமையாக
இருந்தது. எழுத்தைப்போலவே மிக மென்மையான மனிதர்.
விழா ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் சாருநிவேதிதா எனக்கு முன்னிருக்கையில்
வந்து அமர்ந்தார். பேசலாம் என்று நினைத்து எங்கே திட்டிவிடுவாரோ என்று
விட்டுவிட்டேன். அவர் வந்தவுடன் அனைவரும் அவரையே பார்த்தனர். சாரு
வந்த கொஞ்ச நேரத்தில் ஜெயமோகன் நான்கு பேர் புடைசூழ வந்தார். நேர் எதிர்
வரிசைகளில் இருவரும் அமர்ந்திருந்தார்கள். எதிர்பாராது சந்திக்க நேர்ந்தால் கவுண்டமணி
செந்தில் போல பேசிக்கொள்வார்களோ என்று எனக்குள் கற்பனை ஓடியதில் தனியாக
சிரித்துக்கொண்டிருந்தேன். மேடையில் எனக்கு பேசவராது ஸ்கிரிப் பேப்பர் இருந்தாதான்
பேசுவேன் ஆனா இப்ப எப்படி பேசப்போறன்னு எனக்கே தெரிலன்னு சொல்லிட்டு
அனைவரையும் பேச்சில் வியப்பிலாழ்த்தினார் நாடக/திரைப்பட/எழுத்தாள/ க.நா.சு
அவர்களின் மருமகனான பாரதிமணி. இவர் பேச்சை மிகவும் ரசித்தேன்.
க.நா.சு இறந்தபோது அவரின் உடைமைகள் யாவையும் ரயிலில் டெல்லிக்கு
அனுப்பினார்களாம் ஆயிரக்கணக்கான புத்தகங்களுக்கு மத்தியில் சாகித்திய அகாதமி
விருதையும் சேர்த்து. அவற்றை பெற்றுக்கொண்ட பாரதிமணி அவரின் காரில் மிகுந்த
சிரமத்துக்கிடையில் அடைத்து விட்டாராம். ஓட்டுனர் இருக்கை தவிர அனைத்து இடங்களிலும்
புத்தகமே இருந்திருக்கிறது. அதில் புகுந்த திருடன் டாஷ்போர்டில் இருந்த ஆயிரம் ரூபாய்
மதிப்பிலான சிகரெட் பைப்ப திருடிவிட்டானாம். இந்தி தெரிந்த திருடன் சாகித்திய அகாதமி
விருதை தூக்கி தூரப்போட்டுவிட்டு போயிருக்கிறான். (விருதுகள் குறித்து அவர் சொன்னது இது)
இரண்டு நாள் கழித்து அதே பாரதிமணியை சாருவின் விழாவில் சந்தித்தேன். பைப்பை
எடுத்து புகைக்க ஆயத்தமாகிக்கொண்டிருந்தார். "உங்க பைப்ப பத்திரமா பாத்துக்கோங்க
சார்" என்றேன். "என் பைப்ப எவன்யா திருடப்போறான்" என்று சிரித்தபடி சொன்னார்.
இதில் என்ன உள்குத்து என்றே புரியவில்லை.
சிறப்பு அழைப்பாளராக வந்த ஒருவர் (பெயர் கவனிக்கவில்லை)ஒரு குயர் பேப்பரின்
அனைத்துப்பக்கங்களிலும் எதையோ எழுதிவந்து வாசித்து இம்சித்தார். மொத்தக்கூட்டத்தில்
அவர் பேச்சு மட்டுமே சுவாரசியமற்றதாக இருந்தது. அவர் பேசிக்கொண்டிருந்தபோது
ஜெயமோகன் அருகில் அமர்ந்திருந்த அவரது நண்பர்களிடம் பேசிக்கொண்டேஏஏஏ இருந்தார். எனக்கு என்னவோ போல இருந்தது வெளியில் சென்று விற்பனை செய்துகொண்டிருந்த புத்தகங்களை பார்த்துக்கொண்டிருந்தேன் எஸ் ராமகிருஷ்ணனின் சிறுகதைத்தொகுப்பு
ஒன்றை வாங்கி மெதுவாக புரட்டிக்கொண்டிருந்தேன். சாரு மெதுவாக வெளியே வந்தார்.
சிறிதுநேரம் அரபி இசை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். நூலின் முதல்பக்கத்தில்
அவரிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டேன்.அவரின் பத்துநூல்கள் வெளியீட்டு விழாவுக்கு
வருமாறு அழைத்தார். எங்கே நடக்கிறது என்று வாய்தவறி கேட்டுவிட்டு பிறகு
மன்னிச்சுடுங்க எசமான் ரெண்டுமுறை அழைப்பிதழ படிச்சும் மறந்துபோய்
கேட்டுவிட்டேன் என்றதும் சிரித்துவிட்டார். கைகுலுக்கிவிட்டு நேராக ஜெயமோகனிடம்
சென்று கையெழுத்து போடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொண்டேன். அவரும் வாங்கி
முதல் பக்கத்தில் சாருவின் கையெழுத்துபார்த்து திகைத்து யோசித்து பின் அவரும்
கையெழுத்து போட்டார். பிறகு அதேபக்கத்தில் ராமகிருஷ்ணனிடமும் கையெழுத்து
வாங்கினேன். எல்லாவற்றுக்கும் கீழே கொட்டை எழுத்தில் (அண்ணாச்சி கவனிக்க) என் பெயரை எழுதிக்கொண்டேன்.
