எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, July 10, 2006

பிடித்த மற்றும் பிடிக்காத ஆறுகள்

ஜெஸிலாக்கா ஆறு விளையாட கூப்பிட்டாங்க. நம்மளை யாரும் இந்த விளையாட்டுக்கு கூப்பிடலியேனு சந்தோஷமா இருந்தேன். ஆட்டம் எல்லாம் முடியற நேரத்தில அழைப்பு வந்துடுச்சி. என்ன செய்யறது ஆடித்தான் பார்போம்னு களத்தில குதிச்சிட்டான் தம்பி.

எனக்கு பிடிச்ச விஷயங்களை இந்த ஆறுக்குள்ள அடக்க முடியுமானு தெரியலை.

பிடித்த ஆறு

1.அம்மா

எல்லாருக்குமே பிடிக்கும்தான் ஆனால் எனக்கு கொஞ்சம் கூடுதலாவே பிடிக்கும். அப்பாவின்
கோபத்தின் போது அம்மா ஒரு கேடயமாக இருப்பது. எந்த பிரச்சினையா இருந்தாலும் வீட்டுக்கு
வந்துட்டா எல்லாம் மறந்து போற மாதிரி ஒரு தெய்வீகம் அவங்ககிட்ட தான் இருக்கு. நம்மளுக்காக எவ்வளவு சிரத்தை எடுத்து எல்லா விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்ற அந்த குணம். நமக்கு வரும் மனைவி கூட அந்த அளவுக்கு செய்வாங்களா என்பது சந்தேகமே.
அதனால் அம்மாவுக்குதான் முதலிடம்.

2. கமலின் குரல்

உடனே கமலோட தீவிர விசிறி னு யாரும் நினைக்க வேண்டாம். அது என்னமோ தெரியலை
கமல் பேசினாலும், பாடினாலும் ரொம்ப பிடிக்கும். இஞ்சி இடுப்பழகா, ரகுபதி ராகவ
ராஜா னு ஹேராம்ல வரும் குரல் கேக்கும்போதே நரம்புக்குள்ள மராத்தான் பந்தயம் மாதிரி
ரத்தம் ஓடும். அபிராமி அபிராமி என்று முகத்தை அப்பாவி மாதிரி வச்சிகிட்டு நடிக்கறது
யாராலயும் முடியாது என்பது என்னோட கருத்து. இந்த சமயம் கடவுள் என் முன்னாடி
வந்தா நான் ஒரு வரம்தான் கேப்பேன். அந்த வரத்தை பதிவின் கடைசில போடுறேன்.

3. மாலை நேரம்

கீழ்வானம் மஞ்சல் நிறத்தில இருக்கும்போது என் வீட்டுல இருந்து ஏரிக்கரை வரைக்கும் ஒரு நடைய போட்டோம்னா அதுல வரும் சுகம் எதிலயும் வராது. தனியா நடந்து போகணும். யாருமே இல்லாத இடம் அது. தெற்கு பக்கமா இருக்கும் மதகுல அரை மணி நேரம் உக்காந்துட்டு வந்தோம்னா மனசுல இருக்கற குழப்பம் எல்லாம் எங்க போச்சுன்னே தெரியாது.

4. சித்தலிங்கமடம்

அம்மாவின் சொந்த ஊர். சின்ன வயசில பள்ளி விடுமுறைக்கு இந்த ஊர்தான் போவேன்.
மூணு வயசு வரைக்கும் பாட்டியிடம்தான் வளர்ந்தேன். அந்த ஊர்ல எனக்கு பிடிச்சதே அங்க
இருக்கும் வாய்க்கால்தான். முட்டிக்கால் வரைக்கும்தான் தண்ணி ஓடும். பளிங்கு மாதிரியான
தண்ணீர் போகும் பாக்கறதுக்கு கொள்ளை அழகா இருக்கும். காலுக்கடியில் மணல் கரைஞ்சி போறது, குட்டி குட்டி மீன்கள் கூட்டம் கூட்டமா போறது இதெல்லாம் ரசிச்சிகிட்டே இருப்பேன். காலையில் எழுந்ததும் வீட்டுக்கு பின்னாடி இருக்கும் வாய்க்காலுக்கு போய் பத்து மணி வரை குளிப்பேன் கரைக்கு வந்து சாலையோரம் இருக்கும் ஒரு வீட்டுல ஒருத்தர் பானை செய்வார். சக்கரத்தில களிமண்ணை அப்பி அதையே கொஞ்ச நேரத்தில அழகான பானையா மாத்திடுவார். என்னை மறந்து இதையெல்லாம் பாத்துகிட்டு இருக்கும்போது வீட்டுல இருந்து யாராவது ஆள் தேடிகிட்டு வந்திடுவாங்க.

