எல்லையற்ற அன்பு கொள்வோம்

Tuesday, May 01, 2007

ஒண்ணுமே புரிலங்க

1."அர்ஜுனோட அம்மாதான் உன் அம்மா"

2."மலை மேல பொட்டிக்கடை வச்சிருந்த அம்மா சொன்னாங்க நான் கடவுள்னு"

3."இதெல்லாம் என்ன பெருமையா?? கடமை... ஒவ்வொருத்தனோட கடமை..."

4."சந்துரு!!! என் பாவாடை நாடாவ கோர்த்துக் கொடு"

5."சித்தப்பு பேச்சக்கொற, அந்த அழகிகளை ஆடச்சொல்"

6."மேல மூணு, கீழ மூணு... சும்மா பூ மாதிரி பிரியும்"

7."பொம்பளைக்காக எல்லாம் சண்டை போட்டுகிட்டு இருக்க முடியாது நீ
பத்திரமா ஆட்டோலயே போ"


8."ராசப்பா ஏவுகணைகளை தாங்கிச் செல்லும் விமானம் போலே இருக்கிறாய்"

9."எங்கப்பா நல்லா வாழ்ந்த காலத்திலயே பேராவூரணி கோயில்ல
பத்தாயிரம் பேருக்கு சோறு போட்டு காது குத்தி பேரு வச்சிருக்காரு எம்பேரு
ஒண்ணும் ஒலக்கு இல்ல குயிலு"


10."வீரம்னா என்ன தெரியுமா? பயமில்லாத மாதிரி நடிக்கறது. உன்
கண்ணுல அந்த பயத்தை பாத்துட்டேன்"


பத்துநாளா வேலையே இல்லிங்க அதான் பிசியாகிட்டேன். நான் வராம இருந்ததுனால
தமிழ்மணத்துல நல்ல மாற்றங்கள் கொண்டாந்துட்டாங்க அதுக்காக அவங்களுக்கு முதல்
நன்றிகள்.

என்னடா அதெல்லாம் டயலாக்குன்னு கேக்காதிங்க அதெல்லாம் நான் சொல்லல
சினிமால பெரிய பெரிய ஆளுங்க சொன்னது அதெல்லாம் யார் சொன்னாங்கன்னு
சொல்லுங்கன்னு கட்டாயப்படுத்தல தெரிஞ்சா சொல்லீட்டு போங்க. ஏன் இப்படி
சொல்றேன்னா மக்களுக்கு நான் இங்க ஒருத்தன் இருக்கேன்றதே மறந்து போயிடுது
அப்பப்ப இந்த மாதிரி மொக்கை பதிவு போட்டு என்னோட இருப்பை ஊர்ஜிதபடுத்திக்
கொள்கிறேன் அம்புட்டுதான்.

நம்ம கைப்பு(தல) சீக்கிரமா தலை தீபாவளி கொண்டாட வாழ்த்தும் அன்புத்தம்பி.

21 comments:

பாரதி தம்பி said...

//"எங்கப்பா நல்லா வாழ்ந்த காலத்திலயே பேராவூரணி கோயில்ல
பத்தாயிரம் பேருக்கு சோறு போட்டு காது குத்தி பேரு வச்சிருக்காரு எம்பேரு
ஒண்ணும் ஒலக்கு இல்ல குயிலு"//

ithu nallaayirukku....

Anonymous said...

1. தளபதி - ஜெய்சங்கர்
2. அன்பே சிவம் - கமல்
3. தேவர் மகன் - சிவாஜி
4. இந்தியன் - ஊர்மிளா
5. பருத்தி வீரன் - கார்த்தி
6. பிதாமகன் - சூர்யா
7. மௌனம் பேசியதே - சூர்யா
8. புதிய பூமி - சத்யராஜ்
9. முதல் மரியாதை - ராதா
10. குருதிப்புனல் - கமல்

Ayyanar Viswanath said...

1.தளபதி
2.அன்பே சிவம்
4.இந்தியன்
7.மெளனம் பேசியதே
10.குருதிப்புனல்

யோவ் ரெண்டு பேருக்குமே வேல இல்லன்றத இப்படி வெளிச்சம் போட்டு காமிக்கனுமா??
:)

Anonymous said...

8. புது மனிதன் - சத்தியராஜ்

Anonymous said...

லே மக்கா,

'நான் 10 நாளா எழுதாததைப் பத்தி தமிழ்ம்ணம் கண்டுக்கவேயில்லை. நான் ஏன் எழுத்லைன்னு என்னை எந்த தமிழ்மண நிர்வாகியும் போன் செஞ்சு விசாரிக்கலை.அதனால அதோட பாசிசத்தை எதிர்த்து தமிழ்மணத்துலேருந்து விலக்ப் போறேன் அண்ணாச்சி'ன்னு சொன்ன என் கிட்ட.

