எல்லையற்ற அன்பு கொள்வோம்

Friday, June 13, 2008

தசாவதாரம் - உலகத்தரமா?

தசாவதாரத்தின் மேலும் கமலின் நடிப்பின் மேலும் வானளவு நம்பிக்கை
வைத்திருப்பவர்கள் இந்த பதிவை படிப்பதும் படிக்காமல் இருப்பதும் அவரவர்
விருப்பம். இங்கு எனக்குத் தெரிந்தவகையில் மட்டுமே பார்வை இருக்கும்.

படத்தின் தயாரிப்புக்காலம் இரண்டரை ஆண்டுகள் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய
விஷயம்தான். பத்தில் எட்டுப்பேருக்கு மாஸ்க் மாட்டிவிடவே அத்தனை நேரம் தகும்.
கமலை விட்டால் இந்த வேடங்களில் யாராலும் நடிக்கவே முடியாது, காரணம் படத்தின்
பெயர் தசாவதாரம். பத்து வேடங்களில் நடித்திருப்பதை எப்படி சாதனை என்று சொல்ல
முடியும்? நடித்தபிறகுதான் சாதனை செய்ய வாய்ப்புள்ளதா என்று தெரியும் இல்லையா
என்று தெரியும். படம் முடிந்துவெளிவரும் முன்னரே உலக சாதனை, உலகத்தின்
ஒரேநாயகன் என்ற அடைமொழிகளோடு சொன்னவர்கள் எல்லாரும் கமலைச் சுற்றி
உள்ள அடிப்பொடிகள். இதுவும் ஒரு மார்க்கெட் உத்தி என்றே கொள்க. சிவாஜி என்ற
குப்பைப் படத்திற்கு ஆன அளவுக்கு ஆகாமல் மாறுபட்டிருந்தது என்பது குறித்து
சந்தோஷம் கொள்வோம்.

உலகத்தரம் என்ற கூச்சலுக்கு முதலில் ஒரு முற்றுப்புள்ளி வைத்தே ஆக வேண்டிய
கட்டாயம். எங்கே அய்யா இந்தமாதிரி உலகத்தரமான படம் எடுக்கிறார்கள்? அதிக
பட்சமாக இந்தியத்தரம் என்று சொல்வதுகூட சற்று அதிகம். மேம்பட்ட தமிழ்நாட்டுத்
தரம் என்பது சரியாக இருக்கலாம்.

சந்தானபாரதி என்பவர் கமலின் உற்றநண்பர். இவர் நடித்த படங்களில் கதாநாயகியை
அத்துவானக்காட்டில், ஆற்றங்கரையோரம் கற்பழிப்பதுதான் இவரின் ஹைலைட்.
அதற்காக தசாவதாரத்தில் கூடவா மாற்றமே இல்லாமல் எடுப்பார்கள்?.

ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி சேகர், க்ரேஸி மோகன் ஆரம்பகால நாடகங்களில்
அவர்களின் மொக்கைக் கடி ஜோக்குக்காகவே பிரபலமானது. அந்த வகைக் காமெடியை
கமல் இன்னமும் வீழ்ந்துவிடாமல் காப்பாற்றி வருகிறார். இப்பொழுதுகூட எந்தக்
குழந்தை சொல்லும் கடிஜோக்குகளின் சரிபாதி இவர்களிடம் இருந்து சுட்டதாகத்தான்
இருக்கும்.

கொல்டி கமலின் வேடத்திற்கு அவ்வை சண்முகியின் முகத்தை எடுத்திருக்கிறார்கள்.
மற்ற அனைத்து வேடத்திற்கும் உடலைவிட தலை பூதாகரமாக பெரிதாக இருக்கிறது.
உதாரணம் வேண்டுமென்றால் விநாயகர் வேடமிட்டு வரும் தெருக்கூத்து நாடகங்களை
நினைவுக்கு கொண்டுவாருங்கள்.

