எல்லையற்ற அன்பு கொள்வோம்

Tuesday, July 01, 2008

சாருபுராணம்

எந்த புத்தகத்தை வாசித்தாலும் பிடித்த வரிகளை அடிக்கோடிடுவது, அரைவட்டம்,
முழுவட்டம், டிக்மார்க், சூப்பர், கொன்னுட்டடா என்பதுபோல எதாவது சில்மிஷம்
செய்து வைப்பது வழக்கம். முக்கியமாக சாண்டில்யனின் புத்தகங்களில் என் கைவண்ணம்
கண்டிப்பாக இருக்கும். இப்படி செய்வதால் நான் எப்போது புத்தகத்தை திருப்பித்
தந்தாலும் அதை முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை புரட்டிப் பார்த்து
பின்புதான் வேறு புத்தகங்கள் எடுக்க அனுமதிப்பார் எங்கள் ஊர் நூலகர் அங்கமுத்து
சக்கரை. ஒருசிலருக்கு அடிக்கோடிடுவது சுத்தமாக பிடிக்காது. எனக்கு அதிலேதான்
கொள்ளை இன்பம். ஓசிபுத்தகத்தில் எதுவும் கிறுக்கினால் மறுபடி தரமாட்டார்கள்
என்பதால் அடிக்கோடிடும் அரிப்பை தள்ளியே வைத்திருந்தேன். சமீபத்தில் சாருவின்
புத்தகங்கள் அனைத்தையும் வாங்கியபோது(மொத்தம் ஏழு புத்தகம், ஆயிரத்து சொச்சம் கொடுத்து ஏன்யா இந்த குப்பையெல்லாம் வாங்குறன்னு கேட்டாரு) அனைத்துப் பக்கங்களிலும் நம் கைவண்ணம் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்று படிக்க
ஆரம்பிக்கும் முன்னரே தீர்மானித்தேன். இல்லாவிட்டாலும் பல இடங்களில்
அடிக்கோடிடுவது தவிர்க்கவே முடியாத அளவு நன்றாக இருந்தது.

குறிப்பாக ராஸலீலா வாசிக்க ஆரம்பிக்கும்போது அழகிய நீல மசி பேனாவை
அடிக்கோடிட வாங்கினேன். இப்போது மை தீர்ந்துவிடுமோ என்று அச்சமாக
இருக்கிறது. இந்த புத்தகத்தின் இரண்டு பக்கங்களை வாசித்த உடன் அபிஅப்பாவின்
ப்ரசர் ஏறு மாறாக எகிறி விட்டதாக கேள்விப்பட்டேன். இன்னும் நூறுபக்கங்களே
உள்ளன படித்து முடிப்பதற்குள் இது ஒரு ரன்னிங் கமெண்ட்ரி போல. மிச்சமுள்ள
சில நூறு பக்கங்களை படிக்க வாயில் நுரை எல்லாம் தள்ளவில்லை என்றாலும்
இப்போது படித்துக்கொண்டிருக்கும் கண்ணாயிரம் பெருமாளின் ஆன்லைன் லீலைகள்
படிக்கும்போது பொறாமையாகவும் பலவிஷயங்கள் சலிப்பாகவும் இருக்கிறது.

ராஸலீலாவை விட கண்ணாயிரம் பெருமாளின் தபால் இலாகா அனுபவங்கள்தான்
மிகுந்த சுவாரசியமானது.

---

விகடனின் வரவேற்பறை மாதிரி சாருவும் படித்ததில் பிடித்தது என்று எழுதுகிறார்
அதிலே நம் சுந்தரின் காமக்கதைகள் பற்றி சிலாகித்து எழுதியிருந்தார் (இதிலே என்ன
ஆச்சரியப்பட இருக்குகிறது என்கிறீர்களா?) கண்டிப்பாக அன்றைக்கு அவரின் பக்கம்
பல்லாயிரக்கணக்கான ஹிட்டுக்கள் விழுந்து அல்லோலகல்லோலப்பட்டிருக்கும்.
ஏனென்றால் என்னுடைய பதிவும் ஒருமுறை விபத்தாக அவரின் வலைப்பூவில்
வந்து அன்று எதிர்பாராதவிதமாக ஆயிரக்கணக்கில் ஹிட்டி விட்டார்கள். விஷயம்
என்னவென்றால் அனைவரும் வந்தது சாருவின் பக்கத்திலிருந்து. இப்போது லக்கியும்
வாயைத்திறந்து அங்கேயே சொல்லிவிட்டார். நான் இங்கே சொல்கிறேன்.

பல விமர்சனங்களை படித்த பிறகு தசாவதாரம் மிகச்சிறந்த படம் என்று
கண்டுகொண்டேன். சாருவின் பக்கத்தில் இருந்து என் வலைப்பூவை படிக்க வந்த சிலர்
செருப்பால் அடிக்காத குறையாக திட்டி விட்டார்கள். இன்னும் சிலர் கணக்கு புதிர்
எல்லாம் சொல்லி செய்ய சொன்னார்கள். ஒரே அனானி பலமுக மன்னன் ஜோ மாதிரி
வந்து உறுமிவிட்டு போனார். மொத்தமாக எல்லா பின்னூட்டங்களையும் அழித்து
விட்டேன். கணிசமான பின்னூட்டங்கள் பதிவுக்கு ஆதரவாக வந்திருந்தன. அதனை
இட்ட நண்பர்களுக்கு நன்றிகள். வெளியிட முடியாமைக்கு வருத்தங்கள்.