இந்த மொக்கைக்கு நீ அதையே செஞ்சிருக்கலாம்லா?

சாத்தான்குளத்தான்

வினையூக்கி said...

1."அர்ஜுனோட அம்மாதான் உன் அம்மா" - ஜெய்சங்கர் , படம் தளபதி

2."மலை மேல பொட்டிக்கடை வச்சிருந்த அம்மா சொன்னாங்க நான் கடவுள்னு" - கமலஹாசன், அன்பே சிவம்


4."சந்துரு!!! என் பாவாடை நாடாவ கோர்த்துக் கொடு" - ஊர்மிளா, படம் இந்தியன்

5."சித்தப்பு பேச்சக்கொற, அந்த அழகிகளை ஆடச்சொல்" - கார்த்தி - பருத்திவீரன்

6."மேல மூணு, கீழ மூணு... சும்மா பூ மாதிரி பிரியும்" சூர்யா - பிதாமகன்

7."பொம்பளைக்காக எல்லாம் சண்டை போட்டுகிட்டு இருக்க முடியாது நீ
பத்திரமா ஆட்டோலயே போ"

சூர்யா - மௌனம் பேசியதே

Anonymous said...

1."அர்ஜுனோட அம்மாதான் உன் அம்மா"

தளபதி
ஜெய்சங்கர் ரஜினியிடம்

2."மலை மேல பொட்டிக்கடை வச்சிருந்த அம்மா சொன்னாங்க நான் கடவுள்னு"

அன்பே சிவம்
கமல் மாதவனிடம்

4."சந்துரு!!! என் பாவாடை நாடாவ கோர்த்துக் கொடு"

இந்தியன்
ஊர்மிளா கமலிடம்

5."சித்தப்பு பேச்சக்கொற, அந்த அழகிகளை ஆடச்சொல்"

பருத்தி வீரன்
கார்த்தி - சரவணனிடம்


7."பொம்பளைக்காக எல்லாம் சண்டை போட்டுகிட்டு இருக்க முடியாது நீ
பத்திரமா ஆட்டோலயே போ"

மௌனம் பேசியதே
சூர்யா - த்ரிஷாவிடம்

Anonymous said...

என்னுட்டு பிண்ணுட்டம் எங்க

உங்கள் நண்பன்(சரா) said...
This comment has been removed by the author.
பினாத்தல் சுரேஷ் said...

சரி, தம்பி ஆசைப்பட்டுட்டாப்பல! என்னால ஆனது!

1. தளபதி
2.அன்பே சிவம்
3. தேவர் மகன்
4. மூன்றாம் பிறை
5. பருத்தி வீரன்
6. பிதாமகன்
7-8-9 தெரியல
10 - குருதிப்புனல்.

நான் ஒரு கேள்வி:

சு 1: சந்தோஷமா வாழற காலத்துல சந்தோஷமா வாழறோம்னு தெரியாது

சு 2: டெண்டுல்கருக்கு செல்லப்பெயர் என்ன? டெண்ட் டா?

சு 3: விவசாயமா? அதெல்லாம் நான் எங்க பாக்கறது? வைத்தியம்தான் பாக்கணும்.

ஈஸிதான் :-)

உங்கள் நண்பன்(சரா) said...

(பின்னூட்டத்திலும் ஒரு டிஸ்கி: நண்பர்களே தமாசுக்கு எழுதி இருக்கிறேன்! யாரும் சீரியசாக எடுத்துக் கொண்டு கொலைவெறியுடன் கிளம்பவேண்டாம்)

1."அர்ஜுனோட அம்மாதான் உன் அம்மா"

--யோசிப்பவர்(கதையின் கடைசியில் டுவிஸ்ட் வைப்பதால்)

2."மலை மேல பொட்டிக்கடை வச்சிருந்த அம்மா சொன்னாங்க நான் கடவுள்னு"

-- மா.சிவக்குமார்.

3."இதெல்லாம் என்ன பெருமையா?? கடமை... ஒவ்வொருத்தனோட கடமை..."

--அரவிந்தன் நீலகண்டன்

4."சந்துரு!!! என் பாவாடை நாடாவ கோர்த்துக் கொடு"

-- செந்தழல் ரவி

5."சித்தப்பு பேச்சக்கொற, அந்த அழகிகளை ஆடச்சொல்"

-- அபி அப்பா

6."மேல மூணு, கீழ மூணு... சும்மா பூ மாதிரி பிரியும்"


-- சுகுணா திவாகர்.

7."பொம்பளைக்காக எல்லாம் சண்டை போட்டுகிட்டு இருக்க முடியாது நீ
பத்திரமா ஆட்டோலயே போ"

-- இலவசக் கொத்தனார்.

