எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, October 16, 2006

செத்து செத்து விளையாடலாமா?

Image Hosted by ImageShack.us

மேல இருக்கற நம்ம கைப்புள்ளயின் வலது
கரத்தை எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்னு
நினைக்கிறேன். சமீப காலமா பிரபலமாகிட்டு
வரும் நகைச்சுவை நடிகர்.

"என் புருசன் குழந்தை மாதிரி" படத்தில
வடிவேலுவ ஓட ஒட வெரட்டி, கொலவெறியோட
ஆவேசமா தொரத்தி காதை லேசா தொட்டு பச்ச
புள்ள மாதிரி விளையாட்டு விளையாடுவாரே
அவர்தான் இந்த முத்துக்காளை. சங்கத்தில
இருக்கற ஆளுங்களுக்கு இவர தெரிஞ்சிருக்கும்.

சில சமயத்தில சரக்கை விட ஊருகாய் நல்லா
இருக்கறதில்லையா அதே மாதிரி இவர் நடிச்ச
ராமகிருஷ்ணா என்ற படத்தில சார்லி இருந்தும்
இவரது நடிப்பையே எல்லாரும் ரசித்தார்கள்.
நான் உட்பட. தமிழ் நகைச்சுவை காட்சிகளில்
எனக்கு தெரிந்து மோனோ ஆக்டிங் என்பதை
புகுத்தியவர் இவர் என்றே நினக்கிறேன். இல்லாத
ஒன்றை இருப்பதாக காட்டி பிறரை ஏமாற்றுவதை
ராமகிருஷ்ணா படத்தில் மிக அருமையா காமெடி
பண்ணியிருப்பாரு.

Image Hosted by ImageShack.us

ஒரு பைட்டராக திரையுலகில் அறிமுகமாகி இன்று
நகைச்சுவையில் குறிப்பிடும்படியான இடத்தை
பிடித்திருக்கிறார்.

இப்ப என்னாத்துக்கு இந்த இழு இழுக்கற நீ?
மேட்டர் இன்னானு சொல்றா வென்று! என்று
கேட்பதற்கு முன்னால் நானே சொல்றேன்.
நேத்திக்கு வழக்கம்போல வலைப்பக்கத்தில
உலாத்திக்கிட்டு இருந்தேன். இட்லிவடை பக்கத்தில
கூகிள் தேடுதல் பத்தி எழுதி இருந்தார்.
இப்படியெல்லாம் வசதி இருக்குதான்னு பாத்தேன்.
நாம எக்கு தப்பா கேட்டா என்ன பதில்
சொல்லும்னு பாத்தேன். அப்டி என்னப்பா
கேட்டுபுட்டே நீயின்னு நாதஸ் கோஷ்டில வர
ஆளுங்க செந்தில கேட்ட மாதிரி கேளுங்க..

நான் எப்ப சாகப்போறேன்? இதத்தான் கேட்டேன்.
இன்னும் பதிமூணு வருசந்தான் என்னோட ஆயுசாம்
அதுக்குள்ள பூட்ட கேசுதானாம். அந்த வலைதளத்தில்
சொல்லியிருந்தாங்க.முத்துக்காளை ஞாபகம் வந்துடுச்சி
இந்த தளத்தை பார்த்தவுடன். செத்து செத்து
விளையாடலாமா? பாத்ததும் சிரிப்பு சிரிப்பா
வந்திடுச்சி அப்படியே ஒரு யோசனையும் வந்திச்சு
இதெல்லாம் உண்மையா இருந்தா எப்படி இருக்கும்
என்று ஒரு கற்பனை.

வருடாவருடம் பிறந்தநாள் கொண்டாடறவங்க
இறந்தநாளும் தெரிஞ்சா அதையும் கொண்டாடுவாங்களா?
இல்ல துக்கப்பட்டு அன்னிக்கே ஒப்பாரி வைக்க
ஆரம்பிச்சுடுவாங்களா?. அன்னிக்கு கேக் வெட்டி
கொண்டாடுவாங்களா? புதுத்துணி உடுத்துவாங்களா?
கோயிலுக்கு போயி கடவுள்கிட்ட பெட்டிஷன்
குடுப்பாங்களா?

26 comments:

நாமக்கல் சிபி said...

தம்பி,
இது காமெடி பதிவா, சீரியஸ் பதிவா???

நான் சீரியஸாவே சொல்றேன் காமெடி ஆக்கிடாத:
வாழ்க்கையில நடக்கறது எதுவும் தெரியாம இருந்தாதான் நல்லா இருக்கும். தெரிஞ்சா இண்ட்ரஸ்டிங்கா இருக்காது.

மரணத்தை கண்டு மனிதன் அஞ்சி உருவாக்கியதுதான் தெய்வம், மறுபிறப்பு, சொர்கம் எல்லாமே...