--
இரண்டுநாள் கழித்து சாருவின் பத்து நூல்கள் ஒரே சமயத்தில் வெளியிடும் விழா
கொட்டும் மழைக்கு இடையில் இனிதே நடந்து முடிந்தது. பத்து நூலினைப்பற்றியும்
பேச பத்து விருந்தினர். தொகுத்து வழங்கியவர் தவிர ஏனைய அனைவரும் நன்றாக
பேசினர். கடைசி நேர இழுபறியில் முரளிகண்ணனை பலிகடாவாக்கியிருந்தார்கள்.
குறிப்பாக இந்திராபார்த்தசாரதியின் பேச்சு சந்தோஷப்படுத்தியது. மனிதர் தள்ளாடும்
முதுமையில் இருந்தாலும் பேச்சு கணீரென்று தடையில்லாமல் வந்தது. அனுபவம்.
அமீர், சசி, தமிழச்சி மூன்று பேரும் மேடையில் பின்னிருக்கையில் அமர்ந்து
கடலை போட்டுக்கொண்டிருந்தனர். சினிமா சினிமா நூல் குறித்து மதன் பேசுகையில்
சாருவை ஒரு காட்டு காட்டிவிட்டார். ஆனால் பின்னால் வந்த பிரபஞ்சன் பெரிய
ஆப்பாக மதனுக்கு வைத்துவிட்டுப்போனார். முந்தைய விழாவில் பாரதிமணி
கலக்கினாரென்றால் இந்த விழாவில் பிரபஞ்சன் கலக்கினார்.
மேடையில் எப்படி இயல்பாக ஒரு தோழனிடம் பேசுவதைப்போல பேசவேண்டும்
என்பதை எழுத்தாளர் சிவகாமியிடம் கற்கலாம். அவ்வளவு தெளிவாக, அழகான
உச்சரிப்போடு அவர் பேசியது ஆச்சரியமாக இருந்தது. எழுதும்போதுகூட அவரின்
அமைதியான முகம் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. இதற்கு நேர் எதிராக தமிழச்சி
தங்கபாண்டியன் அவர்களின் பேச்சு அமைந்திருந்தது. சாலமன் பாப்பையா பட்டி
மன்றத்தில் பேசுவதைப்போல "பேசிவிட்டு ஓரிரு நொடி அமைதியாக ரசிகர்களின்
நாடியறிய இடைவெளி விடுவதுப்பேசினார்". மூடுபனிச்சாலையை வாங்கவேண்டும்
என அவர் பத்துநிமிடம் கோரிக்கை விடுத்தார்.
சுரேஷ் கண்ணன் அவர்களை சந்தித்தேன். மொத்தமாக இரண்டு மூன்று வார்த்தைகளே
பேசியிருப்போம். விழா மும்முரத்தில் அதிகம் பேசவில்லை.
விழாவின் முடிவாக நீண்ட உரை ஒன்றை நிகழ்த்தினார் சாரு நிவேதிதா. வழக்கம்போல
கூபா, சீலே, கரப்பானுக்கு ஏது நாடு, ப்ரான்சு, கேரளா, மாத்யமம், தமிழ் இலக்கியம்,
அதன் வாசகர்கள் என பிரித்து மேய்ந்தார். அரங்கே அமைதியாக அவர் பேச்சைக்கேட்டது.
நானும் ரசித்துக் கேட்டேன்.
விழா முடிந்ததும். கண்ட்ரி கிளப்பில் விருந்து. நல்ல பையனாக நாலு டம்ளர் தண்ணியும்
லக்கி, அதிஷா, நர்சிம், சாரு என அனைவரிடமும் நான்கு வார்த்தை பேசிவிட்டும்
வெளியில் வந்தேன்.
சாலையை மழை சுத்தமாக துடைத்து விட்டிருந்தது. அதிகாலை மூன்று மணியிருக்கும்
அங்கிருந்து குரோம்பேட்டை அடைவது எப்படி என்றே தெரியவில்லை. யாருமில்லாத
சாலையில் நீண்ட தூரம் நடந்து ஆட்டோபிடித்து வந்தது மறக்க முடியாதது.
--
இருவாரம் முந்தைய நாள் ஒன்றின் அதிகாலைக்குளிரில் வெடவெடத்தபடி ஒரு குட்டி கருப்புநாய் வீட்டின் திண்ணை ஓரம் தஞ்சமடைந்திருந்தது. சிறிது பால் ஊற்றி
அதன் பசியாற்றியதன் நன்றி மறவாமல் வீட்டையே சுற்றி சுற்றி வந்ததால் அதனை
வளர்க்கலாம் என்று முடிவானபோதுதான் தெரிந்தது அது பெட்டை நாய். வீட்டைச்
சுற்றி குட்டிபோடும் என்பதால் வேண்டாம் என மறுத்தார்கள். தினமும் காலையில்
எழுந்ததும் திண்ணையிலிருந்து இறங்கி வந்து காலைச்சுற்றி விளையாடும்.