எல்லாரும் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் தேவையில்லாமல் என்
பதிவு தெரியவேண்டாம் என்பதாலும் சில பின்னூட்டங்கள் தந்த மன உளைச்சலாலும்
அவற்றை வெளியிடவில்லை.

சப்ப மேட்டர் இத ஏண்டா எழுதினுகிறன்னு தோணுதா?

---

"திரிகெ ஞான் வருமென்ன வார்த்த கேள்கானாயி
க்ராமம் கொதிக்காணுண்டென்னம்"

அரபிக்கதா - சீனிவாசன்

கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக கேட்டு ரசித்த ஒரு பாடல் மேற்கண்டது. அரபிக்கதா
படத்தில் ஜேசுதாஸ் பாடியது. தனிமையின் பல அவஸ்தைகளை பூதாகரமாக
உணர்த்தியது. சீனிவாசன் யாரென்று தெரியாதவர்கள் லேசா லேசா படத்தை நினைவுக்கு
கொண்டு வரவும். மிகச்சிறந்த திரைக்கதாசிரியர் & நடிகர். தனிமையில் உள்ளவர்கள்
உணர்வுப்பூர்வமாக ரசிக்க முடியும் பாடல். ஜேசுதாசின் குரலைப்பற்றி எழுத வார்த்தைகள்
இல்லை.

http://123musiq.com/Arabhikadha.htm இதுவும் வேலை சேய்யலன்னா யூடியூப்ல
arabhikatha, thirike njan என்ற வார்த்தைகளை போட்டு தேடினிங்கன்னா கிடைக்கும்

---

இப்பலாம் செக்ஸ் கதைகள், காம கதைக்கள், ஜட்டி கதைகள், பலான கதைகள் னு
நிறைய தலைப்புகள்ல சூடா தமிழ்மணத்துல பல பதிவுகள் வருது. நாமளும் அந்த
மாதிரி ஒரு கதை(?) துண்டு போட்டு காம புரட்சில இறங்கணும்னு ஐடியா வந்தது.
ஆனா காமத்த பத்தி பேசறவங்க எல்லாரும் காம காட்சில்லாக்கள், தப்பானவர்கள்
என்ற பொத்தாம்பொதுவான எண்ணம் இருப்பதாலும், ஒருவேளை நான் எழுதி
அதைப் படிப்பவர்கள் என் மேல் என்ன மாதிரியான அபிப்ராயம் கொள்வார்கள்
என்று டரியல் கொள்வதாலும் தோன்றும்போதெல்லாம் விட்டுவிடுவேன். இப்போது
தமிழ்மணத்தில் திரும்பிய பக்கமெல்லாம் காம புரட்சி நடந்துகொண்டிருப்பதால்
நம்ம பிட்டையும் அதிலே கரைத்து விடலாம் என்ற எண்ணத்தில் இந்த கொசுறு
பதிவு.

மக்களே தயவுசெய்து இந்த மேட்டர்லயும் எதாச்சும் தொடர் விளையாட்டு
வெச்சிடாதிங்க. நினைச்சாவே கிலியா இருக்கு.

இது எல்லாமே கதை என்று நினைத்தே படிக்கவும்.

முதல்கதை அன்பழகனுடையது. சுருட்டை முடி, குண்டு கன்னம், சிரித்தால்
கன்னத்தில் குழி விழும், இரும்பு போன்ற தேகமுடைய இளைஞன். இவனுக்கு
ஹாஸ்டலில் பட்டப்பெயர் வாய்க்கா மண்டையன். கேரம் ஆடுவதில் புலி. ரயில்பயணங்களில் வரும் கதாநாயகனைப்போல அடர்த்தியான முடிகளுடன்
சைடு வகிடு எடுத்து தலைவாரியிருப்பான் அதனாலே வாய்க்காமண்டையன்
என்று பெயர். இதுல என்னடா செக்ஸ் கதை இருக்குன்னு திட்டவேணாம்
ஹீரோவ பத்தி கொஞ்சமாச்சும் சொல்லணும்ல.

