எல்லையற்ற அன்பு கொள்வோம்

Wednesday, October 17, 2007

அவைகளை அப்படியே விட்டு விடுங்கள்



அதனால் யாருக்கொன்றும் தீங்கில்லை
அந்த "மற்றவர்"களால் ஒரு பயனுமில்லை
அப்பொழுதே விட்டிருக்கலாம்
நாளையும் விடப்போகலாம்
விடாமலும் போகலாம்
அவளோடு சேர்ந்திருந்திருக்கலாம்
வேறொருத்தியும் நயமாக கிடைக்கலாம்
நயமில்லாமலும் போகலாம்.
எதுவுமற்றும் யாராலும் இருக்க
முடியலாம்.
நம்பகத்தன்மை என்றுமே உங்களைச்
சார்ந்தே இருக்கலாம்.
இல்லாமல் போகும்போது
நீங்கள் இல்லாமலிருக்கலாம்
வாழ்க்கையில் ஏராளமான
"லாம்"கள் இருக்கின்றன.


வை

ளை


ப்

டி
யே

வி
ட்
டு

வி
டு
ங்

ள்.


நன்றி: முடியலத்துவம்.

18 comments:

நாகை சிவா said...

எங்களை கொஞ்சம் மன்னிச்சு விட்டுவிட"லாம்".

நன்றி : முடியலத்துவம்

கதிர் said...

ஒரு கருத்து கந்த சாமியும் காணுமேன்னு கவலபட்டுகிட்டு இருந்தேன். நீயாச்சும் வந்தியே!

//எங்களை கொஞ்சம் மன்னிச்சு விட்டுவிட"லாம்".//

விடாமலும் போகலாம்.
இது தொடரலாம்
தொடராமலும் போகலாம்.
நீயே நாளைக்கு ஒரு
கவிதை

மை
க்

லா
ம்.

மொத்தத்தில்
எதுவும் நடக்கலாம்

அத அப்படியே லூஸ்ல விடு நைனா!

முடியலத்துவம் யாருக்கும் பிடிக்கலயா?

Jazeela said...

நிஜமாவே முடியல...

முடியலத்துவத்தை படித்து சிலருக்கு முடி இல்லாமல் போகும் அபாயம் உள்ளது :-)

குசும்பன் said...

இங்குநான் வராமல் இருந்திருக்கலாம்,
வந்து படிக்காமல் போய் இருந்திருக்கலாம்,
படிச்சிட்டு ......... மூடிக்கிட்டு போய் இருந்திருக்கலாம்.

தவறுதலாய் ஒரு பின்னூட்டம்.

நன்றி: தலைஎழுத்துவம்

கதிர் said...

என்னங்க ஜெஸிலா!
இதுக்கே முடியலன்னா எப்படி சிம்பலர்ஸ்காலாம் ட்ரை பண்ணலாம்னு இருக்கேன். ஆதரவு குடுத்திங்கன்னா நல்லா இருக்கும்.

கடைசி முடி இருக்கறவரைக்கும் முடியலத்துவத்த ஒரு கை பாத்துடறதுன்னு ஒரு முடிவு.

யாருக்குன்னு கேக்காதிங்க. :)

கதிர் said...

//இங்குநான் வராமல் இருந்திருக்கலாம்,
வந்து படிக்காமல் போய் இருந்திருக்கலாம்,
படிச்சிட்டு ......... மூடிக்கிட்டு போய் இருந்திருக்கலாம்.//

இங்கு என்பது அமீரகத்தை குறிக்கிறதா குசும்பரே!?

கோடிட்ட இடத்தை எப்படி என்ன வார்த்தை கொண்டு நிரப்புவது என்று புரியவில்லை. :(

//தவறுதலாய் ஒரு பின்னூட்டம்.//

அல்லாம் சரியாதா போட்டுருக்க

//நன்றி: தலைஎழுத்துவம்//

ஐடியாவுக்கு நன்றி.

Ayyanar Viswanath said...

ஒளி வட்டம் தெரிய ஆரம்பிச்சிருச்சிடோய்..நீ கலக்கு ராசா..

:)

இராம்/Raam said...

//அய்யனார் said...

ஒளி வட்டம் தெரிய ஆரம்பிச்சிருச்சிடோய்..நீ கலக்கு ராசா..

:)//


ரீப்பிட்டேய்...... :))

பினாத்தல் சுரேஷ் said...


ல்
ல்


வி
தை

இங்கே கிடைக்காமல் போகலாம்..

ஆனால்

படி
கட்ட
தெரிந்த
கவியார்வலர்
இருக்கின்றார்..

இது சுத்தமா முடியலத்துவம்.

கதிர் said...

//ஒளி வட்டம் தெரிய ஆரம்பிச்சிருச்சிடோய்..நீ கலக்கு ராசா..//

அய்ஸ்!
ரகசியத்த வெளில சொல்லாதய்யா!
நானும் என்னென்னவோ ஆயில், க்ரீம் போட்டு பாக்கறேன் கொட்டறது நிக்க மாட்டேங்குது. ஷார்ஜால போய் நாத்து நட்டுக்க வேண்டியதுதான்.