விளையாட்டாக காலை உதறும்போது பயத்தில் கடித்துவிட்டது. கடித்தநாய்
கண்டிப்பாக உயிரோடு இருக்கவேண்டும் என்பதால் கட்டாயமாக கண்பார்வையில்
இருந்தே ஆகவேண்டும் என அக்கம் பக்கம் வசிக்கும் இலவசமருத்துவர்கள்
ஆலோசனை கூறினார்கள். ராஜ உபச்சாரத்துடன் அது வளர்ந்துகொண்டிருக்கிறது. குட்டிநாயால் எப்போதுமே நேராக ஓடமுடியாது. குழந்தை எப்படி எப்படி தத்தி தத்தி நடக்கிறதோ அதேபோல தத்தி தத்தி சரக்கடித்தைப்போல ஓடிவரும் அழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். தினமும் பொழுதுபோக்கே அதுதான்.
வந்த அவரின் துணையெழுத்து படித்து கல்லூரிக்காலத்தில் அவரின் மேல் பைத்தியமாக
இருந்தேன். சமீபத்திய அவரின் புத்தக வெளியீட்டுவிழாவில் நேரில் சந்தித்தது
மிக்க மகிழ்ச்சியைத்தந்தது. விழாவில் அவர் பேசியதுகூட அவ்வளவு அருமையாக
இருந்தது. எழுத்தைப்போலவே மிக மென்மையான மனிதர்.
விழா ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் சாருநிவேதிதா எனக்கு முன்னிருக்கையில்
வந்து அமர்ந்தார். பேசலாம் என்று நினைத்து எங்கே திட்டிவிடுவாரோ என்று
விட்டுவிட்டேன். அவர் வந்தவுடன் அனைவரும் அவரையே பார்த்தனர். சாரு
வந்த கொஞ்ச நேரத்தில் ஜெயமோகன் நான்கு பேர் புடைசூழ வந்தார். நேர் எதிர்
வரிசைகளில் இருவரும் அமர்ந்திருந்தார்கள். எதிர்பாராது சந்திக்க நேர்ந்தால் கவுண்டமணி
செந்தில் போல பேசிக்கொள்வார்களோ என்று எனக்குள் கற்பனை ஓடியதில் தனியாக
சிரித்துக்கொண்டிருந்தேன். மேடையில் எனக்கு பேசவராது ஸ்கிரிப் பேப்பர் இருந்தாதான்
பேசுவேன் ஆனா இப்ப எப்படி பேசப்போறன்னு எனக்கே தெரிலன்னு சொல்லிட்டு
அனைவரையும் பேச்சில் வியப்பிலாழ்த்தினார் நாடக/திரைப்பட/எழுத்தாள/ க.நா.சு
அவர்களின் மருமகனான பாரதிமணி. இவர் பேச்சை மிகவும் ரசித்தேன்.
க.நா.சு இறந்தபோது அவரின் உடைமைகள் யாவையும் ரயிலில் டெல்லிக்கு
அனுப்பினார்களாம் ஆயிரக்கணக்கான புத்தகங்களுக்கு மத்தியில் சாகித்திய அகாதமி
விருதையும் சேர்த்து. அவற்றை பெற்றுக்கொண்ட பாரதிமணி அவரின் காரில் மிகுந்த
சிரமத்துக்கிடையில் அடைத்து விட்டாராம். ஓட்டுனர் இருக்கை தவிர அனைத்து இடங்களிலும்
புத்தகமே இருந்திருக்கிறது. அதில் புகுந்த திருடன் டாஷ்போர்டில் இருந்த ஆயிரம் ரூபாய்
மதிப்பிலான சிகரெட் பைப்ப திருடிவிட்டானாம். இந்தி தெரிந்த திருடன் சாகித்திய அகாதமி
விருதை தூக்கி தூரப்போட்டுவிட்டு போயிருக்கிறான். (விருதுகள் குறித்து அவர் சொன்னது இது)
இரண்டு நாள் கழித்து அதே பாரதிமணியை சாருவின் விழாவில் சந்தித்தேன். பைப்பை
எடுத்து புகைக்க ஆயத்தமாகிக்கொண்டிருந்தார். "உங்க பைப்ப பத்திரமா பாத்துக்கோங்க
சார்" என்றேன். "என் பைப்ப எவன்யா திருடப்போறான்" என்று சிரித்தபடி சொன்னார்.
இதில் என்ன உள்குத்து என்றே புரியவில்லை.