உலகத்தையே அழிக்கும் அந்த கிருமி படத்தின் ஆரம்பகட்ட காட்சிகளிருந்து கடைசி
காட்சி வரை உச்சபட்ச வெயில் நகரமாகிய சென்னையில்தான் உலாத்திக்கொண்டிருந்தது
ஆனால் அதற்கு கமலாக மனது வைத்தாலொழிய மோட்சமில்லை.

தயவுசெய்து உலகத்தரத்திற்கு எடுக்கிறேன் என்று கிளம்புபவர்கள் எந்த சமரசத்தையும் செய்துகொள்ளாதீர்கள். அல்லது உலகத்தரம் என்ற லேபிளை உபயோகிக்காதீர்.

படத்தில் மொத்தமாக எனக்கு வெறுப்பு வந்த இடம் நாகேஷ் விபத்துக்குள்ளாகி
சாலையோரத்தில் பேசும் வசனங்கள். அவருக்கு கொடுக்கப்பட்ட பத்து வினாடிகளில்
சூழ்நிலைக்கு சற்றும் பொருத்தமில்லாமல் கடிஜோக்குகள் சொல்கிறார். கொல்டிகமலும்
வந்து தன்பங்குக்கு இரண்டு கடிஜோக்குகள் சொல்கிறார்.

ஆங்கிலத்தில் ஹெல்பாய் என்ற படத்தை பார்த்திருப்பீர்கள் அல்லது Shrek படத்தின்
எடிமர்பி குரல்கொடுத்திருக்கும் வேடத்திற்கும் கைப் உல்லா வேடத்திற்கும் குறைந்த
பட்சமாக எத்தனை வித்தியாசத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியும்? இவர் இவ்வளவு
உயரம் என்று காட்டுவதன் பின்னே எந்த அரசியல் உள்ளது. தமிழ்நாட்டில் வளரும்
முஸ்லிம்கள் இன்னமும் தமிழை இப்படித்தான் பேசுகின்றார்களா? கண்மண் தெரியாத
அளவுக்கா இன்னமும் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள்? உயரமான கமல் பேசும்
தமிழும் அவ்தார்சிங் பேசும் தமிழும் எந்த விதத்தில் வேறுபட்டது?

புஷ் கேரக்டரிலிருந்து சிதம்பரம் 95 வயசு பாட்டிவரைக்கும் இவர் மட்டுமே செய்ய
வேண்டுமா? இதற்கு ஹாலிவுட்டிலிருந்து ஆட்கள் வரவேண்டுமா? ஈரானில்
இப்படி யாரும் வருவதில்லை. மொராக்கோ, செசன்ய குட்டிநாடுகள் எல்லாம்
இவ்விதம் உலகத்தரம் என்று நீட்டி முழக்கி படம் எடுக்கவில்லை. ஆனால் அவர்களின்
படம் உலகத்தரத்திற்கு சவால் விடும்படி உள்ளது.

கமலின் நம்பிக்கை என்னவென்றால் சிவாஜி என்ற படத்தையே வெற்றிப்படமாக்கியவர்கள்
தசாவதாரத்தை கொண்டாடுவார்கள் என்பதுதான்.

பெனாத்தல் அய்யா சொல்லியிருக்கிறார். அமெரிக்க வில்லன், புஷ், ஜப்பான் கமல்
என்று பலவேடங்கள் இருந்தாலும் உடல்மொழி பிரமாதமாக உள்ளது என. என்னுடைய
கணிப்பும் அதுவாகவே இருந்தது. ஆனால் கடைசிகாட்சியில் புஷ் மேடையில் குத்து
டான்ஸ் ஆடாத குறையாக மேடையில் இடமிருந்து வலமாகவும், வலமிருந்து
இடமாகவும் நடக்கும் அந்த காட்சியை பார்த்ததும் மொத்தமாக கலைந்துபோனது.
பழைய நாடங்கங்களில் பிரதான நாயகர்கள் ஒப்பனை செய்யும் நேரத்தில் திரையை
இழுத்து மூடாமல் பபூன் என்றழைக்கப்படும் நகைச்சுவை நடிகரை உலவ விடுவர்
அதுபோலதான் அந்த புஷ் வேடம் நடந்து சென்றது. இதற்கு ஆர்ப்பரிக்கும் மக்கள்
வேறு!