கதிர் said...

//ரீப்பிட்டேய்...... :))//

கோபி அன்னன்கிட்ட பர்மிஷn வாங்கினிங்களா?

கதிர் said...

//ந
ல்
ல்


வி
தை

இங்கே கிடைக்காமல் போகலாம்..//

கண்டிப்பாக கிடைக்காமல் போகலாம்.
உங்கள் எதிர்பார்ப்புகள் அதிகமாஅ இருப்பது காரணமாக இருக்கலாம். :)

//ஆனால்

//படி
கட்ட
தெரிந்த
கவியார்வலர்
இருக்கின்றார்..//

ஆஹா இந்த மட்டுமாச்சும் ஒத்துகிட்டிங்களா அதுவரைக்கும் பரவால்ல.

//இது சுத்தமா முடியலத்துவம்.//

முடிஞ்சா நாங்களும் நல்ல கவிதையா எழுத மாட்டோமா? முடியாமத்தான் இப்படி முடியலத்துவம் எழுதறோம்.

நன்றி பெனாத்தல்ஸ்.

Sundar Padmanaban said...

தம்பி

//அவைகளை அப்படியே//

'அவை' என்பதே பன்மைதான். 'அவைகளை' என்றெழுதுவது அவர்கள்கள் என்பது போன்றது - தவறு. அவற்றை என்று எழுதலாம்.

ஒரு தகவலுக்காக.

நன்றி.

கோபிநாத் said...

\\நன்றி: முடியலத்துவம்.\\

முடியல....;((

Anonymous said...

அவை என்பதே பன்மைதானே. அவைகள் என்றால் ?
:-)

கதிர் said...

தம்பி

//அவைகளை அப்படியே//

//'அவை' என்பதே பன்மைதான். 'அவைகளை' என்றெழுதுவது அவர்கள்கள் என்பது போன்றது - தவறு. அவற்றை என்று எழுதலாம். //

அவற்றை என்பதை விட அவைகளை என்பதுதான் சரியாக எனக்கு படுகிறது.

ஒன்றுக்கு மேற்பட்ட சிந்தனை உங்களை அலைகழிக்கும்போது அவைகள் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். எல்லாருக்கும் ஒரே ஒரு பிரச்சினைதான் இருக்கிறதா என்ன. பல்வேறு சிந்தனைகள், பல்வேறு எண்ணங்கள் கூடியவைதான் ஒவ்வொரு நிமிடங்களும். அடுத்த நிமிஷத்துக்கு வேறொரு விஷயம் உங்களை ஆக்கிரமித்திருக்கும் அவைகளை அப்படியே விட்டு விடுங்கள் அத்தியாவசியமானவை மீண்டும் சுழற்சியில் கண்டிப்பாக வந்தே ஆகும். அப்போது மறுபடியும் சிந்தியுங்கள் எல்லா விஷயத்துக்கும் இது பொருந்தும். குழப்பமான மனநிலையில் உங்களுக்கே நீங்களே சொல்லிக்கொள்ளும் தீர்வைப்போல.


ஒரு தகவலுக்காக.

நன்றி.//

கதிர் said...

\\நன்றி: முடியலத்துவம்.\\

முடியல....;((

ஏம்பா முடியல?

கதிர் said...

தம்பி

//அவைகளை அப்படியே//

//'அவை' என்பதே பன்மைதான். 'அவைகளை' என்றெழுதுவது அவர்கள்கள் என்பது போன்றது - தவறு. அவற்றை என்று எழுதலாம். //

அவற்றை என்பதை விட அவைகளை என்பதுதான் சரியாக எனக்கு படுகிறது.

ஒன்றுக்கு மேற்பட்ட சிந்தனை உங்களை அலைகழிக்கும்போது அவைகள் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். எல்லாருக்கும் ஒரே ஒரு பிரச்சினைதான் இருக்கிறதா என்ன. பல்வேறு சிந்தனைகள், பல்வேறு எண்ணங்கள் கூடியவைதான் ஒவ்வொரு நிமிடங்களும். அடுத்த நிமிஷத்துக்கு வேறொரு விஷயம் உங்களை ஆக்கிரமித்திருக்கும் அவைகளை அப்படியே விட்டு விடுங்கள் அத்தியாவசியமானவை மீண்டும் சுழற்சியில் கண்டிப்பாக வந்தே ஆகும். அப்போது மறுபடியும் சிந்தியுங்கள் எல்லா விஷயத்துக்கும் இது பொருந்தும். குழப்பமான மனநிலையில் உங்களுக்கே நீங்களே சொல்லிக்கொள்ளும் தீர்வைப்போல.


ஒரு தகவலுக்காக.

நன்றி.//