மரணத்தை பற்றி தெரிந்தால் பெரும்பாலானோர் வருந்தவே செய்வர்...

கதிர் said...

ஆகா வெட்டி,

உனக்குள்ள இவ்ளோ பெரிய தத்துவஞானி ஒளிஞ்சிருக்காரா?

//மரணத்தை கண்டு மனிதன் அஞ்சி உருவாக்கியதுதான் தெய்வம், மறுபிறப்பு, சொர்கம் எல்லாமே...//

ஒருவிதத்தில் பார்த்தால் இது உண்மைதான் வெட்டி.

என்னோட கருத்து என்னன்னா?
எப்படி இந்த உலகத்தில எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாம பிறக்கிறோமோ ஆனா இறக்கும்போதும் எந்த வித எதிர்பார்ப்புமின்றி இறக்கவேண்டும். அதை பார்த்து பயப்பட ஒண்ணுமேயில்ல என்ற தோற்றத்தை கடவுளை உருவாக்கியதற்கு பதில் செய்திருந்தார்களேயானால் இன்றூ இந்தளவு பயம் வராது.

நம்ம கவலையே சுற்றத்தை பத்திதானே அதனாலதான் கவலையே வருகிறது.

//தம்பி,
இது காமெடி பதிவா, சீரியஸ் பதிவா???//

காமெட்ய் பதிவா இருந்தாலும் விவாதம் சீரியஸா இருந்தா தப்பில்லை.

Leo Suresh said...

தம்பி,
நான் பார்த்தபோது, இன்னும் 20 வருஷம் என்று இருந்தது.கடந்த மே மாதம் மரனத்திலிருந்து தப்பித்த நாளில் இருந்து 20வருஷம் என்பது bonus தான்.சந்தோஷம்.
லியோ சுரேஷ்
துபாய்

கதிர் said...

//Leo Suresh said...
தம்பி,
நான் பார்த்தபோது, இன்னும் 20 வருஷம் என்று இருந்தது.கடந்த மே மாதம் மரனத்திலிருந்து தப்பித்த நாளில் இருந்து 20வருஷம் என்பது bonus தான்.சந்தோஷம்.
லியோ சுரேஷ்
துபாய்//

அட அதெல்லாம் சும்மாங்க ஒரு காமெடி இருக்கட்டுமேன்னு எழுதினது. அதையெல்லாம் நம்பாதிங்க. எந்த கணக்குல அவங்க சொல்றாங்கன்னு தெரியாது. விளையாட்டாகதான் அதை எடுத்துக்கணும்.

துபாய்ல எங்க இருக்கீங்க?

வருகைக்கு நன்றி

கார்த்திக் பிரபு said...

thanbi enna vithiyasamana padhivugala podureenga?

Anonymous said...

ஆவிங்களோடலாம் பழகாதேனு சொன்னா கேக்குறியா பாரு.

கதிர் said...

கார்த்திக் இது வித்யாசமான பதிவுன்னு சொல்லி என்னை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி.

கதிர் said...

வாங்க அனானி,

அ.மு.க அமுங்கி போச்சுன்னு இங்க பேசிக்கறாங்க. என்னப்பா ஆச்சி உங்க கழகத்துக்கு. சிக்குன் குனியா மாதிரி ஏதாச்சும் தாக்கிருச்சா?

நாகை சிவா said...

அய்யோ தம்பி
என்னங்க இப்படி சொல்லிபுட்டிங்க
அய்யோ இப்ப என்ன பண்ணுறது

இன்னும் 13 வருசம் இருப்பீங்களா நீங்க

அது வரைக்கும் தொடர்ந்து பதிவுகளும் எழுதுவீங்களா

:-(

என்ன கொடுமைடா இது....

கதிர் said...

//இன்னும் 13 வருசம் இருப்பீங்களா நீங்க

அது வரைக்கும் தொடர்ந்து பதிவுகளும் எழுதுவீங்களா//

முடிவே பண்ணியாச்சா? அதெல்லாம் கப்சா விடறாங்கப்பா.

என் வாழ்க்கை என் கையில்.

சரி, அதுவரைக்கும் எழுதலாம் என்கிறீர்களா? நிறுத்து என்கிறீர்களா?

இராம்/Raam said...

கதிரு,

எனக்கு இன்னும் 54 வருசமென்னு காட்டுதுப்பா..!!!

கதிர் said...

//எனக்கு இன்னும் 54 வருசமென்னு காட்டுதுப்பா..!!! //

என்சாய் :)))

எம்மேல என்ன கோபமோ தெரியல மறுக்கா மறுக்கா போட்டாலும் அதே பதிமூணுதான்

இராம்/Raam said...