உயரமான கமல், புஷ் வேடம், பாட்டி வேடம் போன்றவை எண்ணிக்கைக்கு
உதவியதே தவிர வேறென்ன செய்தது. இந்த படத்தால் தெரியவரும் செய்தி என்ன
என்றால் கமல் 100 பாத்திரங்களைக் கூட ஒரே படத்தில் செய்ய முடியும் அதைச்சுற்றி
ஜிகினா போல கதையை அமைத்து ஹாலிவுட் தரம் என்ற லேபிளையும் குத்த
முடியும் என்பதே!

படத்தின் இசையைப் பற்றி சொல்லவேண்டும். இசை இந்த படத்தில் என்ன செய்தது
என்பதை யாராவதுதான் சொல்லவேண்டும். போக்கிரி படப்பாடல் கூட இந்தகாலத்தில்
ஹிட் ஆவது ஒன்றும் ஆச்சரியப்படும் விஷயம் அல்ல. பின்னணி இசை வேறு ஒருவர்.

அய்யா கே.எஸ்.ரவிக்குமார் அவர்களே! உங்களுக்கு இப்படத்தின் இயக்குனர் என்ற
பெயரே அதிகபட்சம். சுந்தர் சி க்கு அளிக்கப்பட்டதே அதைப்போல. அதற்காக எல்லாபடத்திலும் வருவதுபோல கருப்பு கண்ணாடி கருப்பு கோட்சூட்டுடன் காக்காய்வலிப்பு வந்தவரைப்போல ஏன் ஆடுகிறீர்? உலகத்தரமான இப்படத்தில் நீங்கள் எதற்கு? சற்று ஒதுங்கிதான் நில்லுங்களேன். அந்த ஐந்து நொடி நடனத்தில் என்ன சாதித்துவிட்டீர்?

கசப்பு மருந்தை சாப்பிட்டவுடன் இனிப்பை நம் மனது நாடும் அல்லவா! அதுபோல
மூன்றாம் பிறையின் இந்திப்பதிப்பான சத்மா வை பார்த்தேன். பாலுமகேந்திராவுக்கும்
கமலுக்கும், ஸ்ரீதேவிக்கும் முத்தம் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.
எவ்வளவு அழகான தெளிவான முகம்? மூன்றாம் பிறை முதல் அன்பே சிவம்
வரை தங்களது முகத்தில் சிறிய மாற்றத்தினைதான் காணமுடியும். அக்கால
இடைவெளி கூட தங்கள் உடல்கட்டினை பாதிக்கவில்லை. பத்து வேடம் செய்கிறேன்
இருபது வேடம் செய்கிறேன் என்று முகத்தில் ரசாயனத்தை அள்ளிப் பூசாதீர்கள்.
மாயாஜால தந்திரப்படங்களைப் பார்ப்பதுபோல உள்ளது. தங்களின் நடிப்பிலும்
மேலாக உங்கள் முகத்தை ரசிக்கிறேன்.

சிவாஜி படத்தை தொழில்நுட்பம், ஒப்பனை இல்லாமல் யாராவது அதே கதையை
பார்க்க தைரியம் உள்ளவர்கள் இருக்கிறார்களா? ரஜினி என்ற அவ்வளவு பெரிய
காந்தத்திற்கே இந்த நிலைமை. அடுத்த ரஜினி படத்துக்கு கூட இதே நிலைமைதான்
"ரோபோ" என்று பெயர் வைத்திருக்கிறார்கள். உண்மையில் ஷங்கர் கூட்டத்தினர்
ராமநாராயணனுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல. தொழில்நுட்பத்தை பரிகாசம்
செய்பவர்கள் இவர்கள்.