5. கிரிக்கெட்

சோறு தண்ணி இல்லாம நாலு நாள் விளையாட சொன்னாலும் விளையாடுவேன் ஆனால் நாந்தான் மட்டைய பிடிக்கிறவனா இருக்கணும். அடிக்கிற வெய்யில்ல ரேஷன் கடைக்கு போகணுமா போம்மா எல்லாம் சாயங்காலம் வாங்கிக்கலாம்னு சொல்லிட்டு பக்கத்து ஊருக்கு சைக்கிள்ல போய் விளையாடிட்டு வந்ததை இப்பொ நினைச்சாலும் சிரிப்பா இருக்கு.

6. ஜீப்

ஏதோ ராணுவத்துல வரும் ஜீப் என்று நினைக்காதிங்க. எங்க வீட்டுக்கு பக்கத்தில சவுண்ட் சர்வீஸ் ஒண்ணு
இருக்கு அங்க கல்யாணத்துக்கு மாப்பிள்ளை ஊர்வலம் போக வர என்று ஜீப் வச்சுருக்காங்க அவரோட
பையன் நமக்கு தோஸ்த். அவங்கப்பா இல்லாத நேரத்தில அந்த ஜீப்ல ஒரு ரவுண்ட் போய் வருவது
பிடித்த விஷயம். அதுவும் அவன் உதவி இல்லாம ஏரிக்கரை வரைக்கும் தனியா ஓட்டிகிட்டு போய்
வந்தா விமானத்தையே ஒட்டிட்டா மாதிரி ஒரு பீலிங் வரும் பாருங்க.

பிடிக்காத ஆறு

1. குறட்டை

பிடிக்காததில முதலிடம் இதுக்குதான். வீட்ல இருந்த வரைக்கும் ஒண்ணும் தெரியலை. இங்க (துபாய்) வந்த
பிறகு பிரச்சினை பூதாகரமா வெடிச்சிடிச்சி. நான் தங்கி இருந்த அறையில மொத்தம் அஞ்சு குறட்டை
குறட்டைல இத்தனை ரகமா என்பது இங்க வந்த பிறகுதான் தெரிஞ்சுது.

2. இந்தி

உடனே தாத்தா மாதிரியான ஆளுன்னு நினைச்சா அதுக்கு நான் பொறுப்பல்ல. எனக்கு இந்தி பேச
தெரியாது என்பதால்தான் அதை பிடிக்கவில்லை. எனக்கு இந்தி தெரியாதுடா என்று தலைப்பாடா
அடிச்சிகிட்டாலும் என்கிட்ட இந்தி பேசுறவனை கண்டா கல்லாலே அடிக்கணும் போல தோணும்.
என்னவோ தெரியலை இந்திய கத்துக்கணும் என்ற ஆர்வமே இல்லை.

3. காய்கறி

சாம்பார்லயோ குழம்புலயோ காய்கறி இருந்தால் சாப்பிடவே மாட்டேன். அப்படியெ இருந்தாலும்
காய்கறி தவிர மீதி இருக்கற ரசத்தில சாப்பிட்டு சமாளிச்சிடுவேன். இதனாலயே என் அப்பா
பக்கத்தில உக்காந்து சாப்பிடவே மாட்டேன் ஏன்னா அவர் என் தட்டு நிறைய காய அள்ளி
போடுவார் அதை சாப்பிட முடியாம அப்படியே உக்காந்து இருப்பேன். முக்கியமா கத்திரிக்கா,
முட்டைகோஸ் என்றால் ஒரு கிலோ மீட்டர் ஓடிடுவேன்.

4. தூக்கத்தில யாராவது எழுப்பினா கடுங்கோவம் வரும்.

5. தொலைக்காட்சில வரும் தொடர் நாடகம்னா சுத்தமா பிடிக்காது. ரெண்டு நாடகம் பத்துட்டு
ஏதாவது ஒரு பொண்ணை பாத்தா வில்லியாதான் தெரியுது. அது என்னனு தெரியலை பெண்களை
கேவலமாக சித்தரிக்கும் நாடகங்களை பெண்கள்தான் அதிகமா பார்க்கிறார்கள்.

