எல்லையற்ற அன்பு கொள்வோம்

Saturday, September 29, 2007

பறவையே எங்கு இருக்கிறாய்?



என் வாழ்க்கைல வந்தது மூணே மூணு லெட்டர்
Still i rememnber my first letter
ப்ரபா நீ என்னை தேடியிருப்பேன்னு எனக்கு தெரியும்
நானும் அம்மாவும் இங்க மகாராஷ்ட்ராவில தூரத்து மாமா வீட்டுல இருக்கறோம்
நீ வர்றதுக்கோ லட்டர் எழுதறதுக்கோ ஏதும் சமயம் வர்றப்ப நான் சொல்றேன்

நேரத்துக்கு சாப்பிடு
வாரத்துக்கு மூணு நாளாவது குளி
அந்த சாக்ச தொவைச்சு போடு
நகம் கடிக்காத
கடவுள வேண்டிக்கோ...

-ஆனந்தி

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே...

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே...

அடி என் பூமி தொடங்கும் இடம் எது நீதானே
அடி என் பாதை இருக்கும் இடம் எது நீதானே
பார்க்கும் இசைகளிலெல்லாம் பாவை முகம் வருதே
நீங்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ
கண்கள் பொய்கள் சொல்வதுண்டோ

நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக
அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே...

உன்னோடு நானும் போகின்ற பாதை
இது நீளாதோ தொடு வானம் போலவே
கதை பேசிக்கொண்டே வா காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும் உன் மவுனங்கள் போதும்
இந்த புல் பூண்டும் பறவை யாவும் போதாதா?
இனி பூலோகம் முழுதும் அழகாய் போகாதா?
முதல் முறை வாழப்பிடிக்குதே
முதல்முறை வெளிச்சம் பிறக்குதே
முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே
முதல்முறை கதவு திறக்குதே
முதல்முறை காற்று வருகுதே
முதல்முறை கனவு பலிக்குதே... அன்பே...

ஏழை காதல் மலைகள்தனில் தோன்றுகின்ற ஒரு நதியாகும்
மண்ணில் விழுந்தும் ஒரு காயமின்றி உடையாமல்
உருண்டோடும் நதியாகிடுவோம்
இதோ இதோ இந்த பயணத்திலே
இதுபோதும் கண்மணி வேறென்ன நானும் கேட்பேன்
பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்

இந்த நிகழ்காலம் இப்படியேதான் தொடராதா?
என் தனியான பயணங்கள் இன்றுடம் முடியாதா?

முதல்முறை வாழப்பிடிக்குதே
முதல்முறை வெளிச்சம் பிறக்குதே
முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே
முதல்முறை கதவு திறக்குதே
முதல்முறை காற்று வருகுதே
முதல்முறை கனவு பலிக்குதே... அன்பே...

பாடலைக் கேட்க (மூணாவது பாட்டு க்ளிக் பண்ணி கேளுங்க. டைரக்ட் லிங்க் குடுக்க போயி டவுசர் கிழிஞ்சிடுச்சி.)

தமிழ் MA படத்தில் இளையராஜா பாடியிருக்கும் பாடல்தான் மேலிருப்பது.
எனக்கென்னவோ அவரின் இசையத்தவிர மகன்களின் இசையில் பாடும்
பாடல்கள்தான் மிகவும் பிடிக்கிறது. உதாரணத்துக்கு
எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
யாரோ யார் யாரோ யாரோடு யாரோ
அறியாத வயசு புரியாத மனசு
வரிசையில் இந்த பாடலும் மனதில் ஆழமாக பதிகிறது.

சோகத்திற்கென மீட்டப்படும் கருவிகளில் ஒன்றாக ராஜாவின் குரல்
இருக்கிறதோ என்று கூட எனக்கு சந்தேகம் இருக்கிறது.

இந்த பாடலில் வரும் பெண்ணின் குரலைக் கேட்கும்போது நமக்கிது போல
யாரும் இல்லையே என ஆதங்கப்பட வைக்கிறது. வரிகளுக்கு போட்ட
இசையைவிட அந்த பெண்ணின் குரல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.

4 comments:

நாகை சிவா said...

இப்பவே கேட்டு பாக்குறேன் செல்லம்...

கோபிநாத் said...

\\நாகை சிவா said...
இப்பவே கேட்டு பாக்குறேன் செல்லம்...\\

ரீப்பிட்டேய்...

MyFriend said...

சூப்பர். :-)

வல்லிசிம்ஹன் said...

நானும்.....