படத்தின் இறுதியில் ஒரு வசனம் வரும் "கடவுள் இருந்திருந்தா நல்லா இருக்கும்"
என்று. ரஜினியின் அரசியல் பிரவேச அறிக்கைகள் போல உள்ள காட்சி இது.
எதிர்ப்பாளாரகவோ, ஆதரிப்பவராகவோ நடிகர்கள் இருக்கவேண்டும் என்று நம்பும்
மனப்பான்மையை தொடர்ந்து வளர்த்துக்கொண்டு போவதில் இந்த நடிகர்களுக்கு
அப்படி என்ன மயக்கமோ தெரியவில்லை. தமிழனும் தினம் தினம் அதற்காகவே
காத்துக்கொண்டிருக்கிறான். என்னையும் சேர்த்தே சொல்கிறேன். இன்னும் இருபது
வருடம் கழித்து விஜய் கூட தகுதி பெற்றுவிடுவார் என்று நம்புவோம்.

இவ்வளவு செய்திருக்கும் இந்தப்படத்தில் குறைகள் சொல்லவே மனது அஞ்சுகிறது.
காரணம் அத்தனை பேரின் உழைப்பு இருக்கிறது. மாறாக கமலின் வேடங்கள்
மனதுக்குள் பல கேள்விகளை எழுப்புகிறது. அமெரிக்க வில்லன் பாத்திரத்தைப்
பார்க்கும்போதெல்லாம் சிரிப்புதான் வருகிறது. அவ்வளவு பெரிய தலையா
அமெரிக்கர்களுக்கு இருக்கிறது? எம்.ஜி.ஆர் காலத்தில் மச்சம் ஒன்றுதான் இரட்டை
வேடத்திற்கு மாற்றாக இருந்ததே! சமீபத்தில் வந்த அ.த.ம கூட அந்த விதிகளை
மீறாமல்தானே வந்திருக்கிறது. :)

நிஜமுகத்தை வைத்துக்கொண்டே நீங்கள் நன்றாக நடிக்கிறீர்கள் கமல். இந்த பொய்
முகங்களுடனான முகத்தில் உங்கள் நடிப்பை கடினத்துடன் தேட நேர்கிறது முடிவில்
சலிப்புதான் மிஞ்சுகிறது.

100 கோடி பட்ஜெட், வெளிநாட்டு ஒப்பனைக்கலைஞர்கள், ஹாலிவுட் தரம், மயிர்க்
கூச்செரியும் சண்டைக்காட்சிகள் இதெல்லாம் சலித்து விட்டன கமல். உங்களைச்சுற்றி
இருக்கும் "ஒலகநாயக" கோஷத்தை விட்டு வெளியே வந்துவிடுங்கள். புகழுக்காக,
வியாபாரத்துக்காக மூளையை மழுங்கடிக்கும் வித்தையை செய்ய பலர் இருக்கிறார்கள். இப்பொழுதுகூட உங்கள் படத்தினைக் காண எனது ஒரு முழுமாத ஊதியத்தைக் கூட தரத்தயாராக இருக்கிறேன். அதற்கேற்றார்போல உங்களது படங்களும் இருக்கட்டும்.
சன் டீவி, கலைஞர் டிவி டாப்டென்னில் முதலிடம் பெற விஜய், அஜித், சிம்பு
போன்றவர்கள் இருக்கிறார்கள்.

'நீ சொல்வதை ஏற்கவோ மறுக்கவோ எனக்கு உரிமையுண்டு,
ஆனால் அதை நீ சொல்வதற்கான சுதந்திரத்தை என்
உயிரைக்கொடுத்தேனும் பெற்றுத்தருவேன்"
புனிதர்களின் தாக்குதலில் இருந்து
தப்பிப்பதற்கான டிஸ்கி அல்ல இது.

30 comments:

Anonymous said...

Y blood ???

Same blood :)

MyFriend said...

