என்ற ஆர்வம் தோன்றியது. இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் அவரது
சீடர் வசந்தபாலன் எடுத்திருக்கும் படம் இவர் முன்னரே ஆல்பம் என்ற
படம் எடுத்திருந்த போதும் அது கவனிக்கபடாமலேயே போய்விட்டது.
அந்த குறையை இந்த வெயில் கண்டிப்பாக தீர்க்கும். நிச்சயம் பார்க்கவேண்டிய
படம்தான் என்று பார்த்தவுடனே மனதிலும் தோன்றியது.

வாழ்க்கையின் சகலபரிமாணங்களிலும் தோற்ற ஒருவனின் கதையை
படமாக்க முயன்றிருக்கிறார்கள். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
இதுவரை இந்த முயற்சி தமிழ் சினிமாவில் இல்லை. சினிமா
கதாநாயகனுக்கான எந்த அடையாளமும் இல்லாமல் கதைக்கான,
கதைக்களத்துக்கான இரு கதாநாயகன்களாக பசுபதி (முருகேசன்).
அவரின் தம்பியாக பரத் (கதிர்).

முதல் பாடல்காட்சியிலேயே தெரிந்து விடுகிறது இது வழக்கமான சினிமா
இல்லையென்பது. வெயிலோடு விளையாடி பாடலில் வரும் அத்தனை
விஷயங்களும் சிறுவயதில் நாம் செய்த ரசிக்கும்படியான குறும்புகள்.
பள்ளி கட் அடித்து விட்டு தியேட்டரில் திருட்டு தம் அடிக்கும் மகனை
பூதாகரமாக கண்டிக்கிறார் தந்தை. அவமானம் பொறுக்க முடியாமல்
பணத்தை திருடிக்கொண்டு வீட்டை விட்டு ஓடி விடுகிறார் பசுபதி.
இருக்கும் பணத்தையும் தொலைத்து விட்டு தியேட்டரில் வளர்கிறார்.
அங்கிருந்து காதல், சமூகம், எல்லாம் விளையாடுகையில் கண் முன்னே
காதலியின் தற்கொலை, தியேட்டர் இடித்த பிறகு வேலையும் போய்
ஏன் வாழ்கிறோம் என்று வேதனையில் இருக்கும்போது வீட்டுக்கு
போக முடிவெடுக்கிறார். இருபது வருடம் கழித்து வரும் மகனை
கண்டதும் பாசத்தில் தாய், இன்னும் அதே கோபத்தில் தந்தை இந்த
இடத்தில் அந்த தந்தை கதாபாத்திரத்தை குறிப்பிட்டே ஆகவேண்டும்.
மிக அற்புதமாக செய்திருக்கிறார்.

வீட்டிலும் தான் எதிர்பார்க்கும் பாசம், அன்பு கிடைக்கவில்லை
தங்கைகள் தன்னை அண்ணனாக ஏற்கவில்லை, திரும்பவும் திருட்டு
பட்டம் என்று காட்சிக்கு காட்சி தோல்விகள் கண்முன்னே தோன்றும்
போது பிரமிப்பு மீளவில்லை. பசுபதி நடிப்பின் உச்சத்தை தொட
முயன்றிருக்கிறார் அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். என்
முகத்திலே முழிக்காதே என்று சொன்ன அதே அப்பா மகன் காலடியில்
வீழ்ந்து மன்னிப்பு கேட்கிறார்.
சிறப்பான ஒளிப்பதிவு, தரமான இசை படத்துக்கு கூடுதல் பலம் கிடைக்கிறது.
முத்துக்குமாரின் வரிகளில் "உருகுதே மருகுதே" பாடல் மிக அழகாக படமாக்க
பட்டிருக்கிறது. அழகான வரிகளும் கூட. "வெயிலோடு விளையாடி" பாடல்
உங்கள் உதட்டில் குறுநகையயும் ஆச்சரியத்தையும் கொடுக்கும். "காதல்
நெருப்பின் நடனம்" உயிரே பாடலை நினைவுபடுத்துகிறது. அருவா பாடலும்
ஊராந்தோட்டத்தில பாடலும் தாளம் போட வைக்கிறது. "இறைவனை உணர்கிற"
காதுக்கு இனிமை.

தென்மாவட்டமான விருதுநகரில் கதை நடக்கிறது. அந்த மண்ணுக்குரிய
வெக்கைதான் படத்துக்கு பெயராக வைத்திருக்கிறார்கள். வெயிலின்
குறியாக கோபம், தவிப்பு, வெறுப்பு, மற்றொன்றாக பசுபதியயும் சொல்ல
வைக்கிறது. படத்தின் முழுக்கதையும் இவரை சுற்றியே வருகிறது இவரை
சுற்றி பலரும் அருமையாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
பரத்துக்கு ஜோடியாக பாவனா. இவர் தனது பங்களிப்பை செய்து விட்டு
கடைசியில் காணாமல் போகிறார். பசுபதிக்கு ஜோடியாக இருவர் இருந்தாலும்
இதிலும் தோல்விதான். படத்தில ஸ்ரேயான்னு ஒரு அம்மணி இருக்காங்க
சவுண்டையெல்லாம் தூக்கி வெச்சிட்டு பாந்தமான நடிப்பை தந்து நம்மளை
நிம்மதி பெருமூச்சு விட வைக்கிறார்.

மொத்தத்தில படம் பார்த்துவிட்டு வெளிவரும்போது ஏதோ ஒரு கிராமத்து
வீட்டின் உள்நுழைந்து ஒருவர் வாழ்க்கையை பார்த்து வந்தது போன்ற
உணர்வு. சண்டைக்காட்சிகள் மிக தத்ரூபமாக இருந்தாலும் ரத்தம் அதிகம்
நன்றாக அமைத்திருக்கிறார்கள் சபாஷ்.
பஞ்ச் டயலாக், குலுக்ஸ் நடனங்கலை எதிர்பார்த்து சென்றால் ஏமாற்றமே
மிஞ்சும். வித்தியாசமான படங்களை விரும்பி பார்ப்பவர்களுக்கு ஒரு
விருந்து இந்த படம்.
இதை தயாரித்ததற்காக ஷங்கருக்கு ஒரு நன்றி.
இதை எழுதி இயக்கிய வசந்த பாலனுக்கும் வாழ்த்துக்கள்