சிறப்பு அழைப்பாளராக வந்த ஒருவர் (பெயர் கவனிக்கவில்லை)ஒரு குயர் பேப்பரின்
அனைத்துப்பக்கங்களிலும் எதையோ எழுதிவந்து வாசித்து இம்சித்தார். மொத்தக்கூட்டத்தில்
அவர் பேச்சு மட்டுமே சுவாரசியமற்றதாக இருந்தது. அவர் பேசிக்கொண்டிருந்தபோது
ஜெயமோகன் அருகில் அமர்ந்திருந்த அவரது நண்பர்களிடம் பேசிக்கொண்டேஏஏஏ இருந்தார். எனக்கு என்னவோ போல இருந்தது வெளியில் சென்று விற்பனை செய்துகொண்டிருந்த புத்தகங்களை பார்த்துக்கொண்டிருந்தேன் எஸ் ராமகிருஷ்ணனின் சிறுகதைத்தொகுப்பு
ஒன்றை வாங்கி மெதுவாக புரட்டிக்கொண்டிருந்தேன். சாரு மெதுவாக வெளியே வந்தார்.
சிறிதுநேரம் அரபி இசை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். நூலின் முதல்பக்கத்தில்
அவரிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டேன்.அவரின் பத்துநூல்கள் வெளியீட்டு விழாவுக்கு
வருமாறு அழைத்தார். எங்கே நடக்கிறது என்று வாய்தவறி கேட்டுவிட்டு பிறகு
மன்னிச்சுடுங்க எசமான் ரெண்டுமுறை அழைப்பிதழ படிச்சும் மறந்துபோய்
கேட்டுவிட்டேன் என்றதும் சிரித்துவிட்டார். கைகுலுக்கிவிட்டு நேராக ஜெயமோகனிடம்
சென்று கையெழுத்து போடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொண்டேன். அவரும் வாங்கி
முதல் பக்கத்தில் சாருவின் கையெழுத்துபார்த்து திகைத்து யோசித்து பின் அவரும்
கையெழுத்து போட்டார். பிறகு அதேபக்கத்தில் ராமகிருஷ்ணனிடமும் கையெழுத்து
வாங்கினேன். எல்லாவற்றுக்கும் கீழே கொட்டை எழுத்தில் (அண்ணாச்சி கவனிக்க) என் பெயரை எழுதிக்கொண்டேன்.
--
இரண்டுநாள் கழித்து சாருவின் பத்து நூல்கள் ஒரே சமயத்தில் வெளியிடும் விழா
கொட்டும் மழைக்கு இடையில் இனிதே நடந்து முடிந்தது. பத்து நூலினைப்பற்றியும்
பேச பத்து விருந்தினர். தொகுத்து வழங்கியவர் தவிர ஏனைய அனைவரும் நன்றாக
பேசினர். கடைசி நேர இழுபறியில் முரளிகண்ணனை பலிகடாவாக்கியிருந்தார்கள்.
குறிப்பாக இந்திராபார்த்தசாரதியின் பேச்சு சந்தோஷப்படுத்தியது. மனிதர் தள்ளாடும்
முதுமையில் இருந்தாலும் பேச்சு கணீரென்று தடையில்லாமல் வந்தது. அனுபவம்.
அமீர், சசி, தமிழச்சி மூன்று பேரும் மேடையில் பின்னிருக்கையில் அமர்ந்து
கடலை போட்டுக்கொண்டிருந்தனர். சினிமா சினிமா நூல் குறித்து மதன் பேசுகையில்
சாருவை ஒரு காட்டு காட்டிவிட்டார். ஆனால் பின்னால் வந்த பிரபஞ்சன் பெரிய
ஆப்பாக மதனுக்கு வைத்துவிட்டுப்போனார். முந்தைய விழாவில் பாரதிமணி
கலக்கினாரென்றால் இந்த விழாவில் பிரபஞ்சன் கலக்கினார்.
மேடையில் எப்படி இயல்பாக ஒரு தோழனிடம் பேசுவதைப்போல பேசவேண்டும்
என்பதை எழுத்தாளர் சிவகாமியிடம் கற்கலாம். அவ்வளவு தெளிவாக, அழகான
உச்சரிப்போடு அவர் பேசியது ஆச்சரியமாக இருந்தது. எழுதும்போதுகூட அவரின்
அமைதியான முகம் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. இதற்கு நேர் எதிராக தமிழச்சி
தங்கபாண்டியன் அவர்களின் பேச்சு அமைந்திருந்தது. சாலமன் பாப்பையா பட்டி
மன்றத்தில் பேசுவதைப்போல "பேசிவிட்டு ஓரிரு நொடி அமைதியாக ரசிகர்களின்
நாடியறிய இடைவெளி விடுவதுப்பேசினார்". மூடுபனிச்சாலையை வாங்கவேண்டும்
என அவர் பத்துநிமிடம் கோரிக்கை விடுத்தார்.
சுரேஷ் கண்ணன் அவர்களை சந்தித்தேன். மொத்தமாக இரண்டு மூன்று வார்த்தைகளே
பேசியிருப்போம். விழா மும்முரத்தில் அதிகம் பேசவில்லை.