//ஆனால் கடைசிகாட்சியில் புஷ் மேடையில் குத்து
டான்ஸ் ஆடாத குறையாக மேடையில் இடமிருந்து வலமாகவும், வலமிருந்து
இடமாகவும் நடக்கும் அந்த காட்சியை பார்த்ததும் மொத்தமாக கலைந்துபோனது.//

ரிப்பீட்டேய். நிஜமா இப்படிப்பட்ட ஒரு மேடைப் பேச்சில் புஷ் கலந்துக் கொண்டிருந்தால் இப்படியா செய்திருப்பார்???

gulf-tamilan said...

:(((

Anonymous said...

திரும்ப திரும்ப அறிவுஜீவி பில்டப்பா? திரும்ப திரும்ப செய்யுற நீயி? திரும்ப திரும்ப செய்யுற நீயி?

அந்த அனானிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை

கதிர் said...

//திரும்ப திரும்ப அறிவுஜீவி பில்டப்பா? திரும்ப திரும்ப செய்யுற நீயி? திரும்ப திரும்ப செய்யுற நீயி?//

இல்ல, நான் முட்டாள்தான். ஏன் முட்டாளுங்க எதைச் சொல்றதுக்கும் உரிமை இல்லயா? சரி நான் அறிவுஜீவி பில்டப்தான் கொடுக்கறேன்னு வெச்சுக்க உனக்கு ஏன் எரியுது?

ராஜ நடராஜன் said...

வணக்கம்.பதிவின் நீளத்தை பார்க்கும்போதே படத்தை அதிகம் எதிர்வினையாக ரசித்துள்ளீர்கள் என்று புரிகிறது.நான் இன்னும் படம் பார்க்கவில்லை.எனவே உங்கள் கருத்துக்களில் எத்தனை சதம் உண்மையென்று தெரியவில்லை.ஆனால் கமலுக்கு உலகநாயகன் பெயர் தந்தது இந்தப் படத்துக்கு அல்ல.அது மருதநாயகம்.திரைப்படங்களின் பரிணாமங்களை வியாபார நோக்கிற்கும் அப்பாலும் பரிட்சித்து பார்க்கும் கமல் பாராட்டுக்குரியவரே.

கண்மணி/kanmani said...

வெல் செட் தம்பி! உங்க ஆதங்கம் நியாயமானதே...சிவாஜி போன்ற ஜாம்பவான்களின் அதி அதீத நடிப்பையும் தாண்டி இயல்பான நடிப்பால் நம்மைக் கவர்ந்தவர்.இன்றைக்கும் உன்னால் முடியும் தம்பியை புதிது போலவே பார்க்கக் கூடிய நடிப்பைத் தந்தவர்.
வித்தியாசம் என்ற பெயரில் குணா தொடங்கி உடலை முகத்தை மெது மெதுவாக மாற்றி தன் சுயத்தை இழந்து வருகிறார்.இதில் ஆங்கில உச்சரிப்பும் கலப்பும் சேர்ந்து படம் ஹாலிவுட் தரமாகிப் ???? போகிறது.10 வேடம் போடுவது மட்டுமே நடிப்பின் சாதனையாகவோ பிரம்மாண்டம் மட்டுமே உலகத் தரமாகவோ இருக்கும் பட்சத்தில் அதை சிம்பு இல்லை தனுஷே செய்யக் கூடுமே :))
இதை எல்லாம் தாண்டி இன்னமும் கமலிடம் பிடித்த விஷயம் அவரின் நடிப்பின் மீதான ஈடுபாடும் முயற்சிகளும்.
அதற்காகவேனும் தசாவதாரம் பார்க்க வேண்டும்

டிஸ்கி:ஒவ்வொருவரின் கோணமும் மாறுபடும்போது எதுவும் 100% குறையற்றதாக இருக்க வாய்ப்பில்லைதானே.இது தசாவதாரம் படத்துக்கு மட்டுமில்லை அதைப் பற்றி வரும் விமர்சனப் பதிவுகளுக்கும் பொருந்தும்.
சிவாஜி போன்ற ஹைடெக் பூ சுத்தலுக்கு நம்ம ஆளின் அவதாரம் பாராட்டப்பட வேண்டிய முயற்சிதான்.