அதாகப்பட்டது கதையின் நாயகன் ஒருநாள் கேரம் ஆடிக்கொண்டிருந்தான்.
நல்ல உச்சிவெயிலின் ஞாயிறு மதியம். ஹாஸ்டலின் வராந்தாவில் டேபிள்
போட்டு விளையாடிக்கொண்டிருந்தவன் திடீரென்று என்ன நினைத்தானோ
எழுந்து வேக வேகமாக செல்ல ஆரம்பித்தான். (முந்தின தினம் பெரம்பலூர்
சுவாமி திரையரங்கில் ஷகீலா படம் பார்த்தது இங்கே குறிப்பிடத்தக்கது. காலம்
என்னும் பெருவெள்ளத்தில் அந்த திரையரங்கமும் திருமண மண்டபம் ஆகிவிட்டதை
இப்போது அறிகிறேன்) ஒண்ணுக்கடிக்கதான் போகிறான் என்று நினைத்து சும்மா
இருந்தோம். ஆனால் அவன் புயலென புறப்பட்டு ஒரு வெறி வந்தவன் போல
கிளம்பியதை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. நான் அவன் அறியாமல்
அவன் பின்னே சென்றேன்.

பத்து குளியலறை, பத்து கழிப்பறை எதிரெதிரே இருக்க பக்கத்தில் நீண்ட
தண்ணீர் தொட்டி இருக்கும். அதிகாலையில் அந்த நீண்ட தண்ணீர் தொட்டியில்
தண்ணீர் கோரி கோரி ஒரு கூட்டம் குளிக்கும். சிறையில் கைதிகள் குளிப்பதற்கு
சமமாய் அந்த காட்சி இருக்கும்.

இது எதற்கு... கதைக்கு வருவோம்.

நாயகன் ஒவ்வொரு கழிவறையாய் திறந்து பார்த்து துர்நாற்றம் வீசவே மூடிக்கொண்டே
வந்தான். ஒரே ஒரு கழிவறை மட்டும் சுத்தமாய் இருந்தது. ஆனால் பரிதாபமாய்
அதன் தாழ்ப்பாள் பல்லிளித்துக் கொண்டு மூட முடியாமல் இருந்தது. ஒருகணம்
யோசித்துவிட்டு உள்ளே நுழைந்து ஒருகையால் கதவை பிடித்துக்கொண்டான்.
ஒருகையால் லுங்கியை தூக்கிவிட்டுக்கொண்டு உட்கார்ந்தான்.

"ச்ச்சே இவன் இதுக்குதான் வந்தான் போலருக்கு என்று திரும்பபோனேன்"

கதவு ஒருவித தாளலயத்துடன் சீராக முன்னும் பின்னும் ஆட துவங்கியது அந்த கதவு.
அவன் அசைய அசைய முன் பின் அசைந்தது. சீராக அசைந்து கொண்டிருந்த கதவு
திடிரென்று வேகமெடுத்து அசைந்தது. தகரக்கதவின் கிரீச் கிரீச் சத்தம் மெதுவாக
உயர்ந்து, பின் சீறி பின் மெதுவாக தாழ்ந்து ஒரு கட்டத்தில் சத்தம் வருவது நின்றது.

"உஸ்ஸ் என்று நிம்மதியான பெருமூச்சென்று கிளம்பி வந்தது". தண்ணீர் குழாயை
திருகும் சப்தம். நாயகன் எழுந்து கதவை திறந்து வெளியே வந்தான். முகத்தில்
முத்து முத்தாக வியர்த்திருந்தது.

ஓடிப்போய் அன்பழகன் முன்னாடி நின்றேன். அவனின் முகம் களவாடி மாட்டிக்
கொண்டவனின் முகத்தைப்போல பீதியில் இருந்தது.

"மச்சான் நீ பாத்துட்டியாடா" ப்ளீஸ்டா யார்கிட்டயும் சொல்லிறாதடா என்று
கெஞ்சினான். அடுத்தநாள் கேரம் காயினுக்கு பதிலாக இவனைப்போட்டுதான் எல்லாரும்
விளையாடினார்கள்.

இப்போது நினைத்துப் பார்க்கிறேன். திடிரென்று அவனுக்கு தேவைப்பட்ட விஷயம்
அவனாகவே திருப்தியடைந்துகொண்டான். அவனாகவே தேடிக்கொண்டான். எவருக்கும்
எந்தவித தொந்தரவுமில்லாமல். ஆனால் சுயபோகத்தை செய்வது எத்தனை மானக்கேடான
சமாச்சாரம் என்று கற்பிக்கப்பட்டிருக்கிறது.

அனேகமாக மாத்ருபூதத்திடம் கேட்கப்பட்ட கேள்விகளிலேயே மிக அதிகபட்சமான
கேள்வியாக இதைத்தான் குறிப்பிட முடியும்? (லார்டு லபக்தாஸ் இல்லிங்க.)
அதை உறுதிசெய்வது போலவே சிவராஜ் சித்த வைத்தியக்காரர்களின் விளம்பரங்களும்
அமைந்துவிட்டன.

4 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

என்னோட 45 கதைகளில் ஒன்றாக சுயபோகத்தைப் பற்றி எழுத இருந்தேன் :)

இப்போ வேற மாதிரி முயற்சி பண்ணியாகனும் :)

நல்ல மொக்கை :)

ராஜ நடராஜன் said...

பதிவை சாருவில் துவங்கி சாரு மாதிரியே முடிச்ச மாதிரி தெரியுது.

கோபிநாத் said...

மொக்கை சூப்பரு ;-)

ஜி said...

:)))