விழாவின் முடிவாக நீண்ட உரை ஒன்றை நிகழ்த்தினார் சாரு நிவேதிதா. வழக்கம்போல
கூபா, சீலே, கரப்பானுக்கு ஏது நாடு, ப்ரான்சு, கேரளா, மாத்யமம், தமிழ் இலக்கியம்,
அதன் வாசகர்கள் என பிரித்து மேய்ந்தார். அரங்கே அமைதியாக அவர் பேச்சைக்கேட்டது.
நானும் ரசித்துக் கேட்டேன்.
விழா முடிந்ததும். கண்ட்ரி கிளப்பில் விருந்து. நல்ல பையனாக நாலு டம்ளர் தண்ணியும்
லக்கி, அதிஷா, நர்சிம், சாரு என அனைவரிடமும் நான்கு வார்த்தை பேசிவிட்டும்
வெளியில் வந்தேன்.
சாலையை மழை சுத்தமாக துடைத்து விட்டிருந்தது. அதிகாலை மூன்று மணியிருக்கும்
அங்கிருந்து குரோம்பேட்டை அடைவது எப்படி என்றே தெரியவில்லை. யாருமில்லாத
சாலையில் நீண்ட தூரம் நடந்து ஆட்டோபிடித்து வந்தது மறக்க முடியாதது.
--
இருவாரம் முந்தைய நாள் ஒன்றின் அதிகாலைக்குளிரில் வெடவெடத்தபடி ஒரு குட்டி கருப்புநாய் வீட்டின் திண்ணை ஓரம் தஞ்சமடைந்திருந்தது. சிறிது பால் ஊற்றி
அதன் பசியாற்றியதன் நன்றி மறவாமல் வீட்டையே சுற்றி சுற்றி வந்ததால் அதனை
வளர்க்கலாம் என்று முடிவானபோதுதான் தெரிந்தது அது பெட்டை நாய். வீட்டைச்
சுற்றி குட்டிபோடும் என்பதால் வேண்டாம் என மறுத்தார்கள். தினமும் காலையில்
எழுந்ததும் திண்ணையிலிருந்து இறங்கி வந்து காலைச்சுற்றி விளையாடும்.
விளையாட்டாக காலை உதறும்போது பயத்தில் கடித்துவிட்டது. கடித்தநாய்
கண்டிப்பாக உயிரோடு இருக்கவேண்டும் என்பதால் கட்டாயமாக கண்பார்வையில்
இருந்தே ஆகவேண்டும் என அக்கம் பக்கம் வசிக்கும் இலவசமருத்துவர்கள்
ஆலோசனை கூறினார்கள். ராஜ உபச்சாரத்துடன் அது வளர்ந்துகொண்டிருக்கிறது. குட்டிநாயால் எப்போதுமே நேராக ஓடமுடியாது. குழந்தை எப்படி எப்படி தத்தி தத்தி நடக்கிறதோ அதேபோல தத்தி தத்தி சரக்கடித்தைப்போல ஓடிவரும் அழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். தினமும் பொழுதுபோக்கே அதுதான்.
Friday, January 02, 2009
அண்ட பிரம்மாண்ட கோடி அகில பரிபாலனா

பாடல் வெளியாகும் அன்றே இணைத்திலிருந்து தரவிறக்கி கேட்கும் மனோபாவம்
தொடர்ந்தபடி இருப்பதால் அது தவறு என்பதே மறந்து விட்டிருக்கிறது. இணைய
காலத்தில் இதெல்லாம் சகஜமப்பா என்றாலும் அவ்வப்போது தோன்றுகிறது.
கோழித்தலையை அறுக்கும் நேரத்தில் ச்ச்சோ என்றாலும் அடுத்தநொடி குழம்பை
நினைத்து நாக்கு உச்சு கொட்டும். சேது படம் பார்த்து பாலா மீது பிரமித்திருந்தேன்.
நான் முதல் முதலாக காசு கொடுத்து ஆடியோ கேசட் வாங்கியது பாலாவின் நந்தா.
மற்றபடி ரேடியோவிலோ, நண்பர்களின் வீட்டிலோ மட்டும்தான் பாடல்களைக் கேட்கும்
வழக்கம். மெனக்கெட்டு வாங்கி ரசிக்கும் அளவுக்கு என் ரசனை இல்லை. ஆனால்
சேதுவின் பாடல்கள் எல்லாமே மிகவும் தேர்ந்த வரிகளைக்கொண்ட அற்புதமான
பாடல்கள். அதனாலேயே நந்தா பாடல் கேசட்டை வாங்க என்னைத்தூண்டியவை.