பிச்சைப்பாத்திரம் said...

அன்புள்ள நண்பரே

வழக்கமான கூச்சல்களிலிருந்து விலகி உங்கள் பதிவு யதார்த்த்தை சொல்கிறது. எனக்கும் கமலைப் பிடிக்கும் என்றாலும் நீங்கள் சொல்வதுடன் உடன்படுகிறேன். நிஜமான உலகத்தரப்படங்களை பார்த்திருப்பவர்கள் கமலின் gimmics-ஐ கண்டு அருவருக்கவே செய்வர்.

Anonymous said...

//சரி நான் அறிவுஜீவி பில்டப்தான் கொடுக்கறேன்னு வெச்சுக்க உனக்கு ஏன் எரியுது?//

ஒரு முட்டால் அறிவுஜீவி பில்டப்பு கொடுத்தா எனக்கு மட்டுமா எல்லாருக்கும் எரியும்.

இன்னொரு முட்டாள் அவனை அறிவுஜீவியா காமிச்சுக்க உங்களையெல்லாம் அவனோட அல்லக்கை மாதிரி பில்டப்பு கொடுக்கிறான். என்னய்யா எல்லாரும் மனசுலே நினைச்சுக்கிட்டிருக்கீங்க.

Athisha said...

:-(

அப்ப படம் மொக்கயா?

Anonymous said...

//அப்ப படம் மொக்கயா?//

படம் மொக்க அல்ல. இந்த விமர்சனம் எழுதுன அறிவுசீவி மொக்க.

//வழக்கமான கூச்சல்களிலிருந்து விலகி உங்கள் பதிவு யதார்த்த்தை சொல்கிறது.//

இப்படிய்யே ஏத்தி உட்டு, ஏத்தி உட்டே உடம்பெல்லாம் ரணகலமாக்கிடுங்கய்யா.

Anonymous said...

Helo friends,

Thambi sir,

Can you give me a list of tamil movies with world standard?

vasu

Anonymous said...

//Can you give me a list of tamil movies with world standard?//

world standard movie innum varalai. thambi sir padam eduththal than varum

Anonymous said...

Are you really have IQ? I doubt about your brain is normally working. Check an pshychyatrist man. pshychos only can think like this.

கதிர் said...

விக்கி,
இந்த அனானி தலையனுங்க தொல்ல தாங்க முடியலப்பா... என்னை திட்டறதுமில்லாம கமெண்ட் போட்டவங்களையும் திட்டறான்.

மைப்ரெண்ட் :)

ராஜராஜன்
பதிவில் சொன்னதுமாதிரியே ஒரு ரசிகனா நான் எந்த எதிர்பார்ப்புமில்லாமல் போயும் ஏமாந்து போனதைத்தான் சொல்லி இருக்கிறேன்.

டீச்சர்,

ஹைடெக் பூ சுத்தல்களுக்கு நடுவில் இதுபோன்ற முயற்சிகளும் பாராட்டப்படவேண்டும்தான். சந்தேகமில்லை. ஆனால் குறைந்தபட்சமாக உள்ள தவறுகளையும் சுட்டிக்காட்டலாம்தானே? அதுவும் தவறு எதுவும் சொல்லவேண்டாம் என்று சொல்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை.

அதிஷா,

படம் மொக்கை என்றோ, பிரமாதம் என்றோ நான் சொல்லவில்லை. இதுபோல மாஸ்க் அணிந்துகொண்டு எதற்கு உள்ள பெயரை கெடுத்துக்கொள்ளவேண்டும் என்றுதான். அதுவும் கமலின்மேல் உள்ள ரசனையின் வெளிப்பாடு.