8."ராசப்பா ஏவுகணைகளை தாங்கிச் செல்லும் விமானம் போலே இருக்கிறாய்"

--வவாச சிங்கங்களுக்கு யாரோ வைத்த ஆப்பு

9."எங்கப்பா நல்லா வாழ்ந்த காலத்திலயே பேராவூரணி கோயில்ல
பத்தாயிரம் பேருக்கு சோறு போட்டு காது குத்தி பேரு வச்சிருக்காரு எம்பேரு
ஒண்ணும் ஒலக்கு இல்ல குயிலு"

-- டோண்டு ராகவன்.

10. "வீரம்னா என்ன தெரியுமா? பயமில்லாத மாதிரி நடிக்கறது. உன்
கண்ணுல அந்த பயத்தை பாத்துட்டேன்"

-- லக்கி லுக்

அன்புடன்...
சரவணன்.

சுந்தர் / Sundar said...

2. அன்பே சிவம்
3. தேவர் மகன்
5. பருத்தி வீரன்
6. பிதாமகன்
7. மொனம் பேசியதே
9. முதல் மரியாதை

வெட்டிப்பயல் said...

//ஆசிப் மீரான் said...

லே மக்கா,

'நான் 10 நாளா எழுதாததைப் பத்தி தமிழ்ம்ணம் கண்டுக்கவேயில்லை. நான் ஏன் எழுத்லைன்னு என்னை எந்த தமிழ்மண நிர்வாகியும் போன் செஞ்சு விசாரிக்கலை.அதனால அதோட பாசிசத்தை எதிர்த்து தமிழ்மணத்துலேருந்து விலக்ப் போறேன் அண்ணாச்சி'ன்னு சொன்ன என் கிட்ட.

இந்த மொக்கைக்கு நீ அதையே செஞ்சிருக்கலாம்லா?

சாத்தான்குளத்தான் //

அண்ணாச்சி,
பதிவவிட இந்த பின்னூட்டம் சூப்பர் :-)

கோபிநாத் said...

\\பினாத்தல் சுரேஷ் said...
சரி, தம்பி ஆசைப்பட்டுட்டாப்பல! என்னால ஆனது!

1. தளபதி
2.அன்பே சிவம்
3. தேவர் மகன்
4. மூன்றாம் பிறை
5. பருத்தி வீரன்
6. பிதாமகன்
7-8-9 தெரியல
10 - குருதிப்புனல்.

நான் ஒரு கேள்வி:

சு 1: சந்தோஷமா வாழற காலத்துல சந்தோஷமா வாழறோம்னு தெரியாது

சு 2: டெண்டுல்கருக்கு செல்லப்பெயர் என்ன? டெண்ட் டா?

சு 3: விவசாயமா? அதெல்லாம் நான் எங்க பாக்கறது? வைத்தியம்தான் பாக்கணும்.

ஈஸிதான் :-)\\

இதுக்கு என்னோட பதில்

தல பார்த்துட்டு சொல்லுங்க

1. விருமாண்டி
2. விருமாண்டி
3. விருமாண்டி

சரியா ;-))

குழலி / Kuzhali said...

//10."வீரம்னா என்ன தெரியுமா? பயமில்லாத மாதிரி நடிக்கறது. உன்
கண்ணுல அந்த பயத்தை பாத்துட்டேன்"
//
இது ஒண்ணுதான் எனக்கு தெரிஞ்சது, அடப்பாவிகளா 10க்கு 10 அடிச்சிருக்காங்க.....

Anonymous said...

தம்பிஸ் என்றால் தம்பிஸ் தான்..கலக்கிட்டிங்க..எங்கள தவிர வேறு யார் இப்படி பதிவெல்லாம் போடுவாங்க ;)

கதிர் said...

சந்தோஷபடுங்க குழலி நீங்க சினிமா சிங்காரம் இல்ல :)

தூயா!

மொக்கை பதிவு போட எங்க தல செந்தழல் ரவி கூட எங்கிட்டதான் பயிற்சி வாங்கினார் தெரியும்ல!

காயத்ரி சித்தார்த் said...

அடப்பாவிகளா? மொக்கைப் பதிவுக்கு இத்தன பின்னூட்டமா? உலகத்துல வேல வெட்டி இல்லாதவங்க நிறைய இருப்பாங்க போலிருக்கே! (ஹி ஹி நானும் அப்டி தான்! ஊரோட ஒத்து வாழனுமில்ல தம்பி?)

குட்டிபிசாசு said...

என்னங்க நீங்க எதோ பெருசா எழுதி இருப்பிங்கனு நெனச்சேன். பழைய form-ல வாங்க...

Syam said...

//அர்ஜுனோட அம்மாதான் உன் அம்மா//

நாலரை பால் குடுக்கறவங்க தான....:-)

கதிர் said...

//நாலரை பால் குடுக்கறவங்க தான....:-) //

குடுக்கறவங்க இல்ல, வாங்கறவங்க நாட்டாமை :))