எங்களூரில் உள்ள ஒரு மியூசிக் சென்டரில் தினமும் சென்று நந்தா பாடல்
வந்துவிட்டதா என்று கேட்கும் அளவுக்கு என்னை மாற்றி விட்டிருந்தது. ஒருநாள்
அதிகாலையில் வந்தேவிட்டது. வாங்கிவந்து கைகள் நடுங்க டேப்ரிக்கார்டரில்
போட்டுக்கேட்டேன். கேட்டுக்கொண்டே இருந்தேன். எனக்குப் பிடித்த பாடல்களை
திகட்டும் அளவுக்கு கேட்டுக்கொண்டே இருப்பேன். தொடர்ந்தபடி ஒருவாரமெல்லாம்
ஒரே பாடலை ஆயிரக்கணக்கான முறை கேட்டிருக்கிறேன். அப்படி நந்தாவில் மிகவும்
பாதித்த ஒரு பாடல் "எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில்" எத்தனை முறை
கேட்டிருப்பேன் என்றே தெரியாது.
அதேபோல பிதாமகன் படத்தின் "அடடா அடடா அகங்கார அரக்க கைகளில் உலகிங்கே"
பாடலை கோடிக்கணக்கான முறை கேட்டிருப்பேன். ஒலியாகவும், ஒளியாகவும்
சிறப்பாக இந்தப்பாடல் இருக்கும். இந்த பாடலை எப்படி சாந்தக்குரல் ஜேசுதாசிற்கு
கொடுத்தார்கள் என்று முதலில் நினைத்தேன் பிறகு இவரைத்தவிர வேறு எவரும்
இவ்வரிகளுக்கு நியாயம் செய்திருக்க முடியாது இளையராஜாவின் தேர்வு எப்போதுமே
சரியானதாக இருக்கும்.
இன்று முழுக்க எனது கணிணியில் நான் கடவுள் பாடல்கள் மட்டும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
நான் கடவுளிலும் திரும்ப திரும்ப கேட்கும் ஒரு பாடல். "அண்ட பிரம்மாண்ட கோடி அகில பரிபாலனா" எனும் வரிகளைக்கேட்கும்போது நாடி நரம்பெங்கும் புதுரத்தம் புகுந்தோடுவது போல உணர்வு. அடடா அடடா அகங்கார பாடலைப்போலவே மிக அழுத்தமானதாக இருக்கலாம்.
சில நாட்களுக்கு முன்பு வார இதழில் பாலாவின் பேட்டி ஒன்றினைப் படிக்க நேர்ந்தது.
"இது கடவுள் இருக்காரா, இல்லையாங்கிற ஆத்திகநாத்திக விளையாட்டு இல்லை. பக்திப் படம் எடுப்பது என் வேலை இல்லை. எவருடைய நம்பிக்கை களையும் காயப்படுத்தக் கூடாது என்பது என் இயல்பு. அந்த அடிப்படை நாகரிகத்தில் நான் எப்போதும் தெளிவா இருக்கேன். இது விளிம்பு நிலை மனிதர்களின் உலகம். ஒரு எளிய கேள்வியை உங்கள் முன்வைக்க விரும்புகிறேன். படம் பார்த்தால் பதில் கிடைக்கும். என்னை, உங்களை, நம்மை, நம் உலகத்தை அது இன்னும் தெளிவாக்கும்!"
''ஊர்ல உலகத்தில் எவ்வளவோ பிச்சைக்காரங்க இருக்காங்க. எதிர்ப்படுற எல்லா பிச்சைக்காரங்களுக்கும் நாம் உதவுவதில்லை. பாவப்பட்டோ, இரக்கப்பட்டோ, புண்ணியத் துக்கோ, நாம போடுற சில சில்லறைக் காசுகளோட, அவங் களை ஒதுக்கிடுறோம். 'அய்யா தர்மதொர, அம்மா மகராசி!'ன்னு ஒரு வாய் சோத்துக்காக நம்மிடம் கையேந்தி நிக்கிற பாவப்பட்ட மனிதர்களைப் பத்தி யோசிச்சி ருக்கோமா? பிச்சை எடுக்கிறது என்ன குலத் தொழிலா? அவங்க எப்படிப் பிச்சையெடுக்கிற நிலைமைக்கு வந்தாங்க?
பெத்த பிள்ளைங்களால விரட்டி அடிக்கப்பட்டு, வீதிக்கு வந்த துக்கம் தாங்க முடியாம, காவி வேட்டிக் கட்டி கௌரவமா பிச்சையெடுக்கிறது எவனோன்னு போறோம்... அவன், நம்ம அப்பனா இருந்தா? மானத்தைக் காப்பாத்திக்க வழி தெரியாம, பிச்சையெடுக்கிற அவமானத்தோட அலையுற பொம்பளை, நம்ம அம்மாவா, அக்காவா இருந்தா? அப்பனோ, ஆத்தாவோ உடம்புத் திமிர்ல யாரோடவாவது ஓடிப் போக, ஆதரவுக்கு யாருமில்லாம, எச்சி இலையை நக்கித் திங்கிறது நம்ம புள்ளையா இருந்தா? அப்பத் தெரியும்ல அந்த வலி!