அனானி,
என்னைத் தாக்குவது தவிர வேறெதுவாக இருந்தாலும் பேசலாம்.
உங்க கமெண்ட்லருந்தே தெரியுது என்னொட பதிவுகள் மேல் உள்ள வெறுப்பை விட என்மேல்தான் அவ்வளவு வெறுப்பு என்று. உங்களுக்கு பெயர் இருந்தால் அதோடு வாருங்கள். நான் இங்கேயே காத்திருக்கிறேன்.

கதிர் said...

சுரேஷ்கண்ணன்

உங்கள் கருத்துக்கு நன்றி.

Anonymous said...

அனானி சமூகத்திற்கு
நீ எங்கிருந்து கமெண்ட் போடுற ..என்னா உனக்கு காண்டு ன்னு நல்லா புரியுது தலைவா..என்னிக்காச்சிம் ஓவராச்சின்னா அன்னிக்கு இருக்குடி உனக்கு ...

இன்னொரு முட்டாள்

Anonymous said...

சிறந்த விமரிசனம்.

உலக தரம் என்று சொல்வேதல்லாம் பேத்தல். தமிழில் நல்ல படைப்பாளர்கள் என்று சொல்ல தகுந்தவர்கள் வெகு சிலரே. பாலு மகேந்திரா, பாலாஜி சக்திவேல், அமீர், ராதா மோகன் என்று விரல் விட்டு எண்ணலாம். இந்த மாதிரி ஜனரஞ்சக படம் எடுப்பவர்கள் கூச்சல் தாங்க முடியவில்லை.

King... said...

கமல் தன் சுயத்தை இழந்து கொண்டிருக்கிறார் போலத்தான் தெரிகிறது... கமல் நல்ல நடிகன் என்பதில் உங்களைச்சார்ந்த கருத்தே எனக்கும் இருக்கிறது நண்பரே...

கோபிநாத் said...

அருமையான விமர்சனம் நண்பரே :)

Anonymous said...

//கோபிநாத் said...

அருமையான விமர்சனம் நண்பரே //

யார் பதிவு போட்டாலும் இந்த ரெடிமெட் பின்னூட்டம் போட்டு அசத்திடுறீங்க கோபி... :P

ஆனாலும் தம்பியின் தசாவதாரம்-உலகத்தரமா? கேள்வி நியாயமானது.
அதிலும் குறிப்பாக வரலாற்றில் இல்லாத சம்பவங்களை உண்மையில் நடந்ததாக காட்டியது தவறில்லைதான் ஆனால் திரித்துக் கூறியது தவறு. சமணர்கள் அப்பரை கல்லைக் கட்டி ஆற்றில் போட்ட சம்பவத்தை திரித்துக் காட்டுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதா? ஏன் கமலுக்கு இந்த கொல வெறி...

ஒப்பாரி said...

தசாவதாரம் முழுக்க கமர்ஷியல் மசாலாதான், ஆனாலும் மற்ற கமர்ஷியல் படங்களைவிட இதில் பரீட்சார்த்த முயற்சிகள் அதிகம், நான் 10 வேடங்களை சொல்லவில்லை technical brilliance, இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்யும்பொழுதே இதை குறைகள் உள்ள மசாலா படமாகத்தான் தரமுடியும் என்று முடிவு செய்தே இப்படத்தை கமல் தொடங்கியிருப்பார்.

நம்பி வரும் காட்சிகளும் உங்களுக்கு பிடிக்கவில்லையா?

உலகத்தரத்தின் அளவுகோல் எது? இதை யார் முடிவு செய்வது?

இந்த புகழால் கமல் மயங்கிவிடுவார் என்று வருத்தப்படுவது அபத்தம். இதை கமலே பலமுறை நிரூபித்திருகிறார்.அவரின் உங்களுக்கான படம் நிச்சயமாய் வரும்

Jackiesekar said...