//எம்மேல என்ன கோபமோ தெரியல மறுக்கா மறுக்கா போட்டாலும் அதே பதிமூணுதான் //

அது அயல்நாட்டு சதி!!!!!

கதிர் said...

//அது அயல்நாட்டு சதி!!!!! //

கண்டிப்பா அது அயல்நாட்டு சதிதான். சந்தேகமே இல்ல.

நாகை சிவா said...

//முடிவே பண்ணியாச்சா? அதெல்லாம் கப்சா விடறாங்கப்பா. //

அடச்சே....:-(

//என் வாழ்க்கை என் கையில்.//

பல சமயத்தில் அப்படி தான், சில சமயத்தில் அடுத்தவன் கையிலும், காலிலும் இருக்கும்.
யாருனு நான் சொல்லாமலே உங்களுக்கு தெரியும்ல :)))))))

நாகை சிவா said...

//"செத்து செத்து விளையாடலாமா?" //

நாங்க ரெடி, நீங்க ரெடியா தம்பி....

கதிர் said...

//பல சமயத்தில் அப்படி தான், சில சமயத்தில் அடுத்தவன் கையிலும், காலிலும் இருக்கும்.
யாருனு நான் சொல்லாமலே உங்களுக்கு தெரியும்ல :)))))))//

நீங்களே அப்படி நினைச்சா நான் என்ன பண்ணுவேன்? நீங்க சொன்னாதாம்பா தெரியும்.

கதிர் said...

//நாங்க ரெடி, நீங்க ரெடியா தம்பி....//

எதுக்கு? சாகறதுக்கா? நேரம் வரும்போது டிக்கெட் வாங்கிட வேண்டியதுதான்:))

கப்பி | Kappi said...

அமைதிப்படை படம் பார்த்திருக்கீங்களா?? ;)

கப்பி | Kappi said...

இது ஒரு ஏமாத்து விளையாட்டு...எனக்கு நேத்து ஒரு 2063 காட்டுச்சு..இன்னைக்கு 2057 காட்டுது..என்னங்கய்யா இது??? ;))

கதிர் said...

//அமைதிப்படை படம் பார்த்திருக்கீங்களா?? ;) //

அமாவாசைதான பாத்தேனே!

கதிர் said...

//இது ஒரு ஏமாத்து விளையாட்டு...எனக்கு நேத்து ஒரு 2063 காட்டுச்சு..இன்னைக்கு 2057 காட்டுது..என்னங்கய்யா இது??? ;))//

நேத்திக்கு ஒரு வயசு இன்னிக்கு ஒரு வயசு போட்ட அப்ப்டிதான் வரும்.:))

நாகை சிவா said...

//நீங்களே அப்படி நினைச்சா நான் என்ன பண்ணுவேன்? நீங்க சொன்னாதாம்பா தெரியும். //

பிளைட்ல போகும் போது, அடுத்தவன் கைல.

ஊர்ல ரோட்ரோம நடந்து போகும் போது லாரிக்காரன் கால்ல.

இது போல ஏகப்பட்டது இருக்கு தம்பி அண்ணன்.

நாமக்கல் சிபி said...

//கப்பி பய said...
அமைதிப்படை படம் பார்த்திருக்கீங்களா?? ;)
//
தம்பி,
அதுல ஜோசியரோட ஜாதகத்தை பத்தி அவர்ட கேப்பாரே நம்ம "நாகராஜ சோழன்" (சோழர் பரம்பரையில் ஒரு MLA)... அதத்தான் நம்ம கப்பி சொல்றாரு...

கப்பி சரியா? ;)

கப்பி | Kappi said...

//நேத்திக்கு ஒரு வயசு இன்னிக்கு ஒரு வயசு போட்ட அப்ப்டிதான் வரும்.:)) //

நாங்க என்ன சினிமா நடிகரா?? என்னைக்கும் வயசு மாறாம இருக்கறதுக்கு?? நாள் ஆக ஆக வயசு கூடத்தான் செய்யும்....

ஆனா நான் நேத்தும் இன்னைக்கும் ஒரே வயசு ஒரே டேட்டா தான் கொடுத்தேன்...அப்படியும் மாறி வருது...

என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்க...என்ன நடவடிக்கை எடுக்கலாம்னு கலந்தாலோசனைல இருக்கேன்!

ராசுக்குட்டி said...

எங்க தாத்தன் பிறந்த தேதியப் போட்டேன்... இன்னும் 10 வருஷம் இருக்காம்... அவர் போயி 12 வருஷம் ஆச்சு!

நான் இப்போ என்ன செய்யனும் :-(

எப்டினாலும் சாகப்போறோம்னு தெரிஞ்சே நாம நல்லது எதுவும் செய்றதில்ல... தேதி தெரிஞ்சா மட்டும் என்ன நல்லது நடந்துரும்னு தெரியல எனக்கு!