இப்படி சொல்லியிருந்தார்
நெடுஞ்சாலைப் பிணியாளர்கள் என்று ஒரு ஜாதியே நம் நாட்டில் உண்டு இவர்களுக்கென்று
இரக்கப்படவோ, ஆதரவளிக்கவோ எவரும் இல்லை. இந்தியப் பிரஜைகளாய் இருந்து
பின் தூக்கியெறியப்பட்டவர்கள். இவர்கள் குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள் என்பதை
விட மக்களால் கைவிடப்பட்டவர்கள் எனலாம். ஏன் இப்படி சொல்கிறேன் என்றால்
சில நாட்களுக்கு முன்பு அதிகாலைக்குளிரில் பவானியில் திருமணத்திற்கு செல்லும்
வழியில் நான் கண்டவையே. கிட்டத்தட்ட பதினேழுக்கும் மேற்பட்ட சித்தம்
கலங்கிய நிலையில் சாலை ஓரங்களிலும் மரங்களின் அடியில் அழுக்குச்சட்டை
பரட்டைத்தலையுடனும் நான் கண்டவர்களின் எண்ணிக்கை. அதைவிட கூடுதுறை
கோயில் வாசல்புறத்தில் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள். சபரிமலைக்கு
செல்லும் சாமிகள், தரிசிக்க வந்த பக்தர்கள், திருமணத்திற்கு வந்தவர்கள் என
அனைவருமே மறக்காமல் கோயில் உண்டியலில் சாமிக்கு சில்லறைகளாகவும்
நோட்டுகளாகவும் கடவுளுக்கு கருணை காட்டினார்கள். அருகிள் அனாதைகளாக
நிற்கும் சக மனிதர்களுக்கு எவரும் மறந்தும் கூட எதையும் தந்துவிடவில்லை.
இந்தியாவில் உள்ள நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் இப்படி சித்தம் கலங்கிய நிலையில்
திரிபவர்களைக் கணக்கெடுத்தால் கூட சில லட்சங்கள் தேறலாம்.
அங்கிருந்த ஒரு டீக்கடையின் அருகில் நான் சில நண்பர்கள் டீ சாப்பிட்டுக்கொண்டிருக்கையில்
அடர்ந்த தாடி, சிக்குத்தலை, பின்புறம் சுத்தமாய் கிழிந்த கால்சட்டை மட்டும் அணிந்திருந்த
ஒருவர் பக்கத்தில் வந்து நின்றார். அவருக்கும் சேர்த்தே டீ சொல்லி சாப்பிட்டோம்.
ஒரு சலாம் வைத்துவிட்டு அருந்தினார். பழக்கப்பட்டுவிட்டார் போல. டீ சாப்பிட்டவுடன்
இருவர் மட்டும் புகைக்க ஆரம்பித்தோம். அவர் காதோரத்திலிருந்து ஒரு பீடியை எடுத்து
பற்ற வைக்க கடைக்கு சென்றார். ஈரமாக இருந்த அந்த பீடி பற்றவே இல்லை. இரண்டு
மூன்று என தீக்குச்சியின் எண்ணிக்கை அதிகமாகவே கடைக்காரர் தீப்பெட்டியை பிடுங்கி
வைத்துக்கொண்டார். அவர் நெருப்புக்காக என் முகத்தை பார்க்க ஆரம்பித்தார்.
என்னிடமோ தீப்பெட்டி இல்லை ஆனால் லைட்டர் இருந்தது. ஆனால் அதைக்கொடுப்பதிலோ
பற்ற வைப்பதிலோ விருப்பம் இல்லை. ஏனென்றால் அது ஏற்கனவே ரிப்பேராகி அளவுக்கதிகமாக நெருப்பு வருகிறது. முகமூடி அணிந்தத்தைப்போல முடி அடர்ந்த அவரின்
முகத்தில் உதட்டில் பொருத்தி பற்ற வைக்கும்போது கணிசமான முடி எரிந்துவிட
வாய்ப்பிருக்கிறது.
ஒருவழியாக தயக்கத்துடன் கொடுத்தபோது திருப்பி திருப்பி பார்த்து பற்றே இல்லாமல்
என்னிடம் கொடுத்துவிட்டார். பிறகு நானே பற்றவைத்தபோது இரண்டு மூன்று முடிகள்
கருகிவிட்டன. வாய்நிறைய புகை கக்கியபடி சென்றுகொண்டே இருந்தார் மக்கள்கூட்டம்
அவருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றன.
ஏழாம் வகுப்பு படிக்கையில் ஓர்நாள் மதியம் பள்ளியிலிருந்து சற்றுத்தள்ளி ஒதுக்குபுறத்தில்
ஒரு மின்மாற்றி உள்ளது அதன் அருகில்தான் அனைவரும் சென்று மூத்திரம் பெய்வோம்.
நீண்ட தூரம் பீய்ச்சி அடிப்பதில் தினமும் எங்களுக்குப் போட்டி. அப்போது புதரின் அருகில்
கருத்த நிறத்தில் தோல்கள் சுருங்கிய கிழவி ஒருத்தி உயிரை விட்டுக்கொண்டிருந்தாள்.