6. ஜோசியக்காரன் & கல் விக்கறவன்

இவனுங்க சொல்றதை கேட்டோம்னா உருப்படவே வழி இருக்காது. இதை போட்டிங்கன்னா எண்ணி
பத்தே நாள்ல உங்களுக்கு செல்வம் தேடி வரும், உங்க வீட்ல தோஷம் இருக்கு அதை நீக்க
ஒரு பரிகாரம் செய்யணும்னு சொல்லிகிட்டு கைல ஒரு எலுமிச்சம்பழத்தை வச்சிகிட்டு லோலாயி
பண்றவனை கண்டா அப்படியே கொண்டு போய் பாகிஸ்தான் பார்டர்ல விட்டுறணும். வீட்டுகுள்ள
விட்டா அவ்ளோதான் உங்க நிம்மதிய துடைச்சி எடுத்துகிட்டு போய்டுவான்.

அந்த வரம்

100 கோடி ரூபாய் சூடான பணமா (அதாங்க ஹாட்கேஷ்) வேணும்னு கேப்பேன் அதை அப்படியே கமலுக்கு மணியார்டர் அனுப்பி நின்று விட்ட மருதநாயகத்தை தொடர சொல்வேன்.

ரொம்ப ஓவரா இருக்கோ.

9 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

///100 கோடி ரூபாய் சூடான பணமா (அதாங்க ஹாட்கேஷ்) வேணும்னு கேப்பேன் அதை அப்படியே கமலுக்கு மணியார்டர் அனுப்பி நின்று விட்ட மருதநாயகத்தை தொடர சொல்வேன்.
///

நீங்களும் நம்மளைப் போலவே கமல் ரசிகர்தானா?

Jazeela said...

உங்களுக்கு பிடித்த அந்த ஆறு ரொம்ப நல்லா இருக்கு. குறிப்பாக அம்மா என்ற ஆரம்பம் சும்மா சூப்பர்மா.

இருந்தாலும் உங்க வரம் ரொம்ப ஓஓஓஓஓஓஓஓஓஓஓவர்தான்.

கதிர் said...

"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்"

"தாயிற்சிறந்த கோயிலுமில்லை தந்தை சொல்மிக்க மந்திரமில்லை"

பாருங்க எல்லாத்திலயும் தாய்தான் முன்னிலை அதனால என் முதல் ஆதர்சம் என் தாய்தான்.

நல்ல வரம்தானே கேட்டேன் அதில என்னங்க ரொம்ப ஓஓஓஓஓஓஓஓவர்னு போட்டுருக்கிங்க



அன்புடன் தம்பி

கதிர் said...

சேரல்

"நீங்களும் நம்மளைப் போலவே கமல் ரசிகர்தானா? "

நான் கமலின் ரசிகன்னு சொல்லலையே எனக்கு பிடித்த பண்பான மனிதர்கள்ள அவரும் ஒருவர். எல்லாருடைய நடிப்பையும் ரசிப்பேன் ஆனால் சிலரை மட்டும் மிகவும் ரசிப்பேன்.

அன்புடன்
தம்பி

கார்த்திக் பிரபு said...

hi thambi adhun enna piditha aaru vilaiyaatu ..ennaku adhai parri ondru theriyadhu..nammaku piditha aaru eludha solla ena seiya vendhu..konjam vilakka mudiyuma ..frend ..en blogil eludhinaal sandhosa paduvane

aaradhana said...

ரொம்ப நன்றாக உள்ளது. என்னை யாரும் கூப்பிடவில்லையே@!

பரத் said...

பந்தா இல்லாத எளிமையான ஆறு...இல்ல பன்னண்டு

//என்னவோ தெரியலை இந்திய கத்துக்கணும் என்ற ஆர்வமே இல்லை.
//

நீங்களாவது பரவால்ல...துபாய்ல இருக்கீங்க கவலையில்ல.நான் வட நாட்ல வேற இருக்கேன்.அதான் ப்ரச்சனயே

கதிர் said...

வாங்க பரத் வருகைக்கு நன்றி

கதிர் said...

கார்த்திக்,

ஆறுனு ஒரு விளையாட்டு வலையுலகத்தில விளாடிகிட்டு இருக்காங்க. னீங்களும் விளையாடுங்க. இதையே ஒரு அழைப்பா எடுத்திட்டு விளாட்ட ஆரம்பிங்க.

அன்புடன்
தம்பி