தசாவதாரம் குறை நிறை உள்ள படம் அதை ஒத்துக் கொள்கிறேன்,எந்த படத்தையும் குறை இல்லாமல் எடுக்க முடியாது என்பதே நிதர்சன உண்மை, இங்கே யாருக்குதான் அடிப்பொடிகள் இல்லை கஞ்சா கருப்புக்கே இருக்கும் போது கமலுக்கு தப்பிஙல்லை என்பதும் நம் சமுக அமைப்பு அப்படி...ஒரு புத்தகத்தை விமர்சிக்க பத்து முறையாவது படிக்க வேண்டும் ஆனால் சினிமா ஒருமுறை பார்த்து கீ போர்ட் அருகே உட்கார்ந்து விடுகிறோம் அதுவும் சினிமா புரியாமல் மிக உன்னதமாக எடுத்த அன்பே சிவம் , மகாநதி இரண்டு படத்துக்கும் இந்த தமிழ் சமுகம் என்ன செய்யதது????????

Unknown said...

10 கதாபாத்திரங்களை வைத்து 3மணி நேர தமிழ் படத்தை உருவாக்குவது கடினம். கமல் சிறந்த கதாசிரியர் அவர் பல நல்ல கதைகளை தமிழ் சினிமாவுக்கு கொடுத்துள்ளார். ஆனால் தற்ப்பொது அவரது கதைகள் தோல்வி அடைந்து வருகின்றன, ஆளவந்தான்,விருமான்டி,தசாவதார
��் அகிய மூன்று கதைகளும் தோல்வி அடைந்து உள்ளன, அவருக்கு சிறந்த உலக தமிழ் படத்தை எடுக்க வாழ்த்துக்கள்

Anonymous said...

சாரு நிவேதிதா இணையத்தில் இருந்து இங்கே வந்தேன். சாரு பாதிப்போடு யாரோ இங்கே ஏதோ எழுதியிருப்பதாக அங்கே ஒரு கடிதம் இருந்தது. இங்கே வந்து பார்த்தால் வெறும் குப்பை. சாருவோடு யாரும் தங்களை ஒப்பிட்டு பேசவேண்டாம். சாருவுக்கு இணையாக தங்களை பேசும் தகுதி எவனுக்கும் இல்லை.

Anonymous said...

ஜாக்கிசேகரை வழிமொழிகிறேன்

கதிர் said...

தமிழினியன்,

அந்த கடிதத்தை எழுதியது நான். அவர் வெளியிடமாட்டார் என்று நம்பினேன். சாருவோடு என்னை நான் ஒப்பிடவில்லை என்பதை நினைவுபடுத்துகிறேன். என் எழுத்து குப்பை என்பது நான் அறிந்ததே!

நன்றி.

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

உங்கள் குரல் உண்மையான கமல் ரசிகர்களின் குரலாக உள்ளது !!
எங்கள் வேதனையும் அதுதான் .! மிகவும் அழகாக இடித்துரைத்து உள்ளீர்கள் !
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்

முனாஸ் சம்சுதீன் said...

கஸ்டப்பட்டு டிக்கெட் வாங்கி க்ஷோ தொடங்க ஒரு 45 நிமிடம் முன்னாடியே தியேட்டரில் (தோஹா சினிமாவில்) சீட் பிடித்து பார்த்த படம். கடைசியில் கிடைத்தது பெரும் எமாற்றம் மாத்திரமே. எனக்கென்னமோ சிவாஜி பட்ம் பார்க்கும் போது கிடைத்த திருப்தியில் பாதி கூட கிடைக்கவில்லை. எனக்கு ரஜனியின் நடிப்பை விட கமலின் நடிப்பு ரொம்மவே பிடிக்கும்.

Unknown said...

Oh God..... Got fear abt ur comments, Becoz am die hard kamal fan. hmmmm....... am going to see this film ASAP. Am agree with your other comments lik Sivaji Film comment, Vijay etc. V both r travel in same thoughts abt film industry thats y got fear abt ur dhasavadharam comments. Lets C.... Keep it up