அவளின் உடைகள் ஒருகாலத்தில் வெள்ளை நிறமாய் இருந்திருக்கலாம். பார்த்த
மாத்திரத்தில் பயந்துபின்வாங்கி பிறகு பார்த்தோம். பள்ளியே திரண்டு வந்து பார்த்தது. அங்கே எலந்தப்பழம், இன்னபிற தின்பண்டங்கள் விற்ற கிழவிகள் கூட ஓடி வந்து
பார்த்து பயந்து பின் வாங்கினார்கள் நானும் இன்னொருவனும் ஓடிப்போய் தண்ணீர் வாங்கிவந்து வாயில் ஊற்றினோம். சிறிது குடித்து மீதம் எல்லாவற்றையும் வெளியில் விட்டாள். மணி அடிக்கவே மனதே இல்லாமல் கிளம்பினோம். சூனியக்காரக்கிழவி என்றார்கள் அவளைப்பார்த்தால் பரிதாபமாக இருக்கிறாளே ஒழிய சூனியம் வைப்பவளைப்போல தெரியவில்லை. வகுப்பில் இப்படியே நினைத்துக்கொண்டு இருந்தேன். பள்ளிவிட்டது ஓடிப்போய் பார்த்தால் வாய், மற்றும் கண் ஓரங்களில் எறும்புகள் மேய்ந்துகொண்டிருந்தன. அழுகையே வந்துவிட்டது. தெருவில் நாய் அடிபட்டால் கூட ரோட்டிலிருந்து இழுத்து ஓரமாய் விடும் மக்கள் ஒரு சக மனித உயிர் இறந்துவிட்டால்
பதுங்கி நழுவி விடுகிறது. கிட்டத்தட்ட ஏழுமணி கழித்து பேருராட்சி குப்பை அள்ளும்
வண்டி வந்துதான் அதை ஏற்றிச்சென்றது.
சாலை ஓரங்களில் திரிபவர்களை அப்போதிலிருந்தே கவனித்து வருகிறேன். சில சமயம்
உரையாடவும் செய்திருக்கிறேன். ஒரு சமயம் பளாரென்று அறையே வாங்கி இருக்கிறேன்.
அப்போது கல்லூரியின் உணவு இடைவேளையின்போது அருகில் இருந்த அண்ணாச்சி
கடைக்கு புகைக்கச்செல்வோம். தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் கல்லூரி
அது. ஊருக்கு சற்று தள்ளியே இருக்கும். கல்லூரி வாசலின் இருபுறத்திலும் புளிய
மரங்கள். ஒன்றின் அடியில் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்தார் பலநாள் குளிக்காததினால்
உடல் அழுக்கேறி இருந்தது. கவனித்தபடியே சென்று விட்டேன். கல்லூரியின் பின்புறமே
விடுதி என்பதால் இரவு உணவு முடிந்ததும் மறுபடி சாலைக்கு வருவோம். அப்படி
திரும்ப வரும்போது அவர் அங்கே அமர்ந்திருந்தார். பலநாள் சாப்பிடாததின் வருத்தம்
முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. உடனே விடுதியின் சமையலறைக்கு சென்று
தட்டு நிறைய சோறு, குழம்பு ஊற்றி தண்ணிர் புட்டியுடன் வந்தேன். சிறிது தயக்கத்துடனே
அவரின் அருகில் சென்று தட்டையும் தண்ணீரையும் வைத்து சாப்பிடச்சொன்னேன்.
அவ்விடம் கொஞ்சம் இருட்டாக இருந்தது. எவ்விதமான பாவனையும் இல்லாமல் தட்டை
நகர்த்தி வைத்துவிட்டார். சிறிது நேர யோசனைக்குப் பிறகு சாப்பிட ஆரம்பித்தார்.
சாப்பிட்டதும் தண்ணீரை எடுத்து தட்டில் கை கழுவினார் பிறகு கழுவிய தண்ணீரையே
எடுத்துக்குடித்தார் பிறகு பாட்டில் தண்ணீரையும் குடித்துவிட்டு வைத்தார். இருவரும்
அருகிலிருந்த அண்ணாச்சி கடையில் சிகரெட் வாங்கி புகைத்தோம். நீண்ட நேரத்திற்கு
பிறகு வாய்திறந்து பேசினார். ஆனால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. கிட்டத்தட்ட
இரண்டரை மணிநேரம் கேட்டுக்கொண்டிருந்தேன். பல முகபாவங்கள். அழுகை, சிரிப்பு,
ஏமாற்றம், மகிழ்ச்சி என மொழிக்கு அப்பாற்பட்ட மொழிகள் மட்டும் புரிந்தன.அவர் பேசிய பேச்சில் இருந்து அவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது. மற்ற எதுவுமே புரியவில்லை. எப்படி இங்கு வந்திருப்பார் என்றுகூட தெரியவில்லை. ஆனால் நம்மைப்போலவே எதோ ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருப்பார் என்று மட்டும்
தெளிவாக புரிந்தது.
எங்கோ படித்தது "மூளையழிவதும் கூட்டுக்குள் திரும்புவதும் ஒன்றே"
Subscribe to:
Posts (Atom)
